அத்தியாயம் 27:
அடுத்த நாள் காலையில் எழுந்ததும் மல்லி வீட்டு வேலையை பார்த்துகொண்டு இருந்தவள், எப்பொழுதும் விடியலிலேயே எழுந்துவிடும் சுந்தரம் மணி ஆறு ஆகியும் எழாததால் திட்டிக்கொண்டே சுந்தரத்தை எழுப்பினாள்.
“என்ன ஆச்சி இவருக்கு?, இன்னும் எழுந்திரிக்கவில்லை, அளவுக்கதிகமா வேலையை இழுத்துபோட்டு செய்யாதீங்கனு சொன்னா கேட்டாதானா, சக்திக்கு மீறி வேலை செய்துவிட்டு, உடம்பு வலியியால் படுத்துக்கிறது…. தேவையில்லாம டாக்டருக்கு தெண்ட செலவு செய்ய ஏன் கஷ்டப்பட்டுவானே, கொஞ்சம் வேலையை குறைத்துக்கொண்டாள் இந்த உடம்புவலியெல்லாம் வராது இல்ல என திட்டியவளின் குரலுக்கு கூட அவர் வராததால் அவரின் அறைக்கு சென்று எழுப்பினால்”, அப்பொழுதும் அவர் எழுந்திரிக்கவில்லை…
அதில் பயந்தவள் என்ன செய்வது, ஏது செய்வது எனத்தெரியாமல் உடனடியாக உமாவை அழைத்தாள்.
அங்கு உமாவோ, தம்பதிகள் மற்றும் தங்கையை எழுப்பிக்கொண்டே உணவினை சமைத்து கொண்டிருந்தாள்.
“அம்மு எழுந்திரு டைம் ஆகிடுச்சிடீ, கல்லூரிக்கு நேரமா போக வேண்டாமா?… அப்படியே அவனுங்களையும் எழுப்பிவிடு டீ”.
“இன்னுங்கொஞ்சம் நேரங்க்கா பிளீஸ்”.
“ஒழுங்கா எழுந்திரிடீ, மணி ஆறரை ஆகிடுச்சி, நான் இன்னைக்கு நேரமா வேலைக்கு போகனும்… பண்ணையார் வீட்டுக்காரங்க இன்னைக்கு குலதெய்வ கோவிலுக்கு போறாங்கலாமா அதனால் எங்களை நேரமா வரசென்னாங்க அம்மு”.
“சரி கத்தாதக்கா”… “இப்ப நீ எழும்பவில்லைன்னா நான்பாட்டுக்கு கிளம்பி போய்டுவேன் அம்மு, நீங்க மூனுபேரும் தான் உங்க வேலையை பார்த்துகிட்டு பள்ளிக்கு போகனும் எப்படி வசதி?”.
அதில் பயந்தவள், “இதோ எழுந்துவிட்டேன் அக்கா எனக்கூறி எழுந்து தமையன்களையும் எழுப்பி உமாவிற்கு உதவியாக வேலை செய்தாள்”.
அப்பொழுது தான் உமாவிற்கு மல்லியிடம் இருந்து போன் வந்தது.
போனை எடுத்த உமா, “என்னடீ இப்ப போன் பண்ணி இருக்க…!!!” எதாவது வேணுமா மல்லி?”.
மல்லி அழுது கொண்டே, “உமா… அப்பா… அப்பாக்கு என்னமோ ஆகிடுச்சி, நான் எவ்வளவு எழுப்பியும் எழுந்திருக்கமாட்டிக்கிறார், நீ வா உமா… எனக்கு ரொம்ப பயமா இருக்கு”.
“நீ பயப்படாம இரு புள்ள, இதோ நான் இப்பவே வறேன்… நீ தைரியமா இரு மல்லி எனக்கூறி போனை வைத்த உமா இளையவர்கள் மூவரையும் அழைத்துக்கொண்டு மல்லியின் வீட்டிற்கு சென்றால், இல்லையில்லை கிட்டதட்ட ஓடினாள்”.
மல்லியின் வீட்டிற்கு சென்றவள், “மல்லி… மல்லி… எங்க இருக்க என்றவளின் சத்தம் கேட்டு உள்ளே இருந்து ஓடிவந்த மல்லி அழுதுகொண்டே, நீயே பாரு புள்ள அவரு எழுந்தரிக்க மாட்டேங்கிறார்… நீ வந்து எழுப்பு உமா” எனக்கூறி அவளை சுந்தரத்தின் அறைக்குள் அழைத்துச்சென்றால் மல்லி.
