அத்தியாயம் 29:
தம்பி தங்கைக்குத் தாயவளாய்
தரணியில் சிறக்க
அவரைச் சேய்களதுவாய் கண்ணின் இமை போலக் காத்திடுவாள்
இருவர் தமக்கு இன்முகமாய் திருமணம் தந்தும் நல் வரவாய் கருணையின் வடிவாய்
நடை பயிலும்
தியாகத்தின் சுடராய் எழுந்தருளும்
அன்புத் தமக்கை
ஆழிய நலமும்
சூடிய வளமும்
சுந்தரமாய் வாழ்க வாழ்க ்்்
(கவியருவி)
*****//////******//////*******//////******/////****//
மல்லி மற்றும் சிறியவர்களுடன் காங்கேயம் சென்ற உமா வெற்றியின் வரவுக்காகபிரபல நகைக்கடை *******முன்பு காத்திருந்தாள்.
மல்லி, “எதுக்கு உமா எங்களை இங்க கூட்டிக்கிட்டு வந்த? வந்தது தான் வந்தோம் ஏன் வெளியே நிக்கவைச்சியிருக்க?”.
அதற்கு உமா, “உங்க கல்யாணத்திற்கு நகை எடுக்க வந்திருக்கோம் மல்லி; அது வந்து நகையை வாங்க வெற்றி வரசொன்னேன் அதன் இங்க இருக்கோம், அவர் வந்ததும் உள்ள போலாம் டீ, கொஞ்ச நேரத்தில் வந்திடுவார்”.
அம்மு, “இருக்க நகையைப் போதுமே க்கா; எதுக்குத் தேவையில்லாத செலவு”.
உமா, “நம்மகிட்ட இருக்க நகை பத்தாதுனு தோனுச்சி அதனால் தான் ஒரு பதினைந்து பவுன் வாங்கனு டீ” என்றவளிடம்…
கண்ணன், “ஏன் க்கா திடீரென இந்த முடிவு எடுத்திருக்க? ஏதாவது பிரச்சனையா க்கா?” எனப் பெரியமனிதன் போல் கேட்டவனிடம்…
உமா புன்னகையுடனே, “அந்த மாதிரியெல்லாம் இல்லடா கண்ணா, அவங்க ரொம்பப் பெரிய குடும்பம், அவங்களவுக்கு நம்மால் சீர் செய்ய முடியாது ஆனா அவங்க மரியாதை குறையாதளவுக்கு நாம செஞ்சாதான் கண்ணா சபையில் அவங்களுக்கும் மரியாதை நம்மளுக்கும் கெளரவம்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் யாரும் மல்லி மற்றும் அம்முவை காட்டி இவங்களைப் பார்த்து ஒன்னுமில்லாம வந்தவங்கனு சொல்லிடகூடாது தான் இந்த ஏற்பாடு கண்ணா”.
இதெல்லாம் சரிதான் உமா, “ஆனால் எதுக்கு டீ ரெண்டு பேருக்கும் நகை எடுக்கனும்? அம்முவுக்கு மட்டும் எடுத்தா போதாதா டீ?”…
“நிச்சயம் போதாது மல்லி, நீங்கள் ரெண்டு பேரும் ஒரே வீட்டுக்கு மருமகளாகப் போகபோறீங்க, எந்த ஒரு நிலையிலும் பணத்தாலோ நகையாலோ உங்க ரெண்டு பேருக்கும் நடுவில் விரிசல் வரக்கூடாதுனு தான் இந்த ஏற்பாடு, அதுமட்டுமல்ல உங்களால் அந்தக் குடும்பத்தில் பிரிவுங்கிறது வரவே கூடாது அப்படி ஒன்றும் நடந்தா அது என்னுடைய வளர்ப்பினாலும் சுந்தரம் அப்பா வளர்ப்பினாலும் வந்த தவறு தான் அர்த்தம் மல்லி”.
“நீ என் தோழி மல்லி… அம்மு என் தங்கச்சி நீங்க ரெண்டு பேரும் அப்பா, அம்மா பேரை காப்பாத்துவீங்கனு நம்பிக்கையில்லாம இந்த ஏற்பாட்டை நான் பண்ணவில்லை… எங்க நம்பிக்கையை நீங்க உடைக்கிற மாதிரியான சூழ்நிலை உருவாகாம தடுக்கத்தான் இந்த ஏற்பாடு”.
