அத்தியாயம் 3
“கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
வடக்கே கேட்டு பாரு என்ன பத்தி சொல்லுவான்.
ஜர்தா பீடா போல என் பேர்தான் மேல்லுவான்.
கலாசால கலாசால கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
வடக்கே கேட்டு பாரு என்ன பத்தி சொல்லுவான்.
ஜர்தா பீடா போல என் பேர்தான் மெல்லுவான்.
எவனும் ஏராலாமா கோடம்பாக்கம் பஸுனு.
இவதான் ராஜநாகம் சீரிடுவான் ஹிச்சுனு.
மல்லிகா நீ கடிச்ச , நெல்லிக்கா போல் இனிப்பா.
பஞ்சன நீ விரிச்ச , பாட்டுதான் படிச்சிருப்பா.
கொஞ்சினால் கொஞ்ச கொஞ்ச கொஞ்சி தேன் வடிச்சிரிப்பா.
புடிச்சா வச்சிகையா, மனசுல தச்சுகையா.
வெடிச்ச வெள்ளரிக்கா , வேண்டாத ஆள் இருக்கா.
my dear டார்லிங் உன்ன மல்லிகா கூப்பிடுற
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால”
சென்னை டூ கோவா சென்று கொண்டிருந்த அந்த விரைவு இரயிலின் சி3 கோச்சில் இருந்து வந்த அந்த பாட்டுச் சப்தம் இரயிலின் இரைச்சலையும் மீறி செவிப்பட்டறையைக் கிளிக்க, அந்த சப்தம் தங்களுக்கு போதவில்லை என்பது போல் இன்னும் சப்தத்தைக் கூட்டி வைத்து குலுங்கும் இரயிலைப் பார்த்து ஏளனம் செய்வதைப் போல் தங்கள் ஆட்டத்தால் அந்த இடத்தையே இரணகளப் படுத்திக் கொண்டிருந்தனர் அங்கிருந்த இளம் சிட்டுக்கள்.
கவலை என்ற சொல்லையே அவர்கள் அகராதியிலிருந்து அழித்தெறிந்த அந்த புகழ் பெற்ற கல்லூரியின் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களின் இந்த குதூகலத்தைக் கண்டு கோபியர் கொஞ்சும் கண்ணனுக்கே மீண்டும் இங்கே மண்ணில் ஜனித்து அதுவும் இந்த இளம் குயில்களுடன் சேர்ந்து வாழ ஆசை வந்ததோ என்று நீங்கள் எண்ணினால் மிகத் தவறு.
உலகத்தில் நடக்கும் நன்மை, தீமையை ஆராய்ந்து, நடந்து கொண்டிருப்பதை பார்வையிட்டு, நடக்கப்போவதை திட்டமிட்டு, இதில் மக்கள் வேண்டுதல் என தன் மேல் பொழியும் அன்பு மழையில் நனைந்து போய் அதை துவட்டிவிட்டு அப்பாடா என்று நிமிர்கையிலே கலகத்திற்கே பெயர் போன நம் நாரதரையும் சமாளித்துவிட்டு ஒருவழியாய் நிம்மதியாய் கண்ணயரலாம் என்று படுத்தால் அப்போது காதுக்குள்
“கல்லா சலா கல சலா
என் பேரு பாலா
பக்கத்து வீட்டு பொண்ணு பேரு ஷீலா
ரயில்ல இருக்கு வீலா
இப்போ குடி கொக்கோ கோலா ” என கன்றாவியாய் சப்தம் விழுந்தால் யாருக்குத் தான் கடுப்பு வராது?? இதில் கடவுள் மட்டும் விதிவிலக்கா என்ன? இவர்களின் கூத்தில் காண்டான கடவுள் “சோதிக்காதீங்க டா என்னைய” எனப் புலம்பிவிட்டு தன் காதை மூடிக்கொண்டு படுத்துவிட்டார்.
கடவுளுக்கே இந்த நிலமை என்றால் அவர்களோடு பயணம் செய்யும் மற்றவர்களைப் பற்றி தனியாகக் கூற வேண்டுமா?? இந்த பேரிரைச்சலில் கடுப்பான சக பயணியர் அவர்களிடம் பாட்டை நிறுத்தச் சொல்லி பயனில்லாததால் டிடிஆர் இடம் சென்று முறையிட, அவரோ அவர்களுக்கு முன்பே இளசுகளிடம் பல்பு வாங்கிவிட்டு பாவமாய் காதில் பஞ்சை வைத்து படுத்துவிட்டிருந்தார்.
