நேரமும், நாட்களும் அதன் வேகத்திற்கு சென்று கொண்டிருந்தது. அர்ஜூனின் மீது தோன்றிய எண்ணம் அந்த வயதில் தோன்றும் கிரஷ் என்றே நினைத்துக் கொண்டாள் வராஹினி. ஆனால் அவனைப் பார்த்தால் தான் அந்த நாளே முழுமையடையும் என்ற நிலையில் அவளின் மனம் இருந்ததை அவள் அறியாமல் போனது தான் ஆச்சர்யம். அவனைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தாலும், ஏனோ அதை அவள் செய்யவில்லை. அப்படி விசாரித்து, ஒருவேளை அவனுக்கு திருமணம் ஆகியிருந்தால், அதை பிஞ்சு நெஞ்சு தாங்காது என்று நினைத்து விட்டுவிட்டாள் போலும்.
“வராஹி…! என்ன கனவு கண்டுகிட்டு இருக்கியா..? கிளாசை கவனி! மேம் வேற அப்பப்ப உன்னை முறைக்கிறாங்க..” என்றாள் மிதிலா.
“மிதி..! இதை ரோம்ப சீரியஸா எடுக்காத. இதெல்லாம் ஜஸ்ட் ஒரு ஈர்ப்பு. மத்தபடி என்னோட விஷயத்துல நான் சரியா இருப்பேன். நிஜமாவே எனக்கு அவர் தான் வேணும்ன்னு தோணுச்சுன்னா, இப்படி ஒளிஞ்சிருந்து பார்க்கிற வேலையெல்லாம் வச்சுக்க மாட்டேன். ஸ்ட்ரெயிட்டா போய் சொல்லிடுவேன்..இப்போதைக்கு அந்த அளவுக்கு இல்லை. ஓகே..” என்றாள்.
“ம்ம்” என்றாள் மிதிலா.
“சரி வாடி..! தலைவர் இன்னைக்கு எப்படி வந்திருக்கார்ன்னு பார்த்துட்டு வந்துடுவோம்..” என்றாள் வராஹி மீண்டும்.
“இவ்வளவு நேரம் பேசுனது எல்லாம்..?” என்றாள் மிதிலா கோபமாக.
“அது வேற வாய்… இது வேற வாய்..” என்றாள் வராஹி.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்தான் அர்ஜூன். அவர்களுக்கு ஏற்கனவே கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்த பெண்மணி வெளியில் சென்று அவனிடம் எதையோ பேசிக் கொண்டிருக்க,
“ஹேய் அங்க பாருடி..” என்றாள் மிதிலா.
“நான் ஆல்ரெடி பார்த்துட்டு தான் இருக்கேன். இந்த வைன் கலர் ஷேர்ட்ல செம்மையா இருக்கார்ல..ரெண்டு நாளைக்கு அப்பறம் இப்படி ஒரு தரிசனம் கிடைக்கும்ன்னு நினைக்கலைடி. ” என்றாள் வராஹினி ரசனையுடன்.
“ஆமா வராஹி.. சும்மா சொல்லக் கூடாது, நிஜமாவே செம்மையா இருக்காருடி. நம்ம கிளாஸ் கேர்ள்ஸ் எல்லாரையும் ஒரு நிமிஷம் பாரேன்..” என்ற மிதிலாவிற்கு லேசாக சிரிப்பு வந்தது.
மிதிலா சொன்னது போல் அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, விளையாட்டுத் தனமாய் இருந்த வராஹினிக்கு முதன் முறையாக பொறாமை உணர்வு மனதிற்குள் எட்டிப் பார்த்தது.
“இன்னமும் எதுக்கு இங்கயே நிற்கிறாரு. பேசி முடிச்சுட்டா கிளம்ப வேண்டியது தான..” என்று முனங்கிக் கொண்டிருந்தாள்.
“இதுக்கே இப்படி கோபப்பட்டா எப்படி மேடம்? அவர் கிளாஸ்ல இருக்குற பொண்ணுங்கள நிலைமையை யோசிச்சு பாரு..” என்ற மிதிலா சிரிக்க ஆரம்பித்தாள்.
