பின் சத்தம் கேட்கும் என்பதால் அமைதியாக இருந்தான். சிறிது நேரம் கழித்து தான் மூவரும் வந்தார்கள். “விக்கி, கிரி, நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு கிளம்புங்க. போகும் போது எங்க பண்ணைல, என் அப்பத்தா இருக்கு. அது எனக்காக காத்துட்டு இருக்கும். நான் ஒரு முக்கியமான வேலைல இருக்கேன், வந்துருவேன்னும், நான் அங்கயே பாட்டியை இருக்க சொன்னேன்னும் சொல்லிருங்க. அப்புறம் இங்க நடந்ததை யார் கிட்டயும் சொல்ல வேண்டாம். அந்த குடிகார நாயை நானும் முத்துவும் பாத்துக்குறோம்”,என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான் கதிர்.
அதன் பின் நடந்தது அனைத்தும் மனதில் மின்னி மறைந்தது. “இது எல்லாமே உன் மேல உள்ள அன்புல தான் டி செஞ்சேன். கல்யாணம் முடிஞ்ச அப்புறம் எல்லாம் சரியாகிரும். என் கூட வந்து இரு டி., என் காதல் உனக்கு புரியும்”, என்று எண்ணிக் கொண்டான்.
ராஜேந்திரனுடன் திருமணம் என்று முடிவு செய்யப் பட்ட அதே தேதியில் தான் கதிர் தேன்மொழி திருமணம் முடிவாகி இருந்தது.
அதனால் வேலைகள் வேகமாக நடந்தது. பத்திரிக்கை அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
பட்டு தாலி எடுக்க ஒரு நாள் இரண்டு குடும்பமும் சென்றது. ஆனால் தேன்மொழி மற்றும் கதிர் வர வில்லை. அவர்களை கூட்டிக் கொண்டு செல்ல யாரும் விரும்பவும் இல்லை.
தேன்மொழி அவர்களுடன் போக ஆசைப் பட்டாள். அது கதிரைப் பார்க்க அல்ல. அவளுடைய கல்யாண சேலையை அவளே தேர்ந்தெடுக்க.
“நானும் வரேன் பெரியம்மா”, என்று தேன்மொழி சொல்லும் போது “கல்யாண பொண்ணு எல்லாம் வரக் கூடாது”, என்று சண்முகம்மாள் மறுத்து விட்டாள்.
[the_ad id=”6605″]
பாட்டியை திட்டிக் கொண்டு இருந்தாள். அவளை நிச்சயமாக அழைத்து வர மாட்டார்கள் என்று தெரிந்த கதிர் “ஒரு வேலை இருக்கு”, என்று சொல்லி கழண்டு கொண்டான்.
தினேஷும் செல்வாவும் “நாங்க அண்ணா கூட போய் எங்களுக்கு தனியா டிரெஸ்ஸ் எடுத்துக்குறோம்”, என்று சொல்லி தப்பித்து விட்டார்கள்.
ஆனால் கண்ணன், செந்தில் அவர்களுடன் சென்று அவர்களுக்கு சாப்பாடு, காப்பி, வடை என்று வாங்கி கொடுத்து பொறுப்புடன் கவனித்துக் கொண்டார்கள்.
தேன்மொழிக்கு ஐந்து பட்டு சேலைகள், அது போக இருபது சாதாரண சேலைகள் எடுத்தார்கள். மேலும் எடுக்க ஆசை தான். ஆனால் வேறு புடவைகள் நன்றாக இல்லாததால் இன்னொரு நாள் வரலாம் என்று முடிவு செய்தார்கள்.
வேணியும் தன்னுடைய மருமகளுக்கு என்று சில சேலைகளை எடுத்தாள்.
தாலியும் அவர்கள் முறைப் படி வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தார்கள். அனைத்தையும் தேன்மொழி முன்பு கடை விரித்தார்கள்.
