இரண்டு வருடம் திருவிழா நடக்காமல் மக்கள் அனைவரும் பயத்திலும் சோகத்திலும் இருந்தனர்…. இரண்டாம் வருட திருவிழா நடக்கும் நாள் முடிந்து இரண்டு மாதம் ஆகி இருந்தது….
நந்தினியின் செயல் நாளுக்கு நாள் மோசமாக ஆகிக்கொண்டே இருந்தது…. சுபாவை வார்த்தையால் குத்தி கிழித்து கொண்டு இருந்தாள்…. அது யாரும் இல்லாத நேரமாக பார்த்து தான் சுபாவை திட்டுவாள்…
சுபா அவள் பேசுவதை கேட்டு அழுகவோ கோவப்படவோ மாட்டாள்…. அமைதியாகவே நிற்பாள்… அதற்கும் திட்டிவிட்டு வீட்டை விட்டு நீ சென்றாக வேண்டும் என்று கூறிவிட்டு செல்வாள்…. அவளுக்கு இந்த பெரிய வீடு வேண்டும்… ஆனால் இந்த வீடு சுபாவின் மேல் உள்ளது…. இந்த வீடு மட்டும் இல்லை… அர்ஜுனன் பேரில் வந்த அனைத்து சொத்தும் அவன் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய அனைத்து சொத்தும் சுபாவின் பேரில் தான் உள்ளது… அதுவே நந்தினிக்கு மிகப்பெரிய வயித்தெரிச்சல்….
Advertisement
நந்தினி முதல் தடவை கிரிஜாவின் பேச்சை கேட்டு சுபாவை திட்டிய போதே சொத்தை பிரித்து குடுத்து விடலாம் என முடிவு செய்து விட்டான் அர்ஜுனன்….
அப்போதேஅனைவரையும்அழைத்து அனைத்தையும் காட்டி இருந்தான்… பாலாஇருப்பதைபார்த்துகொண்டார்.. வேறுஎதையும்வாங்கவும்இல்லை.. நஷ்டமும் அடையவில்லை… அர்ஜுனன்வந்தபின்தான்அரிசிமில்லாபத்தில்ஓடஏற்பாடுசெய்தான்… அவர்கள்ஊரின் அருகில் உள்ளமற்றஊரிலும்நான்குஐந்துஅரிசிமில்கட்டினான்… அதேபோல்வயல்களில்ஒரேமாதிரியானபயிர்கள்போடாமல் சீசனுக்குஏற்பபயிர்கள்போட்டுஅதை இந்தியா முழுவதும்விற்றுவெளிநாடுகளுக்குஏற்றுமதிசெய்யவும்ஏற்பாடுசெய்துஅதைநல்லமுறையில்செய்தான்…
தற்போதும் சுபாவை திட்டிக்கொண்டே இருப்பதை பார்த்து ஆரவ் அர்ஜுனனிடம் சொல்லிவிட்டான்… “ப்பா அத்தை அம்மாவை திட்டிட்டே இருக்காங்க எப்போ பார்த்தாலும்… நான் அம்மா கிட்ட அப்பாகிட்ட சொல்லலாம்னு சொன்னேன்… ஆனா அம்மா வேண்டாம்னு சொல்லிட்டாங்க…” என்று அவன் வயதிற்கு ஏற்ப கோவமாக கூறினான்
ஆரவ் வந்து சொல்லும் அளவிற்கு நந்தினியின் செயல் மோசமாவதை பார்த்து அர்ஜுனனுக்கு நந்தினி மேல் எரிச்சல் அதிகமாகியது… இருந்தும் பல்லை கடித்து கொண்டு ஆரவிடன் “தம்பி அதை அப்பா பாத்துக்குறேன்… இனிமே அத்த அம்மாவை திட்ட மாட்டாங்க” என்று உறுதியாக கூறினான்…
அதனால் நிரவியும் அர்ஜுனனிடம் அழுது கொண்டே கேட்டாள்…. அர்ஜுனன் அதை மறுக்க போனில் பேசிக் கொண்டு இருந்த சுபாவும் வேண்டாம் என கூறினாள்… சிறிது நேரம் முன்பு தான் வீடியோ காலில் வந்து இருந்தாள்…
நிரவி மேலும் அழுது கொண்டே இருக்க நந்தினியும் அவனிடம் பாப்பா கேட்குறா பிச்சி தா என்று கூறினாள்…சுபாவின் மறுப்பை மீறி அர்ஜுனன் பூ பறிக்க மிகவும் ஓரம் சென்றான்… இரவு தான் மழை வந்து இருந்ததால் அங்கு கொஞ்சம் வழுக்கியது… அவனும் எக்கி பூவை பறித்து விட்டான் ஆனால் பறித்தவுடன் கால் வழுக்கி அப்டியே கீழே விழுந்து இருந்தான்… அவன் விழுவதை வீடியோ கால் வழியாக பார்த்து கொண்டு இருந்த சுபா “மாமா” என்று கத்திக்கொண்டே மயங்கி இருந்தாள்….
