அத்தியாயம் 22:
மஞ்சள் நீராடும் நாள் காலையில் எழுந்ததும் வழக்கம் போல் மல்லியும் உமாவும் வேலைக்கு சென்றுவிட்டனர்.
“ஏனெனில் இன்று மதியம் உணவானது பண்ணையார் வீட்டினர் சார்பாக கோயிலில் வைத்து ஊர் மக்கள் அனைவருக்கும் உணவினை வழங்குவார்கள்… இந்த விருந்தானது காலம்காலமாக திருவிழாமுடிந்த அடுத்த நாள் அதாவது மஞ்சள் நீராடும் அன்று நடைபெறும் வழக்கம்”.
“ஆண்கள் அனைவரும் காலையிலேயே திருவிழா வரவு-செலவு கணக்கு பார்க்க அமர்ந்துவிடுவார்கள்.
இவர்கள் கணக்கை பார்த்துவருவதற்குள் ஊர் பெண்கள் அனைவரும் சேர்ந்து உணவினை சமைத்து முடித்துவிடுவார்கள்”.
அதே போல் தான் இன்று விருந்து வைப்பதால் பண்ணையாரின் மொத்த குடும்பமும் கோயிலுக்கு நேரமாகவே வந்துவிட்டனர்.
இவர்களுக்கு உதவியாக மல்லியும் உமாவும் வேலைசெய்து கொண்டிருக்க, நேரம் செல்ல செல்ல ஊர் பெண்கள் அனைவரும் ஒன்று கூடி வேலையை செய்ய ஆரம்பித்தனர்… அன்று மதிய உணவானது கோயிலில் வைத்துத்தான் போடுவார்கள். ஒவ்வொருவரும் தாங்களாகவே முன்வந்து வேலையில் உதவியாக இருப்பார்கள்.
“டவுனில் சமைப்பதற்கு ஆட்கள் போடுவது போல் இந்த விருந்தில் வெளியாட்களை வேலைக்காக போடமாட்டார்கள்… இந்த விருந்து போடுவதே ஒருவருக்கு ஒருவர் மனம்விட்டு பேசவும், பகைமறந்து சந்தோஷமாக விருந்துண்ணவும் தான்”.
“இவர் இங்கே பேசிக்கொண்டே உணவினை சமைக்க, வயது பெண்களே கடைத்தெருவையே காலிசெய்துகொண்டிருந்தனர்”.
“சிறுவர்களோ கண்களில் காண்பதை எல்லாம் வாங்கித்தருமாறு பெற்றோர்களிடம் அடம்பிடித்துக்கொண்டிருந்தனர். சில பெற்றோர் தேவையானதை மட்டும் வாங்கிகொடுத்து, தேவையில்லாததை தவிர்த்து வந்தனர். சிலர் இதற்கு மேல் கேட்கக்கூடாது என ஒப்பந்தம் போட்டு குழந்தைகள் கேட்டதை வாங்கிகொடுத்துக்கொண்டும் இருந்தனர். சில சிறுவர்களோ அழுது புரண்டு தனக்கு வேண்டியவைகளை சாதித்துக் கொண்டும் இருந்தனர்”.
அல்லியூரில் சந்தன மாரியம்மன் திருவிழாவிற்கு போடும் கடைகளின் ஒரு வாரம் இருக்கும்… சுத்தியிருக்கும் ஊர் மக்கள் அனைவரும் திருவிழாவிற்கு வருவதால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபாரம் நடக்கும்… இங்கு பீங்கான் பொருட்களிலிருந்து பித்தளை பாத்திரங்கள் வரை அத்தனையும் கிடைக்கும்… அதேபோல் சிறியவர்களின் விளையாட்டு சாதனங்கள் முதல் திண்பன்டங்கள் வரை அத்தனை கடைகளும் இருக்கும்.
[the_ad id=”6605″]
பெண்கள் உணவினை சமைத்து முடிப்பதற்கும் கணக்கு வழக்குகளை முடித்து ஆண்கள் வருவதற்கும் சரியாக இருந்தது.
பெண்கள் அனைவரும் ஆண்களுக்கு உணவினை பரிமாற ஆரம்பித்தனர்.
“வெற்றி தன்னுடனே கண்ணன், குட்டி மற்றும் வர்ஷாவையும் சாப்பிட அழைத்துச்சென்றவன்… அவர்கள் உணவினை உண்டதும் விசாலாட்சியுடன் அனுப்பிவிட்டு, தன் சகோதரர்களுடன் உண்ண ஆரம்பித்தான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த உமாவிற்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாளும் ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது”.
