அடுத்து வந்த மூன்று வாரம் வெகு வேகமாக ஓடியிருந்தது. இதற்கிடையில் ஜெர்மனி பிராஜக்ட் வீரேஷின் நிறுவனதிற்கே கிடைத்திருந்தது. அதன் வேலைகள் அவனை முழுமையாக இழுத்துக்கொண்டது. ஒர் அளவிற்கு முதலில் இருந்தே திட்டமிடல் இருந்ததாலும் எல்லா நிலையிலும் செய்யவேண்டிய அனுசரிப்புகள் வந்து கொண்டே இருந்தது. அதனால் வேறு எந்த சிந்தனைகளும் இன்றி ஒரு முகமாய் அவனின் மொத்த கவனமும் இந்த பிராஜக்டில் மட்டுமே. வீட்டுக்கு வருவது போவது எல்லாம் நேர கணக்கே இல்லாமல் ஒடிக்கொண்டிருந்தான்.
அந்த xxx-கம்பேனியின் வண்டவாளங்கள் வெளியேரியதில் இவனின் பங்கு கண்டிப்பாய் இருக்கும் என்றுஅந்த தொல்லைகள் வேறு இருந்துகொண்டிருந்தது. மொத்ததில் எல்லா விதத்திலும் ஒரு விதமான பரபரப்பு அவனை துறத்திக் கொண்டு இருப்பது போல் இருந்தது.
இங்கே வென்முகிலுக்கும் விதுனாவும் அவர்களின் இண்டர்ன்ஷிப் மற்றும் செயல்முறை பயிர்ச்சிக்கு(practical training) கம்பேனிகளுக்கு மின் அஞ்சல் அனுப்ப ஆரம்பிதிருந்தனர் வென்முகிலின் தந்தை இங்கே சென்னையில் இருக்கும் கம்பேனிகளுக்கு முன்னுரிமை கொடுக்க சொல்லியதால் முதலில் அந்த கம்பேனிகளுக்கும் அவளின் இது வரை வரைந்த படங்கள் மற்றும் டிசைன் செய்த காப்பிகளை அனுப்பியிருந்தாள். அவளிற்கு மிகவும் விருப்பமாய் இருந்த நிறுவனம் தற்போழுது எதுவும் மாணவர்களை எடுக்கவில்லை என்று அவர்களின் இனையதளத்தில் அறிவித்திறுந்ததால் அதை தவிர அவளின் விருப்ப தரவரிசைப்படி நிறுவனங்களை தொடர்பு கொண்டிருந்தாள். இதில் முதல் இரண்டு நிறுவனங்களில் இருந்து எதிர்மறை பதில் வந்தால் இன்னும் பங்களூர் மற்றும் ஹைதிர்ராபாத்–க்கு முயற்சிக்க திட்டம்.
இது போக கல்லூரியில் நடக்கவிருக்கும் விழாவின் திட்டமிடல் மற்றும் அதற்கான ப்ராக்டிஸ் என்று அது வேறு ஒரு புறம் நடந்துக்கொண்டிருந்தது. மாலை தான் விழா என்பதினால் காலையோ மதியமோ வரவிருக்கும் முக்கிய விருந்தினர்களை நல்லவேளையாக வரவேற்று அவர்களின் அறைக்கு அழைத்து போகும் வேலைகளை கல்லூரி நிற்வாகமே ஏற்றுக்கொண்டிருந்தது அதனால் வெளியே சென்று அலையும் வேலை எதுவும் இல்லை.
***********
இந்த முறை வீரேஷை பாலாஜி அவனின் வீட்டிற்கே வரசொல்லி இருந்ததால், இருக்கபோவது அரை நாள் அதுவும் இல்லாமல் இருவரும் சேர்ந்தே கல்லூரிக்கு செல்லப்போவதால் அதுவே வசதியாய் இருக்கும் என்று நேராய் பாலஜியின் வீட்டிற்க்கே சென்றிருந்தான். சுதர்ஷன் அவனின் தொழில் விஷயமாய் பங்ளூர் சென்றிருப்பதால் இந்த முறை அவனால் அவர்களுடன் இனைய முடியவில்லை.
