சித்திர பெண்ணே வெட்கத்தை தூரத்தில் போக சொல்லு
கட்டளையிட்டு சொர்க்கத்தை பக்கத்தில் நிற்க சொல்லு
இனிக்கின்ற இள்மைக்கு சிறகை கட்டிவிடு
மிதக்கின்ற நிலவுக்கு நடக்க கற்று கொடு
என்னவோ என்னவோ எனக்குள் நடக்குது
அம்மம்மா அம்மம்மா மனசு பறக்குது
காதலை கட்டி வைக்க கட்டுத்தறி இல்லை
வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை
கையில் மடிக்க பட்ட காகிதத்தை வைத்து கொண்டு, தலையை தஞ்சாவூர் பொம்மை போல ஆட்டிக்கொண்டு இருந்த இனியவளை பார்த்த அன்பு… அவளை ரசித்த படி நின்று இருக்க…
அதை கவனித்த இலக்கியன்…. “எப்பா குடும்பம்டா இது… எந்த பக்கம் பாத்தாலும் ஒரே லவ்ஸ்ஸா இருக்கு… இவங்களுக்கு நடுவுல நம்ப ரொம்ப நாள் ப்ரம்மச்சாரியா இருக்க முடியாது போலவே” என்று நினைத்தவன்
“ம்ம் ஹ்ம்ம்” என்றான் தொண்டையை சுத்தம் செய்வது போல்… அதில் சுதாரித்த அன்பு… இலக்கியனை பார்த்து “ஈஈஈஈ ” என்றான் தன் முன் வரிசை பல்லை கட்டிக்கொண்டு
“சோதிக்காதீங்கடா என்னய்யா… முடில” என்றான் இலக்கியன்… வராத கண்ணீரை துடைத்து கொண்டு…
“இது என்ன பேப்பர்… இதுல என்ன திட்டம் வெச்சி இருக்க? ” கேட்டான் இலக்கியன்…
அந்த பேப்பரை பிரித்து காட்டி…தன் திட்டம் மொத்தத்தையும் கூறினாள் இனியவள்….
அதை கேட்ட இலக்கியன்… “செம ஐடியாடா செல்லம்… என்னமா யோசிக்குற…. அத்தனை நாள்ளா எங்க வெச்சி இருந்த இவ்ளோ மூளையையும்” என்றான்… கிட்ட தட்ட அவளை கட்டி பிடித்த படி
அதை கண்ட அன்பிற்கு தான் லைட்டாக ஜெர்க் ஆனது… ஆனால் அதை கவனிக்கும் நிலையில் இலக்கியன் இல்லை… இனியவளுடன் சேர்ந்து அவனும் குதித்து கொண்டு இருந்தான்…
இலக்கியனை பார்த்து முறைத்தவன்… “கொஞ்சம் அடங்குறியா” இனியவளின் கையை இலக்கியன் பிடியில் இருந்து விடுவித்த படி…
[the_ad id=”6605″]
“நாங்க கொஞ்சம் சந்தோசமா இருக்க கூடாதே…. அதுக்குள்ள வந்திடுவீர்களே!!”” என்றான் சலிப்புடனே….அவனை கண்டுக்காமல் தொடர்ந்த அன்பு
“ஏய்… என்ன ஐடியா இது… தமிழ் சீரியல் எல்லாம் அதிகமா பாப்பியோ…. ஒரு டாக்டரா இருந்துகிட்டு இவ்ளோ கேவலமா யோசிக்குறே… இதுல இந்த நாயி சப்போர்ட் வேற… பைத்தியம் பிடிச்சிடுச்சா ரெண்டு பேருக்கும்” எகிறினான் அவன் ஒரு புறம்
அவனை ஆஆஆ என்று பார்த்துக்கொண்டு இருந்த இலக்கியனுக்கு அப்போது தான் புரிந்தது… “கோவம் இனியவளின் பிளானில் இல்லை… அவள் இலக்கியனுடன் பழுகவதில் வயிற் எறிகிறான் என்று” நமட்டு சிரிப்புடன்
“அதெலாம் சரியா தான் வரும்… இனியா செல்லம் சொன்னா அதெல்லாம் சரியா வரும்” இனியவளின் தோல் மேல் கை போட்ட படி இலக்கியன் கூற… அதற்கு ஆமாம் தாளம் போட்டான் விக்கி…
வேறு வழி இன்றி… என்னமோ பண்ணுங்க… என்ற படி அவர்கள் போக்கில் செல்ல ஒத்துக்கொண்டான் அன்பு
