அத்தியாயம் 13:
பொத்தன்மேடு :
மூணாரிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் இந்த பொத்தன்மேடு ஆகும். இங்குள்ள ஒரு முக்கியமான மலைக்காட்சி ஸ்தலத்திற்கு இது பிரசித்தி பெற்றுள்ளது.
இங்கிருந்து மூணார் பகுதியின் அழகான மலைச்சரிவுகள், சுற்றியுள்ள பசுமைப்பள்ளத்தாக்குகள் மற்றும் மதுரப்புழா ஆற்றின் அழகுக்காட்சி போன்றவற்றை பார்த்து ரசிக்கலாம்.
இந்த ரம்மியமான கிராமப்பகுதி இயற்கை ரசிகர்களுக்கும் மலையேற்றப் பிரியர்களுக்கும் மிகப்பிடித்தமான இடமாக பிரசித்தி பெற்றுள்ளது.
சுற்றிலும் ஏராளமான தாவரப்பசுமை மற்றும் பயிர்த்தோட்டங்களுடனும் இந்த கிராமம் காட்சியளிக்கிறது. ஏலக்காய் பயிர்கள் விளையும் மலைப்பகுதி மற்றும் தேயிலைத்தோட்டங்கள் வழியாக தவழ்ந்து வரும் நறுமணம் நிரம்பிய காற்று இங்கு வரும் பயணிகளை தீண்டி மயக்கமூட்டுகிறது.
நறுமணப்பயிர் தோட்டங்களின் வழியாக ஏறுவது சிரமமாக இருந்தாலும் இந்த மலைக்காட்சி காட்சிகளை அனுபவிக்கும் போது நமது உடல் அலுப்பு மறந்தே போகும்.
புகைப்பட ஆர்வலர்களுக்கு இந்த மலைக்காட்சி தளம் ஒரு புதையல் போன்றதாகும்.
வளைந்து நெளிந்து செல்லும் மலைச்சாலைகளும் உயர்ந்தோங்கி நிற்கும் மலைகளும் இப்பகுதியை ஒரு மாயாலோகம் போன்று ஜொலிக்க வைத்துள்ளன. பயணம் மேற்கொள்ளும்போது வேண்டிய அளவு உணவுப்பொருட்கள் மற்றும் தண்ணீர் போன்றவற்றை எடுத்துச்செல்ல மறக்கக்கூடாது.
தேவிகுளம் :
தேவிகுளத்தின் முக்கிய சுற்றுலாப்பகுதியான சீதா தேவி ஏரி… இதில் இராமபிரானின் மனைவி சீதாதேவி நீராடியதாக புராணச்செய்தி கூறுகிறது. இந்த ஏரி புனிதமாக கருதப்படுகிறது.
இந்த நீரில் நிறைந்து உள்ள தாதுப்பொருட்கள் நோய் தீர்க்கும் தன்மை உள்ளதாக கருதப்படுகிறது.
நாடுகாணி :
பெயரை சொன்னாலே சிலிர்க்க வைக்கும் இயல்பு கொண்ட ‘நாடுகாணி’ எனப்படும் இந்த மிகப்பிரசித்தமான இயற்கை எழில் பிரதேசம் ஒரு மலையின் உச்சியில் இடம்பெற்றுள்ளது.
இது மூணார் நகரப்பகுதியிலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது.
இந்த எழிற்பிரதேசம் அற்புதமான மலைத் தோற்றங்களையும், சிற்றோடைகளையும், பரந்த புல்வெளிப்பகுதிகளையும், தூய்மையான வானவெளியையும், அலையோடும் நெல்வயல்களையும் கொண்டு நெஞ்சையள்ளுகிறது.
அதுமட்டுமல்லாமல், நாடுகாணி பிரதேசம் பறவை ஆர்வலர்கள் மற்றும் காட்டுயிர் ரசிகர்களுக்கு ஏற்ற ஸ்தலமாகவும் விளங்குகிறது. இங்கு இருவாட்சி, காட்டு முயல், சாம்பார் மான் மற்றும் காட்டு மைனா போன்ற அற்புதமான உயிரினங்களை பார்த்து ரசிக்கலாம்.
ஒருபுறம் மலைகளாலும் மறுபுறம் மூவாட்டுபுழா ஆற்றினாலும் சூழப்பட்டுள்ள இந்த நாடுகாணி குடும்பச் சுற்றுலாவுக்கும் தேனிலவுப் பயணத்துக்கும் மிகவும் ஏற்ற ஸ்தலமாகும்.
நாடுகாணியின் மற்றொரு முக்கியமான சிறப்பம்சம் இங்கு அமைக்கப்பட்டுள்ள மூலமட்டம் தரையடி சுரங்கத்தள மின்னுற்பத்தி நிலையமாகும்.
