இங்கு தீபக் வண்டி கேட்பதை… அங்கு மறைந்து கொண்டு… பார்த்துக் கொண்டிருந்தான் ஒன்பது வயதே ஆன காவ்யா அரவிந்தின் மகன் ஆதித்யா.
தீபக் வண்டி எடுத்தால்.. அவனின் பின் சத்தமில்லாமல் வந்து அமர்வான்… ஆதி. ஆதிக்கு வண்டிகளில் பயணம் என்றால் மிகவும் பிடிக்கும், தீபக் இப்போது கார் வரை ஒட்டுவதால்.. தீபக்தான் ஆதியின் ஆல் டைம் ஃபேவரைட்.
இதை பார்த்துக் கொண்டிருந்த சக்தி லிங்காவின், சீமந்த புத்திரன் தரணிஷ்வரன் வந்தான் தீபக்கிடம் “என்ன ண்ணா” என்றான்.
தீபக் “என்ன டா” என்றான் அவனும்.
“என்ன வேணும் உனக்கு, வண்டி சாவிதானே நான் தரேன்… “ என்றான் மழலையில்லா குரலில் திடமாக கேட்டான்.
பெரியவன் யோசனையாக பார்க்க.. உடனே தன்னிடம் உள்ள வண்டி சாவியை காட்டினான் தரணி “ண்ணா.. எனக்கு அந்த, அவன்ஜர்ஸ் கிட் மட்டும் வாங்கி கொடு” என்றான் ஐந்து வயதே ஆன தரணி, கையில் சாவியை வைத்துக் கொண்டு.
[the_ad id=”6605″]
தீபக் “நீ கொடு” என்றான்.. சாவியை பார்த்து.
“ம்.. சரியா” என்றான் தனது பேரத்தில் குறியாக தரணி.
இவர்கள் கையில் சாவியை பார்த்த சக்தி, தீபக் மட்டும் இல்லாமல் தரணியும் நிற்க… பின்னாடியே குறு குறுவென பார்த்தப்படி ஆதியும் நிற்பது தெரிய… எல்லோரும் வண்டியில் போகிறார்களா! என நினைத்து சக்தி “டேய்… இருடா தரணி. நீ எங்க போற… தீபக், எதுக்கு சாவி… இப்போ எங்க போறீங்க எல்லோரும்… மதியம் வேண்டாம்.. ஈவ்னிங் போலாம் டா…” என சொல்ல சொல்ல. இளையவர்கள் சுதாரித்து இருந்தனர்.
தரணி கையிலிருந்து சாவியை வாங்கிக் கொண்டு… தீபக் “சரி, நான் வாங்கி தரேன்” என்றவன் தம்பியிடமிருந்து சாவியை வாங்கிக் கொண்டு நடந்தான். தீபக் ஆதி இருவரும் வண்டியை எடுத்து கொண்டு ஒரு ரவுண்டு வெளியே செல்லலாம் என திட்டம். அவர்களுக்கு இந்த வாண்டுகளுடன் கூட்டணி இல்லை.
ஆனால், தரணி அம்மு… இருவருக்கும் ஐஸ்கிரீம் சாப்பிடும் எண்ணம் எனவே தீபக்கிற்கு முன் சாவியை தரணியிடம் கொடுத்தாள் அம்மு. அதுவும் “ஐஸ் கிரீம் வாங்க வரணும்” என பேரம் பேசி கொடுத்திருந்தாள்.
இதில் தரணி தனியாக அவன்ஜர்ஸ் வேறு கேட்டான். ஆக, தீபக் ஒன்று நினைக்க.. அத்தோடு சேர்த்து அம்மு தரணி ஒன்று நினைக்க.. இப்போது எல்லாம் தீபக்குடன் சென்றது. ம்… அவன் பின்னாடியே… எல்லா விளையாட்டு பிள்ளைகளும் சென்றது. ஆதி, தரணி, அம்மு.. காவ்யாவின் பெண்… மூன்று வயதான ஆதிரா… இதோ தீஷி… என எல்லாம் சென்றது.
