“வாங்க மாமா….வாழ்த்துக்கள் மாமா…..சூப்பர் கலக்கிட்டீங்க போங்க….இன்றைய ஹாட் டாப்பிக்கே நீங்க தான் போங்க…”என்று ஆர்பரித்து கூற புன்னகை முகமாக தலை அசைத்தவனின் கண்கள் தன்னவளையே மையம் கொண்டிருந்தது.கயலோ அவனை வெறுமையாக பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“கயல்….நீ போ மாப்பிள்ளையை பாரு….நான் பார்த்துக்குறேன்…”என்று பார்வதி மகளை கிளப்ப பார்க்க,கயல் மறுத்து பதில் கூறும் முன்,
“கயல் நான் குளிக்கனும் எனக்கு டிரஸ் எடுத்துக் குடு வா….”என்று சத்யா அனைவரின் முன்னும் அவளின் கையை பிடித்து இழுத்து செல்ல,அதுவரை அவளை குறைவாக பேசிய நந்துவின் மாமியார் ஆ வென வாய் பிளந்து நின்றுவிட்டார்.
கயல்விழி அனைவரின் முன்பும் சத்யா அவ்வாறு செய்வான் என்று நினைக்காதவள் அனைவர் முன்பும் எதுவும் பேசமுடியாமல் அமைதியாக அவனில் அடங்கி அவனின் பின்னே நடந்தாள்.சத்யாவிற்கு நன்கு தெரியும் கயல் கோபமாக தான் இருப்பாள் என்று அதனாலே அவளை பேசவிடாமல் அவளை இழுத்து வந்தது.கயலின் அறைக்குள் இருவரும் நுழைந்த அடுத்த நொடி சத்யாவின் இறுகிய அணைப்பில் இருந்தாள் கயல்விழி.
“ம்ம்…கயலம்மா…என்னடீ இப்படி மெலிஞ்சிட்ட….”என்று கூறிக் கொண்டே அவளின் முகம் முழுவதும் அவன் அதரத்தால் ஊர்வலம் நடத்த,கயலோ பொம்மை போல நின்றாள்.
“ப்ச்…நீ கோபமா இருப்பனு எனக்கு தெரியும் ஆனா…எனக்கு வேற வழி தெரியலைடீ….அம்மா உன்னை பார்த்துக்கிட்டே இருந்தா இன்னும் தான் கோபப்படுவாங்க அதான் இப்படி பண்ணினேன்….எனக்கு தெரியும் அம்மா இன்னைக்கு வருவாங்க பாரு உன்னை கூப்பிட்டு போக….”என்று அவன் கூற கயலிடம் எந்தவித எதிர் வினையும் இல்லாமல் போக அவளின் முகத்தை பார்க்க,அவள் முகம் முழுவதும் வெறுமையாக இருந்தது.
“ஏய் கயலம்மா….ப்ச்….பேசமாட்டியா…..எவ்வளவு வேலை தெரியுமா…எல்லாத்தையும் முடிச்சிட்டு உன்னை பார்க்க தான் ஓடி வரேன்….”என்றுவிட்டு அவளின் நெற்றியில் அதரத்தை பதித்து விலக,கயல் அவனின் அணைப்பில் இருந்து நகர்ந்தவள் அவனின் முகத்தை பார்த்தாள்.அவனது முகமும் பொலிவிழந்து தான் காணப்பட்டது.அவனும் தன்னை பிரிந்து வாடியுள்ளான் என்று அவளுக்கு நன்கு புரிந்தது.அவளின் எண்ணப்போக்கை கண்டு கொண்டவன் அவளை நகரவிடாமல் தன்னுடன் இறுக்கி கொண்டு,
“என்கிட்ட பேசாம நகர முடியாது…”என்று அவன் நிற்க,கயலின் மனமும் அவனிற்காக சற்று இலக தான் செய்தது.