அடர்ந்த தாவரப்பசுமையுடன் காட்சியளிக்கும் மலைகள் மற்றும் அடர்த்தியான வனப்பகுதி போன்றவற்றை கொண்டுள்ளதால் இங்கு மலையேற்றத்திலும் ஈடுபடலாம்.
இடுக்கி காட்டுயிர் சரணாலயத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் நாடுகாணி பிரதேசமானது வளமான தாவரச்செழிப்பு மற்றும் காட்டுயிர் அம்சங்கள் போன்றவற்றை பெற்றுள்ளது.
எப்கோ பாயிண்ட்:
எக்கோ பாயிண்ட் எனும் இந்த இடம் மூணாரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த இடம் இளைஞர்களிடையே வெகு பிரசித்தமாக அறியப்படுகிறது.
பெரும்பாலான மலை சுற்றுலா பிரதேசங்களில் காணப்படும் இந்த எக்கோ பாயிண்ட் அல்லது ‘எதிரொலி ஸ்தலம்’ இங்கு ஒரு ரம்மியமான ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இந்த ஸ்தலத்தில் நாம் எழுப்பும் குரல் நீர்ப்பரப்பில் பட்டு எதிரொலிக்கிறது.
இந்த ஸ்தலத்தில் பனிப்புகை படர்ந்த சுற்றுப்புறமும் வெல்வெட்டை விரித்தாற்போன்ற ஏரியின் கரைச்சரிவுகளும் கண்கொள்ளா காட்சிகளாக தரிசனம் அளிக்கின்றன.
ஏரிக்கரையில் அமைதியாக இயற்கை அழகை ரசித்தபடியே நடைப்பயணம் செல்வதும் ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும். மலையேற்றத்தில் விருப்பம் உள்ளவர்கள் சுற்றிலுமுள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வாசனைப்பயிர் தோட்டங்களை சுற்றிப்பார்த்து ரசிக்கலாம்.
புகைப்பட ஆர்வலர்கள் விரும்பும் பல அருமையான எழிற்காட்சிகள் இங்கு நிரம்பியுள்ளதால் அவர்களுக்கு இது ஒரு சொர்க்கபூமியாக தோற்றமளிக்கும் என்பதில் ஐயமில்லை.
மீனுளி:
மீனுளி எனப்படும் இந்த புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் மூணார் மலைவாசஸ்தலத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளது.
மலையேற்றம் மற்றும் சிகரமேற்றம் போன்ற சாகச பொழுதுபோக்குகளுக்காக இது பயணிகளால் அதிகம் விரும்பப்படுகிறது.
பல்வேறு வடிவங்களாக இப்பகுதியில் எழும்பியிருக்கும் இயற்கை அமைப்புகள் பார்வையாளர்களை மெய்மறக்க செய்கின்றன.
இங்குள்ள ஒரு மிகப்பெரிய பாறை மற்றும் பசுமைமாறா காடுகளுக்காக இந்த மீனுளி ஸ்தலம் புகழ் பெற்று விளங்குகிறது.
500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவைக்கொண்ட ஒரு பிரம்மாண்ட பாறை இங்கு அமைந்துள்ளது.
இந்த பாறை மீதிருந்து பெரியார் ஆறு மற்றும் பூதத்தான்கெட்டு போன்றவற்றை பார்த்து ரசிக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் இந்த பாறைப்பீடபூமி மீதே இரண்டு ஏக்கர் பரப்பளவில் ஒரு பசுமைச் சோலையும் அமைந்துள்ளது.
வித்தியாசமான இந்த இயற்கை அமைப்பானது நம்மை இந்த பூமித்தாயின் சிருஷ்டி குறித்து வியக்க வைக்கிறது.
மலையேற்றம் மற்றும் பாறையேற்றம் போன்றவற்றில் ஆர்வம் உள்ள சாகசப்பிரியர்களை மீனுளி ஸ்தலம் வரவேற்று அதற்கான ஏராளமான வாய்ப்புகளை வாரி வழங்குகிறது.
சிகரம் ஏறுவதில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் விஜயம் செய்ய வேண்டிய இடங்களில் இது ஒன்றாகும்.
இந்த ஸ்தலத்துக்கு விஜயம் செய்யும் பயணிகள் வேண்டிய அளவு உணவுப்பொருட்கள் தண்ணீர் போன்றவற்றுடன் பயணம் மேற்கொள்வது சிறந்தது.
