தடுமாறிய பௌலர்களின் தவறுகளை ஒரு கேப்டனாக அஸ்வின் சென்று சுட்டிக்காட்ட முதலில் ரன் வேகத்தை குறைத்து பிறகு அவர்கள் ஏத்தினரியினர் எடுத்திருந்த ரன்களுக்கெள்ளாம் சேர்த்து எதிரணி வரிசையாக விக்கெட்டுகளை இழக்க இந்திய வீரர்களோடு சேர்த்து மொத்த மைதானமும் கூச்சலிட்டு தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தியது.
மகிழ்ச்சியில் திளைத்திருந்த அணியினர் ஒவ்வொரு விக்கெட் விழுகும் பொழுதும் கத்தி கூச்சலிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
அதற்கடுத்து பேட் செய்த இந்த அணி மீதம் பத்து ஓவர்கள் வைத்து போட்டியை முடித்திருக்க அதில் அஸ்வின் எண்பத்தி ஒன்பது ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருந்தை வென்றிருந்தான்.
இரவு பதினொன்றை தாண்டி இருந்தும் இறுதி வரை அஸ்வின் பேசுவது பரிசு வாங்குவது என அனைத்தையும் பார்த்து விட்டு தான் பொழுதே முடிந்தது.
வீரர்களின் அபார ஆட்டத்திற்கான காரம் கேட்ட பொழுது அஸ்வின் அணிக்கு கொடுத்த சுதந்திரம் தான் என்று கூறிவிட அவ்வளவு தான். சாதாரணமாகவே அவனை கொண்டாடும் ரசிகர்களுக்கு இது இன்னும் தீனியை போட்டது போல் ஆகிவிட்டது.
இணையம், செய்தி என அசால்டாக உலா வர துவங்கினான். அன்று மட்டுமல்லாது அதற்க்கு தொடர்ந்து வந்த போட்டி அனைத்திலும் இந்திய அணி அபாரமாக செயல்பட்டது.
எப்பொழுதும் போல் சாதாரணமாக செயல்படவில்லை அஸ்வின் தலைமையிலான இந்திய அணி. பல மாற்றங்கள், ஆக்ரோஷம், தீவிரம், விளையாட்டு என புதிய மரிமாணத்தில் நுழைந்திருந்த அணியினரை பார்க்க மக்களுக்கும் தெவிட்டவில்லை.
நடந்த நான்கு போட்டியிலும் வெற்றியை தழுவியிருந்த அந்த குட்டி குடும்பம் நீங்காமல் மக்களின் மனதினில் இடத்தினை பிடித்திருந்தது. இப்பொழுதே கால் இறுதிக்கு தேர்ச்சி பெற்றது போல் தான்.
இன்னும் இரண்டு போட்டி முடிந்தால் அதன் பிறகு தான் முக்கிய சோதனை. அன்று எப்பொழுதும் அழைக்கும் நேரத்திற்கு மனைவிக்கு அஸ்வின் அழைக்க அவன் அன்னை தான் அழைப்பை எடுத்து ஆரோஹி உறங்குவதாக கூற பிறகு பேசுகிறேன் என இவனும் வைத்துவிட்டான்.
தொடர்ந்து மூன்று நாட்கள் பிறகு தான் ஆரோஹி அழைத்தாள். குரலே சரியில்லை, சோர்வு தட்டியது அப்பட்டமாக தெரிந்தது. பேசி பார்த்தும் உறக்கத்தை காரணம் காட்டி ஓடிவிட்டாள்.
இரண்டு நாட்கள் பிறகான போட்டியில் மன அழுத்தம் மொத்தத்தையும் அந்த மட்டையில் காட்டி நூற்றி எழுவதை கடந்திருந்தான். அஸ்வினின் அந்த தாண்டவத்தை பார்த்த எதிரணியினர் அவனை வீழ்த்த போட்ட அத்தனை திட்டங்களும் தோற்று போய் திணறினர்.
கூட்டமாய் கூடி கூடி நின்று பேசியவர்களை பார்த்து இறுகிய முகமாய் ஓரம் நின்றுவிட்டான். நூறு அடித்த பொழுதும் மகிழ்ச்சியில், நூற்றி அம்பதை தாண்டியும் மகிழ்ச்சியில்லை.
பெரிய இலக்கை நிர்ணயிக்க எதிரணியினர் இருநூறு தாண்டவே திண்டாடி போயினர் அஸ்வினின் சக்ரவியூகத்தில். அன்றென பார்த்து ஒரு கிரிக்கெட் வீரருடன் அஸ்வின் சண்டைக்கு சென்றுவிட சிறு போர்க்களம் போன்ற சூழல் உருவாகியது.
