“அய்யய்யோ அப்போ கல்யாணம் முடிஞ்சதா?” சிரிப்பை தற்காலிகமாக ஒதுக்கி வைத்து சீரியஸ் மோடிற்கு சென்றான் ஹரி.
“பின்ன உங்களுக்காக வெயிட் பண்ணுவாய்ங்களா? சரி வந்து எழுப்பி விடலாம்னு பாத்தா எவனும் போன் எடுக்குறதில்ல, கதவையும் லாக் பண்ணிடுறது… உதய் உங்க அம்மா அப்பா எல்லாம் செம்ம கடுப்புல இருக்காங்க… முக்கியமா ஆதவன்…”
ஆதியின் சட்டை வேறு அழுக்காய் இருக்க அவன் கூறுவதும் சரியாக இருக்குமோ என்று அனைவரும் குழம்பி போயிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி துணியை எடுத்து குளியலறைக்குள்ளே சென்றுவிட்டான்.
“கௌதமு அலாரம் வைக்க சொன்னேன்ல ஏன்டா வைக்கல?” – தமிழ்
“என் போன்ல சவுண்ட் நல்லா வராதுன்னு விஷ்ணுகிட்ட சொன்னேன்… விஷ்ணு நீ வச்ச தான?” – கெளதம்
“வச்சேன்… ம்ம்ம் ஆமா வச்சேன்… ஆனா ஏ.எம்-ஆ பி.எம் வச்சேன்னானு தெரியலையே தூக்க கலகத்துல கவனிக்கல” பேந்த பேந்த விழித்த விஷ்ணுவை எதை கொண்டு அடிக்கலாம் என்று யோசித்த ஹரி தலையணையை எடுத்து அவன் மீது எறிந்தான்.
“என்ன ஏன்டா அடிக்கிற? நீ அலாரம் வச்சிருக்கலாமே” – விஷ்ணு
“நான் தான் மொபைல் சார்ஜ் இல்லனு சொன்னேன்ல உன்கிட்ட” – ஹரி
“சரி கதவை எவன்டா பூட்டுனது?” கொந்தளித்தான் கெளதம்
“தோ இவன் தான்” ஹரி விஷ்ணுவை கை காட்டினான்.
“ஐயோ நான் இல்ல ண்ணே… சும்மா தள்ளி விட்டேன் அது மூடுச்சா என்னனு கூட பாக்கல ஒருவேளை தூங்குனதும் கால் பட்டு பூட்டிக்கிக்கோ என்னவோ” அப்படியும் இருக்குமோ என்று சந்தேகத்துடன் தாடையை தடவிக்கொண்டு யோசித்தான் விஷ்ணு.
“நல்ல செருப்பு போட்டு வந்துட்டேன்… இல்லனா அது நாறு நாரா பிஞ்சு போகுற வர உன்ன விட்ருக்க மாட்டேன்…” கடுப்பான கெளதம் விஷ்ணுவை கழுவி ஊற்ற வழக்கம் போல் பற்களை காட்டி சமாளித்து முடித்தான் விஷ்ணு.
“அது எப்படி டா நாலு பேரும் கதவு தட்டுற சத்தம் கூட கேக்காம இருப்போம்?” – தமிழ் சந்தேகமாய் அங்கிருந்த மணியை பார்க்க ஆதி கூறியது போல தான் இருந்தது.
“நடந்துபோச்சு… வெளிய போய் ஏதாவது ஒரு கதை கட்டணும் அதுக்கு யோசிங்க” – ஹரி
“சரி தான்… என் பொண்டாட்டிகிட்ட சொல்லவே ஒரு தனி கதை வேணும்” தலையை சொரிந்தான் தமிழ்.
“ஏன்டா பொண்டாட்டிக்கு இப்டி பயப்புடுற?” ஏளனமாக சிரித்த கெளதம் சுகமாய் மெத்தையில் அமர்ந்து, “என்ன மாதிரி இருக்கனும்… பாரு ராஜா மாதிரி ஜாலியா சுத்துறேன். லவ் மேரேஜ் இஸ் ப்ளிஸ்டா மாப்பிள்ளை” கால் மேல் கால் போட்டு ஒரு நிமிர்வுடன் பெருமிதத்தோடு கூறினான்.
“கெளதம் அண்ணே சும்மா கத விடாத… நேத்து பவித்ரா சேலைய புடிச்சிட்டே ‘மாலா மாலா’-னு நீ ஓடுனத நா தா பாத்தேனே” விஷ்ணு கூற, கௌதமை பார்த்து காரி துப்பினான் தமிழ்.
“அப்றம் பேசலாம். இப்போ பொய் ஒன்னு ரெடி பண்ணுங்க. நேரமாகிட்டே இருக்கு” ஹரி நினைவூட்ட, “நீங்க தான் நல்லா நடிப்பீங்களே… உங்களுக்கு வீசிங் வந்துடுச்சுனு ஹாஸ்பிடல் போய்ட்டோம்-னு சொல்லிடலாம்” என்றான் தமிழை காட்டி.
