வரம் நீயே 13 வைசாலியோடு தோப்பை பார்க்கக் கிளம்பி இருந்தான் அரசேந்திரன். “இந்த பக்கம் நாங்க வரலையே?” என்று வைசாலி சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தாள். தென்னந்தோப்பிற்குள் நுழைந்ததுமே அன்னாந்து பார்த்தாள். “வெயிலே உள்ள வரல.. எவ்வளவு இருட்டா இருக்கு பகல்லயே..?” “மரம் நெருக்கமா இருக்குல” “ம்ம். சுத்தமா வெயிலே இல்ல.. கூலா இருக்கு” என்று அன்னாந்து பார்த்துக் கொண்டே நடந்து, ஒரு கல்லை மிதித்து நின்று விட்டாள். “ஸ்ஸ்..” என்று காலை உதற, “என்னாச்சு?” […]
Readmoreவரம் நீயே 12 அரசேந்திரனின் கார் வந்து வாசலில் நிற்க, பக்கத்து வீட்டுப் பெண்மனி எட்டிப் பார்த்தார். “என்ன அரசு நல்லா இருக்கியா?” என்று கேட்டுக் கொண்டே வெளியே வர, “நல்லா இருக்கேன் சித்தி. நீங்க எப்படி இருக்கீங்க?” என்றபடி காரை விட்டு இறங்கினான். “நான் இருக்கேன். உன்னை தான் ஊருக்குள்ள பார்க்கவே முடியல. வர்ரனு அம்மா சொல்லவே இல்லையே?” “காலையில தான் கிளம்புனேன். அதான் சொல்லல” என்றவன் கதவை தட்ட, “நான் அப்புறமா வாரேன். உள்ள […]
Readmoreவரம் நீயே 11 மாதவனை நீதிமன்றத்தில் ஒப்படைத்து அவன் பேசியதை ஒப்புதல் வாக்குமூலமாக வாங்கிக் கொண்டனர். மேலும் பதினைந்து நாட்கள் அவனை சிறையில் வைத்து விட்டு, பிறகு மீண்டும் விசாரிப்பதாக முடிவு செய்யப்பட்டது. குடும்பத்தினர் யாரும் மாதவனை பார்க்க அரசேந்திரன் அனுமதிக்கவில்லை. நீதிமன்றத்தில் வைத்து மிருதுளாவை மட்டும் மாதவனிடம் அழைத்துச் சென்றான் அரசன். கையில் விலங்கோடு சிறை செல்வதற்கு தயாராக இருந்த வாகனத்தில் மாதவன் அமர்ந்து இருந்தான். “அண்ணா..” என்றவளின் குரலில் பட்டென நிமிர்ந்தான். கண்கலங்கி மிருதுளா […]
Readmoreவரம் நீயே 10 பரபரப்பாக அந்த காவல் நிலையம் இயங்க ஆரம்பித்தது. ஆளாளுக்கு பேசியபடி தங்களது வேலையில் ஈடு பட்டிருக்க, எந்த சத்தமும் பாதிக்காமல் மாதவன் சிறைக்குள் அமர்ந்து இருந்தான். காலை மடக்கி அமர்ந்து கைகளை கோர்த்து தலைக்குப்பின்னால் வைத்து குனிந்தபடி அமர்ந்து இருந்தான். நேற்று மாலை அவனை அழைத்து வந்ததிலிருந்து இப்படித்தான் இருக்கிறான். அவனோடு உள்ளே வைக்கப்பட்டிருந்த ஒருவன் நேற்று வெளியேற்றப்பட, மாதவனை தனிமை சூழ்ந்து கொண்டது. கதவு திறக்கும் சத்தம் கேட்க, தலையை நிமிர்த்தினான். […]
Readmoreவீடு வந்து சேர்ந்த வைசாலி எதையோ யோசித்துக் கொண்டே உள்ளே செல்ல, “இப்ப வர்ரா பாரு.. சாலி இங்க வா. சாப்பிட்டியா நீ?” என்று சித்ரா கேட்டார். “ம்ம்?” என்று கேள்வியாக பார்த்தவள், சுற்றியும் பார்த்தாள். உணவுண்ட மயக்கத்தில் ஹாலிலேயே ஆண்கள் அனைவரும் உறங்கி இருக்க, பெண்கள் ஒரு அறையில் படுத்திருந்தனர். தன் அறை காலியாக இருப்பதைப் பார்த்தவள், “ம்மா இங்க வாங்க” என்று அழைத்தபடி உள்ளே சென்றாள். தந்தையை பார்த்து கைகாட்டி விட்டு செல்ல, அவரும் […]
