அத்தியாயம் 34:
“நீங்க சொல்லறது எல்லாம் சரிதான் அண்ணி… அண்ணனையும் உங்களையும் வழியனுப்ப நானும் விமானநிலையத்திற்கு வரனுமே அப்புறம் எப்படி இங்கிருந்து யார்கண்ணிலும் மாட்டாம வெளியே போறது?”.
“அதுக்கும் நான் ஒரு யோசனை வச்சிருக்கேன் உமா, நீ உடம்புக்கு முடியவில்லைனு படுத்துக்கோ நான் எதாவது சொல்லி அவங்களைக் கூட்டிக்கிட்டு போயிடறேன்” என்றவளிடம்…
ஆனால் “அந்தப் பொம்பளையும் அந்த ஆளும் வீட்டை வெளியே பூட்டிட்டு தான் அண்ணி உங்ககூட வருவாங்க, அப்படிப் பண்ணினா நான் எப்படி வெளியே போக முடியும் ?”.
“நான் உங்க அண்ணன்கிட்ட இருக்கச்சாவியையும் இப்பதான உன் பெட்டியில் வைச்சேன் நீ பார்க்கவில்லையா உமா?”.
“அதிர்ச்சியில் நான் பார்க்கவில்லை அண்ணி”.
“பரவாயில்லை விடு பெட்டியில் முதலில் இருக்கச் சின்னச் சிப்பில் இருக்கு உமா… அதோடு புதுப் போனையும் வச்சிருக்கேன், அதில் எங்க ரெண்டுபேர் நம்பர் மட்டும் தான் இருக்கும்.
நீ இங்கேயே உன்னுடைய போனை வைத்துவிட்டு போயிடுமா, பத்திரமா பாண்டிச்சேரி போனதும் எனக்குப் போன் பண்ணி விஷயத்தைச் சொல்லீடு நானும் உன் அண்ணனும் புது நம்பர் மாத்திடுவோம், அதுக்குப்பிறகு இவங்க யாராலும் நாம இருக்க இடத்தைக் கண்டுபிடிக்கவே முடியாது” எனக்கூறியவளின் கூற்றுபடியே உமா ஏதேதோ காரணம் சொல்லி விமானநிலையத்தில் சொல்லாமல் வீட்டிலேயே இருந்துகொண்டாள், அவர்கள் சென்றவுடனே கட்டிலுக்கு அடியில் இருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு கிளம்பியவள் பாதுகாப்பாக பெங்களூர் செல்லும் இரயிலில் ஏறிக்கொண்டவள் ஆனந்திக்கு தகவலையும் அளித்துவிட்டு போனை அனைத்துவிட்டாள் உமா.
மறுநாள் காலையில் பெங்களூரில் இறங்கியவள், அங்கு ஒரு மகளிர்விடுதியில் தங்கி குளித்துவிட்டு காலை உணவை அங்கேயே முடித்துவிட்டு கிளம்பியவள் இரயில்வே நிலையத்திற்குச் சென்றவள் பாண்டிச்சேரி செல்லும் இரயிலுக்காகக் காத்திருந்தாள் தாகத்திற்காகத் தண்ணீர் வாங்கியவர் வண்டிவந்ததும் முதல் ஆளாகச் சென்று அமர்ந்து கொண்டாள் உமா.
அன்று மாலையே பண்டிச்சேரி சென்றவள் ஆட்டோ பிடித்து ஏறியமர்ந்தவள் விடுதியின் முகவரியை தேட அது கிடைப்பேனா எனச் சண்டித்தனம் செய்யப் பாதியிலேயே இறங்கியவள் எங்கே செல்வதென்று யோசனையில் ஆழ்ந்தவளை காக்கவே வந்து சேர்ந்தார் மருதாயி.
கடைத்தெருவுக்கு வந்த மருதாயி தூரத்திலேயே உமாவை கண்டுவிடப் போகவழிதெரியாமல் தவித்தவளை தன்னுடன் வீட்டிற்கு அழைத்துவந்துவிட்டார்.