அங்கே சென்ற உமா கண்டது உயிரற்ற உடலாக இருந்த சுந்தரத்தைத்தான்.
உள்ளே சென்றவள் சிறிது சந்தேகம் கொண்டு தன் நடுங்கும் கைகளால் அவரின் உடலை தொட்டுபார்த்தவளுக்கு புரிந்துவிட்டது.
அவரின் உயிர் உடலைவிட்டு பிரிந்து வெகுநேரம் ஆகிவிட்டது என்று துக்கம் தொண்டையை அடைக்க மல்லி மற்றும் சிறியவளிடம் விஷயத்தைக்கூறினால்… அதில் அதிர்ந்தவர்களின் அழுகைக்குறலில் அக்கம்பக்கத்தினர் பதரியடித்துக்கொண்டு வந்தனர்.
வந்தவர்கள் விஷயம் புரிந்து உள் அறையில் இருந்த சுந்தரத்தின் பூதவுடலை முற்றத்தில் கிடந்தனர்.
“அதற்கு பிறகு ஊர் முழுவதும் சேதி சொல்வது, பந்தல் போட, ரேடியோ செட் கட்ட, மேலதாளங்களுக்கு சொல்லியனுப்புவது என அத்தனை வேலைகளும் மலமலவென நடைபெற்றது”.
விஷயமறிந்து பண்ணையாரின் மொத்த குடும்பமும் வந்து சேர்ந்துவிட்டது.
“சந்திரன் மற்றும் தர்மரும் சேர்ந்து சுந்தரத்தின் உறவினர்களுக்கு சேதிசொல்வது, மல்லியின் அன்னையின் பிறந்தவீட்டினர்களுக்கு சேதிசொல்வதுமாக இருந்தனர்”.
மல்லியோ இதை எல்லாம் துளியும் உணரும் நிலையில் இல்லாமல் தன் தந்தையின் உடலையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
அம்முவும், குட்டியும் அவளின் அருகில் அமர்ந்து அழுதுகொண்டு இருந்தனர்.
உமா மற்றும் கண்ணன் சூழ்நிலையை உணர்ந்து தங்களின் துக்கத்தை முழுங்கிக்கொண்டு மற்ற வேலையை செய்துகொண்டிருந்தனர்.
ஒருவர் பின் ஒருவராக ஊரில் உள்ள மற்ற அனைவரும் வந்து சேர்ந்தனர்.
[the_ad id=”6605″]
வெற்றி, அருண் மற்றும் விஷ்ணு மூவரும் அனைத்து வேலையையும் மேற்பார்வை பார்த்துக்கொண்டே, வெளியே இருந்து வந்தவர்களுக்கு தேவையானவற்றை செய்துகொடுத்துக்கொண்டிருந்தனர்.
மதியத்திற்கு மேல் வெளியூரில் இருந்து வந்துசேர்ந்தனர் மல்லியின் சொந்தங்கள் அனைவரும்.
“வந்தவர்கள் முறைப்படி கோடித்துணிபோட்டு, விளக்கு வைத்து, நேரம் பார்த்து உடலை எடுக்கும் சமயத்தில் தான் அடுத்த பிரச்சனை வந்தது”.
“அதுவரை அமைதியாக இருந்தவர்கள், சுந்தரத்தின் மீதுள்ள வஞ்சம் மற்றும் தேவையில்லாமல் செலவுகளை யார் சுமப்பது என்ற எண்ணத்தில் பங்காளிகள் யாரும் கொள்ளிவைக்க முன்வரவில்லை… மீறி முன்வந்தவர்களையும் ஏதேதோ காரணம் சொல்லி தடுத்தனர்”.
சந்திரன், “நேரம் ஆகிட்டே போகுதுங்க, யாருக்கும் கெடுதல் நினைக்காத நல்ல மனுசன் ப்பா… இப்படி அதிகமா காக்கவைக்காதீங்க ப்பா என தன் நிலையிலிருந்து கீழிறங்கி தன்மையாகவே கூறினார் “.
அதில் வயதில் மூத்தவர் ஒருவர் சந்திரனிடம், “இதுவரை எங்க யாருகூடையும் ஒட்டுங்கிறதே இல்லாதவர்ப்பா நாங்க ஏன் செலவை ஏத்துக்கனும்?”.