தன் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்த சந்தோஷத்தில் இனியாவும்… தன் காதல் கை கூடி விடும் என்ற நம்பிக்கையில் விக்கியும் துள்ளி கொண்டு உள்ளே செல்ல
செல்பவளையே பார்த்து கொண்டு இருந்த அன்பை நெருங்கிய இலக்கியன்…
“அப்றம் உங்களுக்கு எப்போ கல்யாணம்… வீட்டுல எப்போ பேச போறீங்க?” என்றான் எதிர்பார்ப்போடு
“யாருக்கு கல்யாணம்… எதுக்கு வீட்ல பேசணும்? ” என்றான் அன்பு புரியாமல்
“யாருக்கா… அதான் போறப்போ வரப்போ வெச்ச கண்ணு வாங்காம பாக்குற… போற அப்போ வர அப்போ ரசிக்குற… இதுல நீ ஊத்துற ஜொல்லுல நேத்து நான் வழுக்கி வேற விழ பார்த்தேன்… அப்றம் எதுக்கு தாமதம்… மனசுல இருக்கறத சொல்லி… தாலி கட்டி ஹனிமூன் போக வேண்டியது தானே” என்றான் இலக்கியன்
“நான் அவளை காதலிக்குறேன்ணு சொன்னேனா… இல்லை அவளை கல்யாணம் பணிக்குறேன்னு சொன்னேனா… நீயா கற்பனை பண்ணிக்கிட்டா நான் என்ன பண்ண முடியும்” என்றான் அன்பு
“ஏன்டா சொல்லுற… சீரியஸ்ஸா கேக்குறேன் அண்ணன். உண்மைய சொல்லு… உனக்கு இனியவளை பிடிக்கல” என்றான் இருக்கிய முகத்துடன்
“என்னடா பேசுற… நான் தான் மீராவை காதலிக்குறேன்ணு சொன்னேனே… இப்போ இப்டி கேக்குறே” என்றான் அதே இறுக்கத்துடன்… சொன்னவன் அங்கு இருந்து நகர்ந்தும் சென்றும் விட்டான்….
“என்னடா மறுபடியும் மொதல்ல இருந்தா… அட கடவுளே….காட்டுவாசி கதையை மாத்துறானே….இவனை இப்படியே விட்டா சரியா வராது…. இல்லைனு சொல்லுற உன்னோட வாயில இருந்து.. அவ இல்லாம வாழ முடிலனு சொல்ல வெக்குறேன்டா” என்றான் சபதமாக
(“டேய் ரோம்ப சீன் போடாதடா… அண்ணன் கடையை காலி பன்னலான உனக்கு எதுவும் நடக்காதுனு பிளான் பன்னிட்டு… இப்போ எதோ நல்லவன் மாதிரி சபதம் விடுறான் பாரு” என்றது அவனின் மனசாட்சி)
(“சரி விடு விடு… ஊர் நம்மள நல்லவன்னு நம்புதுல… அப்றம் என்ன… இதெல்லாம் வெளிய சொல்லிக்கிட்டு” மீசையில் மண் ஒட்டாத கணக்கில் வீட்டிற்குள் சென்றான்)
காலையில் இருந்து அவர் அவர் வேலைகளை செய்து கொண்டு இருக்க…எதுவும் அறியாத பச்சை மண்ணை போல் சமயலறையில் வேலை பார்த்து கொண்டு இருந்தாள் இனியவள்
திட்டத்தின் படி… முதல் அடி எடுத்து வைக்க… அவளிடம் கூறி விட்டு செல்லலாம் என்று அன்பு சமையல் அறையையே சுற்றி சுற்றி வர… இதை பார்த்த ஜானகி மனதில் எதோ தப்பாக தட்டுப்பட… நடப்பவற்றை கவனித்து மட்டும் வைத்து கொண்டார்….
மேலே அன்பின் அறையில் கூடிய அன்பு,விக்கி… இனியவளின் திட்டத்திற்கான முதல் அடி வைக்கும் நேரத்திற்காக காத்திருந்தனர்…..
கீழே இனியவாளோ… முற்றத்தில், இலக்கியன்… வைஷு குட்டி… காயத்திரி மூவரும் ஒரு சேர்ந்து அமர்ந்து கொண்டு இருக்க… அவர்களுடன் அமர்ந்தவள்….