சக்தி அவர்களின் பின் சென்றாள் “தன் கணவனை அழைத்தபடியே. அம்மு தன் சித்தியை பார்த்து விட்டாள் “சக்தி நீ போ சக்தி… அண்ணா, ஐஸ் கிரீம் வாங்கிட்டு வருவான்… நான் இங்க இருந்துதான் வாங்கிப்போம் நீங்க போங்க.. சித்தப்பா திட்டுவார்” என்றாள் பொறுப்பாக.
சக்தி “எங்கேயும் போக கூடாது… “ என சொல்லி மறைமுகமாக தீபக் செல்லுவதை ஒத்துக் கொண்டு வந்து அமர்ந்தாள்.
ஆனால், எதிர்பார்த்தது போல தீபக் வண்டி எடுக்கவும், முன்னாடி தரணி.. பின்னாடி ஆதி அமர்ந்தனர். தீக்ஷி அம்முவின் கையிலிருந்தபடி “நானு நானு” என அழுக தொடங்கினாள்.
லிங்கா அங்கேதானே நின்றிருந்தான். அவன் காதில் இது விழுந்தது.. திரும்பி பார்த்தான் தீபக் வண்டியில் இருக்க… சுற்றிலும் பிள்ளைகள்.. வெயில் மண்டையை பிளந்தது.. ஆனால், எல்லாம் வாசலில் கேட்டின் அருகே நின்றது. கூடவே வாட்ச்மேன் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.. பார்த்த லிங்கா “தீபக்…” என்றான் சத்தமாக.
தீபக் முகமே மாறிவிட்டது.. ‘அய்யோ சித்தப்பா… விட மாட்டாரே’ என எண்ணி… நின்றான். லிங்கா “வா “ என சைகை செய்ய… தீபக் ஒரு ரவுண்டு என சைகை செய்தான்.
லிங்கா கடுமையான முகமாக “வா..” என்றான் அழுத்தம் திருத்தமாக.
தீபக் வண்டியை உள்ளே நிறுத்தி வந்தான் லிங்காவின் அருகே.. அவனின் பின் படையே வந்தது… லிங்கா “சாவிய கொடு… யார் கொடுத்தா சாவி” என்றான்.
ஆதிரா “மாமா… தணி மாமாதான், தீபக் மாமா எனக்கு ஐஸ்க கிரீம் வாங்கி தருதுவாங்க… சொல்லி… குத்தாங்க… ” என்றாள் மழலையில்.
தன் மகனை முறைத்தான் லிங்கா.
தரணி “ப்பா… அம்முதான் சாவி தந்தா…” என்றான்.
[the_ad id=”6605″]
லிங்கா இப்போது அம்முவை பார்க்க அதற்குள்.. அம்முவிடமிருந்து தன் அப்பாவிடம் தாவினாள் தீக்ஷி.. “ப்பா.. ஐஸ்க்யிம்…” என்றாள் தன் தந்தையின் தாடையை தடவி.
கூடவே அம்முவும் “ம்.. சித்தப்பா… தீபக் வாங்கித் தரேன்னு சொன்னான்” என்றாள் தழைந்த குரலில் கொஞ்சலாக உண்மையை சொன்னாள்.
லிங்கா “சித்தப்பாவ கேட்காமல் சாவி எடுப்பியா..” என்றான் சற்று அதட்டலாக அம்முவிடம்.
அம்மு “சாரி சித்தப்பா…” என்றாள்.
லிங்காக்கு அம்மு சாரி கேட்டதும் கோவம் தீர்ந்துவிட “ஆர்டர் பண்ணலாம்.. சரியா“ என்றான் எல்லோரிடமும் பொதுவாக.
பின், தன் மகளின் நெற்றியில் விழுந்த முடிகளை தன் விரல் கொண்டு ஒதுக்கி விட்டவன்.. ஆதிராவையும் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றான்.
லிங்கா ஐஸ் கிரீம் ஆர்டர் செய்யும் வரை.. எல்லோரும் அவனுடனேயே சுற்றினர்.
