Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ ( இரண்டாம் பாகம் )

இதயத்தின் ஓசை கேட்குதோ (முன்னோட்டம்)

அய்யனார்புரத்தில் இருப்பவர்கள் அனைவரும் சென்று அழைத்தும் ஊருக்கு   வர மறுக்கும் அர்ஜுனன்அனைவரும் ஒருவித வேதனையில் திரும்பி செல்கின்றனர்….

*********************************************

தன்னை கொஞ்சாமல் வேறு ஒருவரை பக்கத்தில் அமர்த்தி கொண்டு பேசும் தந்தையை அழுகையுடன் பார்த்து கொண்டு இருந்தாள் நிரவி குட்டிதேவை இல்லாமல் அவளுக்கு ரித்திகாவின் கோவம் ஏற்பட்டு இருந்தது அவளுக்குஇந்த கோவம் தான் இவள்  வருங்கால வாழ்க்கையில் பெரிய பிரச்சனை ஆக போகிறது என்று தெரியாமல் இந்த சிறு வயதிலேயே ரித்திகாவின் மேல் கோவத்தை ஏற்படுத்தி கொண்டாள் நிரவிகா….

********************************************



Advertisement

சில வருடங்கள் கழித்து ஒரு மிகவும் பெரிய மண்டபத்தில் வாயிலில் சிவனேஸ் வெட்ஸ் ரித்திகா என போர்டில் அலங்காரம் செய்து வைத்து இருக்க உள்ளே தாலி கட்டும் போது கேட்கும் மங்கள வாத்தியங்கள் கேட்க நிரவி கிணற்றில் விழுந்து இருந்தாள்….

********************************************

நடுக்கூடத்தில் அனைவரும் நின்று இருக்க சசி முதல் முதலாக அர்ஜுனனை எதிர்த்து  பேசிக் கொண்டு இருந்தான்…

Advertisement

“இந்த பொண்ணை பாத்துட்டு நீ பெத்த பொண்ணை விட்டுட்ட… நீ வளர்த்த பொண்ணு மேல வெச்ச பாசத்தை நீ பெத்த பொண்ணோட வெச்சு இருந்தா இப்போ அவ இங்க இருந்து இருப்பா…. ஆனா நீ இப்போ பண்ண தப்பால அவ இப்போ இல்ல எல்லாம் உன்னால தான்” என்று கோவமாக கூறினான்

Advertisement

பெண்கள் அனைவரும் அழுது கொண்டு நிற்க அர்ஜுனன் கண் கலங்கி தலை குனிந்து நின்று இருந்தான்….

யாரும் சசியை எதிர்த்து பேசவில்லை… ஏன் என்றால் அவன் பேசியது எல்லாம் உண்மை…

********************************************

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!