வேறுவழியில்லாமல் மற்ற பயணியர்களும் தங்கள் செவியைக் காப்பாற்றிக் கொள்ள அந்த பெட்டியில் இருந்து வேறு பெட்டிக்கு இடம் பெயர்ந்து விட, இது எதையும் கருத்தில் கொள்ளாமல் அப்போதும் அந்த மாணவர்கள் தங்கள் ஆட்டத்தை தொடர்ந்து கொண்டிருந்தனர்.
35 பேர் கொண்ட அந்தக் குழுவில் நம் நான்கு வானரங்களும் அடங்க, அவர்களின் பயணம் ஆட்டம் பாட்டமாய் இளைஞர்களின் கனவு தேசமான கோவாவை நோக்கித் தொடர்ந்து கொண்டிருந்தது.
அவர்கள் போட்ட ஆட்டத்திற்கு காலை சாப்பிட்டது மட்டுமல்லாமல் கடந்து பத்து நாளைக்கு முன்பு சாப்பிட்ட அனைத்துமே செரித்து விட, அவர்களின் வயிறு கூப்பாடு போட, அனைவரும் சிறு இடைவேளைக்குப் பின் மீண்டும் தொடரும் என்பது போல் சாப்பிடச் சென்று மற்றவரின் காதுகளுக்கு தற்காலிகமாக விடுதலை அளித்தனர்.
தங்கள் இடத்திற்கு வந்த அந்த நால்வர் கூட்டம், தாங்கள் கொண்டுவந்திருந்த சிறிதீனிப் பையை எடுத்து கொறிக்கத் தொடங்கியது.
“அட குண்டோதரிகளா எனக்கும் கொஞ்சம் குடுங்க டி நீங்களே குண்டாவை காலி பண்ணிருவீங்க போலிருக்கு” என மேடி இலா கையில் இருந்த குண்டாவில் கையை விட, சட்டியில் ஒட்டியிருந்த ஒரே ஒரு ஜீராத்துண்டு மட்டும் அவன் கையில் சிக்கியது.
“அடிப்பாவி இதென்னா வயிறா இல்லை நம்ம வீட்டுப்பக்கம் தோண்டிப்போட்ட ஆழ்துளைக் கிணறா இப்படி ஒரு நிமிஷத்துல குண்டாவுல இருந்ததெல்லாம் உன் வயித்து அண்டாக்குள்ள போயிட்டே இருக்கு .. இப்படித் தின்னா நாங்களாம் காத்தைத் தான் தின்னு உயிர் வாழணும்.. சரியான இட்லிகுண்டா” என அவன் கலாய்க்க, பதிலுக்கு அவள் அவனை மிதிக்க என அந்த இடமே ரசபாசம் ஆக, நவ்யா வந்து அவர்களைத் தடுத்து நிப்பாட்டுவதற்குள் முழி பிதுங்கி விட்டாள்.
இவை எதையுமே கண்டுகொள்ளாமல் தான்வி எதையோ நினைத்து பூரித்துப் போய் அமர்ந்திருக்க, அதை கவனித்த மற்ற மூவரும் அவள் முடியைக் கலைத்து அவளை நினைவிற்குக் கொண்டுவந்தனர்.
“என்ன டி எங்களுக்குத் தெரியாம ட்ரையின்ல எவனாச்சும் ஹான்ட்ஸமை பார்த்தியா?? அதான் இப்படி அவன் கூட கனவுல டூயட் பாடிகிட்டு இருக்கியா?? எங்களை விட்டுட்டு நீ மட்டும் பார்த்திருக்க திரோகி” என நவ்யாவும் இலாவும் பொரிய,
மேடியோ ” ச்சீ ச்சீ இந்த நாய் அதுக்கெல்லாம் செட் ஆகாது.. இது நம்ம அம்மா எல்லாருக்கும் போட்டுத் தந்த அதிரசத்தை அவளே சாப்பிடலாம்னு எடுத்து ஒளிச்சு வச்சிருப்பா .. அதான தானு” என அல்பமாக யோசிக்க,
“அட ச்சீ அல்பங்களா உங்களை வச்சுகிட்டு ஒரு ஆணியை கூட புடுங்க முடியாது … நான் நம்ம உடன் பிறப்புகள் இந்நேரம் எப்படி அசிங்க பட்டிருக்கும் அதுங்க மூஞ்சியை இப்போ பார்க்க முடியாம போச்சேனு ஃபீலிங்ஸ்ல இருக்கேன் ..அது புரியாம உளறிகிட்டு இருக்கிங்க லூசுங்களா..” என தான் என்ன சிந்தனையில் இருந்தேன் என தான்வி கூற,
மற்ற மூவரின் முகமும் அப்போது தான் தங்களின் பிறவி எதிரிகளான அவர்களின் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் பற்றி சிந்தித்து பூரித்தது..