வீரேஷ், கிட்டதட்ட ஒரு மாதம் கழித்து திரும்பவும் மதுரை வருவதால் இன்று மறுபடியும் அவளை பார்போமோஎன மனதிற்குள் ஒரு முனுமுனுப்பு. இன்று காலையில் பாலா வேறு ஏதொ சர்ப்ரைஸ் என்று சொன்னதால் ஒரு வேளை அவளின் கல்லூரியையோ அல்லது அவளின் இருப்பிடத்தையோ கண்டு பிடித்திருப்பானோ என்று அது வேறு ஒரே எண்ணமாக குடைந்து கொண்டிருந்தது.
பாலாவின் வீட்டில் இருந்து கல்லூரிக்கு போகும் வழியில் வீர், எவ்வளவோ கேட்டும் கூட அவன் அந்த சர்ப்றைஸ் என்ன வென்று சொல்லவில்லை. “இன்னைக்கு நீ திரும்ப சென்னை போவதற்குள்ன்னு சொன்னேன். நீ வந்ததும் சொல்றேன்னு சொல்லலை. நீ எவ்வளவு குடைந்தாலும் பத்து பைசா பேராது|”என கலாய்க்க அதற்க்குமேல் அவனிடம் கேட்ப்பதையும் நிறுத்திவிட்டான்.
சரி , ரொம்ப நாள் சென்று கல்லூரிக்கு போறோம் அதையாவது அனுபவிக்கலாம் என அமைதியாய் வர.. பாலாஜி தான் “டொண்ட் சல்க் (don’t sulk) மச்சான்! தெரிய வரும் பொழுது மொத்தமா அனுபவிசுக்கோ! அப்போ தெரியும் ஏன் காத்திருக்க சொன்னேன்னு.”என்று ஏதோ பேசிக்கொண்டே வந்தான்.
விழா நாள் மாலை:
மாணவர்கள் எல்லாம் ஸ்மார்ட்டாக கிளம்பியிருந்தனர் மாணவிகள் மட்டும் என்ன சலைத்தவர்களா, ஒவ்வொருவரும் வண்ண வண்ண உடைகளிலும் அதற்கு பொருத்தமான அணிகலன்கள் என்று இதுவரை இவ்வளவு பேரழகிகளோடா நாம் படித்தோம் என்று மாணவர்கள் மலைத்து போகும் வண்ணம் நடமாடிக்கொண்டிருந்தர். இதுவரை அழகிகளாக தெரிந்தவர்கள் இப்பொழுது பேர் அழகிகளாக தெரிந்தனர்!!
மாலை மங்கும் நேரம் என்பதால் கல்லூரி வளாகம் மொத்தமும் ஒளிவிளக்குகளின் ஜாலம். கல்லூரியுன் முன் வாசல் ஆரம்பித்துகேண்டின் வரை வண்ண தோரனங்களும், வண்ண தோரன விளக்குகளும், பளிரிடும் ஹாலஜென் விளக்குகளும்என அந்த இடமே ஜகஜோதியாய் இருந்தது.
கல்லூரியின் முகப்பில் பெரும் விளக்குகள் அழங்கரிக்க பின்னால் செல்ல செல்ல தொரன விளக்குகளும் மெல்லிய மஞ்சல் நிற ஒழி கொடுக்கும் விளக்குகள் என அம்பியண்ஸ் (ambience) மிகவும் அற்புதமாக இருந்தது.
மேலும் கல்லூரிக்கு அருகே மருத்துவமணை இருப்பதால் அதிகமான ஒலிபெருக்கியையும் தவிர்த்திருந்தனர்.
நேரம் செல்ல செல்ல வருசையாக ஒவ்வொரு முக்கிய விருந்தினர்களும் வர ஆரம்பிக்க மாணவர்கள் அவர்களை ரிசிவ் செய்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய என பரபரப்பாய் சுற்றிக்கொண்டிருந்தனர்.