“அதெப்படி தெரியாம இருக்கும். உன்ன கூடத்தான் போறவன் வர்றவன் எல்லாம் பார்க்குறான். அது உனக்குத் தெரியாமையா இருக்கு. அது மாதிரி தான் இதுவும். லுக்கா, மேன்லியா இருந்தா எல்லாரும் பார்க்க தான் செய்வாங்க..” என்றாள் மிதிலா.
“வெறும் கிரஷ் தான்..” என்று சொன்னவளின் மனதில் கல் எறிந்திருந்தால் மிதிலா. எது எப்படியிருந்தாலும், அவனை பார்ப்பதை மட்டும் அவள் நிறுத்தவேயில்லை. ஏதாவது ஒரு வகையில் அவனின் கவனத்தை ஈர்க்காமல் அவனைப் பார்த்துவிடுவாள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பொழுதும் அவளறியாமல் அவளின் மனதில் வேரூன்றியிருந்தான் அர்ஜூன் கார்த்திகேயன்.
அவனை ஆழமாய் நேசிக்கிறோம் என்று அவள் மனம் குறித்து அவளே அறியும் அந்த நாளும் வந்தது.
அவனைப் பற்றிய சிந்தனைகளில் இருந்தவள் தன்னையும் மீறி கண்ணயர்ந்திருந்தாள். அவன் தூங்கிக் கொண்டிருந்த சோபாவிற்கு அருகில் அமர்ந்திருந்தவள், அதிலேயே தலை சாய்த்து உறங்கியிருந்தாள்.
நடு இரவில் முழிப்பு வந்தவனுக்கு, முதலில் ஒன்றும் புரியவில்லை. நன்றாக முழித்துப் பார்த்தவனுக்கு அவள் அமர்ந்த நிலையிலேயே, தனக்கு அருகில் தலை வைத்து உறங்குவது புரிந்தது.
“இப்ப எதுக்கு இங்க வந்து தூங்கிட்டு இருக்கா..? அதுவும் பெட்ல இருக்குற பேஷன்ட் பக்கத்துல தூங்குற மாதிரி..” என்று நினைத்தவன்,
“ராஹினி..” என்றான் அவளை எழுப்பும் பொருட்டு. அவளோ அசையவே மாட்டேன் என்பதைப் போல் தூங்கிக் கொண்டிருந்தாள்.
“இப்படியே தூங்கினா, கால் எல்லாம் மரத்துப் போய்டாது..? இவ என்னை ரொம்ப படுத்தி வைக்கிறா..?” என்று மனதிற்குள் நினைத்தவன், என்ன செய்வதென்று யோசித்தான்.
“பேசாம தூக்கிக் கொண்டு போய் விட்ரு அர்ஜூன்..” என்று மனம் சொல்ல,
“அதெல்லாம் தப்பு. என்னால முடியாது. அப்படியே தூங்கட்டும். எப்ப முழிப்பு வருதோ, அப்ப எழுந்து போகட்டும்..” என்றான் பதிலாய்.
“அவளைப் பார்த்தா பாவமாயில்லையா..? தனியா தூங்க பயந்து போய் தான் இங்க உன் பக்கத்துல வந்து தூங்கிகிட்டு இருக்கா போல.. இது கூட உனக்குப் புரியலையா..?” என்றது மனம்.
“கடவுளே..! முழுசா ஒரு நாள் ஆகலை… என்னை படுத்தி வைக்கிறா இந்த பொண்ணு..” என்று நொந்து கொண்டான்.
சில நிமிடங்கள் யோசித்தவன், வேறு வழியின்றி அவளை அப்படியே தூக்கிக் கொண்டு போனான். அறையில் அவளை படுக்க வைத்தவனுக்கு, ஏனோ அங்கிருந்து வர மனமில்லை போல. அவளையே சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, கடந்து போன நிமிடங்கள் மிகக் கடினமான நிமிடங்களே.
“ஊப்..!” என்று மூச்சை வெளியேற்றியவன்,
“சத்திய சோதனைடா சாமி..” என்று முனங்கிக் கொண்டே வெளியேறினான்.