“அட ஆமால்ல இந்நேரம் அந்த ப்ளடி பக்கர்ஸ் எவ்ளோ கேவலமா பல்ப் வாங்கிருப்பாங்க அதை பார்க்க முடியாம போச்சே..” என இலா வருத்தத்துடன் கூற,
அதை ஆமோதித்த நவ்யா , ” ஆமாடி நம்மளை எவ்ளோ டைம் வீட்டுல அடிவாங்க விட்டிருப்பா அந்த ஒன்னாரூவா மூஞ்சி ஓவியா இப்போ அந்த மூஞ்சி அவமானப்பட்டு நிக்கிறதை பார்க்க முடியலையேன்னு நினைக்கிறப்போ தான் லைட்டா ஃபீல் ஆகுது” என்றாள்.
அப்போது மேடியோ , “நல்ல வேளை காலையில எங்க அந்த அனகோண்டா வாயன் என் கூட பிறந்து என்னை பிரச்சனையில் மாட்டி விட்டு வேடிக்கை பார்க்குற எங்கண்ணன் அந்த இம்சை மன்னன் ரகு அந்த பென்டிரைவை போட்டு பார்த்துருவானோ நம்ம மாட்டிப்போமோன்னு என் உசுரே போய்ருச்சு” என மேடி பெருமூச்சு விட,
தான்வியும ” ஆமாடா நான் கூட உங்கண்ணன் ஓவி கிட்ட ஒரு டைம் செக் பண்ணிக்கலாம் பென்டிரைவ்வை போடுன்னு சொல்றப்போ பயந்துட்டேன்.. நல்லவேளை நவ்யா வந்து அந்த பெர்பாமென்ஸை போடலைனா இன்னைக்கும் நம்ம மாட்டி நம்மளை பெத்த தெய்வங்க நம்மளை ரூம்ல வச்சு பூட்டி பின்னி பெடலெருத்துருப்பாங்க.. எப்படியோ நம்ம வச்ச வேண்டுதல் அந்த வடிவேலன் காதுல விழுந்து நாமளும் சேஃபா IV வந்துட்டோம் அதுங்களும் அங்க அசிங்கபட்டிருக்கும்” என நிம்மதியாக கூற,
அதை ஆமோதித்த அனைவருக்கும் காலையில் வீட்டில் நடந்தது நினைவில் வந்தாடியது….
காலை ரகுவின் வீடு,
“அம்மா எனக்கு டிஃபன் வேண்டாம் ஃப்ளைட்க்கு லேட் ஆச்சு வெளியில பார்த்துக்கிறேன்” என ரகு கிட்செனை நோக்கி குரல் கொடுத்துக்கொண்டே தான் கொண்டு போக வேண்டிய ஃபைலை சரி பார்த்துக்கொண்டே கீழே இறங்கி வந்தான்.
அங்கே அப்போது தான் பதினைந்து பூரியை பதறாமல் புசித்துக் கொண்டிருந்த மேடி அவனைக் கண்டு நக்கலாக புன்னகைத்து , “சிலரெல்லாம் ஒரு வேலையும் இல்லைனாலும் வீட்டுல சீன் போட பிசியா இருக்க மாதிரியே காமிச்சுப்பாங்க அவங்க ரீல் எல்லாம் ஒரு நாள் அந்து போகும் போது தான் இந்த மேடியோட அருமை உங்களுக்கெல்லாம் தெரியும்” என கூறிவிட்டு அடுத்த பூரியை உள்ளே தள்ள,
எப்போதும் போல் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்காத ரகு தன் வேலையில் கவனமாக இருக்க, அங்கே அப்போது தான் கடைக்கு கிளம்பி வந்த ரங்கநாதன் தான் இளைய மகனை முறைத்து விட்டு , “ஆமா ஆமா திங்கிற போட்டி வக்கிறப்போ தான் உன் அருமை எங்களுக்குத் தெரியும்.. தின்னி மாடு நாங்க ரெண்டு பேரு சம்பாதிக்கிறது உன் ஒருத்தனுக்கு சாப்பாடு வாங்கவே சரியா போய்றுது .. காலங்காத்தால எவனாச்சும் இவளோ எண்ணெய் இருக்க பூரியை இப்படி பத்து பத்தாய் சாப்பிடுவானா? இப்படியே சாப்பிட்ட கொலஸ்டிரால் வந்து நெஞ்சடைச்சு தான் டா சாகப்போற” என அவர் கத்திக் கொண்டே வந்து டைனிங் டேபிளில் அமர, மேடி எப்போதும் போல் அதை ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டுவிட்டு தன் சாப்பாட்டில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டான்.
