அத்தியாயம் 4
நான் போகும் இடமெல்லாம்
என் காலடிச் சுவடுகளை
பின்பற்றி என்னை எரிக்கும்
காதல் தீ நீ!!!
எப்படி தேன்மொழியை வழிக்கு கொண்டு வருவது என்று அவன் யோசிக்கும் முன்னரே அவனின் படிப்பு, பரிட்சை என்று கவனம் சென்றது. கதிர் பன்னிரெண்டாம் வகுப்பையும் முடித்தான்.
வேளாண்மை துறையில் பட்ட படிப்பை தேர்ந்தெடுத்தான். ஆனால் லீவுக்கு வரும் போதெல்லாம் ஊரையே சுற்றி வருவான். அவனுடைய தேடல் அவள் மட்டுமே.
அவளை எங்கேயாவது பார்த்து விட்டால் சும்மாவும் போக மாட்டான். ஏதாவது சீண்டி அவள் கோபத்தைக் கண்ட பிறகே அங்கிருந்து செல்வான்.
ஒரு நாள் அவள் பள்ளிக்கு செல்லும் போது அவள் எதிரே நின்றவன் அவளையே பின் தொடர்ந்தான்.
முதலில் யாரோ என்று எண்ணி பயந்தவள் அவனைக் கண்டதும் “நீ தானா? நான் கூட ஏதோ திருடன்னு நினைச்சேன்”, என்று முறைத்துக் கொண்டே சொன்னாள்.
அவள் முறைப்பை கண்டு அசராமல் “என் அத்தை மகளுக்கு வாய் நீளம்ன்னு சொன்னாங்க. ஆனா அது உண்மைன்னு இப்ப தான் தெரியுது”, என்று வம்பிழுத்தான்.
“இங்க பாரு, உன் குடும்பத்துக்கும் என் குடும்பத்துக்கும் ஓட்டும் இல்லை, உறவும் இல்லைன்னு ஆகிருச்சு, அதை விட்டுட்டு சும்மா அத்தை மக, நொத்தை மகன்னு பின்னாடி வந்த விளக்கமாறு பிஞ்சிரும். பாத்துக்கோ”
“ஆமா டி, இந்தா அடிச்சிக்கோன்னு நிப்பேன் பாரு. அந்த கையை உடைச்சு அடுப்புல வச்சிருவேன்”
“நீ என்ன டா என்னை திட்டுறது? இப்ப இங்கயே நம்ம சண்டையை வச்சிக்குவோம். யாரு ஜெயிக்கான்னு பாப்போமா? என்கிட்ட வச்சிக்கிட்டா மூஞ்சி முகரையை எல்லாம் பேத்துருவேன். என்கிட்ட முன்னாடி அடி வாங்கினது, கடி வாங்கினது எல்லாம் மறந்துருச்சா?”
“இப்ப அப்படி சண்டை போட்டா எப்படி? இன்னும் அஞ்சாறு வருசத்துல உன்னை கட்டிக்கிட்டு என் காலுக்கு கீழ உன்னை போட்டுருப்பேன் டி”
“ஹா ஹா, கல்யாணமா உன்னையா? போயும் போயும் உன்னைக் கட்டுறதுக்கு அந்த கிணத்துல குதிச்சிருவேன் டா கருவண்டு. என்னை தேடி ஒரு ராஜகுமாரன் வருவான். அவனை கட்டிக்கிட்டு உன் கண் முன்னாடி வலம் வரல? அன்னைக்கு உன் மூஞ்சியை எங்க வச்சிக்கிறன்னு பாக்குறேன்”
“போடி, நான் சொல்றதை நிறைவேத்தலைன்னா நான் கதிர் இல்லை டி”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
[the_ad id=”6605″]
மூக்கு விடைக்க அவன் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்த தேன்மொழியின் முகம் கோபத்தில் சிவந்தது. அதே கோபத்தில் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டுக்கு சென்றாள்.
என்னவென்று விசாரித்த தர்மதுரையிடம் “நான் போகும் போது…”, என்று சொல்ல ஆரம்பித்தவளின் வாயை மூடும் படி சைகை செய்தார் செல்லதுரை.
