அத்தியாயம் 17:
நிச்சியத்திற்கு முதல் நாள் இரவுவே பண்ணையாரின் வீட்டில் உமாவையும் மல்லியையும் தங்கிக்கொள்ள சொன்னதால் தேவையான உடைகளை எடுத்து வந்திருந்தனர் இருவரும்… முதல் நாள் நடந்த பிரச்சனைக்கு பிறகு இவர்கள் ஐவரும் நவ்யாவை துளியும் கண்டுகொள்ளாமல் அவர்அவர் வேலையில் ஈடுபட்டு இருந்தனர்… அதுவே நவ்யாவிற்கு இவர்களின் மேல் அதீத வெறுப்பை ஏற்படுத்தியது. அதன் விளைவு இவர்களை அனைவரின் முன்னும் அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதன் விளைவு நிச்சியத்தில் எதிரொளித்தது.
விடிந்ததும் நிச்சயதார்த்தம்… அன்றுகாலை அனைவரும் பரபரப்பாக வேலையில் ஈடுபட்டு இருந்தனர்.
உமாவும் மல்லியும் சமையல் வேலைக்கு ஏற்பாடு செய்து இருந்த ஆட்களுக்கு உதவியாக இருந்தனர்.
அங்கு வந்த ஜெயந்தி, “உமா”… “உன்னையும் மல்லியையும் அம்மா கூப்பிட்டாங்க”…இதே ரெண்டு நிமிஷத்தில் வந்துவிடறோம் மதனி… நீங்க போங்க… இந்த வேலையை எல்லாம் இவங்க பாத்துக்குவாங்க உமா நீங்க ரெண்டு பேரும் வாங்க… மதனி… ரெண்டு பேரும் வந்தா எப்படி வேலை ஆகும்?… நீங்களும் உமாவும் போங்க, நான் இங்க பார்த்துக்கிறேன் என்றவளிடம்…
“மணி ஆறு தான் ஆகுது உமா!”… எதுவாக இருந்தாலும் அவங்ககிட்ட வந்து செல்லுங்க எனக்கூறி அவர்களை அழைத்துக்கொண்டு சென்றாள் ஜெயந்தி.
இவர்களை கண்ட நாச்சியார், நீங்க ரெண்டு பேரும் வேலை செஞ்சது போதும், போய் மீனாவையும் பசங்களையும் ரெடி பன்னாட்டு நீங்களும் ரெடியாகிவாங்க… அப்புறம் உமா… மீனா அறையில் நகை இருக்கும் பத்திரமா பாத்துகோங்க.
“அச்சோ பாட்டி”… சமைய வேலை எல்லாம் அப்படியே இருக்கு… இப்ப நாங்க கிளம்பறது முக்கியமா?… அடியே சொன்ன பேச்சை கேளுங்கடீ… “ஒரு வயசு புள்ளைங்க, விசேஷ வீட்டில் ஏனேதானோனு இல்லாம, நல்லா இருக்கவேண்டாமா?… அப்ப தான ஏதாவது நல்ல இடமா அமையும்” என்றவரிடம்…
மல்லி, “இப்ப இதுதான் முக்கியமா பாட்டி?”… முதலில் மீனுவும் நீங்களும் தான் ரெடி ஆகுங்க… நீங்க தான் பெண்ணுவீட்டுகாறங்க பாட்டி… சகுந்தலாம்மாவும் காயத்ரிம்மாவும் அங்கேயும் இங்கேயும் ஓடிகிட்டே இருக்காங்க பாருங்க, முதலில் அவங்கள புறப்பட சொல்லுங்க… “சரிடீ பெரிய மனுஷி போய் அவங்கள புறப்பட சொல்லுங்க, நான் போய் சமையலை பார்க்கிறேன்” எனக்கூறி சென்றுவிட்டார்.
அங்கு வேலை செய்து கொண்டு இருந்த காயத்ரி மற்றும் சகுந்தலாவை அனுப்பிவிட்டு, அவர்கள் விட்டு சென்ற வேலையை இவர்கள் இருவரும் செய்தனர்.
வெற்றி மற்றும் விஷ்ணு இரவு முழுவதும் தூங்காமல் வீடு முழுவதும் அலங்காரம் செய்து விட்டு காலை நான்கு மணிக்கு தான் தூங்க சென்றனர்.