“நல்லா ஐடியா” – விஷ்ணு
“எவனும் நம்ப மாட்டானுக… இவனுக்கு ஒரு காய்ச்சல் கூட எனக்கு தெரிஞ்சு வந்ததில்லை இதுல வீசிங் வந்து கிழிக்கும்” – கெளதம்
“பேசாம இவன் லவ் ப்பைலியர் ஆகிடுச்சுனு பினாயில குடிச்சிட்டு சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிட்டானு சொல்லிடலாமா?” ஹரியை கை காட்டி கேட்டான் தமிழ்.
“ப்பைலியர் வேணாம்… லவ் பண்ண பொண்ணு இவன விட்டுட்டு வேற பையன் கூட ஓடிடுச்சுனு வச்சுக்கலாம்.. அப்ப தான் கேக்க நல்லா இருக்கும்” – விஷ்ணு
“ஏன் இந்த தூக்க மாத்திரை, பாய்சன் எல்லாம் தெரியாதா பினாயில் மட்டும் தான் தெரியுமா?” தமிழ் தோள் சுரண்டி ஹரி கேட்க,
“ச்ச ச்ச அதெல்லாம் டீசெண்டா இருக்கும். இது தான் கேக்கவே அசிங்கமா இருக்கும்” மற்ற இருவர் பக்கம் திரும்பி, “என்ன பா சரி தானே?” என்றான் தமிழ்.
“இதுல ஒரு சின்ன சட்ட சிக்கல் இருக்கே…” என்றவாறு தலையை துவட்டி இடையில் ஒரு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு வந்தான் ஆதி, இவர்கள் பேச்சை எல்லாம் உள்ளிருந்து கேட்டுக்கொண்டு.
“இதுல என்ன சிக்கல் இருக்க போகுது?” கெளதம்
ஆதியிடம் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே கதவு தட்டும் சத்தம் கேட்டது. “போச்சு யாரோ வந்துட்டாங்க… ஹரி டேய் பெட்ல போய் செத்து போன மாதிரி மூஞ்சிய வை… அதாவது காதல் தோல்வில மன்மதன் படம் மொட்டையன் மாதிரியே பொலம்பனும்” என்று நின்றுகொண்டிருந்தவனை கெளதம் கட்டிலில் தள்ளி படுக்க வைக்க, அந்த இடைவேளையில் குளியலறை சென்ற விஷ்ணு அங்கிருந்த பினாயில் பாட்டிலை எடுத்து வந்து ஹரியின் சட்டையில், முகத்தில் எல்லாம் ஆங்காங்கு ஊற்றினான்.
“என்னடா பண்றீங்க என்ன வச்சு?” பதறிய ஹரியின் சட்டையை சில இடங்களில் கிழித்தான் தமிழ்.
“என்ன பண்ணாலும் சரியா இருக்கனும்டா” என்று அவன் தலையை வேறு தமிழ் கசக்கிவிட,
“நீங்க பண்றதெல்லாம் பாத்தா சூசைட் பண்ணவனு எவனும் நம்ப மாட்டாய்ங்க. ரேப் பண்ண மாதிரி சட்டையெல்லாம் கிளிக்கிறீங்களேடா பேப்பயலுகளா” கிட்டத்தட்ட அழுதேவிட்டான் ஹரி.
இவர்கள் சேட்டை எல்லாம் பார்த்துக்கொண்டே வேகமாக கிளம்பிய ஆதி வேஷ்டியை கட்டிவிட்டு, “டேய் ஏன்டா இவ்ளோ ட்ராமா போடுறீங்க… நீங்க நைட் ஏதோ பிட்டு படம் பாத்துட்டு தூங்கிட்டிங்கல… நானும் உதயும் வந்து பாதப்ப படம் ஓடிட்டு இருந்துச்சு உதய் பாத்துட்டு கோவமா டிவிய ஆப் பண்ணிட்டு போனான்” பேசிக்கொண்டே ஆதி சிரிக்க, அவன் கிளம்பி நின்ற கோலத்தை கூட கவனிக்காமல் வைத்தது ஆதி கூறிய செய்தி.
“டேய் என்னடா பண்றீங்க? கதவை தொறக்க போறிங்களா இல்லையா?” காரமாக வெளியில் இருந்து கதவை தட்டிக்கொண்டே அழைத்தான் உதய்.
“செத்தோம் செத்தோம்… போச்சு… கருமம் கருமம் வேணாம்னு சொன்னேன் கேட்டீங்களாடா பரதேசிகளா” மூவரையும் அசிங்கமாய் பார்த்தான் தமிழ்.
