வரம் வாங்கி வந்தவள் நான்
ராமையா தன் பங்காளிகள், உறவினர்கள் என அனைவரையும் வேனில் ஏற்றியிருக்க தர்ஷினியும் வேனுக்கு அருகில் வந்தாள்..
“அப்பு நீங்க எல்லாரும் கிளம்புங்க நானும் தர்ஷினியும் என்னோட வண்டியில வந்திருறோம்..” இன்று சௌந்தரத்திற்கு வளைகாப்பு.. அதற்குத்தான் அனைவரும் கிளம்பியிருந்தார்கள்..
“ஏன் மாம்ஸ் நாமளும் வேன்லயே போவோமே.. நான் கிரான்மா பக்கத்தில ஒரு சீட் போடச் சொல்லியிருக்கேன்..?”
“அதனாலதான்டி உன்னை நிக்கச் சொன்னேன் பச்சமிளகா.. அங்க போக எப்படியும் ரெண்டு மணி நேரம் ஆகும் அதுவரைக்கும் நீ ஒரு இடம்.. நான் ஒரு இடமா அதெல்லாம் முடியாது.. நாம…. நாம மட்டுமே தனியா அந்த நேரத்தை செலவழிக்கலாம் ப்ளிஸ்டா லட்டு… அப்பத்தாட்ட மாமனோட வாறேன்னு சொல்லிரு..”
“போ மேன் எப்ப பார்த்தாலும் வேலை வேலைன்னு ஓவரா பில்டப் பண்ணிட்டு என்கூட பேசவே இல்லைதானே.. போ போ நான் கிரான்மோவோடவே போறேன்.. நீ மட்டும் தனியா வா..”
“ஐயோடா செல்லக்குட்டி மாமன பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்ட.. தனியா வா.. புருசன விட்டு அப்படி தனியால்லாம் உட்காரக்கூடாது..”
“போ மேன் ஓவரா பேசாத.. நான் கிரான்மாவோடயே போறேன்.. நீ மட்டும் தனியா வண்டில வா..”
“அச்சோ என்ன ஒரு வில்லத்தனம்.. ஆனா இப்ப நீ நினைச்சாலும் போக முடியாதே..”
“வொய் மேன்..??” அவள் தோளில் கைப்போட்டவனோ..
“ஏன்னா அவங்க வேன கிளப்பிட்டு போய்ட்டாங்கடா செல்லக்குட்டி..”
அவள் திரும்பி பார்க்க வேன் அவர்கள் கண்ணைவிட்டு மறைந்திருந்தது..
அவனை முறைத்து பார்க்க…
“தள்ளிப்போகாதே ….
எனையும் தள்ளிப்போக சொல்லாதே
தள்ளிப்போகாதே…”
தர்ஷினியை பார்த்து பாட..
[the_ad id=”6605″]
அவனையே பார்த்தவளுக்கு சிரிப்பு இத்தனை நாட்களுக்கு பிறகு கணவன் முகத்தில் அப்படி ஒரு பொலிவு… வேட்டிக்கட்டி தன் சேலை நிறத்திற்கு ஏற்ப நல்ல மெரூன் நிற முழுக்கைச்சட்டை, மீசையை முறுக்கிவிட்டு ஒரு மாவீரனை போல நின்றிருந்தான்.. வண்டியை கிளப்ப போனவன் வீட்டிற்குள் சென்று திரும்ப அவன் கையில் நல்ல சிவப்பு நிற ரோஜா..
“அச்சோ ஏன் இத பறிச்ச..??”
“உன் சேலைக்கு மேட்சா இருக்கும் பேபி திரும்பு..” தன் கையில் இருந்த மல்லிகை பூவையும் ரோஜாவையும் வைத்துவிட்டவன் அவள் கன்னம் இரட்டையும் பிடித்து திருஷ்டி கழிக்க,
“ஹாஹாஹா என்ன மேன் கிரான்மா மாதிரியே பண்ற..”
“நீ
அழகே தாவணி பூவே தேன
அவன் பாட பாட தர்ஷினி ஆஆஆவென வாய்பிளந்து நின்றாள்.. அவன் கண்களில் இருந்த ஏதோ ஒன்று அவளை கட்டியிழுத்தது..
கண்ணைச்சிமிட்டி பறக்கும் முத்தமொன்றை கொடுக்க “என்ன மேன் ரொம்ப ஜாலி மூட்ல இருக்க போல..!!”
“யாயா பேபி மாமன் செம மூட்ல இருக்கேன்.. வொய்ப்போட தனியா போகப்போறேன்ல அதான் ..??”