*****************************************************************************************************************,,************
அருண் தன் மனதில் உள்ள எண்ணத்தில் மிகவும் குழப்பமடைந்து இருந்தான்…
“அம்மு மீதான தான்கொண்ட காதல் எந்த அளவுக்கு உறுதியானது மற்றும் உண்மையானது தானா இல்லை வெறும் ஈர்ப்பு மட்டும்தானா என்பது தான்”…
வெகு நேரம் யோசனை செய்தவன் இறுதியாக எது எப்படி இருந்தாலும் தன் காதலின் நிலையை அறிந்த பின் தான் அவளுடனான திருமணபந்தத்தில் இனையவேண்டும் என்றமுடிவை எடுத்தவன், தன் கவனத்தை திசை திருப்பி லோப்டாப்புடன் கல்லூரி வேலையில் ஐக்கியமாகிவிட்டான்.
ஆனால் அவனின் விதி வேறாக அல்லவா உள்ளது.
பலர் தான் கொண்ட காதலின் நிலை அறியாமல் திருமண பந்தயத்தில் இணைந்து தங்கள் வாழ்க்கையை மட்டுமல்லாமல், தங்கள் பெற்றவர்களின் நிம்மதி மற்றும் தாம் பெற்ற பிள்ளைகளின் வாழ்க்கையை அல்லவா அழைக்கிறார்கள்.
அந்த சின்னஞ்சிறிய பிஞ்சுகள் தான் அதிகபடியான மனஅழுத்த்தில் தவறான வழிகளை செல்கிறார்கள். அவர்களுக்கான பெற்றோரின் பாசமும் அறவணைப்பும் இல்லாமல் வளர்கின்றனர்…
காதல் காதல் என சில காலம் வாழ்ந்தவர்கள், எளிதாக விவாகரத்து செய்து கொண்டு எளிதாக அடுத்தவாழ்க்கையை தேடிக்கொள்கிறார்கள்… இந்த மாதிரியா நிலை தண்மை இல்லாத பெற்றோர்களால் அந்த சின்னஞ்சிறிய பிஞ்சுகள் அநாதைகளாகவும் சமூகவிரோதிகளாகவும் சைக்கோக்களாகவும் வளர்கின்றன. இவர்கள் இப்படி ஆனதுக்கு காரணம் இவர் அல்ல அந்த சுயநலம்கொண்ட பெற்றோரகள் தான்.
குற்றம் செய்தவர்கள் அத்தனை சந்தோஷங்களையும் அனுபவித்துக்கொண்டு வாழும்போது, அவர்களுக்கு பிள்ளையாக பிறந்த ஒரு தவறுக்காக வாழ்க்கை முழுவதும் வேதனை அடைவது இந்த மொட்டுக்கள் மட்டுமே. இந்த மாதிரி பெற்றோர்க்கு பிள்ளையாக பிறந்தது அவர் தவறு அல்ல, அதுவும் கூட அந்த கடவுளின் தவறு.
எந்த ஒரு மிகப்பெரிய முடிவை எடுக்கும் போதும் தன் வாழ்க்கை மற்றும் தன்னை சார்ந்தவர்களின் வாழ்க்கையை மனதில் வைத்துக்கொண்டு எடுக்கவேண்டும்…. அப்படி எடுக்கும் முடிவு ஒரு நல்ல தொடக்கத்திற்கு ஆரம்பமாகி அமையும்… இல்லையேல் அதுவே மிகப்பெரிய வேதனையை கெடுக்கிறது.
சுகமா துக்கமோ அது அவர்அவர் கைகளில் தான் உள்ளது. நிதானமாக சிந்தித்து செயல் படுவது மிகமிக நல்லது.
“விஷ்ணுவோ தன் அறையில் உள்ள படுக்கையில் படுத்துக்கொண்டு மல்லியின் மீதானகாதல் கடலில் மூழ்கி போய் இருந்தான்”.
வெற்றி பழப்பண்ணை பற்றி மார்க்குடன் விவாதித்துவிட்டு, மூணாறில் புதிதாக எஸ்டேட் வாங்கலாமா என்ற எண்ணத்தில் இருந்தான். ‘அதுவும் தேயிலை தேட்டம் வாங்கலாமா இல்லை ஏலக்காய் எஸ்டேட் வாங்கலாமா என்ற குழப்பத்தில் ஆழ்ந்து இருந்தான். சிறிது யோசனைக்கு பின் இதை பற்றி மதனுடன் பேசிவிட்டு ஒரு முடிவுக்கு வரலாம் என நினைத்துக்கொண்டு குளிக்க சென்றுவிட்டான்’.
