பிடித்தம் 30
இரண்டு வாரங்கள் கடந்து இருந்தது. புகழ்வேந்தன் மித்ராணி உறவு முன்னேறி இருக்க கிருபாகரன் நிலை பின்னடைந்து பாதாளத்திற்குச் செல்லும் நிலையில் இருக்கிறது.
புகழ்வேந்தன் உணவில் மித்ராணி இப்பொழுதெல்லாம் எதையும் கலப்பது இல்லை ஆனால் அவனது காலை உணவு காய்கறிகளும் இலைதழைகள் மட்டுமே. தன்னவளுக்காக அதை கஷ்டப்பட்டு உண்ண அரம்பித்தவனுக்கு தற்போது அது பழகிவிட்டது.
இருவரும் நண்பர்களை போல் இயல்பாக பேசிக்கொள்வதும், அவ்வபோது புகழ்வேந்தன் சிறு சிறு முத்தம் மற்றும் அணைப்பின் மூலம் கணவன் அவதாரம் எடுப்பதும் நடக்கும். முன்பு போல் அல்லாமல் மித்ராணி சிறு புன்னகையுடன் அதை கடந்துவிடுவாள்.
புகழ்வேந்தன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட அடுத்த நாள், காலை உணவின் போது புகழ்வேந்தன் முன் பச்சைக் காய்கறி கலவை அடங்கிய தட்டை வைத்த மித்ராணி அவனை பார்த்தபடி மென்னகையுடன், “அத்தை இன்னையில் இருந்து ஒரு மாசத்துக்கு வேந்தன் டயட்டாம்” என்றாள்.
‘அடிப்பாவி’ என்று மனதினுள் புலம்பிய புகழ்வேந்தன் வெளியே சிரித்தபடி அதை உண்டு முடித்தான்.
அலுவலகம் கிளம்பும் முன் அறையில் ஒப்பனை மேஜை முன் அமர்ந்து மித்ராணி முடியை திருத்தம் செய்துக் கொண்டிருந்த போது அங்கே வந்த புகழ்வேந்தன் அவளுக்கு பின்னால் இருந்தபடி கைகளை அவளது இருபுறமும் கொண்டு சென்று ஒப்பனை மேஜை மீது வைத்து அவளை தொடாமல் அணைத்தார் போல் நின்றான்.
அவள் கண்ணாடி வழியாக அவனை பார்க்க, அவனும் கண்ணாடி வழியாக காதலுடன் பார்த்தான்.
சில நொடிகள் இருவரின் பார்வையும் பின்னிக் கொள்ள, மித்ராணி தான் தாக்குபிடிக்க முடியாமல், ‘வசியக்காரா’ என்ற முணுமுணுப்புடன் பார்வையை திருப்பி முடியை திருத்தம் செய்யும் பணியை தொடர்ந்தாள்.
புகழ்வேந்தன், “ஏய்! இப்போ என்ன சொன்ன?”
மீண்டும் கண்ணாடி வழியாக அவனைப் பார்த்தவள் அறியாவதவள் போல், “என்ன சொன்னேன்?” என்றாள்.
“என்ன சொன்ன னு சொல்லு”
“வேந்தன்! எல்லாத்துக்கும் மேல் னு சொல்லுவியே! கண்டு பிடி”
“கண்டுபிடித்தால் எனக்கு என்ன கிடைக்கும்?” என்றவனின் பார்வை அவளை மையலுடன் நோக்க,
அந்த பார்வை அவளுள் ஹார்மோனியம் வாசித்தாலும் வெளியே அமைதியான முகபாவத்துடன், “கண்டு பிடி அப்பறம் பார்க்கலாம்” என்றாள்.
நொடி பொழுதில் ஒரு கையால் அவளது இடையை பற்றி தூக்கி தன்னை நோக்கி நிறுத்தியவன், அவளை இடையோடு அணைத்தபடி, “இந்த வேந்தன் பக்கா பிஸ்னெஸ் மேன்.. எனக்கு என்ன கிடைக்கும் னு சொல்லு” என்றான். அவனது தோரணை சிறிதும் தொழிலதிபனாக இல்லாமல் காதல் கணவனாகத் தான் இருந்தது.
என்ன நடந்தது என்பதை புரிந்துக்கொள்ள சில நொடிகள் எடுத்துக் கொண்ட மித்ராணியின் முகபாவத்தை கண்டவன் மென்னகையுடன் அவளது மூக்கை தன் மூக்கால் உரசியபடி, “அல்லிராணி! என்ன நடந்தது னு திரும்ப செய்து காட்டவா?” என்றான்.
அவள் செல்ல முறைப்புடன் அவனது நெஞ்சில் கைவைத்து தள்ள முயற்சிக்க, அவளால் அவனை அசைக்கக் கூட முடியவில்லை.
