அத்தியாயம் 21.1:
வழக்கம் போல் அதிகாலையிலேயே எழுந்த உமா வேலைகளை முடித்துவிட்டு அம்மு, குட்டி மற்றும் கண்ணனை எழுப்பியவள், அவர்கள் எழாததால் அம்முவை மட்டும் எழுப்பி, “நான் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டேன் அம்மு… நீ குளித்துவிட்டு, அவங்களையும் எழுப்பி குளிக்க சொல்லு நான் போய் வேலையை முடித்துவிட்டு வந்துவிடறேன்”…
“கம்பம் நடங்காட்டியும் கோவியிலுக்கு போகனும் அம்மு… அவனுங்களை வெளியே எங்கையும் போகாம பாத்துக்கோ டீ”… “நான் பாத்துக்கிறேன் நீ போய்ட்டு வாக்கா… மல்லி அக்காவும் தான வராங்க?”…
“அவளும் தான் வரா டீ… சரிசரி நான் கிளம்பறேன் அம்மு… ஜாக்கிரதையா இருக்கனும்… எட்டு மணிக்கு கம்பம் நடராங்களாம் அம்மு… நான் வரதுக்குள்ள ரெடியா இருக்கனும் புரியுதா”… எல்லாம் நான் பாா்த்துக்கிறேன் நீ பார்த்து போக்கா… நீ கதவை லாக் பண்ணிக்கோ அம்மு எனக்கூறியவள்….
“அதிகாலை பொழுதான ஐந்து முப்பது மணிக்கு மல்லி வீட்டிற்கு சென்றவள்… அங்கு தனக்காக காத்துக்கொண்டு இருந்தவளை அழைத்துக்கொண்டு பண்ணையாரின் வீட்டிற்கு சென்றாள்”.
மல்லி, “ஏண்டீ உமா!”… “உனக்கே இது நியாயமா படுதாடீ… கோயிலுக்கு போகனும்னு இப்படி ஐஞ்சரைக்கு எழுப்பி வேலைக்கு கூட்டிகிட்டு போரையேடீ”… “சும்மா பொழம்பாம வாபுள்ள… கம்பத்துக்கு முதல் தண்ணி நான் தான் ஊத்தனும் எவ்வளவு நாள் ஆசை தெரியுமா உனக்கு?… ஏன் தெரியாம?”… “எல்லாம் தெரியும் டீ… அப்படி என்ன இருக்குனு முதலில் தண்ணீர் ஊத்தனும்னு ஐஞ்சி வருசமா முயற்சி பண்ற உமா?”… தெரியவில்லை டீ… அதுலையும் ஒரு கிக் இருக்கு இல்ல… “கூட்டத்தில் அடித்துபிடித்துக்கொண்டு தண்ணி ஊத்துவது கிக்கா உமா”… இல்லையா பின்ன?… “நம்ம ஊர் சொர்ணாக்காங்காவை எல்லாம் சமாளிச்சி முன்ன போய்டுவையாடீ!”… அவங்க சாமியை பார்க்க முன்னாடி போகத்தான் ஆவளா இருப்பாங்க இல்லையா மல்லி?… “ஆமாம் புள்ள”… அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் உமா?… இதுல தாண்டி இருக்கு டிரிக், நாம கடைசியா கம்பம் பக்கம் நின்னா ஈசியா ஊத்திடலாம் மல்லி… ஆமா இல்ல?… ஆமாம் தான் டீ.
சரிவா வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு போகனும் எனக்கூறி மல்லியை அழைத்துக்கொண்டு பண்ணையார் வீட்டிற்கு சென்றுவிட்டாள் உமா.
காயத்ரியும் சகுந்தலாவும் அதிகாலையிலேயே எழும் பழக்கம் உள்ளதாலும், முதல் நாளே விஷயத்தை கூறியிருந்தால், சகுந்தலா எழுந்து இவர்களுக்காக காத்திருந்தனர்.
