அதிரூபன் முறைப்பிற்கு ஆதிரை முகம் வாடிட.. ‘நீ பட்டுவ நல்லா பார்த்துப்பனு அத்தைக்கு நல்லா தெரியும்.. மத்தவங்களுக்கு புரிய வைக்கத்தான் அப்படி பேசியிருப்பாங்க..” என்றான் தன்மையாக.
‘அதுக்காக மட்டும் இல்ல.. பட்டு என்னோட ரொம்ப ராசியாகிட்டா.. விட்டுட்டு போனா ஏமாந்துடுவா. கூட்டிட்டு போலாம் சொன்னா மாமா வேணாம்ங்கிறாங்க.. அவ இல்லாம போக பிடிக்கல.. நாம போகும்போது கூட்டிட்டு போலாம்..” என்றாள் சன்னக்குரலில்.
அதிரூபன் இதற்கு சம்மதிக்க மாட்டான் என மாரியப்பன் கணேசன் சொல்லியிருப்பதால் என்ன சொல்வானோ என பார்த்தாள் தவிப்பாக.
‘இங்க வா..” என அருகமர்த்திக்கொண்டவன்.. ‘பிறந்த பத்து நாள்லயிலயிருந்து பட்டு அப்பாம்மாவோடதான் இருக்கா.. நான் இருக்கும்போது என்னோட ஒட்டினாலும்.. நான் வீட்லயில்லன்னாலும் இந்த வயசுலயே புரிஞ்சிட்டு அழாம இருக்கா பார்த்தியா.? பட்டு ரொம்ப சமத்து.. அப்பானா இப்படித்தான்னு பழகிகிட்டா.. அதேபோல உன்னையும் பழகிக்குவா.
அம்மாகிட்ட பட்டுவ உன்னோட படுக்க வைக்க கேட்டியாம்.. அம்மா வேணாம் சொன்னதும் முகம் வாடிட்டனு சொன்னாங்க.. இதெல்லாம் செய்துதான் நம்ம அன்பை காட்டனும்னு இல்ல ஆதி.. நான் இங்க வந்தாலும் பகல்ல மட்டும்தான் என்னோட தூங்குவா.. நைட் அம்மா ரூம்லதான் படுக்க வச்சிடுவேன். அதனால குழந்தை நம்மளோட இல்லையேன்னு யோசிக்காத.”
ஆதிரை ஆமோதித்து தலையசைக்க..’அப்புறம்.. பட்டுவ இங்க படுக்கவச்சிட்டா அவளுக்கு தங்கையோ தம்பியோ எப்படி வரவைக்கிறது.?” என குழைந்து ஆதிரையின் இதழ் நெருங்கவும்..
‘நகருங்க.. “ என ரூபனை விலக்கியவள்.. ‘நான் கேட்டதுக்கு இன்னும் பதிலே வரல..” என முறைத்தாள்.
‘இப்போ வேணாம்.. நமக்கு ஒரு குழந்தை பிறந்தபிறகு கூட்டிட்டு போய்க்கலாம்..” என்றான்.
சட்டென முகம் வாடியவள்.. ‘எங்கம்மா பட்டுக்கு பாட்டிதான.? பாட்டி வீட்டுக்கு கூட்டிட்டு போனா என்னவாம்.? பட்டு விசயத்துல நீங்க வைக்கிறதுதான் சட்டமா.?” என்றாள் முனுமுனுப்பாக.
‘பட்டு.. பட்டு..” என ராகமாய் சேர்த்தணைத்தவன்.. ‘சட்டமெல்லாம் இல்ல ஆதிம்மா.. கல்யாணம் ஆகி முதல்முறையா போகப்போறோம்.. அங்க நம்மளை வரவேற்க அத்தை.. உங்க சித்தப்பானு எல்லாரும் ஆவலா இருப்பாங்க.. இந்த நேரம் பட்டுவோட போனா சரிவராது.
இங்க எல்லாரும் இருக்கவே, நான் வந்துட்டனா என்னை விட்டு யார்கிட்டயும் போகமாட்டா.. இதுல அங்க கூட்டிட்டு போனோம்னா புது இடத்துல என்னைவிட்டு நகரமாட்டா.. அவளை தவிர்த்து மத்தவங்களோட பழகினாலும் ஃபீல் பண்ணுவா.. அது பட்டுக்கும் கஷ்டம்.