காரணம் அவர்களின் அந்தஸ்து மற்றும் பாரம்பரியம்… அதுமட்டுமல்லாமல் தன் மனதில் உள்ள ஆசையினால் தம்பிகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துதரமுடியாமல் போய்விடும் என்ற பயமும் அவளை பாடாய்படுத்தியது.
“ஆண்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன் தங்கள் வீட்டு பெண்களை அமரவைத்து அவர்களுக்கு உணவினை பரிமாறுவார்கள்… அப்படி செய்வதால் அவர்கள் உணவில் எவ்வளவு கவனமாக இருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு எந்ததெந்த உணவுகள் பிடிக்கும் என்பதை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்…. கணவன் மனைவிக்கு இடையே அன்யோனியம் அதிகமாகும் என யோசனை செய்து சூரியதேவன் இந்த ஏற்பாட்டை செய்தார்”.
வெற்றி, அருண் மற்றும் விஷ்ணு அவரவர் காதலிக்கு தங்கள் கைகளால் உணவினை பரிமாரினார்கள்.
சந்திரன் மற்றும் தர்மர் தங்கள் குடும்ப பெண்களுக்கு பார்த்துபார்த்து பரிமாரானார்கள்.
பெண்கள் அனைவரும் உண்டபின் சிறிது நேரத்தில் மஞ்சள் நீராட ஆரம்பித்தனர்.
“அனைவரும் விளையாடும் இடத்தைவிட்டு ஒதுங்கி நின்ற உமாவின் மீது வெற்றி யாருக்கு தெரியாமல், அவள் அசந்த நேரத்தில் மஞ்சள் நீர் ஊற்றிவிட்டு சென்றுவிட்டான். அதை பார்த்த மல்லி அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டாள்”.
“அந்த வழியே நீர் அருந்த வந்த நாச்சியார் வெற்றியின் செயலைபார்த்துவிட்டு யாருக்கும் தெரியாமல் வந்தவழியே சென்றுவிட்டார். அவரின் மனதில் சிலபல திட்டங்களை வகுத்தவர், அதை செயல்படுத்த முடிவு செய்து அமைதியாக அமர்ந்துவிட்டார்”. ஏற்கனவே மூத்தவன் இருக்க இளையவனுக்கு நிச்சயம் செய்வதில் கவலையாக இருந்தவருக்கு இந்த நிகழ்வு சற்று நிம்மதியை தந்தது. அதிவிரைவாகவே வெற்றியின் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என நினைத்துக்கொண்டார் நாச்சியார்.
“விஷ்ணுவோ தன்னவள் மேல் உள்ள கோபத்தினால், அதிர்ச்சியில் உறைந்து நின்ற மல்லியின் மேல் மஞ்சள் நீரை ஊற்றிவிட்டு கூட்டத்துடன் ஐக்கியமாகிவிட்டான்”. “இரண்டு வாரமாக அவளிடம் தனியாக சந்தித்து பேசமுயன்று முடியாததால் அவளின் மேல் செம காண்டாக இருந்தான் விஷ்ணு… அந்த கோபத்தைத்தான் பல்வேறு வழிகளில் தீர்த்துக்கொண்டிருக்கிறான்”.
“மல்லியுடன் நின்றிருந்த அம்மு விஷ்ணுவின் செயலை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தவள், யாரோ தன்னையே பார்ப்பதை உணர்ந்து திரும்பிய அம்முவின் கண்களில் விழுந்தான் அருண்”… அதுவரை அவளையே பார்த்ததுக்கொண்டிருந்தவன், அவள் பார்த்ததும் எதுவும் பேசாமல் திரும்பி சென்றுவிட்டான்.
“அவன் பார்வை ஏதோ செய்ய, அவனிடம் செல்ல துடிக்கும் மனதை அடக்கும் வழி தெரியாமல் தவித்தவள், ஒரு முடிவெடுத்தவலாக, ஒரு சொம்பில் மஞ்சள் நீரை எடுத்துக்கொண்டு அருணை தேடி சென்றால்… அவனே திரும்பிநின்று தூரத்தில் எதையோ வெறித்து பார்த்துக்கொண்டிருந்தவனின் மேல் நீரை ஊற்றி ஓடிவிட்டாள். யாரோ என நினைத்துக்கொண்டு திட்ட திரும்பியவனின் பார்வையில் பட்டது கையில் சொம்புடன் ஓடும் அம்மு தான்… சிறிது தூரம் சென்றதும் நின்று திரும்பி அருணை பாரத்தவள் ஒழுங்கு காட்டிவிட்டு ஓடிவிட்டாள் அம்மு”.