அன்று நடைபெறவிருந்த பிரஸ் மீட்டிற்கும் அவன் செல்லாமல் பயிற்சியாளர் மற்றும் அன்று சிறப்பாக செயல்பட்ட ஒரு பந்துவீச்சாளரையும் அனுப்பி வைத்தான். அதற்கும் உடனே சச்சரவு கிளம்பியது.
அரசல் புரசலாக அஸ்வினுக்கு திருமணம் ஆனதும் வெளியே வந்தது. எதையும் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை. தங்கள் நாயகனின் முகத்தினில் புன்னகையை தேடி தேடி ரசிகர்கள் ஓய்ந்து போயினர்.
“என்ன இது முகமே சரியில்ல?” அடுத்த நாள் குறைப்பட்டாள் மனைவி.
“வீடியோ கால் வா ஆரூ”
“இங்க ஒழுங்கா டவர் இல்ல நாராயணா, நார்மல் கால் பேசலாம் போதும்” ஏற்கனவே பொறுமையில்லாமல் இருந்தவனுக்கு சினம் கூடியது,
“எனக்கு பொறுமை இல்லடி. உனக்கு ஏதோ சரியில்லைன்னு குத்திட்டே இருக்க மனசு சொல்றது நடந்துட்ட கூடாதுன்னு தவிக்கிறேன். முகத்தை காட்டு” கேட்டான் கெஞ்சும் குரலில்.
அவனுக்கே அவனுக்காக வேகமாக முகத்தை சரி செய்தவள் எழுந்து ஜன்னலோரம் சென்று நின்றாள். நிலவின் வெளிச்சம் கொஞ்சம் முகத்தில் பட்டு சற்று பொலிவோடு தான் காட்டிக்கொண்டாள்.
“பாருங்க நல்லா தானே இருக்கேன்”
“லைட் போடு ஆரு” தெளிவில்லாமல் இருந்த காணொளி அவனுக்கு திருப்த்திப்படவில்லை.
“அத்தை தூங்கிட்டு இருக்காங்க”
“சரி கை காட்டு” என்றான்.
தயக்கமின்றி காட்டியவள் கைகள் எங்கும் அந்த இருளிலும் சிவந்து காணப்பட்டது.
அவளது கையை மெல்ல வருடி ஆறுதல் கூறாமல் தோற்று நின்றாவன் .
“வலிக்கிதா ம்மா?”
தோளை குலுக்கி புன்னகைத்தாள், “இந்த வலியெல்லாம் தங்குனா தானே உங்ககூட சண்டை போட்டுட்டே ஜாலியா சுத்த முடியும்?”
சிரிக்க முடியாமல் கடமைக்காக சிரித்தான் அஸ்வின், “தைரியம் வந்துடுச்சு போல?”
“ஆமா பின்ன மோட்டிவேஷனல் ஸ்பீக்கர் இந்தியன் கிரிக்கெட் டீம் கேப்டன் ஆச்சே, வேர்ல்ட் கப் வின் பண்ணி பிரஸ் மீட்ல பேசுறது வச்சு ஒரு குட்டி புக் கூட குடுக்கலாம் போல”
“ஹாஹா… என்ன மேடம் முடிவே பண்ணிட்டிங்களா?”
“ம்ம்ம் கண்டிப்பா. கிரிக்கெட்டரே எனக்கு ஒரு ஆசை” கண்களில் ஆசை மின்ன பார்த்தாள்.
முரண்பாடற்ற பேரன்பின் சாயல் எத்தனை அழகென அவளை பார்த்து வியந்தவன், “என்னடா, சொல்லு செஞ்சிடலாம்”
“உங்களோட முடிக்கு வைட் கலர் டை அடிச்சு ஒரு மாசம் அதோடேயே சுத்த விடணும்”
“அடி பாவி கிழவனாக்க பாக்கறியா?”
“நீங்க கிழவன் தானே? வாழ்ந்து முடிச்சவர் மாதிரி பொண்டாட்டிய பக்கத்துல வச்சுட்டு லவ் வழியிற கண்ணோடவே இருந்துட்டீங்க, இழுத்து வச்சு ஒரு உம்மா குடுத்திருந்தா தானே இளந்தாரி பயனு சொல்லிருப்பேன்?”
“ம்ம்ம் சொல்லும் சொல்லும் இந்த வாய். இழுத்து புடிச்சிருந்தா இந்த கண்ணு எவ்ளோ தூரம் விரிஞ்சு பயத்துலயே என்ன கடைசி வர பாத்துருக்கும்னு தெரியாது பாரு” என்றான் அவளை நன்கு அறிந்தவனாய் அஸ்வின்.
