மேடையில் தன்யா ஆதியின் கரம் கோர்த்து நிற்க, “அப்பறம் உன் பிரண்ட்ஸ் எல்லாம் என்ன சொன்னாங்க?” என்றான் கண்சிமிட்டி.
மகாராஸ்ட்ராவில் நடந்த வரவேற்ப்புக்கு கல்லூரியில் தன்யாவுடன் சுற்றிய, அம்ருதா, நவ்யா, தீப்தி மூவரும் வந்திருக்க, அவர்களை பற்றித்தான் விசாரித்துக்கொண்டிருந்தான் ஆதி.
“ம்ம்ம்… இத்தனை வருஷத்துக்கு பிறகும் ஏன் அதே மொக்க சீனியரை கல்யாணம் பண்றன்னு பரிதாபமா கேட்டாங்க” என தன்யா நமட்டு சிரிப்பு சிரிக்க, “ஏய்….!!!!” என முறைத்தான் ஆதி.
அந்நேரம் மேடையில் ஏறி வந்தாள் திவ்யா. கையில் குழந்தையுடன் அவள் தனுவிடம் வர, அவளை கண்டதுமே நொடியில் இறுகிப்போனது தன்யாவிடம் முகம்.
அதைக்கண்டுக்கொண்ட திவ்யா, “பாரு ஆதி, என்னை பார்க்கும்போதெல்லாம் உன் புது பொண்டாட்டி முகத்தை திருப்பிக்குறா!?” என்றாள் குறையாக.
அண்ணியின் குறையை ஏற்ற ஆதி, “தனுமா… நீ ஸ்வேதா மேல இருக்க கோவத்தை திவ்யா மேல காட்டாதடா! ஷி இஸ் ரியலி டிபரன்ட் ப்ரம் ஸ்வேதா… நீ முகத்தை திருப்புனா அவளுக்கு கஷ்டமா இருக்காதா?” என்று இதமாய் சொல்ல,
“நானும் நார்மலா இருக்கனும்ன்னு தான் நினைக்குறேன்… ஆனா, ரெண்டு பேருமே பார்க்க ஒரே மாறி இருக்குறதால, இவங்களை பார்க்குறப்போ எல்லாம் எனக்கு ஸ்வேதா செஞ்சது தான் நியாபகம் வருது” என்றாள் தன்யா.
“ஐ கேன் அன்டர்ஸ்டேன்ட் தன்யா… பட், ஜஸ்ட் ட்ரை டு சேன்ஞ்! ஸ்வேதா இப்போ மேரேஜ் ஆகி கனடால செட்டில் ஆகிட்டா! அவ செஞ்சதுக்கு நேருல போய் நல்லா திட்டனும்ன்னு தான் இருக்கேன்! பட், டோன்ட் வொர்ரி! என் டேட் அவளை செம்ம திட்டு திட்டிருக்காரு… ஷி ரியலி ஃபீல்ஸ் சாரி ஃபோர் ஹர் ஆக்ட்!” என திவ்யா சமாதானம் சொல்ல,
ஸ்வேதாவை மன்னிப்பது கடினம் எனினும் திவ்யாவை சங்கப்படுத்த வேண்டாம் என இயல்பாய் சிரித்து நட்பு பாராட்டினாள் தன்யா.
அவள் புன்னகை ஒன்றே போதும் என்பதை போல நிம்மதியடைந்த திவ்யாவும், “இப்ப கொஞ்சம் ப்ரீயா இருக்கீங்க போலயே, எல்லாரையும் வர சொல்லி பேமிலி போட்டோ எடுத்துடலாமா?” என்று கேட்டு குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஒன்று திரட்டினாள்.
இரு குடும்பங்களும் ஒன்றாய் சேர்ந்து பலவித கோணங்களில் அன்றைய நிகழ்வை படம்பிடித்துக்கொள்ள, சற்று நேரம் குறைந்திருந்த விருந்தனர்களின் வருகை மீண்டுமாய் கூடியது.
