‘ஏய் பேசாம ஓடு வரவர என்னை ரொம்பத்தான் கலாய்க்கிற..’”லட்டு… ஏய் லட்டுக்குட்டி..”
“ஏய் என்னடி அதுக்குள்ளயா தூங்கிட்ட..!!”
“நான் சொன்னதுக்கு சரின்னு சொல்லு மேன் அப்புறமா பேசுறேன்..??”
“யேய் மாமாவுக்குன்னு ஒரு லட்சியம் இருக்குடி பொண்டாட்டிக்கு எல்லாமே நான்தான் செய்யனும்னு..??” அவள் அருகில் சென்று அவள் இடுப்பில் கைவைக்க,
அவனை நோக்கி திரும்பி படுத்தவள்.. “எல்லாமே எனக்கு நீயே செய் ஆனா இதுமாதிரி தான எங்க பேரண்ட்ஸும் நினைச்சிருப்பாங்க மாம்ஸ்.. உனக்கு வேணாம்னா கிரான்மா சொன்ன மாதிரி நம்ம பசங்க பியூச்சர்க்கு யூஸ் பண்ணிக்கலாம்.. இப்ப நீ எவ்வளவு பணம் வேணுமோ கடனா வாங்கிக்க அப்புறமா வட்டி போட்டு கொடு.. ப்ளிஸ் ப்ளிஸ்… மாம்ஸ்..” அவன் தாடையை பிடித்து கெஞ்சியவளின் கண்கள் கலங்கியிருக்க,
‘சரி விடு பணத்தை வாங்கிக்கிறேன் இதுக்கேன் கண்ணு இப்படி கலங்குது.. இப்படி கண்ண கலங்கவிட்டே நீயும் அப்பத்தாவும் காரியத்த சாதிக்க கத்துக்கிட்டிங்க.. நீ சொன்ன எல்லாத்திலயும் ஒரே ஒரு டீலுதான் மாமனுக்கு ஓகே.. நம்ம பசங்கன்னு சொன்ன பாரு நாலா அஞ்சா..!!”
“அடப் போ மேன் உன்கிட்ட ஓகே வாங்கவே எனக்கு எனர்ஜி எல்லாம் போயிருச்சு இப்பவே நான் டூ கிளாஸ் மில்க் குடிக்கனும் போல.. இதுல பசங்களாம் போ மேன் போ..எனக்கு தூக்கம் வருது..” அவன் மார்பில் தலைவைத்து படுத்தவள் மெல்ல உறக்கத்திற்கு செல்ல..
“அடிப்பாவி இப்படி ஆசைய காட்டிட்டு மோசம் பண்ற..!!” அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை அணைத்து படுத்தவனுக்கோ ஏதேதோ தீவிர யோசனைகள்.. கடைசியில் நாயகி நினைவு வர மற்றதெல்லாம் பின் சென்று அந்த பிரச்சனைதான் முன்னின்றது..
மறுநாள் எப்போதும் போல அழகாக விடிய சுந்தரும் ராமையாவும் காலையிலேயே வயலுக்கு கிளம்பிவிட்டார்கள்.. நாளை மறுநாள் களை எடுப்பதாக இருப்பதால் ராமையா அதற்கு ஆள்பிடிக்கச் செல்ல சுந்தரோ தந்தையிடம் சொல்லிவிட்டு மற்ற வயல்களை பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பிவிட்டான் ..
கணவனும் மனைவியும் காலை டிபனை முடித்துவிட்டு வண்டியிலேயே கிளம்ப தர்ஷினியை சுடிதாரிலேயே வரச் சொல்லியிருந்தான்.. பேங்கிற்கு சென்று லாக்கர் ஓப்பன் செய்து நகைகளை பத்திர படுத்தியவர்கள் நேராக நாயகி வீட்டிற்கு செல்ல மணி 11க்கு மேலாகியிருந்தது.. இருவருமே அந்த பயணத்தை மிகவும் ரசித்தார்கள்..
