அத்தியாயம் 20
மறக்க முடியாத
அழகான நிலாக்காலம் தான்
நீ என்னுடன் கழித்த
ஒவ்வொரு நொடியும்!!!
கண்ணன் திருமணத்துக்கு சரி என்று சொன்னதும் ஆக வேண்டிய ஏற்பாடுகள் அனைத்தும் தடாபுடாலாக நடந்தது.
இந்த விஷயத்தை சகுந்தலா மூலம் கேள்வி பட்ட தேன்மொழி “நானும் பொண்ணை பாக்கணும்”, என்று சொல்லி ஆர்ப்பாட்டம் பண்ண மற்றொரு நாள் தேன்மொழி, கதிர், தினேஷ், கீதா, கண்ணன், செந்தில் என மொத்த குடும்பமே பெண் வீட்டுக்கு சென்றது.
ராதாவைப் பார்த்தவுடன் அனைவருக்கும் பிடித்து போனது. அவள் முகத்தில் இருந்த மென்மையே அவளுடைய குணத்தை பறைசாற்றியது.
யாருக்கும் தெரியாது என்று எண்ணி கண்ணனும் ராதாவும் திருட்டுதனமாக பார்த்துக் கொண்டது தனிக் கதை. தேன்மொழியும் கீதாவும் அவளுடன் கதை பேச ராதாவும் தோழமையோடு அவர்களுடன் பேசினாள்.
அனைவரும் அங்கிருந்து சென்றதும் “என்னங்க, இந்த குடும்பம் நமக்கு செட் ஆகுமா? மாப்பிள்ளை கூட பிறந்தது ஒரே ஒரு தம்பின்னு நினைச்சு நாம முடிவு பண்ணுனோம். ஆனா சித்தப்பா பொண்ணுன்னு ரெண்டு பேர் வந்து நிக்காங்க. அவங்களுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு தான். ஆனா இவங்களுக்கு எல்லாம் என் பொண்ணு அண்ணியா இருக்க முடியாதே?”, என்று கேட்டாள் ராதாவின் அன்னை மரகதம்.
“நல்லா கேட்டக்கா. பிக்கல் பிடுங்கல் இல்லாத வீடுன்னு சொன்ன. இப்ப இப்படி கூட்டமா இருக்கு”, என்று தன் பங்குக்கு ஏற்றி விட்டாள் மரகதத்தின் தங்கை கல்யாணி.
“அக்காவும் தங்கச்சியும் கொஞ்சம் வாயை மூடுங்க. உங்களுக்கு எவ்வளவோ சொல்லிட்டேன். பையன் தங்கமான குணம், நல்ல குடும்பம்னு. நிறைய சொந்தக்காரங்க இருந்தா நல்லது தானே? என் மகள் பிறந்த வீட்ல தான் ஒத்தை பிள்ளையா இருக்கா. போற வீட்லயாவது கூட்டு குடும்பமா இருந்தா நல்லது தானே?”, என்று கேட்டார் ராதாவின் தந்தை சண்முகம்.
“சரியா சொன்னீங்கப்பா. தேன்மொழியும் கீதாவும் என்கிட்ட எவ்வளவு நல்ல பேசுராங்க? ஆனா அம்மா பாருங்க, எல்லாரையும் குறை சொல்றாங்க”, என்றாள் ராதா.
“இனி தேவை இல்லாம ஏதாவது குழப்பம் பண்ணுனா தொலைச்சிறுவேன் தொலைச்சி”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார் சண்முகம்.
அக்காவும் தங்கையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ராதாவோ திருமணக் கனவு காண அங்கிருந்து சென்று விட்டாள்.
“அத்தை, நம்ம சரோஜாக்கா பொண்ணு பெரிய மனுஷியாகிட்டாளாம்”, என்று அன்னத்திடம் சொல்லிக் கொண்டிருந்தாள் வேணி.
டிவி பார்த்துக் கொண்டிருந்த செல்வா அவர்கள் பேச்சைக் கேட்டு அங்கே கவனத்தை செலுத்தினான்.