இப்படித்தான் பாட்டி உமா வாழ்க்கையில் போறாடிபோறாடி ஒருவழியா மருதாயிபாட்டியால் அந்தச் சின்னக் குருவிக்கூட்டில் நிம்மதியா இருந்தா, அந்தக் கடவுளுக்கு அதுவும் பொருக்களைப் போல, அதான் அந்தக் கூடும் கழஞ்சி இந்தச் சின்னப் பசங்களோட இந்த ஊருக்கு வந்தா. வந்த இடத்தில் பாட்டியும் இறந்து போய் பசங்களோட படாதபாடுபட்டு அவங்களை நல்லா படிக்கவச்சதோடில்லாமல் அம்முக்குக் கல்யாணம் பண்ணிக்கொடுக்கிற அளவுக்கு வந்திருக்கா பாட்டி… அவளை நினைத்தாள் எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. அவளைப் பெத்தவங்க மட்டும் இருந்திருந்தா இந்நேரம் எவ்வளவு சந்தோசபட்டிருப்பாங்க.
அன்னைக்கு ஏதோ ஒரு வேகத்தில் நான் எடுத்த வீடியோ இன்னைக்கு அவங்களைச் சிறையில் தள்ள உதவியா இருந்திருக்குனு நினைக்கும் போது கொஞ்சம் நிம்மதியா இருக்கு என்றவளை ஆதரவாக அனைத்துக்கொண்டான் நித்தியன்.
சாரதா, “அப்புறம் ஏம்மா நீங்க அவளைக் கூப்பிட்டுக்களை?” என்றதும் ஆனந்தி, “நாங்கள் அமெரிக்காப் போனதும் இவளை தொடர்பு கொண்டு அமெரிக்கா வர சொல்லி ஏற்பாடு பண்ண ஆரம்பித்துவிட்டோம் பாட்டி… ஆனால் உமாவுக்கு பாசமானக் குடும்பம் பிடித்துப் போனதால் என்னையும் அவரையும் சமாதானம் செய்து அங்கேயே இருந்துவிட்டா பாட்டி.
அதைவிட அந்தப் பொம்பளைகிட்ட எந்தப் பிரச்சினையும் பண்ணக்கூடாதுனும் அவளைப் பார்க்க நாங்க ரெண்டு பேரும் இந்தியா பக்கமே வரகூடாதுனு சத்தியம் வாங்கிகிட்டா”.
“அதுவுமில்லாமல் மாமாவையும் சின்னமாமா, சின்னத்தையும் கொன்னது இவங்கதானு நித்தியன்கிட்ட சொல்லக்கூடாது சொன்னா, மீறி சொன்னா அவ எங்ககிட்ட பேசக்கூட மாட்டேன்னு சொல்லி என்னை மிரட்டி வச்சிட்டா”…
“இப்பகூட வெற்றி அண்ணாவால் தான் இந்த விபத்தைப் பற்றி அவருகிட்ட என்னால் சொல்லமுடிந்தது பாட்டி என சோகமாகக் கூறினால் ஆனந்தி”.
அவளின் சோகமான முகத்தைப் பார்த்து தாங்காத உமா, “அவங்களால் உங்களுக்கும் அண்ணனுக்கும் எந்தப் பிரச்சினையும் வந்திரக்கூடாதுனு தான் அப்படிப் பண்ணினேன், இந்த விஷயத்தைக் கேட்டா அண்ணன் கண்டிப்பா சும்மா இருக்காது, நீங்களும் அவனைச் சமாளிக்க முடியாமல் கண்டிப்பாக இந்தியா வரவேண்டிய சூழ்நிலை வரும்… அப்படி வந்தா மகாலட்சுமியினால் உங்க ரெண்டு பேரு உயிருக்கே கூட ஆபத்து வர வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது அண்ணி, அந்த மாதிரி எதுவும் நடக்ககூடாதுனு தான் இந்தச் சத்தியமெல்லாம்”.
“அப்புறம் ஏண்டி ஐந்து வருடமா நீ இருக்க ஊர் பெயர் கூடச் சொல்லாம இருந்த?” என்றவளிடம்…
“அதுவா… நான் இருக்க ஊர் தெரிஞ்சா நீங்க அடுத்த நிமிடமே கிளம்பிடுவிங்கனு தான் சொல்லவில்லை அண்ணி”.