“சரி நடந்து போச்சு ண்ணே… ரெண்டு திட்டு திட்டு வாங்குறதுக்குள்ள கதவை தொறந்து ஒடனே ஆளுக்கு ஒரு கால புடிச்சிடலாம்” பினாயில் தெளித்த சட்டையை அவிழ்த்துப்போட்டு வெற்று உடம்போடு பாதி தொடை வர தொட்டிருந்த ஷார்ட்ஸ் போட்டு நின்றான் ஹரி.
“ஏய் ச்சீ போய் சட்ட போடு… ஏற்கனவே உங்களால பிரச்னை இதுல பிட்டு படத்துல நடிக்கிறவன் மாதிரி நிக்கிறான்” பதட்டத்தில் சிடுசிடுத்தான் தமிழ். மீண்டும் கதவு தட்டும் சத்தம்.
“அண்ணே பேசாம கதவை திற… கால்ல விழ எல்லாரும் ரெடி ஆகுங்க” என்று நால்வரும் வரிசையாக நிற்க தானே கதவை திறந்துவிட்டு அதே இடத்தில் வந்து நின்றுகொண்டான்.
அறைக்குள் நுழைந்த உதய் கோவத்தோடு, “என்ன டா பண்றீங்க நீங்க? அங்க…”
உதய் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே நால்வரும் யோசிக்காமல் அவன் காலில் விழுந்துவிட்டனர்.
“அண்ணே எங்களை உன் பிள்ளையா நெனச்சு மன்னிச்சு வுற்று ண்ணே. ஏதோ தெரியாம பண்ணிட்டோம்” என விஷ்ணுவும், “ஆமா ண்ணே எத்தனையோ தப்ப மன்னிச்சிருக்க இதையும் மன்னிச்சுடு ண்ணே” என ஹரியும் தலையை தூக்கி சகோதரனிடம் கெஞ்ச,
தங்கள் பங்கிற்கு, “மச்சான் டேய்… ஏதோ சின்ன பசங்க பேச்ச கேட்டு நாங்க அப்டி எல்லாம் பண்ணிட்டோம். இனிமேல் இந்த மாதிரி எந்த தப்பும் நடக்காதுடா…” எச்சிலை எடுத்து கன்னத்தை நனைத்தான் தமிழ்.
“என்னடா…”
உதய் பேசுவதற்கும் இடையிட்ட கெளதம், “எங்களை பேச விடு மாப்பிள்ளை. ஆமாடா யாரும் வர மாட்டாங்கன்னு இவனுக சொன்ன நம்பிக்கைல ரொம்ப நாள் ஆச்சே-னு ஒரே ஒன்னு… மம்மி ப்ராமிஸ் மாப்பிள்ளை… ஒரு பிட்டு படம் தான் உதய் பாத்தோம்…”
“என்னது ப்ளூ பிலிம் பாத்திங்களா?” இது தான் அவனுக்கு புதிய தகவலாயிற்றே அதனால் தான் அதிர்ச்சியிலிருந்தான் உதய். அந்த நேரத்தில் பட்டு வேஷ்டி சட்டையில் உதய்யை ஒட்டி நின்ற ஆதவனுக்கும் அதிர்ச்சியே…
“கல்யாண வீட்டுல இதெல்லாம்… என்னடா?” – ஆதவன்
“மாப்பிள்ளை பையா மன்னிச்சுடுடா. அதுனால தான் எங்களால கல்யாணத்துக்கு வர முடியல” என்று ஆதவனிடமும் மன்னிப்பை கெளதம் வேண்ட, உள்ளே இருந்த ஆதி சிரிப்பை அடக்கியவாறு ஈரத்தலையோடு இருந்த சிகையை சீப்பின் உதவியுடன் அடக்கும் முயற்சியில் இருந்தான்.
“ஏதேய்?” தனக்கே தெரியாமல் தன்னுடைய திருமணம் எப்பொழுது நடந்தது என்ற குழப்பம் ஆதவனுக்கு.
“அண்ணே மன்னிச்சுடு… அந்த படத்தை பாத்துட்டே தூங்கிட்டோம் போல, ஆறு மணிக்கு வச்ச அலாரம் கூட அடிக்காம போய்டுச்சு… இப்போ பாரு பதினொன்றைக்கு மேல ஆகிடுச்சு. உன் கல்யாணத்துல நாங்க டான்ஸ் பெர்பாமன்ஸ் எல்லாம் பண்ணனும்னு பிளான் பன்னிருந்தோம்… எவ்ளோ ஆசையா ரெடி ஆனோம்ல ஹரி?”
எழுந்து நின்று சகோதரனிடம் விஷ்ணு கேட்க, ‘இது என்ன புது கதையால இருக்கு’ என்று முதலில் விழித்த ஹரி பிறகு அதற்கும் பலமாய் தலையை ஆட்டி வைத்தான்.