மற்றொருவர், “ஆகற செலவை அவங்களே ஏத்துக்கனும், கொள்ளிவைச்சவீங்களுக்கு சொத்தில் பாதி தரதாயிருந்தா நாங்க முறைசெய்யறோம்… இல்லையினா நீங்களே பார்த்துக்கோங்க என மனசாட்சியின்றி அந்த நேரத்திலும் பேரம்பேசினார்கள்”.
நாச்சியாரோ, “காரியத்தின் வீரியம் உணர்ந்து, நாங்க ஆகவேண்டிய செலவை ஏத்துகிறோம்ங்க; ஆனா சொத்தில் உரிமை தரமுடியாது.. அதற்கு பதிலா பண்ணையார் குடும்பத்திலிருந்து பணம் கொடுத்திடறோம்”.
அதற்கு மூன்றாவது நபரோ, “இப்ப இப்படி சொல்லிப்பிட்டு காரியமுடிந்ததும் ஏமாத்திடமாட்டிங்கயில்ல?”.
“வெளியே கேட்டுபாருங்கள் பண்ணையார் குடும்பத்த பற்றி… நீங்கள் ஆகவேண்டியதை பாருங்க அக்கா சொன்னமாதிரி எல்லாத்தையும் நாங்க தந்திரறோம் என தன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு கூறினார் சாரதா”.
‘காயத்ரி மற்றும் சகுந்தலாவின் மனதில் தங்களின் பெற்றோர் இறந்தபோது பட்ட கஷ்டங்கள் எல்லா நியாபகத்திற்கு வந்து மனதை வேதனை படுத்தியது… அதைவிட மல்லியை நினைத்து தான் கவலை அடைந்தனர்’.
மல்லி, அம்மு மற்றும் குட்டியை சமாதானம் செய்து கொண்டு இருந்தார் ஜெயா.
[the_ad id=”6605″]
வெற்றி, அருண் மற்றும் விஷ்ணு மூவரும் வந்த கோபத்தையும் அடக்கிகொண்டு அமைதியாக இருந்தனர்… தங்களின் சிறுவயதிலிருந்து ஒரு தந்தையை போல் பாதுகாத்தவரின் இறுதி காலத்தில் தேவையில்லாமல் சண்டை சச்சரவு வேண்டாம் என நினைத்து பொருமையை இழுத்துபிடித்துக்கொண்டு நின்றிருந்தார்கள்… கோபத்தை தூண்டும் வகையில் பேசியவர்களுக்கு பதிலடிகொடுக்க நினைத்து வாய்பேச துடித்த தமையன்கள் இருவரையும் அடக்கிக்கொண்டு இருந்தான் வெற்றி.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த உமா அவர்களிடம், “ஐயா… உங்களுக்கு ஏதாவது கோபம்னா சொல்லுங்க நாங்க மன்னிப்பு கேட்டுக்கிறோம், தயவுசெய்து அப்பா இறுதிகாரியத்தை பண்ணுங்க… ரொம்ப நேரம் காக்கவைக்கவேண்டாங்க” என்றவளிடம்…
ஒருவர், “ஆமாம் நீ யாரு ம்மா?… நாங்க எப்ப அவன் மேல கோவமா இருக்கோம்னு சொன்னோம்?, போ ம்மா போய் வந்த வேலையை மட்டும் பாரு” எனக்கூறி அவளை விரட்டினார்.
“நான் மல்லியோட தோழிங்க… நீங்க பேசறது பார்த்தா அப்படித்தான் இருக்குங்க ஐயா என்றால் உமா”.
மற்றொருவரோ, “தோழினா தோழியா மட்டும் இரு ம்மா, தேவையில்லாமல் எங்க விஷயத்தில் தலையிடாத… போ போய் அப்படி ஓரமா நில்லு… வந்துட்டா பேச என மரியாதையில்லாமல் உமாவை பேச, அதில் கோபம் கொண்ட கண்ணன் அவளை சற்று தள்ளி அழைத்துச்சென்றுவிட்டான்”.
அவர்கள் மரியாதையில்லாமல் உமாவை பேசியதில் விஷ்ணுவும் அருணும் இன்னும் கடுப்படைந்தனர்.
அப்பொழுதுகூட வெற்றி அமைதியை மட்டுமே கடைபிடித்தான்… ஆனால் அவன் மனத்தில் அவர்களை பார்க்க பார்க்க வெறுப்பு மட்டுமே கூடிக்கொண்டே சென்றது.