“அவளுக்கு தன்னைபிடிக்கவில்லையா… அவள் மனதில் நான் இல்லையா… கட்டாயத்திற்காகத்தான் தன்னை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டாளா… தன்னிடம் ஒரு வார்த்தைக்கூட அம்மு பேசவில்லையே, தான் பேசசென்றால் கூட ஒதுங்கி சென்றவளை நினைத்து வெகுவாக குழம்பியனுக்கு அம்முவின் இந்த செயல் அவனின் மனம் மயிலிறகால் வருடியதை போல் அவ்வளவு லேசாக இருந்தது”.
“மனம் முழுவதும் மகிழ்ச்சியில் நிறைந்து போய் இருந்தது… அந்த மகிழ்ச்சியுடனே அனைவருடனும் கலந்துகொண்டு தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தினான் அருண்”.
[the_ad id=”6605″]
“அம்முவுக்குமே அவளின் இந்த செயலானது ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருந்தது… அதே சமயம் மனம்முழுவதும் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது”.
“ஜெயந்தியோ சங்கருடன் பேசிக்கொண்டிருந்த மதனை வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் “… இவன் மட்டும் கணவனாக வராமல் போயிருந்தால் வாழ்க்கையே வீணாபோயிருக்கும் என்றுதான் தோன்றியது.
ஜெயந்தியின் பார்வையை உணர்ந்தவன் சங்கரிடம் கூறிவிட்டு தன்னவளை நோக்கி சென்றான்.
“என்ன பார்வையெல்லாம் பலமா இருக்கு?… என்ன வேணும் டீ… தண்ணீர் குடிக்கறையா?… போய் கொண்டாரட்டா ஜெயந்தி”… “வேண்டாம் மதன்… மஞ்சள் நீரை காட்டி, இதை உங்க மேல ஊத்தனும்னு”… “நீ கூப்பிட்டு இருந்தா, நானே வந்திருப்பேனேடீ”… வருவீங்கத்தான்… அப்புறம் என்ன இப்ப ஊத்து டீ… இப்ப எனக்கு மூடு பேச்சி மாமா… இதுக்கு கூட மூடு வரனுமாடீ… “வரவர நீ ரொம்ப பன்றடீ எனக்கூறி சென்றவனை அழைத்து அவன் எதிர்பாராத விதமாக மஞ்சள் நீரை ஊற்றிவிட்டு ஓடிவிட்டாள்”…
“அடியே… ஓடாதடீ… நான் எதுவும் பண்ணமாட்டேன் நில்லு ஜெயந்தி எனக்கூறி அவளை பிடித்து அமரவைத்தவன், அவளின் கைகளை பிடித்துக்கொண்டு அருகில் அமர்ந்துகொண்டான்”.
வர்ஷா மற்றும் குட்டியும் பிடித்தவர்கள் மேல் எல்லாம் நீர் ஊற்றி மகிழ்ந்தனர்… இவர்களின் மகிழ்ச்சியை பார்த்து தானும் மகிழ்ந்து போய் இருந்தான் கண்ணன். இவனின் இந்த பொருமை மற்றும் பொறுப்புக்கே அதிக நண்பர்கள் இருந்தனர்.
“கார்த்திக்கோ தன்னவள் மேல் நீரை ஊற்ற தெருதெருவாக சுற்றி இறுதியில் ஒரு முட்டு சந்தில் வைத்து நீரை ஊற்றிவிட்டு மக்களோடு மக்களாக கலந்துவிட்டான்”. அவளே அவனின் பின்னோடு சென்று மஞ்சள் நீரை ஊற்றிவிட்டு தான் ஓய்ந்தாள் மீனு.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த வேலம்மையின் அகமும் முகமும் மலர்ந்து போய் அமர்ந்திருந்தார்… இத்தனைவருட மனபாரமெல்லாம் நீங்கி மனம் லேசானது போல் இருந்தது.
