அம்மையப்பன் 13
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் என வாயில் விரல் வைத்து மிரட்டலாக பார்த்தவளின் தீட்சண்யத்தில் குழலியின் தேகம் நடுங்க ஆரம்பித்தது..
யாரு நீ.. எதுக்காக எங்கள இப்படி அடைச்சு வச்சுருக்க.. என்னோட மாமா யாரு தெரியுமா.. என அமுதன் பல்லைக் கடித்துக்கொண்டு ஆக்ரோஷமாக கத்தினான்..
கண்கள் மட்டும் தெரியுமாறு ஸ்கார்வ் அணிந்து.. வந்த நிமிடத்திலேயே அவ்விடத்தை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தவள்.. அப்பொழுது தான் பேச ஆரம்பித்தாள்..
ஹ்ம்ம் நல்லா… ரொம்ப நல்லாவே தெரியும்.. என அவன் சிரத்தில் ஃகன் வைத்து, திருநாவுக்கரசு அமிர்தவல்லியோட ஒரே பையன்.. திருச்செல்வன் பவளமல்லியின் இரு மல்லி மொட்டுக்கள் யாழினி ஷாலினி.. என அவர்கள் புரம் குறிவைக்க இருவரும் வெலவெலத்து போயினர்..
லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட் அம்மையப்பன் குடும்பத்தின் ஒற்றை ஆண் வாரிசு அகத்தியன் அம்மையப்பனோட செல்ல பொண்ணு கார்குழலி அம்மையப்பன் என குழலி மேல் குறிவைத்தாள்..
அம்மையப்பன் குடும்பத்தோட இளையவாரிசுகள்.. என நக்கலாக கூறினாள்..
தெரிஞ்சுமா.. இப்படி பண்ற.. இன்னும் ஒரு மணி நேரத்துல எங்கள இங்கயிருந்து எங்க மாமா கூட்டிட்டு போயிடுவாரு..
ம்ம்ம்ம்.. ஒரு மணிநேரத்துல உன் மாமனால என்னத்த புடுங்க முடியுதுன்னு.. நானும் பாக்கதானே போறேன் என நக்கலான சிரிப்புடன் கூறினாள்..
நீங்க ஏன் இப்படி பண்றீங்க அக்கா.. இவங்க உங்கள என்ன பண்ணாங்க என அதுவரை அமைதியாக இருந்த மதுமித்ரா கேட்டாள்..
ஓஹ்.. மேடமா.. உங்கள நான் பாக்கவேயில்லையே.. நீயும் இவங்களோட தான் இருக்கியா.. என கேலியாக கேட்டவள் முகம் நொடியில் இறுக்கத்தை கொண்டது..
என்ன கேள்வி கேட்கிற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துடுச்சா.. உன் கையில உள்ள தழும்பு அப்படியேதான இருக்கு என கேட்டாள்.. முகத்தில் இருந்த இறுக்கம் குரலிலும் பிரதிபலித்தது..
அதில் மதுமித்ரா உடல் நடுங்க நின்றிருந்தாள்.. அந்த தழும்பை நினைத்தாலே அவள் மூர்ச்சையாகி விடுவாள்.. அப்படியொரு ருத்ர தாண்டவத்தை அவள் முன் அரங்கேற்றியிருக்கிறாள் மற்றவள்.. இன்று ஏனோ நண்பனுக்காக சற்று தைரியம் கொண்டு பேச.. அதையும் முளையிலேயே வெட்டியெடுத்துவிட்டாள்..
மது யாரு இது.. உனக்கு இவள பத்தி தெரியுமா.. என அமுதன் கேட்க.. மதுமித்ரா பயத்துடன் தன் முன்றிருந்தவளை பார்த்தவள்.. என்னோட அக்கா என தயக்கத்துடன் கூறினாள்..
என்ன.. உன் அக்காவா.. அவ எதுக்கு என அமுதன் அடுத்து பேசுவதற்கு முன் அவன் வாய் கிழிந்து இதழ் ஓரம் ரத்தம் கசிய ஆரம்பித்தது..
ஐய்யோ.. மாமா.. என குழலி கீழே விழுந்திருந்த அமுதனை தூக்க முற்பட.. அவனோ உடல் இறுக தன் முன் நின்றிருந்தவளை முறைத்து கொண்டிருந்தான்..
