- அத்தியாயம் 10:
அடுத்த வாரமே மூணாறு சென்று அடைந்துவிட்டனர். ஐந்து மணி நேரப்பயணத்தில் அனைவரும் சற்று சோர்ந்து விட்டனர். ஆனாலும் அவர்களின் முகத்தில் சோர்வை மீறிய சந்தோசம் தெரிந்தது.
அனைவரையும் விடஜெயம்மாள் மிகவும் கலைத்துப்போய்விட்டார். அவர் முகத்தில் தன் மகளையும் பேத்தியையும் பார்க்கப்போகிறோம் என்ற ஆவல் அதிகமாக இருந்தது.
“ஜெயந்தி கர்பமாக உள்ளாள் என்ற செய்தி கேட்டவுடன் ஜெயா மகளுக்கு பிடித்த இனிப்புவகைகள், பேத்தி மற்றும் மருமகனுக்கு பிடித்த உணவுவகைகள் என செய்ய ஆரம்பித்துவிட்டார்”.
மீனுவும் தான் அவர்களுக்கு தேவையான உதவிகளை அவர்கள் கேட்காமலே தானாக முன்வந்து ஆசையாக செய்தாள்.
“வெற்றி, விஷ்ணு மற்றும் அருண் ஆகியோர் தங்கள் பண்ணை, கல்லூரி, தோப்பு மற்றும் மில் வேலைகளை ஆளுக்கொன்றாக பகிர்ந்து கொண்டனர். அதுவும் தன் சகோதரியை காணவேண்டும் என்ற ஆவலில்”…
மிகவும் முக்கியமான வேலை அந்த ஒரு வாரத்தில் முடித்து விட்டால் சகோதரியுடன் எந்த வேலையும் இல்லாமல் நேரம் செலவிடலாம் என்ற எண்ணத்தில் இரவு பகலாக வேலையை செய்தனர் பாசக்கார தம்பிகள்.
“முதல் பிரசவத்தில் சகோதரிக்கு ஏற்ட்ட பிரச்சனை இந்த முறை ஏற்படாமல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே அவர்களின் வேலையை விரைவாக முடிக்க உந்தியது”.
சந்திரன் மற்றும் தர்மரும் அவர்களின் வேலை சுமையை புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவியாக இருந்தனர். அதற்கு முக்கிய காரணம் சாரதா…
சாரதா தர்மர் மற்றும் சந்திரனிடம், “பெரியவனே”… பசங்க மூனும் வேலை அதிகமா இருப்பதனால் எவ்வளவு சிரமப்படுதுங்க. போய் ஒரு வாரம் உதவியா இருங்க என்றவரிடம் தர்மர், “போங்கம்மா… அவனுங்களே பாத்துப்பானுங்க… எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு அது முடியாமல் என்னால போகமுடியாது” என்றவரிடம்…
“நீ இப்ப மட்டும் போய் அவனுங்களுக்கு உதவி பண்ணலைனு வை நான் என்ன பண்ணுவேன் எனக்கே தெரியாது” என சீரியவரை சமாளிக்க முடியாமல் தன் மகன்களுக்கு உதவியா சந்திரனும் தர்மரும் பண்ணை மற்றும் ஆலை வேலையை பார்க்க சென்றுவிட்டனர்.
தர்மர் சாரதாவிடம் வாங்கிய திட்டால் சந்திரன் வாய்பேசாமல் சென்றுவிட்டார். அதையும் மீறிபோசினால் யார் அவரிடம் வாங்கிகட்டிக்கொள்வது. நாச்சியாரும் தங்கள் மனைவிமார்களும் வருத்தெடுத்துவிடுவார்கள் என்று பேசாமல் கிளம்பிவிட்டார்.
அதை பார்த்த சகுந்தலா மற்றும் காயத்திரி சிரித்துக்கொண்டே தங்கள் வேலையை பார்க்க சென்றுவிட்டனர்.
தன் உடல் சுகவீனத்தால் சமையலறைக்கு செல்லாத ஜெயா, “இந்த ஒரு வாரமும் அங்கேயே இருந்து அனைத்தையும் கவனித்துக்கொண்டார்”. தன் மகளுக்கு வேண்டியதை பார்த்துப்பார்த்து செய்தார்.