விழா கடவுள் வாழ்த்துடன் ஆரம்பிக்க மேடையில் மற்ற முக்கிய விருந்தினருடன் வீரேஷும் அமர்ந்திருந்தான். அபி மேடையில் அவனை பார்ததும் முதலில் போய் நின்றது தோழிகள் புடை சூழ பர்வையாளர்கள் வரிசையில் ஓரமாய் அமர்ந்திருந்தவிதுனாவிடம்.
வென்முகில் நடனத்தில் இருப்பதாலும் மேலும் நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளராகவும் இருப்பதால் அவள் மேடையின் அருகில் மற்ற மாணவர்களுடன் நின்றிருந்தாள். இல்லையென்றால் அவளிடம் தான் நேராய் சென்றிருப்பாள்.
“ஹேய் விது! மேடையில் இருக்கிறது யார்ன்னு தெரியுதா?” என்றால் கிசுகிசுப்பான குரலில்
“யார கேட்கிற”
“அந்த black லினென் trousers அண்ட் லவண்டரைஷ் கலர்ல சட்டை போட்டுற்கிறாறே அவர்.”
“அவரா.. இபோ தான் தயா சொன்னான், நம்ம காலேஜ் சீனியர் தான் போல. VV group of companies MD –யாம்.”
“அடியேய்! இன்விடேஷ்ன் அனுப்ச்சதே நானும் அவனும் தானே! அத சொல்லல… ஹோட்டல்ல வென்ஸியை ஒருத்தன் ‘கண்ணாலயே காதல் செஞ்சுட்டு இருந்தான்னு’ சொன்னேன்ல அவன். ஐ மீன் ‘அவர்’ ”
“என்னது! ” என அதிர்ந்த விது
“ஆமாம் டீ!”
“சரி விடு அவரை நாம் திரும்ப எங்க எப்போ பார்க்க போறோம். அவருக்கு இதேல்லாம் ஞாபகம் கூட இருக்காது!” என விதுனா கூற, என இருவரும் கிசுகிசுப்பான் குரலில் வாக்குவாதம் செய்ய்தபடி ஸ்டேஜை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போழுது அவளுக்கு தெரியவில்லை, அவன் எவ்வளவு பெரிய ஆளாய் இருந்தாலும் அவனுக்கான விசை அவளின் தோழியிடம்தான் என்றும் அதற்கு தானும் துனை போவோம் என்று!
“I doubt it!” என்று மனதிற்குள் நினைத்தாலும் அதற்கு மேல் அதை வளார்க்கவில்லை அபி. “But God! He is hot!” என ஆர்ப்பரிக்க…பக்கத்தில் இருந்த மற்ற பெண்களும், “இன்னும் கல்யாணம் ஆகவில்லையாம்!” “கண்டிப்பா லவ்ர் இருப்பாங்க!”
“இருந்தா என்ன பார்ப்பதில் என்ன வந்துவிட போகுது!” “அவர் கூட ஒருத்தர் வந்திருக்கிரார் அவரும் “ஆள் செம்மையா இருக்காரு!” என ஒவ்வொருத்தரும் அந்த வயதிற்கே உறிய கலகலப்புடன் கலகலத்துக்கொண்டிருந்தனர்.
முதல் விருந்தினர் பேசி முடித்ததும் அடுத்ததாக வீரேஷை பேச அழைத்தனர்.