பட்டுவ விட்டுட்டு போறோமேனோ.. இல்ல உன்னை தேடுவானோ நீயும் ஃபீல் பண்ணாத.. பட்டுகிட்ட அப்பா வேலைக்கு போறேன்னு சொல்லிட்டா அம்மாப்பாவோட ஜாலியா இருந்துப்பா.. அதே போல உனக்கும் சொல்லிக்கலாம்.. அவ புரிஞ்சிப்பா.” என்றான்.
ஆதிரை அரை மனதாக தலையசைக்க.. அதிரூபன்.. ‘ப்ச்.. இன்னும் என்ன.?” என தாபத்தோடு கன்னத்து முத்தம் வைத்து அவளின் துப்பட்டாவை அகற்ற.. ‘ப்ச்.. நிறைய பேசனும் உங்ககிட்ட..” என ரூபனின் கையை பிடித்தாள் மறுப்பாக.
‘ஒரு மாசம் இங்கதான் இருக்கபோறேன்.. நிறைய நிறைய பேசலாம்.. ஆனா இப்போ..” என கட்டிலில் சரித்தான்.
‘இப்படி வம்பு செய்தா என்ன பேசனும்னு மறந்திடுவேன்..” என்றாள் கெஞ்சலாக.
‘அப்படி ஈசியா மறக்குதுனா அந்த விசயம் அத்தனை முக்கியமில்லன்னு அர்த்தம்.. முக்கியமான நேரத்துல முக்கியமில்லாத விசயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்ககூடாது..” என எடுத்துரைத்து கண், கன்னம் என ரூபன் முத்தமிட ஆரம்பிக்க..
திருமணம் நடந்த மூன்றாவது நாளிலேயே தனது அனைத்து மன சஞ்சலங்களையும் அதிரூபன் போக்கியிருக்கவும்.. கணவனாக அவனிடம் பேச நிறைய விசயம் இருக்க ரூபன் வரவிற்காக காத்திருந்தாள்.
இருபத்திஐந்து நாட்கள் கழித்து வந்தவன் நேற்றிரவு அவளை பேசவிடாமல் செய்ய.. பகலெல்லாம் மொழியாள் எடுத்துக்கொண்டாள். குழந்தை மீது ஆதிரைக்கு வருத்தமில்லை. ஆனால் தனக்கும் இரவில்தானே இவனோடு தனிமை கிடைக்கிறது. இப்பொழும் இப்படி செய்தால் என்ன செய்வது என்ற தவிப்பு ஆதிரைக்கு.
அதிரூபன்.. ‘ம்.. பேசு.. ஏன் சடர்னா நிறுத்திட்ட..?” என உள்ளுக்குள் சிரித்தபடி ஆதிரையின் இதழை நெருங்க.. இப்படி நெருக்கத்தில் ரூபனை நேர்கொண்டு காணமுடியாமல் கண்மூடியவள்.. ‘எனக்கு உங்களோட நிறைய பேசனும்.. அதை புரிஞ்சிக்காம வம்பளக்குறிங்க..” என குறைபட்டாள்.
ஆதிரையின் மனம் இத்தருணம் கூடலை விரும்பவில்லை எனப்புரிந்த ரூபனின் உணர்வுகள் வடிந்திட.. அவளிடமிருந்து விலகியவன்.. ‘ம்.. என்ன பேசனும்..?” என்றான்.
கோபத்தோடு விலகிட்டானோ என ஆதிரை தவிப்போடு பார்க்கவும்.. ‘ஒரு கோபமும் இல்ல.. என்ன கேக்கனுமோ கேளு.. கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாம்..” என்றான் தன்மையாக.
ரூபனிடம் பேசும் ஆர்வத்தோடு ஆதிரை எழ முற்பட.. அவளின் இரு கைகளையும் தன் கைக்குள் அடக்கியபடி.. ‘ம்ஹும்.. அசையக் கூடாது.. இப்படியே பேசினாதான் கேட்பேன்..” என்றான் அன்பு கட்டளையாக.
‘அது.. “ என்றவளுக்கு பேச நினைத்தது அனைத்தும் மறந்திட.. ‘நிறைய கேக்க நினைச்சேன்.. இப்ப எல்லாம் மறந்துடுச்சி..” என்றாள் பாவமாக.
‘சரி நியாபகம் வரும்போது கேட்டுக்கலாம்..” என ஆதிரையை நெருங்க முயல.. ‘ஆமா நீங்க ஏன் ஹீரோவா நடிக்காம டூப் ஆக்டரா இருக்கிங்க.?” என்றாள்.