லிங்கா “போங்க வந்த உடனே… கூப்பிடுறேன்” என்றான்.
சக்தி “எனக்குங்க…” என்றாள். மகளை கீழே விட்டான் லிங்கா, தன் மனையாளிடம் வந்து அமர்ந்தான்… சக்தி “எனக்கும்…” என்றாள்.. மீண்டும்.
கணவன் “முதல்ல உனக்குத்தான் பண்ணேன்.. குல்பி உனக்கு ஒகேதானே..” என்றான் சிரித்த முகமாக.
லிங்கா இளாதான் இப்போது வீட்டில் எல்லா பொறுப்புகளையும் பார்ப்பது. கோபி நாயரை.. சமையலுக்கு அமர்த்திக் கொண்டனர். லதாவும் அதிகமாக வெளியே செல்வதால், தன் அன்னையால் முன் போல வேலை செய்ய முடிவதில்லை.. சக்தி சமைத்து யார் சாப்பிடுவது என கோபி நாயரை அமர்த்திக் கொண்டனர்.
சக்தி M.A முடித்துவிட்டாள். கூடவே லிங்காவுடன் அலுவலகம் செல்கிறாள். அவளை வீட்டிலேயே அமர விடுவதில்லை லிங்கா. டிசைனிங் நீ பார்க்கணும் என சொல்லி இருக்கிறான். எனவே அதற்கான பயிற்சியில் இருக்கிறாள் சக்தி.
இப்போது லதா இளா, காவ்யா அரவிந்த் வந்தனர் ஹாலுக்கு. அரவிந்த் “சாப்பாடு சூப்பர் மச்சான்… அளவா பரிமாறினாங்க… நல்ல டேஸ்ட்.. “ என்றான் ரசனையாக.
லிங்கா “ம்.. சக்தியோட ப்ரெண்ட்தான் அந்த மெஸ் வச்சிருக்காங்க… சக்தி ரெக்கமெண்ட்தான்” என்றான் மனைவியை பார்த்தபடி..
காவ்யா “அதானே இப்போ எல்லாம் அண்ணா… சக்தியை கேட்காம எதுவும் செய்யறதில்ல” என்றாள்.
லிங்கா அலட்டவே இல்லை… “ம்… என்ன செய்ய… எல்லாம் அரவிந்த் ட்ரைனிங் தான்” என்றான்.
“மச்சான் இதில் ஏன் நான்.. எல்லாம் உங்க தங்கையை சொல்லுங்க” என்றான்.
இளா “என்ன ஒரு பவ்யம் ப்பா…” என்றான். எல்லோரும் காவ்யாவை பார்த்து சிரிக்க..
காவ்யா “நம்பிட்டோம்… இந்த உலகம்.. எப்போதும் உண்மையை ஏற்பதில்லை” என்றாள் தத்துவ குரலில்.
அண்ணன் தம்பி அரவிந்த என மூவரும் கோரஸ்சாக “அதே அதே… நாங்களும் அதைத்தானே சொன்னோம்” என்றனர்.
லதா “வேணாம் காவ்யா.. எல்லோரும் ஒன்னு சேர்ந்துட்டாங்க… நீ ஜகா வாங்கிடு” என்றாள்.
காவ்யா தன் கணவனின் முதுகில் ஒன்று ‘வைத்து’ எழுந்தாள் “வாங்க அண்ணி… நாம போலாம் “ என லதா, சக்தியிடம் சொல்லி எதிர்புற சோபாவில் அமர்ந்தாள் காவ்யா. ஆக எல்லோரும் அங்கேதான் இருந்தனர் சுற்றி சுற்றி.
லிங்கா சக்தியை விடவில்லை.. அவளின் கால்களின் அருகே கீழே அமர்ந்தான்.. அவளின் கால்களை அழுத்திவிட்டான் இதமாக.