“போய் குளிச்சிட்டு வாங்க….நான் டிரஸ் எடுத்து வைக்குறேன்…”என்று கூறிவிட்டு நகர,
“ம்ம்….அப்போ பேசமாட்ட….ம்ம்…”என்று அவளின் கன்னத்தை வலிக்க கடித்து வைத்தான்.அவளோ அவனை தள்ளிவிட்டு,
“ஆஆ…வலிக்கு சத்து மாத்திரை….”என்றவளின் குரலே கரகரப்பாக வர,அவளை இழுத்து படுக்கையில் அமர வைத்து அவனும் அவளிடம் எவ்வளவு நெருங்க முடியுமோ அவ்வளவு நெருங்கி அமர,கயலிற்கு மனதில் இருந்த கோபம் மறைந்து ஒருவித உற்சாகம் பொங்க,
“யோவ் போலீஸ்….இதுக்கு நீ பேசாம என் மடியில உட்கார்ந்துடு….”என்று கூற,
“அதுவும் சரி தான்…நீ என் மடியில உட்காரு….”என்றுவிட்டு அவளை தன் மடியில் அமர்த்தி கொண்டு கைகளால் இறுக அணைத்துக் கொண்டான்.சற்று நேரம் இருவருமே பேசவில்லை அமைதியாக தங்களின் இணையின் ஸ்பரிசத்தை வெகு நாட்களுக்கு பிறகு மனதிற்குள் உள் வாங்கி கொண்டிருந்தனர்.
“ம்ம்…என் கயலம்மாக்கு இப்ப ஓகேவா….கோபம் குறைஞ்சிடுச்சா…”என்று அவளின் தோள்பட்டையில் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க,அவன் முகம் நோக்கி திரும்பிய கயல்,
“எனக்கு கோபம் எல்லாம் இல்லை வருத்தம்….நான் செஞ்ச தப்பெல்லாம் இப்ப என்னை திருப்பி அடிக்குது….அதுல நான் மட்டும் மாட்டல என்னோட உயிரானவங்களும் கஷ்டபடுறாங்க அதான் கஷ்டமா இருக்கு…ஆனா ஒண்ணு சத்து மாத்திரை….”என்றவள் கண்களில் கண்ணீர் உடைப்பெடுத்து விழ தொடங்க,அவளின் கண்ணீரை தன் அதரங்களால் ஒத்தி எடுத்தவன்,
“ப்ச்…கயலு…என்னடீ…”
“என்னை இப்படி தனியா விடாதடா….என்னால இருக்க முடியலை….”என்று அவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டு தேம்பி தேம்பி அழ தொடங்க,சத்யா அவளின் முதுகை மெல்ல தட்டிக் கொடுத்தான்.அவனுக்குமே புரிந்தது தான் செய்தது அவளை மிகவும் பாதித்துவிட்டது என்று.அவளை தன்னிடம் இருந்து பிரித்து எடுத்தவன்,
“டேய்…..கயலம்மா….டேய்….இங்க பாரு….என்னை பாருடீ….”என்று அவள் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தவன்,
“சாரி…சாரிடீ….நீ இவ்வளவு கஷ்டப்படுவனு நான் நினைக்கல….அம்மா உன்னை ஏதாவது சொல்லிடுவாங்களோனு பயந்து தான் இப்படி பண்ணேன்……ப்ச்….இப்படி ஆகும்னு நான் நினைக்கலை…இனி என்ன வந்தாலும் நான் உன்னை விடமாட்டேன்….”என்றவன் குரலும் உடைந்துவிட்டது.
“சத்….சத்யா….அது நான்….நான் உன்னை விட்டு வந்துக்கு அப்புறம் நீயும் இப்படி தான இருந்துருப்ப….எவ்வளவு துடிச்சு போயிருப்ப….உன் காதலுக்கு முன்னாடி நான் ஒண்ணுமே இல்லைடா…ஒண்ணுமே இல்லை…உன் உள்ளத்தை உடைச்ச பாவத்துக்கு எனக்கு இதெல்லாம் தேவை தான்….தேவை தான்…”என்று அவள் அழுகையில் கேவ தொடங்க,
“ப்ச்…கயலம்மா…என்னதிது பழசை எல்லாம் ஏன் இப்ப நியாபக படுத்திக்கிட்டு…விடு….அதான் உன்னை எனக்காவே கடத்தி கல்யாணமும் கட்டிட்டேனே…..”என்று அவளின் நெற்றியை முட்டி சிரிக்க,அவனின் புன்னகை கண்டு அவளின் முகத்திலும் புன்னகை அரும்பியது.