அப்போது ஆடம்பரமாய் அரங்கத்தின் உள்ளே நுழைந்துக்கொண்டிருந்தான் அவன், பிரகாஷ்!
“ஹே, இந்த கோமாளியை நான் உன்கூட பார்த்தேனே ஒருநாள்?” என்றான் ஆதி.
தன்யா, “ம்ச்! ஆமா… கல்யாணம் பண்ணிக்கலாம், கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இம்சை பண்ணிட்டு இருந்தான்” என தன்யா பல்லைக்கடிக்க,
அவனை கண்டதும், லட்சுமி, “இந்த கழிசடை தான் அன்னைக்கு போன் பண்ணி ஏதேதோ சொல்லி கதிகலங்க வச்சுட்டான்” என வசவு பாட, அதற்குள் மேடையில் ஏறியிருந்த பிரகாஷ், கையில் இருந்த ‘பொக்கே’வை நீட்டி, “ஹேப்பி மேரீட் லைஃப்” என்றான் சிரித்த முகமாய்.
சிறிது தயக்கமாய் தன்யா அந்த பூங்கொத்தை வாங்கிக்கொள்ள, “டேட், என் மேரேஜ் அரேன்ஞ்மென்ட்ஸ்ல ரொம்ப பிஸி… அதான் நான் வந்தேன்” என்றான் அருகே நின்ற ராஜகோபாலிடம்.
பேருக்காய் அவர் சிரித்து வைக்க, “அப்பறம் நியூஸ் பேப்பர் பார்த்தீங்களா?” என்றான் பிரகாஷ்.
ஒருவரும் பதில் சொல்லாது நிற்க, “என்ன பேசமாட்டேங்குறீங்க?” என்று அவனே கேட்டான்.
மீண்டும் எவ்வித பதிலும் கிட்டாது போகவே, “பின்ன, என்னவோ உலகத்துல இவ ஒருத்தி தான்…” என ஆரம்பித்தவன், ஆதி முறைப்பதை கண்டதும், “சாரி.. சாரி… இவங்க ஒருத்தி தான் பொண்ணுங்கிற மாறி எவ்ளோ ஸீன் போட்டீங்க? இப்ப உங்களை விட ரிச்’சா ‘சேகர் சிமண்ட்ஸ்’சோட ஒரே பொண்ணை, நான் ஒரே மாசத்துல கரெக்ட் பண்ணி, இன்னும் பத்தே நாள்ல கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்துருக்கேன்!” என்றான் பெருமையாய்.
“என்ன எல்லாரும் ஒண்ணுமே சொல்லாம நிக்குறீங்க? ஒரே ஷாக்கா இருக்கா? உங்களை எல்லாம் பழி வாங்கனும்ன்னு தான் நான் வெறித்தனமா வேலை பார்த்தேன்” என பிரகாஷ் சொன்னதும்,
‘அடச்சை, இதையா அன்னைக்கு அத்தனை பில்டப் குடுத்து சொன்னான்? இவனைப்போய் ஒரு செகன்ட் வில்லன்னு நினைச்சுட்டோமே?!’ என்று இருந்தது லட்சுமிக்கும், தெய்வாக்கும்.
ஆதியோ, “நீங்க வாங்குன பழி’ல நாங்க மிரண்டுட்டோம் போங்க! எதுக்கும் தொப்புல சுத்தி பதினாறு டி.டி போட்டுடுங்க… ஏன்னா, வெறித்தனமா வேலை செஞ்சுருக்கீங்கள்ள?!” என்று சொன்னதும், ‘இவன் நம்மளை கலாய்க்குறானா?’ என பிரகாஷ் சந்தேகித்து தெளிவதற்குள் அடுத்தடுத்து மேடைக்கு ஆட்கள் வர வேண்டி நிற்க, வேறுவழியின்றி இறங்கி சென்றான்.