[the_ad id=”6605″]
நாயகி வாசலில் அமர்ந்து நான்கைந்து பெண்களோடு பேசிக் கொண்டிருக்க அண்ணனை பார்க்கவும் சந்தோசம் தாங்கவில்லை.. மற்றவர்களிடம் அண்ணனையும் அத்தாச்சியையும் அறிமுகப்படுத்தியவள் வீட்டிற்குள் அழைத்து காப்பி போட்டுக் கொடுக்க சுந்தர் தான் வாங்கி வந்திருந்த அனைத்தையும் தங்கையிடம் கொடுத்தான்..
“என்னண்ணே ஏகப்பட்ட பையிருக்கு..??”
“ஒன்னுமில்லத்தா முதல் முதலா வர்றேன்ல அதான் உங்க எல்லாருக்கும் துணிமணிகளும் கொஞ்சம் ஸ்நாக்ஸ் மட்டும் வாங்கிட்டு வந்தேன்.. அதோட ஆத்தா என்னன்னமோ கொடுத்துவிட்டாக.. எங்க வீட்ல யாரையும் காணோம்..??”
அவர்கள் வீடு சிறிய ஓட்டுவீடுதான் நாயகிக்கு மாமனார் இல்லை.. பத்தாவது படிக்கும் நாத்தனாரும் எட்டாவது படிக்கும் மச்சினனும் தான்.. மாமியார் இட்லி வியாபாரம் செய்கிறார்.. காலையிலேயே இட்லி அவித்து வீடுவீடாக விற்க செல்வார். தங்கை கணவருக்கு பால்வியாபாரம்.. ஏழெட்டு மாடுகள் வைத்திருக்க விலைவாசி ஏற்றத்தில் கொஞ்சம் கஷ்டஜீவனம்தான்.. ராமையாதான் நல்ல குடும்பம் என விசாரித்து வசதியில்லாவிட்டாலும் பரவாயில்லை என திருமணம் முடித்திருந்தார்..
“எல்லாரும் வெளியில போயிட்டாகண்ணே..அத்தாச்சி நல்லாயிருக்கிகளா..??”
தர்ஷினியை நலம் விசாரிக்க..
“ம்ம் பைன்.. அண்ணி நீங்க எப்படி இருக்கிங்க..??”
அப்பத்தாவிடம் இவர்களை எப்படி அழைப்பது என்று கேட்டு தெரிந்து வைத்திருந்தாள்..
“நல்லாயிருக்கேன் அத்தாச்சி.. எப்பண்ணே வீடு தச்சு செய்ற.. அத சொல்லத்தான் வந்தியா..?”
“இல்லத்தா வீட்டு வேலை இப்ப ஆரம்பிக்கிறதா இல்ல..நான் மறுபடி ஆஸ்திரேலியா போகலாம்னு முடிவு பண்ணிட்டேன்..”
அதிர்ச்சியானவள் “என்னண்ணே சொல்ற..?”
“ஆமாத்தா உங்க அண்ணிக்கு அதுதான ஊரு .. இங்க செட்டாக கொஞ்சம் கஷ்டம் அதான் நான் அங்க போகலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்..”
“ஏண்ணே ஆத்தா அப்புக்கு வயசாயிருச்சு இனி எல்லாமே நீயே பார்த்துக்குறேன்னு சொன்ன சுந்தரிய வேற படிக்க வைக்க போறேன்னு சொல்லிட்டு இப்ப வெளிநாடு போறியா..!!”
“போதும் போதும் எவ்வளவு நாளைக்குத்தான் தங்கச்சி தங்கச்சின்னு உங்களுக்கே பார்க்கிறது நானும் என் வாழ்க்கையை பார்க்கனும்தானே அதான் போறேன் இனி இங்கன வரமாட்டேன் அங்கயே செட்டிலாக போறேன்..”
அவ்வளவுதான் அப்படி ஒரு கோபம் நாயகிக்கு “என்னண்ணே கல்யாணம் பண்ணி பத்து நாளாகல அதுக்குள்ள இப்படி மாறிட்ட..!! ஆத்தா அப்பு பாவம் இல்லையா.. இந்த வயசான காலத்துல அவுகள விட்டுட்டு போறேன்னு சொல்ற உனக்கே நியாயமா இருக்கா.. நான்கூட அத்தாச்சிய ரொம்ப நல்லவிகன்னு நினைச்சேன்.. அதுக்குள்ள உன்னை இப்படி மாத்திட்டாக..”