மேடை அலங்காரம் செய்வதை மேற்பார்வை செய்து கொண்டு இருந்த அருணுக்கு டீ கொண்டு சென்ற உமா, “இந்தா அருண் டீ… மேடை அலங்காரம் ரொம்ப அருமையா இருக்கு”… ரொம்ப நன்றி உமா… ஏதாவது மாற்றம் செய்யனும்னா சொல்லுங்க… இல்ல அருண் இதுவே போதும் நல்லா இருக்கு… வெற்றியும் விஷ்ணுவும் எழுந்துட்டாங்களா உமா?… “இல்ல அருண் அவங்க படுக்கும் போது மணி நான்கு ஆயிடுச்சி… அதான் இன்னும் எழுப்பவில்லை”… “அப்படியா!”… அவங்க தூங்கட்டும், நான் பாத்துக்கிறேன் என்றவனிடம் உமா, “ஏதாவது உதவி வேணும்னா கேளுங்க அருண்” எனக்கூறி சென்றுவிட்டாள்.
தர்மர் மற்றும் சந்திரன் இருவரும் ஊர் மக்கள் அனைவருக்கும் சாப்பாடு போடும் இடத்திற்கு சென்று அங்கு இருந்த வேலைகளை மேற்பார்வை பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்களின் வீட்டிற்கு பின்பக்கமாக உள்ள தோட்டத்தில் தான் பந்தல் போட்டு அவருக்குமான சமையலும் அங்கே தான் செய்து கொண்டு இருந்தனர்.
[the_ad id=”6605″]
மதனோ தங்களின் சார்பாக மீனுவுக்கு பரிசு வாங்க சுந்தரத்தோடு காங்கேயம் வரை சென்று இருந்தான்.
காலை ஒன்பது மணி முதல் பத்து மணி வரை நல்ல நேரம் என்பதால் அனைத்து வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருந்தது.
தங்கள் வேலையை முடித்துவிட்டு உமாவும் மற்றும் மல்லியும் மீனாவின் அறைக்கு சென்றபோது குளித்துவிட்டு மீனா முடியை உளர்த்திக்கொண்டு இருந்தாள். இவர்களை பார்த்தவுடன் மீனு, “இவ்வளவு நேரம் எங்க இருந்தீங்க?… உங்களை ரொம்ப தேடினேன் தெரியுமா?”… சாரி மீனு… சமையல் வேலையை பார்த்துகிட்டு இருந்ததால் நேரம் ஆயிடுச்சு… அம்முவும் குட்டியும் எழுந்துட்டாங்களா?… எழுந்துவிட்டா, அவங்களை கொஞ்சம் வரசொல்லுங்க உமா… இன்னும் எழுந்துக்கவில்லை மீனு… இரவு போட்ட ஆட்டத்தில் நல்லா தூங்கராங்க மீனா.
மீனாவின் முடியில் நீர் சொட்டிக்கொண்டு இருந்ததை பார்த்த மல்லி, “இன்னும் முடி காயவில்லையா மீனு?… இப்படியே பின்னுனா தலை வழி வந்துவிடும் மீனு, இங்க வா நான் துவட்டிவிடறேன்” எனக்கூறி அவளின் முடியை துவட்டிவிட்டவளிடம்…
உமா, “நீ இங்க பாரு மல்லி… நான் போய் சாம்பிராணி பிடிக்க கங்கு எடுத்துகிட்டு, பசங்களை எழுப்பிவிட்டுவிட்டு வருகிறேன்”… சரிபுள்ள சீக்கிறமா வா, மேக்கப் போட ஆளுங்க வந்திடுவாங்க… சரிபுள்ள வந்திடறேன் எனக்கூறி சென்றுவிட்டாள்.
அங்கு இருந்து சென்றவள் நேராக தாங்கள் தங்கி இருந்த அறைக்கு சென்று தம்பிகள் மற்றும் தங்கையை எழுப்பி புறப்பட்டு வர சென்னவள், வெளியே சமையல் செய்யும் இடத்திற்கு சென்றவள் கங்குகளை எடுத்துக்கொண்டு மீனாவின் அறைக்கு சென்றால்…
மல்லியிடம் கொடுத்தவள்… “புள்ள நீ இவங்க பாரு, நான் மதனியை பார்த்துவிட்டு வருகிறேன்”… சரிடீ நீ போய்ட்டு வா உமா… அவங்க வேற என்ன பன்றாங்கனு தெரியவில்லை. அண்ணாவும் வெளியே போய் இருக்காரு புள்ள எனக்கூறி ஜெயந்தியை பார்க்க சென்றுவிட்டாள்.