கண்ணன், “அதெல்லாம் சரிதான் அக்கா; இப்ப எவ்வளவு நகை வாங்கனு? பணத்திற்கு என்ன பண்ணின க்கா?”.
உமா, “மல்லிக்கு பத்து பவுனும் அம்முவுக்கு ஐந்து பவுனும் வாங்கனும், அப்புறம் உனக்கும் குட்டிக்கும் சேர்த்து ரெண்டு பவுனும் வாங்கனும் கண்ணா”.
குட்டி, “அப்ப மொத்தமா பதினேழு பவுன் வாங்கனுமா க்கா? எனக்கு டாலர் வச்ச சைன் வேணும் க்கா” எனக்கூறியவனிடம்…
உமா, “அம்மு மற்றும் மல்லியைக்காட்டி முதலில் இவங்க ரெண்டு பேருக்கும் வாங்கி முடித்துவிட்டு உனக்கு வாங்கலாம், சரியா குட்டி?”.
“சரிங்க அக்கா!”.
“இவ்வளவு நகை வாங்கனும்னா எப்படியும் ஏழு இல்ல எட்டு லட்சம் ஆகுமே க்கா, இவ்வளவு பணத்திற்கு நாம எங்கக்கா போறது? யாருகிட்ட போய் வாங்க முடியும்? முதலில் நம்மளை நம்பி இவ்வளவு பணத்தை யார் தருவாக்கா?” என்ற அம்முவிடம் உமா, “ரெண்டு நாளுக்கு முன்ன தான் நித்தியன் அண்ணாக்கிட்ட வாங்கினேன், அண்ணியையும் குட்டிபையனையும் கூட்டிகிட்டு அண்ணா நிச்சியத்திற்கு வந்திடுவாங்க”.
“இனி பணத்தைப் பற்றிக் கவலைபடாம உங்களுக்கு வேணுங்கிறதை வாங்கிக்கோங்க, புரியுதா?” என்றவளிடம்…
அம்மு, “புரியுது க்கா… நல்லா புரியுது”.
அவர்களின் பேச்சை கலைக்கும் விதமாகக் குட்டி, “அக்கா அங்க பாரு வெற்றி மாமா வந்துட்டாங்க”எனக்கூறி அனைவரின் கவனத்தையும் வெற்றியை நோக்கி திசைத்திருப்பினான்.
வேகவேகமாக அவர்களின் அருகே வந்த வெற்றி, “சாரி உமா… சாரி பசங்களா… ரொம்ப நேரம் காக்கவைத்துவிட்டேனா? திடீரெனப் புது ஆடர் கொடுக்க வந்துட்டாங்க, அதை முடித்துவிட்டு வர இவ்வளவு நேரமாகிடுச்சி”.
உமா, “பரவாயில்லை வாங்க, நாங்களும் இப்பத்தான் வந்தோம் வெற்றி அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை”.
“சரி வா உமா போலாம், வரும் போதே கடை முதலாளிகிட்ட சொல்லீட்டு தான் வந்தேன், புதுபுது கலெக்சன் எடுத்துவச்சியிருப்பாங்க நிதானமாக உங்களுக்குப் பிடிச்சதை எடுங்க மதத்தை நான் பாத்துக்கிறேன் உமா” என்றவனிடம்…
உமா,”சரிங்க வெற்றி… மாதிரி நகை பாரத்து ஆடர்கொடுத்துச் செஞ்சிக்கலாம், ரெடிமேட் வேண்டா… அது அவ்வளவு தரமானதா இருக்குமாறு தெரியவில்லை வெற்றி”.
“அதுவும் சரிதான் உமா, நீ சொன்ன மாதிரியே பண்ணீடலாம் எனக்கூறியவன் அனைவரையும் உள்ளே அழைத்துச்சென்று தேவையான உதவிகளைச் செய்ததுமட்டும்லாமல் நகைசெய்ய ஆடர் கொடுத்துவிட்டு அனைவரையும் ஊருக்கு அழைத்துவந்தான். வரும் வழியில் அவர்களை நல்ல உணவகத்திற்கு அழைத்துச்சொன்று சாப்பிடவைத்து, குட்டிக்கு பிடித்த பால்கோவாவும் மற்றவர்களுக்கு ஜிலேபி, பாதுசா மற்றும் காஜிகட்லியும் உமா மறுக்கமறுக்க வாங்கிக்கொடுத்து அழைத்துவந்தான்”.
