ஆஸ்திரேலியாவில் அர்ஜூனைப் பார்த்ததில் இருந்து ரூபிணிக்கு அர்ஜூன் பைத்தியம் பிடிக்க ஆரம்பித்தது. ரஞ்சனிடம் அவள் பேசும் பத்து வார்த்தைகளில் ஒன்பது வார்த்தைகள் அர்ஜூனே இருந்தான்.
“என்ன..? வரவர அவனைப் பத்தியே பேசிட்டு இருக்க..? என்ன விஷயம்..?” என்றான் ரஞ்சன்.
“ரஞ்சு..! நிஜமாவே உன் பிரதர் செம்ம பிகர். உன்னைப் பார்க்கிறதுக்கு முன்னாடி அவனைப் பாத்திருந்தா எப்படி இருந்திருக்கும்..?” என்றாள் கனவுடன்.
“அதுவரைக்கும் தான் நான் இருக்கேனே ரூபி டார்லிங்..” என்றான் ரஞ்சன் உல்லாசமாக.
“இந்த மேரேஜ் எல்லாம் செட்டாகும்ன்னு தோணலை. டேட்டிங் மட்டும்ன்னா ஓகே..” என்றாள் சாவகாசமாய்.
“அவன் இந்த மாதிரி விஷயத்துக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டான். நான் சொல்ற மாதிரி செஞ்சா, உனக்கு அர்ஜூன். இல்லைன்னா, உன்கிட்ட இருந்து அவன் தப்பிச்சிடுவான்…” என்றான் ரஞ்சன்.
“ஓகே..! நீ சொல்ற மாதிரியே செய்றேன்..” என்று இருவரும் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்திருந்தனர்.
அதற்கு இடையில் இரண்டு மூன்று தடவை அவள் அர்ஜூனை பார்த்திருந்தாள். ஆனால் அவன் இவளை கண்டுகொண்டானில்லை.
படிப்பு முடிந்து இந்தியா திரும்பிய கையோடு அவளை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் ரஞ்சன்.
முதலில் அவளைக் கண்டு திகைத்தாலும்,அவள் குடும்ப பின்னணியை சொன்னவுடன், அவளைப் பற்றி தவறாக நினைக்கத் தோன்றவில்லை கார்த்திகேயனுக்கு.
“அங்கிள்..! உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். எனக்கு இப்போதைக்கு நீங்கதான் ஹெல்ப் பண்ண முடியும்..” என்றாள்.
“என்னம்மா..? என்ன பிரச்சனை..? என்ன ரஞ்சன் இதெல்லாம்..? வந்த உடனே பேசுற அளவுக்கு என்ன பிரச்சனை..?” என்றார் கார்த்திகேயன்.
“நான் சொல்றேன் அங்கிள்..! நானும் அர்ஜூனும் லவ் பண்ணினோம். ரஞ்சு மூலமா தான் எனக்கு அர்ஜூனைத் தெரியும். எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்தது. ஒரு நாள் ஒரு பார்ட்டில அர்ஜூனுக்கும், ரஞ்சனுக்கும் பிரச்சனையாகிடுச்சு. அதுல இருந்து அர்ஜூன் என்கூடவும் பேச மாட்டேங்கிறார். கல்யாணத்தை பத்தி பேசினா, போனை கட் பண்ணிடுறார்.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. அதான் ரஞ்சன் கூடவே வந்தேன்..” என்று ரஞ்சன் சொல்லிக் கொடுத்ததை அச்சுப் பிசகாமல் சொல்லி முடித்தாள் ரூபிணி.
“இவன் அப்படி பண்ணியிருப்பான்னு சொன்னா கூட நம்பிடுவேன். அர்ஜூன் அப்படி பண்ணியிருக்க வாய்ப்பேயில்லை. அதுலயும் காதலிச்ச பொண்ணை கைவிடுற அளவுக்கு அவன் மோசமானவன் கிடையாதும்மா..” என்றார் கார்த்திகேயன்.
