ரஞ்சன்-ரூபிணி திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. ரஞ்சனின் சம்மதம் இல்லையென்றாலும், எந்த வேலையிலும் தொய்வு ஏற்படவில்லை. ரஞ்சனுக்கு ஒரே வருத்தம் என்றால் இப்போது பிரஜேஷ் தான். எப்போதும் அவன் பக்கம் நின்றவன், இப்போது அப்படியே பல்டியடித்ததைத் தான் தாங்க முடியவில்லை. ரூபிணி இப்போது அவளின் வீட்டில் இருந்தாள்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஏதாவது செய்யலாம் என்று ரஞ்சன் யோசிக்க, கார்த்திகேயன் எல்லா பக்கமும் அவனுக்கு முட்டுக் கட்டை போட்டிருந்தார். அதை நினைத்து கோபத்தில் புழுங்கிக் கொண்டிருந்தவனின் மனதில் தீயை வார்ப்பது போல், இருந்தது கார்த்திகேயனின் பேச்சு.
“எதுக்குங்க ஒரு மாதிரி இருக்கீங்க..?” என்றார் சுமித்ரா.
“எல்லாம் அர்ஜூனைப் பத்தி தான் யோசிச்சுட்டு இருக்கேன். ஏற்கனவே வராஹினி கூட இவனுக்கு கல்யாணம் நடக்க இருந்தப்பவும் அவன் எதுலையும் கலந்துக்கலை. இப்பவும் அவன் கலந்துக்கிற மாதிரி தெரியலை. ஏற்கனவே அரசல் புரசலா வெளிய பேசிட்டு இருக்கவங்களுக்கு, இது இன்னமும் தீனி போட்ட மாதிரி ஆகிடும்..” என்றார்.
“அதான், அந்த பொண்ணைப் பார்த்து பேசணும்ன்னு சொன்னிங்க..? இன்னமும் என்னவாம்?” என்றார் சுமித்ரா.
“வராஹினியைப் பார்த்து பேசிட்டேன். ஆனா, அந்த பொண்ணு பேச்சை அர்ஜூன் கேட்பான்னு எனக்குத் தோணலை..” என்றார்.
“இங்க நான் என்ன நிலமையில இருக்கேன்..? உங்களுக்கு அவன் வர மாட்டான்னு கவலையா..? இப்ப சொல்றேன் கேட்டுக்கங்க, என்னோட கல்யாணத்துக்கு அவன் வரக்கூடாது. மீறி வந்தான், நான் பேசாம கிளம்பி போயிட்டே இருப்பேன்..” என்றான் ரஞ்சன்.
“அப்படியெல்லாம் உன்னால எங்கயும் போக முடியாது. அர்ஜூன் கண்டிப்பா வருவான். அவன் உனக்கு அண்ணன். தேவையில்லாம பேசுறதை விட்டுட்டு போய் வேலையைப் பார்..” என்றார்.
“ரஞ்சன் தான் சொல்றான்ல.. எனக்கும் அர்ஜூன் வரணும்ன்னு ஆசை தான். அதே சமயம், இவனுக்கு அதுல விருப்பம் இல்லைங்கும் போது, ஏன் தேவையில்லாத பிரச்சனையை கூட்டனும்..?” என்றார் சுமித்ரா.
“உனக்கு அர்ஜூன் தேவையில்லாத பிரச்சனையா..? உன்னோட மனசுல அப்போ இத்தனை நாள் இந்த எண்ணம் தான் இருந்திருக்கு இல்லையா..?” என்று சுமித்ராவின் மேல் கோபம் கொண்டார்.
“நான் அப்படி சொல்ல வரலைங்க. ஏற்கனவே ஒரு தடவை இவன் கல்யாணம் நின்னு போய்டுச்சு. மறுபடியும் ஏன் பிரச்சனையை கூட்டனும். நீங்க எப்படி கூப்பிட்டாலும் அர்ஜூன் வரப்போறதில்லை..” என்றார் சுமித்ரா.
