தாழம்பூ வாசம் நீ…..
26
மதியம் உணவுக்கு கூட… தாமுவும் லிங்காவும் வீடு வரவில்லை.
லிங்கா, மாலை ஐந்து மணிக்கு வந்தான். அவசர அவசரமாக உடை மாற்றி கிளம்பினான். பெரிதாக ஏதும் இல்லை ஒரு ஜீன்.. ப்ராண்ட் ஷர்ட்.. அவ்வளவுதான். என்ன இப்போது புதிதாக திமிரும்.. சற்று கர்வமும் வந்திருந்தது அவனின் துணைக்கு. எனவே, தாடியுடன் மீசையுமாக லிங்கா சற்று மாறி இருந்தான்… ‘என்னால் சமாளிக்க முடியும்’ என்ற நிமிர்வு வந்திருந்தது.
கறி விருந்து மதியத்திலிருந்தே அமர்க்களப்பட்டது.. லிங்காவின் நண்பர்கள் அனைவரும் மதியம் வந்துவிட்டனர். கூடவே சாரங்கன் அவர்களின் ஆட்கள் என எல்லோரும் வந்திருந்தனர். எனவே மதியமே தொடங்கி விட்டது விருந்து.
அவனின் நண்பர்கள் எல்லோரும் ஒரே கிண்டல்தான்… “மச்சி… அங்க விட்டு… இங்க பிடிச்சிட்டியே டா… உன் பின்னாடி மலையே நிக்குது போலவே… நான் ரெண்டு மாசம் முன்னாடி பார்த்த லிங்காவா இது…” என்றனர் எல்லோருமாக. தனது கம்பீரம் தொலையாமல் சிரித்தான் லிங்கா.
அதற்கும் வாய் வலிக்க பேசியது அந்த கூட்டம் “நல்ல வேலை… அந்த புள்ளைய பார்த்து அழுத… இப்போ எங்க தங்கச்சி வந்ததும் முகமே கலகட்டுதுடா….” என அலப்பரைகள் செய்ய…
லிங்கா “டேய்… டேய்… மாமனார் டா… எல்லாம் அப்புறம் பேசலாம்… இன்னிக்கு உங்களுக்கு வேட்டை டா… என்ஜாய் பண்ணுங்க. எல்லாம் நியாபகம் வைச்சிக்கனும்… நான் பாண்டி வரும்போது.. கணக்கை தீர்த்திடனும்” என்றான் சத்தமே இல்லாமல்… அந்த தந்திரன்.
“போடா.போடா… இனி எங்களோட… பார் ஹோல்செல்லரே நீதான் டா…. மச்சி… வா… வா…. “ என்றனர் பெரிதாக சிரித்தபடி. ஆக நீண்ட நாட்களுக்கு பிறகு லிங்கா இயல்பாக மாறி வாயாடினான் எல்லோரிடமும்.
மாலை ஏழு மணி… டிஜே… அவர்களின் ஸ்பீக்கரில் வந்த சத்தம் அந்த இடத்தை அதிரத்தான் வைத்தது. பார்ட்டியில் மிக்சிங்கு என தனியாக ஆங்காங்கே ஆட்கள்… பெரிய பெரிய டேபிள் போட்டு… தனது வித்தையை காட்டிக் கொண்டிருந்தனர்.
அட அட… அந்த நபர் செய்யும் கலவையை காண்பதற்கே ஒரு கூட்டம் சூழ்ந்து நின்றது அங்கே.. இப்போதெல்லாம் அதுவும் ஒரு கலை.
இருள் சூழ்ந்த இடம்தான் என்றாலும் அங்காங்கே கண்ணை உறுத்தாத மின்மினி போல வெளிச்சம் மின்னியது அதில் சேர் டேபிள் என இருக்க… அதில் எல்லோரும் அமர்ந்து தங்களின் கச்சேரியை தொடங்கி இருந்தனர்.
லிங்காவின் முழு தொழில் வட்டமும் வந்திருந்தது. எல்லோரையும் சாரங்கனுக்கு அறிமுகப்படுத்தினர், தாமுவும்.. லிங்காவும். சாரங்கனின் கட்சி ஆட்கள்… மத்தியிலிருந்து நிர்வாகி என எல்லோரையும் அழைத்து சற்று வாயடைக்க வைத்திருந்தார் தாமு.