‘ஆமா, இவரு அப்படியே அவனுக்கு சர்ட்டிபிகேட் குடுப்பாரு. அதை எப்படி உடைக்கனும்ன்னு எனக்குத் தெரியாது…’ என்று நினைத்த ரஞ்சன்,
“ரூபி சொல்றது உண்மைதான் டாட். அவன் என்மேல இருக்குற கோபத்தை ரூபி மேல காட்டுறான். என்கூட பகைன்னா அது என்னோட தான் இருக்கணும்..அதை விட்டுட்டு அர்ஜூன் இப்படி பண்ணுவான்னு நானும் கூட எதிர்பார்க்கலை..” என்றான் ரஞ்சனும் சேர்ந்து கொண்டு.
“நீங்க சொல்றதை நான் எப்படி நம்புறது..?” என்ற கார்த்திகேயனுக்கு குழப்பம். ரூபிணியும் சாதாரண குடும்பத்து பெண்ணில்லை. அதனால் அவளுக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை என்ற ஒரு விஷயத்தில் விழுந்தார் கார்த்திகேயன்.
“இப்ப நான் என்ன பண்ணனும்..?” என்றார்.
“நீங்க தான் எங்களுக்கு மேரேஜ் பண்ணி வைக்கணும் அங்கிள். அர்ஜூன் இல்லைன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்..” என்றாள்.
“என்னம்மா நீ..? படிச்ச பொண்ணுதானே..? அவன் ஏதோ கோபத்துல அப்படி சொல்லியிருப்பான். அதுக்காக இப்படியெல்லாம் பேசலாமா..?” என்றார்.
“இப்பவும் சொல்றேன்.. அர்ஜூன் அப்படி பண்ணியிருக்க மாட்டான்..” என்றார் கார்த்திகேயன்.
“நாங்க சொன்னா நம்ப மாட்டிங்க..! அவன் வாயால சொன்னா நம்புவிங்களா..?” என்ற ரஞ்சன், அவரின் போனை வாங்கி அர்ஜூனுக்கு போன் செய்தான். ரிங் கட்டாகப் போகும் கடைசி நொடியில் எடுத்தான் அர்ஜூன்.
“சொல்லுங்கப்பா..” என்றான்.
“எப்படிப்பா இருக்க அர்ஜூன்..?” என்றார் கார்த்திகேயன்.
“நான் நல்லா இருக்கேன்..! நீங்க எப்படி இருக்கீங்க..? பிஸ்னஸ் எல்லாம் எப்படி போகுது..?” என்றான்.
“என்ன அர்ஜூன்..? ஏதோ மூணாவது மனுஷன்கிட்ட பேசுற மாதிரி பேசுற..? நம்ம பிஸ்னஸ கவனிக்கவே ஆள் இல்லை. நீ ஏன் அங்க வேலை பார்க்கணும், தனியா இருந்து கஷ்ட்டப்படனும்..?” என்றார் கார்த்திகேயன்.
“இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படியே இருக்கிறதா உத்தேசம் அர்ஜூன். நீயும் சின்ன பையன் இல்லை. சீக்கிரம் கிளம்பி வர்ற வழியைப் பாரு..” என்றார் கார்த்திகேயன்.
“இப்ப எதுக்கு கூப்பிட்டிங்க..?” என்றான்.
“அது..! ரஞ்சன் அங்க இருந்து வந்துட்டான். கூடவே அந்த பொண்ணையும் கூட்டிட்டு வந்திருக்கான்..” என்றார் கார்த்திகேயன்.
“எந்த பொண்ணு..?” என்றான் அர்ஜூன் புரியாமல்.
‘கடவுளே நாம நினைச்ச படி தான் பேசணும். ஏடா கூடமா எதுவும் பேசிடக் கூடாது..’ என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டிருந்தான் ரஞ்சன்.
“ரூபிணியா..?” என்று யோசித்த அர்ஜூனுக்கு, அவன் கூடவே திரியும் ரூபிணியின் முகம் ஞாபகத்திற்கு வந்தது.
“ஆமா, இப்போ அவளுக்கென்ன..? இவனுக்கும் தான் என்ன..?” என்றான் புரியாமல்.
“இல்லப்பா, அந்த பொண்ணு கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு வந்து நிக்குது. நான் என்ன பதில் சொல்லட்டும். ரஞ்சனும் கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்றான். ஹோட்டல்ல நடந்த பிரச்சனையில நீ ரொம்ப கோபப்பட்டியாம். அதையும் சொன்னான்..” என்றார் கார்த்திகேயன்.