“அது என்னோட பாடு. அவனை எப்படி வரவைக்கனும்ன்னு எனக்குத் தெரியும். இதுக்கு முன்னாடி அவன் தனியாள். இப்போ அவனுக்குன்னு ஒரு பொண்ணு வந்திருக்கா. அந்த பொண்ணு பார்த்துப்பா எல்லாத்தையும்..” என்றவர்,
ரஞ்சனைப் பார்த்து..”கூடிய சீக்கிரம் அர்ஜூனை தான் ஹெட்டா அறிவிக்கப் போறேன். நீ அவனுக்குக் கீழ இருந்து கொஞ்ச நாள் பிஸ்னசை பார்த்துக்கோ. நீ என்னைக்கு உருப்படிக்கு வரியோ, அன்னைக்குத் தான் உனக்கு பொறுப்பு குடுக்க முடியும்..” என்றார்.
“அவனுக்குக் கீழ வேலை செய்யனும்ன்னு எனக்கு எந்த அவசியமும் கிடையாது..” என்றான் ரஞ்சன்.
அவனை முறைத்தவர், ”அவசியம் எனக்கிருக்கு. இஷ்ட்டம்ன்னா செய். இல்லையா சொத்துல எதுவுமே கிடையாது உனக்கு. எல்லாத்தையும் உனக்கு மனைவியா வரப்போற ரூபிணி பேர்ல எழுதிக் குடுத்திடுவேன், ஜாக்கிரதை..” என்றார்.
“என்ன டாட்..! அவளை நம்புறிங்க..? என்னை நம்ப மாட்டிங்களா..?” என்றான்.
“எனக்கு நம்பிக்கை வர்ற மாதிரி நீ என்னைக்கு நடந்துகிட்டு இருக்க. இனியாவது அதுக்கு முயற்சி பண்ணு..” என்றவர்,
“இன்னைக்கு ஈவ்னிங் நடக்குற அசோசியேஷன் மீட்ல நான் அறிவிச்சுடுவேன்..” என்றார்.
“அப்போ என் பையனுக்கு என்ன வழி..?” என்றார் சுமித்ரா.
“அர்ஜூனும் நம்ம பையன் தான். நான் இவனுக்கு எந்த பொறுப்பையும் குடுக்க மாட்டேன்னு சொல்லலை. இவனுக்கு பொறுப்பு வராம எந்த பொறுப்பையும் குடுக்க மாட்டேன்னு தான் சொல்றேன்..” என்றார்.
“விடுங்க மாம்..! டாட் பத்தி தான் நமக்கு நல்லா தெரியுமே. எப்பவுமே அவருக்கு அவன் மட்டும் தான் . இதை அவர் நேராவே சொல்லலாம். நான் யார்ன்னுக்கு கூடிய சீக்கிரம் இவருக்கு நிரூபிப்பேன்..!” என்றான்.
“இந்த வாய் பேச்சை எல்லாம் செயல்ல காட்டு..” என்றார்.
“செஞ்சு காட்றேன்..! அப்ப தெரியும் இந்த ரஞ்சன் யாருன்னு..” என்று உறுதியாய் சொன்னான்.
அர்ஜூனின் வீட்டில்…
அர்ஜூனின் அறைக் கதவு சாத்தியிருக்க, கதவில் ஒரு பார்வையும், கையில் இருந்த புத்தகத்தில் ஒரு பார்வையுமாக இருந்தாள் வராஹினி. இரண்டு மணி நேரமாக படித்துக் கொண்டிருந்தவளுக்கு, ஒரு காபி குடித்தால் தேவலாம் போல் இருந்தது.
“மாலாக்கா..! ஒரு காபி ப்ளீஸ்..” என்றாள்.
“சரிம்மா..! போட்டுத்தரேன்..” என்றார் அவர்.
‘என்ன? வாத்தியார இன்னும் வெளிய ஆளைக் காணோம்..?’ என்று நினைத்தவள்,
“பாப்பா தான் உங்களுக்கும் காபி போட சொல்லுச்சு..” என்றார். அவருக்குப் பின்னால் பார்த்தவன், அங்கே வராஹினி இவனையே நோட்டம் விட்டுக் கொண்டிருப்பதை பார்த்த்தான்.
