தேன் துளி 33
மதியம் மணமகன் மணமகளை வீட்டுக்கு அழைத்து வர அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றது வரு தான். காலையில் இருந்த உற்சாகம் அவளிடம் இல்லை. அனைவரும் மணமக்கள் உட்பட இன்றிரவே அனைவரும் கிளம்பி விடுவார்கள் என்றக் கவலையில் இருந்தாள்.
சாரு , அம்மு என அவள் சித்தப்பாக் குடும்பத்தார் மாலையில் கிளம்பத் தயாராக அம்முவைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். அவர்கள் பிரிவு ஒருபுறம் என்றாலும் விக்ரமிடம் காதல் சொல்ல முடியா ஏக்கம் இன்னும் அழுகையை அதிகரித்தது.
கனிப் பாட்டியும் விஸ்வனாதனிடம் , ” இப்படி பாசம் காட்டுற பிள்ளைங்கள இத்தனை நாளா இந்தப் பக்கம் வரவிடாமயே பண்ணிட்டியே எனத் தன் ஆதங்கத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
அதன் பின் உள்ளூர் உறவுகள் மட்டும் இருக்க , வீடு நிறைய நிரப்பி இருந்த சங்கீதா கொண்டு வந்த சீர்வரிசைகளை நிரப்பி முறைமைகள் நடந்து முடிந்து , மறுநாள் மாலை சென்னையில் வரவேற்பு ஏற்பாடாகியிருந்ததால் மணமக்களோடு சில உறவுகளை அழைத்துக் கொண்டு , இன்பாவும் பரணியும் சென்னை விமானம் ஏற மதுரைக்கு கிளம்பினர்.
மற்றவர்கள் எல்லாம் காரிலேயே செல்லத் தயாராகிக் கொண்டிருந்தனர். சிவனாதனும் ராணியும் விக்ரம் வீட்டினரை வழியனுப்ப அங்கு கிளம்ப , வருவும் அரவிந்தும் அவர்களுடன் சென்றனர். அப்போதும் அதே புடவையில் இருந்தவள் , நகைகளை மட்டும் குறைத்திருந்தாள்.
இவர்கள் சென்ற போது அனைவரும் கிளம்பித் தயாராக நின்றார்கள் . வித்யாவும் வருவும் உணர்ச்சிவசப்பட்டு அழ ஆரம்பிக்க ,
” ரெண்டு பேரும் ஒரே காலேஜ்ல ஜாய்ன் பண்றதா தானே இருக்கீங்க … அப்புறம் என்ன மா அங்க போய் பார்த்துக்கலாம்” என ராணியும் லதாவும் அவர்களது அன்பைக் கண்டுக் கூற , இரு இளம் பெண்களும் தத்தமது மனதிற்கினியவனைத் தான் பார்த்தனர். அரவிந்த் யாரும் அறியாமல் கண்களால் சைகை செய்து , போன் என்பது போல சைகை செய்ய , ‘சரி’ என்பதாக வித்யாவும் தலையாட்டிக் கொண்டாள்.
விக்ரமை வருப் பார்க்க , அவன் சிவப்பு வெள்ளைக் கோடுகள் போட்ட டீ ஷர்ட்டில் தன் பைகளை அங்கிருந்த கார் ஒன்றில் தனியாக வைத்துக் கொண்டிருந்தான்.
வரு வீட்டைத் தாண்டித் தான் அவர்கள் செல்ல வேண்டும். அதோடு எப்படியும் கனிமொழியைப் பார்த்து விட்டுத்தான் செல்வார்கள் என்பதால் வரு வீட்டினர் கிளம்பினர்.
வரு திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே செல்ல , அரவிந்தும் வித்யாவைப் பிரிய மனமே இல்லாது சென்றான். வீட்டில் நிறைய உறவினர்கள் கூட்டம் ,தன் அறைக்குச் சென்றவள் , ஜன்னலருகே சென்று நின்றுக் கொண்டாள் .எப்படியும் விக்ரமின் காரும் இவ்வழியே தான் செல்லும் என எண்ணமிட்டபடியே பார்க்க , விக்ரம் தவிர மற்ற எல்லோரும் வந்து இறங்கவும் , வேகமாக படியிறங்கி வந்தாள்.