இது பழக்கம்தான் கடந்த ஏழு வருடங்களாக… அவளுக்கு கால் வலி எப்போதும் உண்டு.. அனிமிக். எனவே, மாசமாக இருக்கும் போது கால் வலி இன்னும் அதிகமாக இருக்கும். எனவே லிங்கா அவ்வப்போது பிடித்து விடுவான் தயக்கமே இல்லாமல்.
எனவே இப்போதும் எல்லோரும் கண்டும் காணாமல் தங்கள் வேலையை பார்த்தனர்.
ம்… சக்திக்கு ஐந்தாம் மாதம் இது. மூன்றாம் குழந்தை.. அது தெரிந்து வீட்டில் எல்லோருக்கும் லிங்கா மேல் கோவம்.
[the_ad id=”6605″]
ஆனால், சக்திதான் இதற்கு காரணம், அவள்தான் எனக்கு நாலு பிள்ளை வேண்டும் என்றாள். லிங்கா என்றைக்கு மனைவி பேச்சை மீறி இருக்கிறான். எனவே அவர்கள் திட்டும் போது.. ஏதோ வாழ்த்துவது போல.. தன் பொண்டாட்டியை காட்டிக் கொடுக்காமல்.. “என்ன இப்போ… எங்க அம்மா பெத்துக்கலையா” என்றான் எதிர் கேள்வியாக.
காமாட்சியே “டேய்…” என சத்தம் போட்டார். அத்தோடு அடங்கியது அந்த பேச்சு. ஏனெனில் இதற்கு மேல் ஏதாவது கேட்டு, அவன் ஏதாவது சொல்லி.. என எல்லோருக்கும் தெரியுமே லிங்காவின் வாய், எனவே அமைதியாகினர் அனைவரும்.
காமாட்சி மதியம் உண்டு அப்போதே படுத்துவிட்டார்.
தீக்ஷி தன் பெரியப்பாவும் பெரியம்மாவும் சேர்ந்து அமர்ந்திருப்பதை பார்த்து வந்தாள், அவர்களின் அருகில். தீக்ஷிக்கு இளா என்றாள் கொள்ளை இஷ்ட்டம். அதுவும் லதாவுடன் இளா இருந்தால்.. அவர்களுக்கு நடுவில் தீக்ஷி கண்டிப்பாக இருப்பாள்.
இப்போதும் இருவரும் சேர்ந்து அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு தன் சலங்கை கொலுசு அசைய லதாவிடம் வந்தாள். கருகரு சுருட்டை முடி.. இப்போதுதான் பட்டுப்பாவாடை களைந்து.. சாதரண பருத்தி ஆடை அணிந்திருந்தாள்.
காலையில் வாரி சிண்டு போட்டிருந்த தலை முடியை, தானே பிய்த்து எரிந்திருந்தது.. அதில்.. கண்ணை மறைத்தது அந்த முடி.. அப்படியே லதாவிடம் தாவினாள் தீக்ஷி.. லதா தூக்கிக் கொள்ள “பெரிம்மா.. ண்ணா… தீபி… அப்பா வண்டி எத்து… டூ..ர் போறான்..” என தனக்கு தெரிந்ததை சொல்லியது.
லதா “ம்.. நீ போன அவன் கூட” என்றாள் விளையாட்டு விசாரணை குரலில்.
அது “இல்ல… சு..ம்மா” என சொல்லி தன் பெரியப்பாவிடம் சாய்ந்து கொண்டாள்.
லதா “எங்க தலையில் இருந்த பேண்ட்.. எடுக்கக் கூடாது சொல்லி இருக்கேன் இல்ல… எங்க அது” என கேட்டுக் கொண்டே தனது பேண்டை எடுத்து குழந்தையின் முடியை தூக்கி எடுத்து ஒரு சிண்டு போட்டு விட்டாள். கூடவே “எடுக்க கூடாது… சரியா” என்றாள் லதா.. சின்ன மிரட்டலாக.