ஜெயந்தியின் அறைக்கு சென்றவள் கண்ட காட்சியில் அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டாள்.
உமாயும் மற்றும் மல்லியையும் பாட்டியிடம் விட்டுவிட்டு அறைக்கு வந்தவள் தூங்கிகொண்டு இருந்த வர்ஷா எழுப்பினாள், அவள் எழாததாள் குளிக்கசென்றுவிட்டாள். குளித்துவிட்டு வந்த ஜெயந்தி வர்ஷாவை மறுபடியும் எழுப்பினால் அப்பவும் எழாததாள் கோவத்தில் தண்ணீரை ஊற்றிவிட்டாள். அதில் அடித்துபிடித்து எழுந்த வர்ஷா, தூக்கம் கலைந்தகடுப்பில் மீதம் இருந்த தண்ணீரை ஜெயந்தி மேல் ஊற்றிவிட்டாள். இவர்கள் செய்த கலாட்டாக்கலை பார்த்த உமா சிரித்துவிட்டாள்.
“மதனி என்ன இதெல்லாம்?”… வர்ஷா குட்டி ஏண்டா இப்படி பண்ணுன?… தாயை முந்திக்கொண்டு வர்ஷா உமாவிடம், “அக்கா முதலில் அம்மா தான் என்மேல் தண்ணீர் ஊற்றினாங்க… அதனால் தான் நான் அம்மா மேல் தண்ணீரை ஊற்றினேன்”… “ஏண்டீ!”, நான் ஊத்துணா நீயும் ஊத்துவையா என அடிக்க என்றவளை தடுத்த உமா… மணி ஆட்சி பாருங்க மதனி…
நான் குட்டிமாவை குளிக்க வைக்கிறேன், நீங்க போய் துணியை மாத்துங்க மதனி… நீ அவளை பார்த்துகோ உமா, நான் முடியை காயவைக்கிறேன் எனக்கூறி வர்ஷாவை முறைத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.
அவள் சென்றதும் வர்ஷாவை பார்த்து உமா, “இப்படி பண்ணக்கூடாது குட்டிமா… நீங்க பெரிய பெண்ணு ஆகிட்டீங்க, நீங்க தான அம்மா வயித்துக்குள்ள இருக்க பாப்பாவை பார்த்துக்கனும்”…
“சாரி க்கா”… இனி இப்படி எல்லாம் பன்னமாட்டேன்… அப்ப நீங்க குளித்துவிட்டு போய் அம்மா கிட்ட சாரி கேட்டுக்கோங்க… நீங்க சொன்னமாதிரியே நான் போய் அம்மா கிட்ட சாரிகேட்கிறேன்… வாங்க போய் குளிக்கலாம் எனக்கூறி உமாவை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள்…
குளித்துமுடித்து வந்த வர்ஷா ஜெயந்தியிடம் சென்று, “சாரி ம்மா… நான் பெரிய பொண்ணாகிட்டேன் ம்மா… நான் தான பாப்பாவை பார்த்துக்கனும் இனி இந்த மாதிரி பன்னமாட்டேன் ம்மா எனக்கூறி ஜெயந்திக்கு முத்தம் கொடுத்துவிட்டு வெளியே சென்றுவிட்டாள்”.
வெளியே சென்ற தன் மகளே பார்த்துக்கொண்டு இருந்த ஜெயந்தி முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. சின்னசின்ன செயல்கள் கூட தன்னவனை போல் இருப்பது ஜெயந்திக்கு கர்வத்தை கொடுத்தது.
உமா ஜெயந்திக்கு தேவையான உதவிகளை செய்தவள், அவளுக்கு சாம்பிராணி காட்டி முடித்த பின்னர் உமா… ஈரமாக இருந்த துணிகளை துவைக்க போட்டுவிட்டு, தரையை துடைத்தவளை பார்த்துக்கொண்டு இருந்த ஜெயந்தி, “போது வேலையை பார்த்தது உமா… போய் நீயும் மல்லியும் ரெடியாகிட்டு வாங்க” எனக்கூறி அனுப்பி வைத்தாள்.