மதன், “எதுக்கு வாலு என்னைக் கூடத் தெரியாத மாதிரியே நல்லா நடுச்ச?”.
“அதுவா மது பாட்டில்… நான் தான் உங்க வாலுனு தெரிஞ்சா நீங்க உடனே அண்ணாகிட்ட சொல்லிடுவீங்கனு தான் நடிச்சேன், நான் சொன்ன மாதிரியே நீங்களும் அண்ணனோட வந்து நிக்கறீங்க எனக்கூறி சிரித்தவளை பார்த்து அனைவரும் புன்னகைத்தனர்”.
அதுவரை சிரித்துக்கொண்டிருந்த அம்மு மற்றும் கண்ணனும் உமாவின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டனர். எந்தச் சூழ்நிலையிலும் உமாவை மட்டும் இழக்க அவர்கள் விரும்பவில்லை என அந்தப் பிடிகூட அவர்களின் மனதையும் பாசத்தையும் தெளிவாக எடுத்துக்கூறியது அங்குள்ளவர்களுக்கு.
அதை உணர்ந்தவளும் அவர்களை இருக்கமாக அனைத்துக்கொண்டாள்.
ஆனந்தி அவளைப் பற்றிக் கூறகூற வேலம்மை அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.
மற்றவர்களோ ஆனந்தியின் பேச்சில் கவனமாக இருக்க யாரும் இவரின் மாற்றத்தை கவனிக்காமல் போய்விட்டனர், அதிர்ச்சி தாங்காமல் வேலம்மை ஆழ்ந்த மயக்கத்திற்குச் சென்றுவிட்டார்.
அவர் கீழே விழுந்த சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவர்கள் உடனடியாக வேலம்மையை மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் வெளியே வந்ததும் விசாரிக்க அவர்கூறிய செய்தியில் மற்றவர்கள் குழம்பிப்போய்விட்டனர். பின் அவரே வந்து விஷயத்தைக் கூறுவதற்காக அனைவரும் காத்திருந்தனர்.
அடுத்த நாள் காலையில் கண்விழித்த வேலம்மை முதலில் தேடியது உமாவைத்தான்.
உமா மருத்துவமணைக்கு வராததால் அங்குள்ளவர்களிடம் உமாவை உடனே பார்த்தாகவேண்டும் என அடம்பிடித்து அல்லியூர் வந்துசேர்ந்தார்.
வீட்டிற்கு வந்தவுடனே உமாவை தேடி சென்றவர் அவளின் கைகளைபிடித்துக் கொண்டு “என்னைய மன்னிச்சிகோ உமா, நான் மட்டும் கெளரவம் அதுஇதுனு பார்க்காம இருந்திருந்தா நான் எம்பொண்ணை இழந்திருக்கவேண்டாம், நீயும் இப்படிக் கஷ்டப்பட்டிருக்க வேண்டிய நிலை வந்திருக்காது, இத்தனை பிரச்சனைக்கும் முதல் காரணம் நான் தான் எனக்கூறி அழுதவரை அனைவரும் குழப்பமாகப் பார்த்தனர்”.
அவர்களின் குழப்பமான முகத்தைப் பார்த்தவர் இனியும் மறைத்து பயனில்லை என்பதை உணர்ந்தவர் உண்மையைக் கூற ஆரம்பித்தார்.
“சீதா வேறயாருமில்ல… என்னுடைய மகள் தான், படிக்கிற வயசில் உமா அப்பாவை காதலிச்சா… உமா அப்பாவும் வந்து என்கிட்ட சீதாவையே கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம் கேட்டார் அப்ப நான் ஒத்துக்கவில்லை, அதனால் அவங்க விருப்பப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, நானும் அவ ஓடிபோயி கல்யாணம் பண்ணின கோபத்தில் சீதாவையே போய் பார்க்கவேயில்லை; அவளோட கடைசிக் காலத்தில் கூட என்னால் என்மகளைக் கண்ணால் பார்க்க முடியாத பாவியாகிவிட்டேன்”.