கப்பை வாங்கிக் கொண்டவன்,
“நீங்க போங்க..!” என்றபடி, அவளின் அருகில் சென்றான். எங்கோ வெளியே செல்ல அவன் கிளம்பி தயாராய் இருப்பதைப் பார்த்த வராஹினிக்கு, அவன்மேல் இருந்து கண்ணை எடுக்க முடியவில்லை. அவளின் முன் கையை ஆட்டி, அவளை கனவில் இருந்து மீட்டவன்,
“உனக்கு காபி வேணும்ன்னா, நீ மட்டும் குடிக்க வேண்டியது தான..? இதென்ன பக்கத்து இலைக்கு பாயசமா” என்றான்.
‘உங்களைப் பார்க்கனும்ன்னு தான, காபி குடுக்க சொன்னேன்..’ என்று நினைத்துக் கொண்டவள்,
“போனாப்போகுதே.. பாவம்ன்னு நினைச்சு உங்களுக்கும் சேர்த்து காபி போட சொன்னேன். இது ஒரு தப்பா..?” என்றவள்,
“அது சரி..! சார் எங்கையோ கிளம்பி ரெடியா இருக்குற மாதிரி தெரியுதே..?” என்றாள்.
அவளை முறைத்தவன்,”அதான் தெரியுதுல்ல..? அப்பறம் என்ன கேள்வி..?” என்றான்.
“நான் கேட்காம வேற யார் கேட்பா..?” என்றாள் புருவத்தை உயர்த்தி.
‘அது சரி..! இவ சாதரணமா பேசினாலே, சீக்கிரம் முடிக்க மாட்டா. நான் ஏதாவது விதண்டாவாதமா பேசினா சுத்தம்’ என்று நினைத்தவன்,
“அசோசியேட் மீட்டிங் இருக்கு. அப்பா கண்டிப்பா என்னை வர சொல்லியிருக்கார். முக்கியமான விஷயமா இருந்தா மட்டும் தான் என்னை கூப்பிடுவார். சோ, நான் போயிட்டு வந்திடுறேன்..” என்றான்.
“அப்படி என்ன முக்கியமான விஷயமா இருந்திடப் போகுது..? உங்க பிஸ்நஸ்க்கு அடுத்த லீட் நீங்க தான். அதை சொல்லவா கூட இருக்கலாம்..” என்றாள்.
“அப்படி சொன்னா, நான் ஏத்துக்க மாட்டேன்னு அவருக்குத் தெரியும்.. எனக்கு அதுல உடன்பாடும் கிடையாது..” என்றான் அர்ஜூன்.
“எனக்கு ஒரு விஷயம் நல்லா புரிஞ்சு போய்டுச்சு..” என்றாள்.
“என்ன?”
“அவருக்குத்தான் உங்கமேல அக்கறை இல்லைன்னு பார்த்தா, உங்களுக்கும் அவர்மேல கொஞ்சம் கூட அக்கறை இல்லை..சோ சேட்..” என்றாள், வேண்டுமென்றே.
“என்ன, கிவ்வன் டேக்கா..? இதெல்லாம் இந்த அர்ஜூன் கிட்ட நடக்காது. அவர்மேல எனக்கு இருக்கிற அக்கறையை இப்படித்தான் நிருபிக்கனும்ன்ற அவசியம் எனக்குக் கிடையாது, மைன்ட் இட்..” என்றான்.
“இனிமேல் தெரியாம எதையும் பேசக் கூடாது. இந்தா, இந்த காபியையும் நீயே குடி..!” என்று அவளின் கைகளில் திணித்தவன்,
“வரேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.வராஹி சொன்னது தான் நடக்கப் போகிறது என்பதை அறியாமல்.
