அம்மையப்பன் 11
தந்தையின் மடியில் படுத்து.. சிறிது நேரம் கதையடித்து விட்டு தான் குழலி உறங்குவாள்.. ஆனால் இப்பொழுது திடீரென எல்லாம் மாறிய நிலை.. உறக்கமும் பிடிக்க வில்லை புரண்டு படுக்க வழியும் இல்லை.. ஷாலினி அவளை அணைத்தவாறு படுத்திருந்தாள்.. இங்கு இவள் இப்படியிருக்க.. அங்கு அம்மையப்பன் மாளிகையில் அகத்தியனும் தன் அறையின் பால்கனியில் நின்று இருளை வெறித்தவாறு இருந்தான்.. அறையின் வெறுமை.. அவனை மேலும் படுத்தியது..
அன்பழகி அவனை விட்டு சென்ற பொழுது.. அவனின் உலகமே இருண்டுவிட்டதாய் நினைத்தான்… ஆனால் அதற்கு ஒளியாய் அவன் மகள் இருந்தாள்.. தன் சோகம் மறைத்து.. அவனின் சேயே அவனை தாயாய் தாங்கினாள்.. ஏழு வயது குழந்தையிடம் இதனை யாரும் எதிர்பார்க்க வில்லை..
அகத்தியன் இனி தானும் தன் மகளும் மட்டுமே என புரிந்து.. தெளிந்து.. தன் மகளை தாய் இல்லாத குறை தெரியாத அளவிற்கு பார்த்துக்கொண்டான்.. ஆனால் உண்மையில் அவன் அவளை பார்த்ததை விட குழலிதான் அவனை தனிமையாய் எண்ண விடாது.. ஒவ்வொரு நொடியும் பார்த்துக்கொண்டாள்..
இருவருமே மற்றவரை எண்ணி உறங்காமல் முழித்திருந்தனர்.. அகத்தியனும் குழலியும் பிரிந்திருக்கும் முதல் நாள்.. இது.. அவள் பிறந்ததிலிருந்தே அவளை தோளில்லும் கரத்திலும் தான் தூங்க வைப்பான்.. வளர்ந்ததும் மடியில் துயிலவைப்பான்.. அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றபிறகே தன் அறைக்கு வருவான்..
அகத்தியன்.. அவர்களுக்குள் இப்படியொரு பிரிவு வரும் என எண்ணியதே இல்லை.. அவள் அமுதனுடனான திருமணத்திற்கு பிறகும் இங்கு தான் இருப்பாள்.. அதனால் தனக்கும் மகளுக்கும் பிரிவே கிடையாது என மகிழ்ந்து இருந்தவனுக்கு.. அவளின் கல்லூரி காலப்பிரிவு சற்று எதிர்பாராதது தான்.. அவனின் முடிவுதான் என்றாலும் அவனால் இதனை தாங்க முடியவில்லை..
வாரம் வாரம் வந்துவிடுவாள்.. மூன்று வருடம் சட்டென ஓடிவிடும் என அவனே தன் மனதிற்கு புரியவைத்து ஒருவழியாய் சமாதானம் செய்து கொண்டிருக்க.. பகலவன் மெல்ல எழும்ப ஆரம்பித்தான்..
விடுதியிலோ விடியற்காலை கண் அயர்ந்தாலும் அவளின் வழக்கமான ஆறு மணிக்கே துயில் களைந்து விட்டது.. மெல்ல ஷாலினியிடமிருந்து விலகியவள்.. கல்லூரி கிளம்ப தயாரானாள்..
அவள் குளித்துவிட்டு வந்தும் கூட அனைவரும் உறங்கிகொண்டிருந்தனர்.. ஷாலு எழுந்துக்கோ.. இன்னைக்கு தான் முதல் நாள் காலேஜ்.. தாமதமா போகக்கூடாதுடி.. எழுந்திரிடி.. என ஷாலினியை எழுப்பியவள்.. மற்ற மூவரையும் கிளப்பினாள்..
ஒருவழியாக மற்ற நால்வரும் வேகவேகமாக கிளம்ப.. குழலி போனையே பார்த்து கொண்டிருந்தாள்..
என்னடி அதையே அப்போலேருந்து பாத்துட்டு இருக்க..? என்றாள் சுபர்ணா..