“கேடி….உங்க மாமாவை அப்பவும் பயமுறுத்தி தான் கல்யாணம் வரை கொண்டு வந்திருக்க…பாவம் கலையப்பா….உன்னால அவங்களுக்கு தான் கஷ்டம்…”என்றவள் அவனின் மூக்கை பிடித்து ஆட்ட,
“எனக்கு மாமாவா இருந்தா இதெல்லாம் சகஜம்…அவரு இதையெல்லாம் சமாளிச்சு தான் ஆகனும்….வேற வழியில்லை….”என்று தெனாவட்டாக கூற,அவனின் முடியை பிடித்து ஆட்டியவள்,
“உனக்கு திமிருடா….உன்னை….”என்று கூறி வேகமாக ஆட்ட தொடங்க அவள் இடை இறுக்கி இழுத்து கட்டிலில் போட்டவன் அவளின் அதரங்களை சிறை செய்தான் வன்மையாக.கயலும் அவனின் வன்மைக்கு விரும்பியே இயந்து கொடுத்தாள்.சத்யாவின் கைகள் மனைவியின் இடையில் இருந்து மெல்ல ஊர்ந்து அவளின் மேனியில் உலாவ கயலின் உடல் சிலிர்த்து அடங்கியது.இருவருமே தங்களின் தனி உலகில் சஞ்சரித்து கொண்டிருக்க,கயலின் கை பட்டு அருகில் இருந்த தண்ணீர் குடுவை கீழே விழவும் சுயத்துக்கு வந்த கயல் சத்யாவை விலக்க அவனோ மோகத்தின் உச்சியில் அவளை நகரவிடாமல் மேலும் தன்னுடன் இறுக்கிக் கொள்ள,அவனை வலுக்கட்டாயமாக தன்னிடம் இருந்து பிரித்தெடுக்க,
“வி…விசேஷ வீட்ல இருக்கோம்….விடுங்க….”என்று மூச்சு வாங்க கூற,பேசிய அவள் அதரங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கி,அவளை விட்டு எழுந்தவன்,
“ப்பா இப்ப தான் மைண்ட் பீரியா இருக்கு….நான் போய் குளிச்சிட்டு வரேன்….”என்று அவளின் கன்னத்தை தட்டிவிட்டு செல்ல,அவளோ அவனை முறைக்க முயன்று தோற்றாள்.
“சரியான மாயக்காரன்….அவனை பார்க்கும் வரை அவன் மேல கோபமா தான இருந்தேன்…இப்ப பாரு என்ன செஞ்சி கிட்டு இருக்கேன்…”என்று அவளை நினைத்து அவளுக்கே வெட்கமாகி போனது.ஆனாலும் மனதில் இதுவரை அழுத்திக் கொண்டிருந்த பாரங்கள் அனைத்தும் விலகி புதிதாக பிறந்தது போல இருந்தது.அதே உற்சாகத்துடன் அவனக்கான ஆடையை தேர்வு செய்து வைத்துவிட்டு காத்திருக்க குளித்து வந்தவன் அவளை பார்த்து கண்ணடிக்க,கயலின் முகம் செவ்வானம் போல சிவந்து போனது.பின் இருவருமே சேர்ந்து கிளம்பி வெளியில் வர வரவேற்பறையில் அமிர்தாவும்,லிங்கமும் வந்திருந்தனர்.