கோகுல் பாவத்திலும் பாவமாய் லைட்டை தூக்கி பிடித்துக்கொண்டே நிற்க, அப்போது தான் அவனை காண்பது போல, “மச்….சீ… நீ இங்க தான் இருக்கியா? நீ ஏன்டா இந்த வேலையெல்லாம் செய்யுற? வா வா” என பாசமாய் மேடைக்கு அழைத்தான் ஆதி.
அவனை முறைத்துக்கொண்டே கோகுல் மேடைக்கு வர, அருகே வந்ததும், அவனை இழுத்துப்பிடித்து தோளோடு அணைத்துக்கொண்டான் ஆதி.
“என்ன மச்சீ…! எதிர்ல நின்னு என்னையே வெறிக்க வெறிக்க பார்க்குற? சைட் அடிக்குறியோ?” என அவனது வெந்த புண்ணில் ஈட்டியை பாய்ச்ச, வாயை இருக்க மூடிக்கொண்டு நின்றான் கோகுல்.
அவனிடம் சாய்ந்து ரகசிய குரலில், “இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகல… உனக்கு ஓகேன்னா சொல்லு, பகல்ல பொண்ணா உன்னோடவும், ராத்திரில பையனா என் டார்லிங் கூடவும் டபுள் ஷிப்ட் பார்க்குறேன்” என கூசாமல் கலாய்க்க, கோகுலுக்கு வாயை மூடிக்கொண்டு இருப்பது பெரும்பாடாய் போனது.
“பேசு மச்சி! என்னை அடிக்கடி ‘சொல்லு சொல்லு’ன்னு கேட்பியே… இப்போ சொல்லட்டா?” என்ற ஆதி, “ஐ லப் யூஊஊ…” என பெண்குரலில் பேச, “த்த ச்சை… கையை எடுறா” என தட்டிவிட்டான் கோகுல்.
தன்யா விழுகாத குறையாக சிரிக்க, “என்ன மச்சி, பியார் பிரேமா காதல் வேணாமா?” என்றான் ஆதி ஏகத்துக்கும் கிண்டலாய்.
இருவரையும் முறைத்த கோகுல், “எல்லாருக்கும் விதியை எழுதுன பிரம்மா, எனக்கு எழுதும்போது மட்டும் டயர்ட் ஆகி, பிள்ளையார்க்கிட்ட குடுத்துட்டார் போல… ஹும்! எனக்கும் ஒரு காலம் வரும்டா! அப்ப நானும் டூயட் ஆடுவேன்” என்றான் தன்னையே சமாதானம் செய்துக்கொண்டு.
அப்போது அவன் பின்னிருந்து, “எக்ஸ்யூஸ் மீ” என்ற பெண்குரல் கேட்க, திரும்பியவனை தாண்டி, தன்யாவிடம் சென்றாள் அவள்.
நேர்த்தியான அவள் ஆடம்பரமற்ற அழகில் ஒரு கணம் மயங்கி கோகுல் நிற்கும்போதே, “தேவா, இவ என்னோட பிரண்ட்… சென்னைல நான் ஸ்டடீஸ் கண்டின்யூ பண்ணப்போ எனக்கு பிரன்ட் ஆனா!” என்றாள் தன்யா.
சிநேகமாய் சில வார்த்தைகள் பேசியவள், புகைப்படத்திற்கு நின்றுவிட்டு இருவரையும் வாழ்த்திவிட்டு செல்ல, அவள் மேடை விட்டு இறங்கிய பின்னும் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான் கோகுல்.
ஆதி, “மச்சி… நயாகரா கொட்டுது, கொஞ்சம் துடைச்சுக்க” என்று சொல்ல, “ச்சீ போடா” என்ற கோகுல், அந்த பெண்ணின் பின்னே செல்ல ஆரம்பித்தான்.
கீழே இறங்கி சென்றுக்கொண்டிருந்தவளை, “ஹலோ, ஹலோ, எக்ஸ்யூஸ்மி” என கோகுல் அழைக்க, திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தவள், “வாட்?” என்றாள் இதமாய்.