மல்லி, “சகுந்தலா ம்மா… நல்லா தூங்கனீங்களா?…டீ போட்டு தரவா?”… “நான் நல்லா தூங்கிறேன் டீ… கொஞ்ச நேரத்தில் காயத்ரி வந்திடுவா மல்லி, அதுக்கு பிறகு போட்டுக்களாம்” என்றரார்…
“உமா… பசங்களை தனியாவா விட்டுவிட்டு வந்திருக்க?”… “பக்கத்தில் மயிலு பாட்டி இருக்காங்க, அவங்க பாத்துக்குவாங்க ம்மா”… நீங்களும் கோவிலுக்கு வரீங்க தான ம்மா?… “ஆமாம் உமா”… மதன் அண்ணா இங்க இருக்காங்களா ம்மா… இல்ல உமா… தம்பி நேத்து மதியானமே வேலை இருக்குனு கிளம்பீட்டாங்க, திருவிழா அன்னைக்கு தான் வருவாங்க உமா.
மல்லி, “மதனியுமா ம்மா?”… அவ இங்க தான் இருக்கா டீ… அவ்வளவு தூரம் போய் வந்தா அலைச்சல் தான் அதிகமா இருக்கும் மல்லி… அது குழந்தைக்கு நல்லதில்லை டீ… அதுவும் சரிதான் ம்மா…
உமா, “நீ மொக்கை போட்டது போதும் டீ”… “சகுந்தலா ம்மா… காலையில என்ன செய்யட்டும் ம்மா… சிம்பிளா இட்லியும் பொங்கலும் பண்ணுங்க போதும்”… சரி நீங்க போய் பாருங்க நான் போய் குளித்துவிட்டு வருகிறேன் எனக்கூறி சென்றுவிட்டார்.
சிறிது நேரத்திலேயே காயத்ரியும் சகுந்தலாவும் குளித்துவிட்டு வந்துவிட்டனர்… அதன் பின் அவர்களுக்கு டீ போட்டு கொடுத்துவிட்டு, இவர்கள் இருவரும் காலை உணவை செய்ய ஆரம்பித்துவிட்டானர்… உணவை செய்து முடித்துவிட்டு முற்றத்தில் இருந்த வீட்டினரிடம் கூறிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
உமா வீட்டிற்கு செல்லும் போது அனைவரும் புறப்பட்டு ரெடியாக இருந்தனர்.
“அம்மு நீ ரெண்டு குடத்தில் தண்ணீர் பிடித்து வை… கண்ணா, குட்டிக்கூட போய் பூ பறிச்சிகிட்டு வாடா… நான் போய் குளித்துவிட்டு வருகிறேன் எனக்கூறி சென்றுவிட்டாள்”.
உமா கூறியதை போல் இவர்கள் செய்துவிட்டு மயிலு பாட்டியின் வம்பு வளர்த்துக்கொண்டிருந்தனர். குளித்துவிட்டு வந்த உமா ரெடியாகிவிட்டு சிறியவர்களை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றுவிட்டாள்.
இவளுக்கு முன்பே வந்திருந்த மல்லியுடன் சேர்ந்துகொண்டனர்.
ஏற்கனவே பூசாரி தேவையான வேலைகளை செய்து வைத்துவிட நல்ல நேரம் வந்ததும் பூஜை ஆரம்பிக்க காத்திருந்தார்…. சிறிது நேரத்திற்கு பின் வந்த ஊர் பெரியத்தலைகளும், பண்ணையாரின் மொத்த குடும்பமும் வந்துவிட்டனர்.
நல்ல நேரம் வரும்வரை அனைவரும் சிறிது நேரம் காத்திருந்தனர்.
அதன் பின், “நல்ல நேரத்தில் சந்திரதேவன், தர்மன் மற்றும் மற்ற பெரியதலைகள் அனைவரும் சேர்ந்து மஞ்சள் பூசிய கம்பத்தை கோவிலுக்கு முன் கொண்டுவந்து வைத்தனர்”.