பக்கத்து மாவட்ட நிர்வாகிகள், அதிகாரிகள்… அரசு அலுவலர்கள், ஆளுங்கட்சி… எதிர்கட்சி என பாகுபாடில்லாமல்… எல்லோரையும் அழைத்திருந்தனர்.
அந்த மினிஸ்டர்… அவர்களின் ஆட்களும் வந்திருந்தனர். ஆளுங்கட்சி என எல்லோரும் பேசினர். மற்றபடி… யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இப்போதே தங்களின் நிலை தெரிவது போல் இருந்தது அந்த ஆளுங்கட்சி மினிஸ்டருக்கு. சற்று வேர்த்து விறுவிறுத்து போனார்.
கொஞ்சம் அசால்ட்டாக இருந்துவிட்டோமோ… சொற்ப பணத்திற்கு ஆசைப்பட்டு… அடுத்த ஐந்தாண்டை தொலைத்து விட்டோமோ என எண்ணாமல் இருக்க முடியவில்லை அவரால்.
தான் வைத்த விருந்துக்கு வந்த கூட்டத்தைவிட இது மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அமர்ந்திருந்தவரை… லிங்கா, பார்வையால் அவ்வபோது சீண்டினான் வஞ்சனையில்லாமல்.
[the_ad id=”6605″]
ஒருவழியாக அதிகாலை மூன்று மணிக்குதான் அந்த இடம் சற்று… ஜனத்திரள் இல்லாமல் இருந்தது. தனது நண்பர்களை பக்கத்தில் இருந்த தங்களின் பண்ணை வீட்டுக்கு அனுப்பி வைத்தான். வந்தவர்களை முறையாக வண்டியில் ஏற்றி அனுப்பி.. அவர்களின் டிரைவர்கள் வரைக்கும்.. தனியாக கட்சி ஆட்கள் மூலம் கவனித்து.. என லிங்கா இளா, தாமு… சாரங்கன் என எல்லோரும் ஓய்ந்து இருந்தனர்.
அப்படியே சேரில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.. தாமு “நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு கிளம்புங்க… மூர்த்தி அண்ணன் காத்திருப்பார். இனி நம்ம பசங்க பார்த்துப்பாங்க” என சொல்லி அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
#$$#$#$#$#$#$#$$#$#$#$$#$#$$$
அந்த வார ஞாயிறு சோம்பலாக கடந்தது.. அண்ணன் தம்பி இருவரும் எழவில்லை அப்படியொரு உறக்கம்.
அடுத்து அடுத்து நாட்கள் வழக்கமாக சென்றது. வீட்டில் பெண்கள், சக்தி இருக்கும் போதே காவ்யாவின் திருமண பர்ச்சேஸ்சை செய்துக் கொள்ளலாம் என எண்ணி அவர்கள் வெளியே சென்றனர் அடிக்கடி.
லிங்கம்தான், பலசமயம் தன் மனையாளிடம் இரவில் “போகனுமா… மாமா பாவமில்ல… இரேன்…” என அவளை கரைத்துக் கொண்டிருந்தான். சக்தி சிரித்தபடியே அவனை அனைத்துக் கொள்வாள், வாய் திறக்கமாட்டாள்.
“அழுத்தம்.. அழுத்தம்… ப்பா.. பா… லிங்கா பொண்டாட்டிக்கு இவ்ளோ அழுத்தம் ஆகாது டி” என்பான் செல்லமாக திட்டியபடி. சக்திக்கு அதெல்லாம் இப்போது காதில் விழுவதில்லை… அவனின் சீண்டல் மொழிகள் புரிய தொடங்கி இருந்தனவே.