“ஜெயாவின் உடல்நிலையை மனதில் கொண்டு சகுந்தலா, காயத்ரி இல்லை நாச்சியார் என யாராவது அவரிடம் போராடி தான் ஓய்வெடுக்க அனுப்பி வைப்பர்”. காலையில் இருந்த வேலையால் இரவில் கால்வலியால் மிகவும் சிரமப்படுவார்.. அந்தநேரத்தில் அருண் தான் அவரின் காலுக்கு மருந்து போட்டு பார்த்துக்கொள்வான் அவர் வலியி்ல் அவதிப்படிபதை தாங்கமுடியாமல் அதிகமாக கடிந்துகொள்வான் வெற்றி. அதையெல்லாம் அவர் அப்படியே காற்றில் விட்டுவிடுவார்.
இந்த ஒரு வாரத்தில் உமாவும் மல்லியும் அந்த வீட்டில் நன்றாக பொருந்திபோய்விட்டார்கள்.
அவர்களைவிட்டு குட்டி, கண்ணன் மற்றும் அம்மு தான் நன்றாக செட்டாகிவிட்டனர். “ஜெயாவிற்கு குட்டி என்றால் மிகவும் பிடிக்கும்”.
ஒரு வாரம் வீட்டில் செய்யும் அத்தனையும் ருசிபார்ப்பது இவர்கள் மூவரும் தான். ஆனால் உமா பெரியதாக எடுத்துக்கொண்டது இல்லை. ஆனால் அங்கு இருந்து எதையும் வீட்டிற்கு மட்டும் எடுத்து செல்ல விரும்பமாட்டாள்.
அதனால் சகுந்தலா, அவர்களின் இரவு உணவை அங்கேயே முடித்துவிட்டு தான் அனுப்பி வைப்பார்.
“இந்த ஒரு வாரமும் வெற்றி, விஷ்ணு மற்றும் அருண் ஆகியோர் தங்கள் காதலிகளை நன்றாக சைட்டடித்துக்கொண்டு இருந்தனர்”. உமாவின் சமையலுக்கு அடிமை ஆகிவிட்டனர்.
“அவ்வப்போது குட்டிக்கும் விஷ்ணுக்கும் முடிக்கொள்ளும். ஒவ்வொரு முறையும் விஷ்ணுவை குட்டியிடம் இருந்து காப்பது வெற்றி அல்லது அருணின் வேலையாக இருக்கும்”. இவர்கள் சண்டையில் நாச்சியாரிடமும் மற்றவர்களிடமும் திட்டுவாங்குவது விஷ்ணுவாகத்தான் இருக்கும். அந்த நேரத்தில் குட்டி ஒன்றுமரியா பிள்ளை போல் பாவமாக முகத்தைவைத்துக்கொண்டு அமைதியாகிவிடுவான். அந்த நேரத்தில் விஷ்ணு மிகவும் கடுப்பாகிவிடுவான். சிலசமயத்தில் அது விஷ்ணுவுக்கே சிரிப்பா இருக்கும்.
இதைவைத்தே மல்லி விஷ்ணு வை கலாய்த்துவிடுவாள். சில நேரத்தில் “வேண்டும் என்றே அவன்மேல் டீ கொட்டுவது, காபி கேட்டால் டீ தருவது என தன் கோபத்தை போக்கிக்கொள்வாள்”. பின்னே இருக்காதா… தன்னை காதலிப்பவன் காதலை சொல்லாமல் இருப்பது தான் அவள் கோபத்திற்கு காரணம்.
“ஒரு நாள் அவன் அறையை சுத்தம் செய்யும் போது அவன் டைரியை படித்துவிட்டாள். தான் காதலிப்பவனே தன்னை காதலிப்பது அத்தை மகிழ்ச்சியை தந்தது. விஷ்ணு காதலை சொல்லாமல் இருப்பது சற்று கோபத்தை தந்தது. ஆம் மல்லி எட்டு வருடமாக காதலிப்பது விஷ்ணுவைத்தான்”… “ஒரு முறை இவள் பள்ளிக்கு செல்லும் போது, வழியில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டவனை புரட்டி எடுத்தில் விஷ்ணுவின் மேல் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. அந்த ஈர்ப்பே நாளாகநாளாக காதலாக மாறியது மல்லியின் மனதில்”.
