4.26 ஏனென்றால்… உன் பிறந்தநாள்..
4.27- நியூயார்க் பயணமும் பசலை நோயும்
நட்சத்திரத்தைப் பரிசாகக் கொடுத்துவிட்டு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் ஒருவரைப் பற்றி கயல் கேள்விப்பட்டது கூட இல்லை. கனவா என்று சந்தேகமே வந்துவிட்டது அவளுக்கு!
“என்ன இது கால்டன்! அந்த நட்சத்திரம் எனக்கா!! நட்சத்திரத்தை எல்லாம் விக்கிறாங்களா??!!!” என்று வெள்ளந்தியாய்க் கேட்ட கயலை ரசித்துச் சிரித்தார் கால்டன்.
“இப்போதைக்கி நட்சத்திரத்தை மட்டும் தான் விக்கிறாங்க! நிலா, சூரியன், வானம் இதெல்லாம் விக்கல்லையே!” என்று கிண்டலடித்தார்.
“தெரியாம தானே கேட்டேன்..” என்று குழந்தை போல் பாவமாய்க் கேட்டாள் கயல்.
“என்ன செய்ய கயல், உனக்கு பர்த்டே கிஃப்ட் யோசிக்கறதுக்குள்ள ஒரு வழி ஆகிடேன் நானு..”
“ஏன்.!!??”
“எல்லாத்தையும் விட மதிப்பான ஒருத்தருக்கு என்ன செலெக்ட் பண்றதுன்னு ஐடியாவே இல்ல”
“அப்பறம் இது எப்படி தோணுச்சு??!!”
“அம்மா ஐடியா”
“அம்மா வா!!!!”
“ஆமா.. நீ வைரங்களை விட நட்சத்திரங்களைத் தான் ஆசையா பாத்தன்னு சொன்னாங்க. சட்டுன்னு தோணுச்சு! அப்ப ஸ்டார் வாங்கித் தரலாமேன்னு.. அவங்களும் அஸ்ட்ரானமர் தானே! இதைப் பத்தி அவங்களுக்கு எல்லாம் தெரியும். சோ அவங்க தான் ஸ்டார் வாங்க உதவினாங்க.”
“என்னால நம்பவே முடியல்ல..”
“வானத்துல இனிமே ‘கயல் நட்சத்திரமும்’ மின்னும்!”
“ரொம்ப ஆடம்பரமான பரிசு”
“என்ன பண்றது!! உன்ன மாதிரி ஒரிஜினல் கிஃப்ட் குடுக்க எனக்கு தெரியல்லையே! அதான் இப்படி!”
மீண்டும் முகமெல்லாம் மகிழ்ச்சியோடு அந்த நட்சத்திரத்தைப் பார்த்தாள்.
“நீங்க பாக்குறீங்களா?”
“நான் ஏற்கனவே என் வாழ்க்கையோட வெளிச்சமான ஸ்டார்-அ பாத்துக்கிட்டு தான் இருக்கேன்”
பார்வைகள் கலந்தன.. காதல் பெருக்கில் கட்டியணைத்தாள். கன்னம் குழிந்தது.
விலகியவளை “பத்தாது” என்று சொல்லியபடியே மீண்டும் இழுத்துக்கொண்டார் கால்டன்.
“உள்ள போகலாமா.. குளிருது, கால் வலிக்கிது, தூக்கம் வருது”
“போகலாம்” என்று சொல்லி மறுநொடி அவளை அனாயாசமாகத் தூக்கிக்கொண்டு நடக்கத்துவங்கினார் கால்டன்.
அறையில் அவளை இறக்கிவிட்டார்.
“குட் நைட்”
“அவளோ தானா!!!!”
“வேற என்ன…?”
“நட்சத்திரம்-லாம் பரிசா கொடுத்துருக்கேன். பதிலுக்கு ஒன்னுமே கிடையாதா எனக்கு?”
புன்னகைத்துக்கொண்டு அலமாரியினைத் திறந்து ஒரு நீளமான, ஒல்லியான பரிசுப்பெட்டி ஒன்றினை எடுத்து நீட்டினாள்.
“என்ன இது?”
“அன்னைக்கி அந்த மால் ல சொன்னேனே! நானும் ஒரு பரிசு வாங்கியிருக்கேன். தோணும் போது தரேன்னு.. அது”
ஆர்வமாய்ப் பிரித்தார்.
உள்ளே ஒரு தூரிகையும், கித்தார் வாசிக்க பயன்படும் ட்ரிங்க்லெட் ஒன்றும் இருந்தது.
“Paint a picture for you and me.. Make a music for our love” என்று எழுதப்பட்டிருந்த நோட் ஒன்றும் இருந்தது.