சங்கர், “என்ன அம்மா சொல்லறீங்க? சீதா ஓடி போயிட்டானு தான சொன்னீங்க… அவ காதலிக்கிற பையன் வந்து பொண்ணு கேட்டதைப் பற்றி நீங்கள் என்கிட்ட சொல்லவேயில்லையே ம்மா, ஏம்மா சொல்லாம மறச்சீங்க? அதுகூடப் பரவாயில்லை அவ செத்து போனது கூட எங்களுக்குத் தெரியாமல் மறச்சிவிட்டீங்க ஏம்மா?”.
“அவ என் நம்பிக்கையை ஒடச்சிட்டானு தான் உங்கிட்ட சொல்லாம விட்டுவிட்டேன் சங்கர்… கெளரவம், அந்தஸ்துனு பேசியே என் பொண்ணு உயிரே போகக் காரணமாகிட்டேன் டா.
என்னோட பிடிவாதத்தால் என்மகள் வாழ்க்கை தான் போய்டுச்சினு பார்த்தா கடைசியா என் பேத்தியும் வாழ்க்கையில் இப்படிக் கஷ்டத்தை அனுபவிக்கும் படியாகிடுச்சி” எனக்கூறி அழுதவரை பார்த்த உமா, “எல்லாம் எனக்குத் தெரியும் பாட்டி” என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டாள்.
“அம்மா உங்க போட்டோ, மாமா – அத்தை போட்டோ, கார்த்திக் போட்டோவையும் காட்டியிருக்காங்க பாட்டி. நீங்க இங்க வந்த முதல் நாளே உங்களை அடையாளம் கண்டுபிடித்துவிட்டேன் பாட்டி”.
அப்புறம் ஏன் உமா எங்ககிட்ட… “உண்மையைச் சொல்லவில்லை? என் அம்மாவையே ஏத்துக்காத நீங்க என்னைய மட்டும் ஏத்துக்கவாபோறீங்கனு தான் பாட்டி சொல்லவில்லை, உண்மையைச் சொல்லி உதாசீனப்படறதைவிடச் சொல்லாமல் இருக்கிறதே மேல்னு நினைத்து தான் சொல்லவில்லை என்றவளை ஆதரவாக அனைத்துக்கொண்டார் வேலம்மை”.
அதற்குக் கார்த்திக், “நான் இங்க சந்தோசத்தை மட்டும் அனுபவிக்க, நீ மட்டும் அந்த நரகத்தில் அத்தனை கஷ்டத்தையும் தனியா அனுபவிச்சியிருக்கைனு நினைக்கும் போது எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு உமா”.
“அச்சோ கார்த்திக்!”… “நீ என்ன பண்ணுவ? உனக்கு அத்தையினு ஒருத்தர் இருக்கிறதே தெரியாது, அப்படி இருக்க அத்தை மகளைப் பற்றி உனக்கு எப்படித்தெரிந்திருக்கப் போகுது? அப்படியே ஒருத்தி இருந்தாளும் அவள் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுகிட்டு இருப்பானு நீ என்ன கனவா கண்ட? விடு கார்த்திக்… நீ இப்ப புது மாப்பிள்ளை, முதலில் மீனுவும் கூட்டிகிட்டுத் தேனிலவு போகிற வழியைப் பாரு” எனக்கூறியவளின் கூற்றில் அவனும் சிரித்துவிட்டான்.
“இனி இதைப் பற்றிப் பேசவேண்டாம் பாட்டி, என்னைப் பற்றி எல்லாம் கண்ணனுக்கும் அம்முவுக்கும் மட்டுந்தான் தெரியும் குட்டிக்குத் தெரியாது, தெரியபடுத்தவும் நான் விரும்பவில்லை; அவனைப் பொருத்தவரை நான் அவனுக்கு அக்கா, அவன் எனக்குத் தம்பி இது நான் சாகும்வரை நிலைக்கனும், எக்காரணம் கொண்டும் நான் அவனோட பிறந்தவ இல்லைங்கிற உண்மை தெரியவே கூடாது அதுதான் எனக்கு வேண்டும், நீங்களும் சொல்ல மாட்டாங்கனு நம்பறேன்” எனக்கூறியவள்…
வெளியே விளையாடிக்கொண்டிருந்த குட்டிக்கும் வர்ஷாவுக்கும் உண்பதற்குப் பழங்களைக் கொடுத்து அவர்களை உண்ணவைத்தவளை காதலாகப் பார்த்துக்கொண்டிருந்தான் வெற்றி.