“நம்கல்லூரியின்முன்னால்மாணவர்! இப்போழுதுஉலகம்எங்கும்பறந்துகொண்டிருக்கும்பிஸினஸ்டைக்கூன். M.D of VV group of companies. சர்! இட்ஸஅவர்ப்ளஷர்டுஹவ்யூஹியர்! We would love to hear about your days here! இப்போமாதிரிதான்அப்பொவும்லெக்சரர்ஸ்உங்களைபடுத்திக்கொண்டேஇருந்தாங்களா?” எனகேட்டததும்மாணவர்கள்கூட்டத்தில்இருந்து “ஹோ… ” எனசத்தம்!! வீரேஷும்அவனின்முகம்விரிந்தபுண்ணகையுடன்தலையைஆட்ட “friends, with pride let us welcome our senior and the most happening business man in India. Mr. Veeresh Vethanagayam to talk few words on what made him to be successful. ”
மாணவர்கள் கரவொலி எழுப்ப எழுந்து மைக்குக்கு வந்தவன், அங்கே நிகழ்ச்சி அறிவிப்பு செய்திக் கொண்டிருந்த மாணவனின் தோழில் கைபோட்டுக்கொண்டு “என்ன சார் சொல்லிடலாமா?!” என மேடையில் இருக்கும் ஆசிரியர்களை பார்த்து கேட்க்க அவர்களும் சிரித்தபடி தலை அசைக்க , “உண்மையை சொல்லனும்னா அப்போ நாங்க தான் அவர்களை படுத்தினோம்!” என்று சொல்லி முன்னால் அமர்ந்திருந்த பாலாஜியை பார்த்துக்கொண்டே சொல்ல பாலாஜியோ “கொஞ்ச நஞ்சமா!! ” என்பது போல் கண்ணை உருட்டினான்.
அதற்கும் மாணவர்கள் “ஹோ…”-வென கத்த… ஒரு 10 வினாடி அமைதியாய் இருந்தவன் “இந்த எனர்ஜி தான் உங்களின் கீ.(key). உங்களிடன் இருக்கும் இந்த ஆளப்பெரிய எனர்ஜி இது தான் நம் இந்தியாவின் மகா சக்தி! அதை சரியான முறையில் சானலைஸ்(channelize) பண்ண தெரிஞ்சா இந்தியாவை விஞ்ச ஆட்கள் இல்லை. ஆனால் நமக்கு இந்த சமையத்தில் தான் நிறைய டிஸ்றாக்ஷன்ஸும்(distractions) இருக்கும் ! ஆனால் பாருங்க யார் ஒருவனுக்கு அவனின் எனர்ஜியை கம்பார்ட்மண்டலைஸ் பண்ண தெரியவில்லையோ அவன் தான் அதிகம் வீழ்ச்சி அடைகிறான். நான் சொன்ன மாதிரி எங்க பாட்சல தான் நாங்க அதிகமான குறும்புத்தனத்துடன் இருந்திருகிறோம். ஆனால் அதே எங்க பாட்ச் தான் முதன்முதலில் அகில இந்திய சிம்பொஸியத்தில் முதல் பரிசை கல்லூரிக்கு தட்டிக்கொண்டு வந்தது. I am sure students here are brilliant and that’s exactly why you are in this institute but momentary pleasures shouldn’t outweigh the bigger picture.
சமீபத்தில் ஒரு ஸ்டடி பண்ணோம் எங்க அறக்கட்டளையை சார்ந்த பள்ளியில், அதில் நல்லா படிக்கிற மாணவனுக்கும் சுமாராய் படிக்கும் மாணவனுக்கும் IQ மட்டுமே வித்தியாசம் இல்லை எனவும் யார் ஒருவன் அவனுக்கு கொடுக்க பட்டிருக்கும் வேலையை முளுமுயற்சியுடனும் விடாமுயற்சியுடனும் செய்கின்றானோ அவனுக்கும் IQஅதிகமாய் இருக்கும் மாணவனுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. Infact the former outdid the later in few circumstances. இந்த ஸ்டாட்டிஸ்டிக்ஸ்(statistics) எதற்கு சொன்னேன்னா… எதோ பெரிய நிறுவனம் , அதிக turnover, one among the top 5 business man இதெல்லாம் வெறும் IQ மட்டுமே வைத்து வருவதில்லை! So my friend it’s the Passion and PERSEVERANCE that takes you to places.
பின்னால் நின்று கொண்டு இருக்கும்மாணவர்கள் இன்னும் சிறிது நேரத்தில் பொறுமை இழப்பதற்கு முன், thanks for having me here! Its my pleasure to be part of this event. நன்றி!” என்று கூறி முடித்தவன் சிறுது தூரம் நடந்து வந்ததும் திரும்பவும் மைக்கின் அருகே சென்று,
“சார், இங்கேஉங்கள்அருகேஅமரந்திருப்பதுமகிழ்ச்சியாய்இருந்தாலும் I think it would be a diffferent feel to be with the students once again. If you don’t mind I would love to be one among the students for the rest of the evening!” எனகூறியவன்டீன்நிடம்இருந்துசன்னசிரிப்புடன்கூடியதலைஅசைப்புவந்ததும்நேராய்சென்றுபாலாஜியுடன்அமர்ந்துகொண்டான்.