“அந்த கம்பத்துக்கு பூஜை செய்த பின் கோயிலை சுற்றி மூன்று முறை சுத்திவந்து பலிபீடம் முன் நட்டுவைத்தனர்”.
அதன் பின் அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடை பெற்றது… அது முடிந்து பிரசாதம் பெற்றதும் ஊர்மக்கள் கம்பத்திறகு நீர் ஊற்றி மஞ்சள் குங்குமம் வைத்து வழிப்பட்டனர்.
“மல்லியிடம் கூறியதை போல் இந்த முறை முதலில் நீர் ஊற்றி வழிபட்டாள் உமா… அதில் அவளுக்கு அத்தனை மகிழ்ச்சி… அவளுக்கு பின் அம்மு, மல்லி மற்றும் அனைவரும் நீர் ஊற்றி ஆசி பெற்றுக்கொண்டனர்”.
“பூஜை முடிந்ததும் சிறிது நேரம் கோயிலில் அமர்ந்திருந்தனர் உமாவும் மற்றவர்களும், கொடுத்த பிரசாதத்தை சாபிட்டுவிட்டு வீட்டிற்கு வந்தனர்”.
மல்லி அவள் வீட்டிற்கு சென்றுவிட்டாள். பண்ணையார் வீட்டு பெண்களும் தங்கள் காரில் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
இவர்கள் சென்ற பிறகு வந்த அருண், வெற்றி மற்றும் விஷ்ணு அம்மனை தரிசித்துவிட்டு கோயில் வேலைகளை மேற்பார்வையிட்டனர்…
அவர்களுடன் மற்ற இளைஞர்களும் சேர அந்த இடமே அல்லோலகலப்பட்டது…. அதன் பிறகு கோயில் மற்றும் முக்கிய தெருவில் பந்தல் போடுவது, ஊர் சுற்றியும் ரோடியோ கட்டுவது, வண்ணவண்ண மின்விளக்குகள் அமைப்பது, தோரணங்கள் கட்டுவது என அனைத்து வேலைகளும் மலமலவென நடைபெற்றது.
“வீட்டிற்கு வந்த உமா சிறியவர்களை சாப்பிடவைத்துவிட்டு, தானும் உண்டுவிட்டு, மல்லியை அழைத்துக்கொண்டு வேலைக்கு சென்றுவிட்டாள்”.
“செல்லும் முன் குட்டி சாய்ந்தரம் கங்கணம் கட்ட போகனும் அதனால் வெளியே அலையாமா, அம்மு கூட சண்டை போடாம சமத்தா இருக்கனும்… வெளியே போகனும்னா அம்முகிட்ட சொல்லிவிட்டுபோ டா… கண்ணா அம்மு கூடவே இரு… எங்க போனாலும் மூனுபேருந்தான் போகனும்”… “புரியுதா கண்ணா?” “நான் பாத்துக்கிறேன் க்கா, நீங்க போய்ட்டு வாங்க எனக்கூறி உமாவை அனுப்பி வைத்தான் கண்ணன்”.
“அவள் சென்றதும் மீனாவிடம் வாங்கிவந்த பாடபுத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்ததுவிட்டாள் அம்மு… சிறிது நேரம் அவளிடம் வம்பு செய்த குட்டி போர் அடிக்க, கண்ணனை கெஞ்சி கொஞ்சி கோயிலில் விளையாடிக்கொண்டு இருந்த தன் நண்பர்களுடன் இணைந்து கொண்டான்”.
அவன் சென்றதும் கண்ணனும் தன் புத்தகத்தில் ஆழ்ந்துவிட்டான்.