“ஒரு நிமிஷம் ஆரூ” எழுந்து சென்றவன் வரும் பொழுது கையில் ஒரு காகிதத்தோடு வந்து அதனை அவளுக்கு திரையில் விரித்து காட்டினான். பத்திரம் போல் தெரிந்தது.
பொதுவாக ஆரோஹி இதுவரை அஸ்வின் சொத்து விவரம், தொழில் சார்ந்த விவரம் எதிலும் தலையிட்டதில்லை. அவனே அனைத்தையும் அவளோடு பகிர்ந்திடுவான்.
“ஓ புது ப்ராபர்ட்டி? இல்ல எதுக்காவது ப்ராண்ட் அம்பாசிடர்?”
“இது அதெல்லாம் விட மேல” எதையோ சாதித்த உணர்வு அஸ்வின் முகத்தில், “உன்னோட மோஸ்ட் பேவரேட் ப்ளேஸ் பத்திரம்” தளர்ந்து சாய்ந்திருந்த ஆரோஹி உடல் சட்டென விறைத்தது.
“கூடிய சீக்கிரமே உன் பேர்ல வந்துடும் உன் தோப்பு. உனக்காகன்னு கேட்டு போய் பாத்தேன் உன் சித்தப்பாகிட்ட, கேக்கல. அதான் சித்தார்த் வச்சு மூவ் பண்ணிட்டேன். பிஸ்னஸ் மேன் மூவ் தான் அங்க பலிச்சது”
சிலையென நின்றிருந்த மனைவியை பார்த்து மெல்ல சிரித்தான், “உன்கிட்ட நேர்ல பாத்து தான் கொடுக்கணும்னு ஆசைடா, ஆனா இப்போ சொல்லணும்னு தோணுச்சு. சந்தோசம் தானே ஆரூ?”
கண்கள் கலங்கி, “அஸ்வின் அவரை…”
“தப்பா எதுவும் பண்ணலடா. நினைச்சிருந்தா லீகலா கேஸ் பைல் பண்ணி மொத்த சொத்தையும் வாங்கியிருக்க முடியும். ஆனா அதை நீயே செய்ய விரும்பாதபோ நானும் பண்ண மாட்டேன். லெட் தெம் சபர் பை நேச்சர்ஸ் பனிஷ்மென்ட்”
கண்ணீர் பெறுக முகம் திருப்பி கண்ணீரை துடைத்தவள் இதழ்கள் புன்னகையில் விரிந்திருந்தது, “நாராயணா உங்கள டைட்டா ஹக் பண்ணனும் போல இருக்கு”
“ஆசைய தூண்டாதடி பொண்டாட்டி, நீ எதிர்பாக்குற மாதிரி கப்ப கைல வச்சிட்டு இவ தான் உலகம்னு ஊருக்கே காட்டி தான் உன்கிட்ட வருவேன்”
அழுகையை குறைத்து சிரித்த ஆரோஹி பெருமையை மறைத்து, “யார ஏமாத்த பாக்குறீங்க, சிங்கள்னு சொல்லி பொண்ணுங்க கூட்டத்தை தக்க வச்சுக்க பாக்குறீங்க. இருக்கட்டும் இருக்கட்டும்”
அழகாய்… மிக மிக அழகாய் அன்றிரவு இருவரின் இரவும் கழிந்தது.
அந்த ஒரு இரவின் குளுமையே அடுத்து பத்து நாட்கள் அஸ்வினுக்கு உயிர் கொடுத்தது. மீண்டும் மனைவியிடம் பேசாமல் மூன்று நாட்கள் கழிய மாறி மாறி அஸ்வின் பேசி பார்த்தான் வீட்டினரிடம்.
எங்கும் பதில் வரவில்லை. உறங்குகிறாள், மருத்துவர் உள்ளார் என காரணங்கள் அடுக்கிக்கொண்டே சென்றது. காலிறுதி போட்டியை முன்னே வைத்து அவளிடம் பேசாமல் அவனுக்கு எந்த வேலையும் ஓடவில்லை. சித்தார்த்தை மிரட்டி பார்க்கும் பொழுது தான் இடியாய் செய்து வந்து விழுந்தது.
கடந்த மாதத்திலே இரண்டு முறை மாதவிடாய் காலம் வந்துவிட்டது, வலியில் அதிகம் துடைத்துவிட்டாள்.