மற்றவர்கள் அனைவரும் பேசி முடித்து இருக்க விழா நிகழ்ச்சிகள் ஆரம்பானது. பொதுவாய் இது போன்ற விழாக்களுக்கு செல்லும் வீரேஷ் முக்கியமான நபர்கள் பேசி முடித்ததும் முதல் இரு நிகழ்ச்சிகளுக்கு இருப்பவன் பின் அடுத்தவர் கவனம் கவராமல் ஒருங்கினைபாளரிடம் விடை பெற்று கிளம்பிவிடுவான்.
அவன் படித்த கல்லூரி என்பதினாலோ அல்லது எதேனும் மாஜிகிற்காககாத்திருந்தானோ கிளம்ப வேண்டும் என்ற எண்ணம் கூட வரவில்லை.
நிகழ்சிகள் ஆரம்பம் ஆக மேடையில் இருக்கும் விளக்குகள் அனைக்கபட்டு ஆடிடோரியத்தின் விளக்குகளும் குளிர்விக்க பட்டதும் மாணவர்களின் ஆரவாரம் அதிகமாக தொடங்கியது.
மேடையின் பக்கவாட்டில் இருந்த வென்முகில் அடுத்து அடுத்து வர வேண்டியவர்களை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தாள்.
அவளின் நிகழ்ச்சி நான்காவது!
அவளுக்கு அடுத்து ஆடவிருக்கும் குழுவிற்க்கு என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்து அதற்கான ப்ராப்ஸ்(props) எல்லாம் சரியாக இருக்கிறதா என்று அதையும் சரி செய்துவைத்துக்கொண்டிருந்தாள்.
வரிசையாக ஒரே மாதிரியான ப்ரொக்ராம் வராத மாதிரி ப்ளான் பண்ணியிருந்தார்கள். முதலில் குழு நடணம், அடுத்து மெல்லிசை, அதற்கடுத்து இன்ஸ்ற்றுமெண்டல் என பார்போருக்கும் ஒரே மாதிரி இருப்பது போல் இல்லாமல் பார்த்துக்கொண்டனர்.
வீரேஷ்ற்கும் பாலாஜிக்கும் மாணவர்களோடு மாணவர்களாக விழாவை ரசிப்பதுபழய கால நினைவுளை அள்ளித்தந்தது. கல்லூரி காலத்திற்கு இனையாக வேறு எது இருக்கிறது!
பாலாஜியின் கண்கள் அவ்வப்பொழுது மாணவிகள் இருந்த பக்கம் சுற்றி வர. ‘எங்க டா இந்த நூடுல்ச்ஸை காணோம் இன்னைக்கு… நாம வேற சர்ப்ரைஸ் அது இதுன்னு எத்திவிட்டுட்டோம்… கண்ணுலயே படலயே! ’ என எண்ணிய படி பார்வையை நாலாபுரமும் சுழட்டிக்கொண்டிருந்தான். முதல் நடணம் முடிந்ததும் அரங்கத்தில் இருந்த மொத்த மாணவர்களும் கொடுத்த ஆரவாரம் அடங்கியதும் மாணவர்கள் அலை மெதுவாய் அவர்களின் இருக்கையில் அமர அப்பொழுது அவனின் பார்வை சுழற்சியில் சிக்கினாள் விது கையில் பார்டி பாங்கர்ஸை வைத்து தட்டிக்கொண்டிருந்தாள்!