விரிந்த புன்னகையுடன் அவளது நெற்றியில் லேசாக முட்டியவன், “கல்யாணத்துக்கு முன்னாடி என்ன சாப்பிட்ட? ஸ்டரன்த்தே(strength) இல்லையே! இப்படி இருந்தா என்னை எப்படி தாங்குவ?” என்றான்.
இரண்டு நொடிகள் கழித்தே அவன் சொன்னதை புரிந்துக் கொண்டவள் திமிறியபடி முறைப்புடன், “நான் இன்னும் உன்னை கணவனா ஏத்துக்கவே இல்லை” என்றாள்.
அணைப்பை சற்று இறுக்கியபடி, “கணவனா ஏத்துக்கிற போது என்னை தாங்குற அளவிற்கு தெம்பா இரு னு தான் சொல்றேன்” என்று கூறி கண்ணடித்தபடி அவளை விடுவித்தான்.
அவள் இன்னும் அதிகமாக முறைக்க, அவளது முறைப்பிலும் குரலிலும் இருந்து அவளது மனநிலையை புரிந்துக் கொண்டவன் தற்போதைய சுமூக நிலையை கெடுத்துக்கொள்ள விரும்பாமல், “சரி கண்டு பிடிச்சா என்ன கிடைக்கும் னு சொல்லு” என்று விட்டதைத் தொடர்ந்தான்.
அவள் முறைத்துவிட்டு நகரப் பார்க்க, அவளது கையை பற்றித் தடுத்தவன், “எனக்கு ஸ்ட்ராபெரி சாக்லெட் வேணும்” என்ற போது அவனது பார்வை அவளது இதழ்களில் பதிந்திருந்தது.
“நேத்து சகஜமா பேசினேன் னு ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்கப் பார்க்காதே!”
“அட்வான்டேஜ் எடுத்துகிறதா இருந்தா உன்னிடம் ஏன் கேட்டுட்டு இருக்கிறேன்? என் மேல் வெறுப்பு இல்லாத போது இந்த சின்ன சின்ன தொடுகைகளை ரசிக்கலாமே!”
“முதலில் மனம் ஒன்ற வேண்டும்”
“உன் மனம் என்னை ஏற்றுக் கொண்டதால் தான் என் நெருக்கமோ முத்தமோ உனக்கு வெறுப்பாக இல்லை.. உன் ஆழ் மனம் என்னை ஏற்றுக் கொண்டதை நீயே உணரலை.. உன் மனதை நீ முழுமையாக உணரும் வரை நான் காத்திருப்பேன் ஆனால் விலகி இருக்க மாட்டேன்” என்றவன் அவளது கையை சுண்டி இழுத்து அவளை தன் அருகே கொண்டு வந்து அவளது கன்னத்தில் முத்தமிட்டு வசீகர புன்னகையுடன் புருவம் உயர்த்தினான்.
அவள் உதட்டை சுழித்து அவனை தள்ளிவிட்டுவிட்டு வெளியே சென்று அலுவலகம் கிளம்பினாள்.
அலுவலகம் செல்லும் வழியில் புகழ்வேந்தன் சொன்னதை அசைபோட்டவள் அவனது கூற்று உண்மை என்பதை புரிந்துக் கொண்டாலும், ‘இவ்வளவு குறுகிய காலத்தில் எப்படி தன் மனதினுள் வேந்தன் நுழைந்தான்?’ என்ற கேள்வி அவள் மனதைக் குடைந்தது.
அன்று மதியம் மித்ராணி கைபேசியில் புகழ்வேந்தனை அழைத்த போது அவன் அழைப்பை எடுக்கவில்லை. அடுத்து இரண்டு முறை அழைத்தும் அவன் எடுக்கவில்லை என்றதும் சதீஷை அழைத்தாள். சதீஷ் அலறியடித்துக் கொண்டு புகழ்வேந்தன் அறைக்குச் சென்றான்.
சதீஷ் வந்த வேகத்தையும் அவன் கையில் இருந்த கைபேசி அலறிக் கொண்டிருந்ததில் இருந்தும் அழைப்பது அவனது அல்லிராணி என்பதை புரிந்துக் கொண்ட புகழ்வேந்தன், “இப்போ தான் சாப்பிட வீட்டுக்கு கிளம்பினேன் னு சொல்லு” என்றான்.
சதீஷ் ‘என் கிரகம் இப்படி மாட்டிட்டு முழிக்கிறேன்’ என்று ‘கரகாட்டக்காரன் கோவை சரளா’ போல் மனதினுள் கூறியபடி அழைப்பை எடுத்தான்.