‘நீ பார்த்தியா.?” என ஆச்சர்யத்தோடு கேட்டவன்.. ‘தாத்தா கம்பெல் செய்து பார்க்க வச்சரா..? மாட்டிகிட்டியா அவர்கிட்ட..?” என்றான் சின்ன சிரிப்போடு.
‘தாத்தாதான் போட்டு காட்டினார்.. ஆனா கம்ப்பல்லாம் பண்ணல.. நான் கேக்கவும்தான் போட்டு காட்டினார்..”
‘பார்டா.. உனக்கு என்னை பார்க்க தோணுச்சா.?” என்றான் ஆச்சர்யமாக.
‘பின்ன தோணாதா.?” என முனுமுனுத்து.. ‘பத்து படத்துக்கு மேல தாத்தா போட்டு காட்டினார்.. ஆனா எங்கயும் உங்க முகம் தெரியல..” என குறைபட்டு.. ‘நீங்க டூப் போட்டு குரல் கொடுக்கிற ஹீரோல்லாம் உங்களை விட ரொம்ப சுமார்.. என்னம்மா சண்டை போடுறிங்க.? எத்தனை அழகா இருக்கிங்க.. நீங்களே நடிக்கலாமில்ல..?” என ஆதிரை தன்னை மறந்து புழாராம் செய்ய.. அதற்கு மேல் தாள முடியாதவனாய் ஆதிரையை நெருங்கினான்.
‘அச்சோ.. நான் இன்னும் பேசியே முடிக்கல.. வம்பு பண்ணாதிங்க..” என ஆதிரை திமிற.. ‘இவ்வளோ நேரம் நீ பேசினல்ல.? இப்போ என்னோட டைம்..” என்றவன் அவளின் பேச்சிற்கு மொத்தமாய் தடைவிதித்தான் தன் செயலால்.
ஆதிரையின் வெக்கம்.. தன்செயலுக்கு அவளின் சிணுங்களான மறுப்புகள் அதிரூபனின் தாபத்தை மேலும் மேலும் அதிகமாக்க.. பனிரெண்டு மணிக்கு மேல் மனைவியிடமிருந்து முயன்று விலகினான்.
ஆதிரையிடமிருந்து விசும்பல் சத்தம் கேட்கவே.. ‘ஹே.. என்னாச்சு.?” என அவளின் முகம் திருப்ப.. ‘போங்க.” என அவனின் முகம் காணமுடியாத வெக்கத்தோடும் சிறு கோபத்தோடும் முகம் திருப்பினாள்.
‘ப்ச்.. ஆதி.. என்ன ஆச்சு.? ரொம்ப படுத்திட்டனா.?” என்றான் தவிப்பாக.
‘ஆமாம்.. எனக்கு உங்கள்ட்ட நிறைய பேசனும்.. என்னை பேசவே விடாம ரொம்ப படுத்துறிங்க..” என பெரிதாய் குறைபட்டாள்.
‘இவ்வளோதானா.?” என நிம்மதியாகி.. ‘சாரிடா பெரியபட்டு.. கல்யாணமாகி மூனு நாளா உன் நெத்தியில இல்லாத குங்குமம் நைட் இருக்கவும் ரொம்ப சந்தோசமாகிடுச்சி.. இதுல எப்பவும் என்னை முறைச்சிட்டே இருந்த பொண்டாட்டி.. நேத்து நைட் என்னை ஏத்துக்கிட்டதும் பித்தாகிட்டேன்..
என் பித்தம் தெளியும் முன்னமே உனக்கு தூக்கம் வந்துடுச்சி.. பகலெல்லாம் சின்ன பட்டு எடுத்துக்கிட்டா.. பத்து மணிக்கு ஆசையா ரூம்க்குள்ள வந்தா நீ பேசணும்ற.. ரொம்ப முயற்சி செய்து உன்னை பேச விட்டா என்னை ரசிச்சி பாராட்டுற..
அதுவும் உன் டாப்ஸ் பட்டனை கழட்டினதை கூட கவனிக்காம பேசிட்டிருக்க.. என் காது நீ சொல்றதை கேட்டாலும், என் கண்ணும் மனசும் பாடா படுத்துனிச்சி.. இந்த நிலையில எவ்வளோ நேரம்தான் நல்லவனாவே நடிக்கிறது.?” என அணைத்து..
‘இப்போ கூட இப்படி கோலத்துல உன்னை பார்த்துட்டு சும்மா பேசிட்டிருக்கிறது எத்தனை கஷ்டமா இருக்கு தெரியுமா.?” என்றான் தாபத்தோடு.
