செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 33_2
வந்த அன்றிலிருந்தே ஒரு எரிச்சலோடு சுற்றுகிறான் மணி. காரணம் அவன் தனிமையில் கழித்த வீடு மூர்த்தியின் வருங்கால மனைவிக்காக ஒதுக்கப்பட்டுவிடவே அவன் மற்றவர்களோடு பெரிய வீட்டில் இருக்க வேண்டிய நிலை. அங்கு அவனுக்கு எந்த குறையும் இல்லை என்றாலும், இங்கு, இந்த.. குருவி கூட்டில்.. தனிமையில் இருக்கப் பிடிக்கும். அவனைக் கேள்வி கேட்க ஆள் இருக்காது என்பது அடிப்படை காரணம்.
நேற்றும் வீட்டில் அனைவரும் படுத்தபின் தூக்கம் வராமல் புரண்டவன் நடக்க ஆரம்பிக்கவும் தன்போல் வந்து சேர்ந்தான் அவன் வசிப்பிடத்திற்கு. தோட்டத்திற்குள் நுழைந்தவன் காதில் விழுந்தது காதல் ஜோடியின் பேச்சு.
ஜோடி யார் என்று இருட்டில் பார்க்கமுடியவில்லை என்றாலும் யார் என்று தெரிந்தது. அவளின் மூர்த்தி சாரும்… அவனின் துளசி மாவும்.. பிடிக்கவில்லை. என்றாலும் நாராசமாய் காதில் விழுந்தது. முதலில் ஒன்றும் பிடிபடவில்லை… காபிக்கும் குழம்புக்கும் பிரமித்தாளா? ஏன் என்று புரியவில்லை. ஏதோ துன்பத்தில் இருந்து மீட்டவளைப் பட்டாம் பூச்சியாய் மாற்றினானா? அப்படி என்றால் என்ன என்றும் புரியவில்லை. செல்வனோடு எங்கோ சென்று வந்தது அவனுக்குப் பிடிக்கவில்லை என்று தோன்றியது. அவள் எங்குச் சென்றால் இவனுக்கு என்ன? என்றும் தோன்றியது. அனைவரும் இவனுக்கு பிடித்தை தான் செய்ய வேண்டுமோ? எரிச்சல் வந்தது.
இது என்ன காதல் பேச்சோ..? ரசிக்கும் படி அங்கு ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. ‘மானே.. தேனே நீ தான் பேரழகு.. நீ இல்லாமல் நான் இல்லை.. உன் உதடழகு… உன் முகரைகட்டை அழகு’ என்று எதையாவது உளறிவிட்டுச் சென்று தொலைவான் என்று பார்த்தால் மூர்த்தி வாய் திறந்தானில்லை. அவள் தான் அவள் காதலை வாய் வலிக்காமல் கொட்டிக்கொண்டிருந்தாள். அவன், அவளைப் பைத்தியமாகச் சுற்றவிட்டிருக்கிறான் என்பது மட்டும் மணிக்கு தெள்ளத் தெளிவாய் புரிந்தது. இப்படி வாயே திறக்காமல் பெண் மனதை எப்படி பித்தாக்கினான் என்பது புரியவில்லை.
அதன் பின், ஏதோ மூர்த்தி தான் அவளின் எல்லாம் போல் அவள் பேச.. மூர்த்தியோ ஒரு வழியாய் வாய் திறந்து அவள் தான் அவன் உலகம் போல் உருக… சகிக்க முடியாமல் அங்கிருந்து சென்றுவிட்டான். வந்ததிற்குப் பெண்ணின் பெயர் துளசி என்பது மட்டும் மனதில் ஆழமாய் பதிந்து போனது.