என்ன.. நானும் சின்ன பையன் சாப்டா டீல் பண்ணுவோம்ன்னு பாத்தா ஓவரா துள்ளுற.. அவ இவங்கற.. மரியாதை முக்கியம்டா.. என்னோட குறி உன் வீட்டு பெரிசுங்க.. தேவையில்லாம நீ இதுல மூக்க நுழைச்சு உடம்ப புண்ணாகிக்காத.. என மிரட்டினாள்..
நல்லா கேட்டுக்கோங்க இன்னைக்கு முழுக்க நீங்க எல்லாரும் இங்கதான் இருக்கனும்.. நேரத்துக்கு எல்லாம் கிடைக்கும்.. என்னோட பேச்சைக் கேட்டு இருந்தா சேதாரம் இல்லாம போகலாம்.. மீறி அனாவசியமா பேசுனா.. போட்டு தள்ளிடுவேன்.. என்றவள்.. பாதுகாவலரை பார்க்க.. அவன் எல்லோரிடமும் போனை வாங்கினான்..
டாக்டரை பார்க்கவும்.. இந்த பையனுக்கு எல்லாம் ஓகே மேடம்.. ஒன் மந்த்ல சரியாகிடும் என ஆகாஷை பார்த்து கூறியவர்.. அந்த ரெண்டு பேருமே சீரியஸா இருக்காங்க மேடம்.. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனா காப்பாத்திடலாம் என அவளின் பார்வையில் கடகடவென ஒப்பித்தார்..
ப்ச்.. என சலிப்பாய் இரு புரமும் தலையாட்டியவள்.. சட்டென இருவரையும் சுட்டுவிட இழுத்து கொண்டிருந்த உயிர் பிரிந்து விட்டது..
ஆஆஆஆ.. என பெண்கள் அலற.. அவர்களை அவள் பார்க்கவும் வாயில் கரம் பதித்து தங்களின் அழுகைகளை அடக்கினர்..
கிளியர் இட்.. என சைகை செய்தவள்.. என்ன ஆம்பளை நீ, உன் வீட்டு பொண்ணு மேல கை வச்சிருக்கான்.. அவனை ஒரே அடியில போடுறத விட்டுட்டு.. இப்படி பண்ணியிருக்க.. உன்னால எனக்கு ரெண்டு புல்லட் வேஸ்ட் என சலிப்பாய் சொல்ல.. அமுதன் அவளை திகைப்பாய் பார்த்தான்..
அனைவரையும் ஓர் பார்வை பாத்தவாரு வெளியே செல்ல போனவள்.. சட்டென திரும்பி.. ப்ச் உங்களை வெல்கம் பண்ண மறந்துட்டேனே..
இரு கரத்தையும் விரித்து.. ஆல் ஆர் வெல்கம் டு அதி’ஸ் எம்பயர் என சொல்லி செல்ல.. அனைவரும் ஓய்ந்து அமர்ந்தனர்..
அடுத்த இரு நிமிடத்தில் மூன்று பேர் உள்ளே வந்து.. சடலங்களை ஒரு கவரில் வைத்து எடுத்துச்சென்றனர்.. இதனையெல்லாம் பயந்து பார்த்து கொண்டிருந்த சத்தியாவிற்கு மயக்கமே வந்துவிட்டது..
சத்தியா.. என்னாச்சுடி.. சத்தியா என அனைவரும் உலுக்க.. டாக்டர் அவளை பரிசோதித்தார்..
ஒன்னும் இல்ல.. அதிர்ச்சி இல்ல பயத்துல மயங்கியிருக்கலாம்.. கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சரியாகிடும் என ஒரு ஊசியை போட்டுவிட்டவர்.. மறுபடியும் தன்னிடத்திற்கு சென்றார்..
**********************************
அன்றைய பொழுது விடிந்ததிலிருந்தே அகத்தியனின் மனதில் ஏதோ ஓர் அலைபுருதல்.. அனைத்துமே தவறாக நடந்தது.. குழலி அமுதன் என அனைவருக்கும் காலையிலிருந்து பத்து முறைக்கு மேல் அழைத்து பேசியிருந்தாலும் மனம் சமன் பட மறுத்தது..
அவனும் காலையிலேயே கோவை கிளம்ப இருந்தான்.. ஆனால் அதற்குள் குன்னுர் தொழிற்சாலையில் இருந்து பிரச்சனை என போன் வரவும் அங்கு செல்ல வேண்டிய சூழ்நிலை..