அவன் அழைப்பை எடுத்ததும், “என்ன பேசணும் னு உன் பாஸ் கிட்ட கேட்டாச்சா?” என்று சரியாக கணித்துக் வினவ,
‘கஷ்டமப்பா! ஓவர் புத்திசாலி கிட்ட வேலை செய்றதை விட ஓவர் புத்திசாலியை கட்டினவர் கிட்ட வேலை செய்றது தான் ரொம்ப கஷ்டமா இருக்குது’ என்று பெருமூச்சை சத்தமின்றி வெளியிட்டவன், “இல்லை மேம்.. ரெஸ்ட்ரூமில் இருந்தேன்”
“உன் பாஸ் எங்க?”
“இப்போ தான் மேம் லன்ச்சுக்கு வீட்டுக்கு கிளம்பினார்”
“இன்னும் முப்பது நிமிஷத்தில் வீட்டில் இருக்கணும் னு உன் பாஸ் கிட்ட சொல்லிடு”
“மேம் பாஸ் அப்போவே கிளம்பிட்டார்” என்ற அவனது கூற்றை கேட்க அவள் தொடர்பில் இல்லை.
சதீஷ் மித்ராணி கூறியதை கூறினான்.
[the_ad id=”6605″]
புகழ்வேந்தன், “அந்த கவர்மென்ட் ஸ்கூல் யுனிபார்ம் டெண்டரில் நாம விலகியது மேடமுக்கு தெரிந்திருக்கும்”
“அந்த டெண்டர் அவங்களுக்கு கிடைச்ச விஷயத்தை சொல்லக் கூட போன் பண்ணி இருக்கலாமே!”
தனது மடிக்கணியை மூடி எடுத்துக் கொண்டு கிளம்ப ஆயுத்தமான புகழ்வேந்தன், “காலையிலேயே போன் பண்ணி டெண்டர் கிடைச்ச விஷயத்தை சொல்லிட்டா.. நீ உன் வைப்-க்கு போன் பண்ணி ராணி என்ன முடிவு எடுத்து இருக்கா னு கேளு.. சப்போஸ் வேண்டாம் னு முடிவு பண்ணி லெட்டர் அனுப்பச் சொல்லி இருந்தா ஒரு மணி நேரம் வெயிட் பண்ணச் சொல்லு.. அவசரப்பட்டு எதுவும் செய்ய வேண்டாம் னு சொல்லு.. பேசிட்டு சைட் விசிட் போ.. நான் ரெண்டு மணி நேரத்தில் வந்திருவேன்” என்றுவிட்டு கிளம்பினான்.
புகழ்வேந்தன் வீட்டிற்கு சென்றபோது ஆச்சரிய பார்வையுடன் அவனை வரவேற்ற கலைவாணி, “சாப்டியா?” என்றார்.
“நீங்க சாப்பிடலைனா சேர்ந்து சாப்பிடலாம்.. ராணி சாப்பிட்டாளா?”
(வெளியே மித்ராணியின் மகிழுந்து(car) நிற்பதை வைத்து அவள் வீட்டிற்கு வந்துவிட்டதை அறிந்துக் கொண்டான்)
“சாப்பிட்டேன் னு சொன்னா, ஆனா சாப்பிட்டது போல் தெரியலை.. நேரா ரூமுக்கு தான் போனா.. கோபமா இருக்கா.. நீ எதுவும் பண்ணியா?”
“சின்ன விஷயம் தான் நான் பார்த்துக்கிறேன்.. நீங்க சாப்டீங்களா இல்லையா?”
“நான் இப்போ தான் சாப்பிட்டு முடிச்சேன்..”
“சரி நான் ராணி கூடவே சாப்பிடுறேன்.. அவளுக்கு பிடிச்சது ஏதாவது இப்போ செய்யச் சொல்லுங்க” என்றுவிட்டு அறைக்குச் சென்றான்.
அவன் அறையினுள் நுழைந்ததும் தலையணை ஒன்று பறந்து வந்து அவன் மேல் விழுந்தது.
“ராணி நான் சொல்றதை கேளு………” என்ற அவனது பேச்சை கவனிக்காமல் அவள் கோபத்துடன் பொரிய ஆரம்பித்தாள்.
“என்ன நினைச்சிட்டு இருக்க நீ? நான் கேட்டேனா? உன் கிட்ட வந்து விட்டுக் கொடு னு கேட்டேனா? என்ன! பிச்சை போடுறியா? நீ………………….”
சட்டென்று அவளை நெருங்கி அவளது இழதில் முத்தமிட்டவன் நொடியில் விலகி, “என்ன வார்த்தை இது! ஹ்” என்றான் கோபத்துடன்.
“ப்ச்” என்றபடி அவனை தள்ளிவிட்டவள், “பின்ன நீ…………….”
“முதல்ல நான் சொல்றதை கேட்கிறியா?” என்று சற்று குரலை உயர்த்தி அவன் கூற, அவள் முறைப்புடன் ‘சொல்லு’ என்பது போல் பார்த்தாள்.
