அத்தியாயம் 11
காரிருள் சூழ கருமை நிறம் கொண்ட வானத்தில் நிலவுமகள் ஒற்றையாய் ஜொலித்துக்கொண்டிருக்க.. அதனையே விழியகலாது பார்த்துக் கொண்டிருந்தாள்.. சிற்பிகா. அப்பொழுது வேகமாய் வீசிச்சென்ற குளிர்க்காற்று அவளின் தேகத்தை சிலிர்க்க செய்ய… உடலைக் குறுக்கி.. அந்த ரம்மியமான பொழுதை ஆழ்ந்து அனுபவித்தாள்..
திருமணம் முடிந்த அன்றே.. அனைவரும் பெங்களூர் வந்துவிட்டனர்.. லிங்கேஷ்வரன் குடும்பத்தினரும் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் ரிஷப்ஷனிற்காக அவர்களுடனே வந்துவிட்டார்கள்..
வீட்டிற்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே அபய் வெளியே சென்றுவிட.. அவனை தடுக்க இயலாது நின்றுக்கொண்டிருந்தனர்.. சுஜாதா தம்பதியினர்.. பிறகு சிற்பிகாவை கீழே உள்ள அறையில் ஓய்வெடுக்க சொல்ல.. அவளுக்கு துணையாய் ரூபாலியும் சென்றாள்..
நீரஜாவும்… ராஜாங்கத்தின் குடும்பத்தினரும்.. அபயின் மாளிகையைக் கண்டு வயிறு எறிந்தனர்… அவர்கள் என்னதான் பங்களா வாசிகள் என்றாலும்.. அரண்மனை போன்ற இந்த நவீன மாளிகையை எங்கும் அவர்கள் கண்டதில்லை.. அதனாலேயே இந்த வயிற்றெரிச்சல்..
லிங்கேஷ்வரன்.. வாயெல்லாம் பல்லாக அம்மாளிகையை சுற்றி வர.. அபிராமி வேண்டா வெறுப்பாய் அமர்ந்திருந்தார்.. அவருக்கு இத்திருமணத்தில் முதலிலிருந்தே விருப்பமில்லை…
அபய்சிம்ஹாவின் குணம் சரியில்லை.. பெண்கள் சகவாசம் அதிகம்.. சிற்பிகா வாழ்க்கை வீணாகிவிடும் என எவ்வளவோ கூறிப்பார்த்தார்.. ஆனால் இருவரும் அவரின் பேச்சைக் கண்டுகொள்ளவில்லை.. அதனால் அனைத்திலும் முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு இருந்தார்..
இரவு நேரம் அவளை சயன அறைக்குள் அனுப்புவதற்கான ஆயத்தங்கள் நடந்துக்கொண்டிருக்க.. அதனை பயம் சுமந்த விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.. சிற்பிகா.
அலை அலையாய் புரளும் கேசத்தை ஒரு பக்க தோளில் வழியவிட்டு.. அவளின் நிறத்தை தூக்கிகாட்டும் மெலிதான நாவற்பழ நிற புடவையில்.. எளிமையிலும் விழிகளுக்கு இனிமையாய்.. அமைதியான நீரோடை போல் இருந்த தன் தோழியையே விழி அகலாது பார்த்துக் கொண்டிருந்தாள்.. ரூபாலி.. ஆனால் அவ்வழகிற்கு உரியவளோ எதையும் உணராது.. தன் பயத்தினுள் மூழ்கியிருந்தாள்..
தோழியின் பயத்தை அவள் முகத்திலிருந்தே அறிந்துக்கொண்ட ரூபாலி.. அவள் தோளை ஆதரவாய் பிடித்து.. ப்ச் என்னாச்சு சிற்பி.. ஏன் ரொம்ப டென்க்ஷனா இருக்க..