விக்ரமராஜா தங்கையிடம் விடை பெற்றுக் கொண்டு இருந்தவர் , பேரன் மதுரை சென்று விமானம் மூலம் வெளிநாடு செல்ல இருக்கிறான், அவன் கிளம்பியதும் சண்முகம் வீட்டுச் சாவியைத் தருவார் .. எனச் சொல்லவும் வாடியிருந்த வருவின் முகம் மலர ஆரம்பித்தது .வேகமாக அறைக்குச் சென்று பார்சலோடு கீழே இறங்கியவளை ராணியும் அரவிந்தும் பார்த்து விட்டு ஏதோ கொடுக்க அழைக்க , அண்ணியிடம் கொடுக்க மறந்த கிஃப்ட் வித்யாவிடம் தந்து விட்டு வருகிறேன் .. என வெளியே சென்றாள்.
வித்யா எனவும் ,ராணியைச் சமாளித்து வெளியே வந்த அரவிந்த் பார்த்தது அவர்களது வண்டிக் கிளம்பிச் சென்றதைத் தான்.
இப்போது வித்யாவை முகம் மலர வழியனுப்பியவள், சட்டென்று வீட்டினர் யார் கண்ணிலும் படாது வெளியே அமர்ந்திருந்த உறவினர் கூட்டத்தில் புகுந்து விக்ரம் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிக்க , அருகே செல்ல முயலும் போதே அவனது கார் கிளம்பி வருவை கடக்க ஆரம்பித்தது.
“ஐயோ கிளம்பி விட்டானா…. என நினைத்தவள் , சட்டென்று குறுக்கே தெரிந்தப் பாதையில் நடக்க ஆரம்பித்து விட்டாள். இந்தக் குறுக்குப் பாதை ஆற்றங்கரையோரம் சென்று அவன் கடந்து செல்லும் பாலத்தை அடையும்.தோழிகளாக பகலில் வலம் வருவது தான்.. அது கிராமம் … வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக , பெரும்பாலும் அனைவர் விடும் தோட்டம் நடுவில் வீடு என்பதாகத்தான் இருக்கும்.
சிறிது தள்ளியே கடைவீதி என்பது போல் நெருக்கமான ஆள் நடமாட்டம் உள்ளப் பகுதியாக இருக்கும். வருவிற்கு அங்கங்கு இருந்த தெருவிளக்கு வெளிச்சம் மற்றும் வீடுகளில் தெரிந்த விளக்கொளி கொடுத்த தைரியத்தில் நடக்க ஆரம்பித்து விட்டாள்.
அந்த பாதையில் சென்றால் விக்ரமை கண்டு தன் காதலை சொல்லி விடலாம் என்ற எண்ணம் மட்டுமே மனதில் இருந்தது. சேலை காலில் தட்ட , அதை ஒரு கையால் தூக்கிப்பிடித்தும் , பார்சல் பையை ஒரு கையில் பிடித்துக் கொண்டும் காதல் கொடுத்த தைரியத்தில் பாலம் அருகே சென்றுக் கொண்டிருந்தாள் .
அது ஆள் நடமாட்டம் அதிகமில்லாத பகுதி , அங்கங்கே ஆட்கள் இருந்தாலும் தென்னை , பனை மரங்களும் , பல மரங்களும் இருந்ததால் இவள் நடப்பது யாருக்கும் தெரியவில்லை தான். எப்படியோ பாலத்தை அடைந்தவள் ஒரு பகுதியில் இருந்த கல்லில் சென்று அவனது கார் வருகிறதா எனப் பார்த்துக் கொண்டிருக்க , ஓரமாக காலையில் கழுவப்பட்ட லாரியை நிறுத்திவிட்டு பாலத்தின் அடியில் அமர்ந்து மது பாட்டில்களை காலி செய்துக்கொண்டிருந்தவர்களுக்கு முதலில் இவள் தெரியவில்லை.
இவள் அமர்ந்திருந்த இடம் அருகில் ஒரு நாய்க்குட்டி வர ,
” பப்பி… இந்த விக்கிய இன்னும் காணோம் பாரேன்….” இவள் இப்படி தமிழில் பேசியிருந்தால் கூட அவர்களுக்குத் தெரிந்திருக்காது. அவள் தனக்கு சரளமாக பேச வரும் ஆங்கிலமும் இந்தியும் கலந்துப் பேசிக் கொண்டிருந்தாள்.