உள்ளிருந்து வந்த மாதவியோ,” ஏன்ங்க பிள்ளை சாப்பிடுறப்போவே எதையாது சொல்லலைன்னா உங்களுக்கு தூக்கம் வராதா?” என கணவனிடம் காய்ந்தவர்,
தன் பெரிய மகனைப் பார்த்து, ” ரகு கண்ணா கொஞ்சம் இடியாப்பம் மட்டும் சாப்பிட்டு போப்பா அம்மா உனக்காகத்தான் செஞ்சிருக்கேன்” என வாஞ்சையாகக் கூற,
அவரை ஏறிட்ட ரகு, ” இல்லை மா ரொம்ப லேட் ஆச்சு நான் நைட் வந்து சாப்பிடுறேன்.. பாய் மா” என தன் ஷூவை மாட்ட,
டூர் கிளம்ப நம் வானரங்களும் மேடியைக் காண வந்து விட்டிருந்தனர்.
அப்போது ரகுவின் நண்பர்களும் கிளம்பி வந்து விட,
ரகு ஓவியாவி்டம், ” எல்லாம் ரெடி தான பென்டிரைவ் உன் கிட்ட தான இருக்கு அதை கொடு ஒரு டைம் எல்லாம் கரெக்டா இருக்கான்னு செக் பண்ணிக்கலாம் ப்ளைட்ல நம்ம கிளையண்ட் வேற புது புராஜக்ட் பத்தி பேச வராங்க அப்போ பார்க்க டைம் இருக்காது ” எனக் கூற,
சிறியவர்கள் நால்வரின் முகத்திலும் ஈயடாவில்லை.
என்ன செய்து அவர்களைப் பார்க்க விடாமல் தடுப்பது என நால்வரும் தீவிரமாக சிந்திக்க,
ஓவியா அவன் லேப்பில் பென்டிரைவ்வை போடப்போக,
திடீரென நவ்யா பேய் பிடித்தவளைப்போல் ஆட அனைவரின் கவனமும் அவள் மீது திரும்பியது.
அவளுக்கு என்னாயிற்றோ என அனைவரும் பதறி அவளைப் நிறுத்த முயல, அவளோ எதற்கும் நிற்காமல் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தாள்.
தாய்மார்களோ திறுநீரை எடுத்து வந்து பூசிவிட, ஆண்களோ அவளுக்கு தண்ணீர் கொடுத்து சாந்தப்படுத்த முயன்றனர்.
நேரம் கடந்து கொண்டே போக, இவர்களின் விளையாட்டைக் காண பொறுமை இல்லாத ரகு தன் சகாக்களுடன் கிளம்பி விட்டான்.
போகும் போது சிரியவர்களின் மீது ஒரு நிமிடம் பார்வையை நிலைக்கவிட்டவன் பின் தன் காரில் ஏறிச் செல்ல அதைக் காணாத வாண்டுகளும் அவர்களை தடுத்துவிட்டோம் என குஷியில் நவ்யாவைக் கட்டிக்கொள்ள, இவர்களைப் பெற்றவர்கள் இவர்களின் இந்த விளையாட்டைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்து விட்டனர்.
பின் பல அறிவரைகளை அள்ளித் தெளித்து தங்கள் மக்கள் செல்வங்களை டூருக்கு அனுப்பி வைத்த பின்னரே அவர்களால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது..
ஷப்பா பிள்ளைங்களா இதுங்க எப்படித்தான் இவங்களை சமாளிக்கிறாங்களோ.. சரி வாங்க அடுத்து என்ன தான் நடக்குது ரகு கேங்க் அசிங்கபட்டாங்களா இல்லையான்னு கேரளாக்கு போய் பார்த்துட்டு வரலாம்..
கடவுளின் சொந்த நாடான கேரளாவின் துறைமுக நகரமான கொச்சினின் சர்வதேச விமான நிலையத்தில் சென்னை செல்லும் விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்த நம் ரகு அண்ட் கேங்கின் முகத்தில் அட்டகாசமான புன்னகை குடிகொண்டிருந்தது.
