“இந்த அத்தான் பொத்தானு சொல்றது எல்லாம் வேற யார் கிட்டயும் வச்சிக்கோ. உனக்கு தான் பொண்ணுங்க வரிசைல நிக்குறாங்களே?”
“ஏய், நான் உனக்கு மட்டும் தான் டி அத்தான். நீ மட்டும் தான் என்னோட முறைப்பொண்ணு. சரி சொல்லு என்ன விசயம்?”
“எனக்கு இன்னும் நாப்பது நாள்ல கல்யாணம் வச்சிருக்காங்க. நீ எதிரி குடும்பம் இல்லைன்னா கல்யாணத்துக்கு வான்னு பத்திரிக்கை வச்சிருப்பேன். இப்ப அதுவும் போச்சு”, என்று நக்கலாக சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
திக்கென்று இருந்தாலும் “அவ்வளவு சீக்கிரம் உன்னை எவனுக்கும் விட்டுக் கொடுத்துற மாட்டேன் டி”, என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் கதிர்.
பின் தன்னுடைய ஒன்று விட்ட சித்தப்பா மகனைக் காண சென்றான். அது வேறு யாரும் இல்லை. தேன்மொழியின் பண்ணையில் வேலை செய்யும் முத்து தான்.
முத்துவிடம் விஷயத்தைக் கறந்த கதிர் “தேன்மொழி மீது ஒரு கண்ணை வைக்கணும்”, என்று எண்ணிக் கொண்டு “தேனுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்குற மாதிரி தெரியலை முத்து. என் அத்தை மக தப்பான முடிவு எதுவும் எடுக்க கூடாது. அங்க என்ன நடக்குதுன்னு அப்ப அப்ப சொல்லு”, என்று சொல்லி விட்டு தான் அங்கிருந்து சென்றான்.
[the_ad id=”6605″]அதற்கு அடுத்த வாரத்திலே தேன்மொழியின் சித்தப்பாவான துரைராசு குடும்பம் தேன்மொழி வீட்டுக்கு வந்தது. பல வருடங்களாக பிரிந்து போன தம்பி திரும்பி வந்ததும் அனைவருக்கும் சந்தோஷமே.
ரேகாவும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டாள். தேன்மொழியும் கீதாவை தன்னுடைய தங்கையாக ஏற்றுக் கொண்டாள்.
“மாப்பிள்ளை வந்த நேரம் தான் குடும்பம் சேந்துருச்சு”, என்று ராஜேந்திரனை அனைவரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்.
தேன்மொழி மட்டும் மனதுக்குள் புகைந்து கொண்டிருந்தாள். ராஜேந்திரனைப் பற்றி அவளுக்கு ஒன்றும் தெரியாது தான். தன்னுடைய சித்தியின் அண்ணன் மகன் என்றும் மட்டும் தெரியும்.
ஆனாலும் அவனை திருமணம் செய்ய அவள் மனம் ஒப்பவில்லை. அவள் மனதில் இருக்கும் ராஜகுமாரனுக்கான உருவம் நிச்சயமாக ராஜேந்திரனுடையது அல்ல.
“இவங்க குடும்ப ஒற்றுமைக்காக, என் வாழ்க்கையை பணையம் வச்சிட்டாங்களே”, என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தாள்.
இதை அனைத்தையும் யோசித்துக் கொண்டு படுத்திருந்த தேன்மொழி முன் தினம் நடந்ததை நினைத்துப் பார்த்தாள். அவள் உடல் ஒரு முறை நடுங்கியது.
முன் தினம் மாலையில் எதை எதையோ யோசித்த படி அமர்ந்திருந்த தேன்மொழி அருகில் வந்தாள் கீதா.
அவளைப் பார்த்ததும் “என்ன கீதா?”, என்று கேட்டாள் தேன்மொழி.
“ராஜேந்திரன் அத்தான் உன்கிட்ட தனியா பேசனுமாம் அக்கா. அவருக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையாம். உன்கிட்ட பேசி முடிவெடுக்கணும்ன்னு சொன்னார். நம்ம பண்ணைக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல போக சொன்னார்”, என்று சொன்னாள்.
கண்களில் ஒளியுடன் அவன் திருமணத்தை நிறுத்தி விடுவான் என்று நம்பி அங்கு சென்று தான் மாட்டிக் கொண்டாள்.
பேச அழைத்தவன் அவள் அசந்த நேரம் அவளை கட்டிப் போட்டு விட்டான்.
[the_ad id=”6605″]
“ஹா ஹா உன்னைக் கடத்திட்டு வரணும்னு நினைச்சேன் டி. சரி இப்படி சொன்னா வருவியான்னு பாத்தேன். வந்துட்ட. என் வேலை ஈஸியா முடிஞ்சிரும்”, என்று சொல்லி சிரித்தான் ராஜேந்திரன்.
“இப்ப எதுக்கு என்னை கட்டி வச்சிருக்க? இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம்”
“கல்யாணமா? நமக்கா? உன்னை எவன் டி கட்டிக்குவான்?”