வெகு நேரம் ஆகியும் குட்டி வராததால் கண்ணன், “அம்மு இவனவேற இன்னும் கானோம், நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன். நீ கதவை சாத்திக்கோ”… “நீ போய் அவனை கூட்டிகிட்டு வா, நான் இங்க இருக்க வேலையை பார்க்கிறேன்”…
சரி அம்மு… நான் போயிட்டுவறேன் எனக்கூறி சென்றுவிட்டான் கண்ணன்.
“அங்கு சென்றவன் கண்டது வெற்றி மற்றும் அருணின் கைகளில் தொங்கிக்கொண்டு, சிரித்த படியே ஊஞ்சலாடிய குட்டியைத்தான்”. குட்டியின் சிறிப்பு சத்தம் அந்த இடத்தையே நிறைத்தது.
சிறிது நேரம் அந்த இடத்திலேயே இருந்து குட்டியின் மகிழ்ச்சியை பார்த்தவன்… விஷ்ணுவின் அழைப்பில் சுயம்பெற்று அவர்களிடம் சென்றான்.
“ரொம்ப தொல்லை பண்ணீட்டானா மாமா”… “அது எல்லாம் இல்ல கண்ணா, சமத்து பையனா எங்ககூடவே எல்லா வேலையையும் செய்தான் தெரியுமா?… நீ மட்டும் தான் வந்தையா?”… “ஆமாம் வெற்றி மாமா… உமா அக்கா வேலைக்கு போய்ட்டாங்க… அம்மு படிச்சிகிட்டு இருக்கா மாமா”.
அருண், “அம்மு எப்படி இருக்கா கண்ணா?”… “நல்லா இருக்கா மாமா… உமா அக்கா அதட்டி மிரட்டி ஒரு வழிக்கு கொண்டு வந்து இருக்காங்க… இப்ப கொஞ்சம் தைரியமா இருக்கா மாமா”.
விஷ்ணு, “அப்புறம் ஏண்டா நீங்க வீட்டுக்கு வரதில்லை?”… “அதுவா மாமா… உமா அக்கா தான் வேண்டாம் சொன்னாங்க… கல்யாணம் முடிஞ்சி வீட்டு மருமளா அந்த வீட்டு போனா போதும் சொல்லிட்டாங்க, அதனால் தான் விஷ்ணு மாமா”.
அருண், “நீ அம்மு கூடவே இருந்து பாத்துக்கோ கண்ணா”… “இவ்வளவு நேரம் அவ கூட தான் இருந்தேன் மாமா… இவனை கானோம் தான் வந்தேன்”… சரிமா அம்மு தனியா இருப்பா நான் குட்டியை கூட்டிகிட்டு போறேன் மாமா…. பாத்து போங்க… சரிங்க மாமா… அருண் மாமா, வெற்றி மாமா போய்ட்டு வருகிறேன்…
சரி கண்ணா… பாத்து போ எனக்கூறினான் அருண்.
கண்ணன், “வா குட்டி போலாம்… அண்ணா நான் அப்புறமா வறேனே”… “அதெல்லாம் வேண்டா, நீ வா, உமாஅக்கா வந்தா திட்டுவாங்க”… “நான் எங்கேயும் போக மாட்டேன் அண்ணா, வெற்றி மாமா கூட பத்திரமா இருக்கேன்”… அடம் பிடிக்காத வாடா என்றவனிடம்…
வெற்றி, “அவன் இருக்கட்டும் கண்ணா… நாங்க பாத்துக்கிறோம்… நீ போய் அம்முவை பார்த்துக்கோ”… “இல்ல மாமா அக்கா திட்டுவாங்க… நான் பேசிக்கிறேன், நீ போ கண்ணா என்றவனின் பேச்சை மீறமுடியாமல் குட்டியை விட்டுவிட்டு சென்றுவிட்டான்”.
குட்டி இவர்களுடன் சேர்ந்து செய்த சேட்டைகளால் அனைவரையும் புத்துணர்வுடன் வைத்திருந்தான்.