அதன்பின் அனைவரும் மாலைவரை விளையாடியவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
வீட்டிற்கு வந்தததும் உமாவும் மற்றவர்களும் அசதியினால் தூங்கிவிட்டனர்.
மல்லியும் வீட்டிற்கு சென்றதும் தூங்கிவிட்டாள்.
பண்ணையாரின் வீட்டினர் அனைவரும் குளித்துவிட்டு, இரவு உணவை செய்ய ஆயத்தமானார்கள் பெண்கள்… இரவு உணவினை முடித்ததும் கோயிலுக்கு கிளம்பினார்கள்.
அசதியினால் நாச்சியார், சாரதா மற்றும் வேலம்மை தூங்குவதாக சென்றுவிட்டனர்.
ஜெயாவோ கால்வலியினால் மாத்திரை போட்டுவிட்டு படுத்துவிட்டார்.
சிறியவர்கள் மற்ற அனைவரையும் அழைத்துக்கொண்டு கோயிலுக்கு சென்றனர்… இரவு விளக்கின் ஒளியில் அந்த இடமே ரம்யமாக இருந்தது.
“ஒரு பக்கம் நல்லதங்காள் கதை மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்த வயதானவர்கள்… ஒருபக்கம், தெருகூத்தும், ஒருபக்கம் இசை நிகழ்ச்சிகளும் என அந்த இடமே களைகட்டியிருந்தது”.
இவர்களுடன் வந்த சந்திரன், தர்மர் மற்றும் சங்கர் மூவரும் ஊர் பெரியத்தலைகளுடன் விவாதித்துக்கொண்டிருந்தனர்.
அவர்களிடம் இருந்து நழுவியவர்கள் நிகழ்ச்சியை பார்க்க சென்றனர்… அப்பொழுது அங்கு இருந்த உணவுக்கடையை பார்த்த மீனு வெற்றியிடம் , “அண்ணா அங்க பாரு அப்பளம்… வா ண்ணா… வந்து வாங்கிக்கொடு ண்ணா”… “அது வேண்டாம் மீனு… ரொம்ப காரமா இருக்கும்… அந்த காரம் உனக்கு ஒத்துக்காது குட்டிமா”… பரவாயில்லை வாண்ணா… சொன்னா கேளு மீனு வேணா வா எனக்கூறிஅழைக்க வரமாடேன் என அடம்பிடித்துக்கொண்டிருந்தவளை திட்ட ஆரம்பிக்கும் போதே…
விஷ்ணு, “நீ வா மீனு… நான் வாங்கித்தறேன் எனக்கூறி அழைத்தவனின் பின்னே நாய்குட்டியை போல் ஓடிவிட்டாள் மீனு”… “அப்பளம் என்றால் மீனுவுக்கு மிகவும் பிடிக்கும்… அதைவிட திருவிழாவி்ற்கு வரும் கடைத்தொருவில் போடும் அப்பளமானது மூன்று கை சேர்த்து வைத்தை போல் அகலமாக இருக்கும்…
அதற்கு அடுத்தார் போல் காரமானது மிகவும் தூக்கலாக இருக்கும்… புதிதாக காரம் அதிகமாக சாப்பிடுபவர்களால் இதை உண்ணமுடியாது… ஒரே சமயத்தில் கண்களிலும் நாசியிலும் நீர் வந்துகொண்டே இருக்கும்”.
மீனுவிற்கு இதை சாப்பிட்டு பலக்கம் தான், ஆனாலும் வெற்றி இதை உண்ண அனுமதிப்பதில்லை… அவன் வாங்கி கொடுத்துவிட்டு என்றால் விஷ்ணு, அருண், சந்திரன் அல்லது தர்மர் என யாரையாவது காக்காபிடித்து வெற்றிக்கு தெரியாமல் வாங்கி உண்பாள் என்பது தனிக்கதை.
ஒவ்வொரு சமயம் வெற்றி அப்பளத்திற்க்கு ஈடாக அவளுக்கு பிடித்த உணவுவகைகளை கொண்டுவந்து இறக்கிவிடுவான் என்பது வேறு.
“விஷ்ணு அதன் காரத்தை உணர்ந்து இரண்டு மட்டும் வாங்கி, ஒன்று மீனுவுக்கு கொடுத்துவிட்டு மற்றொன்றை அத்தைக்கு கொடுத்துவிட்டான்”.