இவனுங்க இப்படி சிரிச்சுக்கிட்டு இருக்கதை பார்த்தா டெண்டர் கிடைச்சிருச்சு போலையே. என்ன நடந்திருக்கும்?? அட இந்த ரகு பயலுக்கு இப்படியெல்லாம் சிரிக்கத் தெரியுமா?? ஏதோ சர்வாகிட்ட சொல்றானே வாங்க நம்மளும் போய் கேட்டு என்னாச்சுன்னு தெரிஞ்சுக்குவோம்.. அட இது ஒட்டுக்கேக்குறதெல்லாம் இல்லைங்க இதுவும் ஒருவிதமான தகவல் அறியும் முறை தான் அதுனால தயங்காம வாங்க..
“ஆனா செம்ம பல்பு டா அந்த மங்கூஸ் கேங்க்கு.. இந்நேரம் நம்ம அவனுங்க மாத்தி வைச்ச பென்டிரைவ்வை போட்டு அசிங்க பட்டிருப்போம்னு சந்தோஷமா டூர் போய்ட்டு இருப்பானுங்க.. வரட்டும் அவனுங்க வந்த பின்னாடி அவனுங்களுக்கு ஒரு பூஜையை போட்டுற வேண்டி தான் ஓவரா துள்ளுறானுங்க” என ரகு கேலியாகக் கூற,
அவனைத் தொடர்ந்து சர்வாவும் , ” ஆமா மச்சான்.. இவனுங்களைலாம் நாம ஒரு பொருட்டாவே மதிக்கிறது இல்லை ஆனா இந்த சில்வண்டுக நம்மளை போட்டியா நினைச்சுக்கிட்டு டெய்லி எதுனா கோமாளித்தனம் பண்ணிருதுக.. ஏண்டா இவ்வளவு பெரிய கம்பெனி வச்சு நடத்துறவங்க ஒரு ப்ரெசென்டேஷன் பண்ற முன்ன ஒரு டைம் கூடவா அதை செக் பண்ணாம இருப்பாங்க.. என்ன அறிவு டா அந்த கூமுட்டைகளுக்கு” என சிரித்துக் கொண்டே கூறினான்.
“அட அவனுங்களுக்கு மூளைன்னு ஒன்னு இருந்தா தான மச்சான் இதெல்லாம் யோசிப்பானுங்க அது இருக்க வேண்டிய இடத்துல தான் மன்னார்குடி மண்ணு ஒரு கிலோ இருக்கே அப்பறம் இப்படித்தான் ஏதாவது நடக்கும். அநேகமா இந்த ப்ளானை போட்டது எங்கூட பொறந்த அந்த தீர்க்கதரிசியாத் தான் இருக்கும்” என ரகு சந்தேகமாகக் கூற,
அதை மறுத்த சர்வா , ” இல்லை மச்சான் இப்படி குப்பையில கூட போட தகுதியில்லாத ப்ளானெல்லாம் போடத் தகுதியான ஒரே ஆள் எங்க வீட்ல இருக்க பிசாசே தான்” என அவன் ஆணித்தரமாகக் கூறினான்.
“அது கூட பரவாயில்லைடா கடைசியா பென்டிரைவ்வை போட விடாம பண்றதுக்கு நம்ம ஓவியோட தங்கச்சி ஒரு பெர்ஃபாமென்ஸ் போட்டுச்சு பாரு சான்ஸ்லெஸ் மச்சி.. கண்டிப்பா இப்படி கேவலமா நடிக்க நம்ம ஓவி கிட்ட இருந்து தான் இப்படியெல்லாம் கத்துருப்பா அவ.. அப்படித்தான ஓவி? ” என ரகு ஓவியாவை வம்பிழுக்க,
அவளோ இந்த உலகத்தில் இஉர்ந்தால் தானே அவர்கள் பேசுவது காதில் விழ, அவள் தான் வேறு ஒரு மாயலோகத்தில் உலவி கொண்டிருக்கிறாளே, பின்பு எங்கு அவனுக்கு பதிலளிக்க.
அவளின் நிலையைக் கண்டவர்களுக்கு அப்போது தான் வெகுநேரமாய் தாங்கள் இருவர் மட்டுமே பேசிக்கொண்டிருப்பது அவர்கள் புத்திக்கு உரைத்தது.