மீனா அறைக்கு சென்றவர்கள் அழகு நிலைய பெண்கள் வந்த உடன் மீனாவை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஜெயந்தி, உமாவையும் மல்லியையும் ரெடியாக அனுப்பி வைத்தாள்.
உமா, “மதனி நீங்க பாட்டி வரவரை எங்கேயும் போகாதீங்க… இங்கேயே இருங்க என பலமுறை ஜெயந்தியை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு ரெடியாக சென்றார்கள் தோழிகள் இருவரும்”.
தங்கள் அறைக்கு சென்றவள் ரெடியாகி கொண்டு இருந்த இளையவர்களை பார்த்த மல்லி, “இன்னமுமா நீங்க ரெடியாகறீங்க”… வர்ஷா உன்னை தேடினா குட்டி… அவ்வளவு தான் அக்கா நாங்கள் ரெடி… சரிடீ அம்மு… போங்க போய் அங்க வர்ஷா மற்றும் மீனுக்கூட இருங்க… போங்க… போங்க… எனக்கூறி வெட்டிவிட்டு மல்லியிடம் உமா, “மல்லி நீ போய் குளித்துவிட்டு வா புள்ள… நான் போய் மதனிக்கும் மீனுக்கும் குடிக்க ஏதாவது கொடுத்துவிட்டு வருகிறேன்”.
மல்லி, “சரிடீ”… “நீ போயிட்டு வா புள்ள… அந்த கோனவாயி கொத்தவரங்காகிட்ட வாய்குடுக்காம வாபுள்ள”… நானா போகமாட்டேன் டீ… அந்த கொடுக்கு காலையிலிருந்து நம்மையே பாத்துகிட்டு இருக்கு மல்லி… அடியே அவ நம்மளை ஒன்னும் ஏக்கமா பாக்கவில்லை டீ… எகத்தாளமா பாக்கிற புள்ள… அவ என்னமோ பன்னாட்டுத் நமக்கு என்ன, நம்ம வேலையை பாத்துகிட்டு போய்கிட்டேன் இருக்கலாம் மல்லி… நமக்கும் அவளுக்கும் என்ன ஒட்டா ஒறவா மல்லி?… எதுவும் இல்ல தான் உமா. அவளைவிடு மல்லி நான் மதனிய பார்த்து விட்டு வருகிறேன் எனக்கூறி சென்றுவிட்டாள்.
சமையளறைக்கு சென்றவள் பால் எடுத்துச்சென்று மீனாவிற்கும் ஜெயந்திக்கும் கொடுத்துவிட்டு வந்தவளை சாரதா ரெடியாகாம இன்னும் என்ன பன்னுரீங்க?… போய் ரெடியாகிட்டு வா உமா… மணி பாரு ஒன்பது ஆகுது.. சீக்கிறமா வாங்க எனக்கூறி அவளை அனுப்பி வைத்தார்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த நவ்யாவிற்கு உமாவின் மேல் இன்னும் இன்னும் வன்மம் பிறந்தது. எந்த இடத்தில் தான் மட்டுமே முன்னிலை வகிக்க வேண்டும் என விரும்பக் கூடியவள் நவ்யா… அதற்காகவே அதிகமான அலட்டலும் தினமும் பார்ட்டி, டிரீட்கள் என கூடவே நான்கைந்து அள்ளக்கைகளை வைத்துக்கொண்டு சுத்துவாள்… இதற்காகவே நம்பியின் பணத்தை அதிக அளவில் செலவு செய்வாள்…
ஆனால் எந்த வித அலட்டலும் இல்லாமல், கன்னியத்துடனும் அனைவரிடமும் மரியாதையாக நடத்து கொள்ளும் உமாவை சுத்தமாக பிடிக்கவில்லை… அதைவிட உமா அவளை அனைவரின் முன்னிலையிலும் மன்னிப்பு கேட்க சொன்னதை சுத்தமாக அவளால் ஏற்கமுடியவில்லை… அதனாலேயே மற்றவரையும் பிடிக்காமல் போனது.