“நானென்ன சும்மாவா விட்டுட்டு போறேன் உங்க மூனுபேருக்கும் கல்யாணத்த முடிச்சிட்டேன்.. அடமானத்தில இருந்த வயல எல்லாம் திருப்பிட்டேன்.. இனி என்ன சுந்தரி ஒருத்திதான அவள அப்பு பார்த்து கரையேத்திருவாக..”
நாயகிக்கு அப்படி ஒரு அழுகை” நீ இப்படி மாறுவன்னு நான் கனவுலகூட நினைக்கலண்ணே.. இப்படி பொறுப்ப தட்டி கழிக்கிறியே..??” அப்படியே ஒப்பாரி வைக்க..
“ஏய் நிறுத்து இப்ப நான் என்ன பண்ணனும் சொல்ற..??”
[the_ad id=”6605″]
“என்ன பண்ணனுமா.. நீதான் ஆத்தா அப்புவ பொறுப்பா பார்த்துக்கனும் மகனுக்குத்தான அந்த பொறுப்பு இருக்கு அத தட்டி கழிக்க பார்க்கிரியா..??”
“ம்ம் அதயே நான் கேட்டா நீ எங்க போய் உன் முகத்தை வைச்சிக்குவ..?”
அவள் குழப்பத்துடன் “என்னண்ணே..??”
“என்ன என்னண்ணே.. அண்ணனுக்குன்னா ஒரு நியாயம் உன் வீட்டுக்காரருக்குன்னா அது மாறிருமா..? இங்கன ஒத்துமையா இருக்க மாட்டேன் தனிக்குடித்தனம்தான் போகனும்னு தினம் தினம் அவரோட சண்டை போடுறியாமே .. அப்ப நீ சொன்ன பொறுப்புகளை யார் பார்த்துக்குவா.. ம்ம்..” அவன் உரும
பயத்துடன் கையை பிசைந்தவள் “அது வந்து.. அது வந்து..”
வேட்டியை மடித்து கட்டியவன் அவளை அடிப்பது போல சென்று “அறைஞ்சேன்னா பல்லை கழட்டிருவேன் பார்த்துக்க.. என்ன வேலை பார்க்கிற.. பாவம் நல்ல மனசன ஏன் இப்படி பாடுபடுத்துற..??” எப்போதும் ஜாலியாக பேசும் சுந்தரையே பார்த்திருந்த தர்ஷினிக்கு சுந்தரின் இந்த கோபம் பயத்தை ஏற்படுத்த அதுவும் கோபத்தில் முகம் சிவந்து ஐயனார் போல நின்றிருந்தவன் எங்கே தங்கையை அடித்துவிடுவானோ என்ற பயத்தில் அவன் கையை பிடித்த தர்ஷினிக்கோ உதடு அழுகையால் துடித்தது.. அவளை பார்த்தவனோ இவ ஒருத்தி எல்லாம் சொல்லித்தான கூட்டிட்டு வந்தேன். அவள அதட்டுறதுக்கு இவ அழறா.. அவள் கையை அழுத்தியவன்,
சட்டென கோபத்தை குறைத்து அமைதியான குரலில் “என்ன நாயகி எதுவுமே சொல்லாம இருக்க..? உன் மாமியார், நாத்தனார், கொழுந்தனார பார்த்துக்குற பொறுப்பு உனக்கும் உன் புருசனுக்கும் இல்லையா..”
“அண்ணே..”
“ச்சே என் தங்கச்சிங்க எல்லாம் ரொம்ப நல்லவங்கன்னு நினைச்சேன் நீ இப்படி கல்யாணம் பண்ணினவுடன மாறுவேன்னு நினைக்கல.. என்ன மாமியார் உன்னை கொடுமை படுத்துறாங்களா.. இல்லை மச்சினன் நாத்தனார் என்னமும் சொல்றாங்களா..?”