இந்த நினைப்போடே சுற்றிகொண்டிருந்தவனின் செவியில்.. மரகதம் காலையில இருந்து இடது கண்ணு துடிச்சுகிட்டே இருக்குதுடி.. ஏதோ கெட்டது நடக்க போற மாதிரி தோணுது.. என பேச்சியம்மை கவலையாக கூறிகொண்டிருந்தார்.. அதை கேட்டு மேலும் குழம்பிய.. அகத்தியன் உடனே அமுதனுக்கு அழைத்துவிட்டான்..
என்ன மாமா.. என்னாச்சு போன் மேல போனா பண்ணிக்கிட்டு இருக்கீங்க.. என கேட்டான்..
ஒன்னுமில்ல அமுதா.. புள்ளைங்கள எல்லாம் கூட்டி வரியே பாத்து பத்திரமா வான்னு சொல்ல கூப்புட்டேன்.. எங்க இருக்கீங்க..
இதோ ஹோட்டலுக்கு வந்துட்டோம் மாமா.. எல்லாரும் சாப்புட்டுட்டு இருக்காங்க.. ஒரு மணிநேரத்துல கிளம்பிடுவோம் என அமைதியாக கூறினான்.. மாமனின் குரலிலேயே அவரின் மனதை உணர்ந்தவன் வேறெந்த வம்பும் செய்யவில்லை..
அகத்தியன் போனை வைத்துவிட்டாலும் மனம் சமன் படமறுக்க.. கோயம்புத்தூர்க்கு கிளம்பிவிட்டான்.. அவனின் மனதின் கவலையில் ஹோட்டலின் பெயரை கேட்க மறந்துவிட்டான்.. அமுதனும் சொல்ல மறந்துவிட்டான்..
அகத்தியன் போன் செய்த சிறிது நேரத்தில் தான் இத்தனை களேபரமும் நடந்தது..
********************************
அமுதன் முகம் இறுகி அமர்ந்திருக்க அவனுக்கு அருகில் ஷாலினி குழலி ரஞ்சனி மதுமித்ரா என அனைவரும் சோர்ந்து போன முகத்தோடு அமர்ந்திருந்தனர்..
ஆகாஷ் ஒரு மெத்தையில் படுத்திருக்க அதன் கீழே அன்பரசி இருந்தாள்.. மற்றொரு சிங்கிள் மெத்தையில் சத்தியாவை படுக்க வைத்திருந்தனர்..
இதில் அன்பரசி வேறு அவள் அண்ணனை பார்த்து அழுது கொண்டிருக்க.. யாழினி கோபத்தில் வெடிக்க ஆரம்பித்தாள்..
போதும் உன் நீலிகண்ணீர நிறுத்துறியா.. உன்னால தான் நாங்க எல்லாரும் இப்படி வந்து மாட்டிருக்கோம்.. என யாழினி கத்த.. அன்பரசிக்கும் மனஅழுத்தம் எல்லாம் கோபமாக உருமாறியது..
ஆமா உண்மை தான்.. ஆனா எல்லாத்துக்கும் நான் மட்டும் காரணம் கிடையாது.. அவங்களுக்கு உங்க குடும்பத்து மேலதான் ஏதோ பகை.. அதுனால தான் இப்படி அடைச்சு போட்ருக்காங்க.. உங்களால தான் நாங்களும் மாட்டியிருக்கோம் என அவளும் கோபமும் அழுகையுமாக கத்தினாள்..
ப்ச் நீங்க ரெண்டு பேரும் கத்தி உங்க எனர்ஜியை வேஸ்ட் பண்ணாதீங்க..
யாழினி, அதி நினைச்சா எப்படியும் உங்களை கடத்தியிருப்பா.. நீங்களே ஏதேச்சய இங்க வந்ததால இன்னைக்கு கடத்திட்டா அவ்வளவு தான் என மதுமித்ரா அமைதியாக கூறினாள்..
ஓஹோ.. ரொம்பத்தான் சப்போர்ட் பண்ற.. என்ன நீயும் உங்க அக்கா கூட சேர்ந்து திட்டம் போட்டியா என யாழினி அவளிடமும் கத்தினாள்..
மதுமித்ரா அவளுக்கு பதில் கூறாமல் அமுதனை பார்த்தாள்.. அதில் நண்பனும் தன்னை தவறாக நினைக்கிறானா என்ற தவிப்பு இருந்தது..