இதற்கு இடையே வெளியே சென்ற அனைவரும் ரெடியாக மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்க தயாராக இருந்தனர்.
எளிமையான புடவையில் அதைவிட எளிமையான அலங்காரத்தில் வந்த உமாவையும் மல்லியும் கண்களால் பருகிக்கொண்டு இருந்தனர் வெற்றியும் விஷ்ணுவும்.
அதைகண்டதும் இன்னும்இன்னும் வெறுப்பை உமிழ்ந்தாள் நவ்யா.
நாச்சியார், “வாங்க டீ”… புறப்பட இவ்வளவு நேரமா உங்களுக்கு?… “பாட்டி!”… வர்ஷாவை குளிக்க வைத்துவிட்டு, மதனிக்கும் சாம்பிராணி காட்டிவிட்டு நேரா வந்து குளித்துவிட்டோம்… அதனால் தான் இவ்வளவு நேரம் ஆகிடுச்சி பாட்டி என்றவளிடம்… இந்த பேச்சி எல்லாம் அப்புறமா பாத்துக்கலாம், நீங்க ரெண்டு பேரும் போய் மீனுவை பார்த்துகோங்க எனக்கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.
மேலே சென்றவர்களிடம் ஜெயந்தி நகைகளை கொடுத்துவிட்டு கீழே சென்று விட்டார். மீனுவிற்கு அணிவித்த நகைகளை தவிற மற்றவைகளை பீரோவில் பூட்டி வைத்துவிட்டு மீனுவிடம் பேசிகொண்டு இருந்தனர்.
[the_ad id=”6605″]
அவர்களின் அறையில் இருந்த நவ்யா யாருக்கும் தெரியாமல் நிச்சியத்திற்காக மோதிரத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டால்… அந்த அறையில் இருந்து வெளியே சென்றவள் நேராக உமாவின் அறைக்குள் சென்று மோதிரத்தை உமாவின் பையில் வைத்துவிட்டு யாருக்கும் தெரியாமல் சென்றுவிட்டாள்.
அப்பொழுது வர்ஷாவுடன் விளையாடிக்கொண்டு இருந்த கண்ணன், அம்மு, குட்டி மற்றும் அம்மு இவர்களை பார்த்ததும் இன்னும் வெறுப்பு அதிகமானது… அதன் விளைவு நிச்சியத்தில் எதிரெளித்தது.
******************************************
டிடக்டிவ் மூலமாக நித்தியனின் நண்பர்களின் முகவரியை வாங்கிய லட்சுமி, அந்த டிடக்டிவ் மற்றும் ராமனை அவர்களின் இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்தார்.
முகவரி கிடைத்தவுடனே அவர்கள் இருவரையும் மும்பையில் இருக்கும் நித்தியன் நண்பர்களின் ஒருவனின் வீட்டிற்கு சென்றனர்.
அங்கு சென்றும் அவர்களுக்கு உமா மற்றும் நித்தியனை பற்றிய ஒரு துப்பும் கிடைக்கவில்லை. அவனின் மீது சந்தேகம் கொண்டு ஒரு நாள் தங்கி தேடியதில் ஒரு உருப்படியான விஷயமும் கிடைக்கவில்லை. அதில் சோர்ந்து வந்தவர்களை அடுத்தநாளே பெங்களூரில் இருந்த மற்ற ஒரு நண்பனை பார்க்க அனுப்பிவைத்தார் லட்சுமி. அவரிடமும் எந்த தகவலும் சிக்காததால் திரும்பவும் சென்னைக்கே சென்றனர்.
இறுதியாக மூணாறில் இருந்த மூன்றாவது நண்பனின் வீட்டிற்கு சென்றனர்.
அங்கு இருந்த வேலையாட்களிடம் விசாரித்த போது அவன் வெளியூர் சென்று இருப்பதாகவும் திரும்பி வர இருபது நாட்கள் ஆகும் என்றதால் ஒரு நாள் தங்கிவிட்டு நேற்று மாலை தான் சென்னை வந்து சேர்ந்தனர்.
வழக்கமாக கோவமா கொள்ளும் லட்சுமி இந்த முறை மிகவும் நிதானமாக யோசனை செய்தார். அதன் விளைவு அடுத்தவந்த நாட்கள் அமைதியா சென்றது.