இப்போது சகுந்தலாவை தவிர அனைவருமே தேன்மொழியுடன் பேசினார்கள். சகுந்தலா பேசாதது வருத்தமாக இருந்தாலும் சகஜமாக இருந்தாள் தேன்மொழி.
அவர்கள் வாங்கி வந்திருந்தது அனைத்தும் அவளுக்கு பிடித்தது. அதுவும் முகூர்த்த சேலை அவள் நினைத்ததுக்கு மேலே அழகாக இருக்கவும் சந்தோஷமாக இருந்தாது.
கதிரைத் தான் தேன்மொழிக்கு பிடிக்கவில்லையே தவிர, மற்ற படி கல்யாணத்தில் அவள் சந்தோஸமாகவே இருந்தாள்.
அவள் முகத்தில் இருந்த சந்தோஷம் அனைவருக்கும் நெகிழ்வைக் கொடுத்தது.
இருவர் வீட்டிலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து பந்தக்கால் நாட்டார்கள். புரணி பேசுபவர்கள் இவர்கள் குடும்பம் ஒன்னானதை நினைத்து வயிற்றெரிச்சல் பட்டார்கள்.
அப்போது அந்த ஊரில் அனைவர் வாயிலும் அலச பட்டது கதிர் தேன்மொழி திருமணம்.
விஷயம் அறிந்த ராஜேந்திரனுக்கு அன்று தேன்மொழியை காப்பாற்றியது கதிர் தான் என்று நினைத்து கோபம் எழுந்தது.
திருமண விஷயம் அறிந்த துரைராசுவோ எதையோ யோசித்தாலும் பின் அதை அப்படியே விட்டார். ஆனால் ரேகாவோ “பாத்தீங்களா, இப்பவும் உங்க அண்ணனுகளுக்கு அந்த மதியழகன் குடும்பம் தான் உசத்தி. என் அண்ணன் மகனை வேண்டாம்னு சொல்லிட்டு அதே முகூர்த்தத்துல அந்த மதியழகன் பையனுக்கு கட்டிக் கொடுக்குறதைப் பாருங்க”, என்று கத்தினாள்.
[the_ad id=”6605″]
அனைத்தையும் பொறுமையாக கேட்ட துரைராசு “ரேகா இது தேன்மொழியோட விருப்பத்தோட நடக்குது. அவ அன்னைக்கு பேசினதை கேட்ட தான? அதுக்கு என் அண்ணன்கள் எப்படி பொறுப்பாவாங்க?”, என்று கேட்டார்.
“என்ன இந்த மனுஷன் இப்படி பேசுராரு?”, என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது அங்கு அவளின் அண்ணன் சோலையப்பன் வந்தார்.
“பாத்தியா மாப்பிள்ளை, உன் அண்ணனுங்களை. எப்படி சுயநலமா இருக்காங்க பாரு. நீ உங்க அண்ணன் குடும்பத்தோட ஒண்ணா சேரணும்னு தான் என் பையனுக்கு தேன்மொழியை எடுக்கலாம்னு பொண்ணு கேட்டு போனேன். இப்ப அவங்களுக்கு நாங்களும் முக்கியம் இல்லை. கூட பிறந்த நீங்களும் முக்கியம் இல்லை”, என்றார்.
துரைராசுவின் காதில் அண்ணனும் தங்கையும் சேர்ந்து எதை எதையோ ஓதினார்கள். அனைத்தையும் கேட்ட துரைராசு, “சும்மா தேவை இல்லாததை பேசிக்கிட்டு இருக்காதீங்க. தேன்மொழி கல்யாணத்துக்கு நான் போக கூடாதுன்னு சொல்ல வாரீங்க. அப்படி தான? ஆனா என் அண்ணன்கள்; வந்து பத்திரிக்கை வச்சா நான் கண்டிப்பா போவேன்”, என்று சொல்லி விட்டு நகர்ந்து விட்டார்.