‘ஹோ..! கூட சுத்துன பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டானா..? இப்பவாவது அறிவு வந்ததே. எப்படியோ திருந்தி இருந்தா சரித்தான்..’ என்று மனதிற்குள் நினைத்த அர்ஜூன்.
“அவன் சொன்னது உண்மைதான். ஆனா, அன்னைக்கு நான் கோபப்பட்டதில் எந்த தப்பும் இருக்கிறதா எனக்குத் தெரியலை. இப்போ அதுக்கும் நீங்க பேசுறதுக்கும் என்ன சம்பந்தம்..?” என்றான் அர்ஜூன்.
“இதுக்கெல்லாம் நான் எதுக்கு..? நீங்களே பேசி முடிங்க. என்மேல ரொம்ப அக்கறையா இருக்குற மாதிரியெல்லாம் நடிக்க வேண்டாம். இதை உங்க பையன்கிட்ட சொல்லி வைங்க. திடீர்ன்னு யாரும் பாசத்தை வளர்க்க வேண்டாம்..” என்று சொல்லிவிட்டு போனை வைத்க்துவிட்டான் அர்ஜூன்.
“இப்ப நம்புறிங்களா டாட். நான் தான் சொன்னேன்ல..?” என்றான் ரஞ்சன்.
“இருந்தாலும் எதுவோ ஒன்னு தெளிவா இல்லை ரஞ்சன். அர்ஜூன் வந்த பிறகு பேசி முடிச்சுக்கலாம்..” என்றார் கார்த்திகேயன்.
“அவனை வீடியோ கால் வர சொல்லி நிச்சயத்தை முடிச்சிடலாம்…கல்யாணத்தை அவன் வந்த பிறகு முடிவு பண்ணிக்கலாம்..” என்றான் ரஞ்சன்.
“சரிப்பா..!” என்றவர்,
“உங்கவீட்ல இருக்கவங்ககிட்ட சொல்லிடுமா. ஒரு நல்ல நாளா பார்த்து நிச்சயம் பண்ணிடலாம்…” என்ற கார்த்திகேயன்,
“நீயேன் சுமித்ரா அமைதியா இருக்க..?” என்றார்.
“இதுல நான் சொல்ல என்னங்க இருக்கு..? நீங்க எது செஞ்சாலும் சரியா தான் இருக்கும்..” என்றார் சுமித்ரா.
ரஞ்சனுக்கும், ரூபிணிக்கும் தான் நிச்சயம் என்று அர்ஜூன் நினைத்திருக்க, ரஞ்சன் இங்கே தெளிவாக காய் நகர்த்திக் கொண்டிருந்தான்.
“ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்..!” என்றாள் ரூபிணி.
“எனக்கு எதுக்குமா தேங்க்ஸ். அவன் கோபத்துல பேசினதை எல்லாம் மனசுல வச்சுக்காம நீ இங்க வந்து தைரியமா பேசுனதுலையே தெரிஞ்சு போய்டுச்சுமா. அவனோட கோபமெல்லாம் சீக்கிரம் சரியாகிடும். உங்க கல்யாணத்தை நடத்தி வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு…” என்றார் கார்த்திகேயன்.
அவர் சென்றவுடன்,
“எனக்குக் கொஞ்சம் பயமா தான் இருக்கு ரஞ்சன். உன்னோட பிரதர் அர்ஜூன் இதுக்கு சம்மதிக்கலைன்னா..?” என்றாள் ரூபிணி.
“நிச்சயம் மட்டும் முடியட்டும். அதுவரைக்கும் எல்லாம் சரியா போயிடுச்சுன்னா, அர்ஜூன் கண்டிப்பா சம்மதிப்பான். என்னதான் டாட்கிட்ட வெறுப்பா பேசினாலும், அவர் சொல்லிட்டா அதை அவன் தட்ட மாட்டான். அது தெரிஞ்சுதான, டாடிகிட்ட ஆரம்பிச்சேன். அவரும் அவனோட விருப்பத்துக்கு தான் முக்கியத்துவம் குடுப்பார். அவன் எவ்வளவு கோபமா இருந்தாலும், டாடின்னு வந்துட்டா அவனுக்கு ஒரு சாப்ட் கார்னர் இருக்கு. அதுவே எல்லாத்தையும் நடத்தி வைக்கும்…” என்றான் ரஞ்சன்.