அவன் மனதைத் திருடிச் சென்றவள் அவன் கண்ணில் படாமல் இருக்க.. மூர்த்திக்கு மட்டும் நினைப்பதெல்லாம் கிடைப்பது வயிற்றெரிச்சலைக் கிளப்பியது. ஒரு முறை.. இந்த ஒரு முறையாவது மூர்த்தி ஆசைப்பட்டது அவனுக்குக் கிடைக்காமல் போனால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் எழ.. புன்னகைத்துக் கொண்டான். ஆனால் அது அவனவன் விதி. எக்கேடு கெட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டான்.
மூர்த்திக்கு கூட காதல் வருமா.. அவனை மயக்கியவளைப் பார்க்க ஆவல். ஆனால் யாரிடமும் இறங்கி வந்து கேட்கவில்லை. வீட்டில் இருப்பவருடன் ஒழுங்காக பழகியிருந்தால் அவர்களே அறிமுகப் படுத்தியிருப்பார்கள். மூர்த்திக்கு முன்பே பார்த்திருந்த பெண்ணை தான் முடிக்கப்போவதாக தகவல். பேராசிரியரின் மனைவி ஏதோ ஒரு ‘பட்டிக்காடு’ என்பது சிறு ஆறுதல்!
“வீட்டு விசேஷத்துக்குக் கூட வரமாட்டியா? இப்போ வரல நான் செத்தா கூட வராத!” அம்மாவின் பிடிவாதம் அழைத்து வந்திருந்தது. இல்லையென்றால் இவன் வரக் காரணம் இல்லை.
பானுவிடம் பசும் பாலை கொடுத்து விட்டுச் சென்று கொண்டிருந்தவன் காதில் விழுந்த மழலை சத்தம் அவனை திசை திருப்ப.. அவளைப் பார்த்தான்.
[the_ad id=”6605″]
அவனுக்கு முதுகைக் காட்டி நின்றாள், அதனால் முகம் தெரியவில்லை. முதுகில் ஆங்காங்கே முத்து முத்தாய் சிதறி விழுந்த கதிரவனின் தங்கக் கதிர் அவனுக்கு எதையோ நினைவு படுத்தியது.
பார்த்தவன்.. பார்த்துக்கொண்டே நின்றான். அவன் பார்வை.. நிற்கக் கூடாத இடங்களில் சிக்கி நின்றது. பின் வனப்பே அவனை கொள்ளையிட இன்னும் அவள் முகத்தைப் பற்றி யோசிக்கவில்லை.
நான்கு பெண்கள் இருந்தாலும், எக்கி பெருவிரலில் நின்று பந்தலில் காய்ந்து தொங்கிக் கொண்டிருந்த ரோஜா பூவை கிள்ளிக் கொண்டிருந்தவள், அவன் கண்ணையும் சித்தத்தையும் கவர்ந்தாள். சாம்பல் நிற புடவையில் பளீர் மஞ்சள் பார்டர்.
மஞ்சள் ரவிக்கை மறைக்காத பிடரியும், முதுகும், இடையும் அவனை இழுத்தது. மேலிருந்து கீழ் இறங்கிய பார்வை எல்லா இடத்தையும் லட்சையே இல்லாமல் விழுங்கியது.
யாரிவள் என்ற வாஞ்சை வந்து ஒட்டிக்கொண்டது. முன்பு ஒருத்தியைக் கண்டு பித்துப் பிடித்து அலைந்தான். அவளைத் தேடி வருடக் கணக்காய் பைத்தியக்காரன் போல் அலைந்தான். கிடைத்தாளில்லை. நெஞ்சில் தடயம் விட்டுச் சென்றவள். ஒரு நாள் மாயமாய் போனாள். எங்குச் சென்றாள்? தெரியாது! அவள் ஒரு ‘முரட்டுப் பசு’. அவனை முட்டி தள்ளிய முதல் பசுவும்.. ஒரே பசுவும் அவள் மட்டும் தான். இன்றும் அவளை நினைத்தால்.. இரத்த நாளங்கள் புடைத்துக்கொள்ளும்.