“இப்போ வருத்தப்பட்டு என்ன ஆகுறது? உன் கல்யாணமே முடிஞ்சிடுச்சே” சோகமாய் தமிழ்.
“தண்ணி அடிச்சிருக்கீங்களா?” – உதய்
“அது அடிச்சிருந்தா கூட இன்னேரம் தெளிவா இருந்து இவன் கல்யாணத்துக்கு வந்துருப்போமே…” வருத்தம் மேலிட்டது கெளதம் வார்த்தைகளில்.
“பரதேசி நகருங்கடா… கல்யாணத்துக்கு நேரமாச்சு” நால்வருக்கும் இடையில் புகுந்த ஆதவன் அறைக்குள்ளே சென்று நேற்று தான் விட்டு சென்ற கைக்கடிகாரத்தை தேட துவங்கினான்.
“கல்யாணத்துக்கு நேரமாச்சா? கல்யாணம் முடியல?” குழப்பமாய் ஹரி…
“மாப்பிள்ளை இங்க இருக்கறப்ப எப்படிடா கல்யாணம் அதுக்குள்ள முடியும்?” – ஆதவன்
“அப்போ மணி இப்போ பதினொன்னுக்கு மேல இல்லையா?” இல்லை என்றவன் தேடுதல் வேட்டையில் தான் இன்னும் இருந்தான் ஆதவன்.
“அப்போ நாங்க பிட் படத்தை போட்டுட்டே தூங்குன நேரம் நீ வந்து டிவி ஆப் பண்ணலயா?”
இவர்களின் குழப்பத்தில் ஆதி சத்தமாக சிரித்துக்கொண்டிருக்க, நால்வரையும் முறைத்துக்கொண்டு, “வெக்கமா இல்ல… பண்ணாதே தப்பு இதுல அந்த கருமத்தை நூறு தடவ சொல்லிட்டே இருங்க… இந்த கருமத்தை நான் நேர்ல பாத்திருந்தேன் அந்த நிமிஷமே நாலு பேரையும் கொன்னு பொதச்சிருப்பேன்” உதய் சீறினான்.
“அட கிரதகா…” கெளதம் ஆதி பக்கம் திரும்ப இப்பொழுது தான் ஆதியின் சிரிப்பின் அர்த்தம் புரிந்தது.
“மணி ஆறே ஹால் தான் டா வெண்ணெய்களா” சத்தமாக சிரித்தவன் இப்பொழுது அழகாய் அடர் நீல நிற ஷர்ட் அணிந்து வேஷ்டியில் கம்பீரமாய் நின்றிருந்தான்.
“செத்தடா இன்னைக்கு” ஆதி நோக்கி பாய்ந்த கௌதமை தொடர்ந்து மற்ற மூவரும் பறக்க அவர்கள் பிடியிலிருந்து சிக்காமல் சிறுத்தையை போல் பறந்து அறையை விட்டு வெளியேறியவன், “இலை தூக்க ஆள் இல்லயாம், குளிக்காம கூட அப்டியே வாங்க டா” என்றான் உதய்யின் பக்கம் நின்று.
“வேலைய விட்டுட்டு என்ன இது?” உதய் ஆதியை முறைக்க, அவன் தலையை பிடித்து சிகையை களைத்து விட்டவன், “பரோட்டா சாப்புட போறேன்… வர்றியா?” உதய்யின் பதிலை கூட எதிர் பார்க்காமல் சென்றுவிட்டான்.
அவன் சென்றதும் சகோதரர்களையும் தோழர்களையும் பார்த்தவன், “பத்து நிமிசத்துல நாலு பேரும் ஸ்டேஜ்ல நிக்கணும்… வரல கொன்னுடுவேன்” என்ற எச்சரிக்கையோடு அறைக்குள் இருந்த மாப்பிள்ளைக்கு போடும் நகைகளை எடுத்துக்கொண்டு சென்றான்.
அங்கு பசிக்கு உணவை தேடி சமையலறை சென்ற ஆதிக்கு கம்பெனி தருவதற்காகவே எதேச்சையாக காத்திருந்தாள் அவன் மான்குட்டி. மயில் வண்ண பட்டுப்புடவையில் ரோஜா நிற பார்டர் வைத்து, அதே ரோஜா நிற ரவிக்கை அணிந்து சுட சுட இருந்த தோசையை சாம்பார் ஊற்றி ஊதி ஊதி வயிற்றை நிரப்பி கொண்டிருந்தாள்.
“பச்சை கல்லு மூக்குத்தி எல்லாம் பலமா இருக்கே” சிரிப்போடு அவள் அருகே சென்ற ஆதிக்கு அவள் அழகு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்வது போல் இருந்தது. ஆனால் என்றும் மறையாதது அந்த சிறு குழந்தையின் செயல்கள்.
“சாரீக்கு மேட்ச்சா இருக்கா?” என்றால் ஆசையாக.