மூவரிடமும் எந்த தகவலும் கிடைக்காததால் ராமனுக்கு தான் பீதியாக இருந்தது. அதிலும் சிறு நிம்மதி கடைசியாக சென்ற இடத்தில் அவனை சந்திக்கமுடியால் போனதே மூச்சிவிட ராமனுக்கு எளிதாக இருந்தது… காரணம் லட்சுமியின் அமைதி.
*********************************,**,**********************************
விளையாடிக்கொண்டு இருந்த குழந்தைகளை பார்த்தவுடன் மனதில் அவசரமாக ஒரு யோசனை உதயமானு நவ்யாவின் மனதில்.
தூங்கி எழுந்து வந்த வெற்றியை பார்த்ததும் அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டிய உறுதியையும் செய்துவிட்டாள்…
தூங்கி எழுந்து வந்த வெற்றி இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்ததால் தலைவலியினால் டீ க்குடிக்க கீழே இறங்கி வந்தான்… அவனை பார்த்த சகுந்தலா, “என்ன வெற்றி ஒரு மாதிரி இருக்க?… என்ன செய்யுது வெற்றி?”…
ஒன்னும் இல்ல சித்தி… தலைவலி தான் பயங்கரமா வலிக்குது எனக்கூறி தலையை இருகைகளாலும் தாங்கிக்கொண்டு இருந்தவனை பார்த்த சகுந்தலா, ரொம்ப நேரம் முழிக்காதனு சொன்னேன்… கேட்டா தான… விஷ்ணு என்ன பண்றான் வெற்றி?… அவன் இன்னும் எழவில்லை சித்தி… நல்லா தூங்கறான்… சரிசரி இங்கேயே இரு, நான் போய் டீ போட்டுகிட்டுவறேன்… குடித்து விட்டு சீக்கிரமா போய் குளித்துவிட்டு வா… அப்படியே அவனையும் எழுப்பிவிடு வெற்றி.
முதலில் டீ சித்தி… அதுக்கு பிறகு தான் எதுவாக இருந்தாலும்… இந்தா இத குடித்து விட்டு போய் புறப்பட்டு வா. சரி சித்தி… “அம்மா எங்க?”… நீயே போய் பாரு அவங்களை… என்னனு தெரியவில்லை ரொம்ப டென்ஷனா இருக்காங்க… எங்களுடைய எந்த சமாதானமும் அவங்ககிட்ட எடுபடவில்லை வெற்றி… நீயும் போய் பேசிபாருடா… நான் போய் பார்கிறேன், நீங்க இங்க பாருங்க எனக்கூறி தன் அன்னையை காண சென்றுவிட்டான்.
அங்கு சென்றவன் கண்டது தன் அன்னையும் உமாவும் பேசிக்கொண்டு இருந்ததை தான்…
உமா ஜெயாவிடம், “என்ன ஆட்சி ம்மா?… ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்காங்க?”… கொஞ்சம் பயமா இருக்கு டீ உமா… அப்படி என்ன பயம் ம்மா… மீனு நிச்சியத்தை நினைத்து தான் உமா… இதில் என்ன பயம் உங்களுக்கு?… விசாலாட்சி அத்தையை நினைத்தா தான் கொஞ்சம் பயம்… இந்த மீனு மட்டும் அவங்க மனசு கோணாம நடந்து கிட்டா போதும்… இவ்வளவு தானா, விடுங்க அதை எல்லாம் நாங்க பாத்துக்கிறோம்… இன்னும் அவர் தெளியாததை கண்ட உமா, கவலையை விடுங்க மீனுவும் நாங்க எல்லாரும் டிரைனிங் கொடுத்து திருவிழா முடியங்காட்டியும் அந்த பாட்டியை மீனுவுக்கு விசிறி ஆக்காமல் விடமாட்டேன் என்றவளின் கூற்றில் சற்று தெளிந்தார் ஜெயா.