அவன் அவளைத் தூக்கும் போதே அவளுக்கு விழிப்புத் தட்டியிருந்தது. ஆனாலும் கண்களைத் திறக்காமல் இருந்தவளுக்கு, அவன் கைகளில் இருப்பது ஏதோ காற்றில் மிதப்பதைப் போல் இருந்தது.
குறுகுறுப்பில் சிரித்துவிடாமல் இருக்க அவள் பட்ட பாடு அவளுக்குத் தான் தெரியும்.
“பரவாயில்லை..! நம்ம வாத்தியாருக்கும் கொஞ்சம் ரொமான்ஸ் வருது..” என்று சிரித்துக் கொண்டாள்.
சென்ற அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்குள் அப்படி ஒரு சந்தோசம். அந்த சந்தோஷத்துடனே தூங்கிப் போனாள் வராஹினி.
காலையில் பிரஷாக குளித்து வெளியே வந்தவளைப் பார்த்தவனுக்கு, மனதிற்குள் ஒரு வித சந்தோசம் பரவத்தான் செய்தது.
“குட்மார்னிங் சார்..” என்றாள்.
“என்ன வாத்தியாருக்கு வணக்கம் சொல்ற மாதிரி சொல்ற..?” என்றான் அர்ஜூன்.
“நிஜம் தான சார்..! நான் வாத்தியாருக்கு தான விஷ் பண்ணேன்..” என்றாள் சிரிப்புடன்.
“ரொம்ப சந்தோஷமா இருக்குற மாதிரி தெரியுது..?” என்றான்.
“நடிப்புக்குன்னாலும், இப்போதைக்கு நீங்க தான சார் எனக்கு புருஷன். அதான் உங்ககிட்ட சொல்றேன்..” என்றாள் கடுப்புடன்.
அவளையே சில வினாடிகள் பார்த்தவன்,
“நான் புருஷனா இருந்தா எதுக்கு உங்க வீட்டுக்கு போய் எடுத்துட்டு வரணும். எல்லாத்தையுமே வாங்கிக்கலாம். எதுவும் தேவையில்லை..” என்றான் பட்டென்று.
“இதைத்தான நானும் எதிர்பார்த்தேன்..” என்று மனதிற்குள் நினைத்தவள்,
“உங்களுக்கு எதுக்கு சார் வீண் சிரமம். ஏற்கனவே நீங்க எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணியிருக்கிங்க. எதுக்கு தேவையில்லாத செலவு. நீங்க என் கூட மட்டும் வாங்க.. போய் எடுத்துட்டு வந்திடலாம்..” என்றாள் வேண்டுமென்றே.
“அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. கிளம்பு..! வெளிய பிரேக் பாஸ்ட்ட முடிச்சுட்டு என்ன தேவையோ வாங்கிட்டு வரலாம்..” என்றான் அர்ஜூன் முடிவாக.
“நிஜமாவா சார்..!” என்றாள் வராஹினி.
“உனக்கு எந்த விஷயத்தையுமே ஒரு தடவை சொன்னா புரியாதா..?” என்றான் அர்ஜூன்.
“ஏன் புரியாது..? நல்லா புரியுமே..!” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில், வெளியே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க, எட்டிப் பார்த்தாள். கார்த்திகேயன் தான் வந்து கொண்டிருந்தார்.
“சரின்னு பட்டதால தான் செஞ்சேன்..” என்றான் அர்ஜூன்.
“எனக்கு என்னமோ, நீ வீம்புக்கு பண்ணின மாதிரி தான் தோணுது. வாழ்க்கை ஒன்னும் விளையாட்டு காரியமில்லை அர்ஜூன். எல்லா நேரமும் நம்ம இஷ்ட்டத்துக்கு நடக்காது..” என்றார் கார்த்திகேயன்.
“இப்ப என்ன சொல்ல வரீங்க..? நான் செஞ்சது தப்புன்னா..?” என்றான் கோபமாக.
“கண்டிப்பா தப்பு தான். அவசர அவசரமா தாலி கட்ட இதென்ன விளையாட்டு காரியமா..? அதுவும் தம்பி கூட கல்யாணம் ஏற்பாடு பண்ணியிருந்த பொண்ணுக்கு, தாலி கட்டியிருக்க. இது தப்பில்லையா..?” என்றார்.