அவள் மூக்கை பிடித்து சிரிப்போடு ஆட்டியவன், “என் அழகிக்கு அழகு கூடிட்டே போகுது” அவன் பாராட்டில் வெட்கம் கூடி போக கையிலிருந்த உணவும் கூட மறந்து போனது மணிமேகலைக்கு.
“ஹ்ம்ம் இப்போ இன்னும் இன்னும் அழகா இருக்கியே… சிவந்த கன்னத்தை கடிச்சு சாப்பிடவா?” வெட்க சிரிப்போடு அவனை ஏறிட்டவள் அவன் நெஞ்சில் மெல்லிதாக அடிக்க, அவனுக்கும் இருந்த அலுப்பேலாம் சென்று ஒரு புத்துணர்ச்சி பிறந்தது.
“பசிக்கிது மேகா…” குழந்தையாய் அவளிடம் கெஞ்ச கையிலிருந்த தட்டிலிருந்து தோசையை பிய்த்து அவனுக்கு ஊட்டிவிட்டவள் கண்கள் அவன் சிகைக்கு சென்றது.
சிறிதும் காயாமல் இருக்க அவன் கையை பிடித்து மின்விசிறி இருந்த பக்கம் அழைத்து சென்று அதற்கு நேராக அவனை அமர வைத்து சிகையை கலைத்துவிட்டாள்.
“இவ்ளோ ஈரமா இருக்கு காய வைக்காம ஏன் அதுக்குள்ள தலையை சீவிருக்கிங்க?”
பட்டு புடவை என்றும் பாராமல் முந்தானை எடுத்து அவன் தலையை துவட்ட அதை தடுத்தவன், “வேணாம்டி… பாக்குறவங்க ஏதாவது நினைக்க போறாங்க”
“நினைக்கட்டுமே… நான் என்னோட ஆதிக்கு தானே ஹெல்ப் பண்றேன்” உணவை அவனுக்கு ஊட்டிக்கொண்டே பேசினாள்.
“உன் அப்பன் எம்டன் வந்தாலும் இப்டி நிப்பியா?”
“அப்பாவ அப்போஸ் பண்ணி மூக்குத்தியை குத்தினேன்… இன்னுமா இந்த கேள்வி?” அவனை மணிமேகலை முறைக்க எவரும் இல்லை என்று பார்த்துக்கொண்டு அவள் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டான் ஆதி.
விழிகள் விரிய அவன் செயலை பார்த்தவள் தோசை வாங்கி வருவதாக கூறி சிரிப்போடு அகன்றாள். அவள் நழுவி செல்வதை பார்த்தவன் இதழ்களில் வற்றாத புன்னகை கீற்று.
*************
உதய்க்கு மீண்டும் மீண்டும் அழைப்பு வந்துகொண்டே இருந்தது யாழினியிடமிருந்து கடந்த பதினைந்து நிமிடங்களாக. வேலையில் மூழ்கியவன் அதை எடுக்காமல் இருக்க இப்பொழுது அவளும் விடுவதாக இல்லை பல்லவி, திவ்யா, தன்னுடைய தங்கை குழலினி என மூவரை வைத்து அவனை அழைத்துவிட இப்பொழுதும் அவள் அழைக்கும் எந்த அழைப்பிற்கும் அசராமல் இருந்தவனுக்கு, சகோதரன் மற்றும் நண்பர்களை மிரட்டிவிட்டு வந்தவனை தடுத்தார் நளினி.
“என்ன உதய் இது பிடிவாதம்? பிள்ளை கூப்புடுத்துல… என்னனு தான் ஒரு நிமிஷம் கேட்டுட்டு வா போ”
இதற்கு மேலும் இழுக்க முடியாமல் சகோதரிகள், யாழினி, மணிமேகலைக்கு என ஒதுங்கியிருந்த அறைக்கு சென்றான்.
கதவை தட்ட திறந்த யாழினி, “ஒரு தடவ கூப்டா ஒரு நிமிஷம் வந்துட்டு போக கூடாதா சார்? தூதுக்கு ஆள் அனுப்பிட்டே இருக்கணுமா?” கோவமாக கேட்டவளை திட்ட தான் வந்தான்.
ஆனால் ஆகாய நீல நிற புடவையில் சிகப்பு நிற பார்டர் வைத்து, சிகப்பு நிற ரவிக்கை அணிந்து காட்சியளித்தவளை பார்த்தவனுக்கு கோவம் எங்கோ ஓடிப்போனது. வெளியில் எவரும் இல்லை என்று பார்த்து உள்ளே சென்ற உதய் கதவை சாற்றி வந்தான்.
“எதுக்கு யாழினி கூப்பிட்ட? வேலை இருக்கு” என்றவன் கையில் ஒரு சிறிய பெட்டியை கொடுத்தாள் பார்த்தாலே தெரிந்தது நகைப்பெட்டி என்று.