தன்னுடைய தாத்தாவின் செய்கையில் ஏதாவது காரணம் இருக்கும் என்று எண்ணமிட்டவள் “ஸ்கூல்க்கு போகும் போது கீழ விழுந்துட்டேன் பெரியப்பா”, என்று சமாளித்தாள்.
அவள் கீழே விழுந்ததுக்கு அவளை வைத்தியம் என்ற பெயரில் மொத்த குடும்பமே சாகடித்தது தனிக் கதை. அன்று இரவு செல்லதுரை அருகில் சென்ற தேன்மொழி “தாத்தா உன்னால பொய் சொல்லி, பேசாம கீழேயே விழுந்துருக்கலாம்னு நினைக்க வச்சிட்டாங்க”, என்றாள்.
அவளைப் பார்த்து சிரித்தார் செல்லதுரை. “நான் சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ சிரிக்கிற? சரி எதுக்கு அப்ப பெரியப்பா கிட்ட சொல்ல கூடாதுன்னு சொன்ன? இன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?”
“தெரியும் தேனு. இன்னைக்கு நீ கதிர் கூட வாயாடிக்கிட்டு இருந்ததை கேட்டேன்”
“கேட்டுமா பேசாம வந்த? அவன் என்னவெல்லாம் சொன்னான்னு பாத்தியா?”
“பதிலுக்கு நீயும் தான பேசின?”
“அப்ப வாயை மூடிக்கிட்டு வர சொல்றியா?”
“நான் அப்படி சொல்லலை. அவன் பேசினான், நீ பதிலுக்கு பேசின. இது உங்க ரெண்டு பேருக்கும் உள்ள தனிப் பட்ட விஷயம். அதை போய் வீட்ல சொல்லி ஏற்கனவே பகைல இருக்குற குடும்பம் மேலும் பகையை வளக்கணுமா? அவன் வம்பு பண்ணுனா நீயும் பேசு. இல்லை யார் கிட்டயாவது சொன்னா தான் உனக்கு நிம்மதின்னா என்கிட்ட சொல்லு. ஆனா வீட்ல வேற யார் கிட்டயும் சொல்லிறாத ஆத்தா. என் குடும்பமும் என் நண்பன் குடும்பமும் கடைசி வரைக்கும் ஒண்ணா இருக்கணும்னு நினைச்சேன். ஆனா நான் பெத்த மகனே அவனைக் கொன்னுட்டான். இந்த குடும்பம் எப்ப ஒண்ணு சேருதோ அப்ப தான் என் நண்பன் ஆத்மா சாந்தி அடையும்”, என்று சொல்லிக் கொண்டிருந்த செல்லதுரையின் உயிர் அடுத்த நிமிடமே அவரை விட்டு பிரிந்தது.
மனதில் இருந்ததை அவளிடம் கூறியதாலோ என்னவோ அவர் உயிர் இந்த உலகத்தை விட்டு பிரிந்து விட்டது.
தன்னிடம் பேசிக் கொண்டிருந்த தாத்தா கண்கள் சொருக கீழே விழவும் “தாத்தா”, என்று கத்திய தேன்மொழியின் சத்தம் கேட்டு மொத்த குடும்பமும் அங்கே வந்தது.
தாத்தாவின் பேச்சும், அவருடைய எண்ணமும் தேன்மொழியின் மனதில் பதிந்து போனது. காதலுடனும் நேசத்துடனும் வாழ்ந்த செல்லதுரை மறைந்தது சண்முகம்மாளை வெகுவாக பாதித்தது.
செல்லதுரை இறந்ததற்க்கு கதிர் வீட்டில் இருந்து ஒருவரும் வர வில்லை.
“என்ன தான் கோபம் இருந்தாலும் சாவுக்கு வர வேண்டாமா?”, என்று சகுந்தலாவும் கோபத்தில் பிறந்த வீட்டை வெறுத்தாள்.
துரைராசு மட்டும் வந்து தந்தைக்குரிய காரியத்தை அண்ணன்களுடன் செய்து முடித்து விட்டு கிளம்பி விட்டார்.
