சூரியா சாயாவிடம் பேச்சு கொடுக்க முயல அவள் கண்ணில் நீர் பெருகியதே அன்றி அவள் வாய் திறந்து பேசினாளில்லை. அவளது வீடு வரும் வரை இதே நிலை நீடிக்க சூரியாவால் அவளைத் தனித்துவிட இயலவில்லை. அவளுடனே வீட்டுக்குள் வந்தவன் இன்னும் அழுதுக் கொண்டிருப்பவளைத் தேற்றும் வழியறியாது தவிக்க ஆரம்பித்தான்.
படுக்கையில் விழுந்துக் குமுறியவளை எழுப்பித் தண்ணீரைக் கொடுத்தவன் “சாயா! ப்ளீஸ்… அழாதே! லிசன்..” என்றபடி அவளின் கூந்தலைக் கோதிவிட
சாயா மெதுவாகக் கேவியபடி “நீ ஏன் என்னை லவ் பண்ண மாட்ற சூரியா? நான் அழகா இல்லையா? உனக்கு ஏன் என்னைப் பிடிக்கலை?” என்று கேட்ட கேள்விகளையே மீண்டும் மீண்டும் கேட்க சூரியாவால் பதிலளிக்க இயலவில்லை. அப்போதும் சந்தியாவின் நினைவு எழுவதை அவனால் தடுக்க முடியவில்லை..
தான் அவளது காதலை மறுத்தபோது அவளும் அழுதாள் தான்.. ஆனால் சூரியாவிடம் இந்த மாதிரியான தர்மச்சங்கடமான கேள்விகளை அவள் கேட்கவில்லை. அதைப் பற்றி பின்னர் அவன் கேட்டப் போது கூட யாரையும் காதலிக்கும்படி கட்டாயப்படுத்த முடியாது என்ற அவளின் முதிர்ச்சியான பதிலால் அவனை ஆச்சரியப்படுத்தியவள் அவள்…
சந்தியா என்பவளின் நினைவே நெஞ்சுக்குள் பூஞ்சாரலை வீசச் செய்ய அதைத் தொடர்ந்து அவள் சொன்ன முதல் காதலைக் கடந்துச் செல்ல முடியும் என்ற வார்த்தை இப்போது அவனுக்குள் குட்டி பூகம்பத்தை நிகழ்த்த ஆரம்பித்தது. சாயா சொன்னது போல மார்க் மற்றும் சந்தியாவின் செய்கைகள் அவனுக்கும் குழப்பத்தை உண்டு பண்ண சூரியாவோ “அவன் என்னோட பிரவுனி.. நான் அவளை யாருக்கும் விட்டுக்குடுக்க மாட்டேன்” என்று மனதிற்குள் முரண்டுப்பிடித்தான்.
அவனது மனசாட்சி “சந்தியா லவ்வ நீ ரிஜெக்ட் பண்ணுனப்போ அவ அதை ஏத்துகிட்டாள்ல.. அதே மாதிரி தான் நீயும் அவ ரிஜெக்ட் பண்ணிட்டா ஏத்துக்கணுமே தவிர இப்பிடி விட்டுக்குடுக்க மாட்டேனு லூசுத்தனமா பேசக்கூடாதுடா முட்டாள்” என்று அவனைக் கழுவி ஊற்ற
[the_ad id=”6605″]
சூரியா “பிரவுனிலாம் மியூசியத்துல வைக்க வேண்டிய கலைப்பொருள் மாதிரி… அவ்ளோ உயரிய எண்ணமெல்லாம் எனக்கு கிடையாதுப்பா.. நான் ஒரு சாதாரண மனுசன்…. நான் காதலிச்சப் பொண்ணுக்கு என்னோட காதலைப் புரியவைப்பேன்.. இவ்ளோ பேசுறியே பிரவுனி என்னை ஒரு காலத்துல லவ் பண்ணுனா தானே! இப்போ நான் அவ கிட்ட போய் பிரபோஸ் பண்ணுனா அவ சந்தோசம் தான் படுவா… நீ கூடவே இருந்து என்னை டார்ச்சர் பண்ணுற உன்னோட பார்ட் டைம் ஜாப்பை ரிசைன் பண்ணிட்டு சைலண்ட் மோடுக்குப் போ” என்று தனது மனசாட்சியின் தலையில் தட்டி அமைதிப்படுத்தினான்.