அப்பொழுது உள்ளே வந்த வெற்றி, “அம்மா கவலையை விடுங்க… அவங்களுக்கு எந்த குறையும் வராம நாங்க பாத்துக்கிறோம்… அதே மாதிரி மீனுவுக்கு சமையல் மற்றும் வீட்டு நிர்வாகம் இந்த மாதிரி விஷயத்தை உமா பாத்துக்குவாங்க” என்றவன் உமாவிடம் திரும்பி, “என்ன உமா நான் சொன்னத சரி தான?”… அவனின் கேள்வி புரியாமல் திருதிருவென்று விழித்துக்கொண்டு இருந்தவளை பார்த்த வெற்றி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, இல்ல உமா நீங்க தா இப்ப அம்மா கிட்ட மீனுவுக்கு எல்லா விஷயங்களையும் சொல்லித்தறேன்னு சொன்னீங்க…. அதைத்தான் உங்க கிட்ட செய்வீங்களானு கேட்டேன் என்றவனிடம் மண்டையை ஆட்டிவிட்டு ஜெயாவிடம், அம்மா… அங்க வேலை இருக்கு நான் போய் பார்க்கிறேன் எனக்கூறி சென்றுவிட்டாள்.
பின் வெற்றி அவரை பேசிபேசி சரிபடுத்தி முற்றத்தில் அமரவைத்தவன் குளித்துவிட்டு வருவதாக தன் அறைக்கு சென்றுவிட்டான்.
[the_ad id=”6605″]
அவன் மேலே செல்வதை பார்த்த நவ்யா, பக்கத்தில் இருந்த குழந்தையை அழைத்து, “குட்டி பாப்பா இங்க வாங்க… வாங்க…அக்காவுக்கு ஒரு உதவி பன்றீங்களா?”… சீக்கிரம் சொல்லுங்க அக்கா… என் நண்பர்கள் எல்லாம் விளையாடறாங்க, நானும் போகனும்… இந்த ஒரு உதவியை மட்டும் பன்னீட்டு நீங்க போய் விளையாடுங்க… சரி சொல்லுங்கள் என்ன பன்னனும் என்ற குழந்தையிடம் அம்முவை காட்டி, அதோ அந்த அக்கா இருக்காங்கல்ல அவங்களை அந்த அறையில்(வெற்றியின் அறையை காட்டி) இருக்க நகையை பாட்டி எடுத்துகிட்டு வரசொன்னாங்கனு சொல்லுங்க… ஆனா நீங்க தான் எடுத்துகிட்டு வரசொன்னீங்க… “என் கிட்ட நீங்க தான் சொன்னீங்க, பாட்டி யாரும் சொல்லவில்லையே அக்கா”… இல்லடா குட்டிமா பாட்டி தான் என்கிட்ட சொன்னாங்க எனக்கூறி அந்த வாண்டு தாஜா செய்து அனுப்பி வைத்தாள்.
அந்த குழந்தையே விளையாடும் ஆர்வத்தில் அம்முவிடம் விஷயத்தை கூறிவிட்டு ஓடிவிட்டாள்.
சிறிதும் யோசிக்காமல் அம்மு மேலே இருந்த வெற்றியின் அறைக்கு சென்றுவிட்டாள். அங்கு சென்றவள் எல்லா இடங்களிலும் தேடியும் நகைகிடைக்காததால் வெளியே வர கதவை திறக்க முயற்சி செய்தாள்… ஆம் முயற்சி மட்டும் தான் செய்தால், ஆனால் கதவு தான் திறந்த பாடு இல்லை.
அம்மு அறைக்குள் வந்த உடனே நவ்யா வெளியேயிருந்து கதவை பூட்டிவிட்டாள்… அதனால் தான் அம்முவினால் கதவை திறக்கமுடியவில்லை.
பலமுறை கதவை தட்டி பார்த்தும் கதவு திறக்காததாள் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே அமர்ந்துவிட்டாள். சிறிது நேரம் குளியலறையில் இருந்து சத்தம் கேட்டு திரும்பிபார்த்த அம்மு அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டாள்…
அதைவிட குளியலறையில் இருந்து வந்த ஆடவனை பார்த்ததும் சற்று பயம் பிடித்துக்கொண்டது… அவனே இந்த அறையில் அம்முவை பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டன்… சிறிது நேரத்தில் சுயத்திற்கு வந்தவன், “ஆமாம் நீ இங்க என்ன பன்ற?”… நகை இந்த அறையில் இருக்குனு சொல்லி எடுத்துகிட்டுவர சொன்னாங்க… “என்னது நகையா?”… “நகை எல்லாம் இங்கே இல்ல அம்மு… அது எல்லாம் அம்மு அறையில் தான் இருக்கு”… உனக்கு யார் இங்க இருக்குனு சொன்னாங்க?… ஒரு பாப்பா வந்து பாட்டி தான் நகை இங்க இருக்கு, அதை எடுத்துக்கிட்டு வரசொன்னாங்கனு சொன்னா.