அர்ஜுனன் ஒரு கையில் போன் இருந்தது அதை அவன் கீழே போடவே இல்லை…. அவளையே பார்த்து கொண்டே பாறைகளில் இடித்து கீழே ஓடி கொண்டு இருந்த ஆற்றில் விழுந்து இருந்தான் அர்ஜுனன்….
சுபாவின் சத்தத்தில் ஓடி வந்து இருந்த சசியும் மித்ராவும் அவள் மயங்கி விழுந்து இருப்பதை பார்த்து அவளுக்கு தண்ணீர் தெளித்து எழுப்பினர்… அவளும் சிறிது நேர முயற்சிக்கு பின் எழுந்தவள் “சசி நான் மாமாவை பாக்கணும் சசி… அவரு கீழ விழுந்துட்டாரு சசி.. நான் பாத்தேன்… அவரை பாக்கணும் … மேல இருந்து விழுந்துட்டாரு … அவருக்கு கூப்பிடு அவரை இப்பவே பாக்கணும் சசி….” என்று அழுதாவரே கூறினாள்….
சசி அவளை அமைதிப்படுத்தி அர்ஜுனனுக்கு அழைத்தான்… அவனால் தான் எடுக்க முடியாதே… நான்கு முறை அழைத்து பார்த்துவிட்டு வாணனுக்கு அழைத்தான்…
இடுக்கியில் அனைவரும் பிரமை பிடித்தது போல் நின்று இருந்தனர்… வாணன் திரும்புவதற்கும் அர்ஜுனன் “அம்மு” என்று கத்தி கொண்டே கீழே விழுவதற்கும் சரியாக இருந்தது…
அவனும் அர்ஜுன் என்று கத்தி கொண்டே அங்க செல்ல முற்படும் போது அங்கு இருந்தவர்கள் அதை தடுத்துவிட்டு போலீஸ்க்கு அழைத்து கூறினர்… அவர்களும் தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்கினர்…
வாணன் நந்தினியிடம் “அர்ஜுனன் ஏன் அங்க போனான்..” என்று அவளை பார்த்து கோவமாக கேட்டான்…
நந்தினிக்கு பயமாக இருந்தாலும் பயத்தை மறைத்து கொண்டு “மாமா நிரவி அந்த பூவை கேட்டு ரொம்ப ஆசையா கேட்டா… நான் வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன்… போன்ல உங்க தங்கச்சி பாப்பா கேட்குறால பறிச்சி தாங்கனு சொன்னா… அவனும் நான் சொல்ல சொல்ல கேட்காம வழுக்கி விழுந்துட்டான்… என் தம்பி மட்டும் எனக்கு கிடைக்கல உன் தங்கச்சியை உசுரோட விடவே மாட்டேன்” என்று நடந்ததை அப்டியே மாற்றி கூறி இருந்தாள்… அவளுக்கு அர்ஜுனமலையில் இருந்து விழுந்தது மிகுந்த கவலையாக இருந்தாலும் அவளுக்கு தான் செய்தது தெரிந்தால் வாணன் தன்னை கொன்றே விடுவான் என தெரிந்து மாற்றி கூறி இருந்தாள்….