“நான் தான் சொல்றேன்ல… அவன் அப்படி கேட்க மாட்டான். ஏன்னா..? தப்பான முடிவை எடுத்துட்டோம்ன்னு டாடி பீல் பண்றதை அவன் எப்பவும் விரும்ப மாட்டான். எத்தனை வருஷமா அவங்க ரெண்டு பேரையும் பார்க்கிறேன். எனக்குத் தெரியாதா..?” என்று அவளிடம் பதில் சொன்னவன்,
“அர்ஜூன்..! வாழ்க்கைல கூட நான் அனுபவிச்ச மிச்சம் தான் உனக்கு. இந்த ரஞ்சன் எதுலையும் முதல்ல தான் இருக்கணும். அப்படி பார்த்தா இவ கூட எனக்கு தான் முதல்ல..” என்று மனதிற்குள் கறுவிக் கொண்டான்.
“உனக்கு ஒரு மாதிரி இல்லையா ரூபிணி…? இந்த வீட்ல என்னோட பிரதர் கூடவே வாழும் போது, என்னைப் பார்த்து பீல் பண்ண மாட்டியே..?” என்றான் நக்கலாய்.
“வாட்..! உன்னைப் பார்த்தா…? அர்ஜூனை நான் பர்ஸ்ட் பார்த்திருந்தா நீ எனக்கு ஒரு பொருட்டே இல்லை. உண்மையை சொல்லனும்ன்னா, உன் பிரதர் ஒரு ஹாட் பீஸ். நீ ஒரு வேஸ்ட் பீஸ். இதுவே ஆஸ்திரேலியாவா இருந்திருந்தா இது பெரிய விஷயமா தெரிஞ்சிருக்காது. இங்க நம்ம கலாச்சாரம் அப்படி. அதுக்கு என்ன பண்ண முடியும்..? என்னோட தேவையெல்லாம் உன்னால நிறைவேத்த முடியாது ரஞ்சன்..” என்றாள் சிரிப்புடன்.
“பார்த்து பேசு ரூபி. நீ இப்படித்தான்னு எங்க வீட்ல தெரிஞ்சது அவ்வளவு தான்..” என்றான் மறைமுக எச்சரிக்கையாய்.
“தெரிஞ்சா என்ன ஆகிடும்..? என்கூட இருந்த உன்னைய எதுவும் சொல்லாத சமூகம், என்னை மட்டும் எப்படி தப்புன்னு சொல்லும். உனக்கொரு ஞாயம்,எனக்கொரு ஞாயமா..?சில தேவைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமம் தான். இப்போ என்ன நாம மேரேஜ் பண்ணிக்கலாமா..?” என்றாள் அவளும் நக்கல் சிரிப்புடன்.
“வாய்ப்பேயில்லை. உன்கூட எனக்கு இருந்தது இனக்கவர்ச்சி மட்டும் தான். அதைத் தாண்டி நீ எதையும் எதிர்பார்க்கக் கூடாது. அதுக்கு பிரதிபலனா தான், உனக்கு நான் இந்த உதவியை செய்றேன்..” என்றான்.
“எதுக்கெல்லாம் பிரதிபலன் செய்றதுன்னு விவஸ்தை இல்லாம போய்டுச்சு..” என்று சிரித்துக் கொண்டாள் ரூபிணி.
ரஞ்சன் நினைத்த மாதிரியே நிச்சயமும் நடந்து முடிந்தது. வீடியோ காலில் வந்த அர்ஜூன் கடுப்படைந்தது தான் மிச்சம்.
“எது செய்றதுன்னாலும் நீங்களே செய்ங்க. என்னை எதுக்கு தொல்லை பண்றிங்க..? எப்படியும் சீக்கிரம் வந்துடுவேன். அதுவரைக்கும் என்னை டார்ச்சர் பண்ணாதிங்க..” என்று கோபமாய் சொல்லிவிட்டு கட் பண்ணிவிட்டான்.
நிச்சியம் முடிந்த கையோடுடு, சந்தோஷத்தில் உடனே அர்ஜூனுக்கு அழைத்தான் ரஞ்சன்.