வண்டியில் அமர்ந்தவள்” உனக்கு இன்னைக்கு என்னமோ ஆச்சு..”
அவள் கையை முன்னால் இழுத்து தன் வயிற்றில் வைத்து வண்டியை ஸ்டார்ட் செய்திருக்க தர்ஷினியும் இன்னும் அவனை நெருங்கியிருந்தாள்..
“என்ன ஹாப்பின்னு சொன்னா நானும் தெரிஞ்சுக்குவேன்ல..??”
“ம்ம் நம்ம அரிசி மில்லுக்கு பெரிய ஆர்டர் ஒன்னு கிடைச்சிருக்கு.. அத மட்டும் சரியா பயன்படுத்திட்டா நமக்கு லாபமே நிறைய கிடைக்கும்.. அதுலதான் என் பொண்டாட்டிக்கு தாலிச் செயின் வாங்கி தரலாம்னு நினைச்சிருக்கேன்.. தர்ஷினி இன்னும் மஞ்சள் கயிற்றைத்தான் கட்டியிருந்தாள்.. அப்பத்தா தாலி பெருக்கிப் போடலாம் என்று சொன்ன போதுக்கூட அவன் ஒரு மாதம் போகட்டும்..தன்னுடைய சம்பாத்தியத்தில்தான் தாலிசெயின் வாங்கி கொடுக்கவேண்டும் என நினைத்திருந்தான்..
இன்னும் ரெண்டு மூனு ஆர்டர் கிடைக்கிற மாதிரி இருக்கு பேபி … கொஞ்ச நாள் வேலை அதிகமாயிருக்கும்.. நீயும் என்னோட அரிசி மில்லுக்கு வர்றியா.. நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுறேன்..”
“நோ மேன் நான் வரலை.. அங்க வந்தா மட்டும் நீ என்கிட்ட பேசவா போற நீ உன் வேலையத்தான் பார்ப்ப.. நான் வீட்லயே இருக்கேன்.. நம்ம வீட்டு வேலைக்கு வர்ற கேர்ள்ஸோட எனக்கு நல்லா பொழுது போகுது..”
“எதுடி அவங்க வேலையை கெடுத்துட்டு அவங்ககிட்ட நொண்டி விளையாடவும், சொட்டாங்கல்லும் கத்துக்கிறியாமே..??”
“ஆமா மாம்ஸ் சூப்பரா இருக்கு..” கண்கள் மின்ன அவள் பேசும் அழகை கண்ணாடியில் பார்த்தவனுக்கு வியப்பு.. இப்படி பூ போல ஒரு பொண்ணிருப்பாளா.. அவள் உலகமே சிறு சிறு சந்தோசகங்களாகத்தான் இருந்தது.. இதோ பூக்கள், பறவைகள், சின்ன பிள்ளை விளையாட்டுகள் என.. சிறு வயதில் தேவதை கதைகளை படித்திருந்தவன் அதே போல ஒரு தேவதையே தனக்கு மனைவியாக கிடைத்திருப்பதில் அப்படி ஒரு மகிழ்ச்சி..
ஒரு கையால் வண்டியை ஓட்டிக் கொண்டு மறு கையால் அவள் கழுத்தை வளைத்து அவள் கன்னத்தில் அழுத்தமாக தன் முத்தமொன்றை பதிக்க..அவளோ சிறு குழந்தை போல மறுகன்னத்தை காட்டினாள்..
“ஹாஹாஹா பேபிடி நீ..” தர்ஷினியுமே இத்தனை நாளில் சுந்தரை மிகவும் மிஸ் செய்திருந்தாள்.. கிடைத்த வாய்ப்பை விடாமல் பூனைக்குட்டி போல அவனை உரச இருவருமே இந்த நிமிடத்தை விரும்பினர்..
இருவரும் வண்டியில் சந்தோசமாக செல்வதை ஒரு ஜோடிக்கண்கள் குரோதத்துடன் பார்த்துக் கொண்டிருக்க அன்று ஹோட்டலில் கிடைத்த வாய்ப்பில் தர்ஷினி தன் கையை விட்டு போனதில் அப்படி ஒரு கோபம்.. அதிலும் அன்று அடிப்பட்ட தன் பின்தலையை தடவிப்பார்த்து விகாரமாய் சிரித்தது.. ‘அன்னைக்குத்தான் மிஸ் பண்ணிட்டேன்.. அடுத்த முறை நான் உன்னை விடமாட்டேன்..’