இவர்களின் பேச்சில் ஊர் மக்கள் சிலரும் சந்திரனுக்கு ஆதரவாக பேச, பங்காளிகளோ விடாப்பிடியாக சொத்து அடைவதில் குறியாக இருந்தனர்.
சுந்தரிடம் ஒன்றும் பெரிதா சொத்துக்கள் இல்லை, அவரிடம் இருந்தது குடியிருந்த வீடு, மனைவின் நகை அவ்வளவு தான்… அதையும் மல்லியிடம் இருந்து பறிக்க தான் இந்த முயற்சி.
இதையெல்லாம் பார்த்த மல்லி, “போதும் எல்லாரும் நிறுத்துங்க, இப்ப தான் தெரியுது ஏன் என் அப்பா உங்களையெல்லாம் விட்டு விலகியிருந்தாருனு, துக்கவீட்டில் வந்து சொத்து பற்றி பேசற நீங்க எல்லாம் பெரிய மனுசங்கனு வெளியே சொல்லிக்காதீங்க… ஆமாம் என் அப்பா சம்பாத்தித்த சொத்துக்களை அடைய நீங்க யாரு?… உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?, சுயமா சம்பாதிக்க துப்பிள்ளைனா இப்படித்தான் அடுத்தவன் சொத்து அடைய ஆசைவரும்… நல்ல வேளை உங்க எல்லாரோடைய சுயரூபம் தெரிந்துதான் அப்பையே என் அப்பா இந்த ஊருக்கு வந்துவிட்டார், இப்படி பட்ட சொந்தங்கள் இருப்பதும் ஒன்று இல்லாமல் இருப்பதும் ஒன்று” எனக்கூறியவளிடம்…
பெரியம்மா முறை கொண்ட பெண்மணி ஒருத்தர், “நாங்க யாரும் இல்லாம எப்படி உடலை எடுப்பீங்க?, யாரு கொள்ளிபோடவருவா?,உன்னைய யாரு பார்த்துக்குவா?… உன்னைய எவன் கட்டிக்குவான்?”.
“அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்… பங்காளினு சொல்லி பணத்தாசை பிடித்த நீங்க செய்வதைவிட, அவர் மேல் உண்மையான பாசமும், அன்பும் கொண்ட யாரு வேணாலும் காரியம் செய்யலாம்”.
அப்படி யாரு செய்வாங்கனு நாங்களும் பார்க்கிறோம் மல்லி.
நல்லா பாருங்க, யார் வேண்டானது என்றவள் நேராக கண்கள் கலங்கி அழுகையை அடக்கிக்கொண்டு நின்றிருந்த உமாவிடம் சென்றாள்.
“நான் சொல்லறது சரிதானான உமா?, இந்த பணத்தசை பிடித்த சொந்தத்தை விட நீங்க போதுமா எனக்கு வேற எந்த உறவும் தேவையில்லை… நீங்க நாளு பேரும் என் அப்பாவை உங்க அப்பாவா தான பார்த்தீங்க?”.
“என்ன மல்லி இப்படி கேட்கிற, எங்களோட எல்லா நல்லது கெட்டதுலையும் அப்பாவும் நீயும் தான இருந்தீங்க, உம்மேல எவ்வளவு பாசம் வச்சி இருந்தாங்களே அதே அளவுக்கு எங்க மேலயும் பாசம் வச்சியிருந்தாரேடீ… உன்னை எப்படி பாதுகாத்தாரோ அதே அளவுக்கு எங்களையும் பாதுகாத்தாரே மல்லி… அப்படி பட்டவர் எங்களுக்கு அப்பாவாதான இருக்க முடியும்”.
அப்படி நீ நினைத்த கண்ணனையும் குட்டியையும் தான் அவருக்கு இறுதி சடங்கு செய்யனும்னு நான் விரும்பறேன் உமா… அவங்களை அனுப்பறையா உமா.
“என்ன மல்லி இப்படி கேட்கிற?… பங்காளிகள் காட்டி இவங்ககெல்லாம் சம்மதிக்க மாட்டாங்க மல்லி, தேவையில்லாத பிரச்சனை பண்ணுவாங்க மல்லி” என்றவளிடம்…
“எனக்கு அவங்களை பற்றி கவலையில்லை உமா, நீ என்ன சொல்லற… உன்னுடைய முடிவை மட்டும் சொல்லு என மல்லி கூறிக்கொண்டிருக்கும்போது”; பங்காளிகளில் முதலாமானவர், “அதெப்படி நாங்கள் இருக்கும் பொழுது அந்த பசங்க பண்றது?… அப்புறம் எங்களுக்கு என்ன மரியாதை இருக்கு?”.