“வரும் வழியில் எல்லாம் குட்டி பார்த்தையெல்லாம் மாமா அது என்ன? இது என்ன மாமா? அது ஏன் அப்படி இருக்கு? இது ஏன் அப்படி இருக்கு? இவங்க ஏன் அதைச் செய்றாங்க? எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டவனுக்கு நிதானமா பதில் கூறிக்கொண்டே வந்தான் வெற்றி”.
மற்றவர்கள் மூவரும் உண்ட கிறக்கத்தில் தூங்கிவிட்டனர்.
உமாவோ வைத்தக்கண் வாங்காமல் அவர்கள் இருவரையும் ரசனையாகப் பார்த்துக்கொண்டே வந்தாள். அவளின் ரசனையாகப் பார்வையைக் கண்ணாடிவழியே பார்த்த வெற்றி குறிப்பாகக் கண்ணடித்துவிட்டு ஒன்று அறியாப்பிள்ளையைப்போல் குட்டியின் கேள்விக்குப் பதிலளித்தான். அவனின் பார்வையில் உண்டான வெப்பத்தை மறைக்கச் சிறமப்பட்டவள் வெளியே வேடிக்கை பார்ப்பதைப்போல் திரும்பிக்கொண்டாள்.
உமாவின் வெக்கத்தைக் கண்டவன் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு சமத்துபிள்ளையைப் போல் ஊர் வரும்வரை குட்டியுடன் உறையாடிக்கொண்டே வந்தான் வெற்றி.
மீனுவின் திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதமே இருக்க அதன் பின் வந்த ஒவ்வொரு நாளும் பண்ணையாரின் வீடானது பத்திரிகைகொடுப்பது, மண்டபம் புக்செய்வது, சமையலுக்கு ஆட்கள் ஏற்பாடு செய்வது, பூ அலங்காரம் செய்ய ஏற்பாடு செய்வது, பண்ணடபாத்திரங்கள் வாங்குவது என வீட்டினர் பரந்துகொண்டிருந்தனர், நாட்களும் ரக்கைகட்டிக்கொண்டு பறந்தது.
வேலையாட்கள் அனைவருக்கும்ம் வேலையானது ஓயாமல் இருந்துகொண்டு இருந்தது. உமாவும் மல்லியும் வேலையை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தனர்.
************////////**********//////******//////****
அலுவலகவிஷயமாக லண்டன் சென்ற கார்த்திக் தவிர்க்க முடியாத காரணங்களால் குறிப்பிட்ட நேரத்திற்கு ஊருக்கு வரமுடியாமல் போய்விட்டது.
அவன் இல்லாமலேயே அவனின் அன்னை, பாட்டி, தங்கை மற்றும் தந்தை இவர்களே தாழி செய்யப் பொன் கொடுத்துவிட்டு, மீனுவிற்குத் திருமணப்புடவையை எடுக்க வீடியோ காலில் வழியாகப் புடவையைத் தேர்வு செய்தான் கார்த்திக்… அந்தப் புடவை அவ்வளவு அழகாக இருந்தது, மீனுவின் நிறத்திற்கு மிகவும் எடுப்பாக இருந்தது.
இப்படியே இரண்டு பக்க ஆட்களும் சேர்ந்து ஒருவரிடமும் ஆலோசனை செய்து அத்தனை வேலைகளும் செய்தனர்.
இப்படியாக நாட்களும் சென்று திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தான் கார்த்திக் லண்டனில் இருந்து இன்று மாலையில் ஊர்வந்து சேர்ந்தான்.
********//////////************////////*******////////
திருமணத்திற்கு பத்து நாட்களே இரைந்த நிலையில் தான் நித்தியன் மனைவி மற்றும் மகனுடன் அமெரிக்காவில் இருந்து கிளம்பி தாயகம் வந்துகொண்டிருக்கிறான்.
இன்று காலையில் அமெரிக்காவில் இருந்து கிளம்பிய நித்தியன் நேரடியாக அல்லியூருக்குச் செல்லாமல் மூணாருக்கு சென்று அங்கு இரண்டு நாட்கள் தங்கிவிட்டு அங்கிருந்து மதனுடன் அல்லியூருக்கு வருவதாகத் திட்டமிட்டிருந்தனர்.
இந்தத் திட்டம் முழுக்கமுழுக்க வெற்றியுடையதோ, ஆம் வெற்றியுடையதோ தான்.