மற்றவர்களோ பிரமிப்பாகப் பார்த்தனர், நித்தியனோ அவ்வளவு மகிழ்ச்சியாக உமாவை பார்த்திருந்தான்.
அவர்களின் மகிழ்ச்சியைக் கெடுக்கவே மார்க்கிடமிருந்து வெற்றிக்கு போன் வந்தது. அவன் சொன்ன செய்தியில் வெற்றி யோசனையில் ஆழ்ந்துவிட்டான்.
அவனின் யோசனை பார்த்த நித்தியன், “என்ன வெற்றி? ஏதோ யோசனையில் இருக்கீங்க? ஏதும் பிரச்சனைா?” எனத் தவிப்பாகக் கேட்டவனிடம்… “கவிதாவால் தான் பிரச்சனை வரும்னு நினைக்கிறேன், இனி இவளை விட்டு வைக்கிறது சரியா படவில்லை… அவளையும் இந்த மகாலட்சுமிக்குத் துணையாக அனுப்பிடவேண்டியது தான் மச்சான், அதுக்கு முன்ன உமாவுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கனும் அப்ப தான் நாங்க ரெண்டு பேரும் முறைப்படி அவனைத் தத்தெடுத்து சட்டப்படி அவனை எங்ககூடவே வச்சிக்கலாம்னு முடிவுகட்டி அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டேன், இனி உமாவோட சம்மதம் மட்டும் இருந்தா போதும் என்றவனை அழுகையும் சிரிப்புமாகப் பார்த்தாள் உமா”.
அப்பொழு நியாபகம் வந்தவராக நாச்சியார், “வெற்றி சுந்தரம் இறக்க ஒரு வாரத்திற்கு முன்ன ஒரு கவர் குடுத்து உமாவுக்கு ஏதாவது பிரச்சனை வந்தா இதைக் கொடுத்துவிடுங்கனு சொன்னான், அந்தக் கவரில் ஏதாவது இருக்க வாய்ப்பு இருக்கலாமில்லையா?”.
“இருக்கலாம் பாட்டி… நீங்க போய் எடுத்துகிட்டு வாங்க பாக்கலாம்”… இருடா நான் போய் எடுத்துகிட்டு வறேன் எனக்கூறியவர் அதே வேகத்தில் சென்று எடுத்து வந்து கொடுத்தார், அதை வாங்கிப் படித்தவனின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
அதைப் பார்த்த விஷ்ணு, “என்னடா வெற்றி உன் முகம் இப்படிப் பிரகாசமாக இருக்கு? அந்தப் பொம்பளையைக் கம்பி எண்ண வைக்க எதாவது ஆதாரம் இருக்கா டா?”.
“இது அதைவிடப் பெரிய விஷயம் டா விஷ்ணு”.
“அப்படி என்ன தான் இருக்குனு சொல்லுங்க அத்தான்”… “குட்டிக்கும் கவிதாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைனு அந்த அம்மாவே கைபட எழுதி கையெழுத்து போட்ட பத்திரம் மல்லி இது. இது போதும் அவளுக்குக் குட்டி மேல எந்த உரிமையும் இல்லைனு நிரூபிக்க”.
“என்ன சொல்லறீங்க வெற்றி? என்னால் நம்பவே முடியவில்லை, இந்தப் பத்திரத்தை நான் தேடாத இடமில்லை, தேடிதேடி அழுத்து போய் அப்படியே விட்டுவிட்டேன்… இது எப்படி அப்பாகிட்ட வந்ததுனு தெரியவில்லையே வெற்றி”.
