அத்தியாயம் 2.2:
டியூசன் முடித்துப் பிள்ளைகளை அனுப்பி விட்டு அனைவரும் சாப்பிட அமரும் பொழுது மல்லியின் அப்பா கந்தன், மல்லி சாவி கொண்டு வந்து இருக்கேன்மா என்றார் அவர்களிடம் மல்லி, கொண்டாங்கப்பா, எத்தன மணிக்கு கிளம்பனும்? “10 மணிக்குக் கிளம்புனா போதும்மா?” சரி சாப்பிட்டீங்களாபா?.
“இன்னும் இல்ல மல்லி” என்றார் .
உமா, “அப்பா வாங்க சாப்பிடலாம்”. இல்லமா சகுந்தலா அம்மா அங்க வந்து சாப்பிட சொன்னாங்கமா. அங்க சாப்பிடலனா தப்பாநினச்சிக்குவாங்க. அது மரியாதையாவும் இருக்காது இல்ல? அதனால நான் அங்க சாப்பிட்டுக்கிறேன்மா. சரிசரி நீங்க சாப்பிடுங்க. நான் கிளம்பறேன் என்றார் சுந்தரம்.
அதற்குக் குட்டி, “நானும் இங்க தான் இருக்கேன்”… “எங்களை எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியுதா? இல்லை அவங்க மட்டுந்தான் தெரிவாங்களா?” என்றான். உன் நியாபகம் இருந்ததுனால தான், உனக்குப் பிடிச்ச “அதிரசம்” வாங்கிவந்தேன் இந்தாடா பெரியமனுசா என்று அந்த அதிரசத்தைக் கொடுத்தார். ஏதோ எனக்குப் பிடிச்ச அதிரசம் வாங்கிவந்தனால உங்களை மன்னித்துவிடுகிறேன். “டேய்!, குட்டி இது என்ன பேச்சி? வயசுல பெரியவர்களிடம் மரியாதையா பேசமாட்டியா இததான் அக்கா சொல்லிக்கொடுத்தாங்கலா?” ஒழுங்கா அவங்ககிட்ட சாரி கேளுடா என்றான் கண்ணன்.
அதைகேட்ட அம்மு, “அப்படிச் சொல்லுடா அப்பதான் இவன் ஒழுங்கா நடந்துக்குவான்”, சாரி கேளுடா அப்பாகிட்ட என்றான், விடுமா இவன் பேசாம வேற யாரு பேசுவது? நம்ம குட்டி தான விடுங்க நான் கிளம்பறேன் உமா என்றார். சரிங்க “அப்பா பார்த்து போங்க, மொதுவா ஓட்டுங்க”…. தூக்கம்வந்தா டீ, காபி குடித்துவிட்டு ஓட்டுங்க என்றாள், சரிமா நான் பாா்த்துகிறேன். நீங்க எல்லாரும் ஜாக்கிரதையா இருங்க எனக்கூறி சென்று விட்டார் கந்தன்.
பின் அனைவரும் சாப்பிட்டு விட்டுப் பாத்திரத்தை ஒதுக்கி வைத்து, நாய்க்கு சாப்பாடு போட்டுவிட்டு, “அந்தப் பாத்திரத்தை எல்லாம் கழுவிவைத்து விட்டு அனைவரும் வெளியே உள்ள கட்டிலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்”.
அப்போது உமா, குட்டி இப்ப சுந்தரம் அப்பா கிட்ட பேசுன மாதிரி வேறயார்கிட்டையும் மரியாதை இல்லாதமாதிரி போசாதடா. அப்பா மாதிரி யாரும் ஈஸியா எடுத்துக்கமாட்டாங்க புரியுதா? என்றால், சாரிக்கா இனி இந்த மாதிரி யாருகிட்டையும் பேசமாட்டேன் சரியா க்கா? என்றான், சரிடா தம்பிப்பையா என்று கூறிய உமாவின் மடியில் படுத்துக்கொண்டான்.
“சரிசரி யாப்பா எல்லாரும் ஏதோ அருங்காச்சியகத்தில் இருக்கமாதிரி அமைதியா இருக்கீங்க? யாராவது பேசுங்கபா?” நீங்க ஆரம்பித்து வைங்க மல்லிக்கா என்றாள் அம்மு. ஆமா அப்படியே பத்துமாடி நகைக்கடை பாரு Open பண்ணி வைக்க?அட போடி அம்மு.
போதும்போதும் உங்க ராமாயணம். நாளைக்குக் காங்கேயம் போகனும், யாருக்கு என்ன வேண்டும் சொல்லுங்க வரும்போது வாங்கிகிட்டு வரேன் என்றார் கண்ணன், அக்கா நாங்களும் வறோம். நீங்க தனியா போகவேண்டாம் என்றான்.