இலக்கியா… “இன்னைக்கு பேப்பர் பத்தியா?” என்று ஆரம்பித்தாள்
இல்லையே இனியா…” அப்டி என்ன இருந்துது” என்றான் இல்லாத வியப்பை வர வைத்து கொண்டு….
“காதலை ஏற்காதலால் விஷம் குடுத்து வாலிபர் மரணம் அப்ட்னு நியூஸ் இருந்துது… உள்ளே போய் பார்த்தா… இந்த பொண்ணும் அந்த பையனை லவ் பண்ணி இருக்கு… வீட்டுக்கு பயந்து சொல்லல போல.. அந்த பையன் அதை நம்பி விஷம் குடிச்சி செத்துடான்… செத்தவன் பொணத்தை பார்த்து ஹையோ அம்மாணு இந்த பொண்ணு அழுது இருக்கு” கயாத்திரியின் முக மாற்றத்தை துல்லியமாக காண முடிந்தது இனியவளால்… திட்டம் வேலை செய்கிறது என்ற குஷியில்
“இந்த பொண்ணுக்கு அறிவே இல்லை… செத்த அப்றம் அழுறதுக்கு… இருக்கும் போதே ஏத்துக்கிட்டு இருக்கலாம்” என்றாள் சகஜமாய் சேசுவதை போல்….
“அந்த பொன்னுக்கு என்ன பிரச்னையோ… சொல்லாம இருந்ததுக்கு என்ன காரணமோ… எதுவும் தெரியாம நீங்க எப்படி பேசலாம்” எப்போதும் பூனையாய் இருக்கும் காயத்ரி சீறிக்கொண்டு கேட்டாள்…
“அட்ரா சக்கைனானாம்… அவன் தான் கிறுக்கு பிடிச்சி சுத்துறாங்கனா… இவ அதுக்கு மேல இல்லை இருக்கா….நடத்துங்கடா நடத்துங்க” என்று வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தான் இலக்கியன்
“எனக்கு தோணுனத நான் சொன்னேன்மா… அதுக்கு எதுக்கு என் மேல கோபிகுர” என்றவள் அருகில் இருக்கும் செய்தி தலையெடுத்தவள்….
“காயத்ரி, உன்னோட ராசி என்ன” என்றாள் இயல்பாக
“மேஷம் இனியா ” என்றாள் அவள்
“ஹையோ… மேஷ ராசி…. இன்றைய நாள் உங்களுக்கு பல சோகத்தை தர கூடிய நாளாக அமையும்… முடிவுகளை யோசித்து எடுங்கள்…. இல்லை என்றாள் பின் நாளில் வருந்துவீர்கள்…முக்கியமா காதல் விசயத்துல இன்னைக்கு தப்பான முடிவை எடுப்பீர்களாம்”என்ற படியே இறக்கினாள் அடுத்த குண்டை
பேப்பரை மடித்து வைத்த படி… அங்கும் இங்கும் பார்த்த இனியவள் “இந்த விக்கி எங்க போனானே தெரியலையே… காலைல இருந்து அளவே காணோம்… நேத்து வேற ஒரு மாதிரி சோகமா இருந்தான்” சகஜமாக பேசுவதை போல் பேசினாள் இனியவள்
அதில் காயத்ரி வயிற்றில் புலியை கரைக்க… ஏற்பட்ட பயம் கண்ணீராய் உருவெடுக்க..
கண்ணில் நீர் தேங்கி கொண்டு… வந்துவிடவா என்பதை போல் இருக்க… அதை அடக்க முடுயாதவள்… எழுந்து தன் அறைக்கு சென்றாள்…
செல்பவளை கவலையுடன் பார்த்து கொண்டு இருந்த இலக்கியனை… வருத்தத்துடன் பார்த்த இனியவள்…
“என்னடா தங்கச்சி கஷ்ட படுறானு கவலையா இருக்கா.. கொஞ்ச நேரம் பொறுத்துக்கோடா…அவளே ஒதுக்கணும்னு தானே இவ்ளோவும் செய்யுறோம்” என்றாள் கவலையில் தேய்ந்த குரலில்…
“அடச.. அவளுக்கு போய் யார் கவலை பட்டது… ஆமாம் அந்த பேப்பரை குடு… உண்மையிலேயே மேஷத்துக்கு அப்டி தான் போட்டு இருக்கா..” அவசரமாக பேப்பரை ஆராய்ந்த படி இருந்த இலக்கியனை முறைத்து கொண்டு இருந்த இனியவள்
[the_ad id=”6605″]
“ஹைய என்ன… நானும் மகரம் தான்மா… தப்பான முடிவை எடுத்து.. அதனால் பின் நாளில் என் திருமண வாழ்க்கைல இல்லை காதல் வாழ்க்கைல ஏதாச்சும் தப்பா நடந்துட்டா…பல கனவுகளோட இருக்கேன்மா… உனக்கு என்ன தெரியும் இந்த ஆணின் பீலிங்ஸ்” என்றான் வெக்கமே இல்லாமல்….