ஜெயந்தியின் வீட்டில் இருந்து பாத்திரங்கள் அனைத்தையும் சுத்தம் செய்து விட்டு உமாவும் மல்லியும் தங்கியுள்ள வீட்டிற்கு சென்றனர்…
அங்கு குட்டி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். கண்ணன் மற்றும் அம்முவும் சேர்ந்து காலையில் துவைத்து காயவைத்துவிட்டு சென்ற துணிகளை மடித்துக்கொண்டு இருந்தனர்.
அப்பொழுது மல்லியுடன் வந்த உமா, “ரெண்டு பேரும் குளிச்சின்டீங்களா? எதாவது சாப்பிடரீங்களா?”
கண்ணன், “அக்கா நாங்க ரெண்டு பேரும் குளிச்சாச்சி இப்ப எங்களுக்கு எதுவும் வேண்டாம் க்கா நீங்க சாப்பிட்டு விட்டீங்களா?”. ”எனக்கும் எதுவும் வேண்டாம் க்கா இதமட்டும் மடிச்சிவச்சிட்டு கொஞ்சம் தூங்கனும். ஆமாம் மல்லி அக்கா உங்க ரெண்டு பேருக்கும் வேலை அங்க அதிகமா இருக்கா?” என்ற அம்முவிடம், “மல்லி நானும் உங்க அக்காவும் நல்லாவே சாப்பிட்டுவிட்டோம் டீ”.
உமா, “வேலை ஒன்றும் அதிகமா எல்லாம் இல்ல அம்மு அப்படி இருந்தாலும் இங்க வேலை செய்பவர்களை சுப்பையா அண்ணா கூடமாக ஒத்தாசை பண்ண அனுப்பிவிடராங்க”…
இதை பற்றி எல்லாம் நாங்க கவலை படாம கொஞ்சம் நிம்மதியாக தூங்குங்க, நாங்க அந்த வீட்டுக்கு போய் மத்தியசமையலுக்கு கொஞ்சம் ஒத்தாசை பன்றோம் என்றால் உமா.
“அப்புறம் மூனு பேரும் ஒரே ரூம் இருங்க. கதவை நல்லா பூட்டிக்கோங்க நாங்க வந்து உங்களை கூப்பிட்டா மட்டும் கதை திறக்கனும் புரியுதா?” என்ற மல்லியிடம் கண்ணன், “புரியுதுக்கா அக்கா நீங்க பயப்படாம போங்க நான் இவங்களை பாத்துக்கிறேன்”.
உமா, “அப்புறம் கண்ணா மத்திய சாப்பாட்டுக்கு நாங்களே வந்து உங்களை கூட்டிக்கிட்டு போறோம்டா, அதுவரை இங்கேயே இருங்க” எனக்கூறி மல்லியுடன் வேலையை பார்க்க சென்றாள்.
அங்கு சென்று மத்திய உணவை செய்பவர்களுக்கு உதவியாக இருந்தவர்கள், அவர்களுடன் சேர்ந்து செய்த சாப்பாட்டை மேஜையில் வைத்துவிட்டு மத்திய உணவினை உன்ன அனைவரையும் அழைத்துக்கொண்டு வந்தனர். இவர்களின் இந்த குனம் அங்கு இருந்த அனைவருக்கும் பிடித்துவிட, வேலையின் போது ஒருவரை ஒருவர் வாரிக்கொண்டு இருந்தனர்.
பின் அனைவருக்கும் உணவினை போட்டுக்கொண்டு இருந்தனர்… “அப்பொழுது தூங்கி எழுந்து வந்த வர்ஷா முதலில் தேடியது குட்டியைத்தான்”.
வர்ஷா உமாவிடம், “அக்கா… குட்டி அண்ணா எங்க?… வரசொல்லுங்க விளையாடலாம்” என்றவளிடம்… “நீங்க சமத்தா சாப்பிடுங்க, அப்புறம் விளையாடலாம்… வர்ஷா பாப்பாக்கு பசிக்கும் இல்ல இப்ப வாங்க வந்து சாப்பிடுங்க”… அதற்கு அவள் “வர்ஷா குட்டி பசிச்சா, குட்டி அண்ணுக்கு பசிக்கும் இல்ல?… அப்ப அண்ணாவையும் வரசொல்லுங்க… நான் அண்ணா கூடத்தான் சாப்பிடுவேன் என அடம்பிடிக்க ஆரம்பித்தாள்”.
மதன், “சரிடா குட்டி… அண்ணாவ உமா அக்கா போய் கூட்டிக்கிட்டு வருவாங்க”… இல்லப்பா நானும் தான் போவேன் எனக்கூறியவள் அந்த வாண்டு.