ஆமாகா எல்லாரும் போய்ட்டு வந்துடலாம்கா, எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லகா. சரிபோலாம்…. சரிசரி பேலாம்…. நீங்கபோய்படுங்க காலையில் சீக்கிரம் எழுந்தரிக்கனும். போங்க என்று கூறி அவர்களைப் படுக்க அனுப்பினால் உமா.
“நீயும் வாபுள்ள போய்ட்டு வந்துடலாம். சரிடி பேலாம்… எனக்கு என்ன வாங்கிதருவ? விஷம் வாங்கித்தறேன்…. அத நீயே குடி எனக்கு வேண்டாம் பா என்ற மல்லியிடம்…. வாடி லூசு எனக்கூறி அவர்கள் வேலையைப் பார்க சென்றனர்”. வேலையை முடிக்க மணி இரண்டு ஆகிவிட்டது. வேலையை முடித்த உடன் படுக்கையில் விழுந்து விட்டனர்.
பண்ணையார்வீட்டில் சகுந்தலா வண்டியை எடுக்க வந்த சுந்நரத்திடம், அண்ணா வாங்க வந்து சாப்பிடுங்க அப்பதான் டைம் சரியா இருக்கும் என்றாள். கந்தன் தயங்கி நின்றதை பார்த்த நாச்சியார், “வாடா சுந்தரம்…. சந்திரன் சாப்பிட்டு விட்டான்…. நீ வந்து சாப்பிடுடா என்று அழைத்துச் சென்று அவரைச் சாப்பிடவைத்தார்”.
பின் சுந்தரமும்னும், சந்திரனும் கோவை நோக்கி சென்றார்கள்.
மீனா தன் வருங்காலக் கணவனுடன் கடலை வறுத்துக்கொண்டு இருந்தால்.
**********************************************×******************
வெற்றி தன் வேலையை முடித்து விமானம் ஏரியவன் தன் இருக்கையில் அமர்ந்த பிறகு கடந்தகால நிகழ்வுகளை அசைபோட்டுக்கொண்டு இருந்தான்.
அருண் மற்றும் விஷ்னுவும் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு, இரவு உணவை உண்டுவிட்டுப் படுக்கச் சென்றனர். அப்பொழுது அருண், விஷ்ணு காலையில் 5மணிக்கு கிளம்புனாதா அண்ணனுக்கு முன் நாம் வீட்டிற்குச் சொல்லமுடியும். “அதுமட்டுமல்ல நாளை லிங்கபூஜை இருக்கு…. அதைக் காவல் காப்பது நம்ம வேலை விஷ்ணு… ஞயாபகம் இருக்கு அருண்…. நம்ம உயிர் இருக்க வரை நாம்பப் பாதுகாக்கனும்”…. உயிரை பத்தி கவலைபடாம பாதுகாக்கனும் விஷ்ணு அது நம்ம பொறுப்பு…. தாத்தாக்கு வாக்கு கொடுத்து இருக்கோம் என்றான் அருண்… எப்படி மறக்கமுடியும்டா?…
நம்மைவிட வெற்றி தான்டா அதற்கு முழுபொறுப்பு . “அதைப் பாதுகாப்பதில் நம்ம குடும்பம் பெற்றதைவிட, இழந்ததுதான் அதிகம் அருண். இனியும் எந்தவித இழப்பும் நம்பக் குடும்பத்துக்கு வராம அந்தச் சிவபெருமான் தான் பாத்துக்கனும்”…. சரி வா படுக்கலாம் என்றான் விஷ்ணு.
அதற்கு “அருண், விஷ்ணு எனக்கு ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம்? யாரோ Follow பண்றமாதிரி தோனுதுடா” என்றான் அவனிடம், உனக்கும் அந்தமாதிரி இருக்கா? நான் எனக்கு மட்டும் தான் அப்படி இருக்குனு அமைதியா இருந்தேன்டா அருண்…. இதைபற்றி உடனே அண்ணாகிட்ட சொல்லனும் அப்போதுதான் அண்ணா ஏதாவது முடிவு பண்ணி பாத்துக்குவார் விஷ்னு, நீ டென்சன் ஆகாதடா எனக்கூறி படுக்க அழைத்துச்சென்றான் அருண்.
சாரதாவின் வீட்டில் காயத்திரியும் பரபரப்புடன் இருந்தார். காரணம் மகன்களின் வரவு மற்றும் லிங்கபூஜை. பூஜையானது இரண்டு வீட்டு உறுப்பினர்கள் மற்றும் கல்யாணம் ஆகி சென்ற பெண்பிள்ளைகளும் அவர்களின் முறை செய்யவேண்டும். ஆனால் உரிமையானது அந்தவீட்டின் மூத்த ஆண்வாரிசுக்கும் பாதுகாக்கும் பொறுப்பு அடுத்தடுத்த ஆண் வாரிசுகளுக்கும் உண்டு. அதன் உரிமை பெண்பிள்ளைகளும் இல்லை.