திறந்து பார்த்தான். எளிமையான தங்க மோதிரத்தின் நடுவில் வெள்ளை வைரம் ஒன்று. எளிமையாக இருந்தது…
“என்ன இது யாழினி?”
“மோதிரம் சார்..”
“சார் சொல்லாதடி…” – உதய்
“சரிங்க… மோதிரம் புடிச்சிருக்கா?” – யாழினி
“நல்லா தான் இருக்கு. ஆனா ஏன் இவ்ளோ கஷ்டப்பட்டு வாங்குற?” – உதய்
முகத்திற்கு கண்ணாடியின் முன் நின்று சிறிது அழகு சேர்க்க ஏதோ ஒரு கிரீமை போட்டுக்கொண்டிருந்தவள் கண்ணாடி வழியாக அவனை பார்த்து, “ஆசையா செய்றதுக்கு எல்லாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவாய்ட் பன்னாதீங்க ப்பா ப்ளீஸ். நான் உங்களுக்கு வாங்கி தர்ற முதல் கிபிட் ப்ளீஸ்”
முகத்திற்கு கொடுத்த முக்கியத்துவம் போதுமென உணர்ந்தவள் ரவிக்கையில் பின் இருந்த கயிற்றை கட்டிக்கொண்டிருக்க அவளை நிறுத்தியவன் அவள் கையிலிருந்ததை வாங்கி தன் கையிலிருந்த சின்ன பெட்டியை அவள் கையில் திணித்தான்.
வேதனையோடு அவனை திரும்பி பார்த்தவள் கன்னத்தில் இதழ் பதித்தவன் பேசாமல் அந்த க்னாட்டை முடிச்சிட்டு அவள் பட்டு முதுகிலும் மறக்காமல் இதழ் பதித்தான். ஆனால் அவளோ அவன் செயல்களை அனுபவிக்கும் நிலையில் இல்லையே… மனம் வலித்தது.
அவளை தன் பக்கம் திருப்பிய உதய், “எதுக்கு அதுக்குள்ள கண் கலங்குது? ம்ம்?” இல்லை என்று தலையை ஆட்டியவள் கண்ணிலிருந்து ஒரு சொட்டு நீர் வழிய அந்த கண்ணிலே தன்னுடைய மீசை குறுகுறுக்க முத்தமிட்டான்.
“நீயே போட்டு விடுடி… அதுக்கு தான் கைல குடுத்தேன். ஒடனே அழுகுறது. ஊர்ல இருக்குற எல்லாரையும் ஆட்டி படைக்கிறியே நான் என்ன சொன்னாலும் அழுதுடு” மற்றொரு கண்ணை விறல் கொண்டு துடைத்தான்.
கண்ணீரோடு சிரித்தவள் மோதிரத்தை அவன் கையில் போட்டுவிட, அவன் கைகளுக்கு அது அழகாகவே இருந்தது. குனிந்து அவளை கைகளில் அள்ளியவன் அவளை இரண்டு சுற்று சுற்றி கீழே இறக்கிவிட்டு ஆசையாக அவன் இதழ்களை நெருங்கும் சமயம் அவன் இதழில் கை வைத்து நிறுத்தினாள். “என்ன இப்போ வேலை இல்லையா?”
“உன்ன பாத்துட்டு வேலைய சுறுசுறுப்பா பாக்குறேன்” யாழினியின் கை பிடித்து இதழுக்கு வழி ஏற்படுத்தியவன் அவளை நோக்கி குனிய கதவு தட்டி அவர்கள் இருவரின் தனிமையை கலைத்தது.
“போடி நீ இன்னைக்கு தப்பிச்ச” அவளை திட்டிக்கொண்டே வெளியில் உதய் செல்ல மீண்டும் அவளை பார்த்தவனுக்கு பறக்கும் முத்தத்தை கொடுத்து அவன் மனதில் சலனத்தை தீயாய் பற்றவைத்தாள் அவன் பட பட பட்டாசு.
*******
மேள தாளங்கள் முழங்க திருமண மேடையில் மன பெண் அலங்காரத்தில் பச்சை பட்டுடுத்தி சிரிப்போடு அமர்ந்திருந்த சஹானாவின் முகத்தை கள்ளத்தனமாக பார்த்த ஆதவனுக்கு முழுதாய் அவளிடம் திரும்பி திருமண கோலத்தில் இருக்கும் தன்னவளை ஒரு நிமிடம் முழுதாய் பார்க்கும் ஆசை ஓங்கி நின்றது. ஆனால் அவர்களை சுற்றி நிற்கும் நன்பர்கள் பட்டாளமும் குடும்பத்தினரும் விடுவார்களா என்ன? சந்தர்ப்பத்தை தேடி தேடி காத்திருந்தனர் அனைவரும்.