என்னாயிற்று இவளுக்கு திடீரென என யோசித்த இருவரும் அவளின் இருபக்கமும் போட்டு உலுக்க, துயிலில் இருந்து விழிப்பவளைப் போல் தன் இருபக்கமும் இருந்தவ அவளின் நண்பர்களைப் பார்த்து முழித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன டி கண்ணை கொட்ட கொட்ட முழிச்சுக்கிட்டே இப்படித் தூங்கிட்டு இருக்க?? இந்த முழி முழிக்குற காலையில உந்தங்கச்சியை பிடிச்ச பேய் இப்போ உன்னை பிடிச்சுக்கிச்சா?” என சர்வா வினவ,
“அதெல்லாம் ஒன்னும் இல்லை” என பேச்சை அத்தோடு முடித்துக் கொண்டாள் ஓவியா.
எப்போதும் சர்வாவுடன் சரிக்குச் சரியாய் சண்டையிடும் ஓவியா இன்று இப்படி அமைதியாகப் போவது அவர்களின் சந்தேகத்தை மேலும் தூண்ட,
“என்னாச்சு ஓவி? என்ன பிரச்சனை நேத்துல இருந்தே உன் முகமே சரியில்லை.. நான் கூட வீட்டுல அந்த வாண்டுங்க கூட ஏதும் பஞ்சாயத்து போலன்னு கேட்காம விட்டுட்டேன்.. ஆனா உன் முகத்தைப் பார்த்தா வேற ஏதோ பெரிய பிரச்சனை போலவே.. என்னன்னு எங்ககிட்ட சொன்னா தான தெரியும் டா ” என ரகு பரிவாகக் கேட்க,
தன்னைக் கண்டுகொண்டார்கள் எனத் தெரிந்ததுமே அதைச் சமாளிக்க சட்டென புன்னகையை பூசிக்கொண்ட ஓவி , “நான் நல்லா தான் இருக்கேன் ரகு” என்றாள் சமாளிப்பாக,
“அடச்சீ கேவலமா நடிக்காத இந்த மூஞ்சுரு மூஞ்சியை இத்தனை வருஷமா பார்க்குற எங்களுக்குத் தெரியாதா?? மரியாதையா என்னன்னு சொல்லு” என சர்வா மிரட்ட,
எப்படி இருந்தாலும் அவர்களிடம் கூறாமல் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என ஓவிக்கும் புரிய, தன் மனதைப் போட்டு வாட்டும் அந்த விஷயத்தை அவர்களுடன் பகிர்ந்து தன் மனக்காயத்திற்கு மருந்து கிடைக்குமா என்று தேடினாள்.
“நான் ஒருத்தனை லவ் பண்றேன்.. அவனுக்கு நாளைக்கு வேற ஒரு பொண்ணோட கல்யாணம்” இதை அவர்களிடம் மறைத்ததற்கு கோவித்துக் கொள்ளப்போகிறார்கள் எனத் தயங்கிக் கொண்டே அவள் கூற,
அவள் நினைத்ததற்கு மாறாய் இருவரும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தனர்.
“அட ஏன் டி காமெடி பண்ணிகிட்டு இருக்க.. ” என ரகு சிரித்துக் கொண்டே கேட்க, சர்வாவோ , ” ஆமா எனக்கு ஒரு டவுட்டு அது ஏன் எப்போ பாரு ‘ நான் காதலிச்சவனுக்கு வேற ஒரு பொண்ணோட கல்யாணம்னு’ டயலாக் விடுறீங்க.. அவன் பொண்ணை இல்லாம பையன்னையா கல்யாணம் பண்ணிப்பான் .. கல்யாணம்னு மட்டும் சொன்னா போதாதா” என சர்வா அவளை மேலும் கலாய்த்தான்.
ஏற்கனவே தன் காதல் தன் கையை விட்டுப் போனதில் மனமொடிந்து போன ஓவ்யா, இப்போது நண்பர்களும் இப்படித் தன்னை நம்பாமல் கேலி பேச அழவே தொடங்கிவிட்டாள்.
அவளின் கண்ணீரைக் கண்டதுமே பதறிய இருவரும் அப்போது தான் அவள் கூறியது உண்மை என்றே உணர்ந்தனர்.
ஒரு வயிற்றில் பிறக்காவிட்டாலும் மண்ணில் ஜனித்த நாள் தொட்டு ஒட்டியே திரிந்த தன் நண்பியின் கண்ணீரை காண சகியாதவர்கள் அவளை ஆறுதல் படுத்தி அவள் கண்ணீரை துடைத்தனர்.