தாங்கள் அமர்ந்து இருக்கும் இடத்திற்கு நேர் மேலே பெண் குரல் , அதுவும் தங்கள் மொழியில் என்றவுடன் அனைவரும் மேலேப் பார்த்தனர்.
ஒரு பெண் அழகாக வைர ஜிமிக்கி காதில் ஆட ,கையில் போட்டிருந்த ஒன்றிரண்டு வளையல்கள் சத்தமிட கையை அசைத்து கீழே பார்த்துப் பார்த்துப் பேசவும் , அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ஏதோ முணுமுணுத்தனர். பின்னர் ஒருவன் மட்டும் மெதுவாக அவள் யாருடன் பேசுகிறாள் என அவளது பின்புறமாகச் சென்றுப் பார்க்க, நாயுடன் எனவும் , அவளருகில் சென்றான்.
அவன் செல்லவும் மற்றவர்களும் அவன் பின்னோடு சென்றனர்.
காலையில் பார்த்த ஒருவன் தன் அருகே வரவும் , அந்தக் கள்ளம் கபடமில்லா இளம் பெண் , எழுந்து ,
“பையா … ஆப்…” என இந்தியில் மதியம் சாப்பிட்டீர்களா … என புன்னகையோடு கேட்க , அதற்குள் பின்னால் மற்றவர்களும் வர , முதலில் தவறாக யோசிக்காத வரு அவர்களது கண்களின் சிவப்பிலும் ,நடையிலும் மாற்றத்தை உணர்ந்தவள், பின்னாலயே நடக்க ஆரம்பிக்க ,
வேகமாக அருகில் வந்த ஒருவன் , பின்னிருந்து ஒரு கையால் அவள் வாயையையும் , மற்றொரு கையால் அவள் கைகளை பின்புறமாகவும் கொண்டு சென்று பிடித்துக் கொள்ள , மற்றொருவன் அவள் கழுத்திலிருந்த ஒரு சங்கிலியை இழுத்தான் .
கனமான அந்தச் சங்கிலி வருவின் கழுத்தில் ஒரு புறம் வெட்டிக் கொண்டு அவன் கைக்குச் சென்றது.
அவள் கைகளிலிருந்து வளையல்கள் , காதில் கம்மலை இழுக்க முயல , தூரத்தில் வண்டி வருவது தெரியவும் , முதலில் அவளை விட்டுச் செல்ல முடிவெடுத்தவர்களுக்கு , அவள் அவர்களிடமிருந்து விடுபட முயலும் போது அவளது புடவை விலகி , அவளது அங்கங்களை பளிச்சென்றுக் காட்ட , மது போதையில் இருந்த அந்த வெறியர்களுக்கு பெண் போதை ஏறவும் , இருவர் அவளைத் தூக்கிக் கொண்டு பாலத்திற்கு அடியில் சென்று விட்டனர்.
அந்தக் கயவர்கள் அச்சிறுப் பெண்ணை நாசம் செய்ய முயல , முதலில் அவள் ஆசை ஆசையாக கட்டியிருந்த புடவை இழுக்கப்பட்டது… அவள் குத்தியிருந்த அத்தனை பின்களும் அவள் உடலில் குத்தி கீறி, ஆடைகளும் கிழிந்தது .
முதலில் ஒன்றும் புரியாது இருந்தவளுக்கு அருகே வந்துக் கொண்டிருந்த விக்ரமின் கார் தென்படவும் … விக்ரம் என்ற மனிதன் கொடுத்த தைரியமா , இல்லை அவன் மேல் கொண்டுள்ள அளவில்லாக் காதல் கொடுத்த தைரியமா தெரியாது.
தான் கற்று வைத்திருந்த தற்காப்புக்கலை மூலம் பலம் கொண்ட மட்டும் தன்னை ஆக்கிரமிக்க முயன்றவனைத் தள்ளியதோடு , அந்த அரைகுறை ஆடையோடு , கனிப் பாட்டியால் மகாலெட்சுமி மகாலெட்சுமி என சொல்லப்படும் அமிர்தவர்ஷினி பத்ரகாளி அவதாரம் எடுத்தாள்.