நகர்ந்து சென்றான், ஒரு பக்க முகமாவது பார்க்க முடியுமா என்று. கை உயர்ந்திருக்கவே அவள் முகம் பார்க்க முடியவில்லை. ஆனால் கண்சிமிட்டாமல் பார்த்தான்… பார்த்துக்கொண்டே நின்றான். பார்த்த பார்வையும் தவறு.. பார்த்த இடங்களும் தவறு. அவனைப் பார்த்தால் பார்ப்பவர் கண் கூசிப்போகும்.
வருடங்கள் முன் நண்பனைத் தேடி அவன் இருக்கும் இடம் சென்றவன், பெண்ணின் முனகல் சத்தம் கேட்டுத் திறந்திருந்த ஜன்னல் வழி உள்ளே பார்க்க.. மலைத்து நின்றுவிட்டான். இளமாலை மஞ்சள் வெயில் ஜன்னல் வழியே, படுத்திருந்த பளிங்கு விக்கிரகத்தை வருடி அவளைத் தங்க விக்கிரகமாகக் காட்டிக் கொண்டிருந்தது.
அப்பொழுதே கெட்ட பழக்கங்கள் இருந்தது. ஆனால் அதில் திளைத்தது இல்லை. அன்றும் போதை தான். ஆனால் அவளை கண்டதும் போதை தலைக்கேறியதோ… இல்லை ஏற்றிய போதை இறங்கியதோ தெரியவில்லை.. ஆனால் அவள் ஏற்படுத்திய போதை இரத்தம் வரை ஏறியது மறைக்கமுடியாத உண்மை. இன்றும் அவளை நினைத்தால் அதே உணர்வு!
அன்று வரை பெண்கள் அவன் அகராதியில் இல்லை. ஆசை பார்வை பார்த்ததோ.. தொட்டதோ கிடையாது. அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை! அவ்வளவு தான்! ஒரு பெண்ணை அந்த கோலத்தில் பார்த்தது அது தான் முதல் முறை. அவள் பெண் போல் இல்லை. தேவதை.. ஆம் பளிங்கு தேவதை. சுற்றி ஒருவரும் இல்லை என்பதை ஊர்ஜித படுத்திக் கொண்டு அவள் படுத்திருந்த அறைக்குள் சென்றான்.
உணர்வில்லாமல் படுத்திருந்தாள் அன்னப்பறவை. ஒருவன் கசக்கிப் போட்டிருக்கவே அவளுக்கு உணர்வில்லை, தேவைக்கு அதிகமாய் ஆடையும் இல்லை. முன் பக்க வலது தோளிலிருந்து சற்று கீழ் இருந்த மச்சம் அவனை ஈர்த்தது. அதை வருடவுமே, பெண்ணின் மென்மை இரத்த நாளங்களைச் சூடேற.. பெண் மீது வாஞ்சையாய் படர்ந்தான்.
வாடி வதங்கி, கிழிந்த ஆடையைக் கூட சரி செய்ய முடியாமல் கண்மூடு வலியில் முனகிக் கிடந்தவளிடம், எதிர்ப்பை எதிர்பார்க்கவில்லை. பஞ்சு மேனிக்கு எங்கிருந்து வந்தது அத்தனை வெறி? அவனுக்கு அவளை விட மனமில்லை. அவன் ராட்சசனாய் அவளை விழுங்க நினைக்க.. பாதி மயக்கத்திலும் அவள் ரத்த காட்டேறியாய் மாறி இருந்தாள். கழுத்தைக் கீறி… நகத்தால் தோள் பட்டையைக் கிழித்து.. வாய்க்கு வாகாய் கிடைத்த அவன் நெஞ்சைக் கடித்து பிய்த்து எடுத்தாள்.