இரண்டாம் நபரோ, “அப்படியே அவங்க தான் பண்ணனும்னா நாங்க யாரும் பாடைய தூக்க மாட்டோம் பார்த்துக்கோங்க”.
மூன்றாம் நபரோ, “நாங்க யாரும் இல்லைனா அநாதை பொணமா தான் அரசாங்கத்திலிருந்து தூக்கிகிட்டு போவாங்க என தெனாவெட்டாக கூறியதும்”.
அதுவரை நிதானமாக பேசிக்கொண்டிருந்த சந்திரன் வெடித்துவிட்டார்.
“நீங்க எதுவும் செய்ய வேண்டாம், இந்த ஊரில் ஆம்பளைங்களே இல்லையா என்ன?… நாங்க அங்ககளை வச்சி பார்த்துகிறோம், நீங்க இதுவரை பண்ணின எல்லா உதவிகளுக்கும் ரொம்ப நன்றி… இனி உங்க தயவு யாருக்கும் தேவையில்லை, நாங்களே பார்த்துகிறோம்… நீங்க அமைதியா ஒரு ஓரமா நின்னா போதும் எனக்கூறியவர் மகன்கள் மூவரையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு அருகில் இருந்த மரத்திற்கு அருகில் சென்று ஏதோ பேசினார்”.
உமாவோ, “தன்தம்பிகளை அழைத்து மல்லியின் கைகளில் அவர்களின் கையை கொடுத்தவள், இவனுங்க ரெண்டு பேரும் உனக்கும் தம்பிங்க தான்… அப்பாவுக்கு பிறகு சொந்தம்னு சொல்ல உறவு வேணும்னு தான் இவனுங்களை அனுப்ப தயங்குனேன்; எப்ப இப்படி மனசாட்சியே இல்லாம பேசுனாங்களோ இனி இவங்க தயவு தேவையில்லை… உனக்கு தோன்றியதை செய் நாங்க உன்கூடவே இருப்போம்” எனக்கூறினாள்.
அதில் மகிழ்ந்தவள் உமாவிடம் சேர்ந்து இளையவர்களையும் அணைத்துக்கொண்டாள்.
தனியே மகன்களிடம் பேசிய சந்திரன் ஊர் மக்கள் அனைவரையும் அழைத்து, “நம்ம சுந்தரம் எப்படி பட்டவருனு உங்களுக்கே தெரியும், இனி அவரு பங்காளிகளை எதிர்பார்க்காத நாமே முன்ன நின்னு இறுதிகாரியத்தை செய்யலாம் நான் நினைக்கிறேன்… நீங்க என்ன நினைக்கிறீங்கனு சொல்லுங்க” என்றவரிடம்…
மயிலு பாட்டி, “ராசா… நீ சொல்லறது சரித்தான் ப்பா… இத்தனை வருஷத்துல ஒரு முறை சுந்தரத்தை பார்க்க வராதவங்க சொத்துக்காகவா வந்து இருக்காங்க, அவங்க காரியம் பண்ணினா கூட சுந்தரம் ஆத்மா சாந்தி அடையாது ராசா, நீ சொல்லற மாதிரியே நம்ம ஊரு ஆம்பளைங்க பாத்துக்குவாங்க ராசா” என்றவர்… “ஆண்களை பார்த்து, என்ன அமைதியா இருக்கிங்க?… ராசா கேட்டகேள்விக்கு பதில் சொல்லுங்க என்றதும் அனைவரும் ஒத்துக்கொண்டனர்”. (https://nuttyscientists.com/)
அதன் பிறகு அனைத்து வேலைளும் மலமலவென நடைபெற்றது…
தர்மர் அருணை அழைத்து, “நீ போய் இடுகாட்டில் எல்லாம் சரியா நடக்குதானு பாருடா, அப்படி அவங்க கேட்கிறதையும் வாங்கிக்கொடு”.
“சரிங்க சித்தப்பா… நான் அங்க போய் பார்க்கிறேன் எனக்கூறி சென்றுவிட்டான் அருண்”.
