அத்தியாயம் 25
பாறைகளும் அதன் மேல் பச்சை பசேலேன்று புல்வெளிகளும் கொடிகளும் படர்திருக்க.. அதன் நடுவில்.. இளம்பச்சையும் நீலமும் கலந்த நிறத்தில்.. சலசலவென்று கடல் நீர் மையம் கொண்டு.. பாறைகளின் இடையில் செல்லுவது போல் இருந்த இடத்தை முதலில் பயந்து பார்த்த சிற்பிகா போக போக.. அந்த இயற்க்கையின் அழகினில் மூழ்கத்தொடங்கினாள்…
அவள் முன்பு பார்த்த இடங்களை விட இந்த இடம் பார்ப்பதற்கு கொஞ்சம் பயமுறுத்தியது… அவள் எப்பொழுதும் போல் இப்பொழுதும் அந்த மரபடிக்கட்டில்.. காலை அலையவிட்டவாறு பயமும் அதிசியமுமாய் சுற்றியும் பார்க்க… தண்ணீரிலிருந்து உள்ளே நீச்சலிடித்துக் கொண்டிருந்த இரு கரங்கள் அவள் அமர்ந்திருந்த மரப்பலகையின் வழியே வந்து.. சட்டென்று அவள் கால்களை உள்ளே இழுத்து விட… ஆஆ.. என அலறியவாறு தண்ணீருக்குள் வீழ்ந்தாள்..
இருமுறை தண்ணீருக்குள் மூழ்கியெழுந்து அவள் இருமியவாறு தத்தளித்துக் கொண்டிருக்க.. பின்னேயிருந்து அவளை அணைத்த வன்கரங்கள்.. அவளின் முகத்தை நிமிர்த்தியது…
முகத்தில் தண்ணீர் வழிய.. விழி சிவந்து நாசி சிவந்து இருமியவளின்.. ஈரத்தில் மினுமினுத்த ஆரஞ்சு சுளை இதழ்களில் தன் இதழைப் பொறுத்தி… நாவை சுழற்றி சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.. அபயசிம்ஹா சக்சேனா..
காலைப்பிடித்த அதிர்ச்சி.. நீரில் விழுந்து தத்தலித்த அதிர்ச்சி எல்லாம் சிறிது மறைய.. தன்னவன் செயலில் கோபம் கொண்ட சிற்பிகா.. அவனுக்கு ஒத்துழைக்க மறுத்தாள்..
ஆனால் உடனே விடுபவனா அவன்.. அவள் இருக்கி பூட்டிய இதழை நாவெனும் சாவிக்கொண்டு திறக்க முற்பட.. அவள் திமிறினாள்.. இருந்தும் முழுமூச்சோடு நாவை கத்தியாக பயன்படுத்தி வெற்றிகரமாக அவளின் இதழில் குடிபுகுந்து சிற்பியின் இதழ் தேனை மொத்தமாக உறிஞ்சியெடுத்தான்…
போதும்போதுமென அளவிற்கு தன் தாகத்தை தனித்து.. அவள் வாயை வறட்சியாக்கிய பின்பே அவளிடமிருந்து விலகினான்… விழி மூடி அவன் மார்பில் சாய்ந்தவள் செல்லக்கோபத்துடன் அவனை அடித்தாள்…
இப்படித்தான் பயமுறுத்துவிங்களா மாமு.. நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா என்றாள் சலுகையுடன்.. நான் உன் கூட இருக்கும்போது.. வேற யார் உன்ன நெருங்க முடியும்… என புருவம் உயர்த்தி திமிராக கேட்டவன்… அவளை தன் முதுகில் சாய்த்துக் கொண்டு நீந்த தொடங்க.. பெண்ணவள் அவன் கழுத்தை இருகப்பற்றிக் கொண்டாள்..
கண்ணாடிப்போல் பளப்பளத்த நீரில் அபய் நீந்த.. சிற்பிகாவோ சொகுசு பூனையாய் அவன் முதுகில் தொத்தி.. கண்மூடியிருந்தாள்…
அவளின் விழிகளுக்குள் கடந்த ஒரு மாதமாய் நிகழந்த நிகழ்வுகள் யாவும் வலம் வரத்தொடங்கியது…
*********************
அபய் மீண்டும் பெங்களூர் வந்த போது செய்த முதல் வேலை தாய் தந்தையை மீண்டும் இந்தியாவிற்கு வரவைத்தது தான்… ஏனெனில் அபய் சிற்பிகா திருமணம் நடந்த சில தினங்களில் சஞ்சீவ்ரதன்… அபயின் வெளிநாடு பயணங்களை தவிர்க்கும் பொருட்டு.. சுஜாதாவுடன் வெளிநாட்டிற்கே சென்றுவிட்டார்..