“விஷ்ணுவின் தன் மீதான காதலை மறக்காமல் டைரியை படித்த அன்றே சொல்லிவிட்டாள் மல்லி. உமாவிற்கு அவள் மகிழ்ச்சியை பார்த்து ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபக்கம் பயமாகவும் இருந்தது”… இவளின் இந்த காதல் தவம் நல்லபடியாக கல்யாணத்தில் முடியவேண்டும் என்று அவசரமாக அந்த அம்மனை வேண்டிக்கொண்டாள்… பயத்தை தன்னுள் வைத்துக்கொண்டு மகிழ்ச்சியை மட்டும் மல்லியிடம் வெளிபடுத்தினாள் அந்த அன்புத்தோழி.
ஒருநாள் அருண் தீவிரமாக அம்முவை சைட்டடிப்பதை பார்த்துவிட்டு மல்லி அருணிடம் ஒரு ஒப்பந்தத்தையும் போட்டுவிட்டாள்.
மல்லி அருணிடம், “இங்க பாருங்க சார்… இப்படியே நீங்க அவளைபாத்துகிட்டே இருக்கவேண்டியதுதான். அம்முவை கல்யாணம் பண்ணிக்கனும்னா நேரா உமாகிட்ட போய் பெண்ணுகேளுங்க, நீங்க போய் உங்க காதலை சொன்னா அம்மு நிச்சியம்யமா ஒத்துக்கமாட்டா”… “ஏணா அவளுக்கு அக்கா தம்பதிகளுக்கு பிறகு தான் எல்லாம்”. உங்க காதல் ஜெய்யிக்கனும்னா உமாவால் மட்டும்தான் முடியும். உமாவுக்கு உங்க மேல நம்பிக்கை இருந்ததுனா கண்டிப்பா சம்மதம் சொல்லுவா சார்… அப்புறம் முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்க குடும்பம்தான் போய் பெண்ணுகேளுங்க கண்டிப்பா உங்க காதல் சக்ஸஸ் தான் என்றவளிடம்…
அருண், “ரொம்ப ரொம்ப நன்றி மல்லி… வெற்றி அண்ணாவும் இதைத்தான் சொன்னாங்க… கண்டிப்பா எங்க குடும்பத்தோட போய் பெண்கேட்கிறேன்”. அப்பறம் இப்படி சார் எல்லாம் கூப்பிடவேண்டாம் அருண் கூப்பிடுங்கள்.. எப்படி இருந்தாலும் எனக்கு அண்ணியா வரப்போறிங்க அதனால் பேர் செல்லியே கூப்பிடுங்கள் எனக்கூறி மகிழ்ச்சியாக சென்றுவிட்டான் அருண்…
மல்லியை தன்னவளை மனதில் நினைத்து, ‘உன்னக்கு இருக்குடி மாப்பு… விஷ்ணு உன்னைய எப்படி கதரவிடறேன் பாருடா. நான் செய்யற வேலையில் நீயே வந்து உன் மனதில் இருக்கிறது என்கிட்ட சொல்லபோற பாரு’ என நினைத்துக்கொண்டு வேலையை பார்க்க சென்றுவிட்டாள் மல்லி.
இவற்றிற்கிடையில் வெற்றி மற்றும் அருணிடம் நன்றாக ஒட்டிக்கொண்டான் குட்டி… விஷ்ணு மற்றும் அருண் ஆகியோர் கண்ணனை நண்பர்கள்போல் பாவித்தனர்.
மீனு, அம்மு மற்றும் கண்ணன் என அனைவரும் நண்பர்களாக மாறிவிட்டார்கள். என அந்த ஒரு வாரமும் நடந்தவற்றை பயணத்தின் போது நினைத்துக்கொண்டுவந்தார்கள் அனைவரும்.
மூணார் எல்லையை அடைந்ததும் முதலில் அவர்களை வரவேற்றது அங்குள்ள குளுமைதான். அந்த குளுமை அத்தனை கலைப்பையும் நீக்கி உடம்புக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது. அந்த உணர்வே அத்தனை சோர்வையும் இருந்த இடம் தெரியாமல் போக்கியது.