“பாக்க முடியல அஸ்வின். பாக்குற எனக்கே அழுகையா வருது. ரொம்ப கஷ்டப்படுறாடா. இம்மியூனிட்டி அதிகப்படுத்தி டிரீட்மென்ட் போகலாம்னு பாத்தா எதிர்பாக்த்த மாதிரி பீரியட்ஸ் வந்துடுச்சு. இன்னும் அஞ்சு கிலோ வெயிட் குறைஞ்சிட்டா. பிளட் ஏறிட்டு இருக்கு. ஆபரேஷன் ஒடனே பண்றது தான் பெஸ்ட்னு சொல்றாங்க”
பேசவே முடியவில்லை அவனால் தொண்டை அடைத்தது. சீரற்ற மூச்சோடு, “ஸ்டார்ட் பண்ண சொல்லுடா” என்றான் ஏதோ போல்.
“நீ எப்போ அஸ்வின் வர்ற?”
“இப்போதைக்கு வர மாட்டேன். அவ என்கிட்டே கேட்டதை செஞ்சு முடிச்சிச்சு தான் வருவேன்”
சித்தார்த், “அஸ்வின் அவ தான் ஏதோ லூசு மாதிரி சொல்றானா நீயும் ஏன்டா? இந்த நேரத்துல நீ கூட இல்லாம… என்ன வேணாலும் நடக்கும்னு சொல்றாங்கடா டாக்டர்ஸ்”
“ஷட் அப் சித்தார்த்” செவிமடல் கிழியுமளவு அஸ்வின் காத்த ஒரு நொடி சித்தார்த்த பயந்து தான் போனான்.
நெற்றியை நீவி தன்னையே கட்டுப்படுத்திக்கொண்டவன், “ஆபரேஷன்க்கு ஒடனே ஏற்பாடு பண்ண சொல்லு, போதும். இப்ப நான் ஆரூவ பாக்கணும். அவ முழிச்சிருக்குறப்போ எனக்கு கால் பண்ணு” என்றான்.
அடுத்த அரை மணி நேரத்தில் காணொளி அழைப்பு வந்தது. படுத்து தான் இருந்தாள். முகமே சிவந்து, ஒட்டிய கன்னங்கள், அழுது வடிந்த கண்கள், வறண்ட இதழ்கள் என பார்க்க பார்க்க அஸ்வினுக்கு அழுகை தான் வந்தது.
“நீங்க என்ன எவ்ளோ நல்லா பாத்துகுட்டிங்க? ஆனா நான் உங்கள கொஞ்சம் கூட கவனிக்கல”
“அதெலாம் இருக்கட்டும்டா. இப்போ என்ன நீ நல்லாகிட்டு வந்து எவ்ளோ வேணாலும் கவனி” தலை அசைத்தாலும் முகம் வாடி தான் இருந்தது,
“வாழ்க்கை அப்டியே நிக்க போறதில்லை நாராயணா. நான் இல்லைனாலும் உங்களுக்கான ஒரு அழகான வாழ்க்கை அமைச்சுக்கோங்க. என்ன பத்தி யோசிக்காதிங்க, நீங்க சந்தோசமா இருந்தா அதுவே எனக்கு போதும்”
“இந்த பேச்சு வேணாம்னு சொல்லிட்டேன் ஆரூ, எனக்கு யாரும் வேணாம் நீ தான் வேணும்” என்றான் பிடிவாதமாக.
“ஒரு சில விஷயம் நாம மனசுக்கு புடிக்கலானாலும் அதை ஏத்துக்குட்டு தான் ஆகணும். நீங்களும் ஏத்துக்குவிங்க” அஸ்வின் முகம் கருத்து இறுகி இருந்தது.
“நாராயணா… என்ன பாருங்களேன்” தலை தூக்கி அவளை பார்த்தவனால் கண்ணீரை மட்டும் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
அவனது வேதனையில் அவளுக்கும் அழுகை எட்டி பார்க்க, சிரிப்போடு, “எனக்கு உங்கள ரொம்ப புடிக்கும்” முகத்தை மூடி உடல் குலுங்க அழுதான்.
“நீங்களும் திருப்பி சொல்ல மாட்டிங்களா?” எங்கு அவன் பேசுவது, மனதினை ரணப்படுத்தி விட்டதே அந்த விதி.
“இல்ல நாராயணா சந்தர்ப்பம் கெடைக்கிறப்போவே சொல்லிறேன்” முகம் வேதனையில் சுருங்க இதழ் கடித்து கண்களை சில நொடிகள் மூடினாள்.
“ஆரூ… வலிகிதா ம்மா?” ஆமாம் என தலை அசைத்தவள் கண்களை திறக்க கன்னம் தோட்ட கண்ணீர் கூறியது அவளது வேதனையை ஆனாலும் சிரித்தாள்,
“உங்கள பாத்துட்டே இருக்கனும் போல இருக்கு அஸ்வின், உங்க கைக்குள்ள, உங்க நெஞ்சுல சாஞ்சுக்கணும் போல இருக்கு”
நாற்காலியில் இருந்த கைபேசியை எடுத்து திரையில் தெரிந்த அஸ்வின் முகத்தை ஆசையாக பார்த்தவள் திரையின் மீது இதழ் பதித்து அவனுக்கு முத்தம் கொடுக்க, இதயம் அளவிற்கு மீறி வலித்தது அஸ்வினுக்கு.