“இப்ப நீ எதுக்கு கால் பண்ற..?” என்றான் அர்ஜூன்.
“கங்கிராட்ஸ் பிரதரே..” என்றான் ரஞ்சன்.
“இப்ப உனக்கு என்ன வேணும்..?” என்றான் அர்ஜூன்.
“என்ன பிரதரே..! நீங்க புது மாப்பிள்ளை ஆகிட்டிங்க. இப்ப தான் ரூபிணிக்கும் உங்களுக்கும் பேசி முடிச்சாங்க. அதுக்கு வாழ்த்து சொல்ல கூப்பிட்டா ரொம்பத்தான் அழுத்துக்கிறிங்க…” என்றான் ரஞ்சன்.
“என்ன லூசுத்தனமா உளர்ற..? அவளுக்கும் உனக்கும் தான பேசி முடிச்சாங்க..? இதுல நான் எங்க இருந்து வந்தேன்..?” என்றான் அர்ஜூன் கோபமாக.
“நீங்க எங்க இருந்தும் வரலை பிரதரே. ஆனா, எல்லாத்தையும் எப்படி நடத்தி முடிச்சேன் பார்த்தியா..? உன்னைப் பெத்த மகராசன், நான் சொன்னதையெல்லாம் நம்பி, இதோ உனக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டார். எனிவே வாழ்த்துக்கள்..” என்றான் நக்கலாக.
“இல்லை..! ஏன், நீ ஏதும் ஸ்டாக் வச்சிருக்கியா..?” என்றான் ரஞ்சன்.
“கண்டிப்பா இதெல்லாம் நடக்காது. நடக்க விட மாட்டேன்னு உனக்கே தெரியும். வெட்டிப் பேச்சு பேசாம, போய் வேலையைப் பாரு…” என்றான் அர்ஜூன்.
“பக்காவா காய் நகர்த்தி, ஒரு தம்பியா கடமை உணர்ச்சியோட உனக்கு பொண்ணு பார்த்து, கல்யாணம் பேசி முடிக்க வச்சிருக்கேன். ஞாயமா பார்த்தா இதுக்காக நீ பெருமை தான் படனும்..” என்றான் ரஞ்சன்.
“நான் எப்படி உன்னை பெருமைப்படுத்த போறேன்னு நீ கூடிய சீக்கிரம் பார்க்கத்தான போற..? சின்ன பையன், எதோ அறியாம பண்ணிட்டு இருக்கான்னு நினைச்சு உன்னை சும்மா விட்டது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்பத்தாண்டா புரியுது. இத்தனை நாள்.. சும்மா, கோபத்தை மட்டும் காட்டின அர்ஜூனைத் தான நீ பார்த்திருக்க. இனி இருக்குடா உனக்கு..” என்றான் அர்ஜூன்.
“ஹய்யோ பிரதரே…! வாக்குக் கொடுத்தது நான் இல்லை, தங்களின் தகப்பனார். அவர் தலைகுனியற மாதிரியான எந்த விஷயத்தையும் செய்ய மாட்டேன்னு வீர வசனம் பேசுன..? இப்பப் பேசேன்..” என்று போட வேண்டிய பிட்டை சரியாக போட்டு விட்டு போனை கட் செய்தான்.
‘சின்னப் பையன்.. என்னையப் பைத்தியக்காரன் ஆக்கிட்டானே..? இவனை சாதரணமா நினைச்சது எவ்வளவு பெரிய தப்பு..?’ என்று நினைத்தவன், ஆரம்பத்திலிருந்து கார்த்திகேயன் தன்னிடம் போனில் பேசியது வரை ஒவ்வொன்றாக யோசித்துக் கொண்டே வந்தான். அவர் போனில் பேசும் போது கூட ரஞ்சன் அருகில் தான் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் அர்ஜூன்.
“இதெல்லாம் ஒரு விஷயமா..? மேடை வரை வந்த கல்யாணமே நின்னு போகுது. இதெல்லாம் பெரிய விஷயமா நினைச்சு குழப்பிக்காத. நீ ஸ்டெடியா இருக்குற வரைக்கும் யாரும் எதுவும் செய்ய முடியாது. அவன் கிடக்குறான் சுண்டக்கா பையன்..” என்றது அவனின் மனசாட்சி.