வீட்டிற்கு சென்ற கண்ணன் அம்முவிடம் நடந்ததை கூறிவிட்டு அவளுக்கு உதவியாக வேலையில் ஈடுபட்டான்.
மாலையில் வேலையை முடித்துவிட்டு நேரமாகவே வீட்டிற்கு வந்துவிட்டனர் உமாவும் மல்லியும்.
வீட்டிற்கு வந்த உமா ஓய்வாக வெளியே அமர்ந்தவள், குட்டி இல்லாததை அப்பொழுது தான் கண்டாள்.
“கண்ணனிடம், குட்டி எங்கடா?”… “அவன் கோயிலில் மாமா கூட இருக்கான் க்கா… நான் கூப்பிட்டேன் வரமாட்டன் சொல்லீட்டேன் க்கா, வெற்றி மாமாவும் விட்டுவிட்டு போக சொன்னாங்க, அதான் அக்கா அவனை அவங்ககிட்ட விட்டுவிட்டு வந்தேன்”.
“நீ போய் நான் வரசொன்னேன் சொல்லி கூட்டிகிட்டு வா… குளித்துவிட்டு கோயிலுக்கு போகனும் டா… அப்படியே கங்கணம் எப்ப கட்டறாங்கனு கேட்டுவிட்டு வாடா”… “சரிக்கா நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன்”.
“அம்மு நீ போய் குளித்துவிட்டு வா… நான் வேலையை முடித்துவிட்டு குளிக்கிறேன்”… நானே எல்லா வேலைகளையும் முடித்துவிட்டேன் அக்கா… குழம்பு வச்சிட்டேன், சாப்பாடு மட்டும் அப்புறமா வச்சிக்கலாம்னு விட்டுவிட்டேன்… எச்சில்படாம தான வச்ச அம்மு… அப்படித்தான் வச்சேன் க்கா… சரி அம்மு, நீ வரவரை கொஞ்சம் படுக்கிறேன்… “உடம்புக்கு முடியவில்லையா க்கா?”… “இல்ல அம்மு, அலைச்சல் நாளதான் நினைக்கிறேன் அம்மு”…. நீ தூங்கு க்கா… நான் குளித்துவிட்டு வந்து எழுப்பறேன் எனக்கூறி குளிக்க சென்றுவிட்டாள்.
படுத்த உமா அப்படியே தூங்கியும் விட்டாள்… குட்டியை கூட்டிகிட்டு வந்த கண்ணன் தூங்கிக்கொண்டு இருந்த உமாவை பார்த்ததும் அவளை தொந்தரவு செய்யாமல் திண்ணையில் குட்டியுடன் அமர்ந்து கொண்டான்.
குளித்துவிட்டு வந்த அம்மு இவர்களை குளிக்க சொல்லிகிட்டு திண்ணையில் அமர்ந்திருந்தாள்… அவர்கள் இருவரும் வந்த பின் உமாவை எழுப்பி குளிக்க அனுப்பிவைத்தாள் அம்மு… அதன் பின் நால்வரும் புறப்பட்டு கோயிலுக்கு சென்றார்கள்.
“மல்லியோ வரமாட்டேன் எனக்கூறிய சுந்தரத்தை வம்படியாக இழுத்துவந்திருந்தாள்”…
“வேலைவேலை என அழைந்துகொண்டிருந்த சுந்தரத்தை சிறிது நாட்களாக மிரட்டி ஒரு வழிக்கு கொண்டு வந்திருந்தாள்”.
கோயிலுக்கு சென்றவர்கள் உமாவுடன் சேர்ந்துகொண்டனர்… பின் பூஜையை முடித்துவிட்டு அம்மு, உமா, மல்லி,குட்டி மற்றும் கண்ணன் என அனைவரும் கஞ்கணம் கட்டிக்கொண்டு அம்மனை தரிசனம் செய்துவிட்டு வீடுவந்து சேர்ந்தனர்.