” ப்ச்.. அதெல்லாம் ஒண்ணுமில்ல கொஞ்சமே கொஞ்சம் பயமாயிருக்கு.. ”
” எது.. இது கொஞ்சமே கொஞ்சம் பயமா.. ” என வியர்வையில் குளித்த முகத்திலிருந்து சில துளிகளை எடுத்து காண்பித்து கேலியாக கேட்டாள்..
” ஹ்ம்ம் நீ என்ன தான் பயந்தாலும் நடக்கவேண்டியது தான் நடக்கும்.. ஒருவேளை உன்னவர் ஏதாவது சொன்னாலும் தான்.. நீ அத காதுல வாங்கிக்க மாட்டியே ” என அவள் கேலியாக கூறினாலும்… அதில் சிறிது ஆதங்கமும் கோபமும் நிறைந்திருந்தது..
தோழியின் குற்றச்சாட்டு புரிந்தாலும் அதற்கு பதில் சொல்ல மனமின்றி.. அவள் தலைகுனிய.. ரூபாலி அவளின் முகத்தை நிமிர்த்தினாள்..
” உன்னோட மனத்திடம் என்னங்கிறது எனக்கு தெரியும் சிற்பி.. காதல்ங்கிற ஒன்னும் மட்டும் இப்போ உன் மனசுல இல்லைன்னா.. இந்நேரம் இந்த கல்யாணம் நடந்துருக்காது.. உன்னோட காதல் உன் சுயத்தை தொலைக்காம பார்த்துக்கோ.. என ரூபாலி கூறிக்கொண்டிருக்கும் போதே.. அங்கு சுஜாதாவும் அபிராமியும் வந்தனர்..
குத்துவிளக்கின் சுடர் போல் மிளிர்ந்த தன் மருமகளின் அழகைக் கண்டு சுஜாதா மெய்மறந்து போனார்.. அதோடு தன் விழிகளில் இருந்த கண்மையை எடுத்து அவளின் செவியோரம் வைத்து திருஷ்டி கழிக்க.. பெண்ணவள் முகம் வெட்கத்தில் சிவந்தது..
” சரிம்மா.. நீ மாடிக்கு போ.. சிக்ஸ்த் ப்ஃளோர்ல தான் உங்க பெட்ரூம் இருக்கு.. என அவர் கூறியதும் சிற்பிகா பயத்தில் தலைகுனிய.. அதை வெட்கம் என தப்பர்த்தம் கொண்ட.. சுஜா ” நீங்க போயி அவள விட்டுட்டு வாங்க.. என அபிராமியிடம் கூறிவிட்டு சென்றார்..
ரூபாலி சூழ்நிலை புரிந்து.. சிற்பிகாவின் உள்ளங்கையை அழுத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்..
அபிராமி ” ஹ்ம்ம் வீடு அரண்மனை மாதிரி இருக்கு.. பாப்பா. நம்ம சொந்தக்காரன் எல்லாம் உனக்கு கிடைச்ச வாழ்க்கையை பார்த்து பொறாமை படுறாங்க.. ஆனா இதுக்குள்ள அழுக்கும் சாக்கடையும் யார்க்கண்ணுக்கும் தெரிய மாட்டேங்குது.. காலைல போன உன் புருஷன் இன்னும் வரல.. இந்நேரம் எந்த பொண்ணுக்கூட இருக்காரோ.. இந்த வாழ்க்கை உனக்கு தேவையா..
பணம் இருக்கும்ங்கிறதுக்காக.. கெட்ட பொம்பளைங்க சகவாசம் உள்ளவனுக்கு உன் அக்கா பொண்ண வித்துட்டியான்னு.. ஒருத்தி கேட்குறா.. எனக்கு அப்படியே செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு… இப்படிப்பட்ட பேரு நம்ம குடும்பத்துக்கு தேவையா என அபிராமி பேசிக்கொண்டே செல்ல.. சட்டென்று நின்ற சிற்பிகா.. அபிராமியின் முகத்தை கூர்மையாக பார்த்து.. ஓர் கேள்வி மட்டும் கேட்க.. அபிராமி ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போல் அதிர்ந்து நின்றார்.. அவர் விழி இரண்டும் சிற்பிகாவையே பயத்தினிலும் பதட்டத்தினிலும் வெறித்து நோக்க.. அதனை சட்டை செய்யாது.. தன்னறைக்குள் நுழைந்து கதவை சாற்றினாள்…
அதில் தன்னிலைக்கு வந்த அபிராமி.. ஓட்டமும் நடையுமாய் அங்கிருந்து நகர்ந்தார்.. அபிராமியை இப்படி உறையச்செய்யும் அளவிற்க்கான எந்த கேள்வியை சிற்பிகா கேட்டிருப்பாள்..?
