அந்த பிரமாண்டமான வீட்டின் உள்ளே இருந்த மனிதர்கள் அனைவரும் ஆளுக்கொரு திசையை பார்த்திருந்தனர். அவர்கள் முகத்திலிருந்தே அவர்களின் கோபம் தெரிந்தது.
“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கிறதா உத்தேசம் ரஞ்சன்..?” என்றார் கார்த்திகேயன். அவருடைய முகத்தில் வருத்தம் இருந்தாலும், அதையும் மீறிய கோபமும் இருந்தது.
“என்னை என்ன பண்ண சொல்றிங்க டாட்..? இப்படி ஒரு அவமானம் எனக்கு நடக்கும்ன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை..” என்று பொருமித் தள்ளினான் ரஞ்சன். அவனுடைய பார்வையெல்லாம் அருகில் இருந்த பிரஜேஷை முறைத்துக் கொண்டிருந்தது.
“இதுல என்னோட தப்பு எதுவும் இல்லை ரஞ்சன். என்னைய நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டா…” என்று பல்லைக் கடித்தான் பிரஜேஷ்.
“வராஹினி ஏன் இப்படி பண்ணினான்னு உங்களுக்குக் கூடவா தெரியாம இருக்கும்..?” என்று ரஞ்சனின் அம்மா சுமித்ரா கோபமாக கேட்க, அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதியாக நின்றிருந்தனர் மோகன் குமார்-கல்பனா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் பிரஜேஷ். இளையவள் வராஹினி.
“விளையாட்டு பொண்ணு..! மத்தபடி பெருசா எதுவும் இருக்காதுன்னு நினைச்சோம்” என்றனர் அவர்களும் கோபத்துடன்.
ரஞ்சனும்-பிரஜேஷும் வெளிநாட்டில் ஒன்றாக படித்தவர்கள். இரு குடும்பங்களுக்குள் அறிமுகம் இல்லையென்றாலும், தொழில் வட்டாரத்தில் அவ்வப்போது சந்தித்ததுண்டு. மற்றபடி ரஞ்சனின் நண்பன் என்கிற காரணத்திற்காகவும், பணம் பணத்துடன் தான் சேர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தான் வராஹினியை அவனுக்கு பெண் தர சம்மதம் சொல்லியிருந்தனர்.
“அப்பா என்ன பேசிட்டு இருக்கீங்க..? ஒரு அண்ணனா அவ மேல நான் அக்கறை எடுத்துகிட்டது தப்பா..? அவளுக்கு கல்யாணம் பண்ணின பிறகு தான் நான் என்னோட மேரேஜ் பத்தியே யோசிக்க முடியும்…ரஞ்சனை மாதிரி ஒருத்தனை தேடுனாலும் நம்மளால கண்டு பிடிக்க முடியாது..” என்றான் பிரஜேஷ் கோபமாக.
“அதுக்காக, அவ படிச்சுகிட்டு இருக்கும் போதே கல்யாணம் பண்ணி வைக்கணுமா..? இதெல்லாம் சரியா வராதுன்னு நான் சொன்னேன். நீயும் உங்கம்மாவும் தான் கேட்கலை. அதான் வராஹி இப்படி பண்ணிட்டு போய்ட்டா..இப்போ போலீஸ் கப்ளைன்ட் கூட இவங்க கட்டாயத்துல குடுத்திருக்கு. இதெல்லாம் தேவையா..?” என்றார் மோகன் குமார்.
“நீங்க எப்ப இருந்து அவ பக்கம் பேச ஆரம்பிச்சிங்க…? கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னவ, உறுதியா சொல்லியிருக்கணும். அதை விட்டுட்டு இப்படி கல்யாணத்துக்கு முதல் நாள் வீட்டை விட்டு போனது தப்புத் தான்..” என்றான் பிரஜேஷ்.