காதலை இப்படியும் கவித்துவமாய் வார்த்தைப்படுத்த முடியுமா என்று வியந்து போனார் கால்டன். கால்டனிடம் ரசித்த ஓவியத் திறமை கித்தார் வாசிப்பு ஆகிய இரண்டைக் கொண்டே காதலை வெளிப்படுத்திவிட்டாள் கயல்.. வழிந்தோடிய உணர்ச்சிகளை வடிகட்ட முடியாமல் அவளை அள்ளிக்கொண்டார்; முத்தமழை பொழிந்தார்.
ரொமாண்டிக் நிமிடங்கள் சற்றே நீளமெடுக்க, காதல் பாதை மாறி வேறு வழியில் திரும்புவதை இருவரும் உணர்ந்தனர். ரசித்தபடி தழுவிய கரங்கள் பசித்தபடி விருந்துண்ணும் வேட்கையில் தழுவத் துவங்கின. சட்டென்று கயல் காதலுக்குக் கடிவாளம் போட்டாள். கன்னியவானான கால்டனும் அதைப் புரிந்து கொண்டு விலகினார்.
“ரெஸ்ட் எடு” என்று சொல்லிவிட்டு வெளியேற நடந்தார். சட்டென்று நினைப்பு வரவே, அலமாரியில் கயலுக்காக வாங்கி வைத்திருந்த புடவை ஒன்றை எடுத்து நீட்டினார், “இதுவும் உனக்கு தான்” என்று சொல்லி..
கண்ணாளன் வாங்கித்தரும் முதல் புடவை, எத்தனை ஸ்பெஷல் நமக்கு என்பது தெரியாத கால்டன், கயலின் சந்தோஷத்தை வியப்பாய்ப் பார்த்தார்.
புன்னகைத்துக்கொண்டே “குட் நைட் ” என்று சொல்லித் தன் அறைக்கு நடந்தார்.
“உங்க ரூம்முக்கு போறீங்களா!?”
“ஆமா.. ஏன்?”
“இங்க தான் இன்னொரு கட்டில் இருக்கே..”.
“நான் ஜெண்டில்மேன் தான். ஆனா இன்னைக்கி என்னைச் சோதிக்காத. கண்டிப்பா இங்க இருந்தா நான் இன்னொரு கட்டில்-ல தூங்க மாட்டேன்” என்று சொல்லி விஷமமாய்ப் பார்த்துவிட்டு நடையைக் கட்டினார் கால்டன்.
அவர் சொன்னதன் அர்த்தம் விளங்கியதும் வெட்கத்தில் முகம் சிவக்க, கயலும் படுக்கையில் விழுந்தாள். விரைவில் உறங்கியும் போனாள்.
***
மறுநாள் காலை கயல் சற்று தாமதமாய்த்தான் எழுந்தாள். எழுந்த போது எல்க் முகத்தில் தான் விழித்தாள். தன் தோழிக்கு இதயப்பூர்வமாய்ப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி, அழகான காதணிகள் பரிசாய்க் கொடுத்தாள் எல்க். மிகவும் அழகாய் இருந்தது.
முகம் கழுவியவுடன் கால்டனைத் தேடினாள். மாடியில் இருந்த அவரது ஜிம்மில் வர்க் அவுட் செய்துகொண்டிருந்தார் கால்டன். மேலே போன கயல், வாயிலிலேயே நின்றாள். அவரின் ஃபிட்னெஸ் அவளைக் கவர்ந்தது. கண்களால் அவரை அளவெடுத்தவளை உணர்ந்துவிட்ட கால்டன் திரும்பாமலேயே தன்னவள் வந்திருப்பதைக் கண்டுபிடித்துவிட்டார்.
“ஹாய் டாக்டர்.. குட் மார்னிங். ஃபிட்னெஸ் ஓக்கே வா..?”
திடுக்கிட்ட கயல் சுதாரித்துக்கொண்டு “ம்.. ஓக்கே..” என்று சமாளித்தாள்.
அவிழ்ந்த கூந்தலை முன்னால் திரட்டி ஒருபக்கமாக விட்டுக்கொண்டிருந்த கயலைக் கண்டதுமே ஸ்பரிசிக்கத்தான் ஆவல் மிகுந்தது கால்டனுக்குள்ளே. கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டார்.
கயல் அங்கே இருந்த பயிற்சி உபகரணங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“நீயும் இதை இனிமே வர்க் அவுட்டுக்கு யூஸ் பண்ணிக்கோ..”
“வர்க் அவுட் ஆ.. ம்க்கூம்.. வார வாரம் தலைக்கு குளிக்க கூட நேரமில்லாம சுத்திட்டிருக்கேன் நானு.. இதெல்லாம் இப்போதைக்கு முடியாது!”