ஆதிரை பெட்சீட்டை இறுக்கி பிடிக்கவும்.. ‘ஹே.. நான் டிரெஸ்சை சொல்லல.. உன் நெத்தில கலைஞ்சிருக்க குங்குமம்.. என்கிட்ட பேச நினைக்கிற மனசு.. உன் கண்ல எனக்கான காதல்.. என்னை பாராட்டுற வாய்..” என தான் சுட்டிகாட்டிய அங்கங்களுக்கு மென்மையாய் இதழ் பதித்து.. ‘இப்படியொரு நாள் இவ்வளோ சீக்கிரம் வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல.. அதான் தடுமாறிட்டேன்..” என காதலாய் வருந்தி..
‘இப்போ ஸ்ட்ராங்காகிட்டேன்.. எவ்வளோ நேரம் பேசனுமோ பேசு.. கேக்க நான் ரெடி..” என்றான் ஆர்வமாக.
‘கண்ணை மூடுங்க..” என்றாள் சிணுங்கலாக.
சிரித்தாலும் மனைவி சொன்னதை செய்யவும்.. பாத்ரூம் சென்று தன்னை சரிசெய்து வந்து.. மின் விளக்கை போட்டு கட்டிலில் அமர்ந்தவள்.. ‘உங்களுக்கு எப்படி என்னை பிடிச்சது.?” என்றாள்.
‘என்ன.?” என அதிர்ந்தவன்.. அவளின் கன்னம் வருடி.. ‘இந்த பட்டு முகத்தை பிடிக்கிறதுக்கு காரணம் தேவையா.? முதல்முறை பார்த்ததுமே பிடிச்சிடுச்சி.. ஏன் இப்படியொரு கேள்வி..?”
‘இல்ல.. என்னை விட நீங்க கலர் அழகு கம்பீரம்னு எல்லாமே அதிகம்.. அதான்..” என இழுக்க.. ஆதிரையை அணைத்துக்கொண்டவன்.. ‘இப்படிலாம் என்னை ரசிச்சா திரும்பவும் பேச விடமாட்டேன்..” என்றான் ஏக்கமாக.
ஆதிரை முறைக்கவும்.. அணைப்பிலிருந்து விடுவித்து.. ‘சரி சரி..” என சரணடைந்தவன்.. ‘மாமாவும் பரதனும் இறந்ததுக்கப்புறம் யாரையும் எதிர்பார்க்காம வேலைக்கு போய் அத்தைக்கு அம்மாவான என் ஆதிமாக்குத்தான் என்னைவிட அதிக கம்பீரம்..” என பெருமையாய் சொன்னவன்..
‘கலர்ல அழகிருக்குனு வேற யாரும் சொல்லியிருந்தா ஏத்திருக்கவே மாட்டேன்.. ஆனா நீ என்னை சொல்லும்போது ஒரு மாதிரி நல்லாத்தான் இருக்கு..” என ரசனையாய் சொல்லி..
‘சினி ஃபீல்டுல வெளிலன்னு எத்தனையோ பொண்ணுங்களை பார்த்திருக்கேன்.. ஆனா என் கண்ணுக்கு என் ஆதிம்மாதான் ரொம்ப ரொம்ப அழகா தெரிஞ்சா.. அதான் நிறைய ப்ளான் போட்டு உன்னை எனதாக்கிட்டேன்..” என்றான் காதலாக.
ஆதிரை பெருமையோடு தலைகுனிய.. ‘அவ்வளோதானா.?” என ரூபன் நெருங்கவும்.. ‘இன்னும் இருக்கு.. என் அம்மா எங்க கணேசண்ணான்னு பெருமை பேசும்போதெல்லாம் நிறைய கிண்டல் செய்வேன்.. இப்போதான் அத்தை மாமாவோட நல்ல குணம் தெரியுது.. என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிறாங்க..” என ஆரம்பித்தவள் ரூபனின் மூச்சு முட்டும் வரை புகுந்த வீட்டின் பெருமை பேசினாள்.
இரண்டு மணிநேரம் வரை பேசியவளிற்கு தூக்கம் கண்களை இழுக்க.. ‘அந்த டாக்டர் ஏது பட்டுவ சொந்தம் கொண்டாட வந்துட்டா என்னங்க செய்யிறது..?” என அப்பொழுதும் உளறியபடிதான் தூங்கியிருந்தாள்.