மதன் எப்பொழுது உமாவின் கடந்தகாலத்தைப் பற்றிக் கூறினானோ அதற்கு அடுத்த நாளே மதன் உதவியுடன் நித்தியனிடம் உமாவை விரும்புவதைப் பற்றிக் கூறிவிட்டான்.
அதுமட்டுமல்லாது ஆண்கள் மூவரும் இணைந்து ஆனந்தி மற்றும் ஜெயந்திக்குகூடத் தெரியாமல் மிகப்பெரிய விஷயத்தை நடத்திமுடிக்க மிகத்தீவிரமாகத் திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.
தாங்கள் செய்ய இருக்கும் செயலால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் வரகூடாது என்பதில் மிகதீவிரமாக இருந்தனர். அந்தத் தீவிரத்துடனே செயல்படுத்த முதல் வேலையாக மகாலட்சுமியை அல்லியூருக்கு வரவைப்பது தான்.
உமாவின் முன்னே மகாலட்சுமியை நிறுத்தினால் ஏதாவது ஏடாகூடமாகப் பிரச்சனை வந்துவிடுமே என பயந்தே நித்தியன் அவ்வளவு வேலைகளையும் விரைவாக முடித்து வந்துவிட்டான்.
வெற்றி அழித்த உறியினால் தான் அவனின் திட்டத்திற்குச் சம்மதித்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறான்… இனி என்ன நடக்குமா என்ற பயம் சிறிது இருந்தாலும் எதுவந்தாலும் சமாளித்துவிடலாம் என்ற எண்ணம் முயன்று வளர்த்துக்கொண்டு விமானம் ஏறிவிட்டான் நித்தியன்.
இனி வரும் அனைத்து பொழுதுகளு் கண்முழிப்பதும் இந்திய மண்ணில் தான், சுதந்திர காற்றைச் சுகமாகச் சுவாசப்பதும் இந்திய மண்ணில் தான் என்ற நிம்மதியினாலோ என்னமோ பயத்தை ஒதுக்கிவிட்டு நிம்மதியா நித்திரையில் ஆழ்ந்துவிட்டான் நித்தியன்.
******/////******/////*****////*****////////*******/////
அன்று கேரளாவிற்குச் சென்ற கவிதாவை வைத்திய சாலையின் உள்ளே கூட நுளையவிடாமல் தடுத்த மார்க்கின் ஆட்களில் ஒருவன், “இங்க பாருங்க ம்மா, இப்ப தான் அவருக்கு வைத்தியம் பன்ன கூட்டிகிட்டு போயிருக்காங்க வர எப்படியும் நாளைக்குக் காலையில் இல்லைனா மதியம் ஆகிவிடும் நீங்க ஒரு ரெண்டு நாள்கழித்துவாங்க” எனக்கூறியவனிடம்…
கவிதா, “ஒரு முக்கியமான விஷயம் பேசனும்ங்க, பத்துநிமிடம் டைம் கொடுத்தா போதும் பார்த்துவிட்டு உடனே போய்டுவேன் தம்பி”.
“சென்னா புரிஞ்சிக்கோங்க ம்மா, அவருக்குச் செய்யற வைத்தியம் ரொம்ப ரொம்ப வலி அதிகமா இருக்கும், இப்பயே நீங்கள் உள்ள போய் அவரைப் பார்த்தா கூட அவரிடம் பேசமுடியாது ம்மா, நீங்க போய்ட்டு ரெண்டு நாள் கழித்து வாங்க எனக்கூறியவரை யாரோ அழைக்க இவர்களின் பதிலை எதிர்பார்க்காமல் சென்றுவிட்டார்”.
கவிதாவே வந்த கோபத்தையும் அடக்கிகொண்டு நம்பிக்கு தெரிந்த ஆட்கள் மூலமா ஏற்பாடு செய்திருந்த ஒரு எஸ்டேட்டில் தங்கிக்கொண்டார்.
******//////*********////////*******/////*****
கேரளாவிற்குச் சென்ற மகாலட்சுமியும் பரமன் இருந்த வைதியசாலைக்குச் சென்றும் முதல் ஒருவாரம் பரமனை பார்த்தபாடில்லாததால் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர விடுதியை காலிசெய்துவிட்டு மகாலட்சுமியின் தோழி ஒருவரின் எஸ்டேட்டில் தங்கிக்கொண்டு ராமனுடன் சேர்ந்து பரமனை சென்று சந்திக்க முயன்றுகொண்டிருந்தனர்.
