அன்று முழுவதும் சூரியா அந்த ‘நாலணா’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தான். ஜித்துவிடம், அவன் அம்மாவிடம் என்று அந்த வீட்டில் ஒருவர் பாக்கியின்றி கேட்டு வைக்க அவர்களும் கையை விரித்தனர். அவனது ஐபோனை கூட உருட்டிப் பார்த்துவிட்டான்.
கூகுள் அப்படி ஒரு வார்த்தையே இல்லையென்று அடித்துக் கூற “இந்த பிரவுனி இல்லாத ஒன்னை சொல்லி சீட் பண்ணிட்டா. பட் நான் விட மாட்டேன். அவ வாயால அந்த வார்த்தைக்கு அர்த்தம் சொல்ல வைக்காம விட மாட்டேன்” என்று சபதம் எடுத்துக் கொண்டான். இப்படியே யோசனையில் பொழுது கழிய இரவும் வந்துவிட்டது. அவன் வழக்கம் போல அவுட் ஹவுஸின் மாடியில் நின்றபடி இருளின் நடுவே ஆங்காங்கு மின்விளக்குகள் ஒளிர்ந்தபடி தெரிந்த அந்த ஊரின் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.
அப்போது பக்கத்துவீட்டு மொட்டைமாடியில் இருந்து சிரிப்பு சத்தம் கேட்க அங்கே திரும்பி பார்க்கையில் சதாசிவத்தின் குடும்பத்தினர் தான் அங்கே ஒன்றாக அமர்ந்தபடி சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். அன்று பவுர்ணமி என்பதால் முழுநிலவில் மாடியில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்த அந்த குடும்பத்தினரை கண்டதும் அவன் அறியாமல் ஏக்கம் ஒன்று அவன் அடிமனதில் தோன்றியது.
அவன் பக்கத்துவீட்டு மாடியையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்டவாறே அவன் அருகில் வந்து நின்றான் ஜித்தேஷ். “என்னடா சூரியா? அக்கவுண்டெண்ட் சாரோட ஃபேமிலியை இப்பிடி வச்ச கண் வாங்காம பார்த்துட்டிருக்க?” என்றவாறு மாடியின் சுவரில் சாய்ந்து கொள்ள
சூரியா பெருமூச்சுடன் “எவ்ளோ அழகான ஃபேமிலில்ல ஜித்து! அந்த பிரவுனி ரொம்ப லக்கி. அவளுக்கு எவ்ளோ லவ்லியான ஃபேமிலி கிடைச்சிருக்கு” என்று கூறிவிட்டு தனது குடும்பத்தினரின் நினைவில் முகம் கசங்க நின்றான்.
ஜித்து அதை உணர்ந்து நண்பனின் தோளில் தட்டியவன் “விடுடா! எல்லாருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை கிடைக்கிறது இல்ல” என்று அவனை சமாதானம் செய்ய முயல
அவனோ “ப்ச்…அப்பிடி இல்லடா. இந்த உலகத்துல அழகான குடும்பம் கிடைச்சவங்க ரொம்ப லக்கி. ஏன்னா ஒவ்வொரு நிமிசமும் அவங்களுக்கு குடும்பத்தோட அரவணைப்பு, அன்பு எல்லாமே ரொம்ப சுலபமா கிடைச்சிடும். ஆனா குடும்பம்னு ஒன்னு இருந்தும் பெத்தவங்களோட அரவணைப்பு இல்லாம இருக்கிறது எவ்ளோ கொடுமை தெரியுமா ஜித்து?” என்றவனின் கண்கள் குழந்தைப்பிராய நினைவில் பனிக்கத் தொடங்கியது.
ஜித்து நண்பனின் புஜத்தை அழுத்தியவன் “ஏய் சூரியா! வாட் இஸ் திஸ் மேன்? ஃபேமிலியை பிரிஞ்சு நான் ஃபீல் பண்ணுறப்போ எனக்கு தைரியம் சொன்னவன் நீ. நீயே கண் கலங்கலாமா?” என்று கூற
சூரியா டிசர்ட்டின் கைப்பகுதியால் கண்களை துடைத்தபடி “நானும் சாதாரண மனுசன் தான்டா! எனக்கு எல்லாமே இருக்கு, ஆனா நான் ஏங்குற என் குடும்பத்தோட பாசம் மட்டும் பகல்கனவாவே போயிடுச்சு.