அபயசிம்ஹாவின் சயனஅறையே.. மினி பங்களா போல் காட்சியளித்தது.. எங்கும் விலையுயர்ந்த பொருட்களே.. ஆனால் இதனை ரசிக்கும் நிலையில் தான் சிற்பிகா இல்லை.. அவள் எண்ணம் முழுவதும் அபிராமி வீசிச்சென்ற சொல்களிலும் கடந்த காலத்தில் அவள் அனுபவித்த வேதனைகளிலும் தான் உழன்றது..
தான் இருக்கும் நிலை மறந்து.. இன்றைய நாளின் முக்கியத்துவத்தையும் மறந்து.. தன்னையும் மறந்து அங்கும் மிங்குமாய் நடந்துக்கொண்டிருந்தாள்.. சிற்பிகா. அப்பொழுதும் சமநிலையின்றி இருந்தவளின் விழிகளுக்கு பால்கனி பட.. அங்கு விரைந்தாள்.. அவள் மனதின் வெம்மையெல்லாம் அந்த நிலவின் குளுமையில் சிறிது மட்டுப்பட்டது…
மனதின் தெளிவு அவள் வதனத்திலும் பிரதிபலித்தது.. அப்பொழுது பெண்களுக்கே உரிய எச்சரிக்கை உணர்வுடன்.. யாரோ வெகு நேரமாய் அவளை கவனிப்பது போல் அவள் உள்ளுணர்வு கூற.. உள்ளுக்குள் எழுந்த படபடப்பை அடக்கிக் கொண்டு.. சுற்றிலும் பார்வையை ஓட்டியவளின் விழிகள்.. சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ராஜனைப்போல் அமர்ந்திருந்த அபயசிம்ஹா சக்சேனாவைக் கண்டு நிலைகுத்தி நின்றது…
************************************************
அபய் & அதி.. இருவரும் ப்ளூ ரோஸ் ஹோட்டலில்.. அபய்க்கான தனிப்பட்ட அறையில்.. மது அருந்திக் கொண்டிருந்தனர்.. அதியின் கரத்தில் வைட் ஒயினும்.. அபய் கரத்தில் டக்கீலாவும் இடம்பெற்றிருந்தது..
அபய்… சிற்பிகாவோட பாஸ்ட் பத்தி நாம கொஞ்சம் தெரிஞ்சுக்கணும்.. எனக்கென்னமோ அவளுக்கு உன்னை ஏற்கனவே தெரியும்ங்கிற மாதிரி தோணுது.. அன்னைக்கு நீ மேரேஜ் ப்ரோபோசல் கொடுத்தப்போ கூட அவ பேஸ்ல வேற என்னமோ தெரிஞ்சுச்சு.. பட் என்னன்னு சரியா தெரியல…
ம்ம்ம்ம்.. நானும் அத கவனிச்சுருக்கேன்.. பட் டீப்பா எதுவும் திங்க் பண்ண தோணலை.. சரி விடு இன்னும் கொஞ்ச நாள்ல அவளையே எல்லாத்தையும் சொல்ல வச்சுடலாம்.. என அலட்சியமாக தோளை குலுக்க.. அதியும் அமைதியாகி விட்டாள்.. பிறகு சிறிது நேரத்திலேயே அபயும் அதியும் மாளிகைக்கு வந்துவிட்டனர்.. அப்பொழுது ஹாலில் யாரும் இல்லாததால் அவர்களின் வருகை மற்றவர்களுக்கு தெரியவில்லை…
அபயின் அறையே பல அடுக்குகளை கொண்டது.. முதலில் ஹால் அடுத்து மாஸ்டர் பெட்ரும் அதனையொட்டி பெரிய அளவிலான பால்கனி.. அடுத்து குளியலறை.. அதற்கடுத்து சுற்றிலும் கண்ணாடிகள் பதிக்கப்பட்ட ஒப்பனை மற்றும் உடைமாற்றும் அறை… அபய் பெட்ரூமில் நுழைந்த நொடி அவன் விழிகளுக்கு பட்டது.. மெத்தையில் வீற்றிருந்த பூ அலங்காரம் தான்.. பல வண்ண ரோஜா மலர்கள் மெத்தையில் இருக்க.. அதனைச் சுற்றியிருந்த மெல்லிய துணியின் உள்ளேயும் வெளியேயும் மல்லிகை சரசரமாக தொங்கிக் கொண்டிருந்தது..