அந்த மிகப் பெரிய ஹோட்டலில் நடந்து கொண்டிருந்த அசோசியேஷன் கூட்டத்திற்கு, கல்பனாவும், பிரஜேஷும் வந்திருந்தனர். தொழில் முறை கூட்டம் என்பதால் அனைத்து பெரிய ஆட்களும் வந்திருக்க, ஏற்கனவே சென்றிருந்த கார்த்திகேயன், அர்ஜூனுக்காக காத்துக் கொண்டிருந்தார்.
“யாருக்காக அவர் வெயிட் பண்ணிட்டு இருக்காரு..?” என்றார் கல்பனா.
“தெரியலை மாம்..! ரஞ்சன் வர்ற மாதிரி சொல்லலை. ஒருவேளை அர்ஜூனா இருக்குமோ..?” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் வந்து இறங்கியிருந்தான் அர்ஜூன். கெத்தாக வந்து இறங்கிய அர்ஜூனைப் பார்த்த பிரஜேஷிற்கு அந்த இடத்தில் ரஞ்சனை யோசிக்க, அவனுக்கே கொஞ்சம் டம்மியாகத் தான் தெரிந்தது.
“இன்ஜினியரிங் காலேஜ் சம்பந்தமா, கவர்மென்ட் சைட்ல இருந்து இன்னமும் சில அப்ரூவல்ஸ் வாங்க வேண்டியிருக்கு. மிஸ்டர். கார்த்திகேயன் மனசு வச்சா உடனே நடக்கும். இன்னைக்கு எப்படியாவது இதைப் பத்தி அவர்கிட்ட பேசிடனும்..” என்றார்கல்பனா, பிரஜேஷிடம்.
“ஷியர் மாம்..!” என்றான்.
“உள்ள போகலாம் அர்ஜூன்..” என்றார் கார்த்திகேயன்.
“எதுக்காக என்னை வர சொன்னிங்க..? இதுல ஏதாவது விஷயம் இருந்தா, இப்பவே சொல்லிடுறேன் கண்டிப்பா நடக்காது..” என்றான்.
“என்னோட அப்பன் வீட்டு சொத்தும் தான் அப்படின்னு ரஞ்சன்கிட்ட பேசினா மட்டும் போதாது.. அதை செயல்லையும் காட்டனும். நான் உன்னை பொறுப்பை ஏத்துக்கன்னு சொல்லலை. நீ ஏத்துகிற, அவ்வளவு தான்..கம் லெட்ஸ் கோ..” என்றவர் அவனுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருடன் இப்படி ஒன்றாக நடக்கிறான் அர்ஜூன்.
இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த பிரஜேஷ்,
“கார்த்திகேயன் அங்கிள் இந்த வயசுலையும் எப்படி இருக்கார்ன்னு பாருங்கம்மா..! இந்த அர்ஜூன் அப்படியே அவரை மாதிரி இருக்கான். ரஞ்சன் அப்படியே அவங்க மாம் மாதிரி..” என்றான் பிரஜேஷ்.
“ஆமா பிரஜ்ஷ்..! பையன் கூட நடக்கும் போது அவருக்கு இரண்டு வயசு குறைஞ்ச மாதிரி இருக்கு. என்னவொரு எனர்ஜி..” என்ற கல்பனாவிற்கும் ஆச்சர்யமாகத் தான் இருந்தது.
கார்த்திகேயனின் கண்டிப்பு அர்ஜூனுக்கு இதமாக இருந்தது. பார்க்கப் போனால், அவனுக்கு கோபம் தான் வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை.
“நான் இதை அக்சப்ட் பண்ணிகிட்டாலும், ரஞ்சனுக்கு இது பிடிக்காது. அவன் இதை வச்சு பிரச்சனை பண்ணுவான்..” என்றான் அர்ஜூன்.