அவர்களை கண்டவுடன் கயல் வேகமாக அமிர்தாவின் அருகே சென்று அவரிடம் மட்டும் கேட்கும் விதமாக,
“என்ன அத்தை நான் இல்லாம எப்படி பொழுது போச்சு உங்களுக்கு…இதுக்கு பேசாம என்கிட்ட நீங்க சண்டையே போட்டிருக்கலாம்….”என்று கூற,அவளின் கன்னத்தை வழித்த அமிர்தா,
“ஆமாடா கயலம்மா….சண்டை போட்டிருக்கலாம் போல….இந்த பையன் ரொம்ப பண்ணுறான்….நீ வாடா நம்ம வீட்டுக்கு அப்புறம் நாம சண்டை போடலாம்….”என்று புன்னகை முகத்துடன் கூறியவரின் கையை பிடித்து கொண்ட கயல்,
“உங்களால என்னை மன்னிக்க முடியாதுனு தெரியும் அத்தை ஆனா மறக்க முயற்சி பண்ணுங்களேன் ப்ளீஸ்….”என்று கண்ணை சுருக்கி கேட்க,கயல் பழசை ஆரம்பிக்கும் போது அவரின் முகம் கோபத்தை தத்தெடுத்தது தான் ஆனால் அவளின் புரிதலில் அகமகிழ்ந்து போனவர்,
“ம்ம்…என் மருமகள்ல….என்னை சரியா புரிஞ்சு வச்சிருக்க…..நல்ல விஷயங்கள் நம்மளை தேடி வரும் போது புறக்கணிக்க கூடாது….உன் மனமாற்றத்தை நான் ஏத்துக்குறேன்…..மாற்றங்கள் ஒன்றே மாறததது….”என்றவர் மருமகளின் தலையை வருடி விட,கயலோ சுற்றம் மறந்து அவரை அணைத்துக் கொண்டாள்.
“ம்க்கும்…”என்ற கணைப்பு சத்ததில் கயல் திரும்பி பார்க்க,சத்யா முறைத்தபடி நின்றான்.
“என்னடா….என்ன முறைக்கிற….நீ வா கயலம்மா….”என்று அவளின் கைபிடித்து அமிர்தா அழைத்து போக,
“அம்மு மீ….கயலம்மா கூப்பிடாத….”என்று அவன் பல்லை கடித்துக் கொண்டு கூற,
“நான் அப்படி தான் கூப்பிடுவேன்….என்னடா செய்வ…நீ வா கயலம்மா….”என்று அவளை கையோடு அழைத்து போக,அவருடன் போகும் போது பின்னே திரும்பி அவனுக்கு முகத்தை ஒழுங்கு காட்டி கயல் போய்விட்டாள்.
“போடீ….”என்று அவனும் சொல்லி சென்றான். இதை அனைத்தையும் பார்த்த பார்வதிக்கு அப்போது தான் மனது நிம்மதி அடைந்தது.மகளின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியே அவரையும் மகிழ்ச்சி கொள்ள செய்தது.
நந்திதாவின் விசேஷம் நல்ல முறையில் முடிந்தது.அமிர்தா கயலை தன்னுடனே வைத்துக் கொண்டார்.விசேஷம் முடிந்து அனைவரும் கிளம்பும் போது அமிர்தா சத்யாவிடம் ஏதோ கோபமாக கூறிக் கொண்டிருக்க அவனின் முகம் கோபத்தில் சிவந்தது அதைக் கண்ட கயல் அவர்களின் அருகே வர,அவளைக் கண்டவுடன் இருவருமே தங்களின் முகத்தை மாற்றிக் கொண்டனர்.
“என்ன அத்தை என்ன ஆச்சு….”என்று அமிர்தாவிடம் கயல் கேட்க,
“ஒண்ணுமில்லடா….நீ வா நாம கிளம்புவோம்….”என்றவர் சத்யாவின் புறம் திரும்பி,
“பேசிட்டு வா…சத்யா….”என்று கூறிவிட்டு கயலை கையோடு அழைத்து சென்றுவிட்டார்.