அமுதன் அவளை பார்த்து மெல்ல இதழ் விரிக்கவும் தான் அவள் மனது அமைதியடைந்தது.. இப்பொழுது யாழினியை பார்த்து பேச ஆரம்பித்தாள்..
இந்த ஹோட்டலுக்கு தான் வரப்போறோம்ன்னு எனக்கு முன்னாடியே தெரியாது.. இது என்னோட அக்காவோட ஹோட்டல் தான்.. ஆனா நான் இங்க வரது இதுதான் முதல் தடவை.. எனக்கே இங்க வந்தது ஷாக் தான்..
அதி என்னோட அக்காவா இருந்தாலும் அவங்க ஒருநாள் கூட என்னோட இருந்ததில்லை.. இன்னும் சொல்லனும்னா அவங்க எங்க பெத்தவங்க கூடயே சரியா பேசுனதும் கிடையாது பழகுனதும் கிடையாது.. என்னோட இந்த தழும்பை பாரு.. இது எப்படி வந்துச்சு தெரியுமா.. அதி என்னோட ஏழு வயசுல கத்திய வச்சு கிழிச்சதால வந்தது.. என ஒரு விரல் நீளமுள்ள தழும்பை காண்பிக்க அனைவரும் அதிர்ச்சி யடைந்தனர்..
அப்போ அவங்களுக்கு வெறும் பதினஞ்சு வயசு தான்.. ஆனா அவங்க அப்போ எனக்கு செஞ்சது என நினைக்கும் போதே என மதுமித்ராவின் உடல் நடுங்கி.. முகமெல்லாம் வியர்வையில் குளித்தது..
உடனே அமுதனும் குழலியும் அவள் இருபக்கமும் அமர்ந்து அவளை சமாதானம் செய்தனர்.. மெல்ல மூச்சுகாற்றை இழுத்து வெளியிட்டு தன்னை சமன் செய்து.. மீண்டும் பேச ஆரம்பித்தாள்..
அதி எதுக்கு உங்கள இப்படி அடைச்சு வச்சுருக்காங்கன்னு தெரியல.. உங்க வீட்டுல உள்ளவங்களால ஏதோ நடந்திருக்கு.. பிஸ்னஸ்ல ஏதாவது செய்திருக்கலாம் எனக்கு சரியா தெரியலை.. ஆனா ஒன்னு.. கண்டிப்பா இனி அதி உங்களை சும்மா விடமாட்டாங்கன்னு மட்டும் எனக்கு தெரியும்..
அதி கொஞ்சம் அமைதியா பேசுறது எங்களோட அப்பாகிட்ட மட்டும் தான்.. அவருகிட்ட சொல்லலாம்னு பாத்தா.. என் போனை வாங்கிட்டாங்க.. என மதுமித்ரா சோர்ந்து கூற அமுதன் முகம் மேலும் இறுகியது..
கண்டிப்பா என் குடும்பத்துல உள்ளவங்க யாரும் எந்த தப்பும் செய்ய மாட்டாங்க.. எனக்கென்னமோ உங்க அக்கா தான் தப்பா புரிஞ்சிருக்காங்கன்னு தோணுது.. அப்படி ஏதாவது செய்திருந்தாலும் தப்பு உங்க அக்கா பக்கம் தான் இருக்கும் என குழலி தன் குடும்பத்தினரின் மேல் உள்ள நம்பிக்கையில் பேசினாள்..
ஆமா அப்படித்தான் இருக்கும்.. சர்வ சாதாரணமா கொலை பண்றவ நல்லவளாவா இருப்பா.. அவ ஆளும் ட்ரெசும் கண்டிப்பா அவ கேடு கெட்டவளாத்தான் இருப்பா.. என யாழினியின் வார்த்தைகள் வரம்பு மீறி போய்க்கொண்டிருக்க.. மதுமித்ராவின் முகம் வருத்தம் கொண்டது.. என்ன இருந்தாலும் அவளின் சகோதரி அல்லவா..
போதும்.. கொஞ்சம் நிறுத்து.. இருக்கிற பிரச்சனையில நீ வேற புதுசா ஒன்னு ஆரம்பிக்காத.. என ஷாலினி திட்ட.. யாழினி அவளையும் வாய்க்கு வந்தப்படி திட்ட ஆரம்பித்தாள்..