“ப்ளீஸ் குண்டூஸ் அழுகாத.. நிஜமா உன்னை ஹர்ட் பண்ணனும்னு நாங்க சிரிக்கலை.. எங்களுக்குத் தெரியாம நீ எதுவுமே இது வரைக்கும் பண்ணதில்லை அதான் நீ சொன்னதும் நம்ப முடியலை டா அதான் கலாய்ச்சிட்டோம்.. சாரி அழுகாத ஓவி” என ரகு சமாதானப்படுத்த,
சர்வாவும் , ” ஆமா டி சத்தியமா இந்த கத்திரிக்காய் காதலெல்லாம் பண்ணும்னு நினைக்கவே இல்லை டி அதான்” என இழுக்க, அவன் தன்னை கத்திரிக்காய் எனக் கூறியதில் அழுகையை நிறுத்தி விட்டு அவனை அடிக்கத் தொடங்கினாள் ஓவியா.
“ம்ம்ம் இதான் எங்க ஓவி.. இந்த அழுகுறதெல்லாம் உனக்கு செட் ஆகலை.. அதிரடி தான் கரெக்ட்.. சரி இப்போ சொல்லு எங்க கூடவே இருந்துகிட்டு எப்படி இந்தக் கன்றாவி சாரி சாரி காதல் வந்துச்சு .. யாரு அந்த இளிச்சவாயன்” என சர்வா கேட்க,
“ரொம்ப சாரி டா சத்தியமா உங்ககிட்ட மறைக்கணும்னுலாம் நினைக்கலை.. இது எப்படி நடந்துச்சுன்னு எனக்கே தெரியலை..அவனை நான் காதலிக்கிறதையே அவனோட கல்யாணத்தைப் பற்றி கேள்விப்பட்ட பின்னாடி தான் நானே உணர்ந்தேன்” என அவர்கள் என்ன நினைப்பார்களோ என குற்றவுணர்ச்சியுடன் அவள் கூற,
“என்னது உனக்கே லவ்வுன்னு தெரியாதா?? என்ன ஓவி சொல்ற ?? ஃபர்ஸ்ட் யாரு அவன்? என்ன நடந்துச்சு ஃபுல்லா சொல்லு” என ரகு கேட்டான்.
அவளும் தன் காதல் இல்லை காதலென்றே தெரியாத காதல் கதையை கூறத் தொடங்கினாள்.
“நம்ம காலேஜ்ல படிக்கிறப்போ வாராவாரம் வெள்ளிக்கிழமையானா டெய்லி என் பேக்ல ஒரு லெட்டர் இருக்கும் யார் வைக்கிறா எப்படி வரும்னே தெரியாது ஆனா வாரம் தவறாம லெட்டர் வந்திரும்.. உங்ககிட்ட சொன்னா தேவையில்லாம பிரச்சனை வரும் அதுவும் இல்லாம இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லைன்னு நானும் சொல்லலை.. அந்த லெட்டர்ல பேர் எதுவும் இருக்காது.. ஆனா காதல் அவ்வளவு கொட்டிக் கிடக்கும்.. முதல்ல அதைக் கண்டுக்கலை ஆனா போகப்போக வெள்ளீக்கிழமை எப்போ வரும்னு என் மனசு எதிர்பார்க்க ஆரம்பிசிருச்சு.. காலேஜ் முடியுற சமயமும் வந்திருச்சு இப்போயாச்சும் அதை யார் அனுப்புறான்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆசையா இருந்ததுனால என் பேக்ல நான் அவங்களைப் பார்க்கனும்னு லெட்டர் எழுதிப் போட்டேன்.. அதுக்கு பதிலும் வந்துச்சு..” என அவள் சொல்லிவிட்டு அவர்களை ஏறிட,
“முழுசா சொல்லி முடிச்சிடு” என சர்வா கூறிவிட்டு அவளை தொடரச்சொன்னான்.