“அப்படியா வேணி? பாவம் இன்னும் அந்த பொண்ணு வயசுக்கு வரலையேன்னு எல்லாரும் குத்தி குத்தி காமிச்சாங்க”
“ஆமாங்க அத்தை. சரி தண்ணி ஊத்தினா நாம போயிட்டு வந்துரலாம்”
“நான் இன்னும் அங்க வந்து என்ன செய்ய போறேன் மா? நீ தேனுவையும் கீதாவையும் கூட்டிட்டு போ”
“சரிங்க அத்தை”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள் வேணி.
“பாட்டி”, என்று அழைத்தான் செல்வா.
“என்ன டா குஞ்சு, மரியாதையா பாட்டினு சொல்ற? என்னால ஏதாவது காரியம் ஆகணுமா?”
“உன் மரியாதையை நீயே கெடுத்துருக்குற கிழவி. சரி நான் ஒண்ணு உன்கிட்ட கேக்கணும்”
“எதை பத்தி டா?”
“வயசுக்கு வரதைப் பத்தி தான்”
“அடி செருப்பால…எடு பட்ட நாயே, யார் கிட்ட என்ன பேசுற?”
[the_ad id=”6605″]
“ஐயோ, நான் சொல்றதைக் கேளு. உடனே பொங்காத. எனக்கு அதெல்லாம் என்னன்னு தெரியும்? ஆனா சின்ன டவுட் அந்த சரோஜா அத்தை பொண்ணுக்கு நம்ம தேன்மொழி வயசு இருக்குமே. இப்ப போலவா பெரியமனுஷி ஆவாங்க?”
“ஆமா டா, அவங்க அவங்க உடம்பை பொறுத்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. நீ தேவை இல்லாம யோசிக்காத”
செல்வாவுக்கு அரசல் புரசலாக இதைப் பற்றி தெரியும் தான். ஏனென்றால் அவன் பள்ளி படிக்கும் போது அவனுடன் படிக்கும் பெண்கள் லீவ் போட அந்த காரணம் அவனுக்கும் தெரிய வரும். ஆனால் பல வருஷங்கள் கழித்து இப்படி ஆகும் என்று அவனுக்கு தெரியாது. சௌமி விசயத்திலும் அவனுக்கு இதே குழப்பம் தான். காலேஜ் படிக்கிற பொண்ணு எப்படி பெரிய மனுஷி ஆக முடியும் என்று தான் அவனுக்கு குழப்பமாக இருந்தது.
“அப்ப இந்த சௌமி இப்ப தான் பெரிய பொண்ணா ஆகிருக்காளா?”, என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டான்.
அடுத்த நாள் காலேஜ்க்கு சென்றவன் அவள் வர மாட்டாள் என்று தெரிந்தும் அவள் அமர்ந்திருக்கும் இடத்தை திரும்பி பார்த்தான். அங்கு வெறுமையாக இருக்கவே மொத்த கிளாசுமே அவனுக்கு அழகை இழந்தது போல இருந்தது.
ஆனால் சிறிது நேரத்தில் மொத்த காலேஜும் ஸ்ட்ரைக்கில் குதித்திருந்தனர். கேர்ள்ஸ் ஹாஸ்டலில் எவனோ ஒரு திருடன் பாத்ரூமில் எட்டி பார்திருக்க அடுத்த நிமிஷம் ஹாஸ்டலில் சேஃப்டி இல்லை என்று மாணவிகள் ஸ்ட்ரைக்கில் இறங்கினர். அதன் பின் சாப்பாடு சரி இல்லை. எந்த வசதியும் இல்லை. என்று ஒவ்வொரு கம்ப்ளைண்டாக மாறி பாய்ஸ் ஹாஸ்டலும் ஸ்ட்ரைக்கில் இறங்கியது.
அவர்களுக்கு சப்போர்ட்டாக மற்ற மாணவ மாணவிகளும் இறங்க மொத்த காலேஜும் ஸ்ட்ரைக்கில் அமர்ந்திருந்தார்கள்.
காலேஜ் கரஸ்பாண்டண்ட் அவர்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் மெத்தனமாக இருக்க, சில மாணவர்கள் வன்முறையை தூண்ட அங்கு போலீஸ் வந்து அவர்களை கலைத்தது.
இது தொடரும் என்று மாணவர் தரப்பில் இருந்து அறிவிப்பு வந்தது. காலேஜ் கால வரையறையின்றி மூடப் படும் என்று அறிவித்தார்கள்.
செல்வா வீட்டில் இருக்க மொத்த குடும்பமும் அரட்டையிலும் சிரிப்பிலும் நேரத்தை கடத்தினார்கள்.