அண்ணனும் தங்கையும் ஒருவர் மாற்றி ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
அதே போல் தர்மதுரையும் ராஜதுரையும் பத்திரிக்கை எடுத்துக் கொண்டு துரைராசு வீட்டுக்கு சென்ற போது துரைராசு வீட்டில் இல்லை.
அதனால் ரேகாவுக்கு சாதகமாக போனது. “என் அண்ணன் பையனை வேண்டாம்னு சொன்ன உங்க குடும்ப கல்யாணத்துக்கு நானோ என் புருசனோ வரமாட்டோம். ஒரு பத்திரிக்கையை வம்பாக்காதீங்க”, என்று முகத்தில் அடித்தது போல சொல்லி அவமானப் படுத்தினாள்.
“எப்படியும் தம்பி, பொண்டாட்டி பேச்சை தாண்ணே கேப்பான். நாம போகலாம்”, என்று சொல்லி தர்மதுரையை அழைத்து சென்றார் ராஜதுரை.
இது எதுவும் தெரியாமல் இருந்த துரைராசுவின் போன் ஒலித்தது. யார் நம்பர் என்று தெரியாமல் அதை எடுத்து காதில் வைத்தவர் “யார்ங்க பேசுறது?”,என்று கேட்டார்.
“சித்தப்பா, நான் தேன்மொழி பேசுறேன்”, என்று சொன்னதும் குழப்பத்துடன் “என்ன தேனு?”, என்று கேட்டார்.
“சித்தப்பா நான் அன்னைக்கு உங்க தம்பி குடும்பம் ஒண்ணு சேரணும்னு என் வாழ்க்கையை கெடுக்கீங்கன்னு பேசுனேன். அதுல உங்களுக்கு கோபம் இருக்கும். கோபம் இல்லைன்னா கூட வருத்தம் இருக்கும். அதுக்காக என்னை மன்னிச்சிருங்க. இன்னைக்கு அப்பாவும் பெரியப்பாவும் பத்திரிக்கை கொடுக்க உங்க வீட்டுக்கு வந்தாங்க. சித்தி உங்கள பாக்க விடாம அவமான படுத்திருக்காங்க.
ரெண்டு அப்பாவும் வீட்டுக்கு வந்து ஒரே அழுகை. எனக்கு ராஜேந்திரனை சுத்தமா பிடிக்கல சித்தப்பா. எவ்வளவோ வீட்ல சொன்னேன். என் பேச்சை கேக்கல. நீங்க வீட்டுக்கு வந்துட்டீங்கன்னு எல்லாரும் சந்தோஷ பட்டாங்க. எனக்கும் நீங்க எங்க கூட இருக்குறது சந்தோஷம் தான். ஆனா ராஜேந்திரனை பிடிக்கல. என்ன செய்றது? உங்களை கஷ்ட படுத்திருந்தா என்னை மன்னிச்சிருங்க. நீங்க தயவு செஞ்சு என் கல்யாணத்துக்கு வாங்க சித்தப்பா. நீங்களும் எனக்கு அப்பா தான? கீதா கல்யாணத்துக்கு போகாம இருப்பீங்களா? நான் கண்டிப்பா உங்களை எதிர்பார்ப்பேன். நான் பேசினது யாருக்கும் தெரிய வேண்டாம். வைக்கிறேன்”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டாள்.
[the_ad id=”6605″]
“நீங்க தயவு செஞ்சு கல்யாணத்துக்கு வாங்க சித்தப்பா. நீங்களும் எனக்கு அப்பா தான? கீதா கல்யாணத்துக்கு போகாம இருப்பீங்களா? என்ற தேனின் வார்த்தைகள் அவர் மனதில் மறுபடி மறுபடி வந்து போனது.
“என் அண்ணன் மகள் எவ்வளவு தெளிவா பேசுறா? சின்ன வயசுல என் காலையே சுத்தி வருவா. இன்னைக்கு இவ்வளவு பெரிய பொண்ணா ஆகிட்டா”,என்று உள்ளுக்குள் பழசை எல்லாம் நினைத்து பார்த்தவர் மனம் சோர்ந்து போனது.