*******************************×**************************
“மூணார் தமிழகத்தின் தேனி மாவட்டத்தை ஒட்டி கேரளத்தின் தென்மாவட்டமான இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம்”. கடல் மட்டத்திலிருந்து 1600-1800 மீட்டர் உயரத்தில் உள்ளது. மூணாறு தென்னகத்தின் காஷ்மீர் என அழைக்கப்படுகிறது.
“முதிரப்புழை, நல்லதண்ணி, குண்டலை ஆகிய மூன்று ஆறுகள் கூடுமிடமாதலால் மூன்றாறு என்றிருந்து மூணாறாகியுள்ளது”.
இங்கு முக்கிய தொழிலாக தேயிலை உற்பத்தி உள்ளது.
உலகமக்களை கவரும் தேயிலை தோட்டங்களும் இயற்கை எழில் கொஞ்சும் கண்கவர் முகிழ்களும் வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண்கொள்ளாக்காட்சியாகும்.
உதகமண்டலம், கொடைக்கானலிற்குப்பிறகு தீபகற்பம் இந்தியாவில் உள்ள மூன்றாவது புகழ்பெற்ற கோடை வாழிடம் மூணாறு.
இந்தபகுதி முழுவதும் முதுவான் இன மலைவாழ் மக்களின் வசம் இருந்தது. பின் பூஞ்சார் ராஜ வம்சத்தினரின் ஆட்சியில் இருந்தது. பின்னர் ஆங்கிலேயர் வசம் வந்தது.
ஜான் டேனியல் முன்றோ என்ற ஆங்கிலேயர் முதன்முதலில் இங்கு தேயிலை பயிரிட வழிவகுத்தார். பின் சரக்குகளை கையாளுவதற்கு ரயில் வசதிகள் மற்றும் சாலை வசதிகளையும் ஏற்படுத்தினர்.
மூணாறில் பயிரிடப்படும் தேயிலை உலக புகழ்பெற்றது.
அவர்கள் அனைவரும் ஜெயந்தி வீடுவந்துசேர மணி ஆறு தொட்டுவிட்டது.
அங்கு சென்றவர்கள் கண்டகாட்சி அனைவருக்கும் புன்னகையை தந்தது.
“தோட்டத்திற்கு நடுவே அமைந்த கல் இருக்கையில் நடுவே மதன், மகனின் வலப்புறம் வர்ஷா, இடப்புறம் ஜெயந்தி என அமர்ந்திருந்ததனர்”…
மதன் செயற்கையாக அமைத்திருந்த குளத்தில் இருந்த மீன்களுக்கு உணவினை வர்ஷாக்கு கொடுத்துக்கொண்டு இருக்க, மதன் தன்னவள் மற்றும் மகள் என இருவருக்கும் உணவினை ஊட்டிக்கொண்டு இருந்தான்.
இவர்கள் மூவரும் தங்கள் உலகில் சஞ்சரித்துக்கொண்டு இருந்ததால் ஜெயந்தியின் குடும்பம் வந்தது தெரியவில்லை.
சுதாரித்த சாரதா, “போதும் எல்லாரும் பார்த்தது… சத்தம்போடா உள்ள போங்க… அவங்க வரும்போது வரட்டும்”.
ஜெயா, “சின்னஅத்தை சொன்னமாதிரி சத்தம்போடாம போங்க”. வெற்றி நீபோய் பெட்டி எல்லாம் எடுத்துகிட்டுவா என்றவர் தன் வீல்சேரில் உள்ளே சென்றுவிட்டார். அவரை தொடர்ந்து அனைவரும் சென்றுவிட்டனர்.
உள்ளே சென்றவர்களை வரவேற்றது மதனின் பாட்டிகாலத்திலிருந்து வேலை செய்த சுப்பன் என்பவர். இவர்களை பார்த்தவருக்கு சந்தோசத்தில் ஒன்றும்புரியவில்லை.
சுப்பன் அனைவரையும் வரவேற்று மற்றவேலை ஆட்களிடம் டீ கொண்டு வர பணிந்துவிட்டு, வெற்றி, விஷ்ணு கொண்டுவந்த பெட்டியை விருந்தினர் அறையில் வைக்கசொல்லியவர்… சமையல்காரர் கொண்டுவந்த டீயை அனைவருக்கும் கொடுத்தார்.