சத்யாவின் வீட்டில்,
கயல்விழி வாயிலையே பார்த்து கொண்டு நின்றாள்.அவளை பார்த்து சிரித்த அமிர்தா,
“உன் புருஷன் வருவான்….நீ வா வந்து சாப்பிடு….”என்று கூற திரும்பி அவரை முறைத்தவள்,
“அத்தை என்ன சொன்னீங்க…உங்க பிள்ளைக்கிட்ட….”என்று அவரின் முன் நின்று கேட்க,லிங்கமோ,
“அம்மு…..இப்ப தான் நம்ம வீடு கலைகட்டுற மாதிரி இருக்கு இல்ல….”என்று கூற,
“மாமாஆஆஆ…….நான் இங்க என்ன பேசிக்கிட்டு இருக்கேன்….நீங்க என்னனா கிண்டல் பண்ணிகிட்டு இருக்கீங்க….”என்று கேட்க,
“கயலம்மா….மொதல்ல சாப்பிடுவியாம் அப்புறம் நாம தெம்பா சண்டை போடவோமாம் வா….”என்று அமிர்தா கூற,
“போங்க அத்தை என்னனு என் கிட்ட சொல்லமாட்டீங்க அப்படி தான….”என்று அவள் முகத்தை தூக்க,
“என்னனு தான் சொல்லிடேன் அம்மு….மருமக பதட்டப்படுதுல்ல….”என்று லிங்கம் கூற,
“ஒண்ணுமில்ல….உன்னை பத்தி பேசிக்கிட்டு இருக்கவங்க வாயை கொஞ்சம் அடக்கி வைக்க சொல்லிட்டு வந்தேன்….”என்று அமிர்தா அதிராமல் கூற,
“அச்சோ அத்தை….ஏன் இதை அவர் கிட்ட சொன்னீங்க…..”என்று கயல் பதட்டப்பட,
“ஏன் பதட்டப்படுற…என் பிள்ளை பார்த்துப்பான்….இனி யாரும் என் மருமகளை ஒரு வார்த்தை தப்பா பேச முடியாதுல….அதுக்காக தான் சொன்னேன்….நீ வா….”என்று அவளை இழுத்து சாப்பாட்டை பரிமார,கயல் சாப்பிட்டு முடிகத்துவிட்டு வரவேற்பறையிலேயே அமர்ந்திருந்தாள். ஆனால் மனதெல்லாம் சத்யா அங்கே என்ன பேசியிருப்பான் என்றதிலேயே உழன்றது.வெளியில் வண்டி நிற்கும் சத்தம் கேட்கவும் கயல் வேகமாக எழ,அவளின் கையை பிடித்து அமர வைத்த அமிர்தா,
“அவன் வருவான் ஏன் இவ்வளவு பதட்டப்படுற….”என்று கூற வேறு வழியில்லாமல் அமர்ந்தாள். வீட்டின் உள்ளே சத்யா நுழைந்தவுடன் கயல் வேகமாக அவனிடம் சென்று,
“சத்யா….என்ன பேசினீங்க….அங்க என்ன ஆச்சு….”என்று பதட்டத்துடன் கேட்க,அவனின் பார்வை அமிர்தாவை முறைத்தது.
“நான் என்னடா பண்ணேன்….உன் அப்பா தான் சொன்னார்….”என்று கணவரை மாட்டிவிட்டு அவர் கழண்டு கொள்ள,
“அச்சோ என்னை மாட்டிவிட்டாளே….இப்ப இவன் என்னை முறைப்பான்…”என்று நினைத்தவர் மகன் அவரிடம் வரும் முன்,
“அம்மு….எனக்கு கால் வலிக்கு தைலம் எடுத்துட்டுவா….”என்றுவிட்டு விறுவிறுவென அறைக்குள் நுழைந்து கொண்டார்.