இங்கே ரஞ்சனோ அனைத்தையும் நடத்தி முடித்த வெற்றி களிப்பில் இருந்தான்.
ஆனால் அவன் அர்ஜூனுக்கு என்று நினைத்து செய்தது எல்லாமே இப்போது அவனுக்கே திரும்பியிருந்தது. நடந்ததை நினைத்துப் பார்த்தவனுக்கு பெருமூச்சு தான் வந்தது.
அர்ஜூனின் வீட்டில்….
ஏழு மணியாகியும் அர்ஜூன் அறையை விட்டு வெளியே வரவில்லை.
“ஒருவேளை கோபமா இருக்காரோ..?” என்று நினைத்த வராஹினி, மெதுவாக அவன் அறைப்பக்கம் சென்று எட்டிப் பார்த்தாள்.
லேப்டாப்பில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தான். அவள் உள்ளே சென்றது கூட தெரியாமல் அவன் வேலையில் மூழ்கியிருக்க, மெதுவாக அவன் அருகில் அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். சரியாக சொல்ல வேண்டுமென்றால் அப்பட்டமாக சைட் அடித்துக் கொண்டிருந்தாள். கீபோர்டை தட்டும் அவன் விரல்கள் முதற்கொண்டு ரசித்துக் கொண்டிருந்தாள்.
திடீரென்று பிரைவேசி இல்லாததைப் போல் உணர்ந்த அர்ஜூன் பட்டென்று திரும்ப, அவனுக்கு அருகில் அமர்ந்து அவனையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தவளின் நெற்றியில் பட்டென்று அவன் தலை மோதி விட்டது.
“ங்கான்..!” என்று நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டாள் வராஹினி.
“நீ இங்க என்ன பண்ற..?” என்றான் அர்ஜூன்.
“உங்களை ரொம்ப நேரம் ஆளையே காணோம். சரி கோபமா இருக்கிங்களோன்னு நினைச்சு பார்க்க வந்தேன்..” என்றாள்.
“சார்..! பசிக்குது. எனக்கு வேற சமைக்கத் தெரியாது..” என்றாள் பாவமாய்.
“சமைக்கத் தெரியாது. ஆனா, ஊர் வாயெல்லாம் நல்லா பேசத் தெரியும். உங்கப்பாவைக் கூப்பிடேன், வந்து சமைச்சு குடுத்துட்டு போவார்..” என்றான் அர்ஜூன்.
“சார், சண்டை முடிஞ்சு ரொம்ப நேரம் ஆச்சு. நீங்கதான் மறுபடியும் ஆரம்பிக்கிறிங்க… எனக்கு சமைக்கத் தெரியாதுன்னு தான் சொன்னேன். கத்துக்கவே மாட்டேன்னு சொல்லலை..” என்றாள்.
“சரி என்னமோ சொல்ற. இந்த ஒரு நேரம் மட்டும் தான். நாளையில இருந்து சமைக்கிறவங்க வந்துடுவாங்க. அதனால நீ கவலைப் படமா இருக்கலாம்..” என்றான் அர்ஜூன்.
“வாவ்..! தேங்க்யு… ஆனா இப்ப பசிக்குது. வந்து ஏதாவது செஞ்சு குடுங்க..” என்று அவன் கையைப் பிடித்து இழுக்க,
“என்ன நக்கலா..? இந்த நேரத்துக்கு விருந்தா சமைக்க முடியும்..?” என்றான்.
“எங்க வீட்ல நான் என்ன கேட்டாலும் செஞ்சு தர ஆள் இருக்கு. ஆனா, இங்க பசிக்கு கூட சாப்பிட முடியலை..” என்றாள் வராத கண்ணீருடன்.
“அடேங்கப்பா..! என்னவொரு நடிப்பு. காலையில இருந்து சாப்பிடாம அப்படி சீனைப் போட்ட..” என்றான்.
“அதுக்கு பேரு சீனெல்லாம் கிடையாது. நிஜமாவே நான் கோபமா தான் இருந்தேன். இப்பவும் முடியலைன்னா சொல்லிடுங்க..” என்றாள் வீராப்பாய்.
“ஏன்…? நீயே சமைச்சுக்குவியா..?” என்றான்.