“அப்ப எதுக்கு கல்யாணத்துக்கு சம்மதிச்ச? வேண்டாம்னு சொல்லிருக்க வேண்டியது தான?”
“அப்ப எப்படி உன் குடும்பத்தையே பழி வாங்குறது? முதல்ல உன்னை கல்யாணம் செஞ்சிட்டு உன் குடும்பத்தை ஆட்டிப் படைக்கணும்னு தான் நினைச்சேன். ஆனா அதுல என் வாழ்க்கையும் அடங்கி இருக்கே. உன் குடும்பத்தால தான் எங்க அப்பாவுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை எல்லாம் கிடைக்காம போயிருது”
“அட ச்சி, மரியாதையை தானா வாங்கணும். பிச்சை கேக்க கூடாது. நீங்க நிறைய பணம் செலவு பண்ணி ஊருக்கு நல்லது பண்ணுனதா எங்க அம்மா சொன்னாங்க. அது மரியாதைக்கு தானா? எங்க பெரியப்பா உண்மையான மனசோட உதவி செய்ராறு. அதனால அவரை எல்லாரும் மதிக்காங்க”
“அதெல்லாம் எனக்கு தெரியாது. உன்னால உன் குடும்பம் தலை குனிஞ்சிருச்சுன்னா எங்க அப்பா புகழ் ஈஸியா இந்த ஊர்ல பரவிரும். பிரசிடென்ட்டா இருக்குற உங்க பெரியப்பா விலகி எங்க அப்பா பிரசிடென்ட் ஆகிறுவார்”
“என்னால என் குடும்பம் எப்படி தலை குனியும்? என்னை இப்படி கட்டி வச்சிருக்குறது யாருக்காவது தெரிஞ்சா உன் குடும்பத்தை ஊரே அசிங்க படுத்திரும்”
“தெரிஞ்சா தான டி? பக்காவா பிளான் பண்ணிட்டேன். உன் அழகுல எனக்கு கொஞ்சம் ஆசை இருக்க தான் டி செய்யுது. உன்னை அடைஞ்சிட்டு அப்புறம் எல்லாம் செய்யணும்னு நினைச்சேன். ஆனா அதுல நான் மாட்டிக்க கூடாது. அதனால தான் வேற யோசிச்சிட்டேன்”, என்று அவன் சொன்னதும் “ச்சீ”, என்றாள் தேன்மொழி.
“நான் பிளான் சொன்னதும் ச்சீன்னு சொல்லிக்கோ. இப்ப நான் இங்க இருந்து போய் என் தோஸ்த்தைக் கூட்டிட்டு வருவேன். பக்கா கிரிமினல் அவன். சென்னைல அவன் பேர்ல நிறைய கேஸ் இருக்கு. அவனைப் பத்தி எதுக்கு பேசுறேன்னு நினைக்கிறியா? அவன் தான உன் குடும்பத்தோட மாப்பிள்ளை”
“என்னது?”
“ஆமா, அவனை நீ தான் இந்த ரூம்க்கு வர சொல்லிருக்கேன்னு ஊரை நம்ப வைக்கணும். நீ தான இந்த ரூம் சாவி கொண்டு வந்த? நான் வந்து மிச்ச பிளான் சொல்றேன்”, என்று சொல்லி ஒரு துணியை எடுத்து அவள் வாயில் அடைத்தான்.
[the_ad id=”6605″]
பின் கதவை பூட்டி விட்டு சென்று விட்டான். கண்களில் நீர் வாழிய இருந்தாள் தேன்மொழி. அதன் பின் நடந்ததை எண்ணிப் பார்க்கும் போது திகைப்பாக இருந்தது.
“அத்தான் மட்டும் வரலைன்னா என்ன ஆயிருக்கும்?”, என்று யோசித்துக் கொண்டே படுத்திருந்தாள் தேன்மொழி.
“ஆனால் அவனும் என் குடும்பத்தையே பழி வாங்கணும்னு சொல்றானே. ஆள் ஆளுக்கு எதுக்கு டா என் குடும்பத்தையே பழி வாங்க நினைக்கிறீங்க? ராஜேந்திரன் அவன் அப்பாக்காக அப்படி சொன்னான். சரி இந்த அத்தான் எதுக்கு அப்படி சொன்னான்? அவனுக்கு எதுக்கு என் குடும்பத்து மேல கோபம்?”, என்று யோசித்தாள்.
ஆனால் விடை தான் தெரிய வில்லை. அதுவும் அவன் வாங்கிய சத்தியம் அதை எண்ணி அவளுக்கு தலை வலியே வந்தது.
“கல்யாணம் வேண்டாம்னு சொன்னதையே எங்க வீட்ல கேக்கலை. இப்ப மட்டும் நான் சொல்றதை கேப்பாங்களா?”, என்று எண்ணினாள்.