என்னதான் முயன்றும் அவர்களால் பரமனை காணமுடியவில்லை… அதற்கு மாறாகத் தங்கியிருந்த இடத்தில் கவிதாவின் நட்பு.
“ஆம் கவிதாவின் நட்புதான்!”…
கவிதா தங்கியிருந்ததும் மகாலட்சுமியின் தோழியின் எஸ்டேட் தான்.
ஒரு பத்து நாட்கள் சென்ற நிலையில் மகாலட்சுமி இன்றாவது பரமனை சந்தித்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் சென்ற வைத்தியசாலையை நோக்கி பணித்தார்.
வழக்கத்திற்கு மாறாக மகாலட்சுமியையும் ராமனையும் உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.
அப்பொழுது ராமன் மகாலட்சுமியிடம் , “என்னக்கா இது அதிசயம் இருக்கு? என்னைக்கும் வாசலோடையே வெளியே அனுப்பிவிட்ருவாங்க இன்னைக்கு என்னனா உள்ளே போகச் சொல்லறானுங்க, ஏதாவது விஷயம் இருக்குமா?” என்றவனிடம்…
மகாலட்சுமி, “எனக்கு அந்தச் சந்தேகம் தான் ராமா, இவனுங்களைப் பார்த்தா யாரோ சொல்லி கொடுத்து செய்யறமாதிரியோ இருக்குடா; எதுக்கும் கொஞ்சம் உசாராவே இரு எனக் கூறியவர் முன்னே சென்றுவிட்டார்”.
ராமனை பயத்தில் போலாம் வேண்டாமா என யோசனை செய்து,’என்ன நடந்தாலும் மகாலட்சுமி பார்த்துக்குவாங்க என்ற தைரியத்தில் உள்ளே சென்றுவிட்டார்’.
உள்ளே சென்றவர்கள் கண்ட காட்சியிலும் பரமனின் அலரல் சத்தத்திலும் பயந்து போய்விட்டனர்.
அந்தப் பயத்துடனே பரமனை பார்க்காமல் வேர்க்கவிறுவிறுக்க விட்டால்போதும் என்பதைப் போல் தப்பித்து ஓடாத குறையாக வெளியே வந்துவிட்டனர்.
திரும்பத்திரும்ப இவர்கள் இருவரும் வருவதாலும் மகாலட்சுமிக்குச் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் உள்ளே அனுமதித்தார், அதுவும் சிகிச்சை முறையைப் பார்த்ததும் இவர்கள் இந்தப் பயத்திலேயே இங்கு வரமாட்டார்கள் எனத் திட்டமிட்டு அழைத்துச்சென்றனர்.
மார்க்கின் ஆட்கள் நினைத்ததைப் போலவே இவர்களும் பயத்தில் வெளியே வந்துவிட்டனர்.
அப்பொழுது அங்கு வந்த கவிதா இவர்களைப் பார்த்ததும், “என்ன இந்தப் பக்கம் வந்திருக்கீங்க மகாலட்சுமி? உங்க சொந்தக்காரங்க யாராவது இங்க இருக்காங்களா?”.
அதற்கு மகாலட்சுமி, “ஆமாம் கவிதா!”… “எனக்குத் தெரிஞ்ச பரமன்கிற ஒருவர் இப்பத்தான் சிகிச்சை செய்துவிட்டு இருக்காங்க, நீங்கள் இங்க என்ன பன்ன கவிதா? யாராவது வருவார்களா?”எனக் கேட்டவனிடம் கவிதா, “என் கணவருக்குத் தெரிந்த பரமன்கிறவரை பார்க்க வந்தேன், அவருக்குக் கால் ஒடிந்து சிகிச்சைக்காக இங்க வந்திருக்கிறார் என்றவர் திடீரென, நீங்கள் என்ன பெயர் சொன்னாங்க மகாலட்சுமி? பரமன்கிற பெயரைத்தான சொன்னீங்க?”.
“ஆமாம் கவிதா…!” “அவன் பேரும் பரமன் தான், ஊர் கூடப் பாண்டிச்சேரி… நீ பார்க்க வந்தவன் எந்த ஊரு கவிதா? அவனும் பாண்டிச்சேரி தான் மகாலட்சுமி, நீங்கள் அவனைப் பாரத்துவிட்டீங்களா? பத்து நாளா முயற்சி பண்றேன் அவனைப் பார்க்கவே முடியவில்லை”.