“ச்சே ச்சே இல்லண்ணே..”
“அப்புறம் உங்க மாமனார் இறந்து பத்து வருசமாச்சு .. உங்க மாமியார்தான இட்லி வியாபாரம் செஞ்சு உங்க குடும்பத்தை காப்பாத்தி மூனு பேர வளர்த்திருக்காங்க.. இப்ப அவங்களுக்கும் வயசாயிருச்சு மத்த ரெண்டுபேரும் சின்ன வயசாயிருக்காங்க இப்பதான் உன்னோட ஆதரவு அவங்களுக்கு தேவை.. இந்த வயசிலயும் அவங்க சும்மாயிருக்காங்களா.. போய் வீடுவீடா வியாபாரம் பண்றாங்க நீ வெட்டி கதை அடிச்சிட்டு இருக்க.. இந்த மாதிரி கூடிகூடி பேசி குடும்பத்தை கெடுக்குற வேலையத்தான் பார்ப்பிங்களா.. நீயேன் இப்படி மாறின..?”
கண்ணில் நீர் ஊற்ற “மன்னிச்சுக்கண்ணே.. தெரியாம பேசிட்டேன்..”
அவளை தோளோடு அணைத்தவனோ” இங்க பாருத்தா அண்ணே எனக்கு எப்படி உங்கள எல்லாம் நல்லா பார்த்துக்கனும், நிறைய செய்யனும்னு நினைப்பிருக்கோ அப்படித்தான மச்சானுக்கும் தோனும்.. அதுவும் அதுக எல்லாம் சின்ன புள்ளைக ஒரு பொம்பள பிள்ளவேற இருக்கு அதுக்கு கல்யாணம் பண்ணவேண்டாமா.. இங்கன உனக்கு என்ன குறை சொல்லு அண்ணே அவங்ககிட்ட பேசுறேன்..”
“இல்லண்ணே எனக்கு எந்த குறையும் இல்ல..”
“அப்புறம் என்னத்தா நீ என்ன பண்ணியிருக்கனும் இந்த குடும்பத்தை இன்னும் முன்னேற்றமா கொண்டுவர என்ன வழின்னு யோசிச்சிருக்கனும் அதவிட்டு வருமானம் குறைய இருந்தா அவர கூட்டிட்டு தனியா போனா அவுக மூனு பேரும் பாவமில்லையா.. என் தங்கச்சிகளால ஒரு குடும்பம் நல்லா வந்திச்சுன்னுதான் பேர் வரணுமே தவிர குடும்பத்தை பிரிச்சிட்டான்னு பேர் வரக்கூடாது புரியுதா..”
“ம்ம்ம்.. தெரியாம அப்படி பேசிப்புட்டேன்ணே..கேப்பாரு பேச்ச கேட்டு தப்பா முடிவெடுத்துட்டேன்.. என்னை மன்னிச்சிருங்க இனி நான் எல்லாம் பார்த்துக்கிறேன்..” அந்த நேரம் அவள் மாமியார் வர அவர் கையில் இருந்த பாத்திரங்களை வாங்கியவள் வேகமாக தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க மருமகளின் மாற்றத்தை கண்டவருக்கோ அப்படி ஒரு நிம்மதி.. எப்போது தான் வந்தாலும் நான்கைந்து பெண்களோடு அரட்டை அடித்தபடி இருப்பாள் மாமியாரை கண்டு கொள்வதில்லை.. இதெல்லாம் இந்த இரண்டு மாதங்களாகத்தான்.. முன்பெல்லாம் இப்படி இல்லை..
சுந்தரையும் தர்ஷினியையும் வரவேற்றவர் தர்ஷினியின் முகத்தை வருடி “நல்லாயிருக்கியாத்தா..??”
“நல்லாயிருக்கேன்மா..”
சுந்தர் தன் மனைவியின் கையை பிடித்தவன் அவர் காலை தொட்டுக்கும்பிட பார்த்திருந்த அவருக்கு சுந்தரின் இந்த செயலால் மனம் நிறைந்தது..