“இவனை” பல்லை கடித்து கொண்டு கோவத்தை கட்டுப்படுத்தியவள்…. தலையில் ஓங்கி நன்கு வலிக்கும் படி ஒரு கொட்டை கொட்ட… அதில் “அம்மா” என்று அலறியவனை பார்த்த வைஷுவிற்கு சிரிப்பு தாங்க முடியவில்லை…
சிரித்து கொண்டே இருந்தவள்.. இனியவளையும் இலக்கியனையும் மாறி மாறி பார்த்தவள்….. அவளும் அவள் பங்கிற்கு ஒரு கொட்டை பரிசாக தந்தாள்…
அடுத்து வைஷுவையும் கண்டு முறைத்தவனை பார்த்து இருவரும் சிரிக்க… “உங்களை” என்று அவன் எழும் முன்பே
“நான் எஸ்பா” என்று இனியவள் ஓடி விட… அதை பார்த்த குட்டியும் “நானும் எஸ்பா” கத்தி கொண்டே சிரிப்பு சத்தத்துடன்… தன் பிஞ்சு பாதத்தில் இருக்கும் கொலுசின் சத்தம் வீடு முழுக்க கேட்க ஓடி கொண்டு இருந்தாள்…
மறு புறமோ…அன்பின் அறையில் பிரசவ அறைக்கு வெளியில் இருக்கும் கணவன் போல் விக்கி அறையின் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருக்க… அதை பார்த்த அன்பிற்கு சிரிப்பு வர.. அவன் சிரிப்பதை பார்த்த விக்கி…
“என்ன அத்தான்… சிரிப்பா இருக்கா…. அன்னைக்கு இனியா அக்கா காணாம போன அப்போ தேம்பி தேம்பி அழுத்தீர்களே.. அந்த நிலைமை தான் எனக்கு” எதையும் யோசிக்காமல் தனக்கு இருந்த பதற்றத்தில் கூறினான் விக்கி
அவன் கூறிய பதிலில்… திறக்க மறுத்து மூடி கொண்டது அன்பின் வாய்… “என்னடா நீயும் கலாய்க்க ஆரம்பிச்சிட்டா… உன்ன நல்லவன்னு நம்புவது தப்பா போச்சுடா” தன்னையே நொந்து கொண்டான் அவன்
“அன்பு அத்தான்… இனியா அக்கா சொன்னா நேரம் ஆகிடுச்சு…. நான் போன் பண்ணவா? ” தவிப்புடன் இனியவள் சொன்ன படி…
“காயத்ரிக்கு அழைத்தான் விக்கி”…உடனே எடுத்தவள்… எதோ பேச வரும் முன் முந்தி கொண்ட விக்கி
“காயு… இன்னைக்கு மட்டும் நீ சரியான முடிவு எடுக்கல… அப்றம் எல்லாமே முடிஞ்சி போய்டும்… இப்போயும் நேரம் இருக்கு… உன்னோட காதலை சொல்லிடு” கெஞ்சி கொண்டு இருந்தவனை சிறிதும் கண்டு கொள்ளாமல்
“இன்னொரு தடவை நீ போன் பண்ண… உங்க அம்மாகிட்ட தான் கொண்டு போய் குடுப்பேன்… அதுக்கு அப்றம் அவுங்க சொல்லுவாங்க உனக்கு பதிலை” மிரட்டவே செய்தாள்….