போதும் யாழினி.. என அமுதன் அழுத்தமாக கூறவும் தான் அவள் வாய் அமைதியானது..
***********************************
கோவை மாநகரின் ஆணையர் அலுவலகத்தில் முகம் இறுகி அமர்ந்திருந்தான் அகத்தியன்.. அவனோடு அரவிந்தனும் சரவணனும் பதட்டத்துடன் இருந்தார்கள்..
சார்.. கமிஷ்னர் கூப்புடுறார்.. என காவலதிகாரி சொல்ல மூவரும் உள்ளே சென்றனர்..
வாங்க மிஸ்டர் அகத்தியன்.. சாரி ஒரு மீட்டிங்ல இருந்தேன்.. சொல்லுங்க என்ன விஷயம் என அவர்கள் முகத்தை வைத்தே ஏதோ சரியில்லை என அவருக்கு புரிந்தது..
எங்களோட பசங்கள காணும் சார்.. என்றான் அரவிந்தன்..
என்ன சொல்றிங்க.. எவ்வளவு நேரம் ஆச்சு.. த்ரட்டன் கால் எதுவும் வந்துச்சா என சூழ்நிலை புரிந்து அடுத்தடுத்த கேள்வியை கேட்டார்..
இல்ல சார்.. எந்த காலும் வரல எங்க பசங்க ஹோட்டளுக்கு சாப்பிட்டு ஊருக்கு வரதா இருந்தாங்க.. கடைசியா நான் ஒரு ரெண்டரை போல போன் பண்ணும் போது.. ஒரு ஒருமணிநேரத்துல கிளம்புறதா சொன்னாங்க.. நானும் கோவைக்கு ஒரு வேலையா வந்தேன்.. ஒரு அரைமணி நேரம் கழிச்சு எந்த ஹோட்டலுல இருக்கிங்க கேட்குறதுக்கு போன் பண்ணேன்.. யாரோட போனும் போகலை..
எங்க வீட்டு பொண்ணுங்களோட தோழிங்க மூனு பேரு அவங்க கூட இருந்தாங்க.. அவங்க போனும் ரீச் ஆகலை சார் என அகத்தியன் நடந்ததை முழுதாக கூறினான்..
எந்த ஹோட்டல்.. அவங்க ப்ரெண்ட்ஸ் எல்லாம் எப்படி..
எந்த ஹோட்டலுனு தெரியல சார் என அகத்தியன் சொல்லும் பொழுதே அவன் முகம் அவனுடைய கவனமின்மையில் சிறுத்து போனது.. அதோடு ஏழு பெண்களை எண்ணி அவன் மனது துடிதுடித்து போனது..
இத்தனை நாள் பேப்பரிலும் தொலைக்காட்சியிலும் பெண்பிள்ளைகளுக்கு நடந்த கொடூரம் எல்லாம் நியாபகம் வர அவன் ஒவ்வொரு நொடியும் செத்து கொண்டிருந்தான்..
அவங்க எல்லாம் நல்ல பசங்க தான் சார்.. இன்னைக்கும் எங்களோட வீட்டுக்கு வரதா இருந்தாங்க.. சார் இத கொஞ்சம் பர்சனலா விசாரிங்க.. கம்பளைண்ட் இப்போதைக்கு வேண்டாம்.. என கேட்டு கொண்டான்..
இது கொஞ்சம் ரிஸ்க்கு தான்.. உங்களுக்காக முயற்சி பண்ணுறேன்..
சார் பசங்களுக்கு ரெண்டு மணிக்கு காலேஜ் முடியும்.. இன்னைக்கு அரை நாள்ன்னு சொல்லிருந்தாங்க.. ஒரு மணிக்கு ஹாஸ்டல்ல இருந்து எல்லாரும் கிளம்பியிருக்காங்க.. ரெண்டு போல ஹோட்டலுக்கு போயிட்டாங்க.. அந்த டிஸ்டன்ஸ் உள்ள பெரிய ஹோட்டல் பேரடைஸ், கிராண்ட், ப்ளூ ரோஸ் இது மூனும் தான்… இதுல உள்ள ஒரு ஹோட்டல்ல தான் பசங்க கண்டிப்பா போயிருப்பாங்க.. அங்க விசாரிக்க போனேன் பட் சரியான ரெஸ்பான்ஸ் இல்ல.. மத்த ரெண்டு ஹோட்டலை விட ப்ளூ ரோஸ் ஹோட்டல் மேல எனக்கு சந்தேகம் அதிகமா இருக்கு.. என இதுவரை பிள்ளைகளை தேடி அலைந்து திரிந்து.. அறிந்து கொண்டதை சொன்னான்..