இப்போதெல்லாம் சக்திக்கு லிங்கா கொஞ்சம் பிரமிப்பாக தெரிந்தான். தன் மாமியார் தன்னவனை பற்றி சொன்னதிலிருந்து கொஞ்சம் அவனை கவனிக்க பழகியிருந்தாள். அதில் ‘எப்படி அவ்வளோ பொறுப்பா இருக்கிறவங்க, இப்படி அசால்ட்டா வாய் பேசுறாங்க… அவ்ளோ பிரச்சனைன்னு சொன்னாங்க அத்த, இவர் என்னமோ இவ்ளோ கூலா இருக்கார்..’ என எண்ணாமல் இருக்க முடியவில்லை சக்தியால்.
ம்… முகத்தில் எப்போதும் ஒரு மலர்ச்சி ஒட்டிக் கொண்டிருக்கும் அவனுக்கு. அலுவலகத்திலிருந்து வரும் போதே.. ‘அம்மு என்ன செய்யறா..’ என்பதுதான் அவனின் கேள்வியாக இருக்கும். அதெல்லாம் இப்போது சக்திக்கு ஆச்சரியத்தை தந்தது.
அத்தோடு… அவனின் பழைய fb புகைப்படங்களிலும் இப்படிதானே… இருந்தான் இந்த மலர்ந்த புன்னகை உடன்தானே இருந்தான்… என தனக்குதானே பதில் சொல்லிக்கொள்வாள்
லிங்காவும் இந்த ஒரு வாரத்தில் நிறைய சக்தி புராணம் படித்தான். சின்ன சின்ன விஷயத்திற்கும் “சக்தி சக்தி” என சத்தமாக அழைத்தான். ம்.. தன் வீட்டாரிடம் அவளின் வயலின் வாசிக்கும் பெருமையை அவன்தான் சொன்னான்.. உண்மையாகவே எல்லோருக்கும் ஆச்சரியம்.
அப்படிதான் அன்று வீட்டு பெண்கள் புடவை எடுக்க கிளம்பினர்… இப்போது காவ்யா திருமணத்திற்கு. அவனால் வரமுடியவில்லை ஏதோ மீட்டிங் இருந்தது. ஆனால், தன் அம்மாவிடம் லிங்கா ‘என் பொண்டாட்டிக்கு எல்லோ.. இல்லை பிங்க் கலர்ல எடுங்க…’ என சொல்லித்தான் அனுப்பினான்.
இதை எல்லோரிடமும் சொல்லி சொல்லி காமாட்சிக்கு பெருமை பிடிபடவில்லை. சக்திக்குத்தான் ஐயோ.. இவன் இன்னும் என்ன என்ன பாடுபடுத்துவானோ என இருந்தது.
மாலையில் தீபக்குடன் வெளியே செல்லும் போது மனைவியையும் அம்முவையும் அழைத்துக் கொண்டே சென்றான்.
அந்த வாரமும் அப்படியே சென்றது… சக்தி ஊருக்கு என பேசினாளே.. கணவன் கொஞ்சம் கொதிநிலைக்கு சென்றான்.
இன்று இரவு, லிங்கா… லேட் அந்த நில சேல்ஸ் விஷயமாக.. ஏதோ அவசரமாக ஒரு பார்ட்டியை பார்க்க சென்றிருந்தான், அதான் லேட்.
[the_ad id=”6605″]
இலகு உடைக்கு மாறி வந்தான் உண்பதற்கு… இப்போதெல்லாம் சக்திக்கு கண் பார்த்தால்… கை செய்தது. எனவே, கணவனுக்கு உணவு பரிமாறியபடியே… சக்தி “நீங்க பிசியா இருந்தா… நான் எங்க வீட்டு டிரைவர் அண்ணா கூட, காலேஜ் போயிக்கிறேன்… நீங்க வேலையை முடித்து வாங்க…” என்றாள் சாதாரண குரலில்.
ஆனால் லிங்காக்கு, அது பிடிக்கவில்லை. அவன் வேறு ஏதோ யோசனையில் இருந்தான். இதில் இவள் திடிரென இப்படி பேசவும் கோவம் வந்து விட்டது… கணவனுக்கு.
லிங்கா “ஒரு மாசம் கூட லீவ் போட மாட்டியா… ரொம்பதான் பண்ற..” என கொஞ்சம் அதிகாரமாக சத்தம் போடவும்.. கண்ணில் தண்ணீரே வந்துவிட்டது அவளுக்கு.. எல்லோரும் ஹாலில்தான் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.. லதா பசங்க மட்டும் எப்போதும் போல மேலே இருந்தனர்.