“அவங்க பத்திரிக்கை கொடுக்க வந்ததை என்கிட்ட மறைக்கிறியா ரேகா? இதுக்கு என்ன பண்ணணும்னு நான் பாத்துக்குறேன்”, என்று எண்ணி முடிவெடுத்து விட்டு தன்னுடைய வேலையைப் பார்த்தார்.
அன்னம் மருத்துவமனையில் இருந்து வந்ததில் இருந்து மூன்று பேரன்களிடம் சிக்காமல் தப்பித்துக் கொண்டிருந்தாள்.
அன்னைக்கு எதுக்கு பாட்டி மயங்கி விழுந்த என்று அவர்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் அவர்களைக் கண்டால் தூங்குவது, இல்லையென்றால் ஏதாவது வேலை இருப்பது போல கழண்டு கொண்டாள்.
நிச்சயதார்த்த தினமும் வந்தது. கதிர் வீட்டில் இருந்து அனைவரும் தேன்மொழி வீட்டுக்கு தாம்பூலத் தட்டுக்களுடன் வந்தார்கள். பட்டுப்புடவையில் மிதமான நகைகள் போட்டு, தலை நிறைய மல்லிகைப் பூ வைத்து சபைக்கு அழைத்து வரப் பட்டாள் தேன்மொழி.
கதிர் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க அவன் அருகில் மற்றொரு நாற்காலியில் அமர வைக்கப் பட்டாள் தேன்மொழி.
ஐயர் நிச்சயதார்த்த பத்திரிக்கை வாசிக்க, இருவருக்கும் பெரியோர்களால் நிச்சயம் செய்யப் பட்டது.
அப்போது கண்ணன் இருவரின் கையில் மோதிரத்தைக் கொடுத்து மாற்றிக் கொள்ள சொன்னான்.
அதை யாரும் எதிர்பார்க்காததால் கண்ணனை புகழ்ந்து தள்ளினார்கள். கதிரும் தேன்மொழியும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் மோதிரத்தை மாற்றிக் கொண்டனர். இருவரின் கைகள் தீண்டிய போது அவனுக்கு மனதுக்கு பிடித்த பெண்ணின் தொடுகை சிலிர்த்தது. அவளுக்கு ஒரு ஆணின் தீண்டல் என்று சிலிர்த்தது.
தேன்மொழி வீட்டு மாடியிலே சாப்பாடு தாயராக இருந்தது. அனைவரும் அமர்ந்து சாபிட்டார்கள். தேன்மொழியை கதிருடன் அமர்ந்து சாப்பிட சொல்ல அவள் “எனக்கு இப்ப பசியில்லை”, என்று சொல்லி மறுத்து விட்டாள்,.
சாப்பாடு முடிந்ததும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கதிர் குடும்பம் சென்றது. தன்னுடைய அலங்காரத்தை எல்லாம் கலைத்து விட்டு கதிரைப் பற்றிய யோசனையில் இருந்தாள் தேன்மொழி.
இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் போது தேன்மொழி கதிரை
யாருக்கும் தெரியாமல் பார்த்தாள். ஆனால் அவனோ அவளைப் பார்க்கவே இல்லை. அவள் அதை எதிர் பார்த்தது தான்.
அவன் அவளைப் பார்க்க வேண்டும் என்று அவளுக்கு ஆசை இல்லை தான். ஆனால் ஏன் அவன் அப்படி இருக்கிறான் என்று குழப்பம் மட்டுமே. “கோபம் இருந்தா முறைக்கவாது செய்யணுமே. இவன் மன்னு மாதிரி இருக்கான். பரவால்ல அந்த மண்ணை நான் கல்யாணம் அப்புறம் சமட்டி எடுக்கல, நான் தேன்மொழி இல்லை”, என்று எண்ணிக் கொண்டாள்.
காதல் தீயை நீர் அணைக்குமா?…..