இல்லடி ஐயா இன்னும் போன் பண்ணல.. என வாட்டமாக கூறினாள்..
மாமா ஏதும் வேலையா இருப்பாங்.. விடு.. என ஷாலினி சமாதானம் செய்து அழைத்து வந்தாள்..
கோயம்புத்தூரின் புகழ்பெற்ற பிரம்மாண்டமான அக்கல்லூரியின் வாயிலில் சற்று மிரட்சியுடன்.. ஷாலினியும் கார்குழலியும் நின்றுகொண்டிருந்தனர்.. இன்று அவர்களின் முதல் நாள்.. அவர்களோடு மற்ற மூன்று தோழிகளும் இருந்தனர்..
பைக்குகள் கார்கள் என வந்து கொண்டே இருந்தது.. ஆண்கள் பெண்கள் அனைவரும் வருவதுமாய் இருந்தனர்.. ஆங்காங்கே கூட்ட கூட்டமாக அமர்ந்து கொண்டு புது மாணவர்களை அழைத்து பேசிக்கொண்டிருக்க.. ஐவருக்கும் வயிற்றில் புளி கரைத்தது.. அதில் ஓரளவு தைரியமாக இருந்தது ரஞ்சனி மட்டுமே..
ஹேலோ பைவ் ஸ்டார் கேர்ள்ஸ்.. இங்க கொஞ்சம் வாங்க.. என ஒருவன் அழைக்க.. இவர்கள் முழித்தனர்..
என்ன முழிக்குறீங்க.. வாங்க என ஒரு பெண் அதட்ட.. ஐவரும் வந்தனர்..
என்ன சீனியர்ஸ் கூப்பிட்டா.. வர மாட்டிங்களா.. என ஒருவன் மிரட்ட..
சரி விடுடா.. இப்போவே பயமுறுத்திடாத.. என அடக்கி.. அவர்களின் பெயரைக்கேட்டாள்.. மற்றொருவள்..
நால்வரும் அவர்களின் பெயரை கூற.. குழலியின் முறை வந்தது.. கார்குழலி சீனியர்.. என்றாள்..
என்ன குழலி..
கார்குழலி..
ஹ்ம்ம் நல்ல பேருதான்..
என்ன நல்ல பேரு.. பாட்டி காலத்துல இருந்தத.. இப்போ வச்சுக்கிட்டு என கேலி செய்தவாரு வந்தவன்.. அக்கூட்டத்தின் மத்தியில் அமர.. குழலி முறைத்தாள்..
ஹேய் ஆழாக்கு சைசுல இருந்துகிட்டு இப்படியெல்லாம் மொறைக்க கூடாதுமா.. என மேலும் நக்கல் செய்தான் அவன்..
ஆமா மச்சான் பாரேன்.. நாம எவ்வளவு சாப்டா டீல் பண்றோம்.. இதுக்கே முறைக்குறாங்க என ஒருவன் சொன்னான்..
ஹ்ம்ம் அதானே தப்பாச்சே..
ம்ம்ம்ம் ஒழுங்கா இருக்கனும் ஜூனியர்… இப்படி திமிரா எல்லாம் பாக்க கூடாது.. தினமும் என்னை பாக்காம கிளாஸ்க்கு போக கூடாது.. காலேஜ் முடிஞ்சதும் என்கூட அரைமணி நேரம் பேசிட்டுதான் ஹாஸ்டல் போகணும்.. நைட்டு என்கூட கொஞ்ச நேரம் போன் பேசணும்.. வெட்னஸ்டே எனக்கு மறக்காம லன்ச்க்கு பிரியாணி வாங்கி கொடுக்கணும்.. அன்னைக்கு என்கூட தான் லன்ச்.. என்ன ஓகேவா.. இதுல ஒன்னு கூட மிஸ்ஸாக கூடாது.. என முகத்தை தீவிரமாக வைத்து கொண்டு கூறினான் அமுதன்..
குழலி ஷாலினி மற்றும் அக்கூட்டத்தில் இருந்த மதுமித்ராவை தவிர்த்து.. அனைவரும் அமுதனை ஒன்றும் புரியாது பார்த்து கொண்டிருந்தனர்..
மச்சி..
என்னடா..
இப்போ நீ என்ன பண்ற..
ஹ்ம்ம் பார்த்தா தெரியலை..