“இல்லை..! ஆர்டர் போட்ருவேன்..” என்றாள்.
“உன்னைச் சொல்லி குத்தமில்லை..” என்றவன், பிரிட்ஜில் பார்க்க, அதில் ஒன்றுமில்லை.
“சொன்னாலும் சொல்லாட்டியும் இன்னைக்கு புட் ஆர்டர் பண்ணித் தான் ஆகணும்.. உனக்கு என்ன வேணும்ன்னு சொல்லு..” என்று கேட்டவன், இருவருக்கும் தேவையானதை ஆர்டர் போட்டான்.
“நீங்க எப்படி சார் சமைக்க கத்துக்கிட்டிங்க…?” என்றாள்.
“இதென்ன பெரிய விஷயமா..? ஆஸ்திரேலியால இருக்கும் போது நான் செல்ப் குக்கிங் தான்..” என்றான்.
“வாவ்..! நீங்க அங்க இருந்திங்களா..? என் அண்ணா கூட அங்க தான் படிச்சான்..” என்றாள்.
அவள் அப்படி சொல்லவும்,
“இப்ப எதுக்கு அந்த பேச்சு..?” என்று பேச்சை கத்தரித்தான் அர்ஜூன்.
“புட் வர்ற வரைக்கும் கொஞ்ச நேரம் டிவி பார்க்கிறேன்…” என்று டிவியை போட்டு அமர்ந்தாள்.
“இன்னும் ஒன் வீக்ல உனக்கு செமஸ்டர் வருது..” என்றான்.
“அதெல்லாம் தெரியும் சாரே.. இவ்வளவு நேரம் படிச்சுட்டு தான் இருந்தேன்..” என்று சாவகாசமாய் சொல்லிவிட்டு திரும்ப, டிவியில் ஒரு ரொமான்ஸ் பாடல் ஓடிக் கொண்டிருந்தது. கதாநாயகன், நாயகியின் உதடுகளில் கவிதை எழுதிக் கொண்டே, கவிதை வரிகளில் பாடலை பாடிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்தவளுக்கு உள்ளுக்குள் குப்பென்று ஒரு மாதிரி இருந்தது. தனியாக இருக்கும் போது அது அவளுக்கு பெரிதாக தெரியாது. அர்ஜூன் வேறு அருகில் இருக்க, பட்டென்று சேனலை மாற்றினாள். அது மாறுவேனா என்று அடம் பிடித்தது.
அர்ஜூனுக்கும் அப்படித்தான் இருந்தது போல. ஆனால் அவன் கவனிக்காத மாதிரியே பார்வையை திருப்பிக் கொண்டான்.
அவள் பதட்டத்தில் இருக்கும் போதே காலிங் பெல் அடித்தது.
“ஆர்டர் பண்ண புட் தான் வந்திருக்கும்ன்னு நினைக்கிறன்..” என்று பதட்டமாக சொல்லிக் கொண்டே எழுந்தவள், பதட்டத்தில் தடுமாறி அவன் மீதே விழுந்தாள்.
“ஹேய்..! பார்த்து. இப்ப எதுக்கு இப்படி ரியாக்ட் பண்ற. நீ இரு. நான் போய் பார்க்கிறேன்..” என்று அவளை உட்கார வைத்துவிட்டு திரும்பியவன்,
“ஹூப்..” என்று பெருமூச்சை வெளியேற்றிக் கொண்டே சென்றான்.
‘அர்ஜூன்..! ஆரம்பமே அமர்க்களமா இருக்கு. இன்னும் என்னவெல்லாம் பார்க்கணுமோ..’ தனக்குள் சொல்லிக் கொண்டவனுக்கு, எதிர்வரும் காலமெல்லாம் இந்த சோதனை இருக்கும் என்று தெரியாமல் போனது.
அவன் மீது விழுந்தவளோ… அவனுக்குள் தீயை பற்ற வைத்ததை அறியாமல், இன்னமும் அதே பதட்டத்துடன் தான் இருந்தாள்.
“ஒரு ரொமான்ஸ் சீனுக்கு இவ்வளவு சீன் ஆகாது வராஹி. எதுக்கு இப்படி நெர்வஸ் ஆகுற… கூல் கூல்..” என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டிருந்தாள் அர்ஜூனின் வராஹினி.