சத்யாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு தங்களின் அறைக்குள் சென்ற கயல்,
“நீ பயப்படுற மாதிரி நான் எதுவும் பண்ணல….ராகவ் கிட்டேயும்,ரவிக்கிட்டேயும் சொல்லி அவங்களை கொஞ்சம் கண்டிக்க சொல்லியிருக்கேன்….பார்ப்போம்…..ஆனா…”என்று அவன் நிறுத்த,
“ஆனா….”
“ம்ம்ம்….இனி என் கயலம்மாவை ஏதாவது சொன்னா….நான் என்னோட வழியில தான் போவேன்னு அவங்க கிட்ட சொல்லிட்டேன்….”என்று கூற,கயலோ அவனை முறைத்து,
“இது மிரட்டுன மாதிரி இருக்கு….உன்னை….”என்று அவள் அடிக்க அவனோ அவளின் கைகளில் சிக்காமல் ஓடினான்.சற்று நேரத்திலேயே கயலிற்கு ஏதோ போல இருக்க அவனின் பின்னே ஓடியவள் தலைசுத்துவது போல இருக்க கட்டிலை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.திடீர் என்று கயலின் முகம் மாறவும் அவளின் அருகே வந்த சத்யா,
“ஓய்….என்னடீ….உடனே உட்கார்ந்துட்ட….அவ்வளவு தானா உன் வீரம்…..”என்று கிண்டல் செய்ய,கயலோ அதை உணரும் நிலையில் இல்லை அவளுக்கு சாப்பிட்டது பிரட்டிக் கொண்டு வர வேகமாக குளியல் அறை நோக்கி ஓடி கதவை அடைத்து கொள்ள,
“ஏய் கயல்….என்னடீ…..கயல்….”என்று குளியல் அறை கதவை தட்ட,
“இரு வரேன் சத்து மாத்திரை…”என்றவள் குரலே மெலிந்து வந்தது.சற்று நேரம் கழித்தே கயல் வெளியில் வர சத்யா அலமாரியின் முன்பு நின்று கொண்டிருந்தான்.என்ன ஆச்சு இவனுக்கு என்று நினைத்துக் கொண்டு அவனை நெருங்கும் போது தான் அவனின் கைகளில் இருந்த பொருளைக் கண்டாள்.
“சத்யா….”என்று அவள் அழைக்க,அவனோ அவளை பார்த்து,தன் கையில் உள்ள பொருளை காட்டி,
“எப்போ பார்த்த…”என்று கரகரப்பாக கேட்டுக் கொண்டே அவளின் மணி வயிற்றை தடவ,அவனை கட்டிக் கொண்ட கயல்,
“உன்கிட்ட தான் முதல்ல சொல்லனும் இருந்தேன்….”என்று உணர்ச்சி பொங்க கூற,சத்யாவோ பேச்சற்று போனான்.கயல் குளியல் அறையில் இருந்த போது அவளுக்கு துண்டு எடுக்க அலமாரியை திறந்தவனின் கண்களில் விழுந்தது கிப்ட் பாக்ஸ் அதை திறந்து பார்த்தவன் என்ன உணர்ந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை.ஆனால் மனதெங்கும் இன்பசாரல் அடித்தது என்னவோ உண்மை.
“ஓய் போலீஸ்….என்ன கண்ணெல்லாம் கலங்குது….”என்றவளை இறுக அணைத்தவன் அவளின் முகம் எங்கும் முத்தம் வைத்து தன் மகிழ்ச்சியை பகிர கயலும் அவனின் அன்பில் கட்டுண்டு நின்றாள்.
“இதை சொல்ல தான் அன்னைக்கு கால் பண்ணியாடீ…”என்று கேட்க,கயலின் அணைப்பு மேலும் இறுகியது.அவளின் முகத்தை நிமிர்த்தியவன் அவளின் கண்களை நோக்கி,
“போடா….அதெல்லாம் ஒண்ணுமில்ல….”என்று கூற அவளின் முன் மண்டியிட்டு அவளின் மணி வயிற்றில் முத்தம் தந்து அணைத்து கொண்டான்.பல இன்னல்களுக்கு பிறகு இருமனங்களும் ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டு நின்றது அமைதியாக.