அத்தியாயம் 21.2:
காலையில் எழுந்ததும் கம்பத்திறகு நீர் ஊற்றிவிட்டு தான் வேலைக்கு செல்வாள் உமா.
“பதினைந்து நாட்களும் காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேலையிலும் அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள்… தினமும் இரவு சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் சலங்கை ஆட்டம் என அமோகமாகவே சென்றது”.
“பண்ணையாரின் குடும்பத்தினருக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே சென்றது”. அதிலும் வேலம்மை குடும்பம், ஜெயந்தி, வர்ஷா மற்றும் நம்பி என அனைவருடனும் நாட்கள் அழகாக சென்றது அவர்களுக்கு… நவ்யாவை நம்பி திட்டியதால் கோபம் கொண்டவள், அவருடன் சண்டை போட்டு மும்பைக்கு சென்றுவிட்டாள்.
“ஏழு தலைக்கட்டுக்கார்களில் இரண்டு பேர் சந்திரன் மற்றும் தர்மனும் இருந்தனர்”.
“அல்லியூரில் திருவிழா முடியும் வரை தோசை, பூரி, சப்பாத்தி, பலகாரம் போன்றவை செய்யமாட்டார்கள்”… “இந்த பதினைந்து நாட்களில் பத்து நாட்கள் தாளிக்காத குழம்பு, சாதம் மட்டுமே இருக்கும்… அடுத்த ஐந்து நாட்களுக்கும் கலியும் மோரும் மட்டுமே உணவாக இருக்கும்”.
“அதிலும் கஞ்கணம் கட்டியவர்கள் பதினான்காம் நாள் முழுவதும் உணவு உண்ணாமல் வெறும் பழம் பால் மட்டும் எடுத்துக்கொள்வார்கள், கால்களில் காலணி அணியமாட்டார்கள், அதிலும் ஏழு தலைக்கட்டுக்கார்கள் பதினான்காம் நாள் முழுவதும் வெறும் நீர்மட்டுமே அருந்தி கடுமையான விரதத்தை கடைபிடிப்பார்கள்”.
“குண்டம் இறங்கிய பின் பூஜை முடிந்து அம்மன் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை முடித்துக்கொண்டபின் தான் உணவினை உண்பார்கள். இதே போல் தான் கஞ்கணம் கட்டிய அனைவரும் கடைபிடிப்பார்கள்”.
“வேண்டுதல் வைத்தவர்கள் வீடுவீடாக சென்று முத்தெடுத்து அம்மனுக்கு கஞ்சிக்காய்ச்சி மக்களுக்கு தானம் செய்து பிராத்தனையை நிறைவேற்றுவார்கள்”.
“பெரிய தலைகட்டுக்கள் பதினைந்து நாட்களும் கோயிலிலேயே தங்கி மிகக்கடுமையாக விரதமிருப்பர்கள். எந்த விசேஷங்களிலும் கலந்துகொள்ள மாட்டார்”.
இதே போல் இவர்கள் ஐந்து பேரும் கடுமையாக விரதமிருந்தனர்.
“எட்டாம் முளைப்பாரி போட்டு சுத்தபத்தமாவும் பக்தியாகவும் அதை பார்த்துக்கொண்டார்கள் மூவரும்”. காலையில் எழுந்ததும் சிறிது நீர் விடுவது, சிறிது நேரம் வெயில் வைத்துமாக பாதுகாப்பாக காத்துவந்தனர்.
ஒவ்வொரு தினத்தின் அதன் வளர்ட்சியை ஆராந்துகொண்டே இருப்பார்கள்… சிறிது வாடியோ, நல்லா வளராமலோ இருந்தால் தன்குடும்பத்திற்கு எதாவது கெட்டது நடக்கப்போவதாக வருந்தி அம்மனுக்கு அடுத்த வேண்டுதலை வைப்பார்கள் மக்கள்.
“பதிமூன்றாம் நாள் மாலையே பக்கத்து ஊரில் உள்ள கோயில் சார்பாக அந்த ஊர் தலைக்கட்டுகள் எண்ணெய் குடமும் மற்றும் அந்த ஊர் மக்கள் தீர்த்தக்குடமும் கொண்டுவந்தனர்… அவர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக பட்டாசு வெடித்து வரவேற்பார்கள்”.