“அதிலும் சிவராத்திரி அன்று இன்னும் சிறப்பாகப் பூஜைகள் நடக்கும். அந்த வீட்டின் அனைத்து பெண்பிள்ளைகளும், ஆண்பிள்ளைகளும் ஒன்று கூடி சிவபெருமானை வழிபடுவார்கள்”. அதைப் பார்க்க அத்தனை அழகாக இருக்கும்.
காயத்திரி, தன் மாமியாரிடம் கேட்டு பூஜைக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துவிட்டு தூங்க சென்றுவாட்டார். அவரின் முகம் அத்தனை பிரகாசமாக இருந்தது…
அவர் மகன்கள் அனைவரும் வருவதுதான் அவரின் மகிழ்ச்சிக்கு காரணம்.
மனைவியின் மலர்ந்த முகம் பார்த்த தர்மர், “மகனுங்க வரானுங்கனு தெரிந்த உடனே முகம் சந்தோசத்தில் ஜொலிக்குது போ”. ஏன்டி பசங்க வந்தா எங்களைக் கண்டுக்க மாட்டீங்க இல்ல? ஆமாம் மாமா நீங்க இங்க தான் இருக்கீங்க. ஆனா பசங்க மூனுவருசமா சரியா வீட்டுக்கு வரது இல்ல. ஆதுவும் இந்த வெற்றி சுத்தமா வரல அதான் இந்தப் பரபரப்பு. அனேகமாக அக்கா வீட்டீலேயும் இதேதான் நிலையா இருக்கும் மாமா. அதனால் நீங்கள் பெரிய மாமா கூட அமைதியா இருந்தா போதும்… போங்க போய் படுங்க காலையில் நேரமா எழுந்தரிக்கனும் எனக்கூறி படுத்துவிட்டார்.
தர்மர் படுத்தவுடன் உறங்கிய காதல் மனைவியை ரசித்துக்கொண்டே இருந்தார். அதை உணர்ந்த காயத்திரி, ரசித்தது போதும் தூங்குங்க மாமா எனக்கூறி சிறிது நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றுவிட்டார். தூக்கத்தில் தன்னை உணர்ந்துகொண்ட மனைவியை நினைத்து சிரித்துக்கொண்டே தானும் படுத்துவிட்டார்.
அங்கு விமானநிலையத்தில் மகன்வரவுக்காகக் காத்துக்கொண்டு இருந்தார் சந்திரதேவன். அறிவிப்பு வந்தவுடன் இருக்கையிலிருந்து எழுந்து சென்று வெற்றியை வரவேற்க நின்றுகொண்டு இருந்தார். அவரை அதிகம் காக்கவைக்காமல் வெற்றி விரைவாக வந்துவிட்டான்.
மகனைபாரத்த அந்தத் தந்தைக்கு அத்தனை மகிழ்ச்சி மற்றும் பெருமையும். தம் குடும்பத்தொழிலை மட்டுமல்லாமல் சுயத்தொழிலையும் நடத்தி அதில் வெற்றியும் கண்டு, அண்டைநாடுவரை அந்தத் தொழிலை எடுத்துச்சென்ற மகனை கண்ட பெருமை அது.
தன் தந்தையைக் கண்டுகொண்ட வெற்றி தனது பயணப்பொதிகளை எடுத்துக்கொண்டு வந்து அவரைக் கட்டித்தலுவிக்கொண்டான். சந்திரன் வெற்றியிடம், “தம்பி இனி இந்தமாதிரி வெளிநாடு போகமாட்ட இல்ல?” அதற்குச் சிரித்துக்கொண்டே இல்லபா இனி இந்தமாதிரி ரொம்ப நாள் தங்கரமாதிரி எல்லாம் போகமாட்டேன். ஏதாவது முக்கியமான விஷயம்னா மட்டும்தான் போகனும்… அங்க தொழில் பார்க்க நம்பகமான ஆட்களைப் போட்டுவிட்டேன், அதனால் பிரச்சனை இல்ல நீங்க பயப்படாம வாங்க…….
“ஏன்பா அவ்வளவு பயமா? பின்ன யாருடா உன் அம்மா இரண்டு பேரையும் சமாளிக்கறது?” அட அவங்கள கூட விடுடா, உன் பாட்டி தொல்லை தாங்கமுடியலடா.
இது பத்தாதுனு உன் தம்பிங்க ரெண்டு பேரும் காங்கேயத்துல போய் உட்கார்ந்துகராணுங்க. அவனுங்கள வீட்டுக்கு வரவைக்கரதுக்குள்ள கண்ணகட்டுதுடா சாமி…..