“அவ பெங்களூர் தான் போயிருக்கா. எப்படியும் வந்திடுவா. நம்ம இவங்க பேச்சைக் கேட்டு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தது தான் தப்பு. வராஹி இனி தான் ரொம்ப பயந்து வரவே யோசிப்பா..” என்றார் மோகன்.
“அவ வந்து தான் ஆகணும். அவளே வந்துட்டா பிரச்சனையில்லை. ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி நின்னு போன கல்யாணத்தை நடத்திடலாம். ரஞ்சன் பேமிலியும், நாமளும் என்ன சாதாரண பேமிலியா..? போன மானம் போனது தான..?” என்று கல்பனா ஆங்காரமாய் பேசத் தொடங்கினார்.
“நீ கொஞ்சம் அமைதியா இரு கல்பனா. வராஹி வந்த உடனே பேசி புரிய வைக்க முயற்சி பண்ணுவோம். எப்படியும் நின்னு போன கல்யாணத்தை நடத்த வேண்டியது என்னோட பொறுப்பு. நீங்க என்னை நம்புங்க கார்த்திகேயன்..” என்றார் மோகன் குமார்.
“இப்போ யாரும் யாரையும் நம்புறது முக்கியமில்லை கார்த்திகேயன். உங்க மக தான் என் வீட்டு மருமகள்ன்னு ஊரே பத்திரிக்கை அடிச்சு குடுத்திருக்கு. இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க..?” என்றார் கார்த்திகேயன்.
“கண்டிப்பா நின்னு போன இந்த கல்யாணம் நடக்கும். வராஹினி கண்டிப்பா வந்திடுவா…” என்றார் மோகன்.
“நீங்களும் ரெண்டு நாளா இந்த பதிலைத் தான் சொல்றிங்க. ஆனா, ஓடிப் போன உங்க பொண்ணு திரும்பி வந்த பாடில்லை. கல்யாணம் பிடிக்காம ஓடிப் போனாளா..? இல்லை வேற எதுவுமா..?” என்றான் நிரஞ்சன்.
“என்ன நிரஞ்சா..? நீயே இப்படி பேசுனா எப்படி..? அவளுக்கு கல்யாணத்துல தான் விருப்பம் இல்லை. மத்தபடி வேற எந்த காரணமும் இல்லை. பெங்களூர்ல தான் இருந்திருக்கா ரெண்டு நாளா. அவ வேற எங்கயும் போக வாய்ப்பில்லை. என்ன? இந்த ரெண்டு நாளா இப்படி தண்ணி காட்டுவான்னு நான் நினைக்கவேயில்லை..” என்றான் பிரஜேஷ்.
அதுவரை அங்கு நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ரூபிணி. ஆனால் எதுவும் பேசவில்லை. சொல்லப் போனால் அந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள அவளுக்கு விருப்பமில்லை.
“நாம இப்படி பேசிட்டே இருக்குறதுல பிரயோஜனம் இல்லை. பிரஜேஷ் நீ என்ன பண்ணுவியோ தெரியாது, நாளைக்குள்ள அவ இங்க இருக்கணும்..” என்றார் கல்பனா.
“மாம், அவ சென்னை கிளம்பிட்டா. அவ இப்போ பெங்களூர்ல இல்லை. அது மட்டும் உறுதியா தெரியும். நாம நினைக்கிறது சரின்னா, அவ நேரா நம்ம வீட்டுக்குத் தான் வருவா. இந்த போலீஸ் கம்ளைண்டே தேவையில்லாதது. இதைப் பார்த்து அவ பயந்து வராம இருந்துட்டா..?” என்றான் பிரஜேஷ்.
“இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன். இதெல்லாம் சரியா வராதுன்னு. என் பேச்சை யாரு கேட்கிறா..?” என்று சுமித்ராவும் கோபமாக பேசிவிட்டு உள்ளே சென்று விட்டார்.