அவன், “எனக்கு கார்மென்ட் பத்தி எதுவும் தெரியாது.. கிருபாகரனோட கார்மென்ட் னு நினைச்சு தான் போட்டிக்கு தொடங்கினேன்.. இப்போ நம்மோடதை உன்னோடதோடு மெர்ஜ் பண்ணிடலாமா னு யோசிச்சிட்டு இருக்கிறேன்.. நைட் இதை பத்தி பேசணும் னு நினைத்தேன்.. அதுக்குள்ளே உனக்கு விஷயம் தெரிஞ்சுருச்சு”
“கார்மென்ட் பத்தி தெரியாம தான் சக்செஸ்புல்லா அதை ரன் பண்ணிட்டு இருக்கிறியா?”
“விஷயம் தெரிஞ்சவங்களை வேலையில் வைத்திருந்தால் கூட சக்செஸ்புல்லா ரன் பண்ணலாம்”
“ச்ச்” என்றபடி அவள் தளர்வுடன் சோபாவில் பொத்தென்று அமர, அவள் அருகில் அமர்ந்தவன் கனிவான குரலில், “என்ன டா?” என்றான்.
“முதல் முறையா நானே தனியா பிரிப்பர் பண்ணி அனுப்பிய கோட்(quote) இது.. காலையில் டெண்டர் கிடைச்சதும் எவ்ளோ சந்தோஷமா இருந்துது தெரியுமா! ஆனா இப்போ! ப்ச்.. போடா” என்று அவனைத் தள்ளினாள்.
அவளது கரங்களை இடது கையால் சிறை பிடித்தபடி வலது கையை அவளது தோளை சுற்றி அரவணைத்தவன், “இப்பவும் உன் திறமைக்கு தான் டா கிடைச்சு இருக்குது” என்றான்.
பின், “இப்போ தான் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குது.. ஏன்னா என்னோட ராணிமா ஜெய்ச்சிருக்காளே!” என்றான் புன்னகையுடன்.
அவன் குரலில் தெரிந்த உண்மையான மகிழ்ச்சி அவளது மனதை வருடினாலும் அவள் அமைதியாக தான் இருந்தாள்.
அவன் செல்லமாக அவள் நெற்றியை முட்டி, “என்ன டா?” என்றான்.
“நீ ஏன் டா எப்போதும் எதையாவது செய்து என்னை சந்தோஷத்தை முழுமையா அனுபவிக்க விடாம செய்ற?” என்று சிறு வருத்ததுடன் கூற,
“அம் ரியலி சாரி டா.. உன்னை இந்தளவுக்கு பாதிக்கும் னு நான் நினைக்கலை.. டெண்டர் கிடைத்தால் சந்தோஷப்படுவ னு தான் நினைத்தேன்” என்று அவனும் வருந்தினான்.
தன் மகிழ்ச்சியில் மகிழ்ந்து தன் வருத்தத்தில் வருந்தும் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தவள், “உனக்கு இந்தளவுக்கு ஏன்டா என்னை பிடிக்குது?” என்று வினவினாள்.
அவன் புன்னகையுடன், “அதான் சொன்னேனே! இந்த அல்லிராணி சண்டிராணி தான் என்னோட இதயராணி னு” என்றவன் அவளது கன்னத்தில் இதழ் பதித்தான்.
அவள் மென்னகையுடன், “நீ இருக்கியே!”
“என்ன?”
“ஏதாவது காரணம் வச்சு கிஸ் பண்ணிட்டே இருப்ப.. சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவியே!”
அவன் விரிந்த புன்னகையுடன், “கிஸ் பண்றதுக்கு எதுக்கு காரணம் வேணும்? இப்போ கூட கிஸ் பண்ணுவேனே!” என்றபடி மறுபடியும் அவள் கன்னத்தில் இதழ் பதித்தவன், “இந்த விஷயத்தில் நான் சைக்கிள் கேப்பில் பிளைட்டே ஓட்டுவேன்” என்று கூறி கண்ணடித்தான்.
“ஓ காட்!!” என்று அவள் அலற,
அவன், “என்ன?”
“என் போன் எங்க?” என்றபடி கையை உருவிக் கொண்டு எழுந்து கைபேசியை தேடி எடுத்தவள் அவசரமாக நிவேதாவை அழைத்தாள்.
நிவேதா அழைப்பை எடுத்ததும், “நிவி மெயில் பண்ணிட்டியா?” என்றாள் சிறு பதற்றத்துடன்.
நிவேதா, “அனுப்பலை.. உன் ஆள் ஒரு மணி நேரம் வெயிட் பண்ண சொல்லி உத்தரவு போட்டு இருக்கார்”
“என்ன?”