அவன் வீறிட.. வீட்டு உரிமையாளரின் மெய்காவலன், இவனின் தோழன், வந்து காப்பாற்றினான். “உன்ன யார் இங்க வர சொன்னா? பணம் கொடுத்து கூட்டிட்டு வந்தவனுக்கே இன்னும் மடியல.. உனக்கு என்ன அவசரம்? காயம் ஆறினதும் ஒரு வாரம் கழிச்சு பணத்தோட வா… ஆள் இல்லாத நேரம் பாத்து.. உனக்கு நான் ரெடி பண்ணித்தறேன்..” என்றான் மராட்டியில். அன்று தான் அவளைக் கடைசியாகப் பார்த்தது.
[the_ad id=”6605″]
நான்கு நாட்களுக்கு மேல் இவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பாதி ஆறிய காயத்தோடு அவனை விழுங்கிய ராட்சசியை தேடி சென்றான். அவளில்லை… மும்பை பக்கம் சென்றுவிட்டதாகக் கேள்விப்பட்டு அவளை வலை வீசி மும்பை முழுவதும் தேடினான். சிகப்பு விளக்கு பகுதியில் விற்க நடந்த ஏற்பாடு மித்ரன் என்பவன் மூலம் தெரிந்து கொண்டான்.
பம்பாய் சிகப்பு விளக்கு பகுதி முழுவதும் அலசி ஆராய்ந்துவிட்டான், ஆராய்ச்சியில் பெண்களும் அடக்கம். ஆனால் ஒரு பெண்ணும் அவனை ஈர்க்கவில்லை இன்றுவரை. அவனை ஈர்த்து.. போதை ஏற்றிய அவனின் முரட்டுப் பசு கிட்டவில்லை. இப்பொழுது அவனுக்கு முரட்டுப் பசுவை அடக்கத் தெரியும். ஆனால் அவள் தான் கையில் சிக்கவில்லை.
இன்று? செதுக்கி வைத்த அழகு.. மீண்டும் அவனை ஒரு முறை பித்தனாக்கியது. துளசியின் தோழியாக இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அவளை விட இவள் ஈர்த்தாள். வேண்டும்… இவள் வேண்டும் என்று உடல் கூப்பாடு போட்டது. அவளைத் தவறவிட்டது போல் இவளை விட்டுவிடக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டான். இரண்டு நாளில் மூர்த்தியின் திருமணம். திருமணம் முடிந்ததும் இருதினங்கள் துளசியின் நண்பர்கள் கேரளா சென்றுவரபோவதாக கேள்வி.. வந்த அன்றே மெட்ராஸ் பயணித்து விடுவார்கள். அதற்குள் தூக்க வேண்டும்… மூளை வேகமாகச் செயல் பட்டது. அவன் ஓநாய் படை ஊருக்கு வெளியே டவுனில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருக்க.. அவன் தனியாள் இல்லை. அலுக்கும் வரை அனுபவித்துவிட்டு.. எப்பொழுதும் போல், இவளைக் கொண்டும் பணம் பார்த்துவிடும் நோக்கம். கண்டிப்பாக இவளைக் கொண்டு பெட்டியை நிரப்பலாம்.
ஒரு ஓரமாய் நின்று திகட்டாமல் பார்த்து நின்றவனுக்கு பெண்ணவள் முகம் காட்ட விழைந்தாள்.
“கோமு மா… உன் பானு அண்ணி கூப்பிட்டாங்க போய் பாரு” எழில் சித்தி கூற.. அன்னப் பட்சி நடந்து வந்தது. இவனை யார் என்று அவளுக்குத் தெரியவில்லை. மூன்றாம் பிறை கமல்ஹாசன் தோற்றத்தில் இருந்தவன், அங்கு உரிமையாய் நிற்கவே, சொந்தமாக இருக்கவேண்டும் என்றதால், நின்றிருந்தவன் முகம் பார்த்தவள் கீற்றாய் புன்னகைத்து அவனை கடந்து செல்ல… அதிர்ந்து நின்றுவிட்டான். அது இன்ப அதிர்ச்சி!
முகம் மலர, “கோமல்?” மணியின் வாய் உச்சரித்தது.