“நம்ம வீட்டுக்கு கிளம்பலாம் கல்பனா..” என்று மோகன் குமார் சொல்ல,
“என்ன ரஞ்சன் மிரட்டுறிங்களா..? நாங்களும் உங்களுக்கு குறைஞ்சவங்க கிடையாது.. இதென்ன இப்படி பேசிட்டு இருக்கீங்க? என் பொண்ணு வருவா. அவ வந்த பிறகு எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்..” என்றார் மோகன் குமார்.
“ஓகே..” என்றவன் எழுந்து சென்றுவிட்டான். வராஹிக்கும் சென்றால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இருந்தாலும் அவள் இருந்த இடத்தை விட்டு நகரவே விருப்பம் இல்லாமல் அப்படியே இருந்து விட்டாள். பிறகு என்ன நினைத்தாளோ தெரியவில்லை. மெதுவாக எழுந்து வெளியே வந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அங்கே இருந்த ரெஸ்ட் ரூமை உபயோகப்படுத்த அவளுக்குத் துளியும் விருப்பமில்லை. சற்று தள்ளி நின்று இவளின் முக பாவனைகளை கவனித்துக் கொண்டிருந்தான் அர்ஜூன். அவன் முகம் யோசனைக்குத் தாவியது. அவளைப் பார்த்ததில் இருந்து மனதிற்குள் ஒரு விஷயம் நெருடிக் கொண்டிருந்தது. ஆனால் உறுதியாகவும் தெரியவில்லை. அவளிடம் அதைப் பற்றி பேசவும் அவனுக்கு விருப்பமில்லை.
அவனுக்கு அருகில் வந்த அந்த குண்டு பெண்…”இன்னுமா உங்க ரெண்டு பேருக்கும் சண்டை தீரலை. எதுக்குப்பா அந்த பொண்ணை அங்க விட்டுட்டு இங்க தனியா நிக்கிற..? அதுவும் இந்த ராத்திரி நேரத்துல…” என்றார்.
“என்னப்பா நீ..? சண்டைன்னா அதுக்காக பொண்டாட்டியே இல்லைன்னு சொல்லுவியா..? அப்பறம் அந்த எஸ்ஐ கிட்ட மட்டும் அப்படி பேசுன..? என்னதான் பிள்ளைங்களோ போங்க..” என்று அவர் பஸ்ஸில் ஏறிவிட்டார்.
“எல்லாம் இந்த பொண்ணால வந்தது..” என்று பல்லை மட்டும் தான் அவனால் கடிக்க முடிந்தது.
எதற்கு இறங்கினோம் என்று புரியாமலேயே மீண்டும் பேருந்தில் ஏறி அமர்ந்தாள் வராஹினி. தன்னுடைய மொபைலை எடுத்து யோசனையுடன் அதை ஆன் செய்தாள். அவன் ஆன் செய்தது தான் மாயம்… வரிசையாக மெசேஜ்கள் வந்த வண்ணம் இருக்க, அதைப் படித்தவளின் முகம் அப்படியே கோபத்திற்கு உள்ளானது.
வேகமாய் தன்னுடைய நண்பனுக்கு அழைத்தாள். அந்த நேரத்திற்கு அழைக்கிறோம் என்பது கூட நினைவில் இல்லை.
“சொல்லு ராஹி..” என்றான் எதிர்முனையில், அவளுடைய நண்பன் குரு கோவிந்தன்.
“என்னடா கோவிந்தா…?” என்றாள் சத்தமாக. அந்த கோவிந்தாவில் அனைவரும் அவளைத் திரும்பிப் பார்க்க, பஸ்சிற்கு வெளியே அவள் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் நின்றிருந்த அர்ஜூனுக்கும் சிரிப்பு வந்தது.
“குருன்னு சொல்லு..” என்று எதிர்முனையில் அவன் பல்லைக் கடித்தான். அவளுக்கு அதெல்லாம் காதில் விழுந்தது போலவே தெரியவில்லை.