சௌந்தரத்தின் வளைக்காப்பில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பார்த்து பார்த்து வியந்தவள் சிரிப்புடன் வளையவர பார்த்திருந்த அனைவருக்குமே தர்ஷினியை பிடித்தது.. அனைவரும் வளையல் போட்டுக் கொண்டிருக்க தர்ஷினியையும் வளையல் போட அழைத்தார்கள்..
[the_ad id=”6605″]
“இருங்க மாமாவும் வரட்டும்..” தன் கணவனை தேடி அவன் யாருடனோ பேசிக் கொண்டிருக்க அவனிடம் சென்று “வாங்க அண்ணிக்கு வளையல் போடச் சொல்றாங்க..?”
இருவரும சேர்ந்து வர சுந்தர் சந்தனம் பூசி கண்ணாடி வளையல்களை பார்க்க அதற்குள் தர்ஷினி தன் கைகளில் மாட்டியிருந்த தங்கவளையல்களில் நான்கை கழட்டியிருந்தாள்.. அவனிடம் இரண்டை திணித்து தான் இரண்டை போட்டுவிட்டு கன்னத்தில சந்தனம் பூச பார்த்திருந்த அனைவருக்கும் அப்படி ஒரு வியப்பு..
சுந்தருக்கு அவ்வளவு நேரம் இருந்த உற்சாகம் சட்டென வடிய அனைவரும் இருக்கும்போது தர்ஷினியை எதுவும் சொல்லவும் முடியாமல் தங்கையின் கைகளில் போடவும் முடியாமல் தயங்கியவனை “போடுங்க மாம்ஸ்..” அவ்வளவுதான் அதன் பிறகு அவன் எதுவுமே பேசவே இல்லை.. வளைகாப்பு முடிந்து அனைவரும் வேனில் கிளம்ப இவர்களும் கிளம்பியிருந்தார்கள்..
சுந்தர் அமைதியாக வர “என்ன மேன் ஜின்ஜர் தின்ன மங்கி மாதிரி இருக்க..??”
“போடி உன்கிட்ட நான் பேச மாட்டேன்..?”
“அச்சோ என்ன மேன் இப்படி சொல்லிட்ட..!!”
“அன்னைக்கு உன்கிட்ட நான் அவ்வளவு தூரம் சொல்லியும் இப்படி செஞ்சா என்னடி பண்ண.. ப்பச் போ..” அவன் முகத்த சுழிக்க..
“ நீதான சொன்ன அந்த அண்ணிக்கு மட்டும் கொடுத்தா இவங்க தப்பா நினைச்சுக்குவாங்கன்னு அதான் இவங்களுக்கும் கொடுத்தேன்.. ஆனா நானாவா கொடுத்தேன் உன்கிட்ட கொடுத்துதானே மேன் கொடுத்தேன் அதுக்கு போய் இப்படி கோவிச்சுக்குற.. போ மேன் நான்தான் கோவிச்சுக்கனும்..”அவன் முதுகில் தன் முகத்தை புதைத்துக் கொள்ள ..
சுந்தரோ நல்ல வேளை அப்பத்தா கொடுத்த நகை எல்லாம் லாக்கர்ல வைச்சோம்.. இவளுக்கு என்ன பெரிய வள்ளல்ன்னு நினைப்பு..இன்னும் இவளுக்கு எப்படித்தான் சொல்றது நாம எப்படித்தான் அட்வைஸ் பண்ணினாலும் இவ செய்றதத்தான் செய்வா.. அடங்காதவ.. குட்டி ராட்சசி..
வாய் அவளை திட்டிக் கொண்டிருந்தாலும் பின்னால் சற்று நகர்ந்து அவளை இன்னும் நெருங்கி அமர்ந்து அவள் அண்மையை உணர்ந்து கொண்டுதான் வந்தான்..
சௌந்தரம் வந்து பத்து பதினைந்து நாட்கள் முடிந்திருந்தது.. வீட்டு வேலை வேகமாக நடக்க .. அரிசி மில்லிலும் வேலை ஜரூராக நடந்தது.. தர்ஷினிக்கு பாதிநேரம் சௌந்தரத்தோடுதான் கழிந்தது.. நிறைமாதமாக அவள் அமர எழ கொஞ்சம் கஷ்டப்பட இவளுக்கு சௌந்தரத்திற்கு உதவுவதுதான் பெரியவேலையாக இருந்தது.. ஓடி ஓடி போய் தண்ணீர் கொடுக்க பால் காய்ச்சி கொடுக்கவென அவளுக்கு தெரிந்த வகையில் உதவி செய்ய வேண்டாம் என்று சொன்னாலும் கேட்பதில்லை.. சௌந்தரம் வந்த அன்று தங்கள் கட்டிலை அவளுக்கு கொடுத்து இவள் தரையில் படுக்கலாம் என சொல்லி அடம் பிடிக்க ,சுந்தரும் கட்டிலை தங்கைக்கு கொடுத்துவிட்டு பெரிய மரக்கட்டிலை தங்கள் அறைக்கு வாங்கியிருந்தான்..