“சரி டிக்கெட்ஸ் பாக்குறியா.. எடுத்து வச்சுருக்கேன். என்ன தேதின்னு சொன்னின்னா புக் பண்ணிடலாம். வா..” என்று அழைத்தார்.
லாப்டாப் முன் இருவரும் அமர்ந்தனர். குளிக்காமல் இருந்த கயலின் வாசனை கால்டனையும், சட்டையின்றி இருந்த கால்டனின் வியர்வை வாசனை கயலையும் கிரங்கடித்தது. ஒவ்வொருமுறை நெருங்கிக் கொண்ட போதும் அங்கே ஒருவித டென்ஷன் தான் உருவானது. ‘முழு உரிமை இன்னும் கிடைக்கவில்லை’ என்ற உணர்வு இருவருக்குள்ளும் விஜிலண்டாக இருந்தது. கேட்க ஒருவரும் இல்லை என்றாலும் கன்னியம் தவறும் ஆட்கள் இல்லையே இருவரும்!
பயணம் செய்ய அவைலபிளாக இருக்கும் தேதிகளைக் காட்டினார். கயல் தன் கமிட்மெண்ட்டுக்களை அனுசரித்து போக வர 2 தேதிகளைத் தேர்ந்தெடுத்தாள். இடையில் 1 மாத இடைவெளி இருந்தது. கால்டன் அவற்றைக் குறித்துக்கொண்டார். முதல் வகுப்பில் புக் செய்தார். இன்னபிர ஃபார்மாலிட்டிக்களையும் க்ளியர் செய்து கயலின் இந்திய பயணத்தைக் கச்சிதமாய் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
கயலுக்கு மகிழ்ச்சி.
“ஒரு மாசம்…” என்று ஏக்கமாய்ச் சொன்னார் கால்டன். “சரி.. அட்ஜஸ்ட் பண்ணிக்குறேன். ஆனா அதுக்கு மேல காத்திருக்க முடியாது. சொல்லிட்டேன். எல்லாத்தையும் சரி கட்டிட்டு வந்திடு.”
“சம்மதம் வாங்கறேன் மொதல்ல. அதுவே பெரிய கதை ஆகும் தெரியுமா!”
“என்ன கதை..? அப்படியா எதிர்ப்பாங்க!!!”
“நீங்க இங்க என் வாழ்க்கை என் முடிவுன்னு ஈசியா சமாளிச்சுட்டிங்க. அங்க நான் இதே வசனத்தைப் பேசினா அறை தான் விழும். கெஞ்சி கூத்தாடிதான் சம்மதம் வாங்கனும். அதுவும் சம்மதிப்பாங்களான்னு தெரியல்ல”..
“என்ன கயல்.. நீ ஒரு அடல்ட். டாக்டர். இங்க எந்த இடத்தில இருக்க! உன் முடிவுகளுக்கு மதிப்பு தரமாட்டாங்களா?”
“என்ன இடத்துக்கு போனாலும் நான் அவங்க வளர்த்த பொண்ணு. அதே சின்ன பொண்ணு”
“உன் அப்பா ஆசிரியர். அவருமா சம்மதிக்க மாட்டாரு??!!”
“தெரியல்ல. சம்மதிக்கலாம். ஆனா அப்பா மட்டும் இல்ல பிரச்சினை. ஒரு பெரிய கும்பலே இருக்கு கால்டன். எங்க குடும்பம் பெரிய கூட்டுக்குடும்பம்.”
“சம்மதிக்கல்லைன்னா..”
“இப்படி எல்லாம் கேக்காதிங்க. பீதி ஆகுது எனக்கு. ஆனா சம்மதிக்குற வரை நான் விடமாட்டேனே! பாத்துக்கலாம்.”
“ஏதோ.. பாத்து சீக்கிரமா பண்ணு. ரொம்ப கஷ்டமா இருக்கு.”
“என்ன கஷ்டமா இருக்கு!?”
“இப்படி தள்ளி இருக்கறது.”
“ஒருவேளை சம்மதிச்சா! கல்யாணம் அடுத்த குழப்பம். அவங்களுக்கெல்லாம் பாஸ்போர்ட்டே கிடையாது.”
“எது!!!”
“ஆமா!”
“எனக்கு தலை சுத்துது. நீயே சமாளிச்சுக்க மா. டிக்கெட் கேட்ட. நா போட்டு கொடுத்துட்டேன். இனி எனக்கு தெரியாது. உங்க கான்செப்ட் எனக்கு சுத்தமா புரியவே இல்ல. ஏதாவது பண்ணு. வா.. கீழ போகலாம்”
இருவரும் கீழே வந்து காலை உணவு உண்டனர். கயலுக்கு 3 மணி டூட்டி தான். சாவதானமாக தலைக்கு குளித்தாள். எல்க்கை அனுப்பிவிட்டு கயலின் அறைக்கு வந்த கால்டன் விழிகள் விரிய கயலைப் பார்த்தார்.