“அப்படி இருக்க வாய்ப்பில்லை அம்மு… ஏனா பாட்டி தான் அம்மு அறையில் நகையிருக்கு பத்திரமா பாத்துக்கோங்கனு மல்லிகிட்டையும் உமாகிட்டையும் சொன்னாங்க… நானுந்தானே கேட்டேன்… இல்ல இதில் ஏதோ தவறு இருக்கு”… என்ன சார் சொல்லறீங்க?… எனக்கு ஒன்னும் புரியவில்லை.
யாரோ வேனும்னே பிளான் பண்ணி தான் இதை செய்து இருக்காங்க… இதுக்கு மேலே நீ இங்க இருக்க வேண்டாம் அம்மு… முதலில் இங்க இருந்து போ நிச்சியம் முடிந்தவுடன் இதை பற்றி பேசிக்கொள்ளலாம் எனக்கூறி கதவை திறக்க சென்றவனிடம்…
அம்மு கண்களில் நீருடன், “கதவை திறக்கமுடியவில்லை… யாரோ வெளியே பூட்டிவிட்டாங்க”… “அடக்கடவுளே!”. .. இப்ப என்ன பண்ண என யோசனை செய்தவன்… வெளியே இருப்பவர்களுக்கு போன் பண்ண தேடினால் அதுவோ எடுக்கப்படவேயில்லை… யாரும் எடுக்காததால் பதட்டம் அடைந்தவன், மறுபடியும் முயற்சி செய்ய பதட்டத்தில் போன் கீழே விழுந்து அணைந்துவிட்டது.. எவ்வளவு முயற்சிகள் செய்தும் போன் சரி செய்ய முடியவில்லை.
கதவை பூட்டிய நவ்யா யாருக்கும் சந்தேகம் வராமல் அனைவருடனும் ஐக்கியமாகிவிட்டாள்.
நிச்சியத்திற்கான வேலையில் அனைவரும் பிசியாக இருப்பதால் இவர்களை மறந்துவிட்டனர்.
இதற்கிடையில் காங்கேயத்தில் இருந்து வந்த மதன் பரிசை ஜெயந்தியிடம் கொடுத்துவிட்டு சென்றவன் ரெடியாகி வந்துவிட்டான்.
நம்பியும் தன்னுடைய வேலைமுடித்துவிட்டு மாப்பிள்ளை வீட்டாரின் வரவுக்காக காத்திருந்தார் .
அனைவரும் ரெடியாகி மாப்பிள்ளை வீட்டார் வரவுக்காக வெளியே காத்திருந்தனர்.
கார்த்திக் குடும்பத்தினர் அனைவரும் தங்கள் உறவினர்களை அழைத்துக்கொண்டு அல்லியூர் நோக்கி வந்துகொண்டு இருந்தனர்.
இவர்களின் சொந்தங்கள் அனைவரும் வருவதற்கு வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்து மணமகளுக்கான சீருடன் பயணம் செய்தனர்.
வேலாம்மை தன் பேரனின் நிச்சியத்திற்கு தேவையானவைகளை பார்த்துபார்த்து செய்தார். அவரின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி மற்றும் மனதில் நிம்மதியும் நிறைந்து இருந்தது.
“அம்முவோ தனி அறையில் ஒரு ஆணுடன் இருப்பதை யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்… எப்படியெல்லாம் பேசுவார்கள்… தன் அஜாக்கிரதையால் அக்காவுக்கு என்னென்ன அவமானங்கள் ஏற்படும்…நிச்சியத்தில் எந்த அசம்பாவிதமும் நிகழக்கூடாது என பயந்து போய் இருந்தாள்”.
அந்த ஆடவன், “யார் இதை செய்தது?… எதற்காக இப்படி செய்தார்கள்?… யாரை பழிவாங்க இதை செய்தார்கள்?… என குழம்பி போய் இருந்தான்”.
அன்பு தொடரும்…..