சத்தியமா தெரியலைடா.. என பாவமாக கூறினான்.. அப்பாவியான நண்பன்..
ப்ச் என அலட்சியம் செய்தவன்.. மேலும் குழலியை வம்பிலுக்க ஆரம்பித்தான்.. ஹ்ம்ம் கடைசி கண்டிஷன் என்னை எங்க பாத்தாலும் வந்து ரெண்டு வார்த்தை பேசிட்டு தான் போகணும்..
அப்படி செய்யலான என்ன பண்ணுவீங்க என கோபமாக கேட்டாள் குழலி..
ம்ம்ம்ம் ஏற்கனவே குட்டியா இருக்க உன்னை.. இன்னும் கொட்டி கொட்டி குட்டியாக்கி என் இடுப்புல தூக்கிட்டு போற சைசுக்கு மாத்திடுவேன்.. என குறும்பாக கூற.. குழலி முகம் சிவக்க மேலும் அவனை பார்த்தாள்..
ஹ்ம்ம்.. இப்படித்தான் அமைதியா இருக்கனும்.. அப்படியில்லாம வாய் பேசுன..
பேசுனா.. என இன்னொரு குரல் அவர்கள் பின்னிருந்து கேட்க.. குழலியும் ஷாலியும் சட்டென திரும்பினர்.. அங்கு வெள்ளை வேஷ்டி சட்டையில்.. வெள்ளையும் கருப்புமாக இருந்த தாடியும் முறுக்கிவிட்ட மீசையுமாய் கரங்களை பின்னால் கட்டியவாரு அகத்தியன் நின்றிருந்தான்..
அவனை கண்டதும் ஷாலினியும் குழலியும் அணைத்துக்கொள்ள.. அகத்தியன் அவர்களை அணைத்து கொண்டு.. சொல்லுங்க தம்பி பேசலேன்னா.. என்ன பண்ணுவீங்க.. என புருவம் உயர்த்தி கேட்டான்.. குழலி கேலியாக அமுதனை பார்த்து சிரிக்க.. உள்ளுக்குள் ரசித்தாலும் வெளியில் முறைத்தான்..
ஹலோ.. யாருங்க நீங்க.. பேரண்ட்ன்னா காலேஜ் வெளில வச்சு பேசுங்க.. இங்க எல்லாம் வரக்கூடாது.. அதோட இவன் யார் தெரியுமா.. இவன் தான் காலேஜ் சேர்மன்.. என பக்கத்தில் இருந்தவன் அமுதனுக்காக வக்காலத்து வாங்க.. அமுதன் அடேய் என உள்ளுக்குள் நொந்தாலும்.. வெளியில் கெத்தாக பார்க்க.. ஷாலினியும் குழலியும் வந்த சிரிப்பை கஷ்ட்டப்பட்டு அடக்கிக் கொண்டு இருந்தனர்..
அஞ்சு வயசுல ஜட்டி என அகத்தியன் ஆரம்பித்ததும் தான் தாமதம்.. அமுதன் போதும் என கைகளை உயர்த்தி காண்பிக்க.. உயர்த்திய கரத்தை பிடித்து முதுகோடு சேர்த்து அகத்தியன் முறுக்க.. அனைவரும் அதிர்ந்தனர்..
யோவ் மாமா விடுய்யா.. ஏன்யா இங்க வந்தும் என் இமேஜ டேமேஜ் பண்ற.. என அவ்வலியிலும் சலித்தவாறு கூறினான் அமுதன்..
பின்ன என்னடா பொம்பளை புள்ளைங்கள உன்னை நம்பி விட்டா.. நீயே கேலி பண்ணிக்கிட்டு கிடக்க.. என முதுகில் இரண்டு அடி போட்டே விட்டான்..
அமுதனின் நண்பர்கள் நடப்பது புரியாமல் முழித்து கொண்டிருந்தனர்.. டேய் லூசுங்களா அந்த ரெண்டு பொண்ணுங்களும் அமுதனோட ரிலேஷன்.. ஷாலினி அவனோட தங்கச்சி.. குழலி அவனோட முறைப்பொண்ணு.. அதான் ஐயா இவ்வளவு நேரம் ராக்கிங்குற பேருல ஜொள்ளு விட்டுக்கிட்டு இருந்தான்.. இவரு குழலியோட அப்பா.. அமுதனோட தாய்மாமா என அவர்களின் உறவுமுறையை விளக்கினாள் மதுமித்ரா..
