♥ மக்களே... மக்களே...
இந்த நாள் எப்போ வரும்ன்னு ரொம்ப நாளா காத்திருந்தேன்! இந்த கதையை நான் முடிப்பேனான்னு பலமுறை சந்தேகம் வந்து, சோர்ந்து போயிருக்கேன்! அப்போ எல்லாம் உங்க கமெண்ட்ஸ் அண்ட் 'எபி எங்க?' ன்னு கேட்குற கேள்விகள் தான் என்னை ஊக்குவிச்சுருக்கு!!!
அதுக்கெல்லாம் எத்தனை நன்றிகள் சொன்னாலும் பத்தவே பத்தாது... கதை நல்லா இருக்கா, நல்லா முடிச்சுருக்கேனான்னு எந்த ஐடியாவும் இல்லை! ஆனா, என் மனசுக்கு இது மோசமான கதை'ன்னு தோணல... அதுவே ஒரு நிம்மதி!!!
இந்த சரித்திர நிகழ்வுல ஆரம்பத்துல இருந்து இப்போ வரைக்கும் சலிக்காம என்கூட பயணிக்குறவங்களுக்கும், இனிமே பயணிக்க போறவங்களுக்கும், மிகப்பெரிய நன்றிகள்...!!!
கதையை சொன்ன நேரத்துக்குள்ள முடிச்சுட்ட நிம்மதியோட, இனிமே கொஞ்சம் PEACEFUL-ஆ இருப்பேன்... நான் திரும்பி வரவரைக்கும் என்னை மறக்காம நியாபகம் வச்சுக்கோங்க டியர்ஸ்....
PRIYA MOHAN’S கலாட்டா காதல் 25.1 - Tamil Novels at TamilNovelWriters
கலாட்டா 25.1 கோகுல் மெல்ல நடந்து அந்த அலங்கார அரங்கத்தை அடைந்துக்கொண்டிருந்தான். மாலை நேர மங்கிய வெளிச்சத்தில், சூரியன் கொஞ்சம்கொஞ்சமாய் விடைபெற்று நிலாமகளை பதவியேற்க சொல்ல, அந்த நேரத்தில் பிரமாண்டமான பலவண்ண விளக்குகளால் ஒளிர்ந்துக்கொண்டிருந்தது அத்திருமண மண்டபம். வாயில் அருகே சென்றவனை...tamilnovelwriters.com
[/QUOTEPRIYA MOHAN’S கலாட்டா காதல் 25.2 - Tamil Novels at TamilNovelWriters
கலாட்டா 25.2 மேடையில் தன்யா ஆதியின் கரம் கோர்த்து நிற்க, “அப்பறம் உன் பிரண்ட்ஸ் எல்லாம் என்ன சொன்னாங்க?” என்றான் கண்சிமிட்டி. மகாராஸ்ட்ராவில் நடந்த வரவேற்ப்புக்கு கல்லூரியில் தன்யாவுடன் சுற்றிய, அம்ருதா, நவ்யா, தீப்தி மூவரும் வந்திருக்க, அவர்களை பற்றித்தான் விசாரித்துக்கொண்டிருந்தான் ஆதி...tamilnovelwriters.com