“என்னடா பண்ணி வச்சிருக்க. நீ சொன்னதை நம்பித்தான் நான் கிளம்பி வந்துகிட்டு இருக்கேன். இப்போ இப்படி ஒரு மெசேஜ் போட்டிருக்க..?” என்றாள் ஆதங்கத்துடன்.
“நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு புரியுது ராகி..! ஆனா, இதெல்லாம் சரியா வரும்ன்னு எனக்குத் தோணலை. நீ நேராவே உங்க அப்பாவை வச்சு காய் நகர்த்திடு. அது தான் நல்லது. நீ தலையை சுத்தி மூக்கைத் தொடுறன்னு நான் நினைக்கிறேன்..” என்றான் குரு எதிர்முனையில்.
“எருமை..! அப்போ நீ நாளைக்கு நடிக்க வரமாட்ட..” என்றாள் கோபமாக.
“கண்டிப்பா மாட்டேன். உங்கண்ணன் என்னை கைமா பண்ணவா..? மனுஷனா அவன்..? இப்பவே என்னை கண்காணிக்க ஆள் வச்சிருக்கான்.. நாளைக்கு நான் வந்தாலும் நீ சொல்றது பொய் தான்னு கண்டு பிடிச்சிடுவான்..” என்றான் குரு.
“எதை வச்சு அப்படி சொல்ற..?” என்றாள்.
“ரெண்டு நாளா உங்கண்ணன் ஆளுங்க என்னை பாலோ பண்ணிட்டே தான் இருக்காங்க. இதுல நாம ரெண்டு பெரும் கல்யாணம் பண்ணிகிட்டோம்ன்னு சத்தியம் பண்ணினா கூட நம்ப மாட்டாங்க..” என்றான் குரு.
“என்னடா சொல்ற..? இதை முன்னாடியே சொல்றதுக்கு என்ன..? இப்படி கடைசி நேரத்துல சொல்லி என் கழுத்தை அறுக்குற..?” என்றாள்.
“இதெல்லாம் தேவையில்லாத வேலை ராஹி. நீ அந்த மாப்பிள்ளைகிட்டவே நேரடியா சொல்லிடு..” என்றான் குரு.
“அவன்கிட்ட நானும் எல்லா விதத்துலையும் சொல்லி பார்த்துட்டேன். முடியாத பட்சத்திற்கு தான் இப்படி ஒரு ஐடியா பண்ணி வெளிய வந்தேன். நீ என்னடான்னா இப்போ இப்படி சொல்ற..? இப்போ நான் இன்ஸ்டன்ட் புருஷனுக்கு எங்க போவேன்..?” என்றாள் கோபமாக.
“வாய்ப்பில்லை..! வந்து விடு மகளே..!” என்றான் குரு.
“கோவிந்தா…” என்று பல்லைக் கடித்தாள்.
“உன் பிளான் எல்லாமே இப்போ கோவிந்தா தான். மன்னித்துவிடு நட்பே..” என்று போனை வைத்துவிட்டான் குரு.
“இப்ப என்ன பண்றது..? பேசாம ரஞ்சன் கிட்டையே பேசிடுவோமா..?” என்று யோசித்த மாத்திரத்தில் அவன் பேசியது எல்லாம் ஞாபகத்திற்கு வர, அவ்வளவு நேரம் கொஞ்சம் இலகுவாய் இருந்த மனம் மீண்டும் இறுகியது.
“அவனுக்கு ரஞ்சன் பைத்தியம் பிடிச்சிருக்கு. அதை தெளிய வைக்கவே முடியாது. என்னைப் பத்தி யோசிக்க யாருமில்லை.. நானாதான் இதிலிருந்து வெளிய வரணும்..” என்று தனக்குத் தானே நினைத்துக் கொண்டாள்.
இவள் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அர்ஜூன், பேருந்து கிளம்பத் தயாராகவும் உள்ளே ஏறிச் சென்றான்.
அதுவரை நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தவளுக்கு, மீண்டும் தூக்கம் தொலை தூரம் சென்றது. எதையுமே கவனியாதவன் போல், அமர்ந்தான் அர்ஜூன்.