இறுதியாக பாடையை தூக்கக்கூட சொந்தங்கள் வராததை பார்த்த நாச்சியார், தன் பேரன்கள் இருவரையும் அனுப்பிவைத்தார்.
அப்படியும் ஆட்கள் போகாததால் சாரதா, “நம்ம ஊரு ஆம்பளைங்க வாங்க ப்பா, இத்தனை நாள் உங்களுக்கு ஒரு அண்ணா, தம்பியா, மாமா வாழ்ந்த மனிதனை நினைந்து விருப்பமிருக்கிறவங்க வந்துதூக்குங்க” என்று கூற…
“சுந்தரத்தின் உடலை விஷ்ணு, வெற்றி, மாரியக்கா கணவன், சாந்தியக்காவின் கணவன், இன்னும் மற்ற ஆண்களும் அனைவரும் முன்வந்து சுந்தரத்தின் உயிரற்ற உடலை மரியாதையாக எடுத்துச்சென்றனர்… மகன்களாக முன்நின்று கண்ணன் மற்றும் குட்டியும் அவரின் இறுதிகாரியத்தை செய்தனர்”.
[the_ad id=”6605″]
அதில் அவமான பட்ட சொந்தங்கள் உடனே அவரவர் ஊர் நோக்கி சென்றுவிட்டனர்.
அவர்களை போக வேண்டாம் எனக்கூற அங்கிருந்து எவரும் வரவில்லை.
“அவரின் உடலை எடுத்துச்செல்லும் போது மல்லி அழுதஅழுகை அனைவரையும் உழுக்கியது”.
அதன் பின் வந்த அனைத்து நாட்களும் உமா, இளையவர்கள் மற்றும் பண்ணையாரின் குடும்பமும் மல்லியுடன் இருந்தனர்.
“பதினாறாவது நாள் சாமிகும்பிடும் போது வந்த அவளின் தாய்மாமனும் அவரின் மனைவியும் எங்கே மல்லியின் பொறுப்பு தங்கள் மீது விழுந்துவிடுமோ என்ற பயத்தில் காரியம் முடிந்தவுடன் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிவிட்டனர்”.
“மல்லியின் அத்தை, அதாவது சுந்தரத்தின் அக்காவோ அவரின் குடிகாரமகனுக்கு மல்லியை கட்டிவைக்கனும் என்று முனைந்தார்”.
“அதிலும் அவருக்கு மல்லியின் வீட்டின் மேல் எப்பொழுதுமே ஒரு கண் அதுவுமில்லாமல் அடித்து போட்டால் கூட கேட்க ஆள் இல்லை என்ற தைரியத்தில் வழுகட்டாயமாக திருமணம் பேச முனைந்தார்… மல்லியின் மறுப்பு கூட அவரிடம் எடுபடவில்லை”.
“ஊர் மக்கள் அனைவரும் தடுத்தும் கூட அம்மாவும் மகனும் சேர்ந்து மல்லியை வலுக்கட்டாயமாக அம்மன் கோயிலுக்கு இழுத்துச்சென்றனர்”.
“இதை பார்த்த தனம் குறுக்கு வழியில் ஓடிச்சென்று பண்ணையாரின் வீட்டிற்கு தகவல் கொடுத்தாள்”.
அப்பொழுது தான் காங்கேயத்திலிருந்து வந்த வெற்றி, விஷ்ணு மற்றும் அருண் விஷயத்தை கேட்டவுடன் தனத்தை அழைத்துக்கொண்டு தங்கள் காரிலேயே அம்மன் கோயிலிலுக்கு சென்றனர்.
வீட்டில் உள்ள பெண்களே எந்த வித அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என இறைவனை வேண்டிக்கொண்டு, இவர்களின் வருகைக்காக காத்திருந்தனர்.
விஷ்ணு, வெற்றி மற்றும் அருண் மூவரும் செல்வதற்கு முன்பே வந்த சந்திரன் மற்றும் தர்மரின் பேச்சு அவர்களிடத்தில் எடுபடாமல் போக உடனடியாக காவல்துறையை அழைத்தனர் ஊர் மக்கள்.
“அதில் அவர்களுடன் வந்த ஆட்களுக்கும், இவர்களுக்கும் கைகளப்பாகிவிட்டது, அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி மல்லியின் கழுத்தில் தாலியை கட்ட முயன்றவனை குட்டி கல்லால் அடித்துவிட்டான்”.