அதனால் அவர்களை மீண்டும் இந்தியாவிற்கு வரவழைத்து.. தந்தையின் கரத்தில் தொழிலை ஒப்படைத்து.. சிற்பிகாவுடன் தேனிலவிற்கு பறந்து விட்டான்..
முதலில் அவன் அழைத்து சென்றது… சாண்டோரினி தீவிற்கு தான்.. கிரேக்க நாட்டின் தலைநகர் ஏதென்ஸிலிருரிந்து சுமார் 128 மைல் தொலைவில்… ஏஜியன் கடலில் எரிமலை தோற்றம் கொண்ட தீவுகளின் ஒரு சிறிய குழு இந்த சாண்டோரினி தீவு… இது எரிமலை சீறி, கடலிலிருந்து வீசிய கற்பாறைக் குவியலினால் உண்டான தீவு. வழி நெடுகிலும் கருகிய கற்கள், பெரிய கருமையான பாறைகள் இவைகளைத் தாண்டி மலையேறிச் சென்றால் புகை வெளியே வரும் பெரிய எரிமலைப் பாறையைக் கணலாம். ஆனால் தீப்பிழம்போ, உருகிய எரிமலைக் குழம்போ ( Lava லாவா) கிடையாது. அடுப்பை அணைத்த பின் எவ்வளவு புகையுமோ அவ்வளவுதான்…
கடற்கரை என்றாலே வெண்ணிற மணல் தான் என்ற எண்ணத்தை மாற்றும் வகையில்.. எங்கினும் கருப்பு நிற மண்துகள்கள் தான்… அங்கு இருந்த கட்டிடம் முழுதும் வெண்மை மற்றும் நீலம் கலந்த கட்டிடங்கள் தான்… இது கிரேக்கர்களுக்கு மிகவும் பிடித்த, புனிதமான வண்ணமாம்… சாண்டோரினியை 2011 ஆம் ஆண்டில் பிபிசி “உலகின் சிறந்த தீவு” என்று பெயரிட்டது.
சிற்பிகா தன் கண் முன் பறந்து விரிந்திருந்த கருப்பு மணல்மேடுகளையும் அதனையொட்டி அமர்ந்திருந்த வெண்ணிற கட்டிடங்களையும் அதன் அமைப்புகளையும் விழி விரியப்பார்த்தள்…
அவளின் விழி விரிவை ரசித்துப் பார்த்த அபய் சிற்பியின் தோளில் கைப்போட்டு.. தங்களின் அறைக்கு அழைத்து சென்றான்… அந்த அறை பனிப்பறையால் செய்தது போல் குளிர்ச்சியாக இருந்தது..
குகையின் அமைப்பில் அந்த அறை அமைந்திருந்தது.. அவள் ஒவ்வொரு இடத்தையும் ஆச்சரியமாக பார்க்க.. அவனோ அவளை பின்னிருந்து அணைத்து கொண்டு அங்கிருந்த மெத்தையில் போட்டு படற ஆரம்பிக்க… அவளும் அனைத்தும் மறந்து அவனில் மூழ்கினாள்…
காலையிலிருந்து அவளில் மூழ்கியவன்.. மாலை மங்கும் நேரம் அவளை தன் கரத்தில் அள்ளிக்கொண்டு.. அவர்களின் வலப்பக்கம் உள்ள சிறு இடைவெளியில் உள் புக.. அங்கு நடைபாதையிலிருந்து நீச்சல் குளம் ஆரம்பித்தது..
அபய் அவளை பால்கனி போல் அமைந்திருக்கும் அந்த நீச்சல் குளத்தில் பின்னேயிருந்து அணைக்க.. சிற்பிகா எதிரே இருந்த கடலின் அழகில் மெய்மறந்து போனாள்… சிற்பிகா தோளிற்கு மேல் இருக்கும் தண்ணீரில் நின்றுக்கொண்டு எதிரில் உள்ள தடுப்பை பிடுத்துக்கொண்டு நிற்க… அபய் அவள் பின்னோடு ஒட்டி நின்றான்…
சூரியனின் பொன்னிறக்கதிர்கள்… கடலில் வீழ்ந்து.. கடலின் வண்ணமும் கதிரவனின் வண்ணமும் இரண்டுறக் கலந்து.. ரம்மியமாக இருந்தது.. சூரியனோ தன் பணி நிறைவடைந்தது என்று கூறிக்கொண்டு மெல்ல மெல்ல ஆழியின் பின் மறைய.. இதனையெல்லாம் விழிகள் மின்ன பார்த்துக்கொண்டிருந்தாள்…
அபய் முகம் மின்ன பார்த்துக்கொண்டிருந்தவளின்.. செவியில் முத்தமிட்டு.. எப்படி பேபி என் மேல உனக்கு லவ் வந்துச்சு.. நான் அன்னைக்கு ஜஸ்ட் உன்ன வீட்டுல விடதானே சொன்னேன்.. என்று கேட்டான்..