மதி அப்போது மில்லை விலை பேசி முடிக்க யார் பெயரில் மில் ஆரம்பிக்க என்று பேச்சு வந்தது. எல்லாம் பாட்டி பெயரை வைப்போம் என்று சொல்ல அன்னமோ “என் மருமக பெயரில் வைங்க”, என்று சொல்லி விட்டாள்.
அதனால் வேணி பெயரில் மில் ஆரம்பிக்க பட்டு சுத்தம் செய்து வெள்ளை அடிக்கும் பணியை அண்ணன் தம்பி மூவரும் செய்தார்கள்.
கீதா வழக்கம் போல் காலேஜ் சென்று கொண்டிருந்தாள். அவளை விட போவது கூட்டி வருவது பின் இடைப்பட்ட நேரத்தில் மில்லில் வேலை என்று பிஸியாக சுற்றிக் கொண்டிருந்தான் தினேஷ்.
பைக்கில் போகும் போது மட்டும் இருவருக்கும் இடையே சின்ன சின்ன சீண்டல்கள் தொடர்ந்து அவர்களை சந்தோஷப் படுத்தியது.
கதிரோ தேன்மொழியை விட்டு இருக்க முடியாமல் எப்போது இரவு வரும் என்று ஒவ்வொரு நாளும் காத்துக் கிடந்தான். அறைக்குள் அவள் வந்துவிட்டால் அவளை ஒரு நிமிடம் கூட பிரியாமல் இருப்பான்.
செல்வா, தனக்கு கிடைத்திருக்கும் லீவை சந்தோஷமாக அனுபவித்தாலும் சில நேரம் சௌமியைப் பற்றிய நினைவில் தத்தளிப்பான்.
ஒரு வழியாக இரண்டு வாரம் கழித்து காலேஜ் திறக்க பட அவளைக் காணலாம் என்று சந்தோஷமாக சென்றான். அவன் செல்லும் போது அவள் வந்திருக்க வில்லை. ஒவ்வொரு நொடியும் அவள் வரவுக்காக காத்திருந்தான்.
அவனை வெகு நேரம் காக்க விட்டு கிளாசுக்குள் வந்தாள் சௌமி. அவனுடைய கண்கள் அவளையே வட்டமிட்டது. எப்போதும் எதிரே யார் வருகிறார்கள் என்று கூட கவனியாமல் ஒரு வித திமிருடன் தான் வருவாள் சௌமி.
இன்றோ அவள் கண்கள் நாலா பக்கம் சுழன்றது. அவள் முகத்தில் சிறு கூச்சமும், ஒரு வித தயக்கமும் தெரிந்தது. இந்த சௌமி அவனுக்கு புதியவளாக தெரிந்தாள்.
“இத்தனை நாள் கிளாஸ் வரலை, எல்லாரும் என்ன சொல்லுவாங்களோ?”, என்று கலக்கத்துடன் உள்ளே வந்த சௌமிக்கு அப்போது தான் செல்வா நினைவில் வந்தான்.
அடுத்த நொடி அவனை பார்த்தாள். அவனோ அவளைத் தான் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்த்ததும் வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டாள். அந்த வெட்கத்தை இமைக்க மறந்து பார்த்தான்.
அதன் பின் அடிக்கடி அவன் பார்வை அவள் பக்கம் சென்றது. கேட்கும் அனைவரிடமும் டைபாய்ட் காச்சல் என்று சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தாள். செல்வா அடிக்கடி அவளைப் பார்ப்பதை அவளும் உணர்ந்து தான் இருந்தாள்.
பழைய சௌமியாக இருந்திருந்தால் “என்ன லூக் இங்க?”, என்று கேட்டிருப்பாள். ஆனால் இப்போதோ “இப்படி என்னை பாக்காதே”, என்று சொல்லி அவன் கண்களை மூட வேண்டும் போல தோன்றியது அவளுக்கு. இந்த சௌமி அவனுக்கும் புது மாதிரியாக தெரிந்தாள்.
[the_ad id=”6605″]
நீலவேணியை அழைத்த சௌமி “என்னை மன்னிச்சிறு வேணி. உன்னை ரொம்ப கஷ்ட படுத்திட்டேன்”, என்று மன்னிப்பை வேண்டினாள்.