“நான் என்னமோ, கல்யாண மண்டபத்துல வந்து, கல்யாணத்தை நிறுத்தி, தாலி கட்டி கூட்டிட்டு வந்த மாதிரி பேசுறிங்க..?” என்றான் அர்ஜூன்.
“அப்போ அங்க உனக்கு நிச்சயம் பண்ணி வச்சிருக்கிற ரூபிணிக்கு நான் என்ன பதில் சொல்றது…?” என்றார் கார்த்திகேயன்.
கார்த்திகேயன் அப்படி சொன்ன பிறகு தான் வராஹினிக்கு உண்மை உரைத்தது.
‘அவ கூட நிச்சயம் முடிஞ்சிருக்குன்னா, இவருக்கும் விருப்பம் இருந்திருக்கும் தானே. இப்போ எனக்காக நடிச்சாலும், அவர் மனசுல அவ தான் இருப்பாளோ…?’ என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் பேசிய பதில்கள் காதில் விழவில்லை.
“அர்ஜூனை உனக்கு எப்படிம்மா தெரியும்..? எதுக்காக நீ வீட்டைவிட்டு போன..? இதனால ரெண்டு குடும்பமும் தலைகுனிய வேண்டி வரும்ன்னு உனக்குத் தெரியாதா..?” என்றார் கார்த்திகேயன்.
“இதை நீ முன்னாடியே சொல்லியிருக்கலாமே..?” என்றார் கார்த்திகேயன்.
“ஏன் அங்கிள்..! உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து, ரஞ்சன் மாதிரி ஒரு பையனுக்கு கேட்டா, நீங்க கல்யாணம் பண்ணி குடுத்திருப்பிங்களா..? எனக்கு எதுவும் தெரியாதுன்னு நீங்க வேணும்ன்னா நினைக்கலாம். ஆனா, எனக்கு எல்லாமே தெரியும் அங்கிள்..” என்றாள் வராஹினி.
“உன்னை நாங்க பொண்ணு கேட்டு வரலைம்மா. உங்க அண்ணன் பண்ணின ஏற்பாடு தான் இதெல்லாம். கடைசில ரஞ்சன் உன் மேல பைத்தியமா அலையற அளவுக்கு ஆகிப் போய்டுச்சு..” என்றார் கார்த்திகேயன்.
அவரிடம் எந்த பதிலும் அவளால் சொல்ல முடியவில்லை. அவர் சொல்வது போல் அவளுடைய அண்ணன் செய்த வேலை தானே இத்தனையும். அவன் மட்டும் சரியாக இருந்திருந்தால் அவளுக்கு இந்த நிலைமையே வந்திருக்காதே. அவள் பதில் பேசாமல் தலையை குனிய, அதைப் பார்த்த அர்ஜூன் என்ன நினைத்தானோ….
“முடிஞ்சு போனதைப் பத்தி இனி பேசி என்ன பிரயோஜனம்..? அவ இப்போதைக்கு என்னோட மனைவி. மிஸ்ஸஸ். வராஹினி அர்ஜூன். அது மட்டும் தான் நிஜம். சோ.. தேவையில்லாததைப் பத்தி, தேவையில்லாதவங்களைப் பத்தி பேசாதிங்க. அப்படி உங்க செல்லப் பையனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறதா இருந்தா இனி இங்க வராதிங்க…” என்றான் முகத்தில் அடித்தார் போல்.
“அர்ஜூன்..!” என்றவருக்கு பேச்சே வரவில்லை. அவருக்கு மனசு கேட்கவில்லை. அதான் காலையில் எழுந்ததும் வந்து விட்டார். எப்படியும் அவர் வரவை அர்ஜூன் விரும்ப மாட்டான் என்று தெரிந்தே தான் வந்தார்.