கண்ணன், “அக்கா நாம இந்த ஊருக்கு வந்த போது ஒரு தபால் பாட்டி பெயருக்கு வந்துனு பக்கத்துவீட்டு அக்கா கொடுத்தாங்க இல்ல? பாட்டிக்கூட அதை எடுத்துகிட்டு அவசரஅவசரமா சுந்தரம் அப்பாவை பாக்க போனாங்கயில்ல? அந்தக் கவர் தான் இதனு நினைக்கிறேன்.
எனக்கு என்னமோ அப்பா, அம்மா விபத்துக்குள்ளாகியதில் இந்தப் பொம்பளைக்கும் சம்பந்தம் இருக்குமோனு சந்தேகம் வருது க்கா”.
வெற்றி, “உனக்குச் சந்தேகமே வேண்டாம் கண்ணா… அவதான் இந்த விபத்துக்குக் காரணமான இருந்திருக்கனும், அவளைப் பற்றி ஏதாவது விஷயம் இவங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம் அதை வெளியே சொன்னா இவளுக்கு ஆபத்துனு நினைத்துகூட இந்த விபத்தைச் செஞ்சிருக்கலாம், இல்லைனா இவங்க இருந்தா அவளுக்கு ஏதாவது பிரச்சனைனு நினைத்திருக்கலாம்னு, ஆனா ஏதோ பெரிய காரணம் இருக்கு அதைக் கண்டுபிடிக்கத் தான் மார்க் முயற்சி பண்ணிகிட்டு இருக்கிறான்” என்றவன் அனைவரிடமும் கூறிவிட்டு அந்தப் பத்திரத்தை எடுத்துக்கொண்டு விஷ்ணு மற்றும் அருணுடன் நண்பனை காண சென்றுவிட்டான்.
அவன் சென்றதும் உமாவும் தன் குடும்பத்துடன் வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.
நித்தியனும் ஆனந்தியும் அவளுடனேயே வீட்டிற்குச் சென்றுவிட்டனர்; உமா, அம்மு மற்றும் மல்லியின் திருமணம் முடிந்ததும் மூணார் சென்று பால்காய்த்த பின் குடியோறலாம் என முடிவு செய்தவன் உமாவிடம் கூறாமல் கிடைத்த இடைவெளியில் மாப்பிள்ளை வீட்டாரிடம் கூறி அவர்களையும் அழைத்துவிட்டான்.
வீட்டிற்குச் சென்றதும் முறைபடி ஆரத்தி எடுத்து சகோதரனின் குடும்பத்தை அழைத்துத்தசொன்றாள் உமா. அதுவரை தூங்கிக்கொண்டிருந்த குட்டி உமா மகேஸ்வரனும் விழித்துவிட அந்த இடமே கலகலப்பானது.
வந்ததிலிருந்து தன்னிடம் பேச முயன்ற தமையனை தவிர்த்தவள், அவர்கள் தங்க ஒரு அறையை மல்லி மற்றும் அம்முவின் உதவியுடன் சுத்தம் செய்தவள் இரவு உணவை விரைவாகச் சமைத்து அனைவரையும் நேரமாக உண்ணவைத்தவள் காற்றோட்டமாக வெளியே அமர்ந்த பின் சவகாசமா நித்தியனிடம் பேச ஆரம்பித்தாள்.
“இப்ப சொல்லு அண்ணா, எதோ எங்கிட்ட கேட்கனும்னு காலையிலிருந்து நினைக்கிற அது என்னு இப்ப சொல்லு”.
“அதுவந்து… பாப்பா உனக்கு வெற்றியை பிடிச்சிருக்கா? கல்யாணம் பண்ணிக்கச் சம்மதமா?” என்றவனிடம்…
“அவரை ரொம்பரொம்பப் பிடிச்சிருக்கு அண்ணா… அவரைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பமும் இருக்கு, ஆனால் அம்மு, மல்லி கல்யாணத்திற்குப் பிறகு எங்கள் கல்யாணம் வச்சிக்கலானு நினைக்கிறேன் அண்ணா. அடுத்தவாரம் உங்க கல்யாணம்னா அதுக்கு அடுத்தவாரம் அம்முக்கும் மல்லிக்குக் கல்யாணம் வச்சிக்கலாம் தான உமா, அந்த ஒரு வாரத்தில் அவங்ககூடவே நாங்க இருக்கோம் இல்லைனா நீயே அவங்களை அந்த வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போ உமா”.