அவள் அடம் உணர்ந்த ஜெயந்தி, உமா… “நீ போய் மூனு பேரையும் சாப்பிட்ட கூட்டிகிட்டுவா… அப்படியே அந்த வாண்டையும் கூட்டிக்கிட்டு போ உமா” எனக்கூறி அனுப்பிவைத்தாள்.
“அந்த வாண்டே உமாவிற்கு முன் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டது அந்த வீட்டிற்கு… அவளின் ஓட்டத்தை பார்த்த உமாவிற்கு சிரிப்பா வந்தது”.
அங்கு குட்டியோ தூங்கி எழுந்து குளித்துவிட்டு உமாவிற்காக காத்திருந்தான். மற்ற இருவரும் கட்டிலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்பொழுது வந்த வர்ஷாவை பார்த்ததும் மூவரும் தங்களின் அறையை விட்டு வெளியே சென்றனர்.
வர்ஷா குட்டியிடம், “குட்டி அண்ணா.. வாங்க நாம போய் விளையாடலாம்… நீங்க இல்லாம நான் உங்களை தேடி இங்க வந்துட்டேன் பாருங்க. வாங்க போகலாம்” என்றவளிடம் உமா, “முதலில் எல்லாரும் சாப்பிடுங்க… அப்புறமா நீங்க விளையாடலாம் என்றது வேகவேகமாக தன் தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்தாள் வர்ஷா”.
உமா, “மூனு பேரும் வாங்க சாப்பிபோலாம்… சாப்பிட்டுவிட்டு அப்புறமா விளையாடுங்க”… சீக்கிறமா வாங்க மல்லி தனியா இருக்கா எனக்கூறி அனைவரையும் அழைத்துச்சொன்றாள்.
இவர் அனைவரும் வரும்வரை பெரியவீட்டில் இருந்த அனைவருக்கும் சாப்பிடாமல் காத்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் சாப்பிடாமல் இருந்தது உமாவிற்கு சற்று சங்கடமாக இருந்தது.
இவர்களை வந்ததை பார்த்த சாரதா உமாவிடம், “உனக்கு எத்தனை தடவை சொல்லறது உமா… அவங்க சின்ன குழந்தைகள்… இவ்வளவு நேரம் பசிதாங்குவாங்களா?… நீ உங்க வீட்டில் இப்படி தான் இருப்பையா உமா?… வா முதலில் அவங்களுக்கு சாப்பாடு போடு”.
“சரிங்க பாட்டிம்மா… இனிமேல் இவங்களுக்கு சாப்பாடு போட்டுவிட்டு தான் உங்களுக்கு போடுவேன்… சரியா பாட்டி?”…
“சரிடீ அவங்களுக்கும் ஆம்பளைங்களுக்கும் பரிமாறு நாம அப்புறமா சாப்பிடலாம் எனக்கூறி முற்றத்திற்கு சென்று மற்றவரிடம் அமர்ந்துகொண்டார் சாரதா”.
அனைவரும் சாப்பிட்டவுன் பெண்களும் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் தோட்டத்தில் அமர்ந்திருந்தனர். சிறியவர்கள் அனைவரும் விளையாட சென்றுவிட்டனர்.
அப்பொழுது தான் நாச்சியாரி போனில் வேலம்மை அழைத்தார்…
நாச்சியார், “எப்படி இருக்கீங்க சம்பந்தி… டூர் எல்லாம் நல்லா இருக்கா?… எல்லாம் செளகரியமா இருக்குங்களா?” என கேள்விகளை கேள்வி கேட்டவரை வேலம்மை, “நான் நல்லா இருக்கேன் நாச்சியா… டூர் ரொம்ப நல்ல இருக்கு… எந்த பிரச்சினையும் இல்லம பார்த்துகிட்டங்க இந்த ஆர்கனைஷர்ஸ் நாச்சியா… நீங்க நல்லா இருக்கீங்களா… பேரன், பேத்தி, உங்க மருமகள் மற்றும் மகன் எல்லாம் நல்லா இருக்காங்களா?… எல்லாரு நல்லா இருக்காங்க சம்பந்தி, ஜெயந்தி உண்டாகி இருக்கா வேலாம்மை… அதுதான் எல்லாரும் மூணார் வந்து இருக்கோம்” என்றவரிடம்… ரொம்ப சந்தோசமாக இருக்கு நாச்சியார் எனக்கூறி தன் வாழ்த்தை தெரிவித்தார் வேலம்மை.