“சாரி அங்கிள்..! நடந்த எல்லா பிரச்சனைக்கும் என்னோட வீட்ல இருக்கவங்களும் ஒரு காரணம். அதை நான் மறுக்கவோ, மறக்கவோ இல்லை. ஆனா, நடந்த எந்த விஷயத்துக்கும் நான் பொறுப்பில்லை அங்கிள். நான் ஆரம்பத்துலையே ரஞ்சன் கிட்ட தெளிவா என்னோட முடிவை சொல்லிட்டேன். ஆனா, பிடிவாதமா நின்னு காரியம் சாதிக்கனும்ன்னு அவர் நினைச்சார். எனக்கு வேற வழி தெரியலை..” என்றாள் வராஹினி.
“நீ எங்க வீட்டுக்குத் தான் மருமகளா வரணும்ன்னு இருந்திருக்கும்மா..! என்ன? மாறி மூத்த மருமகளா வந்துட்ட. நடந்ததை மாற்ற முடியாது. ஆனா, இனி நடக்கப் போறதை மாத்தலாமே. அர்ஜூன் என்ன தான் என்னை வெறுத்தாலும், அவன் சந்தோசம் என்னைக்குமே எனக்கு முக்கியம். அது உன்னோட கைல தான் இருக்கு. இதுக்குமேல சொல்ல ஒண்ணுமில்லை…” என்றவர் எழுந்துவிட்டார்.
“என்ன அங்கிள் கிளம்பிட்டிங்க..?” என்றாள்.
“இல்லம்மா..! நான் இங்க வந்தது கூட இவனுக்குப் பிடிக்காது. பரவாயில்லைன்னு தான் வந்தேன். தகப்பன் தேவையில்லைன்னு அவன் நினைச்சாலும், பிள்ளை தேவையில்லைன்னு என்னால நினைக்க முடியலையே..?” என்றவர்,
“நான் வரேன்..!” என்றபடி கிளம்பிவிட்டார்.
அவர் சென்ற அடுத்த நிமிடம்,
“ஏன் சார்..? அவர்கிட்ட நல்ல முறையில நீங்க பேசினாதான் என்னவாம்..? பாவம், என்னதான் வெளிய டெம்பரா பேசினாலும், அவர் முகமே சரியில்லை. அந்த வீட்லயே இவர் தான் நல்ல மனுஷன்…” என்றாள் வராஹினி.
“அவரைப் பத்தி என்கிட்டையே சொல்றியா..? எனக்குத் தெரியும், எப்ப என்ன செய்யனுன்னு. உன்னோட வேலையை மட்டும் பார். தேவையில்லாத விஷயத்துல எல்லாம் தலையிடாத..” என்றான் பட்டென்று.
“நல்ல குடும்பம்..!” என்று வாய்க்குள் சொன்னவள் உள்ளே சென்று விட்டாள்.
அவள் உள்ளே செல்லும் வரை முகத்தை கடினமாய் வைத்திருந்தவன், அவள் சென்ற பிறகு கொஞ்சம் இளக்கத்தை காட்டினானோ..?
“வேண்டாம் அர்ஜூன்..! இந்த பந்த பாசமே உனக்கு வேண்டாம். பட்டது எல்லாம் போதும். இனி புதுசா ஆரம்பிக்க வேண்டாம். பட்ட ரணமே இந்த ஜென்மத்துக்கு போதும்..” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
ரஞ்சனின் வீட்டில்…
“என்னை அவமானப்படுத்தி, என்னோட கல்யாணத்தை நிறுத்தி, நான் கட்டிக்க இருந்த பொண்ணு கழுத்தில் தாலியைக் கட்டி கூட்டிட்டு போனவன் வீட்டுக்கு போயிட்டு வந்திருக்காரும்மா உங்க புருஷன்..? என்ன இருந்தாலும் அவன் அவரோட மகன் தான..?” என்று ரஞ்சன் கத்திக் கொண்டிருந்தான்.
“இப்ப எதுக்கு கத்திட்டு இருக்க ரஞ்சன்..? என்னோட பையன் வீட்டுக்கு போக, யாரையும் கேட்டுட்டு போகணும்ன்னு அவசியமில்லை. எனக்கு அவனும் முக்கியம்..” என்றார் கார்த்திகேயன்.
“அப்போ, அவனை நம்பி வீட்ல ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்து வச்சிருக்கிங்களே ரூபிணி… அவளுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க..?” என்றான் ரஞ்சன்.