நாயகியின் கணவர் சுந்தரையும் தர்ஷினியையும் வரவேற்று மதிய சமையலுக்கு தேவையானதை வாங்கி வந்து மனைவியிடம் கொடுக்க மீனை மாமியாரிடம் கொடுத்து சுத்தப்படுத்த சொன்னவள் கணவர் அடுப்படிக்கு வரவும், “ஏங்க என்னை மன்னிச்சுக்கோங்க நான் தெரியாம பேசிப்புட்டேன் இனி தனிக்குடித்தனம் எல்லாம் வேண்டாம்..?”
“என்னடி சொல்ற..??”
“ஆமாங்க என் மண்டைக்குள்ள ஏதோ சாத்தான் புகுந்திருச்சு போல அதான் என்னன்னமோ பேசிப்புட்டேன்… இனி எப்பவும் இந்த மாதிரி எல்லாம்…!!”அவன் அவளை பேசவிடாமல் கட்டி அணைக்க “ஏங்க ஏங்க விடுங்க வெளியில அண்ணே அத்தாச்சி எல்லாம் இருக்காக..”
[the_ad id=”6605″]
“இருக்கட்டும் இருக்கட்டும் இப்ப ரொம்ப சந்தோசமா இருக்குடி… நீ ரொம்ப நல்லவ எனக்கு தெரியும் இங்கன உள்ளவங்க பேச்ச கேட்டுத்தான் மாறிட்ட..?”
“எத்தனை பேர் என்ன சொன்னாலும் கேப்பாருக்கு புத்தி எங்கங்க போச்சு எல்லாம் என் தப்புதான்..?”
“போதும் விடுடி மச்சான் இப்ப என்னமாச்சும் உனக்கு கொடுத்தே ஆகனுமே..” இருவரின் குரலும் மெதுவாக கிசுகிசுப்பாக கேட்க வெளியில் இருந்த இருவருக்கும் ஒரு மாதிரி இருந்தது.. சுந்தர் தர்ஷினியின் கையை பிடித்து முத்தமிட போக கையை உதறினாள்..
“யேய் என்னாச்சுடி..?”
“போங்க போங்க பாவம் உங்க சிஸ்டர் அவங்கள ஏன் இப்படி திட்டுனிங்க.. பாவம் அழுதாங்க தானே..கோபம் வந்தா ரொம்ப ஹார்ஸா பேசுருறிங்க..”
“அவ என்னோட தங்கச்சிடி..?”
“போங்க..” அவன் கையை உதறியவள் வெளியில் நாயகியின் மாமியாரிடம் செல்ல இவன்தான் தலையில் கைவைத்து அமர்ந்தான்..
மதியம் அனைவரும் சாப்பிட்டுவிட்டு மாலை மச்சானும் மாப்பிள்ளையும் வண்டியில் கிளம்பியவர்கள் ஏகப்பட்ட வேலை பார்த்துவிட்டு இரவு எட்டுமணிக்குத்தான் வந்தார்கள்.. நாயகியும் தர்ஷினியும் நைட்டி போட்டு தலைநிறைய பூ வைத்து நாயகியின் நாத்தனார் மச்சினன் இருவரோடு அரட்டை அடித்தபடி இருக்க அவள் மாமியார் சற்று தள்ளி அமர்ந்து அனைவரையும் ரசித்தபடி இருந்தார்..
சுந்தர் தான் வாங்கி வந்த புரோட்டா ,பிரைட் ரைஸ், சிக்கன் நூடில்ஸ் , சிக்கன் ரைஸ் என அனைத்தையும் சாப்பிட சொன்னவர்கள் சாப்பிட்டு வெளியில் காற்றாட அமர்ந்தபடி பேசிக் கொண்டிருக்க அந்த பொழுதே அப்படி இனிமையாக இருந்தது நாயகி தன் அண்ணன் அருகில் அமர்ந்தவள்…
“ரொம்ப நன்றிண்ணே நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ண இருந்தேன்..சண்டை போட்டு இவர தனிக்குடித்தனம் கூட்டிட்டு போயிருந்தாலும் இவரு நிம்மதி கெடுத்திருப்பேன்.. இப்பதான் என்னோட தப்பு புரியுது..”