“என் பையன் அர்ஜூனுக்கு எதை எப்படி செய்யனும்ன்னு தெரியும். ரஞ்சனை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு உனக்கு நல்லாவே தெரியும். அட் தி சேம் டைம், அவனை நீ அப்படியே விட்டுட மாட்டேன்னும் எனக்குத் தெரியும். சோ, இதுல கில்ட்டியா பீல் பண்ண ஒண்ணுமேயில்லை அர்ஜூன். பொறுப்பை ஏத்துகிறதுக்கான முழுத் தகுதியும் உனக்கு இருக்கு. இத்தனை வருஷத்துல நாளுக்கு நாள், தகுதியானவனா, உன்னை நீயே மாத்திட்டு இருக்க. இதை விட வேற என்ன வேணும்..?” என்றார்.
அர்ஜூனுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. எப்படி பேசினாலும் என்ட் கார்ட் போடும் கார்த்திகேயனிடம் எப்படித்தான் பேசுவது. அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அவர் அங்கே அறிவித்து முடித்துவிட்டார்.
“டியர் பிரண்ட்ஸ்..! KK இண்டஸ்ட்ரீஸ், KK காலேஜஸ் இதுக்கு எல்லாமே அதிகாரப் பூர்வ தொழில் வாரீசா என்னோட மூத்த பையன் மிஸ்டர். அர்ஜூன் கார்த்திகேயனை நான் அன்னௌன்ஸ் பண்றேன். கூடிய சீக்கிரம் லீகல் அன்னௌன்ஸ்மென்ட் வரும். வி நீட் ஆல் யூவர் சப்போர்ட்ஸ்..” என்று அவர் சொல்லி முடிக்க, வேறு வழியில்லாமல் அர்ஜூன் எழுந்து அனைவருக்கும் ஒரு வணக்கத்தை வைத்தான்.
“சரியான முடிவு மிஸ்டர். கார்த்திகேயன்..” என்று ஒவ்வொருவரும் பாராட்ட,
“என்ன மாம்..? அங்கிள் இப்படி சொல்லிட்டாரு. அப்போ ரஞ்சன்..?” என்றான் பிரஜேஷ்.
“அவன் இனி எந்த வகையிலும் நமக்கு யூஸ் ஆக மாட்டான்..” என்றார் கல்பனா.
அருகில் இருந்த ஒருவர்,
“என்ன மிஸ்ஸஸ். மோகன் குமார், நீங்க மிஸ்டர். அர்ஜூனுக்கு வாழ்த்து சொல்லவேயில்லை..” என்றார்.
“ரியல்லி..! ஆனா, அந்த மேரேஜ் நடக்கலைன்னு கேள்விப் பட்டேனே. உங்க பொண்ணு கூட ஓடிப் போயிட்டதா..” என்று சொல்ல வந்தவர், கல்பனாவின் முறைப்பில் அடங்கிப் போனார்.
“அர்ஜூனோட மனைவிதான் என்னோட பொண்ணு. மேரேஜ் சடனா நடந்திடுச்சு. யாருக்கும் சொல்ல முடியலை. கூடிய சீக்கிரம் ஒரு ரிஷப்ஷன் வைக்கிறதா பிளான்..” என்றார்.
“ஹோ..! ரியல்லி. நல்ல நியூஸ் தான் சொல்லியிருக்கிங்க..” என்றவர், அர்ஜூனிடம் சென்று,
“என்ன அர்ஜூன்..? உங்களுக்கு மேரேஜ் ஆனதை சொல்லவேயில்லை. எனிவே.. வாழ்த்துகள்..” என்றார்.
விஷயம் அடுத்த நிமிடம் அந்த இடத்தில் பரவியிருந்தது.
அர்ஜூன் பல்லைக் கடிக்க, கார்த்திகேயன் தான் சமாளித்தார்.
“எப்படியோ ஒரு வழியா மோகன்குமார் பேமிலியும் நீங்களும் சம்பந்தி ஆகிட்டிங்க. கூடிய சீக்கிரம் பிஸ்னஸ்லயும் பார்ட்னர்ஸ் ஆகிடுவிங்க..” என்று சிலர் சொல்ல,
“என்ன அர்ஜூன்..? எதுக்காக இப்படி முகத்துல அடிச்ச மாதிரி பேசுற..? ஜஸ்ட் காம் டவுன்..” என்றார் கார்த்திகேயன்.