நாச்சியார், “எங்க சுப்பா வீட்டில யாரையும் காணல? சம்பந்திங்க எல்லாம் எங்க?” என்றவரிடம்…
“அம்மா”… “தம்பியும் பாப்பாவும் தோட்டத்தில் இருக்காங்க”… வர்ஷாபாப்பாவும் அங்கனதானுங்கம்மா இருக்கு. பெரியம்மாவும் ஐயாவும் பெண்ணை பாக்க வெளிநாட்டு போய் இருக்காங்க. டாக்டர் பிரசவநாள் சொல்லிட்டாங்கனு சின்னபாப்பாக்கு ஒத்தாசையா போய் இருக்காங்கம்மா. நான் போய் மதன் தம்பிய வரசொல்லறேன்ம்மா எனக்கூறி கிளம்பியவரை தடுத்தார் காயத்ரி.
“அண்ணா… அவங்க வரும்போது வரட்டும், நீங்க எங்களுக்கு ரூம் மட்டும் சொல்லுங்க நாங்க ரெடியாகிவறோம். அதுவரை அவங்களை டிஷ்டிரப் பண்ணவேண்டாம் அண்ணா”. சரிங்க அம்மா… “நீங்க வாங்க நான் ரூம் காட்டுகிறேன் எனக்கூறி அழைத்து சென்று அவர்களுக்கான அறையை ஒதுக்கி கொடுத்தார் சுப்பன்”.
தோட்டத்திற்கு இருந்து வந்த ஜெயந்தி- மதன் முற்றத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்த சிறிது நேரத்தில் சொல்லிவைத்ததுக்கொண்டு அவர்அவர்கள் அறையிலிருந்து வெளியே வந்தனர்.
“தன் குடும்பத்தை பாரத்த மகிழ்ச்சியில் ஜெயந்திக்கு கைகால் அனைத்தும் வேலைசெய்யவில்லை. மதனுக்கு ஒன்றும் புரியவில்லை”.
தன் ஆசை மாமனை பார்தவுடன் வர்ஷா, “வெற்றி மாமா என ஓடிவந்து கட்டிக்கொண்டாள்… வெற்றியும் அந்த சின்னஞ்சிறிய பூச்செண்டை கைகளில் அள்ளிக்கொண்டான்”.
வர்ஷா, “ஏன் மாமா என்னை பார்க்க வரவில்லை? உன்னை எவ்வளவு மிஸ் பண்ணினேன் தெரியுமா? போ நான் இனிமேல கோபமா இருக்கேன்” என முறுக்கிக்கொண்ட மருமகளை கெஞ்சி, கொஞ்சி சமாதானம் செய்தான் அந்த தொழிலதிபன்.
இதில் நிகழ்வுக்கு வந்த மதன் அனைவரையும் வரவேற்கும் விதமாக, “வாங்க பாட்டி… வாங்க மாமா… வாங்க அத்தை… என அழைத்தவன், ஏன் நிக்கறீங்க? எல்லாரும் உட்காருங்க” எனக்கூறியவன்…
மீனாவிடம், “ஓய் குட்டிப்பெண்ணு… எப்படி இருக்க”. விஷ்ணு, அருண் எப்படிடா இருக்கீங்க? வெற்றி என்னடா இது மூனுவருசமா வெளிநாட்டுல போய் உட்கார்ந்துகிட்ட”…
ஆமா எல்லாரும் எப்ப வந்தீங்க?.. எங்களை கூப்பிட்டு இருக்கலாம் இல்ல? என்றவனிடம் ..
வெற்றி, “நாங்க எல்லாம் நல்லா இருக்கோம் மாமா”… வேலை அப்படி மாமா. உங்களுக்கு தெரியாதா மாமா வேலைய பத்தி? “வாழ்த்துக்கள் மாமா”… மறுபடியும் எங்களை மாமா ஆக்குனதுக்கு எனக்கூறியவனை சிரிப்புடன் அணைத்துக்கொண்டான் மதன்.
அருண், “மாமா நாங்க ஆறு மணிக்கேவந்துட்டோம்”. நீங்க தான் தோட்டத்தில் ரொம்ப பிஸியா இருந்தீங்க”. அதனால் உங்களை கூப்பிடக்கூடாதுனு சொல்லிட்டாங்க. அதில் அட்டகாசமாக சிரித்தான் மதன்.