“க்கும்!!! ஐ’யம் கோகுல். பேசிக்கலி குட் பாய்” என்று ஆரம்பிக்க, “சோ வாட்?” என பேச்சை கத்தரித்தாள் அவள்.
“இல்ல, சும்மா ஒரு பிரண்ட்ஷிப்” என்றவன், “உங்க பேர் என்ன?” என்று கேட்க, அவனது நாகரீக தோற்றத்தால், அவனை தவறாக எண்ண முடியாது பேரை சொன்னாள் அவள்.
“பிரியா!”
கோகுல், “என்னதுங்க?”
“பிரி…யா”
‘மறுபடியுமா?’ என உள்ளுக்குள் ஒரு அலறல் கேட்க, “ஏங்க, முழு பேரே பிரியாவா? இல்ல வேற எதுவுமா?” என கேட்டான்.
“இல்ல, பிரியா தான்” என்றவள் சொல்ல, சில நொடிகள் என்ன செய்வது? என்பதை போல நின்றவன், “ஏங்க, நான் உங்களை ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே?” என்றான் பீடிகைப்போட்டு.
கண்டிப்பாய் காதலை தான் சொல்ல போகிறான், இந்த ஆண்களை பற்றி தெரியாதா? என்று எண்ணியவள், “கேளுங்க” என முறைப்பாய் சொல்ல,
“உங்க முடி ஒரிஜினலா இல்ல விக்’கா?” என்றான் அவள் தலையை பார்த்துக்கொண்டே…
அவனிடம் இருந்து வேறு ஒன்றை எதிர்ப்பார்த்திருந்தவள், இந்த கேள்வியில் திகைத்துப்போய், “வாட்ட்ட்?” என்றாள் முகம் சுளித்து.
“இல்லங்க, நீங்க நிஜமாவே பொண்ணு தானான்னு தெரிஞ்சுக்க்கலாம்ன்னு கேட்டேன்” என அவன் சொல்ல, இந்த பதிலில் அவள் உச்சகட்ட கடுப்பிற்கு சென்று, “கெட் லாஸ்ட்” என்றுவிட்டு விறுவிறுவென வெளியேறினாள்.
“ஏங்க… ஒருநிமிஷம்… நில்லுங்க… நான் ஏன் இப்டி கேட்குறேன்னு தெரிஞ்சா நீங்களே பரிதாபப்படுவீங்க!!!” என்று கத்திக்கொண்டே அவள் பின்னே கோகுல் ஓடுவதை பார்த்த ஆதி, “திறமை இருந்தா ‘கமிட்’ ஆவான், இல்லன்னா ஆயுசுக்கும் சிங்கிள் தான்” என்று நகைக்க,
“பாவம் தேவா! கமிட் ஆகிட்டு போகட்டும்” என்றாள் தன்யா.
ஆதியும் தேவதூதன் போல, “ததாஸ்தூ” என்றான் புன்னகையுடன்.
அவர்கள் பேச்சை பாதியில் கலைக்கும்படி “சாஆஆர்…” என அழைத்தான் ஒருவன். கூடவே இன்னும் இருவர் நிற்க, ஆதிக்கு அவர்களை பார்த்த சில வினாடியில் அடையாளம் தெரிந்துப்போனது.
“ஹிஹி… நீங்க வந்ததே சந்தோஷம், சாப்பிட்டு கிளம்புங்க” என வேகமாய் அவன் வழியனுப்ப பார்க்க, “சார், என்னா சார், வேலை முடிஞ்சதும் கழட்டி விடுறீங்களே?” என்றான் அவன்.
“என்ன சொல்றாங்க?” என்றாள் தன்யா.
அதற்குள் அவர்களை பார்த்துவிட்ட தெய்வா, அங்கிருந்து நழுவப்பார்க்க, “மேடம்… மேடம்… நைசா எஸ் ஆவுறீங்க பாத்தீங்களா? நீங்க சொன்னா மாறி கரேக்கிட்டா அல்லாரையும் கடத்தி கட்டிப்போட்டு வச்சு பாத்துக்கிட்டோம்ல? நீ இப்டி குடுத்த வாக்கை டீல்ல வுடலாமா?” என்றான் நியாயமாய்.