அவளோ அவனை நிமிர்ந்து பார்த்து.. ம்ம்ம் உண்மைதான்.. நீங்க என்னைய வீட்டுல மட்டும்தான் விட சொன்னிங்க.. அதுக்கு உங்கமேல எனக்கு நன்றியுணர்ச்சி தான் வந்துருக்கனும்.. ஆனா காதல் எப்படி வந்தது என அவனையே கேள்வி கேட்டவள்..
அவன் புறம் திரும்பி.. தன்னவனின் தோளில் இருக்கையையும் கோர்த்துகொண்டு.. காதல் மேலோங்க பார்த்து.. தன்னுடைய மனதை கூறலானாள்..
என்னை யாரும் காப்பாற்ற வரமாட்டாங்களான்னு நான் ஏங்கும் நேரம்… டக்குனு அந்த அறையில ஆறரையடி உயரத்துல.. ஹேண்ட்ஸமா ஒருத்தர் வந்தார்.. சிங்கமாய் கர்ஜித்தார்.. அப்போ நான் என் பிரச்சனை.. இருக்கும் நிலை.. எல்லாம் மறந்து அவர மட்டுமே பார்த்துட்டு இருந்தேன்.. இன்னும் சொல்லப்போனா சைட் அடிச்சேன்னு கூட சொல்லலாம்.. நான் சைட் அடிச்ச முதல் ஆள் அவருதான்..
அரைமயக்க நிலையில பார்த்த உங்க முகத்தை அச்சு பிசாகாமா வரைஞ்ச அப்புறம் தான்.. நான் எந்த அளவுக்கு வெறித்தனமா உங்கள சைட் அடிச்சிருக்கேனு எனக்கே புரிஞ்சது என வெட்கமாய் புன்னகைக்க… அபயசிம்ஹா சக்சேனா என்ற மனிதன் மறைந்து முழுக்க முழுக்க அவளின் சிம்மு மாமுவாக மாறினான்…
காதல் இருந்தாலும் வெளியே காண்பிக்காது.. கர்வம் திமிர் என்ற முகமூடிக் கொண்டே தன்னவளை பார்த்தவன்.. இப்பொழுது முற்றும் முழுதாக அவளவனாகவே மாறிக்கொண்டிருந்தான்..
அப்பொறம் வெளில அந்த பாடிகார்ட் எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அபய் சார் உன்ன சும்மா விடமாட்டார்ன்னு சொன்ன அந்த வார்த்தையில எனக்கு உங்க மேல உள்ள அபிமானம் அதிகமாச்சே தவிர நன்றியுணர்ச்சி வரல.. அப்புறம் போக போக உங்க மேல உள்ள ஈர்ப்பு காதலா மாறிடுச்சு… என கூறி வழக்கம் போல் அவன் இதழில் மென்முத்தம் வைக்க..
ஏற்கனவே அவள் காதலில் பித்தம் கொண்டு திரிந்தவன்.. இப்பொழுது முத்த பித்தமும் ஏற.. காதல் ராட்ஷஷனாக உருமாற்றம் கொண்டு.. அவள் அணிந்திருந்த ஒற்றை துண்டினை அவிழ்த்தெரிந்தான்…
நொடியில் நிகழ்ந்தேரிய நிகழ்வினைக் கண்டு அவள் திகைத்து விழித்த பொழுதிலே.. ஜலத்தின் உள்ளேயே கொஞ்சக்கொஞ்சமாக அவளை திண்ண ஆரம்பித்தான்.. அவளின் பெண்மையின் பொக்கிஷங்களில் அவன் நாவும் கையும் விளையாட.. சிற்பிகாவினால் தன் சத்தத்தையும் அடக்க முடியவில்லை தன் உணர்வுகளையும் அடக்க முடியவில்லை….
அவர்கள் செய்யும் அட்டகாசத்தில் நீரும் தளும்பி பாவையவளின் சத்ததிற்கு இணையாக அதுவும் சத்தம் கொடுத்தது…. என்றுமில்லா வேகம்… அணைப்பு.. கரங்களின் அழுத்தம் என அனைத்திலும் தன் உணர்வுகளை மொத்தமாக கொட்டிக் கவிழ்த்திருந்தான்.. அபயசிம்ஹா சக்சேனா..