“உன் ஆளை கேளு” என்றுவிட்டு அவள் அழைப்பைத் துண்டிக்க, மித்ராணி திரும்பி புகழ்வேந்தனை பார்த்தாள்.
[the_ad id=”6605″]
கைகளை கட்டியபடி வலது காலை குறுக்காக வைத்து சுவற்றில் லேசாக சாய்ந்து இவளை பார்த்ததபடி வசீகர புன்னகையுடன் ஒயிலாக நின்றுக் கொண்டிருந்தான்.
‘வசீகரா” என்று முணுமுணுத்தவள், “தேங்க்ஸ்” என்றாள்.
“இதுகெல்லாம் தேங்க்ஸ் சொல்லக் கூடாது”
“வேற எதுக்கு சொல்ல?”
“எதுக்குமே சொல்ல வேணாம்” என்றவன், “நம்ம கார்மென்ட்டையும் சேர்த்து நீயே பார்துக்கிறியா? ஸ்பின்னிங் மில் வாங்கலாமா னு கூட யோசிக்கிறேன்..”
அவள் யோசனையாகப் பார்க்க,
அவன், “எப்படியும் கொஞ்ச நாளில் அவன் ஸ்பின்னிங் மில்லை விற்கிற நிலைக்கு வருவான்.. அதை வாங்கினா என்ன னு யோசிச்சேன்.. ஜஸ்ட் ஒரு ஐடியா தான்.. நீ ஓகே சொன்னா வாங்கலாம்.. ஏன்னா நீ தான் அதை பார்த்துக்க போற” என்றான்.
“மூணுத்தையும் மேனேஜ் பண்ற அளவுக்கு எனக்கு எக்ஸ்பிரியன்ஸ் இல்லை”
“எனக்கு உன் திறமை மேல் நம்பிக்கை இருக்குது.. உன்னால் முடியும்” என்றான் உறுதியான குரலில்.
அவனது நம்பிக்கையில் மகிழ்ந்தவள், “இந்த பிரச்சனையெல்லாம் முடியட்டும்” என்றாள்.
“அதிகபட்சம் ரெண்டு வாரத்தில் ஸ்பின்னிங் மில்லை வாங்கிடலாம்” என்றவன் இண்டர்காமில் சமையலறையை தொடர்பு கொண்டான்.
ரத்னா எடுத்ததும், “ரெண்டு பேருக்கும் சாப்பாடு கொண்டு வாங்க ரத்னாமா” என்று கூறி அவரது பதிலை பெற்றுக் கொண்டு அழைப்பைத் துண்டித்தான்.
அவள், “எதுக்கு அவங்களை அலைய வச்சிட்டு? கீழ போயே சாப்பிடலாமே!” என்றாள்.
அவன் புன்னகையை மட்டும் பதிலாக தர அவள் இடுப்பில் கை வைத்தபடி, “ராணி கேள்வி கேட்டா பதில் சொல்லணும்” என்றாள் கட்டளையாக.
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மகாராணி.. பதில் சொல்லிடுறேன்” என்று அவன் பவ்வியமாக பதில் கூற,
அவள் கண்களை சுருக்கியபடி, “என்ன கிண்டலா?” என்றாள்.
அப்பொழுது கதவை தட்டும் சத்தம் கேட்கவும் அவள் கதவை திறக்க போக, அவன், “இரு.. நான் போறேன்” என்று கூறியபடி சென்று கதவை திறந்து உணவு பதார்த்தங்கள் அடங்கிய பெரிய தட்டை(tray) வாங்கி வந்து மேஜையில் வைத்தான்.
ரத்னா கீழே சென்றிருக்க, “கதவை மூடு” என்றவன் ஒரு தட்டில் உணவை பருமார ஆரம்பித்தான்.
கதவை மூடிவிட்டு அவள் மேஜை அருகே வர, அவன், “சோபாவில் உட்காரு நான் கொண்டு வரேன்” என்றான்.
சோபாவில் அமர்ந்தவள் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
உணவு தட்டுடன் வந்தவன் அவள் அருகே அமர்ந்து உணவை கையில் எடுத்து அவள் வாய் அருகே கொண்டு சென்றான்.
அவள் சிறு ஆச்சரியத்துடன் பார்க்க, அவன் மென்னகையுடன், “ஹ்ம்ம்.. வாயை திற” என்றான்.
அவள் சொல்லத் தெரியா உணர்வுடன் அவனது வார்த்தைக்கு கட்டுப்பட்டு வாயை திறந்தாள்.
அவளுக்கு உணவை ஊட்டியபடி, “இதுக்காக தான் இங்கே சாப்பிடலாம் னு சொன்னேன்” என்று கூறி கண்சிமிட்டினான்.
மகிழ்ச்சி மின்னிய ஆவனது புன்னகை முகத்தை பார்த்தபடி அவன் கொடுத்ததை உண்டவள், “நீயும் சாப்பிடு” என்றாள்.