ஓஹ் அதான் இப்படி பேசினானா..
ஹ்ம்ம்..
மாமா இதெல்லாம் சும்மா ஜாலிக்கு என இளிக்க.. அகத்தியன் பொய்யாய் முறைத்தான்..
ஐயா இத பாத்தா.. ஜாலிக்கு செஞ்ச மாதிரி தெரியலிங்.. ஏதோ ரொம்ப நா காத்திருப்பு போல தெரியுதுங் ஐயா.. என குழலி போட்டு கொடுத்தாள்..
ஆஹான் அப்படியா சொல்லுற அம்மணி..
அடியே போதும்டி.. உன்ற ஐயன் சும்மாவே ஆடுறாரு நீ சலங்கை வேற கட்டிவிடு.. என அமுதன் சலித்தான்..
அம்மணி இனி இவன் இந்த மாதிரி வம்பு பண்ணா ஒரு போனு மட்டும் போடு.. தோலை உறிச்சி போடுறேன்..
மாம்ஸ்.. நான் உன்ற வருங்கால மருமவன்ய்யா.. என பாவமாக சொன்னான்.. என்ன பிரயோஜனம் எத்தனை முறை சொன்னாலும் அப்பனும் மகளும் அவனை பங்கம் செய்வதை விடுவதில்லை..
ஹுக்கும் பொல்லாத மருமவன்.. என்ற மகள கட்டிக்கணும்னா கொஞ்சம் அடங்கி இருக்கனும்டா மாப்ளே.. என்ற அகத்தியன்.. நீங்க வாங்க கண்ணுகளா என ஐவரையும் கூட்டி சென்றான்..
தந்தையின் அணைப்பினுள் பாந்தமாக சென்று கொண்டிருந்தவள் மெல்ல திரும்பி.. மூக்கை சுருக்கி நாக்கை வெளியில் வைத்து.. அமுதனிடம் அழகு காண்பித்து விட்டு சென்றாள் கார்குழலி.. அதனை மொறைப்பும் சிரிப்புமாய் பார்த்து கொண்டிருந்தான் அமுதன்.. அவர்கள் கண் மறையும் வரை அவர்களையே பார்த்து கொண்டிருந்தான்..
அவர்கள் போய்விட.. அமுதன் தன் நண்பர்கள் புரம் திரும்ப.. அவர்களோ அவனை கொலை காண்டாக பார்த்து கொண்டிருந்தனர்..
ஏன்டா.. ஏன் இப்படி பாக்குறீங்க.. என ஒன்றுமே நடவதாதது போல் கேட்டான்..
அடேய் கொஞ்ச நேரத்துல எங்களையெல்லாம் கிறுக்கா மாத்திட்டடா.. என அவனை மொத்த ஆரம்பித்தனர்..
ஐயா இவங்க எல்லாம் என்னோட ரூமுல உள்ளவங்க.. ரஞ்சனி, கீர்த்திகா, சுபர்ணா என மூவரையும் அறிமுகம் படுத்தினாள்..
இவரு என்னோட ஐயன்.. அகத்தியன் அம்மையப்பன் என பெருமையும் கர்வமுமாக கூறினாள்..
வணக்கம் ப்பா.. பழகுன ஒரு நாளிலேயே குழலி உங்களை பத்திதான் நிறைய பேசினா.. என்றாள் ரஞ்சனி.. அகத்தியன் சிரிக்க.. மூவரும் அவர்களின் வகுப்பிற்கு சென்றனர்..
அகத்தியன் ஷாலினி குழலி இருவரையும் அவர்கள் க்ளாஸ் வரை சென்று விட்டு வந்தான்..
நான்கு வயதின் போது முதுகில் குட்டி பேக்.. கழுத்தில் குட்டி வாட்டர் பாட்டிலை மாட்டிக்கொண்டு.. குட்டி கவுன் மற்றும் ஷூவுடன் இரட்டை குடுமியுடன்.. பால் வெள்ளை சிரிப்புடன் இருந்த இரு மழலைகளையும்.. இரு தோளில் சுமந்து கொண்டு ப்ளே ஸ்கூல் கூட்டிசெல்வான்.. இப்பொழுது அவர்கள் கல்லூரி வந்திருந்தாலும் அவனுக்கு இருவரும் நான்கு வயது குழந்தைகள் தான்..