குடும்பமே மேடையில் இருக்க, இவர்களின் பேச்சை கேட்டவர்கள், “என்ன சொல்றான் இவன்?” என அதிர்ந்துப்போக,
“சார், உங்க அல்லாரையும் கடத்தி ஒரு ராத்திரி முழுக்க பத்திரமா பார்த்துக்கிட்டா போனிகபூர்’ரான்ட சொல்லி, அடுத்த படத்துல ‘ஈரோ’ சான்ஸ் வாங்கி தரேன்னு இந்த மேடம் சத்தியம் பண்ணக்காண்டி தான் நாங்க மூணு பேரும் சேர்ந்து கஷ்டப்பட்டு உங்களை கடத்துனோம்” என்றிட,
எல்லோரும் கோரஸாய், “தெய்வாஆஆஆ…?” என கத்த, அவரோ, “டைரெக்டர் மட்டும் தான் நானு, ப்ரொடியூசர் எல்லாம் ஆதி தான்!!!!” என மகனையும் சேர்த்து போட்டுக்குடுக்க, தன்யாவிடம் பகிரங்கமாய் பல அடிகளை வாங்கிக்கட்டிக்கொண்டான் ஆதி.
தெய்வாவோ ஜெயதேவை காட்டி, “இவரை ரெண்டு அடி, அடிக்கணும்ன்னு ப்ளான்ல சொன்னேனா இல்லையா? செஞ்சியா நீ? ஒழுங்கா ஒரு வேலை செய்யல, உன்னை எப்டி ‘போனி கபூர்’கிட்ட ரெக்கமென்ட் பண்றது? ஒழுங்கா போய் சாப்பிட்டு கிளம்பு, அடுத்த சான்ஸ்ல பார்ப்போம்” என அவர்களை சரிக்கட்டி அனுப்பி வைக்க,
“அடிப்பாவி..?” என ஜெயதேவ் வாயை மூடிக்கொண்டு நிற்ப்பதை கண்டு அங்கிருந்தவர்களின் சிரிப்பலை ஓய சில நேரமெடுத்தது.
சிரித்து ஓய்ந்ததும், கிருஷ்ணா திவ்யாவிடம் இருந்து ஒரு நகைப்பெட்டியை வாங்கி ஆதியிடம் கொடுத்தான்.
அழகான இரு வைர மோதிரங்களில், ஆங்கிலத்தில் “D&D” என இதய அமைப்பில் எழுதியிருக்க, அதைக்கண்ட ஆதி, “தேவ் அண்ட் தன்யா… ரைட்?” என்றான் தன் சகோதரனிடம்.
கிருஷ்ணா, “யெஸ்! என்னால உங்க என்கேஜ்மென்ட் நடக்காம போச்சு! அதான் இப்போ உங்களுக்கு இந்த ரிங்’ கிப்ட் பண்றேன்! ரொமேன்டிக்கா ஒரு ப்ரோபோசல பண்ணி, ரிங் மாத்திக்கோங்க” என்றான்.
தன்யாவை பார்த்து கண்சிமிட்டிய ஆதி, “நம்ம விஷயத்துல எல்லாமே தலைகீழ் தான்… இல்ல?” என்றான் விஷமமாய்.
அழகாய் வெட்கப்பட்டவள், அதை கைமறைவில் மறைக்க, அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்தான் ஆதி.
அதைக்கண்டு, ஒருமித்த குரலாய், “ஓஓஓஓஓஓ” என இளசுகள் கோஷம் போட,
“ப்ரொபோஸ் பண்ணணும்ன்னாலே முட்டி போடணும்ன்னு ஒரு ட்ரென்ட்ட உருவாக்கிட்டானுங்க! நம்ம மட்டும் ஏன் அதை மீறிக்கிட்டு…” என ஆதி சமாளித்தாலும், மறுபடி இன்னும் சத்தமாய் வந்தது, “ஓஓஓஓ”…
ஆதி என்ன சொல்லப்போகிறான் என எதிர்ப்பார்த்து காத்திருந்தாள் தன்யா. ஏனெனில் முதலில் காதலை சொன்னது தன்யா தானே!