“எனக்கு உன் மேல எந்த வருத்தமும் இல்லை சௌமி”, என்று புன்னகைத்தாள் நீலவேணி. அதில் சௌமி முகமும் மலர்ந்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த செல்வா சந்தோஷமாக உணர்ந்தான்.
அப்போது அவர்கள் கிளாசுக்கு சரவணன் என்ற புது புரோபஸர் வந்தான். அனைவரும் அவனை யார் என்று பார்க்க “நான் சரவணன். இன்னைக்கு தான் உங்க டிபார்ட்மெண்ட்ல ஜாயின் பண்ணிருக்கேன்”, என்று அவர்கள் குழப்பத்தை தீர்த்து வைத்தான்.
வயது இருபத்தி எட்டு என்று அவன் சொல்லும் போது சில பெண்கள் அவனை ரசிக்க, திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்று சொன்னதும் அவனை ரசித்த பெண்களின் முகம் கூம்பி போனது. ஆனாலும் சைட் அடிச்சா தப்பில்லை என்று சில பெண்கள் நினைத்துக் கொண்டார்கள்.
“முதல் நாளே கிளாஸ் வேண்டாம் பிரண்ட்ஸ். ஏதாவது விளையாடலாம்”, என்று சரவணன் சொன்னதும் அனைவருக்குமே அவனை பிடித்து விட்டது. ஆள் ஆளுக்கு ஒரு விளையாட்டை சொன்னார்கள். “பாட்டுக்கு பாட்டு, டெலெண்ட்ஸ் வெளிய காட்ட சொல்லலாம். ஜி கே டெஸ்ட் வைக்கலாம் என்று புது புது ஐடியாகவாக சொன்னார்கள்.
“நீங்க பாட்டு பாடி, இல்லைன்னா டான்ஸ் ஆடி அடுத்த ரூம்ல இருக்குற ஹெச். ஓ. டிக்கு சத்தம் கேட்டு வந்த முதல் நாளே எனக்கு டிஸ்மிஸ் ஆர்டர் வாங்கி தரப் போறீங்களா? வேற ஏதாவது சைலண்டான கேம் விளையாடுவோம். ஆனா அது உங்களுக்கு உதவியாவும் இருக்கணும்”
“சார் சைலண்டான கேம்னா அது தூங்குற கேம் தான்”, என்று ஒருவன் சொல்ல அனைவரும் சிரித்தார்கள்.
அவர்களுடன் சேர்ந்து சிரித்த சரவணன் “சரி நானே சொல்றேன். இப்ப எல்லாரும் என்ன செய்றீங்க? உங்க நோட்ல இருந்து ஒரு பேப்பரை கிழிங்க”, என்றான்.
“சார் மத்த சார் எல்லாம் ஆறு மாசம் கிளாஸ் நடத்தி இவ்வளவு நாள் என்ன படிச்சு கிழிச்சன்னு கேப்பாங்க. நீங்க வந்த அன்னைக்கே கிழிக்க சொல்றீங்க. எங்கயோ போய்ட்டீங்க”,என்று நவீன் சொல்ல “உன் பேர் என்னப்பா?”, என்று கேட்டான் சரவணன்.
“நவீன் சார்”
“இங்க பாரு நவீன், இனி நீ தான் என்னோட கிளாஸ்ல கிளாஸ் லீடர்”
“அதுக்கென்ன சார்? இருந்துட்டா போச்சு?”, என்று நவீன் சாதாரணமாக சொல்ல அவனை பார்த்து மர்மமாக புன்னகைத்தான் சரவணன்.
“சரி எல்லாரும் பேப்பர் கிழிச்சாச்சா? இப்ப என்ன செய்றீங்கன்னா டாப் ஆஃப் தி பேப்பர்ல உங்க பேரை தெளிவா எழுதுறீங்க. ஒரே பேர்ல ரெண்டு பேர் இருக்கீங்களா? அப்படி இருந்தா நீங்க எந்த பெஞ்ச்ல இருக்கீங்கன்னும் எழுதுங்க”
“இது எதுக்கு சார்?”, என்று ஒருவன் கேட்க “இருங்க சொல்றேன்”, என்றான் சரவணன்.
….