முடிந்த மட்டும் அவர்களது உயிர்நாடிகளை தான் கற்று வைத்திருந்த கலை மூலம் தாக்கியவள் , அவர்களைத் தடுமாற வைத்ததோடு , சிறிதே தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த அந்த ஆற்றில் தெரிந்த கற்களை எடுத்து அவர்கள் மீது வீசவும் , கிடைத்த மரக் குச்சிகளைக் கொண்டு அடிக்கவும் ஆரம்பித்தவள், விக்ரம் கார் அருகில் வரவும் “விக் ….. கீ ….” எனக் கத்த ஆரம்பித்து விட்டாள்.
போதையில் இருந்த வெறியர்கள் அவளைச் சமாளிக்க முடியாமல் திணறினாலும் , அவள் காரைப் பார்த்து கத்தியஅந்த நிமிடம் அவளைக் கீழேத் தள்ளி விட , பின்புற மண்டையில் அடிபட்டதுப் போல் தோன்றினாலும் , கையில் கிடைத்த கல்லை எடுத்து விக்ரமின் காரை நோக்கி வீசி விட்டாள்.
ஒருவன் இப்போது அவளது முகத்தை தரையில் அழுத்திப் பேச விடாமல் செய்ய , அங்கிருத்த கற்களும் ,முட்களும் அவளது ஒருபுற கன்னத்தை பதம் பார்க்க ஆரம்பித்தது.
விக்ரம் மட்டுமே அவனது அந்த சொகுசுக் காரில் வந்தவன் , கார் மீது வந்த விழுந்த கல்லைக் கண்டு வண்டியை நிறுத்தி விட்டான். அவன் இறங்கி என்ன எனப் பார்க்க ,
அவனது முகத்தைக் கண்டவள் , அழுத்திப் பிடித்திருந்தவன் மற்றொரு கையை கடித்து வைக்க , அவன் கையெடுத்த நொடியில் “விக்… கீ ….” என கத்தி விட்டாள்.
அவனுக்கு விக்கி என்பதெல்லாம் கேட்கவில்லை , யாரோ அழைக்கும் சத்தம் தான்.
சத்தம் வந்த பாலத்தின் அடியில் விக்ரம் பார்த்தக் காட்சி இரத்தம் கொதிக்கச் செய்தது. அவனுக்கு அப்போதும் அவள் அமிர்தவர்ஷினி என்றுத் தெரியாது . யாரோ ஒரு பெண் என்பதை மட்டும் அறிந்தவன் , அங்கிருந்தே அந்த தண்ணிரில் குதித்தான்.
அவனைக் கண்ட அனைவரும் ஓட முயல , விக்ரம் விடுவானா…. அவர்களைப் புரட்டி தள்ளி அடிக்க ஆரம்பித்து விட்டான். உடலில் வலி இருந்தாலும் , காதருகே கழுத்தருகே இரத்தம் வடிய , அருகில் கிடந்த மரக் கொம்பு எடுத்து, தன் காதலன் வந்து விட்டான் …. தன் பெண்மை காப்பாற்றப்பட்டது என்ற நிம்மதியில் அவளும் அவர்களை அடிக்க ஆரம்பித்தாள்.
“எந்தப் பொண்ணையும் நீ இனித் தொடுவ….” என இந்தியில் புலம்பி ஆத்திரம் அடங்கும் மட்டும் நால்வரில் இருவரை அடித்தாள்.
அவளது புலம்பலில் தான் அவள் வரு என்பதை உணர்ந்தவன் , “லட்சுமி… ” என அதிர்ந்து திரும்ப முயல ,
வரு அவர்கள் சுருண்டு விழப் பார்த்தவள் , அவனது ”லட்சுமி ” என்ற அழைப்பில் தன்னுணர்வு வந்து , வேகமாக விக்ரமின் பின்புறம் வந்து முதுகோடு ஒட்டி கையை முன்புறம் விட்டுக் கட்டிக் கொண்டவள் ,
“விக் … கீ… திரும்பாதே… ப்ளீஸ் …..” எனத் திக்கி திக்கிப் பேசியவளுக்கு , தான் நிற்கும் கோலம் மிகுந்த அவமானத்தைக் கொடுத்தது. இத்தனை நேரம் அவர்கள் நால்வரையும் அடிக்கும் போதும் , அவர்களோடு போராடும் போதும் தெரியாதது … தன் மனம் கவர்ந்தவன் முன் தான் இப்படி இருக்கிறோமே என்ற கழிவிறக்கம் மனதில் சூழ , இவ்வளவு நேரம் வராத அழுகை கோபமாக உருவெடுத்தது ,