ராம் வெட்ஸ் சீதா -5.
சீதாவின் வீட்டிலிருந்து கிளம்பிய ராதா போகும் போது “அன்பே வா முன்பே வா “என்ற பாடலை பாடிக்கொண்டே சென்றவளுக்கு தெரியவில்லை, கூடிய விரைவில் மணமாக போகிறதென்று.
பாடலை பாடிக்கொண்டே வீட்டிற்கு வந்தவள் சைக்கிளை வீட்டின் திண்ணையோரத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள்.
அவள் அன்னை சிவகாமியோ மகள் எப்போது வருவாள் என்று அடுப்படிக்கும் , கூடாரத்துக்கும் நொடிக்கொரு முறை நடந்து கொண்டிருக்க, மகள் வருகிறாள் என்று அவளின் கொலுசொலி வைத்து கண்டு கொண்ட சிவகாமி, ராதாவின் அருகில் வந்து ” ராதா என்ன மா உர்ர்ர்ன்னு முகத்தை வச்சிட்டு வரவ, பள்ளிக்கூடத்துல யாராவது அடிச்சிட்டாங்களா “என கேட்கும் அன்னையை உற்று நோக்கி பார்த்த ராதா மனதில் ,
” என்ன இது அம்மா இப்படிலாம் பேச மாட்டாங்களே, வழக்கம் போல பாத்திரம் கழுவி டி , கோலம் போடு, துணியை மடைச்சி வை, ன்னு நிறைய வேலை கூட்டி வச்சிருக்கும் ன்னு நினைச்சேன், ஆனா இன்னக்கி என்ன ஏதோ புதுசா இருக்கே, ஏதோ மூக்கை சிந்தி ஒப்பாரி வைக்க போகுதோ, அடியேய் ராதா எதுக்கும் உஷாரா இரு டி ” என்று தனக்கு தானே மனதுக்குள் பேசிகொண்டவளை ஒரு சிரிப்போடு பார்த்தார் அவளின் தாய் சிவகாமி.
“என்ன அம்மா ஏதாச்சும் வேலை சேர்ந்து வச்சிருக்கியா, இரு மா நான் போய்ட்டு பாத்திரம் தேய்ச்சிட்டு வரேன் “என நகர்ந்தவளின் கரத்தை பிடித்துக்கொண்ட அவளின் தாய் சிவகாமி மகளிடம்,
“அதெல்லாம் நான் முடிச்சிட்டேன், உனக்கு பரீட்சை வர இன்னும் ஒரு மாசம் தானே இருக்கு , அதுக்குள்ள உங்க அப்பத்தா உனக்கு மாப்பிள்ளை பாத்துடாங்க மா, அதுவும் உனக்கு தெரியும்ல முனுசாமி மவன் வெற்றிவேந்தன் அவன் தான் மாப்பிள்ளை “என்று கூறிய தாயை பார்த்து சுருக்கென கோவம்வந்தது ராதாவிற்கு..
“ஏம்மா, எனக்கு இப்போதானே பதினெட்டு வயசு ஆவுது, உனக்கு என்ன அதுக்குள்ள அவசரம், கொஞ்சம் நாள் போகட்டும், ஆமா எங்கே அந்த கிழவி, அதுக்கு என்ன நல்லா தின்னுபுட்டு ஊருல இருக்கற எல்லாரு வூட்டுக்கு போயி திண்ணையில கால நீட்டி போட்டுக்கிட்டு வெத்திலை துப்பும், அந்த கிழவிக்கு பேத்தியா பொறந்தேன்ல என்னைய சொல்லணும் ” என்று அவளின் தாயை பெத்த ஆத்தாவை திட்டிக்கொண்டு இருக்கும் போது ” ஆமா டி நீ எனக்கு பேத்தியா பொறந்ததுக்கு பதிலா, நான் உனக்கு அப்பத்தாவா பொறந்து இருக்க கூடாது “என ராதாவின் பதிலுக்கு மல்லுக்கட்டி நிற்க, சிவகாமியோ
” அட கம்முனு கிடங்க, உங்க ரெண்டு பேரு கிட்டையும் என்னைய மாட்டி விட்டுட்டு அந்த மனுஷன் அம்போன்னு போய்ட்டாரு, “என்றவர் மகளின் புறம் திரும்பி ” இந்தா டி ராதா நாளைக்கு ஞாயிறு கிழமை தான, உன்ன பொண்ணு பார்க்க வராங்க, நீ அழகா லட்சணமா பொண்ணு மாதிரி நடந்துக்க, “என்ற தாயை பார்த்து சினமேறியது ராதாவுக்கு.