“எழுதி முடிச்சாச்சா? ஓகே குட். இப்ப பர்ஸ்ட் பெஞ்ச்ல உள்ளவங்க உங்க பேப்பரை உங்களுக்கு அடுத்த பெஞ்ச்ல உள்ளவங்க கிட்ட கொடுங்க அதே போல் அடுத்த பெஞ்ச் அதுக்கு அடுத்த பெஞ்ச் கிட்ட. கடைசி பெஞ்ச் பேப்பர் எல்லாத்தையும் என்கிட்ட கொடுங்க. அதை நான் பர்ஸ்ட் பெஞ்ச்ல உள்ள வங்க கிட்ட கொடுக்குறேன்”
…
“இப்ப எல்லாரோட கையிலயும் அடுத்தவங்க பேப்பர் இருக்கான்னு செக் பண்ணிட்டு யார் பேர் அந்த பேப்பர்ல எழுதிருக்கோ அவங்களைப் பத்தி உங்களுக்கு என்ன தோணுதோ அதை ஒரு வரில எழுதுங்க. அதுக்காக காதலையோ கவிதையோ எழுதிராதீங்க. நல்ல விஷயம் கெட்ட விஷயம் இப்படி எழுதுங்க. புரியலையா? உதாரணத்துக்கு உங்க ஹேன்ட் ரைட்டிங்க் நல்லா இருக்குனு எழுதலாம். கொஞ்சம் போல்டா இருங்கன்னு எழுதலாம். நைஸ் பெர்சன்னு எழுதலாம், கோப படுரவங்களா இருந்தா கோபத்தைக் குறைங்கன்னு எழுதலாம். ஓகே ஸ்டார்ட் பன்னிரலாமா? ஆனா எழுதுறவங்க யாரும் உங்க பேர் மட்டும் எழுத கூடாது.நீங்க தான் எழுதுநீங்கன்னு அவங்களுக்கு தெரியக் கூடாது. ஸ்டார்ட் பண்ணலாமா?”, என்று அவன் கேட்டதும் அனைவரும் சரி என்றவர்கள் தங்களுக்கு தோன்றியதை எழுதினார்கள்.
ஒரு லைன் எழுதியதும் பேப்பர் ஒவ்வொரு கையிலும் மாறிக் கொண்டே இருந்தது. எல்லாரும் எழுதிய பிறகு அனைத்தையும் வாங்கிய சரவணன் ஒரு இரண்டு பேப்பரை மட்டும் எடுத்துப் பார்த்தான். அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.
“எங்க எல்லார் கிட்டயும் பிரீயா பிரண்டா பேசுங்க. அப்ப தான் காண்பிடெண்ட் லெவல் வரும்னு ஒருத்தர் இன்னொருத்தருக்கு எழுதிருக்காங்க.சூப்பர் இதை தான் நான் எதிர் பார்த்தேன். இப்ப அதை அவங்க மாத்திக்க ஒரு ஹெல்பா இருக்கும். சரி நேரம் ஆகுது. நவீன் இது யார் யார் பேப்பர்னு பாத்து அவங்க கிட்ட கொடுத்துரு. உன்னோட பேப்பர் மட்டும் எனக்கு நாளைக்கு வேணும். இன்னைக்கு டைம் ஓவர். நாளைக்கு பாக்கலாம் பிரண்ட்ஸ்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.
அடுத்து லஞ்ச் பீரியட் என்பதால் அனைவரின் கவனமும் தன்னுடைய பேப்பரில் அனைவரும் என்ன எழுதி இருப்பார்கள் என்று ஆர்வமாக தேடி படிக்க துடங்கினார். சிலர் எழுத்துக்களை வைத்து அது யார் எழுதி இருப்பார்கள் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர்.
அதில் அனைவரும் நிறை குறைகளை எழுதி இருந்தனர். சிலர் நிறை குறைகளை வெளிப்படையாக எழுதி இருந்தனர். சிலர் நிறையை உயர்த்தியும் குறையை மெல்லிய கோடிட்டு காட்டி இருந்தனர்.
தன்னுடைய பேப்பரில் பார்வையை ஓட்டிய செல்வா அடுத்த நிமிடம் சௌமியை திரும்பி பார்த்தான். அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனுடைய பேப்பரில் ஒரு ஆள் மட்டும் வேற ஏதோ மொழியில் இரு வார்த்தைகளை எழுதி இருந்தார்கள். இது சௌமியாக தான் இருக்கும் என்று நிச்சயம் நம்பினான்.