அதில் கொஞ்சம் பயந்து தான் போனான் விக்கி… இருந்தும் மறுபடியும் அழைக்க…
அதையும் உடனே எடுத்தவள்……” இனொரு தடவை போன் பண்ண… அவ்வளவு தான் என்றாள்”விக்கியை பேச விடாமல்….போனையும் வைத்து விட
சோகமாய் முகத்தை வைத்து கொண்டு அம்பை பார்த்தவனை
“இப்போயும் ஒன்னும் கேட்டு போகல…வா நேரா அப்பா கிட்ட போய் விஷயத்தை சொல்லுவோம்… அவரு எதாவது வழியை கண்டு பிடிப்பாரு” என்றான் நிச்சயாமாய்
“இல்லை இல்லை அத்தான்….. இனியா அக்கா சொன்னா சரியா தான் இருக்கும்… அவுங்க தப்பா எல்லாம் சொல்ல மாட்டாங்க… அதனால அவுங்க சொன்ன படி… கடைசியா ஒரு தடவை முயற்சி பண்ணிடுறேன்” என்பவனை உணர்வற்ற பார்வை பார்த்தவன்
“இது எப்போல இருந்துடா இனியா அக்கா மேல உனக்கு அவ்வளவு நம்பிக்கை வந்துது… இலக்கியன் என்னனா இனியா இனியாணு பின்னாடியே சுத்துறான்….இதுல செல்லமாம் இல்லை… அவ இவனுக்கு” மனசுக்குலேயே மருவி கொண்டு இருந்தான் அன்பு….
மூன்றாவது முறையும் தோல்வியில் முடிய… இவை அனைத்தையும் கீழே காயத்ரி அறையின் முன் நின்று இலக்கியனும் இனியவளும் பார்த்து கொண்டு தான் இருந்தனர்….
பின் திட்டத்தின் அடுத்த பகுதிக்கு தயாராகினர் நால்வரும்….
முற்றத்தில் கூடி இருந்தனர் வீட்டினர் அனைவரும்…. அப்போது அங்கு வந்த அன்பு.. இனியவளை பார்த்து வெற்றி கூறி காட்ட….தயாராக இருந்தாள் இனியவள்….
வீட்டின் கதவை தள்ளி கொண்டு… வீட்டிற்குள் தலை தெறிக்க ஓடி வந்தார் பெருமாள்… வந்தவர்…
“ஐயா… தப்பு நடந்துடுச்சிங்க….நடக்க கூடாதது நடந்து போச்சுங்க” என்ற படி வந்தார் பதட்டமாக…
“என்ன பெருமாள் அச்சு… அது என்ன கையில… என்ன நடந்தது” என்றார் வேலுச்சாமி…..
“நம்ப விக்கி தம்பி நம்ப தோப்பு பக்கம் போய்ட்டு இருந்தாருங்க”…
“என்ன தம்பி இந்த பக்கம்ணு” கேட்டேனுங்க…
“ஒன்னும் இல்லை… நீங்க வீட்டுக்கு தானே போறீங்கன்னு”கேட்டுச்சுங்க…
[the_ad id=”6605″]
நானும் “ஆமாம்னு”சொன்னேனுங்க…
இந்த லெட்டரை கைல குடுத்து… “இதை வீட்ல இருக்கவங்க கிட்ட குடுத்துடுனு” சொல்லுச்சுங்க…. சரினு நானும் விவரம் கேக்காம வந்துட்டேன்…
வீட்டுக்கிட்ட வந்து அதை பிரிச்சி பாக்கும் போது… அதுல என்ன என்னமோ எழுதி இருக்குங்க…. என்றார் பதட்டமாக….
உடனே பதற்றம் அடைந்தவன் போல எழுந்த இலக்கியன்…
“என்ன பெருமாள் அண்ணா சொல்லுறீங்க…அப்டி என்ன இருக்கு அதுல” ஒன்றும் தெரியாதவனை போல் அதை வாங்கி படித்தான் இலக்கியன்
அன்புள்ள காயத்ரிக்கு
என்னை மன்னிச்சிடு…..என்னால உன்னை காதலிக்காம இருக்க முடியல… பல முறை உன் கிட்ட என்னோட காதலை சொல்லியும் நீ ஏத்துக்களை…. இன்னைக்கு உன்ன பொண்ணு பாக்க வேற வராங்க… அதுக்கு அப்றம் நீ வேற ஒருத்தருக்கு சொந்தமாகுறத என்னால பாக்க முடுயாது…. அதனால என்னோட வாழ்க்கையை முடிச்சிக்குறேன்… அடுத்த ஜென்மத்திலாவது ஒன்னு சேரலாம்…
இப்படிக்கு,
விக்கி(எ)விக்னேஸ்வரன்
இலக்கியன் கடிதத்தை படித்து முடித்த அடுத்த நொடி…. விக்கி என்று கத்தி அழுது கொண்டு இருக்கும் இரு குரல்களை கேட்டான் இனியவன்…..
மாயம் தொடரும்……