” இங்க பாரு மா நான் சீதா வூட்டுக்கு போறேன், நாளைக்கு அவங்க, அதான் அந்த முனுசாமி மவன் வந்தா, நீயே ரொட்டி, சமோசா, அப்புறம் முக்கியமா காபில சக்கரைக்கு பதிலா உப்பும், காப்பி தூள்க்கு பதிலா மிளகாதூள் கலந்து கொடு, குடிஞ்சிட்டு ஆஆஆஆ ன்னு அலறி ஓடுனவங்க தான் மறுபடியும் நம்ம வூட்டு பக்கமே தலை வச்சி படுக்க மாட்டாங்க ” என்று கூறிய ராதாவின் கன்னம் ரத்தமாய் சிவந்தது.
அடித்தது அவளின் தாய் சிவகாமியே தான், தாய் இப்படி அறைவார் என்று எதிர்பாக்காத ராதாவோ சற்று தடுமாறித்தான் போனாள், கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு.
அவளின் அப்பத்தாவோ என்ன நடக்கிறதென்று பார்ப்போமென அமைதியாக கீழே தரையில் கால்களை நீட்டி அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க துவங்கினார்.
“ம்ம்மா என்னாத்துக்கு என்னைய அடிச்ச நீ, நான் என்ன தப்பு பண்ணேன் “என்றவளை பார்த்து ” அடிங்க வாயை மூடு டி சிறுக்கி, அந்த முனுசாமி அண்ணன் உனக்கு யார் தெரியுமா, உன் அப்பா கூட பொறந்த தங்கச்சி கமலா, அதான் டி உனக்கு அத்தை முறை , அவங்க புருஷன் டி, அவரு மவன் தான் வெற்றிவேந்தன் தம்பி”, என்றவர் மேலும் தொடர்ந்தார்..
” அவங்களுக்கே மிளகாய் காபி போட்டு கொடுக்க சொல்றியா! , இதோ பாரு புதுசா கட்டாம ஒரு பட்டு புடவை எடுத்து வச்சிருக்கேன் உனக்கு , நாளைக்கு அதை கட்டிக்கிட்டு அமைதியா குனிஞ்ச தலையோடு வரணும், ஏதாவது கோல்மால் பண்ணனும் ன்னு நினைச்ச கால்கையை ஒடச்சி அடுப்புல போட்ருவேன், என்ன இருந்தாலும் நாளைக்கு நீ வூட்டுல தான் இருக்கனும் வெளியே சுத்தலாம் ன்னு எனக்கு தெரியாம வெளியே உன் காலெடுத்து வச்ச பெத்த பொண்ணுகூட பார்க்க மாட்டேன் ” என்று சேலையின் தலைப்பால் கண்களை துடைத்து கொண்டு, மூக்கை சிந்தி கொண்டும் சுவரில் சிரித்த முகத்தோடு இருக்கும் கணவர் தேவாவின் புகைப்படத்தின் அருகில் சென்று மௌனமாக நின்று கண்ணீர் சிந்தினார் ராதாவின் தாய் சிவகாமி..
ராமகிருஷ்ணன் இல்லம்.
வீட்டில் முருகேசுவும் ராமும் ஒன்றாக அமர்ந்து பள்ளி பாடங்களை படித்துக்கொண்டு கொண்டு இருக்கும் போது, கையில் காப்பியோடு கூடவே குட்டே பிஸ்கட்டோடு வந்தாள் பத்தாம் வகுப்பு படிக்கும் ராமின் தங்கை அபிநயா..
வந்தவள் அவளின் அண்ணனின் புறம் திரும்பி “அண்ணா காபி இந்தா அம்மாச்சி கொடுக்க சொன்னாங்க “என்றவளின் பார்வை முருகேசனை தீண்டி சென்றது..