என்னவென்று அவனுக்கு புரிய வில்லை. நண்பர்களிடம் கேட்டால் இது என்ன மொழின்னே தெரியலை என்றார்கள். அது என்ன என்று கண்டறிந்தால் தான் அவனுக்கு தூக்கமே வரும் போல் இருந்தது.
செல்வாவோ நவீன் பேப்பரில் உயிர் தோழன் என்றும் நீலவேணி பேப்பரில் ஸ்வீட் தங்கை என்றும் சௌமி பேப்பரில் நைஸ் ஃபிரண்ட் என்றும் எழுதி இருந்தான்.
[the_ad id=”6605″]
இந்த விஷயம் முடிந்து ஒருவாரம் ஆகியும் அவனால் அது என்ன மொழியென்றும் அதற்கு அர்த்தம் என்னவென்றும் அவனால் கண்டு பிடிக்க முடிய வில்லை.
“அவ கிட்டயே நேரடியா கேட்டுறலாமா?”, என்று நினைத்த செல்வா அவளிடம் கேட்க கிடைக்கும் சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தான்.
கண்ணன் ராதா திருமணம் இரண்டு மாதங்களுக்கு பிறகு என்று முடிவு செய்யப் பட்டது. கல்யாண வேலைகளை மடமடவென்று மனதுக்குள் பட்டியலிட்ட தர்மதுரை வீட்டில் உள்ள அனைவரிடமும் கருத்துக்களை கேட்டார்.
திடீரென்று அவர் முகம் சிறு யோசனையை பிரதி பலித்தது. அதை உணர்ந்த செல்வி “என்ன ஆச்சுங்க மாமா? என்ன ஒரு மாதிரி இருக்கீங்க?”, என்று கேட்டாள்.
“எனக்கு ஒரு யோசனை தோணுது செல்வி. ஆனா வீட்ல உள்ள வங்க என்ன சொல்றாங்கன்னு தெரியலை”
“என்ன யோசனை?”
“நம்ம கண்ணன் கல்யாணம் முடிஞ்சு ரிசப்சன்ல நம்ம தினேஷையும் கீதாவையும் கண்ணன் ராதா கூட மற்றொரு ஜோடியா நிக்க வச்சா என்ன? தேனு மாதிரி கீதாவும் நம்ம பொண்ணு தான். அவ கல்யாணத்துக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கணும். நீ என்ன சொல்ற செல்வி?”
“என்கிட்ட கேட்டா அருமையான யோசனைன்னு தான் சொல்லுவேன்.ஆனா பொண்ணு வீட்ல இது தெரிஞ்சா என்ன சொல்லுவாங்களோ?”
“அவங்க இதுல தலையிட என்ன இருக்கு செல்வி?”
“எனக்கு பரிபூரண சம்மதம் மாமா. நீங்க வீட்ல எல்லார் கிட்டயும் கேளுங்க”, என்று சொன்ன செல்வி அங்கு வரும் கண்ணனைப் பார்த்து “முக்கியமா கல்யாண மாபில்லியக்கு இதுல சம்மதமான்னு கேட்டுக்கோங்க”, என்றாள்.
“என்னமா பேசிட்டு இருக்கீங்க?”, என்று கேட்டான்.
“கண்ணா, உங்க கூடவே தினேஷையும் கீதாவையும் ரிரப்சன்ல நீக்க வைக்கலாம்னு தோணுது”, என்றார் தர்மதுரை.
“நல்ல ஐடியா பா. நீங்க மதி மாமா கிட்ட பேசுங்க”
“இல்லை உன் மாமனார் மாமியார் ஏதாவது சொலுவாங்கன்னு உங்க அம்மா பயப்படுரா”
“இதுல அவங்க சொல்ல என்னப்பா இருக்கு? நாம தானே செலவு செஞ்சு நடத்த போறோம். இதை அவங்க கிட்ட சொல்லணும்னு கூட இல்லை. நீங்க எல்லார் கிட்டயும் பேசுங்க. துரைராசு சித்தப்பா இதைக் கேட்டா ரொம்ப சந்தோஷ படுவாங்க”, என்று சொல்லி முடித்து விட்டான்.
காதல் தீயை நீர் அணைக்குமா?….