“அதன் காரம் அறிந்த காயத்ரியும் சகுந்தலாவும் வேண்டாம் என்றுவிட்டார்கள்… ஒரே ஒரு துண்டு மட்டும் உண்ட ஜெயந்தி காரம் தாங்காமல் வேண்டாம் என்றுவிட்டாள்… இவளின் அவஸ்தையை பார்த்த விசாலாட்சியும் வேண்டாம் என்றுவிட்டாள்… வர்ஷாவோ ஒரு வாய் சாப்பிடுவதும் ஒரு வாய் நீர் அறுந்துவதுமாக சிறிது சாப்பிட்டவள் வைத்துவிட்டாள்… மீதியிருந்ததை விஷ்ணு, கார்த்திக் மற்றும் மதனும் உண்டுவிட்டனர்”.
மீனுவோ “கொக்குக்கு ஒன்ரே மதி” என்பது போல் தன்னுடைய அப்பளத்தை ரசித்துருசித்து சாப்பிட்டு கொண்டிருந்தாள்… “அதை பார்த்த வெற்றி அவளை தடுக்கவும் முடியாமல், திட்டவும்முடியாமல், அருகில் இருந்த கடைக்கு சென்று ஐஸ் கிரீம் வாங்கிவந்து அனைவருக்கும் கொடுத்தான்”.
“மீனுவோ அதோடு நிறுத்தாமல் கடைத்தொருவில் இருந்த அனைத்து உணவையும் ருசிபார்க்க ஆரம்பித்துவிட்டாள்… அவள் உண்ட உணவு அனைத்தும் காரசாரமான உணவுகள் தான்”.
“அங்கிருந்து சிறிது தூரம் சென்றதும் வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி கொண்டதோடுமட்டுமல்லாமல்… தன் வீட்டினர் அனைவருக்கும் அருண், வெற்றி மற்றும் விஷ்ணு அவர்கள் கேட்டதை வாங்கிகொடுத்தார்கள்”.
“அதே போல் தங்களின் மனம் கவர்ந்த மங்கைகளுக்கும் பரிசு பொருட்களை தனியாக வாங்கி பத்திரபடுத்திக்கொண்டனர்”.
அவர் கேட்டதையெல்லாம் வாங்கிகொடுத்து கூத்து பார்க்க சென்றனர்… அப்பொழுது வெற்றிக்கு போன் வர, அதை எடுத்து பேசிவிட்டு வைத்தவனின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சியிருந்தது… அதே மகிழ்ச்சியுடன் விஷ்ணு மற்றும் அருணை பார்க்க அவர்களும் இவனை பார்த்து வெற்றி குறி காண்பித்துவிட்டு அமைதியாக சென்றுவிட்டனர்.
“தூங்கி எழுந்து குளித்துவிட்டு உமாவிற்காக காத்திருந்து அவளையும் மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு வந்தாள் உமா”.
வரவே மாட்டேன் என அடம்பிடித்துக்கொண்டிருந்த சுந்தரத்தை அதட்டி மிரட்டி கூட்டிக்கொண்டுவந்திருந்தாள் மல்லி.
வந்தவர்கள் வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி கொண்ட பின்பு தங்களுக்கு விருப்பமான உணவினை உண்டுவிட்டு கூத்தும் இசைநிகழ்ச்சியையும் சிறிது நேரம் பார்த்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
“பாதிதூக்கத்தில் இருமல் வர, தண்ணீர் குடிக்க எழுந்த நாச்சியார்… தண்ணீர் இல்லாததால் சமையளறைக்கு சென்று தண்ணீர் குடித்துவிட்டு வரும்போது ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்க ஜன்னல் வளியே வெளியே பார்த்தார்”… அப்பொழுது யாரோ ஐந்து பேர் சுவர் ஏறி குதித்து வருவது தெரிய வேகமாக ஜன்னலை அடைத்துவிட்டு சாரதா மற்றும் வேலம்மையை எழுப்பினார்…
அவர்களிடம் தான் கண்ட விஷயத்தை கூற சாரதா, “என்ன நம்ம வீட்டுக்கு திருடன் வந்திருக்கானுங்களா?… அவனுங்கல சும்மா விடக்கூடாது மதனி… நீங்க போய் போலீஸ்க்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லுங்க மதனி… அக்கா நீங்க போய் மிளாய்தூள் எடுத்துகிட்டுவாங்க… நான் போய் எல்லா கதவையும் சாத்தறேன் எனக்கூறியர்… விரைவாக சென்று வேலையை முடித்துவிட்டார்”.