ஃபீவர் வந்தா பாசமா தலையை தடவிக் குடுத்து டேப்லட் குடுக்கிற அம்மாவோட அன்பு, ரன்னிங் காம்படிசன்ல தோத்தா ‘நீ அடுத்த தடவை ஜெயிருச்சுவடானு’ தட்டிக் குடுக்கிற அப்பாவோட அரவணைப்பு, சின்ன சின்ன விஷயத்துக்கும் நம்ம கிட்ட சண்டை பிடிக்கிற தம்பியோட குழந்தைத்தனம்னு இது எல்லாமே எனக்கு கனவா மட்டுமே போயிடுச்சு ஜித்து. இவ்ளோ பணம் இருந்தும் அம்மா, அப்பா, தம்பினு எல்லாரும் இருந்தும் ஆளுக்கு ஒரு மூலையில இருக்கிற இந்த எலைட் கிளாஸ் லைஃப் ஸ்டைல் என்னை பொறுத்தவரைக்கும் ஒரு சாபம்டா” என்று வலியுடன் கூறியவனை தோளோடு அணைத்துக் கொண்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றான் அவன் நண்பன்.
[the_ad id=”6605″]*****
மறுநாள் காலையில் சதாசிவம் பரபரப்பாக சாமில்லுக்கு கிளம்பியவர் முக்கியமான கோப்பு ஒன்றில் கைலாஷ் படேலின் கையெழுத்து தேவைப்படுவதை அப்போது தான் கவனித்தார். அவருக்கு சிறிது உடல்நலக்குறைவு என்பதால் அன்று அவர் சாமில் வருவது சாத்தியம் இல்லை என்று அறிந்தவர் தானே அவரிடம் போய் கையெழுத்து வாங்கி விடுவோம் என்ற முடிவுடன் கோப்புகளை எடுத்துக் கொண்டு வேகமாக நடந்தவர் வழியில் கிடந்த நாற்காலியில் காலை இடித்துக் கொள்ள அவருக்கு மதியத்துக்கான டிபன் பாக்சை கொண்டு வந்த ரேவதி “ஏங்க பார்த்துப் போக மாட்டிங்களா?” என்று கூறியவாறு அவரை தாங்கிக் கொண்டபடி நாற்காலியிலேயே அமரவைத்தார்.
“நீங்க கொஞ்சம் இருங்க. நான் தண்ணி கொண்டு வர்றேன். காலை இடிச்சிட்டு அப்பிடியே போகக் கூடாது” என்றபடி சமையலறைக்குள் சென்று தண்ணீர் எடுத்துவரச் செல்ல தேவராஜ் “என்னாச்சு அண்ணா?” என்றபடி சகோதரரின் அருகில் அமர்ந்தவர் ரேவதி தண்ணீருடன் வரவே “மதினி என்னாச்சு?” என்று அவரிடம் கேட்டுவிட்டு “ஃபைல்ல சிக்னேசர் வாங்க ஏன் இவ்ளோ அவசரமா போறிங்க? நீங்க இருங்க” என்றபடி சந்தியாவை அழைத்தார்.
என்னப்பா என்றபடி வந்தவளிடம் கோப்பை கொடுத்து கைலாஷ் படேலின் கையெழுத்தை வாங்கி வருமாறு கூற அவளும் சரியென்று தலையாட்டிவிட்டு பங்களாவை நோக்கி சென்றாள். வாயிலில் நிற்கும் செக்யூரிட்டியிடம் “ஹாய் மீசைக்காரரே! இந்த ஃபைல்ல சாரோட சைன் வாங்கணும். நான் உள்ளே போலாமா?” என்று கேட்க அவரும் அவள் சதாசிவத்தின் தம்பி மகள் என்பதை அறிந்திருந்ததால் உள்ளே அனுமதித்தார்.