மண்டியிட்டு அமர்ந்திருந்த ஆதி, அவள் முன்னே மோதிரத்தை நீட்டி, “பழசு எல்லாத்தையும் முழுசா மறந்துடலாம் தனும்மா… இதுக்கு முன்னாடி நம்ம மீட் பண்ணதே இல்லை! புதுசா லவ் பண்ணுவோம்… என்ன?” என்றுவிட்டு,
“என் பேரு ஆதி! ஆதித்யதேவ்… ரொம்ப நல்ல பையன்… என்ன வாய் தான் கொஞ்சூண்டு ஜாஸ்தி! அப்பறம் வயசு கேட்காத… சொல்ல மாட்டேன்! ஹாஹா… தென், ஏதோ சொல்லிக்குற மாறி சுமாரா படிச்சுருக்கேன்… ஒரு டப்பா கம்பெனில உனக்கு சோறு போட்டு ட்ரெஸ் வாங்கி தர அளவுக்கு சம்பளம் வாங்கிட்டு இருக்கேன்” என்று சொல்ல, ஜெயதேவ், “டேய்ய்ய்…” என்றார் அதட்டல் போல சிரிப்புடன்.
கூடவே சிரித்த ஆதியும், “இப்போ சொல்லு, இந்த நல்ல பையனை, சொக்க தங்கத்தை கட்டிக்கிட்டு காலம் முழுக்க குப்பைக்கொட்ட சம்மதமா?” என்று கேட்க,
“ஓஓஓஹோஓஓஓ…” என கூட்டம் கோஷம் போட, தன்யா இத்தனை பேரின் மத்தியில் பேச, ஆதி போல தைரியமற்று கூச்சத்தில் நிற்க,
“சொல்லு தனுமா! ஓகே வா” என்றான் ஆதி.
அவன் முகத்தை பார்க்கக்கூட ஏனோ கூச்சம் தடைப்போட, முகத்தை ஒருகையால் மூடி நின்றிருந்தவளை பார்த்த ஆதி,
“ஓஹோ! ஒருவேளை இதுவும் பொண்ணுங்ககிட்ட சொன்னா தான் புரியுமோ? நீ ‘ம்ம்ம்’ன்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லு டார்லிங், பாம்பே’க்கு பறந்துப்போய் ஆபரேஷனை முடிச்சுட்டு வந்துடுறேன்” என வேண்டுமென்றே சீண்ட,
“ஐயய்யோ…” என கூட்டம் அலறியதென்றால்,
திகைத்துப்போன தன்யா, “யூ ராஸ்கல்…” என அவன் மீது பாய்ந்திருந்தாள் வேகத்துடன்.
மேலே வந்து விழுந்தவளை இறுக்கமாய் அணைத்து ஒரு சுற்று சுற்றி இறக்கியவன், “இப்போ கூச்சம் போச்சா?” என்று ரகசியமாய் அவள் காதோரம் கேட்க, அப்போது தான் சுற்றுப்புறம் பார்த்தவள், விட்டுப்போன கூச்சம் வந்து மொத்தமாய் ஒட்டிக்கொண்டதில், அவன் மீதே புதைந்துப்போனாள் காதலுடன்.
அவளை இறுக்கி அணைத்துக்கொண்டு நின்றவனுக்கு, இரு குடும்பத்தின் முகத்திலும் நிலைத்திருந்த புன்னகையே, அவர்களின் திருமண பரிசெனப்பட்டது.
கலாட்டாவான அவர்களின் காதல், கல்யாணத்தில் முடிந்த பின், இனியென்றும் இனிய கலாட்டாவாக காலமும் தொடரும்…