“வேலம்மையோ போலீஸ்க்கு போன் செய்து விஷயத்தை கூற, தாங்கள் உடனடியாக வருவதாக கூறி, அவர்களை பத்திரமாக இருக்க சொல்லியவர்கள் உடனடியாக அல்லியூர் நோக்கி கிளம்பிவிட்டனர்.
சமையளறையிலிருந்து மிளகாய்பொடியை எடுத்துக்கொண்டு வந்த நாச்சியாரிடம் வேலம்மை, “என்ன நாச்சியார் இதை எடுத்துக்கொண்டு வர இவ்வளவு நேரமா உங்களுக்கு?”… “சமையலறை பக்கம் போய் பலவருஷம் அச்சி வேலம்மை… அதனால் தான் எது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை… தேடி எடுக்க இவ்வளவு நேரம் ஆயிடுச்சு”… ஆளுக்கு ஒரு தட்டத்தில் மிளகாய் பொடியை கொட்டி மூவரும் கையில் வைத்துக்கொண்டனர்.
வேலம்மை, “அச்சோ.. சாரதா… ஜெயா வேற தனியா இருக்காளே… இப்ப என்ன பண்ண?”… “அட ஆமாம்… அக்கா… இப்ப என்ன செய்வது” என்றவரிடம் நாச்சியார், “அவ அறைக்கதவை வெளியே இருந்து பூட்டிவிட்டலாம் சாரதா… நாம இந்த அறையில் போய் ஒழிந்துகொள்ளலாம்… அவனுங்க வந்து கதவை திறந்ததும் முகத்திலேயே மிளகாய்த்தூள் கொட்டிவிடலாம்… எப்படி என் ஐடியா?”… “சூப்பர் நாச்சியார்… இப்படி பண்ணுனா ஜெயாவுக்கும் எதுவும் ஆகாது… திருடனுங்களையும் பிடித்துவிடலாம் எனக்கூறினார் வேலம்மை”.
“வெற்றியின் திட்டப்படி மார்க் மற்றும் அவனின் ஆட்கள் அனைவரும் பதுங்கியிருந்து திருடர்களை கண்காணித்துக்கொண்டிருந்தனர்… அதில் பாட்டிகள் மூவரின் நடவடிக்கையை கவனிக்க தவறிவிட்டான்”.
“பதுங்கிபதுங்கி வாசலுக்கு வந்த திருடர்கள் ஐவரும் தங்களிடம் இருந்த கல்லச்சாவியை போட்டு வீட்டை திறந்துவிட்டனர்… நேரே உள்ளே சென்ற ஐவரும் பூஜை அறைக்கு சென்றனர் அதில் நாச்சியார் பெரிதும் அதிர்ச்சியாகிவிட்டார்”.
“ஏனெனில் அந்த அறையில் இருப்பது விலைமதிப்பில்லா பொக்கிஷமான மரகதலிங்கம்… இந்த திருடர்களின் செயல் ஏற்கனவே திட்டமிட்டு செய்ததை போல் இருந்தது.
அதிலே அவருக்கு சந்தேகம் வந்ததுவிட்டது… ஏனெனில் சாதாரணமாக திருட வருபவர்கள் முதலில் சென்று தேடும் அறை படுக்கையறை அல்லது லாக்கராகத் தான் இருக்கும்… ஆனால் இவர்களோ நேரடியாக பூஜை அறையை நோக்கி சென்றதில் சற்று பயந்துவிட்டார். அவரின் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு மரகதலிங்கம் கிடைக்காததால் திருடர்கள் பூஜை அறையில் இருந்து பொருள்களை போட்டு உடைத்துவிட்டனர்”.
[the_ad id=”6605″]
தன் மனதில் இருந்த சந்தேகத்தை சாரதா மற்றும் வேலம்மையிடனும் பகிர்ந்துகொண்டார்…
முதலில் அசட்டையாக இருந்தவர்கள் இவர் திருடவந்தது மரகதலிங்கத்தை என்று தெரிந்தும், அந்த திருட்டு கும்பலை எப்படியாவது பிடித்துவிடவேண்டும் என்றும் உறுதியாக இருந்தனர்.