சந்தியா அந்த பெரிய பங்களாவை பார்த்து ஆச்சரியப்பட்டவாறே உள்ளே நுழைய கைலாஷ் படேலின் மனைவி அவளைப் பார்த்ததும் புன்னகைத்தவாறே என்ன விஷயம் என்று கேட்கவே அவள் கோப்பை காட்டி கைலாஷின் கையெழுத்து வேண்டுமென்று கூறியவள் எங்கே போட வேண்டுமென்று காட்டிவிட்டு கோப்பை அவர் வசம் ஒப்படைக்க அவர் அவளை அமருமாறு கூறிவிட்டு கோப்புடன் மாடியை நோக்கிச் சென்றார்.
அவர் சென்றதும் வீட்டையே நோட்டமிட்டவள் வாயிலில் நின்றவனை கவனிக்கவில்லை. “ஹேய் பிரவுனி” என்ற அழைப்புடன் வந்தவனை இவனா என்ற அலட்சியபாவனையுடன் பார்த்தாள் சந்தியா. சூரியா அவள் எதிரே நின்றவன் அவளை குற்றம் சாட்டும் பாவனையுடன் “நீ சரியான சீட்டர். இல்லாத ஒரு விஷயத்தைச் சொல்லி என்னை டிஸ்ட்ராக்ட் பண்ணிட்டு நீ பண்ணுன திருட்டை என்னை மறக்க வைக்க டிரை பண்ணிருக்க” என்று அவன் கூறவே அவள் கடுப்புடன் எழுந்துவிட்டாள்.
“ஏய் மார்ஸ்மாலோ யாரை பார்த்து சீட்டர்னு சொல்லுற? நான் ஒன்னும் இல்லாத விஷயத்தை சொல்லலை. உனக்கு ஒரு விஷயம் தெரியாதுனா அது இந்த உலகத்துலயே இல்லைனு சொல்லிடுவ போல” என்றாள் அவனுக்கு சற்றும் குறையாத காட்டமான குரலில்.
“ஏய் கூகுளே அப்பிடி ஒன்னு இல்லனு சொல்லிடுச்சு. டோண்ட் ஆக்ட் டூ ஸ்மார்ட்”
“கூகுள் சொல்லுச்சா? அதுக்கு என்ன ஆதாரம் மிஸ்டர் வளர்ந்த பனைமரம்?”
அவள் இப்படி கேட்கவும் அவன் போனை எடுத்து அதில் கூகுளில் தேடியதைக் காட்ட சந்தியா அவன் தட்டச்சு செய்திருந்த வார்த்தையைக் கண்டதும் குபீரென்று சிரித்து விட்டாள். சூரியாவுக்கு தமிழ் கொஞ்சம் தடுமாற்றம் தான். அதனால் அவன் ‘நாலணா’ என்பதை ‘நாளனா’ என்று தட்டச்சு செய்திருக்கவே வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தவள் “உனக்கு நாலணானா என்னன்னு தெரியாதுனு நினைச்சேன். ஆனா உனக்கு அதுக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாதுனு இப்போ தானே தெரியுது” என்று நக்கலாக கூறியவளை கண்ணைச் சுருக்கிக் கொண்டு பார்த்தான் சூரியா.
[the_ad id=”6605″]“ஓகே ஓகே! நீ கலாய்ச்சதுல நான் ரொம்ப அவமானப்பட்டுட்டேன். எனக்கு தமிழ் கொஞ்சம் வராது” என்று கூறியவனை அலட்சியமாக பார்த்தபடி அவனிடம் போனை நீட்டியவள் “இதுக்கு நியாயப்படி நீ வெக்கப்படணும். என்ன பண்ணுறது? இப்போலாம் தமிழ் தெரியாதுனு சொல்லுறது ஒரு ஃபேஷன் ஆயிடுச்சு” என்றபடி மீண்டும் சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.