என்ன சொல்லுவது என தெரியாமல் இளாவும், மூர்த்தியும் எழுந்து வெளியே சென்றனர்.
காமாட்சிதான் சமாதானம் பேசினார்.. “சத்தம் போடாத லிங்கா… மேல போ… சும்மா இங்க வைச்சி சண்டை போட கூடாது.. உங்க விஷயத்தை.. நீங்களே பேசி முடிங்க… ம்…. கிளம்புங்க… ” என இருவரையும் மேலே அனுப்பினார். சக்தி முன்பே உண்டிருந்தாள், லிங்கா பின் ஏதும் பேசாமல் உண்டு.. மேலே சென்றான்.
சக்தி சற்று பொறுத்துதான் மேலே வந்தாள்… கணவனுக்கு இப்போது கோவத்தின் வேகம் குறைந்திருந்தது… ஏனோ அவளை அனுப்ப மனமில்லை. என்னமோ சொல்ல தெரியாத ஒன்று அவளை எப்போதும் அருகில் வைத்துக் கொள்ள மனம் விரும்பியது. எனவே இன்று சற்று நிலையில்லாமல் கத்திவிட்டான் பொதுவில்.
சக்தி வந்ததும், கணவன் ஏதாவது பேசுவான் எனதான் பார்த்திருந்தாள். லிங்காக்கு முழு சிந்தனை வேறு எதிலோ இருந்தது. எனவே “நீ படு சக்தி” என்றான்.
சக்திதான் சற்று முறுக்கிக் கொண்டாள்… சண்டை கட்டினாள் “அதெல்லாம் முடியாது… அங்கேயே ஏன் சத்தம் போட்டீங்க… உங்க மூட் எனக்கு தெரியுமா.. வீட்டுக்கு வந்தா… என்னை மட்டும்தான் நினைக்கனும்… இவருக்காக நான் படிப்பை விட்டுட்டு உட்கார்ந்திருக்கேன்… இவரு… என்னமோ யோசிப்பாராம்..” என எங்கேயோ பார்த்து பேசி… முகத்தை திருப்பிக் கொண்டாள்.
லிங்காக்கு இவளின் புது கோவம் பிடித்தது… பதிலுக்கு கோவம் வரவில்லை சற்று சத்தமாக சிரித்தான்… “என் பொண்டாடிக்கு ரோஷம் வருதுடா” என்றான்.
அந்த குடும்பம் எனும்… கூட்டுக்குள்.. சக்தி மெல்ல மெல்ல அறிசுவடி படிக்க தொடங்கினாள்.. எப்போது எங்கு எது பேச வேண்டும் என்பதுதான் அது. எத்தனை இருந்தாலும் எங்கள் விழயம் வேறு என்பது தன் மாமியாரின் அதட்டலில் புரிந்தது சக்திக்கு. கொஞ்சம் கொஞ்சமாக அதன் சாரத்தை உள்வாங்கினாள் புதுப்பெண்.
@$@$@$$@$@$@$$@@$@$@$@$
இன்று ரெஜிஸ்ட்ரெஷன்.
இவர்கள் நிலம் விற்பதற்கு ஏற்பாடு ஆகியிருந்தது. ஒரு பெரிய ரியல் எஸ்டேட் கம்பெனி அவர்களின் மொத்த, பெரிய பரப்பளவுள்ள நிலத்தை வாங்க முன்வந்தனர்.
அதன் ரெஜிஸ்ட்ரெஷன் இன்று. சொல்லியபடியே எல்லாம் சிறப்பாக நடந்தது… விலை லிங்கத்திற்கு ஒத்து வரும் வரையில் கொஞ்சம் இழுத்து இருந்தான், அதனால்தான் இத்தனை தாமாதம். சிறப்பாக அவன் எதிர்பார்த்த விலையே போக நிம்மதி அனைவருக்கும்.