“நாச்சியா நம்ம கார்த்தி-மீனா நிச்சியத்தேதி குறிக்க உன்கிட்ட விசாகா பேசசொன்னா… நீ தேதி பார்த்தியா?… முதலில் வீட்டில் இருக்கரவீங்க கிட்ட பேசுனையா?… மீனா கிட்ட பேசுனையா நாச்சியா?” … “நான் பேசிட்டேன் வேலம்மை…
எல்லாரும் ரொம்ப சந்தோசமாக இருக்காங்க… தேதி பூசாரிகிட்ட பேசிகிட்டு தேதி சொல்லறேன் வேலம்மை… அதுவும் இல்லாம திருவிழா ஆரம்பிக்க முன்ன நிச்சியம் முடிச்சிடலாம், திருவிழா அப்புறமா கல்யாணம் வச்சிக்கிறமாதிரி யோசனை இருக்கு”… நீங்களும் இதபத்தி யோசனை சொல்லு வேலம்மை என்றவரிடம்…
வேலம்மை, “நான் வர வெள்ளி வந்துடுவான்டா நாச்சியார்…. நீ பூசாரி பாத்து உடனே எனக்கு போன்பன்னு நாச்சியார்… எனக்கு நீ சொல்லற யோசனை சரீனு தான் படுது… அதுவும் இல்லாம ஜெயந்திக்கும் இது தான் சிரமம் இல்லாம இருக்கும்… நீ ஊர்க்கு போய்ட்டு பன்னு நாச்சியார் எல்லாரு கிளம்பராங்க நானும் கிளம்பறேன்”… எல்லாரையும் கேட்டதா செல்லு எனக்கூறி வைத்துவிட்டார் வேலாம்மை.
[the_ad id=”6605″]
வேலம்மை கூறியதை அனைவரிடமும் கூறிய நாச்சியாரின் கூற்றில் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
நிச்சியத்திர்க்கு என்னென்ன பன்னலாம் என இப்பொழுதே தங்களின் கருத்துக்களை அனைவரும் பகிர்ந்துகொண்டனர்.
இதையெல்லாம் கோட்டுக்கொண்டு இருந்த உமா அம்முவின் திருமணத்தை பற்றி யோசனையில் இருந்தாள் ‘அம்முவின் திருமணத்தில் என்னென்ன பண்ணலாம்… எப்படியெல்லாம் செய்யலாம்… யார் எல்லாம் கூப்பிடுவது… எவ்வளவு சீர் செய்வது… எப்படியெப்படி எல்லாம் மாப்பிளையை பார்ப்பது’ என்ற எண்ணம் தோன்றியது.
இந்த எண்ணமே மேலும்மேலும் உழைக்க்கூடிய சக்தியை தந்தது. இவள் எண்ணத்திற்கு மாறாக மல்லியின் மனநிலை இருந்தது…
‘அவளின் எண்ணமெல்லாம் விஷ்ணுவுடனான திருமணம் எப்படி இருக்கும்… யாரெல்லாம் பிரச்சினை பன்னுவார்கள்… எல்லாரும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்வார்களா?… விஷ்ணுவின் குடும்பம் இந்த திருமணத்தை பன்னிவைப்பார்களா… முதலில் தன் தந்தை இதற்கு ஒத்துக்கொணள்வாரா என்ற பலவிதமான எண்ணங்கள் அடுக்கடுக்காக தோன்றி மல்லியை அழைக்களித்தது’.
அவர்களின் எண்ணபோக்கை தடுக்க வர்ஷா, குட்டி, கண்ணன் மற்றும் அம்மு அவர்களின் ஆரவாரம்.
ஜெயந்தி, “ஏண்டா வெற்றி… பிள்ளைங்க எவ்வளவு நேரம் தான் சமையல்கட்டு, தோட்டம்னோ இருப்பாங்க?… ஒரு வாரமும் பக்கத்தில் இருக்க இடங்களுக்கு பிக்னிக் போலாண்டா” என்றவளிடம்…
“அக்கா.. டாக்டர் உன்ன ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க இல்ல… இப்படி டிராவல் பன்னினா எதாவது பிராபலம் வந்திராதா க்கா”.
ஜெயா, “அவ செக்கப் பன்ற டாக்டர் கிட்ட கேட்டுட்டு போகலாம் வெற்றி”.
ஜெயா, “நீங்க டாக்டர் கிட்ட கேளுங்க மதன்”. .. “கேட்கிறேன் ஜெயா… ஆனா அவங்க வேணாம்னு சொன்னா வேணா டா”… “சரிங்க மதன்”… நீங்க சொல்லற மாதிரியே கேட்கிறேன். இப்ப ஆன்ட்டிக்கு கேளுங்க மதன்… “இப்ப ஆன்ட்டி பிசியா இப்பாங்க ஜெயா, ஈவ்னிங் போன் பன்னி கேட்கிறேன் டா… சரியா இப்ப நீ எங்கயெல்லாம் போலாம்னு லிஸ்ட் போடு போ எனக்கூறி அனுப்பி வைத்தான்”.