முதல் முறை தேன்மொழியிடம் வம்பு செய்த கதிருக்கு “இந்த சின்ன வாண்டு அவ வீட்ல சொல்லி, ஏதாவது பிரச்சனையை கிளப்பிருவாளோ?”, என்ற பயம் இருந்தது.
ஆனால் அப்படி எதுவும் நடக்காததால் அவளிடம் அடிக்கடி வம்பிழுக்க ஆரம்பித்தான். அவன் என்ன சொன்னாலும் அதற்கு பதிலடி கொடுத்து விடுவாள் தேன்மொழி.
[the_ad id=”6605″]
ஆனால் எப்போதும் கதிர் அவளை மிரட்டுவது அவளை கல்யாணம் செஞ்சு அவளை அவனுடைய காலடியில் விழ வைப்பதாக தான் இருக்கும்.
“இவனை நான் ஏன் கட்ட போறேன்? இவனை எங்க வீட்ல யாருக்கும் பிடிக்காது. அதனால இவன் சும்மா புளிப்பு காட்டுறான்”,என்று எண்ணி தான் அவனிடம் வம்பிழுப்பாள்.
வேளாண்மைக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்ற பின்னர், முதுகலைப் படிப்புக்கு விண்ணப்பித்திருந்தான் கதிர்.
அவன் முதுகலைப் படிப்பில் சேரும் போது தேன்மொழி பள்ளிப் படிப்பை முடித்திருந்தாள். அதற்கு பின்னர் அவளை யாரும் படிக்க வைக்க முன் வர வில்லை. அதனால் தன்னுடைய தோழிகளுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தாள்.
அப்போது அடிக்கடி கதிருக்கும் அவளுக்கும் மோதல் ஏற்படும். அடிக்கடி அவனைப் பார்த்திருந்தாலும் அவனுடைய வளர்ச்சி, அவளுக்கு சில நேரம் திகைப்பை ஏற்படுத்தும்.
“ஒல்லியா வளத்தியா இருந்த கருவாயன், எப்ப இப்படி டிப் டாப்பா மாறுனான்?”, என்று அடிக்கடி யோசிப்பாள் தேன்மொழி.
அதுவும் அவளுடைய தோழிகள் அவனை அழகன் என்று புகழ்ந்து தள்ளும் போது அவர்களிடம் எரிந்து விழுவாள். கதிரும் படித்து முடித்து விட்டு தன்னுடைய பண்ணையிலே வேலை செய்ய ஆரம்பித்தான். அவன் படிப்பு பெரிதாக அதற்கு உதவியது.
தேன்மொழிக்கு மாப்பிள்ளை பார்க்கலாம் என்று முடிவெடுத்தார்கள். அவளோ “நான் அண்ணன்களுக்கு கல்யாணம் செஞ்சு கொடுத்த பிறகு தான் கட்டிக்குவேன்”, என்று சொல்லி தப்பித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது தான் ராஜேந்திரன் குடும்பம் அவளை பெண் பார்க்க வந்தது. ராஜேந்திரன் வேறு யாரும் அல்ல. வீட்டை விட்டு பிரிந்து சென்ற துரைராசுவின் மனைவி ரேகாவுடன் பிறந்த சோலையப்பனின் மகன் தான்.
ராஜேந்திரனுக்கு தேன்மொழியைக் கொடுத்தால் பிரிந்து சென்ற தங்களின் தம்பி திரும்பி வந்து விடுவான் என்று எண்ணி தர்மதுரையும் ராஜதுரையும் இந்த கல்யாணத்துக்கு சம்மதித்தார்கள்.
தேன்மொழி வேண்டாம் என்று சொல்லியும் அவர்கள் அவளுடைய பேச்சைக் கேட்க வில்லை. அவர்கள் நினைத்தது போல பெண் பார்க்க வந்த அன்றே நிச்சயத்தை முடித்தார்கள்.
தேன்மொழி கையை விட்டு அனைத்தும் சென்றிருந்தது. அவள் புன்னகை தொலைத்த முகத்துடன் நடமாடிக் கொண்டிருந்தாள்.