‘அப்பாடா நூடுல்ச்ஸ் இருக்கு எங்க அவ தோழியை காணோம். அப்போ பாக்கும் பொழுதும் கூட இல்லை .. இது மட்டும் தனியாவே சுத்திக்கிட்டு இருக்கு! எப்படியும் முடியுறதுகுள்ள பார்த்தடனும் ஆண்டவா! நான் வேறு இன்று சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ்ன்னு சொல்லி கிளப்பி வச்சு இருக்கேன்’ என்று எண்ணம்மிட்ட படி அமர்ந்திருக்க
அருகே இருந்த வீரேஷ் மெதுவாய் பாலாஜியை நொக்கி சரிந்தவன், “என்ன பாலா வந்து உட்கார்ந்ததில் இருந்து உன் கண்ணு சுத்திக்கிட்டே இருக்கு? எனிதிங் இன்றஸ்டிங்?”
“உன் கண்ணுல இருந்து ஒன்னும் தப்பாதே! என மனதிற்க்குள் சலித்தவன்.
“ Just revisiting old days da! இதே இடத்துல நாம பண்ண அட்டகாசங்களை நினைத்து பார்த்தேன்!” என்று எதோ சொல்லி சமாளிக்க பார்த்தான்.
“சரி விடு ! எப்படியும் வெளியே வந்து தானே ஆகனும்! நீ சொன்ன சர்ப்ரைஸ்க்கும் உன் பார்வை அலைமோதுவதற்க்கும் சம்பந்தம் இருக்கா?!”
“அடேய் எண்டா, என்ன கொலையா கொல்ற.. நானே உன்கண்ணுல பட வேண்டியது பட மாடேங்க்குதென்னு தள்ளாடிக்கிட்டு இருக்கேன் இதுல நீ வேற!” என மணதிற்க்குள் அர்ச்சனை செய்துகொண்டிருந்தான். இதற்க்குள் அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் ஆரம்பிக்க, “இப்படி எல்லாம் கேட்டு மேட்டர வாங்கலாம்ன்னு பார்க்காத! தெரியும் பொழுது தான் தெரியும்… அது வரை பேசாம பாரு.” என வாயில் ஒற்றை விரல் வைத்து மேடையை காண்பித்தான்.
ஒவ்வொரு நிகழ்ச்சி முடிந்ததும் மாணவர்களின் ஆராவாரம் அதிகரித்துக்கொண்டே இருந்ததே தவிர குறையவில்லை. இப்பொழுது நாண்காவது நிகழ்ச்சி.
வென்முகில் மற்றும் சௌஜன்யாவின் ஃப்யுஷ்ன் டான்ஸ்!
வென்முகில் பரதம் கற்றவள். சௌஜன்யா ஸ்ட்றிட் டான்ஸ் ஹிப்ஹாப் வகை நடணம் தெரிந்தவள்.
நிகழ்ச்சிநடத்துனர், அடுந்த்தாகவரஇருப்பதுக்லாசிக்கும்வெஸ்டர்னும்கலந்தஃப்யுஷ்ன். Has both elements of elagance and beats to keep us rocking the hall! Let me welcome our college stars ven ….“ எனமுடிப்பதற்குள்மொத்தஅரங்கத்தின்சத்தமும்முதல்எப்பொழுதையும்விடஅதிகமாகஅவன்சொன்னமிச்சபெயர்முழுதாய்சென்றடையவில்லை “You all know! Yes, here they are with their scintilating performance!!”
திரை சீலை மெதுவாய் மேல் ஏற, இரு பெண்களின் பக்கவாட்டு தொற்றம்! இன்னும் விளக்குகள் வண்ணங்களை வாரி இரைக்க ஆரம்பிக்காத நேரம், மேடையின் பின் திரைசீலையில் இருந்து உடுறிவரும் வெளிச்சம் இருவரின் தொற்றமும் வரி வடிவாமாய் தெரிய சுற்றி இருந்த மாணவர்களின் சத்தம் அதிகரிக்க ஆரம்பித்துருந்தது!
முதல் இன்ஸ்றுமெண்டல் இசை வர ஆரம்பித்ததும், அரங்கம் மெதுவாய் அமைதியாக ஆரம்பித்தது!