நாங்களும் இங்க வந்ததிலிருந்து முயற்சி பண்ணி இன்னைக்குத் தான் அவனைப் பார்த்தோம், ஆனால் அவன் பேசி நிலையில் அப்போ இல்ல, இங்க வச்சி எதையும் பேசவேண்டாம் வாங்க நம்ம அறைக்குப் போய் பேசிக்கலாம் எனக்கூறி கவிதாவையும் ராமனையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார் மகாலட்சுமி.
கவிதாவும் மகாலட்சுமியும் பேசியதை பார்ப்பின் ஆட்கள் கவனிக்கத் தவறிவிட்டனர், இப்போது பார்த்திருந்தால் பின்னாடி வரக்கூடிய பிரச்சனையைத் தடுத்திருக்களா, இவர்களின் வாழ்க்கையில் உமாவும் குட்டியும் பாதிக்கப்படாமலிருந்திருப்பார்கள், “விதி வழியது”.
தாங்கள் தங்கியிருந்த எஸ்டேட்க்கு சென்றவர்கள் தோட்டத்தில் அமர்ந்து பேசத்தொடங்கினர்.
“எது அவசரமா இங்க கூட்டிக்கிட்டு வந்தீங்க? அங்கேயே கூடப் பேசியிருக்கலாமே மகாலட்சுமி”… “பேசியிருக்கலாம் கவிதா, எனக்கு என்னமோ அந்த இடத்தில் நம்மை யாரோ கவனிக்கிற மாதிரியே இருந்தது அதனால் தான்”.
வெற்றி மகாலட்சுமியை கண்காணிக்க போட்ட ஆள்தான் இவர்களை பின்தொடர்ந்தான்.
“இப்ப சொல்லுங்க கவிதா, உங்களுக்கு எப்படிப் பரமனை தெரியும்? என்ன விஷயமா வந்திருக்கீங்க?”. “நான் வந்ததே என்னுடைய கணவனை ஜெயிலில் இருந்து வெளியே எடுக்கவும், என் கணவருடைய தங்கை வீட்டில் இருக்க லிங்கத்தை எடுக்கவும் தான்… அதற்கு இந்தப் பரமனுடைய உதவி தேவைபட்டது, இவனைப் பாரத்து விஷயத்தைக் கூறி உதவிகேட்களாம்னு வந்தேன் எனப் பாதி உண்மையை மறைத்துக் கூறினார் கவிதா”.
இதுக்கொதுக்குக் கவிதா அவனுடைய உதவி, நீங்களே கூடப் பார்த்துக்கலாம்.
“நானே பாத்துக்கலாம் தான் ராமன், ஆனா அந்த லிங்கத்தைத் திருட இவனை மாதிரி ஒரு திருடன் தான் சரியா வருவான்” என்ற கவிதா… “நீங்க ரெண்டு பேரும் எதுக்காக இங்க வந்தீங்க மகாலட்சுமி, எதாவது உதவி வேணும்னா கேளுங்க என்னால் முடிந்த செய்யறேன்”.
“நான் இவனைப் பார்க்க வந்ததே என்னுடைய கணவனுடைய தம்பி பொண்ணு ஐந்து வருடத்திற்கு முன்பு காணாம போய்டா, அவளை இவ ஐந்து வருசத்திற்கு முன்ன பார்த்திருக்கிறான், அவள் இருந்த வீட்டினரால்தான் இவன் ஜெயிலுக்குப் போயிருக்காங்க, அனேகமாக இவனுக்கு அவ இருக்க இடம் இப்ப தெரியும் நினைக்கிறேன்… அவ எங்கே இருக்கானு கேட்கலாமுனு தான் வந்தேன் கவிதா”.
கொஞ்சம் நேரம் யோசனை செய்த கவிதா, “அந்தப் பொண்ணு பேர் என்ன மகாலட்சுமி? போட்டோ இருந்தா காட்டுங்க?” என்றவரிடம்…
மகாலட்சுமி, “அவ பேர் உமா மகேஸ்வரி, போட்டோ போனில் இருக்கு இரு கான்பிக்கிறேன் எனக்கூறியவர் உமாவின் புகைபடத்தைக் கவிதாவிடம் காட்டினார்”.
அதைப் பார்த்த கவிதா அதிர்ச்சியில், “இவளா? இவ அல்லியூரில் இல்ல இருக்கா… இவளை உனக்கு எப்படித்தெரியும் கவிதா?”.