இவற்றைக் கண்டு அபயின் புருவம் உயர்ந்தாலும்.. ஓர் இகழ்ச்சியான முறுவல் கொண்டு அதனையடக்கி.. குளியலறைக்குள் நுழைந்தான்.. அப்பொழுது தான் சிற்பிகா அறையினுள் நுழைந்தாள்.. அவள் தன்நிலை மறந்து சுற்றிக்கொண்டிருக்கும் போது வெளியே வந்த அபய்.. சிற்பிகாவின் நிதானமற்ற செயலைக் கண்டான்.. பிறகு அவள் பால்கனிக்கு செல்ல.. பின்னோடு அபயும் சென்றான்..
அவள் சுற்றம் மறந்து நிலவை வெறிக்க.. அபய் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து சிற்பிகாவையே தன் பார்வையால் அளவிட்டுக் கொண்டிருந்தான்..
அவள் முகத்தில் வந்து போன ஒவ்வொரு உணர்வையும் அவதானித்தான்.. இடையிடையே தென்றல் மூலம் விலகும் அவளின் இடுப்பு மடிப்பையும் அளவிட தவறவில்லை… ஒருவழியாக உள்ளுணர்வின் உந்தலில் அவள் பார்வை அபயசிம்ஹாவின் மேல் பதிந்து திகைத்து நிற்கும்போதே.. தன்னிருக்கையிலிருந்து எழுந்தவன்.. அவளை நோக்கி நடக்க.. சிற்பிகாவின் பாதம் அவளையறியாது பின்னோக்கி செல்ல முயன்றது.. ஆனால் விழியோ அபயின் பார்வையில் கட்டுண்டு.. அங்கே நில் என மனதிற்கு கட்டளையிட்டது…
மெதுவாக அவளை நெருங்கிய அபய்.. ஒரு கரத்தால் அவளின் இடையை வளைத்து தன்னுடன் இருக்கியவன்.. நான் இருக்கிறது கூட தெரியாம அப்படி என்ன யோசனை என அவளின் கழுத்தில் இருந்த மச்சத்தில் மெல்ல முத்தமிட்டவாறு கேட்க.. பெண்ணவள் பதில் சொல்லும் வழியின்றி விழி மூடினாள்.. அதில் அவன் கரம் மேலும் இடையினில் அழுத்தம் கொடுக்க.. உதடு கடித்து தன்னை நிலைப்படுத்த முயற்சிக்க.. அவளை மேலும் சோதிக்கும் வண்ணம்.. அவளின் தளிர் விரல்களை அழுத்திப்பிடிக்க.. அவை ஜில்லிட்டிருந்தது..
என்ன இது.. உன் கை இப்படி ஜில்லுன்னு இருக்கு அவள் உள்ளங்கையை தன் உள்ளங்கையில் வைத்து அழுத்திப்பிடிக்க.. அவள் ஹார்மோன் எல்லாம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது..