“கதிர் மேல காதலே இல்லை. ஆனா காதலிக்கிறேன்னு சொல்லணும். அவனைப் பாத்தாலே எரியும். ஆனா அவன் தான் வேணும்னு சொல்லணும். அவன் முகத்தை காலம் முழுக்க
பாக்கவே கூடாதுன்னு நினைச்சேன். ஆனா அவனைத் தான் சாகுற வரைக்கும் பாக்கணும். இதுக்கு பேசாம செத்துறலாம். ஆனா சாக கூடாதுன்னு சத்தியம் வாங்கி கிட்டானே”, என்று மனதுக்குள் தவித்து போனவள் இன்னும் சிறிது நேரத்தில் நடக்க இருக்கும் பூகம்பத்தை எண்ணி கலங்கினாள்.
“இப்ப என்ன ஆகும்? இன்னும் கொஞ்ச நேரத்துல விடிய போகுது. வீட்ல எல்லாரையும் அந்த நாய் பம்புசெட்டுக்கு கூட்டிட்டு போவான். அங்கே நான் இல்லைன்னு ஆன உடனே அவன் மூஞ்சு எப்படி போகும். அப்பப்பா அத்தான் மட்டும் வரலைன்னா, என்ன எல்லாம் ஆகிருக்கும். எல்லாரும் அசிங்கமா பேசிருப்பாங்களே. அதுவும் அப்பத்தா வாயில இருந்து செந்தமிழா வேற வருமே. அதுல இருந்து நல்ல வேளை காப்பாத்திட்டான். ஆனா அவனும் இப்படி மிரட்டி தான இங்க கூட்டிட்டு வந்தான்”
எப்படி நினைத்தாலும் அங்கிருந்து கதிர் தன்னை அழைத்து வந்தது தேன்மொழிக்கு மனதுக்கு இதமாக தான் இருந்தது. ஆனால் கதிருடனான திருமண வாழ்க்கையை நினைத்தால் அவளுக்கு பைத்தியம் பிடிப்பது போல இருந்தது.
“அவனை பாத்தாலே சண்டை போட தான தோணும். அதுக்கு பழி வாங்க தான் இப்படி செஞ்சானா? ஆனா என்னை பழி வாங்கினா அவன் வாழ்க்கையும் தான போகும். இதெல்லாம் நல்லதுக்கா கெட்டதுக்கா? அந்த ராஜேந்திரன் கிட்ட இருந்து தப்பிச்சது சத்தியமா ரொம்ப நல்ல விஷயம் தான். எங்க வீட்ல உள்ளவங்களை அவன் காலுல விழ வைப்பானாமே. ஆனால் கதிரும் அதே எண்ணத்துடன் தானே இப்படி செய்தான்”, என்று எண்ணினாள்.
சுற்றி சுற்றி அவள் நினைவு முழுவதும் இதைப் பற்றியே சுழன்றது.
“பெரியப்பா எதுக்கு இங்க வந்தேன்னு கேப்பார். அப்பா முறைச்சே கொன்னுருவார். பெரியம்மா நீயா இப்படி செஞ்சே அப்படிங்குற மாதிரி பாப்பாங்க. அம்மா பொது இடம்னு கூட பாக்காம வெளக்கமாத்தாலே மொத்துவாங்க. என் மேல உயிரையே வச்சிருக்குற அண்ணன்கள் எல்லாம் என்னை காரி துப்பிருவாங்க. அப்பத்தா அவ்வளவு தான் அசிங்கமா பேசியே கொல்லும். இவ்வளவு பிரச்சனையும் அந்த ராஜேந்திரனால் தான்? இதை அத்தானும் அவனுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டானே?”
[the_ad id=”6605″]“இவ்வளவு நடக்கும் போது, நான் கதிர் அத்தானைத்தான் கட்டுவேன்னு எப்படி சொல்றது. ஐயோ அது கூட இல்லை அவனை காதலிக்கிறேன்னு எப்படி சொல்றது. அத்தானாம் பொத்தான்., நான் இதுவரை காதலை பத்தியே யோசிக்கலையே டா. கஷ்டப் பட்டு நான் கதிர் அத்தானைத் தான் காதலிக்கிறேன்னு சொன்னா அடுத்த நிமிசமே ஆத்தா கழுத்துல கிடக்குற தாலியை எடுத்து கட்ட வச்சிருவாங்களா? சே படம் பாத்து ரொம்ப கெட்டுப் போயிட்டேன். பஞ்சாயத்து பண்ணை வீட்டுல நடக்கும். என்னால காலை அசைக்க கூட முடியாது. அதனால என்னால வெளியவும் போக முடியாது. அப்ப எங்க சாமி இருக்கும்?”
என்ன தான் நடக்கும் என்று இவளுக்கு குழப்பமாக இருந்தது.
குழப்பத்தின் நாயகனோ அவனுடைய வீட்டில் அவனுடைய அறையில் நல்ல உறக்கத்தில் இருந்தான்.
காதல் தீயை, நீர் அணைக்குமா….