அதன் பிறகு ஒரு வாய் தனக்கு அடுத்த வாய் அவளுக்கு என்று மாற்றி மாற்றி சாப்பிட்டு உணவை முடித்தனர்.
தனது ஒவ்வொரு செயலின் மூலமாக வாய்வார்த்தைக்காக அல்லாமல் நிஜமாகவே அவள் அவனது மகாராணி என்பதை அவளுக்கு நிரூபித்துக் கொண்டிருந்தான் புகழ்வேந்தன்.
கையை கழுவிட்டு வந்தவன், “கீழ வச்சே சண்டை போடுவ னு நினைத்தேன்!” என்று சீண்டினான் அவளது மனம் அறிய.
அவள், “அது அன்னைக்கு செம்ம கோபத்தில் இருந்தேன்”
“இன்னைக்கு மட்டும் கோபம் இல்லையா என்ன?” என்றபடி புருவம் உயர்த்தினான்.
“அப்போ உன்னை பிடிக்காதே!” என்றாள் தலை சரித்து.
அவனும் லேசாக தலை சரித்து, “அப்போ இப்போ பிடிச்சிருக்குதா?”
“நேத்து அப்படி சொன்னதா தான் நியாபகம்”
“ஏன் திரும்ப சொல்ல மாட்டியா?”
“பிடித்தம் காதலா மாறினா சொல்றேன்”
அவன் அவளை ஆழ்ந்து நோக்க, அவனது பார்வையில் தடுமாறும் மனதை அடக்கியபடி, “ஆபீஸ் கிளம்புற ஐடியா இல்லையா?”
“இல்லை னு சொன்னா என் கூடவே இருப்பியா?”
கண்களை விரித்து நோக்கியவள், “இது தான் காதல் பிதற்றல்லா! நான் கிளம்புறேன்” என்றாள். பின் அவன் எட்டி பிடிக்கும் முன் அறையை விட்டு வெளியேறி இருந்தாள்.
அவனும் மென்னகையுடன் கீழே சென்றான். இருவரும் கலைவாணியிடம் கூறிவிட்டு கிளம்பினர். இருவரின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை கண்டு அவரும் மகிழ்ச்சியுடன் தன் அறைக்கு சென்றார்.
தொடர்ந்து வந்த நாட்கள் தொழில் மற்றும் சொந்த வாழ்வில் புகழ்வேந்தனுக்கு ஏறுமுகம் தான்.
நாளுக்கு நாள் மனதளவில் மித்ராணியை நெருங்கிக் கொண்டிருந்தவன் கிருபாகரனை செல்லாக் காசாக மாற்றிக் கொண்டிருந்தான்.
———————————————————————————————————————————————
கிருபாகரன் சொன்னது போல் அடுத்த நாளில் இருந்து அலுவலகம் செல்லத் தொடங்கியிருந்த மனோஜ் முதலில் வேலையில் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் திணறினான். பிறகு ஒருவாறு தன்னை தேற்றிக் கொண்டு வேலையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தியவன் புகழ்வேந்தனை சமாளிக்க முடியாமல் திணறினான்.
இரண்டு நாட்கள் கழித்து பிரசாத் வீட்டிற்கு வந்த போது நிலைமை கை மீறத் தொடங்கி இருந்தது.
[பிரசாத் அவனது நண்பன்(அன்று மனோஜுடன் மித்ராணியை பார்த்த போது இவனுடன் இருந்தவன்) விருந்தினர் வீட்டில் தான் இருந்தான்]
அடுத்த கட்டத் தாக்குதலாக புகழ்வேந்தன் ‘தீம் பார்க்’-கை மூடச் செய்திருந்தான். போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை என்றும் தண்ணீர் விளையாட்டுகளில் உபயோகப்படுத்தும் தண்ணீர் சுத்தமாக இல்லை என்றும் கூறி ‘தீம் பார்க்’-கை மூடச் செய்திருந்தான்.
வருமான வரி துறையினர் கிருபாகரனின் அனைத்து இடங்களிலும் திடீர் சோதனையை நிகழ்த்தினர். தங்க நகைக் கடையில் கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள தங்க நகைகளும் வைரங்களும் பறிமுதல் செய்யப்பட, மற்ற இடங்களிலும் பணமும் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இறுதியில் சொத்து குவிப்பு, கருப்பு பணம் வழக்குகள் என்று பல விசாரணைகளுக்காக கிருபாகரன் கைதி செய்யப்பட்டார்..
பிரசாத்தும் மனோஜும் போராடி விசாரணையில் இருந்து கிருபாகரனை மீட்டு எடுத்தனர்.
வீட்டிற்கு வந்த கிருபாகரன், “என்னை வெளியே கொண்டு வர இத்தனை நாளா?” என்று கத்தினார்.