“ரொம்ப ரொம்பபபப… மிஸ் பண்றேன் ப்பா” எத்தனை கட்டுப்படுத்தியும் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் போனவள் தானும் அழுதாள்.
எத்தனை அழகான வாழ்க்கை இறைவனே கொடுத்த வரம் போல். அதனை அனுபவிக்க முடியாமல் பாதியிலே விட்டு செல்வது சொல்ல முடியாத வேதனை.
அவள் உள் மனம் இன்னும் வாழ ஆசை கொண்டாலும் உடல் ஒத்துழைக்க வேண்டுமே. முரண்பட்டது. மருந்து, சொல், காதல் என எதற்கும் செவிமடுக்காமல் தனி உலகில் சஞ்சரிக்க பேராசை கொண்டு வேறு திசை நோக்கி சென்றது அவள் உடல்.
“என்கிட்ட வந்துடுவல டா?” சிறு பிள்ளை போல் தவிப்போடு கேட்டான். அவளும் அழுகையோடு ஆமாம் என தலை அசைத்தாள்.
“கண்டிப்பா நீ வரணும் ஆரூம்மா. இந்த பட்டாம்பூச்சி இல்லாம அஸ்வினால ஒரு நாள் கூட இருக்க முடியாது”
“நான் இல்லனாலும்…” இல்லை என்கிற வார்த்தையை கேட்க அவன் விரும்பவில்லை, “கேக்குறதுக்கு பதில் மட்டும் சொல்லு ஆரூ. கண்டிப்பா என்கிட்ட நீ வந்தே ஆகணும். வந்துடுவ தான?”
“வருவேன்” என்றாள்.
“சத்தியம் பண்ணு” குழந்தையாய் மாறி சத்தியம் கேட்கும் அவனை பார்த்து ஒரு பக்கம் சிரிப்பென்றால் மற்றொரு பக்கம் அழுகை வந்தது, “ப்ராமிஸ் நாராயணா”
பேச முடியாமல் திணறினாள். உடலில் சிறிதளவும் சக்தி இல்லாமல் போனது போல் அப்படி ஒரு சோர்வு, நெஞ்சம் ஒரு பக்கம் வலித்தது.
“அஸ்வின் ரோஹிய கூட்டிட்டு போகணும் டெஸ்ட்க்கு” சித்தார்த் குரல் கேட்க அவனை பார்த்த ஆரோஹி கண்கள் பயத்தில் விரிந்தது.
“ஒரு நிமிஷம் டா” என்றவன் மனைவியிடம், “ஆரூ எனக்காக கடைசி வரைக்கும் போராட்டத்தை மட்டும் விட்டுடாதடி”
கையை தூக்கி பெருவிரலை காட்டினாள் ‘டன்’ என வாயசைத்து பின் அவனை சிரிக்க கூறி சைகை செய்ய, முடியவில்லை அவனால். நொடிக்கு நொடி ஒரு வலியை அனுபவிப்பவள் முகத்தை பார்த்து போலியாக கூட அவனால் சிரிக்க முடியவில்லை.
“சிரிக்க முடியல டா. என் சிரிப்பு சந்தோசம் எல்லாம் உன்கிட்ட தான் இருக்கு. நீ வந்தா தான் நானே நானாக முடியும். உனக்காக இல்லனாலும் எனக்காக நீ வா. வரணும்” கண் மூடி ஆரோஹி தலை அசைக்க சித்தார்த் கைக்கு கைபேசி மாறியது.
“நாளைக்கு நைட் டிரீட்மென்ட் ஸ்டார்ட் ஆகுது அஸ்வின். நம்பிக்கையா இரு” சரி என தலை அசைத்தவனால் அன்று உறங்கவே முடியவில்லை.
அடுத்தநாள் முக்கியமான ஆட்டம். ஒரு பக்கம் ஆரோஹிக்கு அறுவை சிகிச்சை. மற்றொரு பக்கம் அஸ்வினுக்கு முக்கிய பலப்பரீட்சை. இருவரும் வெவ்வேறு திசையில் போராடிக்கொண்டிருந்தனர்.