என்ன பாரு என அவளின் சிவந்த செவிமடலில் கூறியவன்.. அழுத்தி முத்தமிட.. சிற்பிகாவின் பொன்மேனி நடுங்கியது.. அவனின் அழுத்தம் மிகுந்த சொற்கள்.. பார்வையை உயர்த்த சொன்னாலும்.. நாணம் தடுக்க.. இதழ் கடித்து தானாகவே அவன் நெஞ்சத்தில் முகம் புதைக்க.. அதற்காகவே காத்திருந்தார் போல் பூ போல் அவளை கையிலேந்தியவன்.. புயல் போல் மெத்தையில் போட்டான்.. அதில் அவளது மேனி ஓர் முறை தூக்கிப்போட.. பஞ்சுபொதியில் இருந்த மலர்கள் யாவும்.. அவள் மேல் படிந்தது..
விழுந்த வேகத்தில் புடவை நழுவி.. அவளின் எழில் கோலத்தை காண்பித்து.. சிவப்பு, மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு, பண்ணீர் ரோஜா என பல வண்ண மலர்களால் அவள் பொன்மேனி அலங்கரிக்கப்பட்டிருக்க.. ஆடவனின் நாடி நரம்பெல்லாம் கொதிக்க ஆரம்பித்தது..
விழிமூடி படுத்திருந்தவள்.. சற்றுநேரம் எந்த அசைவும் இல்லாததால்.. மலர்விழிகளை விரித்து தன்னவனை காண.. அவனோ சிற்பிகாவின் விழியை விடுத்து அவளின் முன்னழகு எழிலில் பார்வையை பதித்தான்..
அதில் வெட்கம் மேலோங்க.. அவள் வேகமாய் குப்புற படுக்கும் தருணம் அவள் மேல் கவிழ்ந்தவன்.. மிச்சமிருந்த ஆடையை கலைக்க ஆரம்பித்தான்… அவள் தடுக்க இவன் அவளை முடுக்க.. என தன் பாரத்தை அவள் மேல் ஏற்றினான்..
தன்னை பார்த்த நொடியிலிருந்து இம்சை செய்த.. அவளின் இதழை தனக்குள் அதக்கி.. அவளின் இதழ் தேனை உறிஞ்சியெடுத்து.. அவள் நாவோடு தன் நாவை சண்டையிட வைத்தான்…
ஒற்றை முத்தத்திலே பெண்ணவள் பித்தம் கொண்டு மயக்கநிலைக்கு சென்றாள்.. அபயுமே சிற்பிகாவின் இதழ் மென்மையில் மயங்கித்தான் போனான்.. அவனறிந்த பெண்களெல்லாம் காமபாடத்தில் கரை தேர்ந்தவர்கள்.. ஆனால் இவளோ அதன் அரிச்சுவடி கூட தெரியாத.. புத்தம் புது மலர்…
இவளிடம் தெரிந்த நாணம்.. அதிலிருந்த பெண்மை.. அதனோட மென்மை என அவன் மேலும் மேலும் அவளுள் மூழ்கினான்.. சிற்பிகா இதுவரை அறியாத புதுஉலகத்தினுள் அவளை புகுத்தி… தன்னையும் அதில் நுழைத்துக் கொண்டான்.. அபய். அவள் வலியில் துடிக்கும் வேளை இதழை பொருத்தி சமாதானம் செய்து.. சுகத்தில் துடிக்கும் போது… அவளை தன் கைப்பாவையாக்கிக் கொண்டான்.. அபயசிம்ஹா சக்சேனா..
இவர்கள் இங்கு கூடிக்களித்து இன்புறும் வேளை.. மற்றொரு அறையில் தன் இத்தனை வருட திட்டமெல்லாம் பாழாகியது எப்படி என அறிந்துக்கொண்ட அபிராமி கோபத்திலும்… சிறு பெண்ணிடம் தோற்ற அவமானத்திலும் கொதித்துக் கொண்டிருந்தார்..