பிரசாத் கோபத்துடன், “ஏன் சொல்ல மாட்டீங்க! செய்தது, செய்றது எல்லாம் பித்தலாட்டம்.. நீங்க சொகுசா உள்ள தானே இருந்தீங்க.. இங்கே திணறியது நாங்க தானே!
உங்களை வெளியே கொண்டு வர செலவு பண்ண வேண்டாமா? அதுக்கு ரெடி கேஷ் வேணாமா? லாசை சரி செய்யறதா? பாதி பணம் கட்டாததால் ரா(raw) மெட்டிரியல் வராம ஆட்டோமொபைல் ப்ரொடக்சன் ஸ்டாப் ஆகி நிற்கிறதைக் கவனிக்கிறதா? இழுத்து மூடிய தீம் பார்க்கை திறக்கிற வேலையைப் பார்க்கிறதா? ஸ்டீல் லோடும் காட்டன் சப்ளையும் போகாம கஸ்டமர் பணத்தை திருப்பி கேட்கிறது ஒரு பக்கம், காம்பென்சேஷன் கேட்கிறவங்க இன்னொரு பக்கம்.. இதுல ஐ.டி ரைடு வேற.. அந்த புகழ் குடும்பத்துக்கு நீங்க செய்த கொடுமைக்கு இப்போ அவன் வெச்சு செய்றான்.. கொஞ்சம் கூட நிமிரவே முடியாத அளவுக்கு குத்துறான்..”
கிருபாகரன் பார்த்த பார்வையில் பிரசாத், “என்ன பார்க்கிறீங்க! டிடெக்டிவ் வச்சு அவனோட பூர்விகத்தை விசாரிச்சா உங்க வண்டவாளம் வெளியே வருது..” என்றவன் நக்கலான பார்வையுடனும் குரலுடனும், “நல்ல வேளை! கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல் எங்கே அந்த டிடெக்டிவ் அவனை என்னோட அண்ணன் னு சொல்லிடுவானோ னு நினைத்தேன்.. உங்களிடம் இருக்கும் ஒரே ஒரு நல்ல விஷயம் உங்க வாழ்க்கையில் அம்மாவை தவிர வேறு பெண் இல்லை”
கிருபாகரன் கோபத்துடன் அடிக்க கையை ஓங்க, மனோஜ், “பிரசாத் அதிகமா பேசாத” என்றான்.
கிருபாகரனின் கையை பிடித்து தடுத்த பிரசாத் மனோஜை ‘பார் டா! பிள்ளபூச்சிக்கு வாய் வருது!’ என்பது போல் அலட்சியமாக பார்க்க மட்டுமே செய்தான் ஏனெனில் அவன் மனோஜுடன் பேசுவதில்லை.
பிரசாத் கிருபாகரனை பார்த்து, “உண்மையை சொன்னா கோபம் வருதாக்கும்! உங்களுக்கெல்லாம் கோபப் படுற தகுதியே இல்லை.. யாருக்காவது உண்மையா இருக்கிறீங்களா? காதலுக்காக னு கடத்தி கல்யாணம் செய்த அம்மாவை சரியா நடத்தாததால் அவங்களுக்கும் உண்மையா இல்லை.. உங்க மேல் கண்மூடித் தனமா பாசம் வைத்த உங்க தங்கைக்கும் உண்மையா இல்லை.. மித்ரா சொத்து கிடைக்க உங்க பேச்சை மீறாத மனோஜ் தான் அவள் கணவனா வரது சரி னு என் காதலை அழித்து எனக்கும் நீங்க உண்மையா இல்லை.. உங்களை காப்பாத்திக்க மித்ராவை தாரைவாத்து கொடுத்து மனோஜுக்கும் நீங்க உண்மையா இல்லை.. தொழிலில் என்னைக்கும் உண்மையா நடந்துகிட்டது இல்லை.. ஆக, யாருக்கும் நீங்க உண்மையா இல்லை.. நீங்க எப்படியோ! ஒரு மகனா நான் சரியா தான் இருக்கிறேன் அதான் உங்களை வெளியே கொண்டு வந்தேன்.. இப்போ இந்த சொத்துக்களை காப்பாத்த போராடிட்டு இருக்கிறேன்”
கிருபாகரன், “யோக்கியன் மாதிரி பேசாத.. நீயும் நான் செய்ததைத் தானே செய்த! அதுவும் சொந்த அண்ணனை……………”
“நிச்சயம் நான் உங்களை மாதிரி இல்லை.. மித்ரா மனோஜை விரும்பவே இல்லை……..”
“ஓ! ஒருவேளை அவ மனோஜை விரும்பி இருந்தா தொரை அப்படியே அமைதியா இருந்திருப்பீங்களாக்கும்!”