மதன், “என்ன மாப்பிள்ளை பன்றது? உன் அக்காமகளை சாப்பிட வைக்கரதுக்குள்ள ஒரு வழி ஆகிடறோம்… அப்படியே வேடிக்கை காட்டினா கொஞ்சம் சாப்பிடுவா”. அதனால் தான் அங்க கூட்டிக்கிட்டு போனோம் என்றவனிடம் சந்திரன், “அப்பா, அம்மா எப்ப மதன் உங்க தங்கச்சி வீட்டுக்கு போனாங்க?… குழந்தை பத்தி செல்லீட்டீங்களா? இப்ப எப்படி இருக்காங்க” என்றவரிடம்…
“இரண்டு வாரம் முன்னத்தான் மாமா போனாங்க… அங்க எல்லாரும் நல்லா இருக்காங்க மாமா… செக்கப் முடிச்சி வந்ததும் சொல்லியாச்சி மாமா. இந்த நேரத்தில் இங்க இருக்க முடியலை வருத்தப்பட்டாங்க. ஒரு வழியா ஜெயந்தி சமாதானம் பன்னி தங்கவச்சி இருக்கா மாமா”.
அதற்கு நாச்சியார், “அங்கன புள்ளைக்கு பிரசவ நாள் சொல்லீட்டாங்கனு சுப்பன் சொன்னான் தம்பி”… இங்கனத்தான் இத்தனை பேர் இருக்கோம், நாம பாத்துக்கலாம்…
அங்க புள்ள துணைக்கு சம்பந்தியம்மா இருந்தா தான் கூடமாக ஒத்தாசையா இருக்கும் தம்பி. ஒன்னும் அவசரம் இல்ல அவங்களை நிதானமா வரசொல்லுங்க தம்பி. “சரிங்க பாட்டி அம்மா இரவு போன் பண்ணுவாங்க அப்ப சொல்றோன் என்றான் மதன்”.
இவர்களின் பேச்சில் சுயம் பெற்ற ஜெயந்தி, “அம்மா, பாட்டி, சித்தி, அப்பா எல்லாரும் எப்படி இருக்கீங்க”… என்னால நம்பவேமுடியவில்லை ம்மா… நேத்துக்கூட போன் பண்ணினேன் பாட்டி எல்லாரும் எதுவும் சொல்லவில்லை. ஏய் மீனுகுட்டி நீக்கூட அக்காகிட்ட சொல்லவேயில்லை பாத்தியா?… அதற்கு மீனா “அச்சோ அக்கா!” நீ இதுக்கே இப்படி ஆச்சரியபட்டா எப்படி? உனக்கு இன்னும் நிறைய ஃசப்ரைஸ் இருக்குக்கா.
“ஏண்டா விஷ்ணு!”… அப்படி என்ன சப்ரைஸ். இந்த சின்னவ இத்தனை பில்டப் கொடுக்கிறார்கள் என்றவளிடம்… “அதுவா அக்கா”… “”சொல்லுடா விஷ்ணு… அங்க பாருக்கா யார் வந்து இருக்காங்கனு…
அப்படி யாருடா வந்து இருக்காங்க எனக்கூறி திருப்பிபார்த்தவள் “ஜெயாவை பார்த்த உடன் அதிர்ச்சியில் தன்வாயில் இரு கையையும் வைத்தவள் அப்படியே நின்றுவிட்டாள். ஆனால் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வந்துகொண்டே இருந்தது. அதற்கு மாறாக முகத்தில் அத்தனை மகிழ்ச்சி”.
ஜெயாவை பார்த்த மதனுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பின்னே இருக்காதா… வீட்டைவிட்டு எங்கேயும் போகாதவர் ஊரைத்தாண்டி இங்கு வந்தது அத்தனை ஆச்சரியத்தை தந்தது.
வெற்றியிடம் இருந்த வர்ஷா, “தன் பெரியாபாட்டியை பார்த்தவுடன், வெற்றியிடம் இருந்து கீழே இறங்கி பாட்டியிடம் அடைக்கலம் ஆனால் அந்த சிட்டு”.
அழுதுகொண்டு இருந்த ஜெயந்தியை பார்த்த ஜெயா தன் கைகள் இரண்டையும் விரிக்க “அந்த அன்னையிடம் சேய் ஆக அடைக்கலம் ஆனால் ஜெயந்தி”.