இவர்களின் உறுதியை குழைக்காமல் அவர்கள் ஐவரும் ஒவ்வொரு அறையாக சென்று தேடினார்கள்… அதில் மீதியிருந்தது இரண்டு அறை மட்டுமே ஒன்று ஜெயாவின் அறை மற்றொன்று இவர்கள் இருக்கும் அறை.
“இவர்களின் அறைக்கு வந்து கதவை திறந்ததும் பாட்டிகள் மூவரும் கைகளிலிருந்த மிளகாய்பொடியை முகத்தில் போட்டுவிட்டார்கள்”…அந்த எரிச்சலில் ஒருவன் நாச்சியாரை பிடித்து கீழே தள்ளிவிட்டான்… அதில் அவருக்கு காலில் அடிபட்டுவிட்டது.
இவர்களின் சத்தம் கேட்டு உள்ளே ஓடிவந்த மார்க், “சாரதாவை அடிக்கவந்தவனை ஒரு உதைவிட்டு கீழே தள்ளி புரட்டியெடுத்துவிட்டான்… அவனுடன் வந்தவர்கள் அனைவரையும் மார்க்கின் ஆட்கள் கயிற்றால் தூனோடு சேர்த்து கட்டிவைத்துவிட்டனர்”.
அதற்குள் போலீஸ் அதிகாரிகளும் வந்துவிட்டதால் திருடர்களை அவர்களின் கஸ்டடியில் எடுத்துக்கொண்டனர்.
“உள்ளே வரும்போதே மார்க் வெற்றிக்கு இரண்டு ரிங் விட்டுவிட்டு தான் உள்ளே ஓடிவந்தான்… அதனால் வெற்றியும் குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டான்”.
வீட்டிற்குள் வந்தவர்கள் முதலில் கண்டது போலீஸ் அதிகாரிகளைத்தான்… முதலில் வெற்றிக்கும் ஒன்றும் புரியவில்லை… உள்ளே சென்றவன் கண்டது நாச்சியாரின் அடிப்பட்டு காலுக்கு மருந்திட்டுகொண்டிருந்த மார்க்கைத்தான்.
“குடும்பத்தார் அனைவரும் பதரிப்போய் விசாரிக்க சாரதா மற்றும் வேலம்மையும் நடந்தவற்றை அனைவருக்கும் கூரினார்கள்”.
சரதாவிடம் இந்த சாவியை வாங்கிக்கொண்டு அன்னையின் அறையை திறந்து அவருக்கு ஏதாவது ஆகிவிட்டதா என ஆராய்ந்து, அவருக்கு ஒன்றும் இல்லை என தெரிந்த பின் தான் சற்று நிம்மதியானது வெற்றியின் மனது.
இதற்கிடையில் ஊர் மக்கள் அனைவரும் விஷயத்தை கேள்வி பட்ட உடனே பண்ணையாரின் வீட்டிற்கு வந்துவிட்டனர்.
அசதியினால் நன்றாக தூங்கிக்கொண்டிருந்த உமா, போன் அடிக்கும் சத்தத்தில் போனை எடுத்து விசாரிக்க , மல்லி பண்ணையாரின் வீட்டில் நடந்ததை கூறியவள்… “நானும் அப்பாவும் போறோம், நீயும் வரியா உமா?… ஊரே அங்கு தான் இருக்கு புள்ள”… “வரறேன் இரு மல்லி எனக்கூறியவள்… பேச்சி சத்தத்தில் படுத்திருந்த கண்ணனையும் கூட்டிக்கொண்டு மல்லியுடன் பண்ணையாரின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்”.
அன்னையை பார்த்துவிட்டு வெளியே வந்தவன் திருடர்களை பற்றி போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டிருந்த போது தான் நம்பி வந்தார்.
வந்தவர் வெற்றியிடம், “என்ன ஆட்சி வெற்றி?… வீட்டில் இருந்த பொருள்கள் எல்லாம் உடைந்து போய் இருக்கு… அத்தைக்கு வேற அடிபட்டு இருக்கு என கேள்வி மேல் கேள்வி கேட்டவரையே ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தான் வெற்றி”.
“என்ன வெற்றி… நான் பாட்டுக்கு கேட்டுகிட்டிருக்கேன்… நீ பாட்டுக்கு அமைதியா இருந்தா என்ன அர்த்தம்” என்றவரிடம், “ஏன் உங்களுக்கு தெரியாதா?… இங்க என்ன நடந்தது என்று… இல்ல இவனுங்க யார்னு தான் உங்களுக்கு தெரியாதா?”…”எனக்கு எப்படி வெற்றி இவனுங்களை தெரியும்?… நானே இப்போது தானே வந்தேன்”.