தங்கையின் கையில் இருந்த காபியை எடுக்கும் போது அவளின் பார்வை முருகேசுவின் மீது பட, அவனும் நண்பனை திரும்பி பார்த்தான், அவன் நண்பனோ படிப்பே கண்ணாக இருக்க, அவனின் தங்கை அபிநயாவோ அவனை பார்த்துக்கொண்டு இருப்பது, அவனுக்கு ஏதோ விளங்கியது..
சட்டென்று தங்கையின் கையை பிடித்து அவளை சுயநினைவுக்கு கொண்டுவந்தவன்,அவளை பார்த்து முறைத்து கொண்டே “அபி வந்த வேலையை மட்டும் பாரு, உனக்கும் எக்ஸாம் வந்துடுச்சுல நீ போயி படி “என்று அவனின் தங்கையிடம் பல்லை கடித்து கொண்டு கூறினான் ராமகிருஷ்ணன்..
தமையனின் பல்லை கடித்து கூறியது அவளுக்கு புரிந்தது, அண்ணன் கோவத்தில் இருக்கிறானென்று.
“சரி அண்ணா, ஆனா எனக்கு கணக்குல ஒரு சந்தேகம் ” என்று கொஞ்சம் சத்தமாகவே கூற தலையை குனிந்து கொண்டு படித்து கொண்டிருந்த முருகேசுவின் காதில் விழ, தலையை நிமிந்து அபிநயாயிடம் ” என்ன சந்தேகம் அபி, இங்க கொண்டா நான் சொல்லித்தரேன், “என்ற நண்பனை புரியாமல் பார்த்தான் ராமகிருஷ்ணன்.
” அதெல்லாம் நான் சொல்லி கொடுக்கறேன், நீ படி டா முருகேசு அவ ஒரு சின்ன கணக்கை கூட கரெக்டா போட்டுட்டு, தப்புனு சொல்லி நம்ம உயிர வாங்குவா “என்றதும் பக்கத்தில் இருந்த தங்கையின் முகத்தை பார்த்தான் ராம்.
“க்கும் இந்த அண்ணன் இருக்கறவரைக்கும் முருகேசுவ சைட் கூட அடிக்க முடியாது போல, இவன் கூட தங்கச்சியா பொறந்ததுக்கு இதெல்லாம் எனக்கு தேவைதான், என் முருகேசு எவ்வளவு அழகா கருப்பா இருக்கான் பாரு, என்கூட பொறந்தது தான் வெள்ளையா பொறந்து தொலைச்சிது, இவனுக்கும் ஏத்த மவராசி எங்கே இருக்காளோ பாவம் அவ “என்றதும் பக்கத்து ஊரில் தனது வீட்டில் இரவு உணவு உண்டு கொண்டிருந்த சீதாவுக்கு புறையேறியது.
மகளுக்கு புறைஏறியதை பார்த்த சீதாவின் அன்னை காமாட்சி அவளின் தலையை தட்டி தண்ணீர் எடுத்து கொடுக்க அதை வாங்கி குடித்ததும் இருமல் இன்னும் நின்ற பாடில்லை.
“என்ன ஆச்சு சீதா, தொண்டையில ஏதாவது சிக்கிருச்சா, இந்தா தண்ணீர் குடி,” என்ற தாயை ஒரு பார்வையில் அடங்கி வைத்துவிட்டு ” ஹ்ஹஹ்வ்ஹ்வ்ஹ்வ்ஹ்வ்ஜ் “” என்று இரும்மி கொண்டே சாப்பாட்டை அப்படியே வைத்து விட்டு எழுந்து கையை கழுவி கொண்டு வெளியே வந்து ஆகாய வானத்தை நோக்கி பார்வையை செலுத்தினாள் சீதா..
” என்னாச்சு இவளுக்கு நல்லாத்தானே சாப்பிட்டு இருந்தா, யாரோ நினைச்சிட்டு இருக்காங்க அதான் புள்ளைக்கு புறையேறி இருக்கு, சரி தூங்கும் போதும் பால் காய்ச்சி கொடுக்கலாம், அதையாவது குடிச்சிட்டு தூங்கட்டும் “என்று நினைத்து சாப்பாடு மேஜையில் இருந்த பாத்திரத்தை எடுத்து சுத்தப்படுத்தலானார் அவளின் அன்னை காமாட்சி..