என்னதான் பிள்ளைகள் பழகட்டும் என வெளியே விட்டாலும்.. அவர்களின் முதல் நாள் கல்லூரி.. அவனே முன் சென்று விடவேண்டும் என எண்ணினான்..
****************************
குழலி தன் வகுப்பினுள் நுழைந்தாள்.. ஆண்கள் ஒருபுறமும் பெண்கள் ஒருபுறமும் அமர்ந்திருந்தனர்.. அப்பொழுது மூன்றாம் பெஞ்சில் இருந்த பெண் அவள் பக்கத்தில் அழைக்க குழலி அவ்விடம் அமர்ந்தாள்..
ஹாய் நான் ஸ்ருதிகா..
ஹலோ கார்குழலி.. என தன்னை அறிமுகம் படுத்திக் கொண்டாள்..
பிறகு கிளாஸ் ஆரம்பித்தது.. ஸ்ருதிகா இனிமையாக பேசினாள்.. அவள் வீட்டிலிருந்து வருகிறாள்.. தந்தை தொழிலதிபர் என பேசியதில் தெரிந்தது.. இன்னொரு பெண்ணும் குழலிக்கு பழக்கமானாள்.. சத்தியப்பிரியா அவளும் ஹாஸ்டல் என தெரிந்தது.. சென்னையை சேர்ந்தவள்.. அங்கு ஷாலினிக்கும் தோழிகள் கிடைத்தனர்..
இடைவெளியில் அவளைக் காண அமுதன் வந்துவிட்டான்..
எப்படி இருக்கு.. எல்லாம் ஓகேவா..
ஹ்ம்ம் ஒன்னும் பிரச்சனையில்லை மாமா..
சரி எதுவும்ன்னா கால் பண்ணு.. நான் ஷாலினி கிளாஸ்க்கு போயிட்டு வரேன் என சென்றான்..
தோழிகள் பிடித்து கொண்டனர்.. ஹேய் யாரது.. உங்க அண்ணனா.. என கேட்டாள் ஸ்ருதிகா..
ச்ச ச்ச.. என் மாமா.. என்றாள்..
ஓஹ்.. ரொம்ப க்ளோஸோ.. என கேட்டாள்.
ஹ்ம்ம் நான் கல்யாணம் பண்ணிக்க போறவங்க.. என முகம் சிவந்து கூறினாள்..
ஓஹோ.. சத்தியா கேலி செய்ய.. ஸ்ருதியும் சிரித்தாள்..
கல்லூரி முடியும் நேரம் ஐவரோடு சத்தியாவும் சேர்ந்து கொண்டாள்.. அமுதன் அவர்கள் ஹாஸ்ட்டல் வரை சென்று விட்டு வந்தான்..
பிறகு இங்கும் ஒரு அமுதனை குறித்தான விசாரிப்பும் கேலியும் கிண்டலும் நிறைந்து இருந்தது..
குழலி ஷாலினி விடுதி வந்து மூன்று மாதம் ஓடிவிட்டது.. வார நாட்களில் இருவரும் மேட்டுப்பாளையம் சென்று விடுவார்கள்.. அகத்தியன் கோயம்புத்தூரில் இருக்கும் வேளை.. கல்லூரி முடிந்த நாட்களில் எந்த வேலையும் இல்லையென்றால் அவனோடு ஜவுளிக்கடைக்கு சென்றுவிடுவார்கள்..
அன்பரசியும் யாழினியும் அடிக்கடி வந்து இருவரையும் பார்த்து விட்டு செல்வார்கள்.. ஜெயந்தி தினம் ஒரு முறை அழைத்து விடுவார் வீட்டிற்கு வரச்சொல்லி.. இவளும் பொறுமையாக அவரை சமாளித்து வைத்துவிடுவாள்..
முதல் இன்டர்னல் முடிந்து குழலி நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாள்.. ஷாலினிக்கு பிடித்த பாடங்கள் என்றாலும் அவைகளை எழுதுவதில் சிரமம் இருந்தது.. ஆனாலும் ஓரளவு நன்றாக செய்திருந்தாள்..