பின், அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து, வந்தவர்களுக்கு உணவை வழங்கி மகிழ்வித்து அனுப்பிவைத்தனர்.
“அடுத்த ஊர் இருப்பவர்களின் சார்பாக அம்மனுக்கு சீர்( மங்கள பொருட்கள் அடங்கிய தட்டு) மற்றும் கோயில் சார்பாக மொய்பணமும் கொண்டு வருவார்கள், இது பலகாலமாக நடைபெறும் சம்பிரதாயம் ஆகும்.
இவர்கள் கொண்டு வந்த எண்ணெய் கொண்டு அன்று இரவே அம்மனுக்கு அணையாவிளக்கும் தண்ணீரில் விளக்கும் போடுவார்கள்… சீர் தட்டில் இருந்த பொருட்களை எல்லாம் கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்வார்கள்.
“இந்த விளக்கானது இரவு சக்தி கொடுத்தல், கணபதி பூஜை மற்றும் லட்சுமி பூஜை போன்ற பூஜைகள் செய்வதற்கு முன் பூசாரியால் அம்மனுக்கு அற்பணிக்கப்படும்… அதன் பிறகு பூஜையானது விடியவிடிய நடைபெறும்”… இதில் பெரும்பாலான மக்கள் கலந்துகொண்டு பூஜையை சிறப்பிப்பார்கள்.
அல்லியூர் மக்களால் பதினான்காம் நாள் காலை தீர்த்தக்குடம் எடுத்தல், பால்குடம் எடுத்தல் என விமர்சியாக நடைபெறும்.
“மல்லி, அம்மு, கண்ணன் மற்றும் குட்டி நான்கு பேரும் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்ததால், உமாவும் சுந்தரம் மற்றும் உதவியா மீனாவும் சேர்ந்து அவர்களை தாங்கிக்கொண்டனர்”. தீர்த்தமானது ஆற்றில் இருந்து எடுத்து அங்கேயே வைத்து அனைத்து குடங்களுக்கும் பூஜை முடித்ததும், பூசாரி குடங்களை அனைவர் தலையிலும் எடுத்துவைப்பார்.
“ஊரின் முக்கிய தெருக்களில் வந்து, மூன்று முறை கோயில் சுற்றி வந்து அம்மன் முன்பு அந்த குடங்களை வைத்துவிட்டார்கள்.. அவர்கள் வைத்ததும் பூசாரி அந்த குடத்தில் உள்ள பால்(சுத்தமான பசும்பால்) மற்றும் நீர்கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்வார். அது முடிந்ததும் அசதியினால் குட்டியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டாள் உமா… சென்றதும் படுத்தவர்கள் தான் இரவு தான் எழுந்தார்”.
“பதினான்காம் நாள் மாலை முளைப்பாரி எடுப்பார்கள்”.
அதனால் உமா அனைவரையும் துரத்திக்கொண்டு இருந்தால்… “அம்மு, மல்லி மற்றும் உமா மூவரும் புதுப்புடவையில் அவர்களுக்கு தகுந்த நிறத்தில் அத்தனை அழகாக இருந்தனர்”. ஒரு வழியாக ஐந்து பேரையும் கிளப்பிக்கொண்டு செல்வதர்குள் அனைவரும் வந்துவிட்டனர்… இவர்களுடன் மீனாவும் ஐக்கியமாகிவிட்டாள்.
“கார்த்திக் தன் மச்சான் மூவரின் சேர்ந்து மிகவும் பிசியாக இருந்தான்… ஒரு இடத்தில் நிற்க்கக்கூடமுடியாத அளவிற்கு வேலை அதிகமாக இருந்தது”.
இதுவும் ஆற்றங்கரையில் இருந்து தான் அழைத்துக்கொண்டு வருவார்கள்… முளைப்பாரியை தலையில் சுமந்து கொண்டு பெண்கள் ஊர் முழுவதும் வளம்வந்த பின் கோயில் மூன்று முறை சுற்றி வந்து அம்மன் காலடியில் சமர்பிப்பார்கள். அதன் பின் அம்மனுக்கு பூஜை செய்வார்கள்.. அது முடிந்த உடன் இரவு பனிரெண்டு மணிக்கு குண்டம் பத்துவார்கள்… விடியவிடிய அந்த குண்டமானது ஜெகஜோதியாக காட்சியளிக்கும், பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.