“அது சரிவராது அண்ணா, கல்யாணம் ஆகாத ரெண்டு பொண்ணுங்களை வயசு பசங்க இருக்க வீட்டில் ஒரு நாள் இரவு தங்கவைக்ககூட எனக்கு விருப்பம் இல்லை, நீங்கள் கேட்களாம்னு அண்ணா அந்த வீட்டுக்கு தான வந்து வாழபோறாங்கனு; இவங்க அங்க தான் வாழ்க்கை ஆரம்பிக்கப் போறாங்க ஆனால் முழு உரிமையோடையும் சகலமரியாதையோடையும் தான் இவங்க அந்த வீட்டில் தங்கனும்னு எனக்கு ஆசைனுகூடச் சொல்லலாம் அண்ணா, நீங்கள் இருக்கீங்க கூட நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்களுக்குக் கல்யாணம் பண்ணலாம் தான் அண்ணா.
ஆனால் ஊரில் இருப்பவர்கள் என்ன சொல்லுவாங்கனு தெரியுமா மூத்தமருமக கெளரவத்திற்காகப் பண்ணையார் வீட்டுக்காரங்களோ யாருக்கும் தெரியாமல் பணத்தைகொடுத்து ரெண்டு பொண்ணுங்களுக்கும் சீர் செஞ்சிட்டாங்கனு சொல்லுவாங்க, அந்த மாதிரி எதுவும் நடக்ககூடாதுனு தான் நான் அங்கிருந்த மல்லி மற்றும் அம்முவை காட்டி இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சதும் கண்டிக்கிறேன்னு சொல்லறேன் அண்ணா.
அதைவிடக் கண்ணனும் குட்டியையும் எங்ககூடவே தான் இருப்பாங்க… அவங்களுக்கும் அது ஒரு சங்கடத்தையும் ஏற்படுத்தாது அண்ணா, தேவையில்லாத புரணியைக் கேட்காம நீயும் அண்ணியும் இனியாவது நிம்மதியா ஊருக்கு போவீங்க”.
அதுவரை அமைதியாக இருந்த மல்லி, “எப்படிப் புள்ள இப்படி எல்லாம் விஷயத்திலும் எங்களையே முன்னிறுத்தி யோசிக்கிற? உனக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு புள்ள”.
“எனக்குனு இருக்கிறதே நீங்க தாண்டீ, உங்களைவிட்டா வேற யாரு எனக்கிருக்கா? நீங்கள் சந்தோசமா இருந்தாதான் மல்லி நானும் சந்தோசமா இருப்பேன், நீங்கள் இல்லைனா நான் இல்லடா என்றவளை அனைத்துக்கொண்டாள் மல்லி”.
குட்டி மகி, வெள்ளையன், கண்ணன் மற்றும் மணியுடன் விளையாடிக்கொண்டிருந்த குட்டி அவன் தூக்கத்தில் சினுங்கவும் ஆனந்தியிடம், “அண்ணி குட்டி பையனுக்குத் தூக்கம் வந்துடுச்சி அழுகிறான் நீங்க தூங்க வைங்க நான் காலையில் எழுந்ததும் அவங்கூடையே விளையாடறேன்” என்றவனிடம் ஆனந்தி, “சரிங்க பெரிய மனுசா… நீங்கள் சொன்ன மாதிரியே காலையில் விளையாடுங்க, இப்ப வந்து நீங்களும் தூங்குங்க, மணி ஆகிடுச்சி பாருங்க”.