அவன் அவளுக்கு எதிர் சோஃபாவில் அமர்ந்தபடி “சரி அதுலாம் போகட்டும். நீ எனக்கு அந்த நாலணாவை காட்டு” என்று விடாப்பிடியாக அதிலேயே நிற்க
சந்தியா “சரி! நீ ரொம்ப கெஞ்சுறதால நான் உனக்கு அதை காட்டுறேன். பட் ஒன் கண்டிஷன். நான் உனக்கு நாலணாவை காட்டுனா நீ நான் நெல்லிக்காய் பறிச்ச விஷயத்தை சேட்டோட வீட்டுக்காரம்மா கிட்ட சொல்லக் கூடாது. டீல் ஓகேவா?” என்றபடி கேட்க
அவன் “எக்ஸ்யூஸ் மீ! நீ பறிக்கலை! திருடுன பிரவுனி” என்றதும் சந்தியா “இது சரிபட்டு வராது. நீ உன்னோட உடைஞ்சு போன தமிழ்ல கூகுளை கொலை பண்ணியே அது என்னன்னு கண்டுபிடிச்சுக்கோ” என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பியபடி அமர்ந்து கொண்டாள்.
“ஏய் நோ நோ! நான் எதுவும் சொல்ல மாட்டேன். பிளீஸ் எனக்கு அதை கண்ணுல காட்டு” என்று அவன் நிஜமாகவே கெஞ்ச சந்தியா சரியென்று தலையாட்டிவிட்டு திரும்ப சேட்டின் மனைவி கையெழுத்திடப்பட்ட கோப்புடன் வந்தவர் அவள் கையில் கொடுக்கவும் அவள் நன்றி கூறிவிட்டு சூரியாவை தன்னுடன் அழைத்துச் சென்றாள்.
வீட்டிற்கு வந்தவள் பெரியப்பாவிடம் கோப்பை கொடுத்துவிட்டு சூரியாவை அவரிடம் அறிமுகப்படுத்த நினைக்க அதற்குள் அவனே அறிமுகமாகிக் கொண்டான். அதன் பின் அவன் சதாசிவத்திடம் ஏதோ பிஸினஸ் பற்றி பேச ஆரம்பிக்க சந்தியா தனது அறைக்கு சென்றாள்.
தனது அலமாரியில் வைத்திருந்த ஆல்பத்தை எடுத்தவள் வெளியே வர அங்கே சூரியா அவளது குடும்பத்தினருடன் சகஜமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டவள் அவளது பாட்டி அடித்த மொக்கை ஜோக்குக்கு அவன் சிரிப்பதைக் கண்டதும் அவளுக்கு அவனை கேலி செய்ய நாக்கு துருதுருவென்று வர அதற்குள் அவள் ஆல்பமும் கையுமாக நிற்பதை பார்த்த சூரியா “எடுத்து வந்துட்டியா பிரவுனி?” என்றபடி எழ அனைவரும் அவள் புறம் திரும்பி என்னவென்று பார்த்தனர்.
சந்தியா “ஆமா மார்ஸ்மாலோ!” என்றபடி அவன் அருகில் வரவும் கோமதியம்மாள் அவளது ஆல்பத்தைப் பார்த்து “இப்போ இதுல எதை ஒட்டி வைக்க போறாளோ?” என்று கேட்டபடியே மகள்களுடன் அங்கிருந்து நகர சந்தியா அவனை வராண்டாவில் நாற்காலியில் அமரச் சொல்லிவிட்டு தானும் அமர்ந்தாள்.
ஆல்பத்தை விரித்தவள் ஒவ்வொரு பக்கமாக புரட்டிவிட்டு அவனிடம் ஒரு பக்கத்தை காட்டி அதில் இருந்த அலுமினிய இருபத்தைந்து காசு நாணயத்தை தொட்டுக் காட்டி “லுக் ஹியர்! இது தான் நாலணா” என்று காட்ட அவனோ ஏதோ மியூசியத்தில் உள்ள பழைய கால பொருளை பார்ப்பது போல அதை பார்த்தான்.
பின்னர் ஐம்பது காசு, பத்து காசு, இருபது காசு என்று அவளது சேகரிப்புகள் அனைத்தையும் காட்டிவிட்டு அவனது அதிசயித்த பாவனையைக் கண்டு “நீ இப்பிடி உலகம் தெரியாதவனா இருக்கியே மார்ஸ்மாலோ?” என்று உச்சுக் கொட்டவும் தவறவில்லை.