கால்டன் பரிசளித்த புடவையைக் கட்டிக்கொண்டிருந்தாள் கயல். பீச் நிற ஷிவான் புடவை. அவளுக்கு அத்தனை அழகாய் இருந்தது. தன்னவன் வாங்கிக் கொடுத்தது என்ற எண்ணமும் சேர்ந்துகொண்டுவிடும் அல்லவா!
கண்ணாடி முன் நின்றிருந்தவளைப் பின்னால் சென்று இடையில் தழுவி தன்னுடன் அணைத்துக்கொண்டார். இருவரும் ஜோடியாகத் தங்களைத் தாங்களே முதன்முறையாய்ப் பார்த்துக்கொண்டனர் கண்ணாடியில். ஜோடிப் பொருத்தத்தை இரசித்துக்கொண்டனர்.
கயலின் தோளில் தாவாங்கட்டையை வைத்துக்கொண்டார்.
“இந்த உலகத்தில நான் 100 முறை பிறந்தாலும், 100 முறையும் உன் மேல இப்படி காதல்ல விழுவேன்” என்று சொன்னார். கயலுக்கு ஆனந்தம் எல்லை கடந்தது. அமைதியானாள். காதுமடலில் முத்தமிட்டார் கால்டன்.
“இப்படியா டூட்டிக்கு போகப்போற?”
“இல்ல இல்ல. சும்மா கட்டி பார்த்தேன். மாத்திக்கிட்டு வரேன்” என்று சொன்னாள். கால்டன் வெளியே சென்றார்.
இருவரும் காரில் கிளம்பினர். செல்லும் வழியில் கால்டன் பணி நிமித்தம் நியூயார்க் செல்லவிருப்பதாய்ச் சொன்னார்.
“எப்ப போறிங்க?”
“6 மணிக்கு கிளம்பறோம். நான் தெரெக் ரேச்சல் காத்தரின் 4 பேரும். அந்த ஹோட்டல் பிராஜெக்ட் முடியற நிலைக்கு வந்திடுச்சு. ஒப்படைக்கப் போறோம்.”
“வாவ். சூப்பர். நான் கிளம்பறதுக்குள்ள வந்துடுவிங்கல்ல.”
“நீ 7 நாள் கழிச்சு தான கிளம்பற. நான் 6 நாள் ல வந்திடுவேன்.”
சரியென்று பிரியா விடை கொடுத்தாள்.
அடுத்து வந்த 6 நாட்களும் இலக்கியங்களில் அவள் படித்த பசலை நோய் பீடித்தது அவளை.
தலைவனைப் பிரிந்த தலைவி ஏக்கம் கொண்டாள். அவனின் தொடுதலும் தழுவலும் கூடலும் முத்தமும் குரலும் வாசமும் இன்றி புலன்கள் அனைத்தும் பொலிவிழந்தன.
டூட்டி நேரம் போக மீதி நேரமனைத்தும் கால்டன் நினைப்பு வாட்டியது. கால்டனும் பணி நிமித்தம் அவ்வளவாகப் பேசவில்லை. காதலை மழையெனப் பொழிந்து குளிர்வித்துவிட்டு பணியினைப் பார்க்கக் கிளம்பிவிடுவதே ஆண்களின் பிழைப்பாய் உள்ளது. பெண்ணானவள் வானம் பார்க்கும் பூமியாய் வறண்டு போவதும் காலகாலமாய் காதலில் நடக்கும் ஒன்றாய் உள்ளதே என்று பெருமூச்செறிந்தாள்.
6 நாட்களில் வந்துவிடுவதாய்ச் சொன்னவர், பணி முடியவில்லை, வர இயலாது என்று சொல்லியதும் ஏமாற்றமானது அவளுக்கு.
காரில் டூட்டிக்குக் கொண்டு விட்டதோடு சரி! அவரைப் பார்க்காமல் தான் இந்தியா செல்லப்போகிறோம் என்று நினைக்கவே இல்லையே என்று நொந்தாள். பசலை நோயோடு தான் இன்னும் 1 மாதம் இருக்க வேண்டுமா என்று வருத்தப்பட்டாள்.
கால்டன் படு பிஸியாக நியூயார்க்கில் வேலை செய்துகொண்டிருக்க, கயல் இந்திய பயணத்தைத் துவங்க கெண்டக்கி விமான நிலையத்தில் காத்திருந்தாள்.
4.28- காற்றெல்லாம் காதல்
-வித்யாகுரு