“என்ன மாப்பிள்ளை..? என்னாச்சு..? என்ன கோபம் உங்களுக்கு..?” என்றான் பிரஜேஷ்.
“மாப்பிள்ளையா..? யாருக்கு யார் மாப்பிள்ளை.? ஜஸ்ட் ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்..” என்றான் அசால்ட்டாய்.
“அர்ஜூன்..!” என்றார் கல்பனா.
“எஸ்..” என்றான் திமிராய். அவன் அப்படி பேசுவான் என்று எதிர்பார்க்காத கல்பனாவிற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாய் இருந்தார்.
“நீ பார்த்துக்கோ பிரஜேஷ்..!” என்றவர் உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
அடுத்து அங்கு பார்ட்டி ஆரம்பமாக,
“என்ன அர்ஜூன் இதெல்லாம்..? ஏன் அப்படி சொன்ன..? பாரு அவங்க கோபமா போறாங்க..?” என்றார் கார்த்திகேயன்.
“அவங்க என்னை மாப்பிள்ளைன்னு சொன்னது உண்மையான மனசோட இல்லை. என்னோட கணிப்பு சரின்னா, அவங்களுக்கு நம்மளால காரியம் ஆக வேண்டியிருக்கு. ரஞ்சனை அவங்க விடாம பிடிச்சு தொங்குனதுக்கும் அது மட்டும் தான் ரீசனா இருக்க முடியும். இதையெல்லாம் வளர விடவே கூடாது. ஆரம்பத்துலையே கட்டன் அன்ட் ரைட்டா வச்சுக்கணும். பேமிலி ரிலேஷன்ஷிப் வேற, பிஸ்னஸ் வேற. இரண்டையும் எப்பவும் மிங்கிள் பண்ணவே கூடாது. நான் பண்ணவும் மாட்டேன்.” என்றான் அர்ஜூன்.
“ஓகே அர்ஜூன். இருந்தாலும் கொஞ்சம் பார்த்துக்கோ..” என்பதோடு முடித்துக் கொண்டார் கார்த்திகேயன்.
ஏனோ அதற்கு மேல் அர்ஜூனால் அங்கு இருக்க முடியவில்லை. இருந்தாலும் நாகரிகம் கருதி சிறிது நேரம் தாக்குப் பிடித்தவன், அதற்கு மேல் முடியாமல் கிளம்பிவிட்டான். அவனை கண்காணித்துக் கொண்டே இருந்தான் பிரஜேஷ்.
அந்த இரவு நேர ஏகாந்தம், அர்ஜூனுக்கு ஒரு வித அமைதியைக் கொடுத்தது. அந்த தனிமையை ரசித்துக் கொண்டே காரை ஒட்டிக் கொண்டிருந்தான்.
“வாரஹினியையும் கூட்டிட்டு வந்திருக்கலாமோ..” என்று அவன் யோசிக்க,
“எதுக்கு..? ஊரே தமாரம் அடிக்கவா..?” என்று அவன் மனம் நக்கலடித்தது.
“அதுவும் உண்மைதான்..!” என்றவன், அடுத்த ஒருமணி நேரத்தில் வீட்டை அடைந்திருந்தான்.
அவள் தூங்கியிருப்பாள் என்று அவன் நினைத்திருக்க, அவளோ தூங்காமல் அவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள். அவனை பார்த்த பிறகு தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.
“இப்ப எதுக்கு அதைப் பத்தி பேசுறிங்க..? எனக்கு அந்த கல்யாணம் பிடிக்கலை தான். வீட்டை விட்டு போகணும்ன்னு நான் நினைக்கவேயில்லை. மேரேஜ் அன்னைக்கு, குருவோட போய் நிக்கிறது தான் பிளான்..” என்றாள்.
“அப்பறம் பிளான் எப்படி மாறுச்சு..?” என்றான் நக்கலாய்.