சிவனேஸ் மாற்றி கூறிய தன் தாயை ஒரு அற்ப பார்வை பார்த்தான்.. அவனை வாணனனுடன் விடவே இல்லை… எங்கே அனைத்தும் கூறிவிடுவானா என்று… அவன் நந்தினியிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை… இனிமேல் அவள் கெஞ்சி கேட்டாலும் அவளிடம் ஒரு வார்த்தை பேச மாட்டான் அவன்… யாருக்காக அனைத்தும் செய்கிறாளோ அவனே அவளை வெறுத்து இருந்தான்…
அர்ஜுனன் போன் எடுக்கவில்லை என்றவுடன் சுபா மிகவும் அழுக ஆரம்பித்துவிட்டாள்… அவள் அழுதப் படியே வீடியோ காலில் பார்த்தது அனைத்தையும் பார்த்ததை அனைத்தும் கூறி இருந்தாள்… அதுமட்டும் இல்லாமல் அவள் அதை ரெகார்டில் போட்டு இருந்தாள்…. அதில் நிரவி அழுதது… அர்ஜுனன் அங்கு மறுத்தது.. சுபா அதை கேட்டு மறுத்தது… நிரவி மேலும் அழுதது… நந்தினி அர்ஜுனனை போய் பறிக்க சொல்வதில் என்று அனைத்தும் பதிவு ஆகி இருந்தது…
அதை பார்த்தவர்கள் அனைவர்க்கும் நந்தினி மேல் கோவம் கோவமாக வந்தது.. சசி வாணனுக்கு அடிக்க மித்ரா அழுது கொண்டே பிரியாவுக்கு அழைத்தாள்… கர்ணன் பிரியா இருவரும் குழந்தைகளை அழைத்து கொண்டு முகுந்தன் வீட்டிற்கு தான் சென்றனர்…
பிரியாவிற்கு அழைத்து அழுதுக்கொண்டே அனைத்தும் கூற அனைவரும் பதறி அடித்து அர்ஜுனன் வீட்டிற்கு வந்து இருந்தனர்… முகுந்தனை பார்த்து “அண்ணா அவரை போனை எடுக்க சொல்லுங்க அண்ணா… அவரை பாக்கணும்.. வாங்க போலாம்..” என்று அவனை பிடித்து இழுத்தாள்…
“பாப்பா இங்க பாரு ஒன்னும் ஆகி இருக்காது அவனுக்கு… எதோ சிக்னல் கட் ஆகி இருக்கும்… திரும்பியும் பண்ணலாம்…. நில்லு அண்ணாவுக்கு பண்றேன்” என்று அவளை தன் தோளில் சாய்த்து கொண்டு வாணனுக்கு அழைத்தான்… இரண்டு மூன்று அழைப்பிற்கு பிறகு தான் எடுத்தான்…
“அண்ணா அர்ஜுன் ஏன் போன் எடுக்கவே இல்லை… அவன்கிட்ட போன் குடுங்க.. பாப்பா வேற ஒரே அழுகை… அவன் எங்க முதல்ல” என்று அவசர குரலில் கேட்டான்…
வாணன் தயங்கி கொண்டே நடந்ததை அனைத்தும் கூறி இருந்தான்… தேடிக்கொண்டு உள்ளனர் என்று கூறி இருந்தான்… முகுந்தன் அழைத்தவுடனே சுபா அவன் போனை வாங்கி ஸ்பீக்கரில் போட்டு இருந்தாள் சுபா…. மீண்டும் அதை கேட்டு மயக்கம் அடைந்து இருந்தாள் சுபா…