“ரூபிணிக்கு என்ன செய்யனும்ன்னு எனக்குத் தெரியும்..? அதைப் பத்தி நீ கவலைப் படாத ரஞ்சன்..” என்றார் கார்த்திகேயன்.
“அப்போ எனக்கு என்ன பதில் சொல்ல போறீங்க..? எனக்கு வராஹினி வேணும்..” என்று கத்தியவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார் கார்த்திகேயன்.
“நானும் பார்த்துகிட்டே இருக்கேன். ரொம்ப ஓவரா பேசிட்டு போயிட்டே இருக்க. வராஹினி இப்போ அர்ஜூனோட மனைவி. அதாவது உன் அண்ணனோட மனைவி. உனக்கு அண்ணி. இது மட்டும் தான் உன்னோட மனசுல இருக்கணும். தேவையில்லாம தத்து,பித்துன்னு உளராம அடுத்து என்ன செய்யணுமோ அதை செய் ரஞ்சன். அடுத்தவன் மனைவியை நினைக்கிறவன் மனுஷனே கிடையாது. நீ அந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போக மாட்டேன்னு நினைக்கிறேன்…” என்று அவனைப் பார்த்து எச்சரித்தவர், சுமித்ராவிடம் திரும்பி,
“சொல்லி வை இவன்கிட்ட. இனி வராஹினி பேரையே இவன் எடுக்கக் கூடாது. இவனால அந்த பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனை வந்தா, அப்பறம் இந்த கார்த்திகேயனை நீ நல்ல விதமா பார்க்க முடியாது…” என்று கோபமாய் சொல்லிவிட்டு, ரூபினியின் அருகில் வந்தார்.
“அர்ஜூன் இப்படி பண்ணது தப்புத்தான் ரூபிணி. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் குடுக்குறது என்னோட பொறுப்பு. நீயும் எனக்கு பொண்ணு மாதிரி தான்மா. இப்போதைக்கு இந்த பிரச்சனையை விடுங்க..” என்றவர், சென்று விட்டார்.
“பாருங்க மாம்…! எப்படி பேசிட்டு போறாருன்னு. என்னை கைநீட்டி அடிக்கிற அளவுக்கு வந்துட்டாரு. எல்லாத்துக்கும் காரணம் யாரு..? எல்லாம் அந்த அர்ஜூனால வந்தது..” என்றான் ரஞ்சன்.
“கொஞ்சம் பேசாம இரு ரஞ்சன். அவர் சொன்னது தான் சரி. வராஹினி இனி உன்னோட வாழ்க்கையில இல்லை. அவ அர்ஜூனோட மனைவி. அவ்வளவு தான். இதோட இந்த பேச்சை விட்டுரு..” என்றார் சுமித்ரா.
“பாரு ரூபிணி..! மாம் கூட இப்போ எனக்கு சப்போர்ட் பண்ணி பேசுறது இல்லை… அவனுக்கு இருக்கு..” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.
“என்னை மேரேஜ் பண்ணிக்கோ ரஞ்சன்..” என்றாள் ரூபிணி.
“வாட்..!!!” என்றான் ரஞ்சன்.
“எஸ்..! நாம கல்யாணம் பண்ணிக்கலாம்..!” என்றாள் ரூபிணி. அவள் முகத்தில் இருந்து அவள் என்ன நினைக்கிறாள் என்று அவனால் சுத்தமாக கணிக்க முடியவில்லை. ஆனால், அவள் சொன்ன விஷயம் அவனுக்கு அவ்வளவு உவப்பாக இல்ல.
“நடக்கவே நடக்காது..” என்றான் உறுதியாக.
“நடந்தே ஆகணும்..” என்றாள்.
“என்ன ரூபிணி.. மிரட்டுறியா..?” என்றான்.
“அப்படியும் வச்சுக்கலாம்..” என்றாள்.
அவளின் பேச்சில் வாயடைத்து போய் நின்றான் ரஞ்சன். அவன் செய்த கர்மா அவனுக்கே திரும்பிக் கொண்டிருந்தது.