இப்போது சுந்தர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான் தர்ஷினி அவள் விருப்பப்படி இருக்கட்டும் தன் மனைவிக்கு தான் என்ன செய்ய வேண்டுமோ அதை பார்த்து பார்த்து செய்யலாம் என..
அன்று அதிகாலை சென்றவன் வீட்டிற்கு வரும்போதே இரவு மணி பத்திருக்கும் காலை மதியம் இரு நேரமும் சாப்பிடவில்லை.. வந்தவன் அறையில் தர்ஷினி நல்ல உறக்கத்தில் இருக்கவும் அவளுக்கு போர்வையை போர்த்திவிட்டு குளித்து அப்படியே கட்டிட வேலையையும் ஒரு பார்வையிடலாம் என வந்தவன் குளித்து வர தாயும் தங்கையும் அடுப்படியில் பேசிக் கொண்டிருப்பது கேட்டது.. அப்பத்தா இன்று சின்ன மகன் தங்கள் வீட்டிற்கு வருவதால் அங்கு சென்றிருந்தார்..
“ஆத்தா அத்தாச்சி என்ன இப்படி பச்சபுள்ள மாதிரி இருக்காக..? இந்த காலத்திலயும் இப்படி ஒருத்தவுகள நான் இப்பத்தான் பார்க்கேன்..?”
“ஆமாத்தா பச்சப்புள்ளதான்.. பாவம் உலகம் தெரியாம வளர்த்திருக்காக..”
“அன்னைக்கு என் மாமியாரே அப்படி புகழ்ந்தாக இந்த காலத்திலயும் இப்படி ஒருபுள்ள இருக்குமான்னு..!!”
தன் மனைவியை பற்றி பேசவும் சுந்தருக்கு கேட்க இதமாக இருக்க அந்த கட்டிடத்தின் மேலேயே அமர்ந்துவிட்டான்..
“எனக்கும் ஒரு சந்தேகம்த்தா ஊரு ஆளுக சொன்ன மாதிரி நம்ம சுந்தருக்கு மருமகள ஏற்கனவே புடிச்சிருக்குமுன்னு..??”
[the_ad id=”6605″]
“என்னத்தா சொல்றிக..?”
“ஆமா நீ வேணா பாரேன்… வீட்டுக்குள்ள நுழையவும் முதல்ல அவன் கண்ணு பொண்டாட்டி எங்கன்னுதான் தேடும் .. முதல்ல அவ சாப்பிட்டாளான்னுதான் கேப்பான்.. அவ மேல உசிரே வைச்சிருக்கான்.. நல்ல வேளை சௌந்தரம் நாம வள்ளி நாத்தனாவ கட்டாதது.. எம்புள்ள மனசுக்குள்ள ஒரு பொண்ணு இருக்கும்போது நாம அந்த பொண்ண வம்புடியா கட்டி வைச்சிருந்தோம்னா அவன் வாழ்க்கை என்னாகியிருக்கும்.. எப்பவும் குடும்பம் குடும்பம்னுதான் நமக்காகவே உழைச்சவன்.. அவன் வாழ்க்கையை நாமளே கெடுக்க பார்த்தோமேன்னு அப்பப்போ என் மனசு அடிச்சிக்கிரும்..”
“ஆமாத்தா நாம எத்தனை பொண்ணு பார்த்திருந்தாலும் அத்தாச்சி கால்தூசு பெறாது.. அப்படியே மகாலெட்சுமி மாதிரி அழகு, அமைதி, அடக்கம்ன்னு இன்னைக்கு பூராவும் பார்த்துட்டே இருக்கலாம் போல.. இப்படி நாத்தனாருகளுக்கு நகையெல்லாம் கழட்டி கொடுக்க ஒரு பெரிய மனசு வேணும்… அதோட அண்ணன் என்ன பண்ணினாலும் அவங்க எதுவுமே சொல்றதில்லை பாருங்க.. நாமளே அப்படி இல்ல.. ஆயிரும் குறை சொல்லுவோம்.. ஆனா இத்தனை நாளுல லேசாக்கூட முகத்தை சுழிச்சு நானறியேன்.. நல்ல வேளை அப்பு அன்னைக்கு கரெக்டா முடிவெடுத்து சட்டுன்னு கல்யாணத்தை முடிச்சு வைச்சாக..”