“டேய் மாப்பிள்ளை ரொம்ப வெக்கப்படாதடா பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் வித்யாசம் தெரியாம போய்டும்” – கெளதம் கலாய்க்க சிரிப்பலை அந்த மேடையில்.
“என்னமோ டான்ஸ் ஆட போறேன்னு சொன்னிங்க வந்து ஆடுங்கடா” – ஆதி
திரு திருவென முழித்த விஷ்ணுவும் ஹரியும் என்ன கூறுவதென்று தெரியாமல் நின்றனர். அவர்களே ஆதவன் மனதை குளிர்விக்க அப்பொழுது கூறிய பொய்யை இப்படி ஆதி கேட்பான் என்று சிறிதும் எதிர் பார்க்கவில்லையே, “இல்ல இந்த ஹால்ல ஸ்பீக்கர் வேலை செய்யலன்னு சொன்னாங்க” மழுப்பினான் ஹரி.
“நான் இருக்கேன்ல அத வேலை செய்ய வைக்கிறது தானே என்னோட வேலை”
சவுண்ட் சர்வீஸ் இருந்த இடத்திற்கு நடந்த ஆதியின் கையை பிடித்து நிறுத்திய விஷ்ணு, “அண்ணே சும்மா அடிச்சு விட்டேன். நீ ஒடனே பட்டு போட்டு இத்தனை பொண்ணுங்க முன்னாடி அசிங்கப்படுத்திடாத… ப்ளீஸ்” நைசாக ஆதியிடம் வந்து மன்றாடினான் விஷ்ணு.
“லஞ்சம்?” – ஆதி
“என்ன வேணாலும் தர்றேன்” – விஷ்ணு
“உன் பி.எம்.டபில்யூ பைக் ஒரு மாசம் என்கிட்டே தான் இருக்கனும்” – ஆதி
“அது வாங்கி ரெண்டு நாள் கூட ஆகல, நானே இன்னும் ஒழுங்கா ஓட்டலை” சிறு பிள்ளையின் அடம் இருந்தது விஷ்ணுவின் முகத்தில்.
“என்ன பட்டு வேணும்ன்னு சொன்ன?” – ஆதி
“சரி ரெண்டு வாரம் தர்றேன்” இறங்கி வர வைத்தான் ஆதி.
“மூணு மாசம்” – ஆதி
“இருவது நாள்” – விஷ்ணு
“ஆறு மாசம்” – ஆதி
“சரி நாப்பத்தி அஞ்சு நாள்” – விஷ்ணு
மொத்தமும் சிரிப்பின் உருவமாய் மாறியது ஆதியின் முகம், “டீலு”
உற்சாகமாக மேடை நோக்கி சென்ற ஆதி உதய் அருகில் நிற்க தன்னையே பார்த்துக்கொண்டிருந்த உதய்யிடம், “மம்முட்டியான் பாட்டுக்கு தான் ஆடுவேன்னு நிக்கிறான். அதான் நீ ஆடவே வேணாம்னு இழுத்துட்டு வந்துட்டேன்” பொய் கூறி சமாளித்த நண்பனை நம்பாமல் பார்த்த உதய் பார்வையை ஆதியிடமிருந்து மாற்றவில்லை.
“யாழினி அந்த பக்கம் நிக்கிறா” குறு குறு பார்வையை தாங்காமல் ஆதி.
“என்னடா டீல் பேசுன அவன்கிட்ட?” நண்பனை கண்டுகொண்டான் உதய்.
பற்களை காட்டி, “ஹீஹீ… புதுசா ஒரு பைக் வாங்கிருக்கான்ல அதான்” எப்பொழுது தான் இவன் வளருவான் என்று சந்தேகத்தில் சிரிப்போடு நகர்தான் உதய்.
சபையினரிடம் ஆசி வாங்க சென்ற தலையை சிரிப்போடு எடுத்து வந்த ஆதவனின் அன்னை அய்யரிடம் தாம்பூலத்தை கொடுக்க அய்யரின் கெட்டிமேளம் ஆணையில் நாதஸ்வரம், மேளம், மோகன வாத்தியங்களின் இன்னிசையோடும் சபை நிறைந்த மக்கள் மனதிலிருந்த ஆசீர்வாதம் பூக்கள் மூலம் மணமக்களை அடைந்து ஆதவன் – சஹானா வாழ்க்கையின் தொடக்கத்திற்கு இனிதே வித்திட்டது.
மணமக்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விட நண்பர்கள் தங்கள் இணைகளோடு எடுத்துக்கொண்ட புகைபடம் தான் அதிகம் ஆனது. அடுத்தடுத்து நடக்க வேண்டிய சடங்குகள் அத்தனையும் இனிதே முடிய மொத்தமாக நண்பர்கள் குடும்பம் அனைவரையும் ஒரு புகைப்படத்திற்கு சங்கமிக்க வைக்க ஹரி விஷ்ணு தான் படாதபாடு பட்டுப்போயினர்.