“இவளால் தான் என்னுடைய கணவர் இப்ப சிறையில் இருக்கிறார், இவ மட்டும் அனைக்கு அவர் பேசினது கேட்காத இருந்திருந்தா நம்பி சிறைக்குப் போயிருக்க மாட்டார், நானும் இப்படி ஊர்ஊரா திரியிர நிலை வந்திருக்காத மகாலட்சுமி”.
“இவளைத்தான நான் ஐந்து வருடமா தேடிகிட்டு இருக்கேன் கவிதா, இவ மட்டும் என் கையில பண்ணட்டும் அப்புறம் இருக்கு அவளுக்குச் சங்கதி”.
“நீங்க கவலையை விடுங்க மகாலட்சுமி, இவ இருக்க இடத்தை நான் உங்களுக்குச் சொல்லறேன், இன்னைக்குனு பார்த்து இந்த மழைவேற கொட்டுது, மழை நின்ன உடனே நாம கிளம்பவேண்டியது தான், அங்க போய் அவளுக்கு இருக்கு எனக் கூறி இருந்தவனின் சேர்ந்து மகாலட்சுமி மற்றும் ராமனும் சிரித்தனர்”.
இவர்களின் திட்டத்தை அறியாத உமாவோ, சகுந்தலா மற்றும் காயத்திரியுடன் சேர்ந்து தங்கை மற்றும் தோழியின் நித்தியத்திற்காக முறைப்படி வெற்றிலை பாக்கு வைத்துத் தனம், மாரிக்கா, கனகம், சாந்தி மற்றும் இன்னும் சிலரை அழைத்திக்கொண்டிருந்தாள்.
இப்பொழுதெல்லாம் மல்லி மற்றும் அம்முவை வேலைக்கு அழைத்துச்செல்வதில்லை, அவர்களுக்குத் துணையாக மயிலு பாட்டி, கண்ணன் அல்லது குட்டி என யாரையாவது ஒரு வரை துணைக்கு வைத்துவிட்டே வெளியே செல்வாள்.
எல்லாரையும் நிச்சியத்திற்கு அழைத்துவிட்டு வீட்டிற்கு வந்து உட்கார்ந்த உடனே நகைக்கடையிலிருந்து போன் வந்தது.
போனை எடுத்தவளிடம் கடை உரிமையாளர் மிகவும் மரியாதையாக, “நான் ****கடை முதலாளி பேசறேன் ம்மா, நீங்கள் உமா தானே? என்றவரிடம் உமா, ஆமாங்க சார்!. நான் உமா தான் பேசறேன். எம்மா உமா நகை ரெடியாகிடுச்சி, நாளைக்கு வந்தா வாங்கிக்கலாம் ம்மா”.
“சரிங்க சார்… நாளை மறுநாள் வந்து வாங்கிக்கிறேன்”.
“சரிங்க ம்மா… மீதி பணத்தையும் கொண்டு வந்துடு ம்மா எனகூடுதல் தகவலையும் கூறி போனை வைத்துவிட்டார். அதைக் கேட்ட உமாவோ சிறிப்புடனே போனை வைத்துவிட்டாள்”.
வெற்றிக்கு போன் செய்தவள் விஷயத்தைக்கூறி நாளை நகைகளை வாங்கிக்கொண்டு வர வருமாறு அழைத்தவள் சிறிது நேரம் பேசிவிட்டு போடு வைத்துவிட்டாள்… இப்படியே தன்னையும் அறியாமலேயே தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் வெற்றியையும் அருகில் நிறுத்திக்கொண்டாள் உமா.
*******///////******/////***////*****////*****///////****////
முதல் நாள் விமானம் ஏறிய நித்தியன் அடுத்த நாள் காலையில் இந்தியா வந்திறங்கினான் தன் குடும்பத்துடன். தூக்க கலக்கத்தில் தாங்கள் வந்திறங்கியது என்னிடம் என்று தெரியாமல் போனது.
விமானத்தைவிட்டு இறங்கியதும் ஒலிநாடாவில் ஊரின் பெயர் கேட்டதும் அவளால் நம்பவே முடியவில்லை ஆனந்தியால், ஒவ்வொரு இடத்தையும் பார்க்கும் போதும் அத்தனை மகிழ்ச்சியாக உணர்ந்தவள்.