“அந்த விண்டோவ கொஞ்சம் குளோஸ் பண்றிங்களா..?” என்றான்.
“ஏன்..? நல்லா காத்து வருதே..?” என்றாள்.
“திரும்பவும் சொல்றேன் இது ஏ.சி பஸ்..” என்றான் பொறுமையாக.
“நானும் திரும்பவும் சொல்றேன், ஏசி வேலைசெய்யலை. அதுமட்டுமில்லாம விண்டோவ நான் லைட்டா தான் ஒப்பன் பண்ணி வச்சிருக்கேன்..” என்றாள்.
“ஒன்னும் சொல்றதுக்கில்லை..” என்று நினைத்தவன், தன்னுடைய போனை நோண்டிக் கொண்டிருந்தான்.
அவள் யோசனையுடன் அமர்ந்திருக்க,
“அந்த போலீஸ் எதுக்கு உன்னைத் தேடி வந்தாங்க..?” என்றான் திடுதிப்பென்று.
“ஹோ..! அப்ப நான் உதவி பண்ணினது தான் தப்பு. அப்பவே காமிச்சுக் குடுத்திருக்கணும்..” என்றான் அர்ஜூன்.
“நீங்க எனக்கு பண்ணினது மிகப் பெரிய உதவி தான். அதுக்காக எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லனும்ன்னு என்ன அவசியம் வந்தது? உங்களை யாருன்னு கூட தெரியலை..இது உங்களுக்கே ஓவரா தெரியலை..” என்றாள் வராஹினி.
“யாரு எனக்கு ஓவரா தெரியுதா..? ஹஸ்பண்ட்டா நடிக்க சொன்னப்ப மட்டும் என்னை நல்லாத் தெரியுமோ..?” என்றான் நக்கலாக.
“தப்புத்தான் சார்…! பூனைக்கு பயந்து புலி வாயில அகப்பட்ட கதை தான் என் கதை… எல்லாம் என் நேரம்..” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
“என்னையவா புலின்னு சொல்றிங்க..?” என்றவன்,
“கல்யாணம் பிடிக்காம ஓடி வந்துட்டிங்களா..?” என்றான் மொபைலை பார்த்துக் கொண்டே. அவன் அப்படி கேட்டவும் அவளுக்கு திக்கென்று இருந்தது.
“அது உங்களுக்கு எப்படி தெரியும்..?” என்றாள்.
“நீங்க தான சொன்னிங்க..?” என்றான் அர்ஜூன்.
“நான் எப்ப அப்படி சொன்னேன்..?” என்றாள்.
“இதோ இப்ப, எனக்கெப்படி தெரியும்ன்னு கேட்டதில் இருந்தே தெரியலையா..? விஷயம் அது தான்னு..” என்றான் அர்ஜூன்.
வேறுவழியில்லாமல் “ஆமா..” என்று ஒத்துக் கொண்டாள்.
“அப்பறம் எதுக்கு போலீஸ் வந்த உடனே ஒளிஞ்சிங்க..? தைரியமா அவங்களை பேஸ் பண்ணியிருக்காலமே. நீங்க மேஜர்ன்னா பிடிக்காத கல்யாணத்தை செய்ய முடியாது. அதை தைரியமா போலீஸ்கிட்டயே சொல்லியிருக்கலாம்…” என்றான் அர்ஜூன்.
“நான் அப்படி சொல்லியிருந்தாலும், அவங்க என்னோட வீட்டுக்கு சொல்லுவாங்க. என்னோட பேரன்ட்ஸ், மறுபடியும் என்னை பிரைன்வாஷ் பண்ணி, அதே பையனுக்கு கல்யாணத்தை பண்ணி வைப்பாங்க. எனக்கு அதில் சுத்தமா விருப்பம் கிடையாது..” என்றாள் வராஹினி.