ஜெயந்தியிடம் சென்றது போலவே மதன் மாலையில் டாக்டரிடம் பிக்னிக் போது பற்றி கேட்டு, அவர் அனுமதியுடன் சென்றனர்…
அந்த ஒரு வாரமும் மூணாரின் முக்கியமான சுற்றுலா தளங்களுக்கு அனைவரையும் கூட்டிகொண்டு சென்றனர்.
அவர்களுடன் செல்ல தயங்கிய உமாவை அனைவரும் பேசிப்பேசிய சம்மதிக்க வைத்து அழைத்து சென்றனர். அப்பொழுதும்கூட உமாவின் மனம் சமன்படவில்லை…
ஆனால் ஒவ்வொரு இடங்களுக்கு செல்லும் போதும் தன் தங்கை மற்றும் தமையன்களின் முகத்தில் தோன்றியமறைந்த உணர்வுகள்… மல்லியின் மனத்தில் தோன்றிய பொழிவு என இவை அனைத்தும் பார்க்கும் போது சற்று மனதிற்குள் நிம்மியானது தோன்றியது.
“அருவிகள் மற்றும் ஆற்றில் குளிக்கும் போது சகோதரி மற்றும் சகோதரனின் முகத்தில் தோன்றிய சந்தோசம்… பூங்காவிற்கு சென்று அங்கு உள்ள விலங்குக் மற்றும் பறவைகளை பார்க்கும் போது ஏற்பட்ட ஆச்சரியம்… டாடா எஸ்டேடை பார்க்கும் போது ஏற்பட்ட பிரமிப்பு… பள்ளத்தாக்கு மற்றும் அங்கு பூத்துக்குளுங்கிய நீலக்குறிஞ்சி மலர்களை பார்க்கும் போது தோன்றிய மலர்ச்சி இவை அனைத்தும் உமாவை நிம்மதி மற்றும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது”.
[the_ad id=”6605″]
அது மட்டுமல்லாமல் தேவிக்குளம்,ரோஸ் கார்டன் (Rose Garden), குண்டலை அணை (Kundalai Dam), லோக்கார்ட் டீ மியூசியம் (Lockhart Tea Museum),லோக்கார்ட் டீ பார்க் (Lockhart Tea Park),லோக்கார்ட் கேப் வியூ பாயிண்ட் (Lockhart Gap View Point)கள்ளன் குகை (Kallan Cave),பெரியகானல் அருவி (Periyakanel Water Falls), லக்காம் அருவி(luckam water falls), வாகுவரை தேயிலை தோட்டம் (vaguvarrai estate), தூவானம் அருவி( சென்றார் வனவிலங்கு சரணாலயத்தில் இந்த அருவி உள்ளது) போன்ற பல இடங்களுக்கு இந்த ஒரு வாரமும் அனைவரும் சென்றுவந்தனர்.
“புது இடங்கள் மற்றும் புதுவிதமான காலநிலை இவை அனைத்தும் இவர்களின் மனநிலையை மாற்றி அமைதியையும் மகிழ்ச்சியையும் தந்தது. இந்த ஒரு வாரமும் வர்ஷா, குட்டியுடனேயே சுற்றித்திரிந்தாள். ஆனை சவாரி, படகு சவாரி, சரணாலயம் என அனைத்தும் இடத்திலும் குட்டி தேவைபட்டான். குட்டியும் அப்படியே…. சின்ன்சிறிய குருத்துகள் அவர்களின் உலகில் சிறகு விரித்து சுற்றித்திரிந்தனர்”.
இளையவர்கள் அவர்களின் உலகில் உள்ளாசமாக இருந்தனர்.
உமாவும் மல்லியும் இவர்கள் அனைவரையும் கவனித்துக்கொண்டு தங்களும் ஒருவரை ஒருவர் ஆதரித்துக்கொண்டனர்.
“அந்த ஒரு வாரமும் அவர்களின் சந்தோசத்தை பார்த்தபார்த்து இவளும் சந்தோசம் அடைந்தாள். அந்த சந்தோசத்தோடே அவர்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கிக்கொடுத்தாள்… அந்த பொருட்கள் ஆகாது மூவருக்கும் அவசியமானவையாக இருந்ததே தவிர, அனாவசியமானதாக இருக்கவில்லை”.
“ஒரு வாரம் முடிந்து அல்லியூருக்குள்ள வரும்போது மதன்-ஜெயந்தி தம்பதிகள் உமா, மல்லி, கண்ணன், அம்மு மற்றும் குட்டிக்கு என அனைவருக்கும் புதுத்துணிகளுடன் வேலைக்கான பணமும் வைத்து கொடுத்தனிப்பினார்கள்”. இவர்களுடன் வர்ஷா மற்றும் ஜெயந்தியையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டனர்.