இறுதியாக அனைவரையும் நிறுத்தி கூட்டு குடும்பம் போல் ஒரு புகைப்படத்தை எடுத்தவுடன் மணப்பெண், அன்னை தங்கை காதலி மனைவி என அனைவரையும் தள்ளி நிறுத்திய நண்பர்கள் பஞ்ச பாண்டவர்களாய் ஐவர் மட்டும் புகைப்பட எடுத்துக்கொள்ள நிற்க
அவர்களை பார்த்து கருவிக்கொண்டிருந்த அவர்களது இணைகள், “போட்டோ நல்லாவே வராது” என்று ஆளுக்கொரு சாபங்களை விட்டாலும் அதை கேட்கும் நிலையில் நிச்சயம் ஐவரும் இல்லை.
“டேய் தலையை சரி பண்ணு” என்று தன்னுடைய பாக்கெட்டில் இருந்த சீப்பை எடுத்து கெளதம் ஆதியிடம் கொடுக்க, உதய்யின் சட்டையை சரி செய்துகொண்டிருந்தான் ஆதவன், தமிழ்.
“போதும்டா வாங்க” தன்னுடைய தலை சரியானதும் ஆதி அழைக்க புகைப்படத்திற்கு தயாராகினர் ஐவரும்.
“இவன் ரெடி ஆகிட்டா எல்லாரும் ரெடி ஆகிடனும். அவசரத்துக்கு பொறந்தவன்” நண்பனை திட்டி தன்னையே சரி செய்துகொண்டான் தமிழ்.
“அண்ணே கிளாரிட்டி நல்லா இருக்கனும். முக்கியமா சுத்தி நிக்கிற எந்த விஷ கிருமிகளும் ப்ரேம்குள்ள வர கூடாது சொல்லிட்டேன்”
கறாராக புடைப்பட கலைஞருக்கு ஆணை பிறப்பித்து உதய் பக்கம் திரும்பியவன், “போட்டோ எடுத்த அடுத்த செகண்ட் நீ சாப்புடுற இல்லனா இங்கையே வச்சு ஊட்டி விட்டுடுவேன்” கட்டளையை கொடுத்து புகைப்படத்திற்கு ஆதி நேராக திரும்பிவிட்டான்.
இந்த பரபரப்பிலும் தான் உண்டேனா என்று பார்த்துக்கொண்டே இருக்கும் நண்பனை பார்த்த உதய்க்கு தன்னுடைய தாயே தன் அருகில் நின்றது போன்ற எண்ணம் தோன்ற இமை தட்டாது கண்கள் குளமாகி இருந்த நிலையில் நண்பனை பார்த்து நின்ற உதய்யின் நிலையை அப்படியே புகைப்பட கருவி தன்னுள் அழகாய் பதித்துக்கொண்டது.
ஆசை, பேராசை, பொறாமை, க்ரோதம் என சக மனிதர்களுக்குள், உறவுகளுக்குள் இருப்பது போல் அல்லாமல் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மகிழ்ச்சியை அந்த நொடி அனுபவித்தது வாழ வேண்டும் என்பதை எந்நேரமும் உணர்த்தும் நட்பு பொக்கிஷம் என்றால், மன வேறுபாடு, துன்பங்கள், துரோகங்களை தாண்டி ஒற்றுமையின் பெயரில் அனைவர் கண்ணையும் தன் மேல் பதித்து நிற்கும் இந்த ஐவரின் நட்பில் எந்த நாளும் எவரின் தீய பார்வையும் படாமல் இதே சிரிப்போடும் எதிர்பார்ப்பில்லாத பாசத்தோடும் இவர்கள் நட்பு எந்நாளும் வளர்ந்துகொண்டே செல்லட்டும்…
நட்புக்கும் கற்புண்டு,
அந்த நட்பை சுயநலமின்று தரும் நண்பனும்
தாயாகி தான் போகிறான் நண்பனின் கண்ணீரிலே…
முற்றும்…
Please itha padinga “எல்லா கதைகளை போலவே இதுவும் இருந்துவிட கூடாதென்று கவனமாக இருந்தேன். அதனால் தான் காதலை சுருக்கி குடும்பத்தையும் முக்கியமாக நட்பையும் கதையின் மையப்புள்ளியாக வைத்தேன். அதுல நான் ஜெயிச்சிருக்கேனா தோத்துருக்கேனான்னு சொல்லிட்டு போங்க. உங்களோட கருத்துகள் தான் எனக்கு யானை பலம். நான் தப்பு பனிருந்தாலும் தயங்காம சொல்லுங்க திருத்திக்கிறேன்.” – Author
PS: கதை முடிஞ்சது இனியாவது சைலன்ட் ரீடர்ஸ் கமெண்ட் சொல்லலாமே…
முகநூலில் என்னுடைய குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்