நேரம் யாருக்காகவும் காத்திருக்காமல், அதன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தது.
மறுநாள் விடியற்காலையில் கதிரவன் வருவதற்கு முன்னால், ராதாவின் தாய் சிவகாமிக்கு உறக்கம் கலைந்தது..
எழுந்து வெளியே வந்து மாட்டுக் கொட்டாயில் இருந்த சாணியை கொண்டுவந்து, அதை தண்ணீரால் கரைந்து வாசலில் தெளித்து, பெருக்கி குப்பைகளை கூட்டி ஒரு அண்டாவில் வாரி ஓரமாக வைத்துவிட்டு கோலமாவை எடுத்து கொண்டு வந்து கோலத்தை போட ஆரம்பித்தார்.
கோலம்போட்டு முடித்த பிறகு, வீட்டில் கதைவை சாத்தி விட்டு, குப்பை வாரி வைத்திருந்த அண்டாவை எடுத்து கொண்டு அந்த தெருவில் கடைசியாக இருக்கும் குப்பை தொட்டியில் கொட்டிவிட்டு இல்லத்திற்கு வந்தார் சிவகாமி.
வீட்டின் உள்ளே வந்தவர் மகள் ராதா உறங்கும் அறையில் எட்டி பார்த்த போது அங்கு ராதாவை இல்லாதது போக, அவருக்கு சுருக்கென கோவம் வந்தது..
“இந்த சிறுக்கி கிட்ட எத்தனை வாட்டி சொன்னாலும் அடங்காது, எங்கே போயிருப்பா ” , என்றவர் வீட்டினுள் முழுவதும் அலசி ஆராய்ந்தார் சிவகாமி.
மகள் எங்கும் இல்லாதது போகவே, அறையில் உறங்கி கொண்டிருந்த ராதாவின் அப்பத்தா பேச்சியம்மாளை எழுப்பி, விவரத்தை கூற அவரோ, “அய்யோ அவளால என் உறக்கமே போச்சு, வீட்டை சுத்தி நல்லா தேடி பாரு டி, நீ விடியகாலை எழுப்புவன்னு உன் மவளுக்கு தெரிஞ்சி போச்சோ என்னவோ அதான் எழுந்து ஓடிபோய்ட்டா, சரி நீ கண்ணை கசக்காத இங்க தான் எங்கையாவது இருப்பா , இல்லைனா வெளியே தோட்டத்து இருக்கற மாங்கா மரத்துல ஏறி உட்கார்ந்து தூங்குவா இன்னேரம், நீ லைட்டு எடுத்துட்டு போயி மாங்கா மரத்துல பாரு, நான் சொன்ன மாதிரி அங்க தான் இருக்கா, ச்சி இல்லை அங்க தான் படுத்து இருப்பா “என்று கூறிய கிழவியை ஒரு மார்க்கமாக பார்த்தார் சிவகாமி..
“இந்தா அம்மா இதுல நீயும் கூட்டா என்ன, இரு உனக்கு வந்து வச்சிக்குறேன் “என்றவர் மகளை தேடி தாய் சொன்ன இடத்திற்கு வந்தவர் கையில் இருந்த லைட்டை தூக்கி வந்த கோவத்தை அடங்காது மாங்கா மரத்தை நோக்கி அடித்தார், அங்கு சுகமான காற்றோட்டத்தில் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்த ராதாவின் செவியில் சத்தம் கேட்க அவளோ மரத்தின் கீழே நின்று இருந்த தாயை பார்த்தாள்.
“நினைச்சேன் அந்த கிழவி தான் நம்மளை போட்டு கொடுத்து இருக்கும், எதற்கும் காரணம் இந்த ஜால்ரா கொலுசு தான் முதல்ல இதை கழட்டி அம்மா காலுல போட்டு விட்டுட்டு அது கொலுசை கழட்டி நான் போட்டுக்கணும், அப்போ தான் எங்கே ஓடுனாலும் மாட்டிக்க மாட்டோம் “என்று புலம்பியவள் கீழே குனிந்து அவள் அன்னையை பார்த்தாள், அவள் அன்னையோ காளியின் மறுஉருவமாக கையில் துடைப்பக்கட்டையோடு கோவத்தின் உச்சியின் நின்று கொண்டிருந்தார் சிவகாமி…