“இல்லை தான்.. என் காதலுக்காக போராடி இருப்பேன் தான்.. மித்ராவை கல்யாணம் செய்து இருப்பேன் தான்.. ஆனா உங்களை மாதிரி மனோஜை அவமானப்படுத்தி இல்லை.. அண்ட் முக்கியமான வித்தியாசம்.. உங்களை போல் இல்லாம மித்ரா மனசு மாறக் காத்திருந்து என்னோட அன்பை புரியவச்சு சந்தோசமா வாழ்ந்து இருப்பேன்.. இனி இதை பத்தி பேச விரும்பலை ஏன்னா இப்போ அவ இன்னொருத்தன் மனைவி..”
“என் வாழ்க்கையை உனக்கு விளக்க எந்த அவசியமும் எனக்கு இல்லை”
[the_ad id=”6605″]
“விளக்கம் தேவையே இல்லை.. அதான் தினமும் கண்கூட பார்க்கிறேனே! நீங்க உண்மையிலேயே உங்க காதலுக்காக தான் அம்மாவை கல்யாணம் செய்து இருந்தால், அம்மா மனசுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பீங்க.. காதலை விட அந்த லக்ஷ்மணனை ஜெய்க்கனும்கிற வெறி தான் அதிகமா இருந்து இருக்குது.. அதான் இன்னைய வரை நீங்க அம்மாவை சரியா நடத்துறது இல்லை”
கிருபாகரன் ஏதோ சொல்ல வர, மனோஜ் எரிச்சலுடன், “நீங்க ரெண்டு பேரும் இப்படியே அடிச்சுக்கிட்டா.. அவனுக்கு இன்னும் வசதியா இருக்கும்”
கிருபாகரன், “அவன் கதையை முடிக்காம என்னத்த பண்ணிட்டு இருந்தீங்க?”
பிரசாத் முறைக்க,
“ஒருத்தனை காலி பண்ண துப்பில்லை இதில் முறைப்பு” என்ற கிருபாகரன் மனோஜை பார்த்து, “இவனை விடு.. நீ என்ன பண்ணிட்டு இருந்த?”
“நம்மளோடதை சரி பண்ணவே……………..”
“எதுக்கு ரெண்டு பேர் இருக்குறீங்க? தெண்டத்துக்கா? ஒருத்தன் நம்மளோடதை பார்த்தா இன்னொருத்தன் அவனை கவனிக்க வேண்டியது தானே!”
பிரசாத், “அப்போ உங்களை உள்ளேயே விட்டிருக்கணும் னு சொல்றீங்க”
அவன் நடுவில் பேசியதை கண்டுக்கொள்ளாத கிருபாகரன் மனோஜிடம், “அவனோட ஒரு பிஸ்னெஸ்சை கூடவா கொலாப்ஸ் பண்ண முடியலை?”
பிரசாத் நக்கலாக, “அவனை என்ன உங்களை மாதிரி னு நினைச்சீங்களா? எல்லாம் ப்ராப்பரா பண்றான்”
மனோஜ், “நீ ஏன் டா அவனுக்கே சப்போர்ட் பண்ற?” என்று கோபத்துடனும் எரிச்சலுடனும் வினவ,
பிரசாத் சுவற்றை பார்த்தபடி, “எதிரியோட பலத்தை முழுமையா தெரிந்தால் தான் அவனை சமாளிக்க முடியும்” என்றான்.
கிருபாகரன் பிரசாத்தை பார்த்து, “நீயெல்லாம் என்ன பிஸ்னெஸ் மேன்? ஒரு பிஸ்னெஸ் மேன் நினைத்தால் ஒழுங்கா இல்லாதை ஒழுங்கா இருக்கிறதாவும், இருக்கிறதை இல்லாததாவும் காட்ட முடியும்”
மனோஜ், “இல்லை பா, அவனை நெருங்கவே முடியலை”
“நெருங்க முடியலையா இல்லை நெருங்க மனமில்லையா உங்க ரெண்டு பேருக்கும்? உங்களுக்கு வேண்டியவ அங்க இருக்காளே”
மனோஜ், “அப்படியெல்லாம் இல்லை பா” என்று கூற,
பிரசாத், “உங்களைத் திருத்த முடியாது” என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறினான்.
அடுத்து வந்த நாட்கள் மூவரும் என்ன போராடியும் கொஞ்சம் கூட அவர்களால் தொழிலை சீர் செய்ய முடியவில்லை. நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் சொத்துக்களை விற்கும் நிலைக்குச் சென்றனர்.
கிருபாகரன் தனது இயலாமையை கோபமாக மகன்கள் மீது காட்ட, மனோஜ் அமைதியாக இருந்தாலும் பிரசாத் சரியாகத் திருப்பி கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறான்.
இதயம் இணைய காத்திருப்போம்♥ ♥ ♥ ♥ ♥ ♥