ஏற்கனவே ரத்த அழுத்தம் அதிகமாக இருந்த ஆரோஹியை சற்று தேற்றிய பிறகு சிகிச்சை செய்ய, அறுவை சிகிச்சை செய்யும் நேரம் மீண்டும் ரத்த அழுத்தம் அதிகமாகி வலிப்பு வர துவங்கியது. மருத்துவர்கள் வெகுநேரம் போராட வேண்டியிருந்தது ஆரோஹியை சரி செய்வதற்கே.
கண்களை திறந்து வைத்து எதிரில் இருந்த மைதானத்தை பார்வையிட்டிருந்த அஸ்வினின் தோள் தட்டினான் சக வீரன், “அஸ்வின் விக்கெட் விழுந்துடுச்சு”
நினைவு படுத்த, எழுந்த அஸ்வின் கைகள் தன்னுடைய சங்கிலியில் மாட்டியிருந்த மோதிரத்தை அழுத்தமாய் பற்றிவிட்டது. அன்றும் அஸ்வினிடம் ஜோரான ஆட்டம் தான்.
என்ன முகத்தில் சிறிதும் புன்னகையில்லாமல் வளைய வந்தவனை பற்றி சரமாரியாக விமர்சனம் மட்டும் எழுந்தது. எதையும் இந்த கிரிக்கெட் நிர்வாகமோ, அணியினரோ பொருட்படுத்தவில்லை, அவர்களுக்கு தெரியும் அவனிருக்கும் மனநிலை.
தன்னிலையில் சிரமத்தை அனுபவித்தாலும் அணிக்காக அவனது நுண்ணிய அணுகுமுறையும் அனைவரது புருவத்தையும் உயர வைத்தது என்னமோ உண்மை தான்.
ஆட்டத்தை முடித்த அணியினர் அடுத்த கட்ட போட்டிக்கு சென்றதில் ஒரு பக்கம் கொண்டாட்டத்தில் இருந்தனர்.
அணியின் தலைவனாய் அஸ்வின் தன்னுடைய பேச்சை முடித்து வந்து சித்தார்த் எண்ணுக்கு அழைத்து நிலவரம் கேட்க ஆரோஹிக்கு வலிப்பு வந்ததால் தாமதமான சிகிச்சை பற்றி கூறி இன்னும் அறுவை சிகிச்சை நடைபெறுவதாக கூறினான்.
பத்து நிமிடத்திற்கு ஒருமுறை கைபேசியை எடுத்து எடுத்து பார்க்கும் அஸ்வினை பார்த்த இந்திய கிரிக்கெட் அசோசியேஷன் ஆட்களும் ஒருவர்,
“இப்போ கூட ஒன்னுமில்ல, ஒரு பிலைட் ஏற்பாடு பண்றோம் உங்க வைப்ப பாத்துட்டு நாளைக்கு மார்னிங் நேரா கொல்கத்தா ஸ்டேடியம் வந்துடுங்க அஸ்வின். உங்க முகத்துல சந்தோசமே இல்ல, கேப்டன் ஸ்பீச் குடுக்குறப்போ கூட ஒரு வார்த்தை பதில் தான் வருதுன்னு ஏகப்பட்ட கன்ரோவர்சியல் டாக்ஸ். வி காண்ட் ஹாண்டில் திஸ்” என்றார்.
“என்னோட பர்சனல் லைப் எப்போ ப்ரபஸ்னல் லைப்ப பாதிக்குதுன்னு உங்களுக்கு தோணுதோ அப்போ நீங்க சொல்ல முன்ன நான் இங்க இருந்து போயிருப்பேன்” என்றவரிடம் அதற்கு மேல் அவர்களால் பேச முடியவில்லை.
ஆரோஹி கூறியது என்பதை தாண்டி தன்னுடைய நாட்டிற்காக தனக்கு கிடைத்த ஒரு அறிய வாய்ப்பை பயன்படுத்தி தன்னுடைய சேவையை செய்ய முடிவெடுத்திருந்தான்.
அனைத்து வித கேளிக்கைகளிலிருந்து விடுபட்டு தனியாக ஹோட்டல் அறைக்கு சென்ற அஸ்வின் குளித்துக்கொண்டிருக்கும் பொழுதே அழைப்பு வர, உடலில் இருந்த சோப்பு நுரையை கூட கவனிக்காமல் அழைப்பை எடுத்தான்.
“ஆபரேஷன் முடிஞ்சது அஸ்வின் ஆனா ஆரோஹி எதுக்கும் ரெஸ்பாண்ட் பண்ண மாட்டிக்கிறா, டாக்டர்ஸ் இன்னும் எதுவும் உறுதியா சொல்ல மாட்டிக்கிறாங்க” மொத்தமாய் விதியும் கை விரித்தது.
நம்பிக்கையோடு இருந்தவனை அதல பாதாளத்தில் தள்ளியது போல் அஸ்வினால் இந்த ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பத்து நாட்கள் கடந்திருந்தது அதன் பிறகும்.