செல்வியிடமும் சகுந்தலாவிடமும் போய் நின்றவள் “பெரியம்மா, அம்மா, நீங்களாவது சொல்லுங்க. எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்”,என்றாள்.
“உன் வயசு பிள்ளைக எல்லாம் கல்யாணம் கட்டிக்கலை? உனக்கு மட்டும் என்ன? மாப்பிள்ளை உனக்கு பிடிக்கலையா கண்ணு?”,என்று கேட்டாள் செல்வி.
“நான் எங்க அவனைப் பாத்தேன்?”
“பாக்கலையா? நல்ல களையா இருக்காரு. காலேஜ் படிச்சு சொந்த மில்லையே பாத்துக்குறார். பணக்கார குடும்பம். வேற என்ன வேணும்? இனி எது சொல்றதா இருந்தாலும் உன் பெரியப்பா, அப்பா கிட்டயே சொல்லு”, என்று சொன்னாள் சகுந்தலா.
வேறு வழி இன்றி அங்கிருந்து நகர்ந்தவளின் காதில் “உன் அண்ணன் வீட்ல நல்ல படியா பேசியிருந்தா இந்நேரம் உன் அண்ணன் மகனுக்கு நம்ம தேனை கட்டிக் கொடுத்துருக்கலாம் என்ன சகு?”, என்று செல்வி பேசுவது கேட்டது.
“அப்படி சொல்லாதீங்க அக்கா. எங்க அண்ணன் என்னை ஒதுக்கி வச்சிருச்சு. அந்த அளவுக்கு நான் என்ன பண்ணுனேன்? எங்க அம்மா கூட என்னை வெறுத்துட்டு. அந்த உறவு முடிஞ்சு போனது போனது தான்க்கா. இனி ஒண்ணும் பண்ண முடியாது”, என்று கலங்கிய குரலில் சகுந்தலா சொன்னதும் அங்கிருந்து சென்று விட்டாள் தேன்மொழி.
நேராக தன்னுடைய அண்ணங்களிடம் போய் நின்றவள் கல்யாணத்தை நிறுத்த சொன்னாள். தங்கை மேல் இருந்த பாசத்தில் அவர்கள் சென்று பேசினார்கள். ஆனால் அவர்களின் பேச்சையும் தர்மதுரையும் ராஜதுரையும் கேட்க வில்லை.
கடைசி முயற்சியாக தன்னுடைய பாட்டியிடம் முறையிட்டாள். அதுவும் தோல்வியாக முடிய மனதை கல்லாக்கிக் கொண்டு அமைதியாக இருந்தாள்.
அப்போது ஒரு நாள் தன்னுடைய தோழியை பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தவளின் முன்னே வந்து நின்றான் கதிர். எப்போதும் அவனிடம் சண்டைக்கு மல்லுக்கட்டுபவள் இன்று அவனிடம் இருந்து விலகி நடந்தாள்.
அவள் செயலில் புருவம் முடிச்சிட்டாலும் அவள் எதிரே மீண்டும் வந்து நின்றவன் “என்ன டி திமிரா? கண்டுக்காம போற?”, என்று கேட்டான்.
[the_ad id=”6605″]
“உன்கிட்ட சண்டை போடுற மனநிலைல நான் இல்லை. வழியை விடு. நான் போறேன்”
“உன் திமிருக்கு நீ என் கிட்ட பட தான் டி போற?”
“உன் கனவை கொண்டு போய் குப்பைல போடு”
“சரி சரி என்ன ஆச்சு? உன் முகமே சரி இல்லை”
“என் முகத்துக்கு என்ன? ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஒரு வாரமா ஐயா ஊர்ல இல்லை போல? அதான் விஷயம் தெரியலை”
“நான் ஊர்ல இல்லாதது இவளுக்கு எப்படி தெரியும்?”, என்று எண்ணிக் கொண்டு “தோட்டக்கலை விஷயமா ஒரு மீட்டிங் இருந்தது. அதுக்கு போனேன். என்ன விஷயம் எனக்கு தெரியணும்? இந்த அத்தானை நினைச்சு தவிச்சு போய்ட்டியா?”, என்று கேட்டான்.