சூரியா ஆவலுடன் “பிரவுனி இதுல ஒரே ஒரு காயின் எனக்கு குடேன் பிளீஸ்” என்க அவள் “ம்ஹூம் தரவே மாட்டேன்பா” என்று மறுத்து தலையசைத்துவிட்டு ஆல்பத்தை தனது மார்புடன் அணைத்துக் கொண்டாள்.
[the_ad id=”6605″]“இதுலாம் என்னோட பொக்கிஷங்கள் மார்ஸ்மாலோ! இதை நான் யாருக்கும் ஷேர் பண்ண மாட்டேன். இது ஒவ்வொன்னும் எனக்கு நெருக்கமானவங்களோட நினைவுகள். இதை நான் ஷேர் பண்ணுனா அவங்க நினைவும் என்னை விட்டு போற மாதிரி ஆயிடும்” என்று மறுத்தாள்.
அவன் கெஞ்சலாகப் பார்க்க “சரி நீ பார்க்க பாவமா இருக்கிறதால உனக்கு ஒரு ஆப்சன் தர்றேன். நீ எப்போ தெளிவா தமிழை எழுத படிக்க கத்துக்கிறியோ அப்போ நான் உனக்கு இதுல இருந்து ஒரு காயின் தருவேன்” என்று கூற அவன் “இதுக்கு தர முடியாதுனு நீ டேரக்டா சொல்லிருக்கலாம்” என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி எழுந்தான்.
அப்போது வராண்டாவுக்கு வந்த ரேணுகா “தம்பி வீட்டுக்கு வந்துட்டு சாப்பிடாம போனா என்ன அர்த்தம்? வாங்க! சந்து தம்பியை கூட்டிட்டு வா. வீட்டுக்கு ஃப்ரெண்ட்ஸ் வந்தா இப்பிடி தான் வெறும் வயித்தோட அனுப்பிவியா?” என்று கூற சந்தியா சூரியாவை சாப்பிட அழைத்துச் சென்றாள்.
குடும்பமாக அமர்ந்து சாப்பிடுவது கூட ஒரு சுகமே என்பதை அன்று புரிந்து கொண்டான் சூரியா. அவர்களிடம் தங்கள் அளவுக்கு பணம் வேண்டுமென்றால் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அள்ள அள்ள குறையாத அன்பு அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது என்பதை கண்கூடாக பார்த்தவன் மீண்டும் ஒரு முறை “பிரவுனி யூ ஆர் லக்கி” என்று தனக்குள் கூறிக் கொண்டான்.
சாப்பிட்டு விட்டு அனைவரிடமும் சொல்லிக்கொண்டு விடைபெற்றவன் வாசல் வரை வந்த சந்தியாவிடம் கையை நீட்டி “ஃப்ரெண்ட்ஸ்?” என்றபடி அவளது பதிலுக்காக காத்திருக்க சந்தியாவும் எந்த தயக்கமுமின்றி அவன் கரத்தைப் பற்றினாள்.
முதல்முறையாக ஆடவன் ஒருவனின் கரங்களின் ஸ்பரிசத்தை உணர்ந்த அவளது கரங்கள் அவனிடமிருந்து விடுபடும் எண்ணமற்று அப்படியே அவன் கரங்களுக்குள் வாகாக பொருந்திக் கொள்ள சந்தியாவுக்கே இது ஆச்சரியம் தான். சூரியா அவளது கரத்தை விடுவித்தவன் அவனது அக்மார்க் புன்னகையை சிந்திவிட்டு விடைபெற்றான். அவன் சென்று பலமணி நேரங்களுக்கு பிறகும் அவன் பற்றிய கரங்களை பார்த்தபடியே இருந்தாள் சந்தியா.
அதன் பிறகு கல்லூரிக்கு அணிந்து செல்ல உடைகள் வாங்க சென்ற போது, கைலாஷ் படேலின் வீட்டில் நடந்த பூஜையில் கலந்து கொள்ள சென்ற போது என்று அடிக்கடி பல்வேறு இடங்களில் அவர்கள் சந்தித்துக் கொண்டனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் ஒருவரை ஒருவர் வஞ்சகமின்றி காலை வாரிக் கொண்டனர் என்றால் அது மிகையில்லை.
****