“எல்லாம் அந்த எமகாதகனால வந்த வினை..” என்றாள்.
“எமகாதனா..?” என்றான் புரியாமல்.
“ஆமா, ஒரு லூசுப் பய எப்பப் பார்த்தாலும் எனக்கு போன் பண்ணி மிரட்டிட்டே இருந்தான். வேற வழியில்லாம அவன் சொன்னதையெல்லாம் செய்ற மாதிரி ஆகிடுச்சு..” என்றாள்.
“யாரு அவன்..?” என்றான் கோட்டைக் கழட்டிக் கொண்டே.
“அது தெரிஞ்சா நான் இப்படியா பேசிட்டு இருப்பேன். அவன் மட்டும் கையில கிடைச்சான்..” என்று இழுக்க,
“கிடைச்சா..” என்றான் அர்ஜூன்.
“அவனை அந்த இடத்துலயே உண்டு இல்லைன்னு ஆக்கிடுவேன்..” என்று அந்த நேரத்திலும் கோபமாக பேசிக் கொண்டிருந்தாள்.
“தூங்கப் போற நேரத்துல இவ்வளவு கோபம் உடம்புக்கு ஆகாது. போய் அமைதியா தூங்கு..” என்றான்.
“உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கத்தான் வெயிட் பண்ணேன்..” என்றாள்.
“என்ன விஷயம்..?”
“இன்னைக்கு எங்க மம்மியும் வந்திருப்பாங்களே..? நீங்க பார்த்திங்களா..? எப்படி இருக்காங்க..? அதைக் கேட்கத்தான் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணேன்..” என்றாள்.
“உனக்கு அப்படி தோணினா, அதுக்கு நான் பொறுப்பில்லை..” என்றான்.
“என்ன இருந்தாலும் அவங்க உங்க மாமியார்..?” என்றாள்.
“அது என்ன தேவைக்கு..?நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து அவங்களே அவங்க பொண்ணை எனக்குக் கட்டி வச்ச மாதிரி பேசுற..? உனக்கு ஹெல்ப் பண்ணது பத்தாதுன்னு, உன்னோட பேமிலிக்கே என்னால பண்ண முடியாது…” என்றான் அவனும் எரிச்சலுடன்.
“நீங்க உதவி செஞ்சுதான் வாழனும்ன்ற நிலைமையில அவங்க இல்லை..” என்றாள் கோபமாக.
“என்னதான் இருந்தாலும் இந்த பொண்ணுங்க எல்லாரும் பிறந்த வீட்டை விட்டுக் குடுக்காம பேசுறது தான் ஆச்சர்யமா இருக்கு.. அவங்க உனக்கு பண்ணினதெல்லாம் மறந்து போயிடுச்சா என்ன..?” என்றான்.
“அவங்க அப்படி ஒன்னும் எனக்கு பெரிசா கெடுதல் பண்ணிடலை. அப்படியே பண்ணாலும் அவங்க என் அம்மா, என்னோட அண்ணன். அவங்களை எப்படி நான் விட்டுக் குடுக்க முடியும்..?” என்றாள் பதிலுக்கு.
“பட், நான் அப்படியில்லை. தப்புன்னா தப்புத்தான் எனக்கு. இந்த அர்ஜூன் எப்பவும் ஒரே மாதிரி தான் இருப்பான். குள்ள நரித்தனமான வேலையெல்லாம் செய்ய எனக்குத் தெரியாது. இனி இந்த பேச்சு அவசியமில்லைன்னு நான் நினைக்கிறேன்..” என்றான்.
“பேச்சு மட்டும் அவசியமில்லையா..? இல்லை நானே அவசியமில்லையா..?” என்றாள் வராஹினி.
“நீயா நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை. எப்ப பாரு நைனைன்னுகிட்டு…” என்று கடுப்புடன் சொன்னவன், அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் அறைக்குள் சென்று விட்டான்.
அவனின் பேச்சில் ஆணி அடித்தார் போல் அதே இடத்தில் நின்றிருந்தாள் வராஹினி.