இது முடிந்தவுடன் மேலதாளங்களுடன் சேவல் இரண்டை எடுத்துக்கொண்டு மண்ணுடையார் இருப்பிடம் சென்று, அவர்களுக்கான மரியாதை செய்தபின், சேவல்கள் மற்றும் பணத்தை கொடுத்துவிட்டு, அவர்கள் செய்துவைத்துள்ள கைக்குண்டம், அக்னி சட்டிகளுக்கு பூஜை செய்து கோயிலுக்கு கொண்டு வருவார்கள். இவர்களின் கலைக்கான மரியாதை மற்றும் அவர்களுக்கான மரியாதை தான் இவை.
பதினைந்தாம் நாள் காலையில் ஆற்றங்கரையில்ருந்து அம்மை அழைத்துக்கொண்டு வருவார்கள்… அப்பொழுது தான் ஏழு தலைக்கட்டுக்கார்கள் தங்கள் தலையிலும் கைகளிலும் அம்மன் கரகம், பூங்கரகம், அடுக்கு கரகம், அம்மன் போலை, கருப்பண்ணார் போலை, கைக்குண்டம் எடுத்துக்கொண்டுவருவார்கள்.
அம்மன் போலையானது கேழ்வரகு மாவை இடித்து பாகு கலந்து மாவு பிடித்து, அம்மனாக பாவித்து போலையில் வைத்து, தங்களின் தலையில் சுமந்துவருவார்கள், அத்துடன் கையில் பிரம்பு இடம்பிடித்திருக்கும்.
சிறிய அளவு கலசமானது பூங்கரகம்… பெரிய அளவில் இருப்பது அடுக்கு கரகம்… அம்மன் கரகம் இவை போல் தான் இருக்கும்… கைக்குண்த்தில் நெருப்பு மூட்டப்பட்டு இருக்கும்… இது அக்னி சட்டியை விட நீலமாகவும் பெரியதாகவும் இருக்கும்… கருப்பண்ணார் போலையில் இருப்பதை யாருக்கும் காண்பிக்க மாட்டார்கள்.
இதில் பூங்கரகம் தர்மன் எடுத்தார்… கருப்பண்ணார் போலையை சந்திரன் எடுத்தார்.
கருப்பண்ணார் போலை எடுப்பவர்கள் அனைவரையும் விட மிகமிக கடுமையாக விரதம் இருக்கவேண்டும்… எந்த வீட்டிலும் சாப்பிடமாட்டார்கள்… எந்த நல்லது கெட்டதுக்கும் போகமாட்டார்கள். எந்த கெட்டபழக்கமும் இருக்கக்கூடாது அவர்களுக்கு… சூரியதேவன் வழியாக இவருக்கு இது கிடைத்துள்ளது.
அதிகாலையிலேயே ஆற்றங்கறையிலிருந்து அம்மை அழைப்பார்கள். மேலதாளங்கள் இசைக்க, பட்டாசுகள் வெடிக்க, பறையடிக்க, அம்மை அழைப்பார்கள்… முதலில் பூசாரி அனைத்து கரகம், போலை மற்றும் கத்திக்கு பூஜை போட்ட பின் அதை எடுப்பவர்களுக்கு மாலையணிவிப்பார்… முதலில் அம்மன் கரகம் எடுத்து வைப்பார், அடுத்தது பூங்கரகம், அடுத்து அடுக்கு கரகம், கைக்குண்டம், அடுத்து அம்மன் போலை, அடுத்து கருப்பண்ணார் போலை, அடுத்தது அக்னி சட்டி எடுப்பவர்கள், அடுத்து அலகு குத்துபவர்கள் இறுதியாக குண்டம் மட்டும் இறங்குபவர்கள் என அடுத்தடுத்து செல்வார்கள்… இவர்களுக்கு முன் வாத்தியக்காரர்கள் செல்வார்கள்.