“விடுத்தா உனக்கும் சின்ன வயசுதானே இனி பக்குவம் வந்திரும்,…”வாய் பேசிக் கொண்டிருந்தாலும் கண்களோ தன் மனைவியைத்தான் ரசித்துக் கொண்டிருந்தது எந்த இடத்திற்கு வந்தாலும் சிறு முனுமுனுப்பு கூட இல்லாமல் பொருந்தி போகும் தன்மைவுடையவளை இப்போதே கட்டி தழுவிட எண்ணம் வர தன் அருகில் அமர்ந்திருந்த மனைவியின் கையை பிடிக்க அவளோ கையை உதறி தள்ளி அமர்ந்தாள்..
அடிப்பாவி திட்டு வாங்கினவளே வந்து பேசுறா.. இவளுக்கென்ன.. வாடி படுக்க வருவதானே அப்ப இருக்கு உனக்கு.. தர்ஷினியை முறைக்க.. அவளோ இவனை கண்டுகொள்ளவே இல்லை..
வெளியே கட்டிலை போட்டு சுந்தரும், நாயகி கணவரும் பேசிக் கொண்டே இருக்க நேரம் போனதே தெரியவில்லை.. இருவரும் ஒத்த வயதினராய் இருந்ததால் நட்பு சீக்கிரமே வந்திருந்தது.. தங்கை கணவர் நல்ல பொறுமை குணமாய், நல்லவராய் இருப்பதை பார்த்து இவரை மாப்பிள்ளையாய் தேர்ந்தெடுத்ததுக்கு தந்தைக்குத்தான் மனதிற்குள் நன்றி சொன்னான்.. வெகுநேரம் கழித்து இருவரும் உள்ளேவர நாயகியின் மாமியார் வெளித்திண்ணையில் படுத்திருந்தார்..
இவர்களை காணவும் “அண்ணே நீ உள்ள படுக்கிறியா..?” தர்ஷினியை தேட அவளோ நாயகியின் நாத்தனார் மேலே கைப்போட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்..
பார்த்த சுந்தருக்கு பொறாமையால் இரு காதிலும் புகைகிளம்ப “அத்தாச்சி எங்களோட படுத்துக்குறேன்னு சொல்லிட்டாக நானும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன் வெறும்தரை வேண்டாம்னு கேட்க மாட்டேன்னு சொல்லிட்டாகண்ணே.. நீ போய் உள்ள படுண்ணே..?”
“இல்லத்தா பரவாயில்ல பாயை தர்ஷினி தலைக்கு நேராக விரித்தவன் வேண்டுமென்றே அவள் தலையோடு தலையை வேகமாக முட்ட வலியில் முகம் சுழித்தவள் மெதுவாக தலையை தூக்கி பார்த்தாள்..” நீ ஊருக்கு வாடி உனக்கு ?” மெலிதாக வாயசைக்க.
“போ மேன்” வாயசைத்தவள் சற்று இறங்கி படுக்கவும் பல்லை கடித்தான்..
“நாயகி மாப்பிள்ளைய இன்னும் ரெண்டு நாளைக்கு தங்கிட்டு போகச் சொல்லியிருக்கேன்..”
இன்னும் ரெண்டுநாளா அதுவும் இவ நம்ம கைக்கிட்டக்கூட வராம…!!
அவசரமாக “இல்ல மச்சான் இப்பதான் நியாபகம் வந்திச்சு நாளைக்கு சாயங்காலம் ஒரு முக்கியமான வேலையிருக்கு நாளைக்கு கிளம்புறோம்.. கண்டிப்பா இன்னொருதரம் வரும்போது கூட ரெண்டுநாள் தங்கிட்டு போறோம்..”
தங்கைக்காக தன் மேல் கோபமாக இருப்பதை நினைத்து சுந்தருக்கு சிரிப்பு வந்தாலும் அவளது பிள்ளை மனதை நினைத்து அவள மேல் கொள்ளை ஆசையும் வந்தது..
“தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூ முகம் காணவே ஆயுள்தான்
போதுமே
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டுதான்
பூக்களை பூக்குமோ……”
இனி………????