“நீங்க வேனா இப்ப வந்து இருக்கலாம் மிஸ்டர். நம்பி… நீங்க அனுப்பிய ஆட்களை எப்படி உங்களுக்கு தெரியாம போகும்?… என்ன நான் அனுப்பின ஆளா?… நான் எதுக்கு இவனுங்களை அனுப்பனும் வெற்றி?… சும்மா நடிக்காதீங்க நம்பி…. நீங்க இங்க எதுக்கு வந்தீங்க… ஏன் வந்தீங்க என்று எங்களுக்கு தெரியும் மிஸ்டர். நம்பி”.
“எப்படி தெரியும்னு யோசனையா இருக்கா?”… நீங்க தான் சொன்னீங்க… நிச்சியம் அன்னைக்கு கோவமா யாருகிட்டையோ கத்தினீங்களே, அன்னைக்கே உங்க வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறீடுச்சி நம்பி… நீ பேசின அத்தனையும் உமா கேட்டு எங்கிட்ட சொல்லிட்டா… அதுக்கு அப்புறம் தான் உங்க அறையில மைக் வச்சி நீ பண்ணின அத்தனை பித்தளாட்டத்தையும் கண்டுபிடிச்சிடோம்… அன்னையிலிருந்தே உங்களுடைய ஒவ்வொரு அசைவையும் வாச்சி பண்ணிகிட்டே இருந்தாங்க என்னுடைய ஆட்கள்”.
இப்ப மரகதலிங்கத்தை கடத்த முயன்றதிலிருந்து அனைத்தும் எங்களுக்கு தெரியும் மிஸ்டர். நம்பி…
சரி இப்ப சொல்லுங்க நம்பி… எதுக்காக எங்க தாத்தாவை கொலை பண்ண… சொல்லுடா… எதுக்காக எங்க தாத்தாவை கொலை பண்ணின.
சந்திரன், “என்னடா சொல்லற?… அப்பாவை கொலை பண்ணினானா?… அப்ப அது விபத்து இல்லையா?” என்றவரிடம்…
அருண், “அது விபத்து இல்லப்பா… முழுக்கமுழுக்க திட்டமிட்ட கொலை ப்பா… நீங்க, தாத்தா ரெண்டு பேரும் போறீங்கனு தெரிந்து இந்த ஆளு பண்ணி இருக்கான்… அதுவும் மரகதலிங்கத்தை அடையரதுக்காக ப்பா… உங்களுக்கு பதிலா பெரியம்மா போனது நாள அவங்களுக்கு இந்த நிலை ப்பா”.
“அருண் கூறியதை கேட்டு கோபத்தையும் கட்டுபடுத்திக்கொண்டு நம்பியிடம், ஏன்டா இப்படி பண்ண?… உன் மேல் வச்ச பாசத்தினால் தாண்டா, அவ பெயரில் இருந்த பாதி சொத்து உன் பெயரில் எழுதி கொடுத்தோம்… இது பத்தாதாடா?… அதுவரை அமைதியாக இருந்த நம்பி கோபத்தில் என்ன பேசுகிறோம் என யோசிக்காமல் அத்தனை உண்மைகளையும் தன் வாயால் வாக்குமூலம் கொடுத்துக்கொண்டிருந்தனர்”.
“ஆமாம்… பத்தாது தான்… எப்ப பாரு நீதி, நியாயம்னு பேசிகிட்டு… அதனால் தான் உன் அப்பனை போட்டேன்… உன்னையும் சேர்த்து போடத்தான் பிளான் பண்ணினேன், ஆனா இந்த ஜெயா உனக்கு பதிலா வந்துட்டா… நீ மட்டும் அன்று போயிருந்தா இந்த மரகதலிங்கத்தை அப்பவே வித்து பணம் பாத்திருப்பேன்”.”
“இத மட்டும் வித்தா பல கோடி பணம் வரும். அது இருந்தா போதும் இந்த உலகத்தில் எதைவேண்டுமானாலும் வாங்கலாம்… அதவிட்டுபுட்டு பூஜை பண்ணிகிட்டு இருக்கீங்க” என எகத்தாளமா கூறியவரை விஷ்ணு புரட்டி எடுத்துவிட்டான்.