[the_ad id=”6605″]
முன் போல் இல்லை. இவள் தான் அவளா என சந்தேகம் வரும். அங்கிருந்து வந்த பெண்ணால் இப்படி இருக்க முடியுமா? நேர்த்தியான புடவை கட்டு. நிமிர்ந்த நடை. தலை தொங்காமல் நேர் பார்வை பார்த்தாள். அழகு சொட்டினாலும் கர்வம் இல்லை.. ஆண்களைக் கவர நினைக்காத கனிவான பார்வையும், இதழ் பூச்சு இல்லாத மென்மையான பளபளத்த உதடும்.. அதிலிருந்து வந்தும் வராமலும் நின்ற சின்ன புன்முறுவலும்.. அவள் மேல் தனி மரியாதையைக் கொடுத்தது. அவனுக்கு மயக்கத்தையும் சேர்த்தே கொடுத்தது.
அவள் தானா இவள்? சந்தேகம் கூட எழுந்தது! எத்தனை ஆண்டு தேடல் இது? அவள் சென்ற இடம் எல்லாம் அவன் பார்வை செல்ல.. பார்த்த விழி பார்த்துக்கொண்டே இருந்தது. இம்முறை ரசனையோடு மட்டுமே!
அன்றைய இரவில், போதையில் படுத்து விட்டத்தை வெறித்திருந்தவன் கண் திறந்திருந்தாலும் கண்ணுக்குள் அவனை பித்தனாக்கிய கோமல் நின்றிருந்தாள்.
அலை கடல் போல் மனம் ஆர்ப்பரித்தது. பெண், குடி, போதை, பணம் என்று சுற்றிய படகிற்குக் கரை வர முதல் முறை ஆசை வந்தது. ஒரு நாளுக்கு கோமல் வேண்டாம். அவன் அம்மாவோடு.. அவன் தங்கைகளோடு பேசி… மனம் கவரச் சிரித்த கோமல் அவனுக்கே அவனுக்காய், வாழ் நாள் முழுவதும் வேண்டும்.. மனைவியாய் வேண்டும் என்று மனம் ஆர்ப்பரித்தது. அவள் ‘அங்கிருந்து’ வந்தவளானால் என்ன? அவனும் அங்கெல்லாம் சென்றவன் தானே?
எல்லாவற்றையும் விட்டுவிட்டு மீண்டும் வீட்டோடு வந்துவிடத் தோன்றியது. அவளுக்காக எதையும் செய்யலாம் என்ற முடிவு எழ… மனதின் பிரளையம் அடங்கியது.
தூக்க வேண்டும் என்று எண்ணியவன் மனம் மாறியது. விடிந்ததும் அம்மாவிடம் பேச வேண்டும். வாழ்வில் ஒரு முறையேனும் அவன் ஆசைப்பட்டதை அம்மா முடித்துவைப்பாள்.. என்று நம்பினான். மூர்த்தியின் துளசிக்குத் தெரிந்தவள். மூர்த்திக்கு தெரிந்தவள் என்றால்.. அவனிடம் பேசக் கூட மணி தயார் தான்! எப்படியோ கோமல் வேண்டும்!
கனி கையில் விழாத பட்சத்தில் தட்டிப் பறிக்கவும் தயக்கமில்லை. அவள் வேண்டும் அவ்வளவு தான்!
கோமலின் பட்டு மேனியை உணர்ந்த தினத்திற்கு மனம் செல்ல.. அந்த உணர்விலேயே, அவள் தனக்கு தான் என்ற நிறைவோடு இரண்டரை வருடம் பின் நிம்மதியாய் கண்ணயர்ந்தான்.
பிழியில்லா ஓவியத்தின், ஒற்றை பார்வையால்… ஒற்றை கீற்றுப் புன்னகையால்.. அவள் பூமேனி பட்ட அந்த முரடனின் உடல், சிலிர்த்து உயிர்தெழுந்தது.