சந்திரனுக்கு பின்னால் உமா இரண்டு கைகளிலும் அக்னிசட்டியை ஏந்திக்கொண்டு நின்றிருந்தால்… அவளுக்கு பக்கத்தில் எண்ணெய் மற்றும் விரகுகளை வைத்துக்கொண்டு கண்ணன், மல்லி, குட்டி மற்றும் அம்முவும் இருந்தனர்… இறுதியா பண்ணையார் குடும்பத்தினர் இருந்தனர்… உமாவை பார்த்தும் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது… மற்றவர்களை போல் சாதாரணமாக குண்டம் இறங்குவதாக நினைத்திருக்க, இவளே இரண்டுகைகளிலும் அக்னிசட்டி வைத்திருந்ததை பார்த்தும் அதிர்ச்சிதான்…
இறுதியாக பூசாரி மணிதட்டம் கொண்ட போலையை தன் தலையில் வைத்துக்கொண்டு வாத்தியக்கார்களுக்கு பின் நின்றுகொண்டார்… அவருக்கு பின் தான் அத்தனை பேரும் நின்றனர்… மெல்லமெல்ல அடியெடுத்து நடந்தார்கள் இரண்டு சாலை பிரியும் முதல் இடத்தில் முதல் கிடாவை வெட்டி பலியிட்ட பின் அடுத்த தெருவிற்கு செல்வார்கள்… இந்த கிடாவை அம்மனின் புடவையை துவைப்பவர்களுக்கு கொடுத்துவிடுவார்கள்.
சிறிது தூரம் சென்றதும் வந்த தெருவில் அடுத்த கிடாவை பலியிட்டவர்கள், அதை தோட்டிக்கு கொடுத்துவிட்டானர்.
மூன்றாவது கிடாவானது குண்டம் வெட்டுபவர்களுக்கு கொடுத்துவிடுவார்கள்.
அடுத்தது குண்டத்திற்கு பலியிட்டு அதை ஏழு தலைக்கட்டுக்கார்களுக்கு கொடுத்துவிடுவார்கள்.
முதலில் குண்டத்தில் இறங்குவது பூசாரி, அடுத்து அம்மன் கரகம், அடுத்து பூங்கரகம், அடுத்து அடுக்கு கரகம், அடுத்து அம்மன் போலை, அடுத்து கைக்குண்டம் அடுத்து கருப்பண்ணார் போலை, அக்னி சட்டி, அடுத்து அழகு குத்துபவர்கள், அதற்கு பின் மற்றவர்களும் இறங்கினார்கள்.
அதன் பின் இவற்றையெல்லாம் அம்மனின் முன்வைத்து, பூஜையை முடித்த பின், கங்கணத்தை அவிழ்த்து, ஒருசிந்தியை முடித்து வைத்தார் பூசாரி.
அதன் பின் அனைவருக்கும் அம்மன் போலையிலிருந்த கேழ்வரகுமாவையும் அதனுடன் தேங்காய், பழம், எலுமிச்சை, பொங்கல் மற்றும் பூக்களையும் கொடுப்பார்கள்.
பதினைந்தாம் நாள் காலையிருந்து மாலைவரையில் ஊர்மக்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவார்கள்.
சேவல் பலியிடுவது, கிடா வெட்டுவது என தங்கள் காணிக்கையை சிறப்பாகவே நிறைவேற்றி மகிழ்வார்கள். அன்று முழுவதும் இந்த ஊரே சொர்க்கம் போல் காட்சியளிக்கும்.
பூஜையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் பூஜை அறையில் இருந்த சாமியை வணங்கிவிட்டு கோயிலில் கொடுத்த உணவை உண்டு விட்டு அசதில் படுத்தவுடன் நால்வரும் தூங்கிவிட்டனர்.
மல்லி வீட்டிற்கு சென்றவள் படுத்தவுடனே தூங்கிவிட்டாள்.
பண்ணையார் வீட்டில் இருந்தவர்களும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.
இரவு விருந்தானது அனைத்து வீடுகளிலும் தடபுடலாக இருக்கும்… அசைவம் இல்லாத வீடே இருக்காது.
பதினாறாவது நாள் காலையிலேயே மஞ்சள் நீராட்டினார்கள்… அன்று மாலையே அம்மன் திருவீதி உலா வரும் அதை காண ஆயிரம் கண்கள் இருந்தாளும் பத்தாது.
அந்த நாள் நல்லிரவு வரைஅமைதியாவே சென்றது.