தன் தோளில் சாய்ந்திருக்கும் சாயாவை அன்று முழுவதும் அவள் உடன் இருந்து ஒருவாறாகத் தேற்றி அவளைச் சாதாரணமான மனநிலைக்குக் கொண்டு வருவதற்குள் அவன் களைத்துப் போய்விட்டான். கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவன் மாலை ஆறுமணி என்று காட்டவே சாயாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்புவதற்காக எழ சாயாவும் முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டு அவனை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தாள்.
சூரியா காரில் அமர்ந்தவன் “பிரவுனி நான் வந்துட்டே இருக்கேன்” என்று சொன்னபடி காரின் ரியர்வியூ மிர்ரரைப் பார்த்து சிகையைச் சரிப்படுத்திக் கொண்டான். வெறுங்கையோடு போய் காதலைச் சொன்னால் நன்றாக இருக்காது என்பதால் பூங்கொத்து வாங்குவதற்காகக் காரை எடுத்தவனுக்கு மார்க்கிடம் இருந்து அழைப்பு வரவே எடுத்துப் பேச ஆரம்பித்தான்.
மார்க் அவசரவேலை இருப்பதால் வில்லியம்ஸ் டவர் வருமாறு கேட்டுக்கொள்ள பூங்கொத்து வாங்கும் வேலையை ஒத்திவைத்துவிட்டு அலுவலகம் நோக்கி விரைந்தான் அவன். அங்கே இறுதிகட்டப்பணிகளை மார்க் மற்றும் அவனது செகரட்டரியுடன் சேர்ந்து முடித்தவனிடம் நாளை அவர்கள் இந்தியா திரும்பலாம் என்று மார்க்கின் தரப்பில் கூறிவிட சூர்யா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
பின்னே இங்கேயே இருந்தால் சந்தியா பாட்டுக்கு முதல் காதலைக் கடக்கிறேன் பேர்வழி என்று மார்க்கை வைத்து சூரியாவை எரிச்சல் மூட்டுவாள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். எனவே இன்று அவளிடம் காதலைத் தெரிவித்துவிட்டு நாளை அவளைத் தன்னுடன் நாடு கடத்திச் சென்றுவிடலாம் என்று திட்டம் வகுத்துவிட்டான் அவன்.
நேரம் பத்துமணியைக் கடந்துவிட சூரியா “நியூ இயர் ஈவ் முடிய இன்னும் ரெண்டு மணிநேரம் தான் இருக்கு… கம் ஆன் சூரியா..சீக்கிரமா பொக்கே ஷாப் போடா” என்ற மனசாட்சியின் அறிவுரையின் படி மார்க் மற்றும் அவனது செகரட்டரியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.
அவனது கெட்டநேரம் அங்கே இருந்த பூங்கொத்துகளில் உள்ள மலர்கள் என்றால் சந்தியாவுக்கு அலர்ஜி.. அமெரிக்கா வந்த புதிதில் ஒரு பூங்கொத்துக்கடைக்குச் சென்றவள் வரும்போது அலர்ஜியை இலவச இணைப்பாக வாங்கிக்கொண்டு வந்ததை நினைத்துப் பார்த்தவன் ரோஜாப்பூங்கொத்தைத் தேடி அலைந்து ஒருவாறு கண்டுபிடித்து வீடு திரும்பும் போது மணி பதினொன்று நாற்பத்தைந்து….
புது வருடம் பிறப்பதற்கு இன்னும் பதினைந்து நிமிடங்களே பாக்கியிருக்க காரை வீட்டின் கேரேஜில் நிறுத்தியவனுக்கு சாயாவிடம் இருந்து அழைப்பு வர அவளிடம் பேசிமுடித்துவிட்டு போனை வைத்தவன் நேரத்தைப் பார்க்க மணி பதினொன்று ஐம்பத்தேழு…
[the_ad id=”6605″]
சூரியா வேகமாக வீட்டுக்குள் ஓடியவன் “ஓ காட்! இன்னும் த்ரீ மினிட்ஸ் தான் இருக்குதா?” என்றபடி வீட்டினுள் அவளைத் தேடச் சந்தியா அங்கே இல்லை. மூச்சு படபடக்க வீட்டின் வெளியே சென்று பார்த்தவன் வீட்டைச் சுற்றிலும் பரந்துவிரிந்திருந்த புல்வெளியின் நடுவில் போடப்பட்டிருந்த ஒற்றை மரபெஞ்சில் உட்கார்ந்தபடி வானில் புதுவருடத்தை வரவேற்பதற்கான வாணவேடிக்கைகளை ரசித்தபடி இருந்தச் சந்தியாவைப் பார்த்துவிட்டான்.