Readmoreஅடுத்த நாள் காலை.. அரசன் பிரகாசத்தை வைத்திருக்கும் காவல்நிலையத்திற்கு வந்து சேர்ந்தான். அவனை வெளியே அமர வைத்து விட்டு, இன்ஸ்பெக்டர் உள்ளே சென்றான். பிரகாசம், முகம் வெளிறி, பயத்தில் உறைந்து போய் அமர்ந்து இருந்தார். இரவு ஒரு நொடி கூட கண்ணை மூடவில்லை. மூட முடியல்லை. இரவெல்லாம், குற்றவாளிகள் அடி வாங்கி அலறும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. ஒரு திருடனை பிரகாசத்தின் கண் முன்னால் அந்த அடி அடித்து உதைத்தனர். அதை பார்க்கப் பார்க்க பிரகாசத்திற்கு […]
Readmoreஅரசேந்திரன் வைசாலி வீட்டிலிருந்து கிளம்பி, நேராக ஆதிகேசவன் இருந்த மருத்துவமனைக்குச் சென்றான். கதவை தட்டி விட்டு உள்ளே நுழைய, “வாங்கணா” என்றான் ஆதி. அவனது முகத்தில் தெளிவும் தைரியமும் மீண்டு இருந்தது. அதை கவனித்தபடி அரசன் அவன் முன்னால் வந்து நின்றான். “எப்படி இருக்க ஆதி? ட்ரீட்மெண்ட் நல்லா போகுதா?” “நல்லா போகுதுணா. உட்காருங்க.” அரசன் அமர்ந்ததும், “இப்ப தான வந்துட்டுப்போனீங்க? ஏன் திரும்ப?” என்று ஆதி விசாரிக்க, அரசன் ஒரு நொடி அமைதிகாத்தான். “நீ சத்தியத்த […]
Readmoreஅரசன் கண் முன்னால் இருந்த கணினி திரையை வெறித்துக் கொண்டிருந்தான். மனோகரியின் மருத்துவ குறிப்புகள் அடங்கிய ஃபைல் அது. திறந்து பார்த்திலிருந்து மனம் வெதும்பியது. அருகில் இருந்த சதீஷ் அரசனின் தோளை தொட்டு, “சார்.. ” என்றான். “இவன் மனோகரிக்கு மட்டும் தான் இப்படி பண்ணிருக்கானா? இல்ல வேற யாருக்கும் பண்ணிருக்கானானு பார்க்கனும் சதீஷ். எல்லாத்தையும் ஃபைல் பண்ணி கொடு.” “பண்ணிடலாம் சார். ஆனா எனக்கு இன்னொரு டவுட்டு?” அரசன் கேள்வியாக புருவம் உயர்த்த, “இவன் எதுக்காக […]
Readmoreஇரண்டு நாட்கள் கடந்து இருந்தது. அரசன் திருச்சியில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனையின் முன்பு, தன் காரை நிறுத்தினான். கைபேசியை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு கீழே இறங்கியவன், சுற்றியும் வேடிக்கை பார்த்தான். மருத்துவமனைக்கு உரிய பரபரப்போடு இறங்கிக் கொண்டிருந்தது அந்த மருத்துவமனை. காருக்குள் இருந்த பழங்கள் நிறைந்த பையை எடுத்துக் கொண்டு, காரை பூட்டினான். முடியை ஒரு கையால் கோதியபடி, அங்கிருந்த கேமராக்களை கண்களால் அலசியவாரே உள்ளே நுழைய, “ஹேய் அரசன் சார்” என்று ஆச்சரியமான […]
Readmoreஅஞ்சனாவை அழைக்கப்போனவன் வைசாலியின் குறுஞ்செய்தியை பார்த்து விட்டு, வேறு யாருக்கோ அழைத்து பேசி விட்டு, அதன் பின்பே அஞ்சனாவை அழைத்தான். “என்ன அரசு அம்மா கிட்டப் பேசியாச்சா?” “இப்ப தான் பேசுனாங்க. அங்க காப்பு கட்டுறது எல்லாம் நல்லா முடிஞ்சதா?” “ரொம்ப நல்லா போச்சு. இங்க நடந்த கூத்த கேட்டியா?” “கேட்டேன் கேட்டேன். இதெல்லாம் என்ன அஞ்சு? எரிச்சலா இருக்கு” “அந்த புள்ள பாவம்டா” “பாவம் புண்ணியம்னு என் கிட்ட பேசாத காண்டாகிடுவேன்” “சரி சரி விடு.” […]
Readmore