வழக்கம் போல் உமா அக்னி சட்டி, மல்லியும் அம்முவும் பால்குடம், கண்ணனும் குட்டியும் தீர்த்தக்குடம் எடுப்பதாக வேண்டிக்கொண்டு நோன்பு கயிற்றை கட்டிக்கொண்டனர்.
அதற்கு பிறகு உமா, “மல்லி, அப்பா இங்கேயே சாப்பிட்டு போங்க… சுத்தமா தான் அம்மு செஞ்சிவச்சி இருக்கா”… சாதம் மட்டும் வச்சா போதும், ஒரு பத்து நிஷத்தில் ஆகிடும் ப்பா இருங்களேன்… “எதுக்கு ம்மா உனக்கு சிரமம்?.. அது எல்லாம் ஒன்னும் இல்ல ப்பா”… மல்லி சொல்லு புள்ள, நீ சொன்னாதான் கேட்பாரு… அவரு இருப்பாரு நீ வா சாதம் வச்சிடலாம் எனக்கூறி உமாவை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.
சாதம் வைத்துவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். அப்பொழுது சுந்தரம், “உமா கல்யாணத்திற்கு என்ன பண்ணலாம்னு இருக்க?… ஏதாவது உதவி வேணும்னா கேளு ம்மா”… கண்டிப்பா உங்க உதவி வேணும் ப்பா… “அம்மா நகையும் பாட்டிங்க நகையும் சேர்ந்து இருபத்தைந்து பவுன் இருக்கு ப்பா… இன்னும் ஒரு பத்து பவுனு வாங்கனும்… பழைய நகை கொஞ்சம் சரிபண்ண வேண்டி இருக்கு… திருவிழா முடிந்தபிறகு தான் வாங்கனும்”.
“மல்லி அம்மா நகை கொஞ்சம் பாலிஷ் பண்ணனும் உமா, நீ போகும் போது சொல்லு இரண்டையும் செஞ்சிடலாம்”… பண்ணையார் குடும்பம் வாங்கற கடையில கொடுத்த பாதுகாப்பா இருக்கும்… அடிக்கடி அந்த கடைக்கு நாச்சியார் அம்மா போவாங்க, அதில் கடை முதலாளி கூட கொஞ்சம் பழக்கம் இருக்கு உமா… “சரிங்கப்பா…அப்படியே பண்ணீடலாம்”.
கண்ணன், “எவ்வளவு நகை இருக்கும் ப்பா?”… “இருபது பவுன் இருக்கும் டா… புதுசா வாங்கனும்… நல்லதா பாத்து மல்லிக்கு பிடிச்ச மாதிரி எடுக்கனும்”…
உமா, “அது எல்லாம் சிறப்பா பண்ணீடலாம் ப்பா… யாமிருக்க பயம் ஏன்… கவலையை விடுங்க உங்களுக்கு துணையாக நாங்க இருக்கோம், மல்லி கல்யாணத்தை சிறப்பா செஞ்சிடலாம் எனக்கூறியவள்… வாங்க சாப்பிடலாம்… அம்மு நீ சாப்பாடு எடுத்துவை நான் இலை அறுத்துவகிட்டு வருகிறேன்”… சரிக்கா… “நீங்க பாத்து அறுங்க க்கா எதாவது பூச்சி இருக்போகுது”… சரிடீ…
பின் அனைவரும் உணவை உண்டு சற்று பேசிவிட்டு மல்லியுடன் சுந்தரமும் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அவர்கள் சென்றவுடன் இவர்கள் உண்ட பின் நாய்க்கு உணவை வைத்துவிட்டு, ஆட்டுக்கு தட்டு போட்டுவிட்டு பாத்திரங்களை சுத்தம் செய்த பின் தூங்க சென்றனர்”.
அதன் பின்வந்த நாட்கள் அனைத்து கலகலப்பாகவும் சென்றது.