இன்னும் இருநாளில் அகத்தியனுக்கு பிறந்தநாள் வருகிறது.. கல்லூரியிலும் வார இறுதி நாளோடு தொடர்ந்து இருநாட்கள் விடுமுறை வந்தது.. அதனால் தன் மற்ற தோழிகளையும் அழைத்து கொண்டு மேட்டுப்பாளையம் செல்ல விரும்பினாள் குழலி..
ரஞ்சனி சத்தியா வீட்டினில் அனுமதித்து விட்டார்கள்.. ஆனால் கீர்த்திகா, சுபர்ணா, ஸ்ருதிகா இல்லத்தில் அனுமதி கிடைக்கவில்லை.. அதனால் யாழினி, ஷாலினி குழலியோடு ரஞ்சனி சத்தியா மட்டும் மேட்டுப்பாளையம் செல்கிறார்கள்.. அவர்களை அமுதன் கூட்டி செல்கிறான்..
குழலி மிகவும் மகிழ்ச்சியாக தந்தையின் பிறந்தநாளை எதிர்பார்த்து கொண்டிருந்தாள்.. நாளை கல்லூரி முடிந்ததும் எல்லோரும் கிளம்புகிறார்கள்..
இரவு அனைவரும் அரட்டை அடித்து கொண்டிருக்க.. அன்பரசியிடம் இருந்து போன் வந்தது..
ஹலோ அத்தாச்சி.. சொல்லுங்க சாப்பிட்டீங்களா..
குழலி உனக்கு எத்தனை தடவை சொல்றது.. என்ன அக்கானு கூப்பிடு.. இல்ல பேர சொல்லியாவது கூப்பிடு.. இந்த அத்தாச்சி மட்டும் வேண்டாம்..
அதெல்லாம் கூடாது.. உறவுமுறை சொல்லி அழைக்கிறதுதான் நல்லதுன்னு அப்பத்தா சொல்லுவாங்க.. என்றாள் குழலி..
அம்மா தாயே நீ உடனே பாடம் எடுக்க ஆரம்பிச்சுடாத.. என அன்பரசி அலுத்து கொண்டாள்..
சரி நாளைக்கு என்னோட பிறந்தநாள் உங்க எல்லாருக்கும் நாளைக்கு லன்ச் என்னோட ட்ரீட் ஓகேயா.. என சொன்னாள் அன்பரசி..
அத்தாச்சி ஐயாகிட்ட கேட்கணும் அதோட நாளைக்கு ஊருக்கு போறோம் என தயக்கமாக சொன்னாள்..
அதெல்லாம் நான் கேட்டுக்குறேன்.. நீ லன்ச் முடிச்சுட்டு ஊருக்கு போ.. உன் பிரெண்ட்ஸ்சையும் வரச்சொல்லு.. என மேலும் அன்பரசி வற்புறுத்தி சொல்லவும் குழலி சம்மதித்தாள்.. நாளை எப்படியும் வெளியே சென்றுதான் சாப்பிடுவதாக இருந்தது.. அதனால் அவள் பெரிதாக இதனை எண்ணவில்லை..
அகத்தியனிடமும் சொல்ல.. நண்பர்கள் அனைவரும் செல்கிறார்கள் கூடவே அமுதனும் இருப்பான் என்பதால் அவனும் சம்மதித்தான்.. ஆனால் விரைவினிலேயே இதற்காக வருந்த போகிறான் என அவனுக்கு தெரியவில்லை.. ஒரு நாளிலேயே தன் மொத்த ஜீவனையும் ஒருத்தி வாங்கிவிடுவாள் என பாவம் அகத்தியன் கற்பனை கூட செய்திருக்க மாட்டான்..
நாளைய பொழுது அவனுக்கு மட்டுமல்லாது அவன் குடும்பத்தினருக்கே மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.. அம்மையப்பன் வீட்டின் மூத்தவர்கள் செய்த வினையை இளையவர்கள் அறுக்கும் நேரம் வந்துவிட்டது.. நாளையிலிருந்து அவர்களின் மொத்த மகிழ்ச்சியும் குழைந்து.. அம்மாளிகையே ஆழிபேரலையில் சிக்கிய மரம் போல் சிதறப் போகிறது.. அகத்தியன் அதனை எல்லாம் கையறு நிலையிலிருந்து பார்க்க போகிறான்..