“ஏன்..? வேற யாரையாவது லவ் பண்றிங்களா..?” என்றான்.
“அப்படி பண்ணியிருந்தா தான் பரவாயில்லையே..? இந்நேரம் அவனை கல்யாணம் பண்ணி, இவனைத்தான் லவ் பண்ணேன், இவனைத் தான் கல்யாணமும் பண்ணியிருக்கேன்னு சொல்லி தைரியமா அவங்க முன்னாடி போய் நிற்பேனே..? எங்க..? எனக்கு அதுக்கும் வழியில்லாம போய்டுச்சு..” என்றாள் வராஹினி.
“என்னோட பிரண்ட் கூட அப்படித்தான் சொன்னான். ஆனா, என்னோட பிரச்சனை என்ன..? அது எப்படி ஆரம்பிச்சது..? எப்படி போனா அதை முடிக்க முடியும்ன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். வெளிய இருந்து வேடிக்கை பார்க்கிறவங்களுக்கு இது ஒரு சாதாரண பிரச்சனை மாதிரி தான் தோணும்..” என்று சொல்லிக் கொண்டிருந்தவளுக்கு, ரஞ்சன் பேசியதே மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்தது.
“அது உண்மைதான்..! அவங்கவங்க பிராப்ளம் அவங்கவங்களுக்குத் தான் தெரியும்..” என்றான் அர்ஜூன்.
“இப்போ எதுக்கு இந்த பொண்ணுகிட்ட இவ்வளவு சகஜமா பேசிட்டு வர்ற. யாருன்னே தெரியாத பொண்ணுகிட்ட இவ்வளவு பேச்சு தேவையா..?” என்று அவனின் மனசாட்சி அவனைக் கேள்வி கேட்க,
தன்னைக் குறித்து தானே ஆச்சர்யம் அடைந்தான் அர்ஜூன். இது அவனுடைய இயல்பு அல்ல. ஆனால், அவளின் முகத்தைப் பார்க்கும் போது ஏதோ ஒன்று அவனுக்குள் தடம் புரண்டது. அதை அவன் அறியவில்லை.
அதற்கு பிறகு அவள் எதுவும் பேசவில்லை. பசி வயிற்றைக் போட்டு படுத்தி எடுத்தது. தண்ணீரைக் குடித்து சமாளித்துக் கொண்டிருந்தாள். அங்க ஒரு காபியாவது குடிச்சிருக்கலாம் என்று தன்னைத் தானே நொந்து கொள்ள மட்டும் தான் முடிந்தது அவளால்.
எதேச்சையாக அவளின் வலது புறம் திரும்ப, தன்னை மீறி கண்ணயர்ந்திருந்தான் அர்ஜூன். கைகளைக் கட்டிக் கொண்டு, ஏதோ யோசனையில் இருந்தபடி தூங்கியிருப்பான் போல, புருவ மத்தியில் விழுந்த முடிச்சுடன் தான் தூங்கிக் கொண்டிருந்தான்.
“இப்படி சொல்லி அவன் உன் தோளில் சாஞ்சிருந்தா என்ன பண்ணியிருப்ப..?” என்றது அவளின் மனம்.
“ம்ம் அதெப்படி..?” என்றாள்.
“பொண்ணுங்களுக்குன்னா ஒன்னு. பசங்களுக்குன்னா ஒன்னா..?” என்று கேலி செய்தது மனம். எது எப்படியோ அர்ஜூன் அவளை வசீகரிக்கவே செய்தான். அவனையே பார்த்துக் கொண்டிருந்ததில் அவள் பிரச்சனைகளை மறந்து போனாள்.
யோசனைகளுக்கும், குழப்பங்களுக்கும் நடுவே, அவள் எதிர்பார்த்த நேரத்தை விட முன்னாதாகவே பேருந்து சென்னையை சென்றடைந்திருந்தது.