அதில் கோபம் கொண்ட மல்லியின் அத்தை, “எவ்வளவு தைரியம் இருந்தா என் பையனையே அடிச்சிருப்ப? எனக்கூறி குட்டியை அடிக்கவர கண்ணன் மற்றும் அம்முவும் அவரை பிடித்துக்கொண்டனர்”.
“அவரின் மகனோ அன்னைக்கு என்ன ஆனாலும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் எனநினைத்து மல்லிக்கு தாலியை கட்ட போக; உமா எப்பொழுதும் தன்னுடன் பாதுகாப்பிற்காக வைத்திருந்த கத்தியால் அவனை தாக்கினால், வலியால் அவன் தடுமாறிய சமயம் பார்த்து மல்லியை தன்னுடன் அனைத்துக்கொண்டாள்”.
அதில் உமாவை அவன் தாக்க வர ஊர்பெண்கள் அனைவரும் சேர்ந்து அவனை அடித்து கயிற்றால் கட்டிவைத்தனர்.
ஆண்கள் அனைவரும் சண்டையிட்டு கொண்டு இருக்க, அவர்களை சந்திரன் மற்றும் தர்மர் தடுக்க முயன்று தோழ்வியையே சந்தித்தனர்.
சிறிது நேரத்தில் காவல்துறையினரும் வந்துவிட்டார்கள் , அதன் பிறகு தான் அந்த இடமே அமைதியானது.
காவல்துறை உயர் அதிகாரி சந்திரனிடம் விசாரிக்க, மல்லியின் அத்தையையும் அவரின் மகனையும் காட்டி, “இவங்க தான் சார் தேவையில்லாமல் வந்து பிரச்சனை பண்றாங்க… மல்லியை காட்டி, இந்த பெண்ணை கட்டாய திருமணம் செய்ய முயற்சி பண்ணினால் சார், அதனால் தான் இந்த கலவரம்… அமைதியா இருந்த ஊருக்குள் வந்து பிரச்சனை பண்றாங்க சார்” எனக்கூறினார்.
அதைகேட்ட மல்லியின் அத்தை, “நாங்க எந்த தப்பு பண்ணலையே சார், அவ என் தம்பி பொண்ணு, ஆதரவில்லாம இருக்காளேனு எம்பையனுக்கு கட்டி வைக்க நினைத்தேன் சார்… இந்த ஊர்காரங்க தான் அதை பெரிசு படித்தீட்டாங்க என அப்பட்டமாக பொய் கூறியவரை அனைவரும் அறுவெறுப்புடன் பார்த்தனர்”.
அவரின் பேச்சை நம்பாத அதிகாரி உமாவின் அணைப்பில் அழுதுகொண்டிருந்த மல்லியிடம் விசாரணை செய்ய, அவளே நடந்தவற்றை ஒன்றுவிடாமல் கூறினாள்.
“அதில் ஆத்திரமடைந்த அதிகாரி தாய் மற்றும் மகன் என இருவருக்கும் காதுகிழியும் படி இண்டு அடியை பரிசாக கொடுத்த பிறகு தான் அவர்கள் இருவர் மற்றும் அவர்களுடன் வந்தவர்களையும் சேர்த்து கைதுசெய்தனர்”.
அவர்கள் சென்றவுடன் தான் ஊரே அமைதியாக இருந்தது.
உமா அந்த அமைதியை கலைக்கும் பொருட்டு மல்லியிடம், “இனி நீ இந்த வீட்டில் தனியா இருக்க வேண்டா மல்லி, என்கூட வந்துவிடு நான் உன்ன பார்த்துக்கிறேன்டீ… என்னால் முடிந்ததை நான் செய்யறேன் வந்துவிடு மல்லி” என்றவளிடம்…
மல்லி, “எதுக்கு டீ உனக்கு தேவையில்லாத சுமை, நான் இங்கேயே இருந்துகிறேன் உமா”.
“அதெல்லாம் சரிபட்டு வராது… கண்ணா, குட்டி, அம்மு நீங்க மூனுபேரும் போய் தேவையான பொருட்களை எடுத்துவைங்க… இனி மல்லி நம்ம கூடத்தான் இருப்பா, அதில் எந்த மாற்றமும் இல்லை எனக்கூறியவள் தேவையான பொருள்களை மட்டும் எடுத்துக்கொண்டு சந்திரன் மற்றும் தர்மரிடம் கூறிவிட்டு மல்லியை அழைத்துக்கொண்டு தங்கள் வீட்டுக்கு சென்றுவிட்டாள்”.