எங்கு திரும்பினும் நாளைக்கான கனவு தான். கோலாகலமாக இந்திய கிரிக்கெட் அணி செல்லும் இடமெங்கும் அவர்களுக்கு வரவேற்பு தான். அதோடு கடலளவு எதிர்பார்ப்பும் அத்தனை கண்களிலும் தென்பட்டது.
“ஒரு வகைல நம்பிக்கை இருந்தாலும் பயமும் சேர்த்தே இருக்குடா அஸ்வின்”
சக நண்பன் ஒருவன் கூற கண்களை மூடி அமர்ந்திருந்த அஸ்வின் தலையை மட்டுமே அசைத்தான். இறுதியாட்டம் பரபரப்பாக சென்றது. எதிரணி பெரிய இலக்கை நிர்ணயம் செய்திருந்தது.
இரண்டாவது பேட் செய்த இந்திய அணி முதலில் நிதானமாக ஆட அதனை தொடர்ந்து வீழ்ச்சி துவங்கியது. முதல் விக்கெட் வீழ்ந்ததும் அஸ்வின் களமிறங்க வேண்டியது,
ஆனால் அவன் வராமல் அதனை தொடர்ந்து வர வேண்டிய வீரர்கள் களமிறக்க பட்டது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவர்க்கும் அதிர்ச்சியாய் இருந்தது, அணியின் பயிற்சியாளர் உட்பட.
வீரர்கள் நின்று ஆடினாலும் ஒரு பக்கம் விக்கெட்டும் வீழ்வது நிற்கவில்லை. வெற்றிக்கு இன்னும் இருநூறு ரன்கள் மீதமிருந்த நிலையில் பேட்ஸ்மேன் அனைவரும் ஆட்டமிழந்திருந்தனர்.
“அஸ்வின் இது என்ன ஸ்ட்ராட்டஜி? ஒன் டவுன்ல இறங்க வேண்டிய ஆள் மிடில் ஆர்டர்ல இறங்கினா சரியா வராது, இதுல நீ அஞ்சு விக்கெட் போகவும் இறங்க பாக்குற. டெஸ்ட் பண்ண இது என்ன சாதாரண கேம்மா?”
மட்டைப்பந்தை கையில் எடுத்தவன் அடுத்து இறங்க வேண்டிய வரிசையை கூறி செல்ல, “இவன் என்னடா அவன் இஷ்ட மயிருக்கு எல்லாம் செய்றான். இன்னைக்கு மேட்ச் மட்டும் தோக்கட்டும் இவன் கிரௌண்ட்குள்ள காலே எடுத்து வைக்காத மாதிரி பண்றேன்”
அஸ்வினின் அசட்டு தன்மை அந்த அனுபவமுள்ள பயிற்சியாளரை அதிகம் சூடேற்றியிருந்தது.
“அஸ்வின் என்ன பண்ணனும்?”
அஸ்வினோடு நின்ற அந்த பந்துவீச்சாளர் என்ன செய்வதென தெரியாமல் இவனிடம் கேட்க, “விக்கெட் மட்டும் விழுங்க கூடாது, மத்தபடி என்ன வேணாலும் பண்ணு” என கூறி சென்றவனை வியப்பாக பார்த்தான் அவன்.
சூழல் பந்து வீச்சாளர்களை மட்டுமே அஸ்வினால் எளிதாக எதிர்கொள்ள இயலும், வேக பந்து வீச்சாளர்களிடம் அதிகம் வேகம் காட்ட மாட்டான் என எதிரணியினர் எண்ணியிருக்க, அவர்கள் எண்ணங்களின் சிம்ம சொப்பனமாக இருந்தது அஸ்வினின் வெறித்தனமான ஆட்டம்.
குறிப்பிட்ட நபர் என இல்லாமல் பந்து வீச வந்த அத்தனை பேரின் கண்களிலும் அஸ்வினின் ஆட்டத்தின் கோவம் மீறிய ரசனை தெரிந்தது. மனதின் தீயானது பந்தினில் பிரதிபலித்து திசைக்கு ஒன்றாய் பறந்தது.
அஸ்வின் தாமதமாக களமிறங்கியதில் சீற்றத்தில் இருந்த அத்தனை நாவிலுமிருந்து இப்பொழுது அவனை பாராட்டியே வார்த்தைகள் வந்தது. ஒவ்வொரு ஓவரின் முடிவிலும் தண்ணீர் எடுத்து வருபவர்களிடம், “எனக்கு ஏதாவது கால் வந்துச்சா?” என கேட்டே அவன் தொண்டை வறண்டிருக்கும்.