அதிகாலை மூன்று மணியை காட்ட, வராஹினி மனதிற்குள் நொந்து போனாள். அர்ஜூன் அவளை சட்டையே செய்யாமல், கீழே இறங்க ஆயத்தமானான். பேருந்தில் இருந்த அனைவரும் இறங்கிய பிறகும் கூட வராஹினி யோசித்துக் கொண்டே தான் இருந்தாள். கீழே இறங்கிய அர்ஜூனுக்கு அவளைக் கண்டு பலத்த யோசனை. இருந்தாலும் அதற்கு மேல் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று நகர முற்பட்டவனைத் தடுத்தது அவளின் குரல்.
“என்னதான் கோபம்ன்னாலும் இப்படித்தான் பொண்டாட்டியை விட்டுட்டு போவியா..? பாரு அந்த பிள்ளை உன் பின்னாடியே ஓடி வருதுப்பா.. இருந்து கூட்டிட்டு போப்பா..” என்று அந்த குண்டு பெண்மணி சொல்லிவிட்டு நகர்ந்து செல்ல,
“எங்க இருந்து தான் வருவாங்களோ தெரியலை…” என்று தலையிலடித்துக் கொண்டான்.
“என்னங்க வேணும் உங்களுக்கு..?” என்றான் பொறுமையாக.
“அது வந்து.. நான் இந்த டைம்ல தனியா ட்ராவல் பண்ணதில்லை. பஸ் இவ்வளவு சீக்கிரம் வரும்ன்னு எனக்குத் தெரியாது..” என்றாள் சுற்றும் பார்த்தபடி.
“அதுக்கு நான் என்ன பண்றது..?” என்றான் எரிச்சலான குரலில். அவன் குரலை வைத்தே அவனின் மனநிலையை கணித்தவள், அதற்குமேல் அவனைத் தொந்தரவு செய்வது நன்றாக இருக்காது என்று நினைத்தாள்.
“என்ன..?” என்றான் பொறுமையிழந்து.
“ஒண்ணுமில்லை..! நீங்க கிளம்புங்க..” என்றவள், ஒரு முடிவு எடுத்தவளாய் போனை எடுத்து ஆன் செய்து கேப் புக் செய்தாள். ஒரு நிமிடம் நின்று அவளைப் பார்த்தவன், பிறகு சென்றுவிட்டான்.
“இன்னும் எத்தனை நாளைக்கு அடுத்தவங்க உதவியை எதிர்பார்த்துட்டு இருப்ப வராஹி. எது வந்தாலும் இனி நீ தான் பேஸ் பண்ணியாகணும். ஆனா, கண்டிப்பா இந்த கல்யாணம் மட்டும் நடக்கக் கூடாது. இப்போ நீ போனாலும் எப்படியாவது நின்னு போன கல்யாணத்தை நடத்தத்தான் பார்ப்பாங்க. அதைத் தடுக்குறது எப்படின்னு மட்டும் யோசி..” என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, கேப் வந்துவிட்டது. அந்த கேப் நம்பரையும், டிரைவர் நம்பரையும் குருவிற்கு அனுப்பியவள், ஒரு முடிவுடன் அதில் ஏறினாள்.அர்ஜூன் பேசியது அவளுக்குக் கொஞ்சம் தெம்பைக் கொடுத்து எனலாம்.
“நல்லவன் தான் போல. அவனோட இடத்துல வேற யாராவது இருந்திருந்தா, இந்நேரம் என்னோட நிலைமையை மிஸ்யூஸ் பண்ணியிருந்தாலும் சொல்றதுக்கு இல்லை. அதுவும் நானே அவன்கிட்ட வழிய உதவி கேட்டும் ரொம்ப ஜென்யூனா பிகேவ் பண்ணான். ரியல்லி கிரேட்..” என்று அவன் இருக்கும் போது சொல்லாமல் அவன் சென்ற பிறகு பாராட்டு பத்திரம் வாசித்துக் கொண்டிருந்தாள். இனி நடக்கப் போவதை பற்றி அறியாமல்.