ஜெயா, “ஜெயந்தி இந்தமாதிரி நேரத்தில் அழக்கூடாது”. கண்ணைத்துடை… “போங்க பெரியம்மா… நான் ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்குக்கேன் தெரியுமா பெரியம்மா?”… அப்படி என்ன சசந்தோசம் என் மகளுக்கு?… “என்ன பெரியம்மா இப்படி கேட்டுட்டீங்க?”… “நீங்க… எனக்காக… அதுவும்… என்னைய… பாக்க… வந்திருக்கீங்க… இதைவிட வேற என்ன சந்தோசம் இருக்க முடியும் எனக்கு? சொல்லுங்க பெரியம்மா”… நீங்களே சொல்லுங்க அம்மா என்றவளிடம்…
ஜெயா, “என் பெண்ணு குழந்தை உண்டாகிறுக்கா, அவளை… பாக்க… நான்வராம… வேறயாருவறுவா?… சொல்லு ஜெயந்தி”. நீ செல்லு சகுந்தலா என்ற ஜெயாவிடம் சகுந்தலா, “அவ உங்க பெண்ணை க்கா… நீங்க தான் அவளை பார்த்துக்கனும் எனக்கூறிய சகுந்தலாவை அன்புடன் அணைத்துக்கொண்டனர் அவரின் மகன்கள் மூவரும்”. மீனு தன் சித்தி காயத்ரியை கட்டிக்கொண்டாள்.
இதனை கண்ட அத்தனை பேரின் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி.
இதற்கிடையில் “உமா தன் தங்கை, தம்பிகள் மற்றும் மல்லியை வெளியே கூட்டிக்கொண்டு சென்றுவிட்டாள்”… அவர்களுக்கு தனிமை கொடுக்கும் பொருட்டு.
வெளியே சென்றதும் குட்டி, “அக்கா ஊரு பாத்தியா எவ்வளவு சில்லுனு இருக்கு… நம்ம அப்பா, அம்மா இருந்து இருந்தா நாமளும் இங்களமாதிரி இருந்திருப்போம் இல்ல என தன் மன ஏக்கத்தை தன்னையறியாமல் வெளியிட்டுவிட்டான். அதில் அம்மு மற்றும் உமாவின் முகம் சேர்ந்து விட்டது”.
அதைஉணர்ந்த கண்ணன், “அதுதான் நம்ம உமா அக்கா இருக்காங்க இல்ல குட்டி என்றவன், அவனை தூக்கிக்கொண்டான். கண்ணனின் கைகளில் இருந்தே குட்டி உமா, அம்முவை கட்டிக்கொண்டான்… உமா தன் ஒரு கையால் குட்டியையும் கையால் தனியாக நின்ற மல்லியையும் அனைத்துக்கொண்டாள்”.
இவர்களின் இந்த உணர்வு பூர்வமான தருணத்தை வெற்றி தன் போனில் படம் எடுத்துக்கொண்டான்… இவர்களை தொந்தரவு செய்யாமல் வந்த சுவடு கூட தெரியாமல் உள்ளே சென்றுவிட்டான்.
குட்டி, “அக்கா அங்க பாருக்கா குளம். அண்ணா அங்க பாரு பூ எல்லாம் விதவிதமாக இருக்கு என கூறி சிரித்தவனின் சிரிப்பில் அத்தனை பேர் முகமும் சிறிது மகிழ்ச்சியை தத்தெடுத்து”.
உமா, “இங்க பாருங்க எல்லாரும்… நாம்ப இங்கன வந்தது வேலை பாக்க…உங்களுக்கு எது வேண்டுமானாலும் அக்காகிட்ட தான் கேட்கும் புரியுதா. தேவையில்லாம வேற எங்கேயும் போககூடாது… புரியுதா” என்றவளிடம்…
குட்டி, “புரியுதுக்கா”… இந்த வீட்டில எந்த பொருளையும் தொடமாட்டேன்க்கா… ஆனா உமாக்கா நீங்க எங்களை ஊர் சுற்றிபார்க்க கூட்டிகிட்டு போகும் ஓகேவா என்றவனிடம் உமா, “கண்டிப்பா கூட்டிகிட்டு போறேன்டா… ஆனா இன்னைக்கு இல்ல… வீட்டுக்கு போறதுக்கு முன்ன கூட்டிகிட்டு போறேன்டா” என்றவளின் கூற்றில் சந்தோசம் அடைந்தவன் கண்ணனின் கையை இழுத்துக்கொண்டு தோட்டத்தை சுற்றி ஓடத்துவங்கினா.