கொஞ்சம் காத்திருந்து காரியம் சாதிக்கும் கலையை இப்போது இந்த நில விஷயத்தில் கற்றான் லிங்கா.
மூர்த்தி கூட ‘பிரிச்சு போட்டு.. ஆள் ஏற்பாடு செய்டா… மொத்தமா கொடுத்தா இப்படிதான் கேட்பாங்க’ என்றார்.
லிங்கா ‘இல்ல ப்பா… இவங்க வருவாங்க, வெயிட் பண்ணுங்க. நல்ல பெத்த பார்டி இது… கொஞ்சம் அமைதியா இருப்போம்… ஒரே வேலையா முடியும்… இருங்க பார்க்கலாம்…’ என காத்திருக்க செய்தான்.
அதற்கு பலன் இந்த ஒருமாச காத்திருப்பில் கிடைத்து. இன்று ஆண்கள் எல்லோரும் அந்த வேலையில் பிஸி.
@$@$@$@$@$$@$@$@$@$@$
மறுநாள் தாமுவை, தன் மாமனாரை அழைத்திருந்தான் லிங்கா, அலுவலகத்திற்கு. தாமுக்கு யோசனை.. அத்தோடு ஏதோ ரெஜிஸ்ட்ரேஷன் என அலைவதும் தெரிந்ததால்… கொஞ்சம் யோசனையாகவே கம்பெனி வந்தார்.
[the_ad id=”6605″]
மூர்த்தி அமர்ந்திருந்தார்… இளாவும் அமர்ந்திருந்தான். லிங்கா அவரை அழைந்தது வந்து அமர்த்தி விட்டு தானும் அமர்ந்து கொண்டான்.
இளாதான் பேச்சை தொடங்கினான் “எங்களுக்கு தக்க நேரத்தில் உதவி செய்தீங்க மாமா… நன்றி சொல்ல கூடாது ஆனாலும் சொல்றேன்..” என தொடங்கி எல்லாவற்றுக்கும் பொறுப்பாக நன்றி சொன்னான் இளா.
லிங்கா கைகட்டி வேடிக்கை பார்த்தான் ஏதும் பேசவில்லை. மூர்த்தி அவ்வபோது தன் பெரிய மகனை வழி மொழிந்தார்.
இளா மெல்ல பணம் விவகாரம் பற்றி பேசவும், தன் மாப்பிளையை துணைக்கு அழைத்தார் தாமு. லிங்கா “நீங்க கண்டிப்பா வாங்கிக்கணும் மாமா” என்றான் ஒரே வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லி.
இளாதான்… “எங்க பெண்ணை நாங்க மதிக்கிறோம்… நாளைய பின்ன இது தெரியும் போது மனதில் ஒரு சங்கடம் வர கூடாதில்ல அதுக்காக வாங்கிக்குங்க…” என்றான் கடைசி பேச்சாக.
தாமுக்கு இந்த வார்த்தை அவ்வளவு நிம்மதி… “மாப்பிள்ளை… நான் உங்க அப்பாக்காகதான், அவரின் குணம் தெரிந்துதான் உங்க வீட்டில் சம்பந்தம் செய்தேன்.. அது எள்ளளவும் தவறில்லைன்னு நீங்க ரெண்டு பேரும் காட்டிட்டீங்க. சந்தோஷமா வாங்கிக்கிறேன்… ப்பா” என லிங்காவையும் இளாவையும் பார்த்து சொன்னவர், மூர்த்தியிடம் “அப்புறம் மூர்த்தி அண்ணா… மாப்பிள்ளை மேல் எந்த தவறும் இல்லை அவர்… வட்டிக்குத்தான் கேட்டார்… நான்தான் இத சாக்கா வைச்சி என் ஆசையை நிறைவேத்திக்கிடேன். என் மாப்பிள்ளை மேல எந்த தப்பும் இல்லை…” என்றார் நிமிர்வான குரலில்.
மூர்த்திக்கு அந்த வார்த்தை போதுமாக இருந்தது தந்தையாக. என் மகனை விட கூடாது என பெண் கொடுத்துள்ளார் என பெருமையாக உணர்ந்தார் மூர்த்தி. மேலும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர் எல்லோரும்.