சென்னை வந்திருந்திருந்து ஆனந்தியின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் மெய்மறந்து போனான் நித்தியன். அந்த மகிழ்ச்சியுடனே அடுத்தடுத்த வேலைகளை முடித்துவிட்டு வெளியே வந்தனர்.
அடுத்ததாக ஐந்து நட்சத்திர விடுதியில் தங்க முடிவு செய்த நித்தியன் மனைவியை அழைத்துக்கொண்டு விடுதிக்குச் சென்றான். விமான நிலையத்திலிருந்து விடுதிவரை உள்ள ஒவ்வொரு இடங்களையும் பார்த்து மகிழ்ந்தாள் ஆனந்தி, அந்த மகிழ்ச்சியுடனே அறைக்கு வந்தவர்கள் குளித்துக் காலை உணவை முடித்தார்கள், அதன்பின் சிறிது நேரம் உறங்கி எழுந்தனர்.
அன்று மாலையிலேயே அறையைக் காலி செய்துவிட்டு மதன் அனுப்பிவைத்திருந்த வாகனத்தில் மூணார் நோக்கி பயணமானான் நித்தியன்.
புதுச்சூழல், புதுப்புது இடங்களைப் பார்த்த ஆனந்தி மற்றும் நித்தியனும் முகத்தில் தானா முறுவல் வந்து ஒட்டிக்கொண்டது. மகிகுட்டியோ புதுச் சூழ்நிலையில் சிறிது நேரம் சிணுங்கியவன், போகப்போகக் குஷியாகிவிட்டான். வாகனம் செல்லசெல்ல நகருமிடங்களைக் கணகணச் சிணுங்கல் மறைந்து சிறிப்பு வந்து ஒட்டிக்கொண்டது. வாகனம் முழுவதும் மகிழ்ச்சியில் மழலை பேச்சும், சிரிப்பும் நிறைந்திருந்தது.
அதைப் பார்க்க பார்க்கப் பெற்றவர்களின் மனமும் நிறைந்து போயிருந்தது.
அன்று மாலையே மதனின் வீட்டிற்குச் சென்றுவிட்டனர் நித்தியன் தம்பதியினர்.
வந்தவர்களை ஆரவாரமாக வரவேற்றனர் மதன் தம்பதியினர். மதனைக் கண்ட அடுத்த நொடியே அவனிடம் தாவீவிட்டான் குறும்புக்கண்ணன்.
மதன், “வாடா, வாடா மருமகனே!”… “இந்த மாமன் பார்க்க வர இத்தனை நாளா? எனப் பேசப்பேச குட்டி பையனோ ஆசை மாமனைப் அடித்தும் அடித்தும் பாசத்தை வெளிப்படுத்தினான்”.
பள்ளியிருந்து வந்த வர்ஷாவை பார்த்ததும் மாமனைவிட்டுவிட்டு அவளிடம் தாவியவன் தூங்கும்வரை அவளைவிட்டு நகரவே இல்லை.
ஏற்கனவே அவர்களுக்கா ஒதுக்கிய அறைக்கு அனுப்பிவைத்த ஜெயந்தி, வேகவேகமாக இரவு உணவைச் செய்ய ஆரம்பித்தாள், விரைவாகக் குளித்துவந்த ஆனந்தியும் இனைந்ததால் விரைவாக இரவு உணவை முடித்துவிட்டனர், நித்தியன்-ஆனந்தியை அதிக நேரம் பேசி தொந்தரவு செய்யாமல் படுக்க அனுப்பிவைத்தாள் ஜெயந்தி.
இவர்கள் உறங்கச் சென்றதும் மதன் வெற்றிக்கு அழைத்து நித்தியன் வந்த விஷயத்தைக் கூறிவிட்டான், அத்தோடில்லாமல் அவர்களின் திட்டத்தைப் பற்றி மறுபடியும் ஒரு முறை பேசி தெளிவுபடுத்திக்கொண்டனர்.
அல்லியூரில் உமாவோ நிச்சியத்தில் நடக்கவிருக்கும் விபரீதங்கள் தெரியாமல் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தாள்.
நித்தியன் மூணாறு வந்த அடுத்த நாள் மாலையே மதன் அனைவரையும் அழைத்துக்கொண்டு அல்லியூர் நோக்கிச் சென்றவன், அங்குச் சென்றவர்கள் வெற்றியின் வீட்டில் தங்காமல் தர்மரின் இல்லத்தில் தங்கிக்கொண்டனர் வெற்றியின் திட்டப்படி.
அன்பு தொடரும்…