போகும் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த விஷ்ணு மனதில் இப்படி பட்ட சூழ்நிலையை கூட தன்னவளுக்கு ஆறுதலாக இருக்கமுடியாத தனது நிலையை நினைத்து மிகவும் வருந்தினான்.
வெற்றி மற்றும் அருண் இருவரும் அவனை சமாதானம் செய்து தோப்பிற்கு சென்றுவிட்டனர்.
மகன்களையே பார்த்துக்கொண்டிருந்த சந்திரன் தர்மரிடம், “இதுக்கு மேல பொறுமையா இருந்தா சரிபட்டுவராது, மீனு கல்யாணம் முடிந்ததும் இவங்க நாளு பேருக்கும் நிச்சத்தை முடித்துவிடனும்… அதற்கு அடுத்த முகூர்த்தத்திலயே கல்யாணத்தை வச்சிக்கனும் தர்மா”.
அதற்கு தர்மர், “நீங்க சொல்லறது சரிதான் அண்ணா, ஆனா வெற்றி கல்யாணம் முடியாம இவங்க கல்யாணம் எப்படி அண்ணா?… நாமளே ஊர் பேச தலவெடுத்து கொடுத்த மாதிரி ஆகீடாதா அண்ணா?”.
“வேற வழியில்லை தர்மா; இனியும் தாமதிக்காமல் அது மல்லிக்கு நல்லதல்ல டா, சரிவா வீட்டிலிருக்கவங்ககிட்ட விஷயத்தை சொல்லீட்டு, அப்படியே பள்ளிகூடம் வரை போய்ட்டு வந்துடலாம்”.
“சரிங்க அண்ணா… முழு பொறுப்பையும் மார்க் பையங்கிட்ட கொடுத்த இவனுங்க அந்த பக்கமே போகவே மாட்டேங்கிறானுங்க”.
அதற்கு சந்திரன், “தர்மா… அவனுங்க போகாம இருக்கிறதே நாம போகனும்னு தான் டா, இதெல்லாம் அவனுங்க அம்மா பிளான்… சரிவா நேரமாகுது எனக்கூறி தர்மர் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார்”.
அதன் பின் வந்த நாட்கள் அமைதியாகவே சென்றது.
‘தந்தையை நினைத்து அழும்போதொல்லாம் உமா மற்றும் இளையவர்கள் என யாராவது ஒருவர் அவருடனேயே இருந்தனர்’.
***////***////***////****
மூணாறில் இருந்து வந்த பின்னர் மகாலட்சுமி டிடக்டிவ் மூலமாக மதனின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்கானித்துக்கொண்டே இருந்தார்.
மதனும் அதை அறிந்து தான் இருந்தான். நித்தியனிடமும் கூட அவனின் எண்ணிலிருந்து அழைக்காமல் தனது பி.ஏவின் மூலம் வாங்கிய புது போன் மற்றும் நம்பரை பயன்படுத்தியே பேசினான்.
மகாலட்சுமி அனுகிய டிடக்டிவ் பரமனை நெருங்கியிருந்தார்.
ஆம் அவர்கள் பரமன் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பதை அறிந்து காணச்சொன்றனர்… ஆனால் அங்கிருந்த பாதுகாப்பை மீறி அவர்களால் பரமனை நெருங்கமுடியாமல் போனது.
அவனை நெருங்க சமையம் பார்த்து காத்துக்கொண்டிருந்தார்.
***/////****/**//////****////***
கவிதாவோ நம்பியின் ஆட்கள் மூலமாக பரமனை தேடி அலைந்துகொண்டிருக்கிறாள்.
ஆனால் அவனை பற்றி தகவலானது தற்போது தான் கிடைத்தது, அதனால் கவிதா தன் ஆட்களை அழைத்துக்கொண்டு கேரளாவிற்கு பயனப்பட்டுக்கொண்டிருந்தார்.
பாவம் இவர்கள் இருவருக்கும் தெரியவில்லை… இனிதான் தங்களின் வாழ்க்கையே சோதனைக்காலமாக போகிறதென்று… இது தெரிந்திருந்தால் இவர்கள் இருவரும் கேரளாவிற்கு செல்லாமல் இருந்திருப்பார்களோ என்னவோ?.
அன்பு தொடரும்….