” பதிலுக்கு அவனும் அடுத்த லெட்டர்ல அடுத்த வெள்ளிக்கிழமை அதாவது காலேஜ் கடைசி நாள் லைப்ரேரி கிட்ட வரேன்னு சொன்னான். அவனை கண்டுபிடிக்க அடையாளமா ரெட் ஷர்ட்டும் ப்ளாக் பேண்ட்டும் போட்டுட்டு வரேன்னு சொன்னான்.. நானும் ரொம்ப ஆர்வமா அவனைப் பார்க்க போனேன்.. அவனும் வந்தான்..ரெண்டு பேரும் பார்த்துக்கிட்டோம்.. பேசப் போற நேரத்துல அவனை யாரோ கூப்பிட்டாங்க.. அவங்க கூப்பிட்டதும் என்னை ஒருமுறை திரும்பி பார்த்துட்டு போனவன் தான் அடுத்து இன்னைக்கு வரைக்கும் அவனை நான் பார்க்கலை. அதோட அவனை நான் மறந்துவிட்டேன்..ஆனா அவன் கொடுத்த லெட்டர்ஸை அதில் இருந்த வரிகளை என் நெஞ்சம் இன்னும் மறக்கலை.. நேத்து ஈவினிங் தான் நம்ம காலேஜ்ல படிச்ச தணு பேச்சு வாக்குல அவனுக்கு கல்யாணம்னு சொன்னா.. அதைக் கேட்டதும் யாரை நான் மறந்துட்டேன்னு இத்தனை நாளா நினைச்சுட்டு இருந்தேனோ அது உண்மை இல்லை அவனை எப்போவும் மறக்க முடியாது அவன் என் வாழ்க்கையில நீக்கமற நிறைஞ்சுட்டான்னு புரிந்தது.. அவன் எனக்கு இல்லைன்னு நிலமை கையை மீறுனப்போ தான் என் காதல் எனக்கே புரிஞ்சது.. எனக்கு அவன் வேண்டும் டா.. ப்ளீஸ் நீங்க தான் ஏதாவது பண்ணி அவனை என்கூட சேர்த்து வைக்கனும்” என ஓவி தன் நண்பர்களிடம் வேண்டுகோள் விடுத்தாள்.
கன்னத்தில் கை வைத்து அவள் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்த சர்வா கையை முறுக்கிக் கொண்டு எழுந்தவன் , “நான் கூட நீ கொடுத்த பில்டப்புக்கு ஏதோ ஒரு காதல் காவியம் வரும்னு பார்த்தா ஒரு இத்துப்போன காதல் காகிதத்திக்குத் தான் நீ இம்புட்டு ஃபீல் பண்ணியா?? ஒரு வாட்டி தான் பார்த்தாளாம் லவ் வந்துருச்சாம்.. பேசாம வா வீட்டுக்கு கிளம்பலாம்..” என கிண்டலுடன் ஆரம்பித்து கோவமாக முடிக்க,
ஓவியாவோ அழுதுவிடுபவள் போல், ” என்ன சர்வா இப்படி பேசுற? நீ கூட என்னை புரிஞ்சுக்கலையா?” என கேட்டாள்.
அவன் கோவமாக ஏதோ பதில் கூற வர, அவனைத் தடுத்த ரகு , ” ஓவி நீ சொல்றது உனக்கே சின்னப்பிள்ளை தனமா இல்லையா?? ஒருத்தனை பத்தி எதுவுமே தெரியாம என்ன லவ்? பிராக்டிகல்லா யோசி ஓவி” என தன்மையாகக் கூறினான்.
காதல் மயக்கத்தில் இருந்தவளுக்கு அவர்கள் சொல்வது எதுவுமே காதில் ஏறாமல் அவள் பிடியிலே நிற்க கடைசியில் அவர்கள் தான் அவள் முடிவிற்கு இறங்கி வர வேண்டியதாய் இருந்தது.
” இதோ பாரு ஓவி இப்போவும் இது எங்களுக்கு பிடிக்கலை ஆனா உனக்காக தான் இதை பண்றோம்.. அவனைப் பத்தி விசாரிச்சு எங்களுக்கு திருப்தியா இருந்தா தான் அவன் கல்யாணத்தை நிறுத்துவோம்.. ஆனா அவன் கூட உன் கல்யாணம் நம்ம பெத்தவங்க சம்மதம் இல்லாம நடக்காது இதை மனசுல நல்லா பதிய வச்சுக்கோ.. இப்போ வா போகலாம்.” என கராறாக கூறிய ரகு அவளையும் அதற்கு சம்மதிக்க வைத்த பின் அங்கிருந்து தங்கள் இல்லம் நோக்கி பயணித்தனர்.
ஓவியாவின் இந்தக் காதலால் அவர்கள் பலப்பல பிரச்சனைகளை சந்திக்க போவதை முன்கூட்டியே அறிந்திருந்தால் அவள் இந்த காதலை மற(றுத்)ந்திருப்பாளோ????
-நட்பாகும்.