அந்த திராட்சை விழிகள் சிரிப்பைதான் தந்தது.. உதடுகள் அழுகையில் பிதுங்க லதா “அப்படியே என்னை தாஜா பண்ணிடு.. அழுது அழுது” என தன் கணவனிடமிருந்து பிள்ளையை வாங்கிக் கொண்டாள்.
இந்த சிறுவர்கள் தனித்தனியே இருந்தால் கொஞ்சம் அமைதியாக இருப்பர்.. எல்லாம் சேர்ந்தால் அவ்வளவுதான்.. யார் பேச்சும் காதில் ஏற கூடாது என சத்தியம் செய்துக் கொண்டு சுற்றும் போல இந்த படை.
அதுவும் சக்தி என்றால் கேட்கவே வேண்டாம்.. அவளிடம் சொல்லி எல்லாம் நடத்திக் கொள்வார்கள், லதாதான் கொஞ்சம் மிரட்டுவாள்.
இப்போது ஐஸ் கிரீம் வர… அரவிந்த் வாங்கி வந்தான்.. லதா எல்லோருக்கும் முறையாக எடுத்து கொடுத்தாள்.. ஒரு பத்து நிமிடம் அந்த இடமே அமைதியாக இருந்தது.
அதன்பின் மீண்டும்.. குழந்தைகளின் சத்தம்தான்…
சக்தி ஐஸ் கிரீம் உண்டு முடித்து அமர்ந்து இருந்தாள். லிங்கா அவளுக்கு கால்களை அழுத்தி முடித்து இப்போது மேலே ஏறி அமர்ந்தான்.. தன்னுடையதை பிரித்தான்… முதலில் தீக்ஷி வந்தாள் “ப்பா ஆ…” என்றாள் செப்பு வாய் திறந்து.
அடுத்து ஆதிரா… அம்மு.. இவர்களை பார்த்து சக்திக்கும் ஆசை வர சக்தி “எனக்கு “ என்றாள் ரசசியமாக.
கணவன்… “நீ என்ன குழந்தையா… வா, மாமா தனியா ஸ்பெஷலா தருவேனாமா…” என்றான் கண்ணடித்து ரகசிய குரலில். சக்தி அவனின் தோள் சாய்ந்தாள் அந்த பேச்சில்.. அப்படியே எல்லோரும் பேசியபடியே இருக்க சக்தி உறங்கி இருந்தாள் அவனின் தோளில்.
ஒவ்வொருவராக உறங்கச் சென்றனர்.
லிங்கா எழாமல்.. காவ்யா கொடுத்த டிஷுவில் கை துடைத்துக் கொண்டான் “நீ போய் படு டா…” என்றான் அவளிடம். காவ்யா “ம்… சக்திய எழுப்பவா..” என்றாள்.
“வேண்டாம் டா… இங்கேயேப் படுத்துக்கட்டும்…” என்றான் அண்ணன்.
தீக்ஷி, லதா இளா உடன் சென்றுவிட்டாள் உறங்க.
அங்கே யார் இருக்கிறார்கள்.. என்ன என ஏதும் பார்க்காமல்.. தன் மனைவியை மெல்லப் படுக்க வைத்தான் அந்த சோபாவில். அவளுக்கு கீழே அந்த ஷோபாவின் கீழேயே.. தானும் படுத்துக் கொண்டான்.
அழகான இந்த கட்டமைப்பை பொறுப்பாக பார்த்துக் கொண்டனர் அனைவரும். இதில் எல்லோருக்கும் ஒரு பங்கு இருந்தது. யாரும் தனித்து இல்லை இங்கு. முன்னும் பின்னும் சேர்ந்து பின்னி பிணைந்து நின்றனர் எல்லா இடத்திலும்.
“துன்பங்கள் துயரங்கள் யார் தந்த போதும்
இன்பங்கள் மட்டும் நாம் சேர்த்து வைப்போம்…
தெய்வங்களாய் நீங்கள் வாழ்ந்திடும் வீட்டில்
தேவர்களாய் நாங்கள் காத்து நிற்போம்…”
#%%#%#%%#%%%#%#%#%#%#%%#%%#