தக்ஜூம் … ந்க்தக்ஜூம்… என ஜதி வந்ததும் இருவரும் ஒரு சேர திரும்ப, பார்த்துக்கொண்டிருந்த வீரேஷ் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் இருக்கையில் சாய்ந்து இருந்தவன் ஒரு நொடி முன் நோக்கி நகர்ந்துவிட்டான்! அவன் தான் காண்பது நிஜமா அல்லது இது ஒரு வகை மாயையா என்பது போல் கண்களை தட்டி விளிக்க
பக்கத்தில் இருந்த பாலாஜிக்கும்மே எப்படியும் இன்று பார்ப்போம் என்று நினைத்தவன் இப்படி மேடையில் எதிர்பார்க்காததினால் அவனுமே சதம்பித்திருந்தான்.
மெதுவாய் வீரெஷின் கையை பற்றி இழுக்க, சுய உணர்வுக்கு வந்தவன் கண்ணை சிமிட்ட கூட மறந்து பார்த்த விழி பார்த்த படி மெதுவாய் சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தவன்தன் வலது காலை தூக்கி இடது தொடையில் போட்டு ரசிப்பதற்க்கு எதுவாய் வசதியாய் உட்கார அவனை பார்த்துக்கொண்டிருந்த பாலாஜியின் முகத்தில் குறும்புடன் கூடிய கள்ள சிரிப்பு!!
அவர்கள் ஆடிய இசை “shape of you – Carnatic”என்கின்ற இந்திய காண்டெப்ரெரி இசை.இசையின் ஒவ்வொரு ஜதிக்கும் அவளின் நளினமான அசைவையும் அவ்வப்பொழுது வெட்டும் கண்களையும் உடன் ஆடும் பெண்ணை பார்த்து அவளின் மலர்ந்த சிரிப்பையும் பார்த்தவன் மெய் மறந்திருந்தான்.
பரதத்தின் அடவுகளில் அவளின் தெளிவும் மேற்கத்திய நடணத்தில் அவளின் க்ரேஸ்ஸும் அவனை கட்டிப்போட்டிருந்தன.
மேல் இருந்து கீழ் ஒரே நிறத்தில் ஆன் உடம்பை ஒட்டிய உடையும் இடுப்பிற்க்கு கீழ் மட்டும் ஃப்லொயியான(flowy) பாண்ட் அனிந்திருக்க அவளின் நடணத்திற்க்கு தகுந்த வாரு அந்த உடை சுற்றி சுழல… அவளின் ஒவ்வொரு அசைவிலும் மனதை தொலைத்துக் கொண்டிருந்தான். அந்த சிரிப்பும் கண்களின் பாவனையும் அவனை எங்கோ இழுத்து சென்றது!
சுற்றுப்புறம் மறந்த லயிப்பு!
நடணம் அரங்கேறிய மூன்று நிமிடமும் சுற்றி இருக்கும் சத்தம் மாணவர்களின் சத்தம் அவர்களின் ஆராவாரம் என்று எதுவும் கேட்காத லயிப்பு!
உணர்வு குவியலான லயிப்பு!
நடணம் முடிந்து அவர்கள் கீழே இறங்கும் வரை முகத்தில் ஒரு உறைந்த சிரிப்புடன் கண்களில் அவளை நிறைத்துக்கொண்டிருந்தவன். அவள் இறங்கியதும் பார்வை அவளை தொடர்ந்தாலும் பக்கத்தில் இருந்த நண்பனை ஒரு கையால் கட்டி அணைத்துக்கொண்டான்! “தான்க்ஸ் டா மச்சான்! நீ சொல்லி இருந்தால் கூட இந்த அளவு சந்தோஷம் இருந்திருக்குமான்னு தெரியலை! ” என குரல் கரகரக்க கூறியவன் அவளை கண்களால் தொடர்ந்துகொண்டிருந்தான்.
மனதில் ஒரு இதம் ! இதுவரை எங்கே தேடுவது என்று இருந்த குழப்பம் கலைந்த இதம்.
இனி அவளுடன் தான் சேரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று மனதிற்குள் மகிழ்ந்துகொண்டிருக்க .. ஆனால் விதியின் காதில்