ரசிகர்கள் மைதானத்தினில் எழுப்பும் சத்தம் யாரும் அவன் குரலாய் கேட்டது. ‘கிரிக்கெட்டரே சிக்ஸ்’ ‘நாராயணா போர்’ என அவளே குரலெடுத்து கத்துவது போல் தோன்றியது.
பந்தினை சந்திக்கும் பொழுது மட்டுமே நிமிர்த்திருந்த அவன் சிரம் மற்ற நேரமெல்லாம் தரையில் தான் இருக்கும். சிறிதும் மகிழ்ச்சியில்லை. நிலையில்லா அலைப்புறுதலின் தேடல் பெரும் சீற்றமாய் அவனுள் உருமாறி காத்திருந்தது.
எளிதாக கிடைத்த வெற்றியல்ல. Nail biting தருணங்களாகவே மாறியிருந்தன. கடைசி ஆறு பந்துகளில் இருவது அடிக்க வேண்டும். மூன்று சிக்சர், ஒரு போர் அடித்து மொத்த இந்தியாவையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தவன் காதினுள் மனைவியின் குரல்.
“கப் ஜெய்ங்க அஸ்வின், ஜெயிச்சு ஒரு கைல கப் வச்சு, இவ தான்டா என் பொண்டாட்டின்னு சொல்லுங்க… எங்க இருந்தாலும் ஓடி வந்து உங்க இன்னொரு கைக்குள்ள நான் நிப்பேன்” கூற அவன் தயார், கைகளில் அடைக்கலமாவேன் என வாக்கு கொடுத்த அவள் எதிரில் இல்லையே.
பட்ட துன்பம், அனுபவித்த தனிமையின் வேதனை, பிரிவின் துயர், அனைத்திற்கும் மேல் மனைவியின் வலி என அஸ்வினை மொத்தமாய் அடித்து வீழ்த்தியிருக்க, ஜடமாய் நடமாடியவன் வெற்றியை கூட கொண்டாடாமல் தரையில் மடிந்து அமர்ந்து கதறினான்.
அவனை நோக்கி ஓடி வந்த சக வீரர்கள் அவனது வேதனையின் அளவை புரிந்து அப்படியே நின்றுவிட புல் தரையில் சிரம் தாழ்த்தி மனதின் வேதனை பொங்க வேதனையில் கரைந்தான்.
அத்தனை நேரம் ஆர்பரிப்பில் துள்ளியிருந்த ஒரு லட்சம் ஜன கூட்டமும் தங்கள் ஹீரோவின் மன குமுறலில் அமைதியாகியது.
எவருக்கும் ஒன்றும் புரியவில்லை. நிச்சயம் வெற்றியின் மகிழ்ச்சியில் வரும் அழுகை இல்லை இது என்பது மட்டும் தெளிவானது. கோடான கோடி மக்களின் மொத்த கவனத்தை தான் ஒருவன் பெற்றிருப்பதை கூட அறியாமல் துடித்தவனோ அவள் ஒருத்திக்காக தவித்தான்.
வேகமாக ட்ரெஸ்ஸிங் ரூமிலிருந்து அஸ்வினை நோக்கி ஓடி வந்த ஒருவன் கையில் அஸ்வினின் கைபேசி.
“கேப்டன் உங்க தம்பி கால்ல இருக்கார்” அரக்க பறக்க அழுகையை நிறுத்தி எழுந்தவனிடம்,
“அஸ்வின் ஆரோஹிக்கு கொஞ்சம் கொஞ்சமா நினைவு திரும்புதுடா… டாக்டர் சொல்லிட்டாங்க, ஷி இஸ் அவுட் ஆப் டேஞ்சர்”
பல நாட்கள் பிறகு இதயம் கனிந்து சிரிப்பை சிந்தியவனை அந்த மைதானத்தின் திரையில் கண்ட ரசிகர்கள் ஆரவாரத்தில் குலுங்க உயிரே அப்பொழுது தான் அவனிடம் திரும்பி வந்தது.
தன்னிலை மீண்டிருந்தவனின் சிரிப்பில் கொண்டாட்டம் துவங்க, தரையில் வீழ்ந்து கிடந்தவனை அணியினர் தூக்கி காற்றில் போட்டு தோளில் பிடித்து மகிழ்ச்சி பொங்க கொண்டாடினர்.
இத்தனை உணர்ச்சியை இந்த சிறு பெண் தருவாள் என கனவிலும் எதிர்பார்க்காத அஸ்வினுக்கு அவளது உயிர்ப்பில் தோற்றுப்போனது கூட சுகமான சோதனை தான்.
How is the chapter? Comment plzz…. story is going to end soon