கமிஷனர் அவனை ஆச்சரியமாக பார்த்தார்.. அதோடு இது எங்களோட பசங்க போன் நம்பர்.. இது கார் நம்பர்.. இரண்டும் கடைசியா எந்த இடத்துல லொகேட் ஆகிருக்கு…. முக்கியமா எந்த ஹோட்டல அவங்க இருந்தாங்கனு மட்டும் கண்டுபிடிங்க சார்.. மத்தத நான் பாத்துக்குறேன்.. என முகம் இறுக சொன்னான் அகத்தியன்..
கமிஷனர் அங்குள்ள காவலதிகாரியை அழைத்து அவன் சொன்னதை சொன்னார்.. ஒரு பத்து நிமிடத்தில் அவர் வந்துவிட்டார்.. சார் அவங்க ப்ளூ ரோஸ் ஹோட்டல்ல தான் சார் சாப்பிட்டு இருக்காங்க..
அவங்க போன், கார் லொகேஷன் என ஆரம்பித்தவர் சற்று தயங்க..
என்ன கணேசன் சொல்லுங்க..
சார் அமுதன் சாரோட கார் மேட்டுபாளையத்துல உள்ள அவங்க வீட்டுக்கு வெளில தான் இருக்கு.. ஆகாஷ் காரும் அவங்க வீட்டுக்கு வெளில தான்.. அதோட எல்லார் போனும் மேட்டுப்பாளையம், கோவைன்னு அங்கதான் காமிக்குது சார் என அவர் சொல்லவும் விருட்டென எழுந்தான் அகத்தியன்.. அவன் முகத்தின் ஆக்ரோஷத்தை கண்டு கமிஷனரே பயந்துவிட்டார்..
நன்றி சார் இதுக்கு மேல நான் பாத்துக்கிறேன் என குரல் இறுக சொல்லி செல்ல.. அரவிந்தனும் சரவணனும் அவனை பின்தொடர்ந்தனர்..
எவன் மாப்புள அது.. நம்ம ஊருக்கே வந்து நம்ம பிள்ளைகளை கடத்தியிருக்கானுங்க.. அதோட காரையும் போனையும் நம்ம வூட்டு வாசல்லையே போட்ருக்கானுங்க.. இவைங்களுக்கு எம்புட்டு திண்ணக்கம் இருக்கனும்.. என ஆத்திரமாக கத்தினார் அரவிந்தன்..
அகத்தியன் எதுவும் பேசவில்லை.. அவன் வேகமாக ப்ளூ ரோஸ் ஹோட்டலை நோக்கி சென்று கொண்டிருந்தான்..
மச்சான்.. இப்போ என்ன பண்ணுறது.. வீட்டுல உள்ளவங்ககிட்ட சொல்லிடலாமா என சரவணன் கேட்டான்..
வேண்டாம்.. என்னோட பசங்க இன்னும் ஒருமணிநேரத்துல என் வூட்டுல இருப்பாங்க.. என்று மட்டும் சொன்னான்..
கார் ப்ளூ ரோஸ் ஹோட்டல் உள்ளே சென்றது.. வேகவேகமாக உள்ளே சென்றவன்.. அவன் எதிரே வந்த ஹோட்டல் ஊழியரின் சட்டையை பிடித்து இழுத்தான்..
சார் சார் என்ன பண்றீங்க.. விடுங்க.
உன் முதலாளி எங்கடா..
சார் அவங்க எங்க இருக்காங்கன்னு எனக்கு தெரியாது..
யாருக்கு தெரியும்.. சொல்லு..
ஜிஎம் சாருக்கு தான் தெரியும் சார்.. அவரு அதோ அங்க தான் இருப்பாரு எனவும்.. அகத்தியன் அவனை தள்ளிவிட்டு அவ்விடம் விரைந்தான்..
சார் யாரு நீங்க.. பெர்மிஷன் இல்லாம எப்படி என்னோட ரூமுக்குள்ள வரலாம் என கேட்டு கொண்டிருக்கும் போதே அவனை எட்டி உதைத்தான்..