வெற்றி அட்டகாசமான சிரிப்புடன், உங்க நிலைய நினைச்சா பாவமாதான் இருக்கு…. என்ன பண்ணநானும் வேலை அப்படி, இனி நான் பாா்த்துக்கறேன் நீங்க கவலையவிடுங்க. அடேய் சீக்கிரம் வாடா… இல்ல இதுக்கும் திட்டுவிழும். சரிப்பா அழாம வாங்க சீக்கிரம் வீட்டுக்கு போய்டலாம்…..
தம்பி 11 மணி வாக்கில் லிங்கம் பூஜை இருக்குடா….. சரிங்கபா, பார்த்துக்களாம்.. எதுலவந்தீங்க?.
சுந்தரம் தான் வண்டி ஓட்டிக்கிட்டுவந்தான். அங்க இருக்கு பார் வண்டி வா போலாம்…. “கந்தன் அண்ணா எப்படி இருக்கீங்க? ஊர் எப்படி இருக்கு? எல்லா நல்லா இருக்கு தம்பி… நீங்க தான் மூனுவருசமா ஊர்பக்கம் வராம இருந்துடீங்க”… இனி இந்தமாதிரி இருக்காது அண்ணா கவலை படாதீங்க… சரிங்கஅண்ணா நீங்க பின் சீட்டில் உட்காருங்க நான் டிரைவ் பண்றேன். நீங்க இன்னும் மாறவே இல்ல தம்பி அப்படியே இருக்கீங்க. என்ன அண்ணா பன்றது கூடவே பிறந்தது அப்படிதான்….. வாங்க பேலாம் எனக்கூறி அவர்களை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான் அவன் வீடு நோக்கி.
**************************************************************************/**
உமாவோ வெகு நேரம் வேலை செய்ததால் எழுவதற்கு மணி ஐந்து ஆகிவிட்டது. எழுந்ததும் முதலில் பால் வாங்கிவிட்டு, வாசல்கூட்டி, கோலம் போட்டபின் குளித்துவிட்டு வந்தவள், தூங்கிக்கொண்டு இருந்த அனைவரையும் எழுப்பி டீக்கொடுத்து விட்டு தானும் எடுத்துக்கொண்டு அமர்ந்தவளிடம் மல்லி, எப்படி உமா நீ இவ்வளவு சீக்கிரம் எழுந்த? உன்னாலமட்டும் எப்படி முடியுது? என்றாள்….
“நான் நிம்மதியா தூங்கி பல வருடங்கள் ஆச்சிடீ அதான் என்றவள் முகத்தை அனைவரும் இமைக்காமல் பார்த்தனர்”. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர். முதலில் சுதாரித்துக் கண்ணன், குட்டி பார்த்துக்கொண்டு இருப்பதை உணர்ந்த உடன் அதைச் சமாளிக்கும் பொருட்டு, அக்கா டைம் ஆச்சிகா காங்கேயம் போகச் சீக்கரமா புறப்படும்… வேகமா போய்ட்டு வந்தாதான், நாளைக்கு ஆத்துக்குப் போகமுடியும் என்றான்.
அதைகேட்ட குட்டி, நான் Firstஆ போய் குளித்துவிட்டு வந்து உமா அக்காக்கு Help பண்றேன் எனக்கூறி துணிகளை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
அவன் சென்றதை உறுதிபடுத்திய அம்மு, அக்கா குட்டி இருக்கும்போது இனி பார்த்து போடனும் இல்ல அவன் கேள்விகளுக்கு நம்மால பதில் சொல்லமுடியாது, “Please அக்கா இனி ஜாக்கிரதையா இருங்க என்றான் கூற்றை ஆமோதிக்கும் விதமாகக் கண்ணன், எக்காரணம் கொண்டும் குட்டிக்கு உண்மை தெரியக்கூடாதுகா”.
மன்னிச்சிகோ டா… ஏதோ நினைப்பில் இப்படிப் போசிவிட்டேன் என்றாள் உமாவிடம், மன்னிப்பு எல்லாம் சொல்லாதக்கா உன்னை விட்டா எங்களுக்கு யாரு இருக்கா? நீதான் எங்களுக்கு எல்லாம் எனக்கூறிப் படுத்தும்விட்டார் அந்த அன்புத்தமையன்.
இதை எல்லாம் கண்களில் நீருடன் பாத்துக்கொண்டு இருந்தால் மல்லி.
சரிசரி நீங்க ரெடியாகுங்க…. நான் வீட்டுக்கு போய் வேலையை முடித்து விட்டு வந்துவிடறேன் எனக்கூறி தன் வீட்டிற்குள் சென்றுவிட்டால் மல்லி.
அன்பு தொடரும்……