“எனக்கு இப்ப தூக்கம்வரவில்லை அண்ணி, நான் உமா அக்கா வந்ததும் தூங்கறேன் என்றவன் உமாவின் அருகில் அமர்த்திக்கொண்டான்”. அப்பொழுது நித்தியன், ”குட்டி ஏன் எங்கிட்ட பேசமாட்டிக்குற? என்னைய பார்த்தா அவ்வளவு கொடூரமாவா இருக்கு? நாங்க இங்க வந்தது உனக்குப் பிடிக்கவில்லையா?” என்றவனிடம்…
குட்டி, “நீங்க எங்களுக்காகத்தான் வெளிநாட்டுக்கு போய் கஷ்டப்பட்டீங்கனு உமா அக்கா சொன்னாங்க… அப்புறம் எப்படி எனக்கு உங்களைப் பிடிக்காத போகும்? ஆனால் நீங்க ஏன் ஒரு முறைக்கூட எங்கிட்ட பேசவேயில்லை? நீங்கள் எப்பவருவீங்கனு அக்காகிட்ட எவ்வளவு நாளா கேட்டேன் தெரியுமா? நீங்க இங்க வராம அந்த வீட்டுலயே இருந்துகிட்டீங்க அதனால் தான் உங்க மேல தான் கோவமாக இருக்கேன்”எனக்கூறி திரும்பிநின்றுகொண்டவளின் செயலானது அனைவருக்கும் சிரிப்பையே வரவழைத்து.
வந்த சிரிப்பை அடக்கிக்கொண்ட நித்தியன், “என்னோட குட்டி தம்பிக்குச் சப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் நான் இங்க வராம நேரா அங்க வந்தேன், என்னைப் பார்த்ததும் நீ ஓடி வந்து கட்டிகிட்டு அண்ணானு கூப்பிடுவனு நினைச்சா; நீ என்னடானா எம்மேலையே கோபமா இருக்க, அதுவும் இல்லாம இதுவரை அண்ணானு நீ என்ன கூப்பிடவே இல்லை குட்டி, ஒரு வேளை நான் இங்க வந்தது உனக்குப் பிடிக்கலையோ நினைத்துவிட்டேன்” என்றவனிடம்…
“இல்லை… இல்லை அண்ணா… நீங்க இங்க வந்ததும் எனக்கு எவ்வளவு சந்தேகமா இருந்தது தெரியுமா? உங்களுடன் ஆத்துக்கு போய் மீன் பிடிக்கனும், நண்டு பிடிக்கனும், காங்கேயம்போகனும், அப்புறம் அக்கா கல்யாணத்திற்குப் புதுத்துணி எடுக்கனும், மகிகுட்டியோட விளையாடனும், அண்ணி கூடக் கோவிலுக்குப்போகனும் இப்படி எவ்வளவு பிளான் வச்சிருக்கேன் தெரியுமா? நீங்க என்னடானா இவ்வளவு நாள்கழிச்சி வந்திருக்கீங்க, நாம எப்படி இவ்வளவு இடத்துக்கும் போகமுடியும்? அதனால் தான் உங்க மேல கோவமா இருக்கேன் எனக்கூறி முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டான் சின்னவன்”.
அதில் சிரித்த நித்தியன், “இவ்வளவு தானா குட்டி? விடு நீ ஆசைபட்ட மாதிரியே எல்லாத்தையும் பண்ணீடலாம். அதுக்கு நான் பொறுப்பு என உறுதிகொடுத்தான் பெரியவன்”.
அதில் மகிழ்ந்த சிறுவன், “கண்டிப்பா கூட்டிகிட்டு போவதானே அண்ணா?”.
“கண்டிப்பா நாளைக்கே போகலாம் குட்டி, அப்புறமா அக்கா கல்யாணம் முடிந்ததும் நாம எல்லாரும் ஒரு இடத்துக்குப் போகபோறோம், அங்க உங்க எல்லாருக்கும் ஒரு சப்ரைஸ் இருக்கு, அப்படியா அது என்ன அண்ணா என நச்சரித்த சிறியவர்களைப் போக்குகாட்டியவன் அவர்கள் அந்த நேரத்தில் படுத்துவிட்டான்.
படுத்தவனை நச்சரித்தவர்களை அதட்டி படுக்கவைத்துப் பின் உமாவும் படுத்துவிட்டாள்”.
அதன் பின் வந்த ஒரு வாரமும் திருமணத்திற்கான வேலையில் நித்தியனும் உமாவுடன் சேர்ந்து உதவி செய்ய வேலையை விரைவாக முடித்துவிட்டாள்.
அன்பு தொடரும்…