வெள்ளைநிற நீளமான டாப் அணிந்து அவளது வழக்கமான கூந்தல் அலங்காரமான போனிடெயிலுக்கு மாறியிருந்தவளின் முட்டைக்கண்கள் வானத்தில் தெறிக்கும் பூஞ்சிதறல்களைக் கண்டு இன்னும் அகலமாக விரிய எப்போதும் அவனது தோழி பிரவுனியாகத் தெரிந்தவள் இன்று அவளை ஒரு காதலனாகப் பார்க்கும் போது பேரழகியாகத் தெரிந்தாள்.
இந்தப் பேரழகின் சொந்தக்காரன் தான் என்னும் கர்வம் மின்ன ஆவலுடன் அவள் அருகில் சென்றுநின்றவன் பூங்கொத்தை முதுகின் பின்னே மறைத்துக்கொள்ள சந்தியா அப்போது தான் அவன் வந்ததைக் கவனித்தாள். காலை கோயிலில் இருந்து வந்ததிலிருந்து இருந்த குழப்பமான மனநிலையை அந்த வண்ண வண்ண வாணவேடிக்கைகள் மறக்கடித்துவிடவே சூரியாவிடம் அதைச் சுட்டிக்காட்டியபடி எழுந்தவள் “மார்ஸ்மாலோ கவுண்ட் டவுன் கிராக்கர்ஸ் பாரு” என்றபடி பத்து வடிவத்தில் வெடித்த வெடியைச் சுட்டிக்காண்பிக்க அவனது கவனமோ அதைக் காண்பித்தவளின் மேலே தான் இருந்தது.
சூரியா அவளைத் தன்னை நோக்கித் திருப்பியவன் அவளைப் பார்க்கும் போதே கவுண்ட் டவுன் ஆறை நெருங்கியிருந்தது…சந்தியா இவன் என்ன சொல்லப் போகிறான் என்று சூரியாவைக் கவனிக்க அங்கே கவுண்ட் டவுன் சமகாலத்தில் ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது…
ஐந்து…… நான்கு….
“என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ பிரவுனி” என்று அவன் சொன்ன கணம் சந்தியாவின் விழிகள் அழகாக விரிய அவள் இதழ்களோ வழக்கம் போலக் கிண்டலாக “என்ன இது 2019யோட லாஸ்ட் ஜோக்கா?” என்று கேட்க அவன் இல்லையென்று தலையாட்டினான்.
மூன்று…. இரண்டு…. ஒன்று…..
“ஐ லவ் யூ பிரவுனி” என்று கூறி சூரியா பூங்கொத்தை நீட்டவும் வானில் ‘ஹேப்பி நியூ இயர்’ என்ற எழுத்துக்கள் மின்னவும் சரியாக இருந்தது.
சந்தியா ஒரு கணம் இதயம் படபடக்க ஆச்சரியத்துடன் அதை வாங்காமல் “இது 2020யோட ஃபர்ஸ்ட் ஜோ….” என்று சொல்ல வாயெடுக்க பேசாதே என்று தனது ஆட்காட்டிவிரலால் அவளது இதழுக்குப் பூட்டு போட்டவன்
“2020யோட ஃபர்ஸ்ட் பிரபோஸல்” என்றான் கண்களில் கரைபுரண்டோடும் காதலுடன்.
சந்தியா பேசாமல் அவன் சொல்வதை நம்பவும் இயலாமல் இமைக்க மறந்து விழிக்க அவள் கரங்களில் பூங்கொத்தைத் திணித்தவன் “டூ யூ லவ் மீ?” என்று கேட்கவும்
சந்தியா தனது முதல்காதல் தன் முன்னே வந்து என்னைக் காதலிக்கிறாயா என்று கேட்பதைப் பார்த்து வாய் பேச இயலாதவளாய் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழிக்க சூரியா அவளது மவுனத்தைச் சம்மதமாக எடுத்துக் கொண்டவன் அவளை நெருங்கி “இது ஃப்ரெண்ட்ஷிப் கிஸ் இல்லை பிரவுனி” என்று சொல்லிவிட்டு அவள் கன்னத்தில் தன் இதழ்களை அழுத்தமாகப் பதித்தான் ஒரு காதலனாக.
சாரல் வீசும்……