மல்லி, “ஏண்டீ உமா அவனை ஊர் சுற்றிபார்க்க கூட்டிகிட்டு போக பணம் இருக்கா… நான் இரண்டாயிரம் ரூபாய் கொண்டாந்தேன்டீ… அது போதுமாடீ”… நீ கொண்டாந்தையா புள்ள?… கொண்டு வந்தேன் மல்லி… “மூவாயிரம் இருக்கு புள்ள… அந்த பணத்தை வச்சி தான் எதாவது வாங்கனும். இந்த பணம் போதுமா உமா என்ற மல்லியிடம், வேறவழியில்ல மல்லி, இதைவச்சி தான் சமாளிக்கனும் எனக்கூறினாள் உமா”.
இதைகேட்ட அம்மு, “அக்கா நீங்க குட்டிக்கு மட்டும் ஏதாவது வாங்கி தாங்க. எங்களுக்கு எதுவும் வேண்டாம் அக்கா… போடி லூசு… இந்த அக்கா இருக்கேன்டீ உங்களுக்கு, புரியுதா… உனக்கு பிடித்த வாங்கிக்கோ அம்மு, ஆனா அது உனக்கு பயன்படறமாதிரி இருக்கனும் சரியா”. இதபத்தி எல்லாம் யோசிக்காமல் போய் அவங்களோடு சுத்திபாரு போ அம்மு எனக்கூறி அனுப்பி வைத்தாள் உமா.
இதை எல்லாம் கேட்ட மல்லி, “எப்படி புள்ள உன்னால இப்படி இருக்க முடியாது? இந்த பணம் அவங்களுக்கு மட்டும் தான் பத்தும், உனக்கு என்ன வாங்க போன உமா என்ற மல்லியிடம், அடி போடி… அவங்கதான் சின்ன புள்ளைங்க. அவங்களுக்கு வாங்காம எனக்கா வாங்க முடியும்? அதுவும் இல்லாம வீட்டுவேலை செய்யற எனக்கு என்னடீ விதவிதமாக வாங்க வேண்டி இருக்கு? எல்லாம் அவங்களுக்கு வாங்கினா போதும் வா” எனக்கூறி அவளையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள் உமா.
இதைகேட்ட சுந்தரம் தன் மனதில் ‘ஊருக்கு போவங்காட்டியும் இவங்களுக்கு எதாவது வாங்கிகொடுத்து தான் கூட்டிக்கிட்டு போகனும்’ என நினைத்துக்கொண்டே சென்றுவிட்டார்.
இரவு வரை வெளியே தோட்டத்தில் சுற்றியவர்களை சுப்பன் தான் வந்து அழைத்துச்சென்றார். ஏனோ அவர்களாகவே உள்ளே செல்ல அத்தனை தயக்கமாக இருந்தது இவர்களுக்கு… தயங்கித்தயங்கி சென்றவர்களை வரவேற்றது இரவு உணவை உண்ண வைத்தது அந்த வீட்டின் பெண்கள் தான்.
அன்பில்
ஆளுமையில்
இயல்பில்
ஈர்த்தாய்
என்னை …உணர்ந்தேன்
உலகை
அடைந்தேன்
உவகை …
கொண்டேன்
எங்கள் முத்தே(தூத்துக்குடி )
ஒப்பில்லா …
ஈஸ்வரியே
பெண்மை கடலில்
குளித்த முத்துக்கள்
அன்பு
பாசம்
விட்டுகொடுத்தல்
பகிர்தல்
சுயம்
என ஐம்பொன்னில்
கோர்த்து
அணிந்தோம் அழகாக
தோழியாய்சகோதரியாய்
தாயாய்
மகளாய்
உறவாய்
தொடர்ந்தோம் ……..தொடருவோம் ……….
அடுத்த பிறவியிலும்….
அன்பு தொடரும்….