சிறிது நாள் மதனுக்கு துணையாக அவனுடைய வேலைகளை பகிர்ந்து கொள்ள அருண் மற்றும் தர்மமும் மூணாரிலேயே தங்கிவிட்டனர்.
*******************************************************6*666************************
மும்பையில் இருந்த நம்பி தன் தொழில் ரீதியா மீட்டிங் ல் இருந்தார். அந்த மீட்டிங் முடிந்து வீட்டிற்கு சென்றவரை ஆர்பாட்டமாக வரவேற்றது அவரின் காதல் மனைவி கவிதா… “இருவருக்குமே இது இரண்டாவது திருமணம்… தொழில் ரீதியா பாண்டிச்சேரி வந்தவர், அங்கு கவிதாவை பார்த்தார், பார்த்தவுடன் பிடித்துவிட்டதால் திருமணம் செய்துகொண்டனர்… திருமணம் முடிந்தவுடன் இருவரும் மும்பைக்கு வந்துவிட்டனர்”.
அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது போதையில் தடுமாறிய படிவந்தாள் நம்பியின் மகள் நவ்யா… “தாய் பாசம் இல்லாமல் தவறான வழியில் சென்றவள்… தந்தையின் அரவணைப்பு கிடைக்காமல் தடம்மாரி சென்றவள்… தவறான நட்பினால் தவறான பாதையில் சென்று அனைத்து தவறுகளையும் செய்து, சுயநலம், திமிரு, ஆணவம் என அனைத்தும் ஒருங்கே பெற்றவள். பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவள்”.
போதையில் வந்தவள் தடுமாறிய படியே தன் அறைக்கு சென்றுவிட்டாள். “நம்பி அவள் பின்னே சென்று சரியா படுக்கவைத்து விட்டு வந்து, தன் மனைவியுடன் படுக்க சென்று விட்டார்.
அடுத்தநாள் காலையில் எழுந்ததும் மூவரும் ஒன்றாக அமர்ந்து டீயை அருந்திய பிறகு நவ்யா, “டாட் நான் ஒன் வீக் டெல்லி போறேன்… எனக்கு டிரிப்க்கு பணம் வேணும்”… “சரிடா… உன் அக்கோண்டக்கு பணம் போடுறேன்டா… நல்லா என்ஜாய் பன்னு நவ்யா… டீரிங் மட்டும் பன்னாதடா”… “ஓகே டேட்… நான் டிரிங் பன்னல ப்பா… டோன்ட் ஒரி ப்பா என்றவள் நம்பியிடம்”…
“கவிதா நீங்களும் வரீங்களா?… டிராப் ரொம்ப நல்லா இருக்கும்… அப்பா ஒன் வீக் துபாய் போறாரில்ல… வாங்க நம போலாம்”.
“ஓகே நவ்யா… போகலாம் டா… எப்ப கிளம்பனும்”… “நாளைக்கு மாலையில் போகும் கவிதா… போக் பன்னீடுங்க எனக்கூறி அறைக்குள் சென்றுவிட்டாள்”.
அவள் சென்றதும் கவிதா நம்பியிடம், “நம்பி நான் போயிட்டு வருகிறேனே… சரிடா நீ போய்ட்டு வாடா… எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல… நல்லா என்ஜாய் பன்னீட்டு வா கவிதா” எனக்கூறி அலுவலகம் கிளம்ப தன் அறைக்கு சென்றுவிட்டார்.
***************************************************************
“சென்னையில் மகாலட்சுமி மற்றும் ராமன் இருவரும் சேர்ந்து டிடக்டிவ் அலுவலகம் சென்று நநித்தியன் மற்றும் அவனின் மனைவியின் நம்பரையும் செக் செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டு இருந்தனர்”.
அதுமட்டுமல்லாமல் பரமனையும் தேடுவதற்காக ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இருந்தனர்.
*****************×*************************×****************************************
பரமனும் அவனின் ஆளும் சேர்ந்திருந்த மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர். உடலில் உள்ள வலியால் அதிகமான நேரம் அவர்களை தூக்கத்திலேயே வைத்திருந்தனர். “ஒவ்வொரு வினாடிக்கு மார்க்கின் ஆட்கள் அவர்களை தொடர்ந்து கொண்டு இருந்தனர்”.
இதுவரை தான் இருக்குமிடம் கூட தெரியாமல் பரமனும் அவனின் ஆளும் இருந்தனர்.
அன்புத்தொடரும்…….
.