Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
உனக்குள் என் உயிரே 1 1
Post Views:
4,428
உனக்குள்
என்
உயிரே
அத்தியாயம்
1
ஆஸ்திரேலியா
மெல்போர்ன்
நகரம்
.
நேரம்
நள்ளிரவு
இரண்டு
மணி
.
விடாமல்
அடித்த
தன்
செல்
போன்
சத்தத்தில்
எழுந்த
அர்ஜுன்
அழைத்தது
யார்
என்று
பார்க்க
.
அழைத்தது
அவனது
நெருங்கிய
நண்பன்
சூர்யா
.
“
டேய்
…
இப்ப
இங்க
என்ன
டைம்
தெரியுமா
?
இப்ப
எதுக்குடா
போன்
பண்ற
?”
என்று
அர்ஜுன்
கேள்விகளாகக்
கேட்க
…
சூர்யாவிடம்
இருந்து
எந்தப்
பதிலும்
இல்லை
.
“
என்ன
ஆச்சு
சூர்யா
?
அம்மா
,
அப்பா
நல்ல
இருக்காங்களா
?
எதாவது
பிரச்சனையா
என்றவனுக்கு
எதோ
முக்கியமான
காரணம்
இருப்பதால்
தான்
சூர்யா
இந்நேரத்தில்
அழைத்திருக்கிறான்
என்று
புரிந்தது
….
“
எல்லோரும்
நல்லா
இருக்காங்க
அர்ஜுன்
.
நீ
டிவி
போட்டு
,
தமிழ்
நியூஸ்
சேனல்
பார்த்திட்டு
,
எனக்குப்
போன்
பண்ணு
.”
என்றவன்
போன்னை
வைத்துவிட்டான்
.
டேய்
சூர்யா
…
பச்
…
எதுக்கு
இப்ப
நியூஸ்
பார்க்க
சொல்றான்
?
அலுத்துக்கொண்டே
எழுந்த
அர்ஜுன்
…
டிவியைப்
போட்டுத்
தமிழ்
நியூஸ்
தேடி
வைக்க
…..
இன்றைய
முக்கியச்
செய்திகள்
.
பெங்களூரில்
இருந்து
கர்நாடகா
காட்டு
பகுதிக்குச்
சுற்றுலா
சென்ற
பள்ளி
கூட
மாணவிகள்
பஸ்சுடன்
கடத்தப்பட்டனர்
.
அவர்களுடன்
சென்ற
நான்கு
ஆசிரியர்களும்
,
பஸ்
டிரைவரும்
கடத்தப்பட்டார்கள்
.
யார்
கடத்தியது
?
என்ற
விவரமோ
…
அவர்கள்
கோரிக்கை
என்னவென்றோ
இன்னும்
தெரியவில்லை
.
கடத்தபட்டவர்கள்
விவரம்
என்று
டிவியில்
ஒவ்வொரு
மாணவிகளின்
புகைப்படமும்
,
பெயரும்
வர
,
அது
முடிந்து
கடத்தப்பட்ட
ஆசிரியர்களின்
விவரம்
வந்தது
.
ஒவ்வொரு
புகைப்படமாக
வர
…
ஒரு
புகைப்படத்தைப்
பாத்ததும்
அதிர்ச்சி
அடைந்த
அர்ஜுன்
“
மீரா
…”
என்று
கத்த
…
செய்தியாளரும்
அந்தப்
பெயரையே
சொல்ல
….
அப்போது
அவன்
செல்
திரும்ப
அழைத்தது
.
“
சூர்யா
…
மீரா
…
“
என்று
மேலே
பேச
முடியாமல்
அர்ஜுன்
திணற
….
“
அர்ஜுன்
,
டென்ஷன்
ஆகாத
.
அவ
எங்க
இருக்கானே
தெரியாம
இருந்தோம்
.
இப்ப
தெரிஞ்சிடுச்சு
.
கடத்தினவங்க
ஒன்னும்
பெரிய
தீவிரவாதிங்க
இல்லை
.
நான்
இப்பதான்
எனக்குத்
தெரிஞ்ச
போலீஸ்
ஆபீசர்கிட்ட
விசாரிச்சேன்
.
பயப்படும்படியா
எதுவும்
இல்லைன்னு
சொல்றாங்க
..
நீ
உடனே
இங்க
கிளம்பி
வா
…”
என்றான்
சூர்யா
.
“
சரிடா
….
நான்
உடனே
கிளம்பி
வரேன்
.”
என்று
போன்னை
வைத்த
அர்ஜுனுக்கு
மீரா
கிடைத்தை
நினைத்து
சந்தோஷபடுவதா
இல்லை
…
இப்போது
அவள்
இருக்கும்
நிலையை
நினைத்து
வருத்தப்படுவதா
என்று
தெரியவில்லை
.
யோசிக்க
நேரம்
இல்லாததால்
வேகமாகக்
கிளம்பினான்
.
தன்னுடன்
வேலை
பார்க்கும்
நண்பனுக்கு
அழைத்து
,
தான்
உடனடியாக
இந்தியா
செல்ல
வேண்டி
இருப்பதைச்
சொன்னவன்
,
வேகமாக
டாக்ஸ்யில்
விமான
நிலையம்
சென்று
….
அடுத்து
இருந்த
சிங்கப்பூர்
விமானத்திற்குப்
பயணச்
சீட்டு
வாங்கிவிட்டு
சூர்யாவை
அழைத்தான்
.
“
சூர்யா
…
நான்
சிங்கப்பூர்
போய்
அங்கிருந்து
பெங்களூர்
போறேன்
.”
“
சரி
அர்ஜுன்
,
அப்படியே
பண்ணு
.
நான்
இப்ப
கார்ல
பெங்களூர்
கிளம்பிட்டேன்
.”
“
டேய்
…
அவளுக்கு
ஒன்னும்
ஆகாது
இல்ல
.
பத்திரமா
திரும்பி
கிடைச்சுடுவா
இல்ல
…”
அர்ஜுனின்
குரலில்
இருந்தே
அவன்
வேதனையை
உணர்ந்த
சூர்யா
“
அவ
நல்லபடியா
உனக்குக்
கிடைப்பா
பயப்படாம
வா
.”
என்று
சொல்லி
போன்னை
வைக்க
,
அர்ஜுன்
சென்று
விமானத்தில்
ஏறினான்
.
விமானத்தில்
ஏறியவன்
,
மீரா
…
ஏன்
டி
இப்படிப்
பண்ண
?
உன்னை
நான்
திரும்பி
இப்படியா
பார்க்கணும்
என்று
நினைத்துக்கொண்டே
கண்ணை
மூட
….
அவன்
விழிகளுக்குள்
மீரா
தெரிந்தாள்
.
அன்று
கல்லூரியில்
கிரிக்கெட்
போட்டி
.
அர்ஜுன்
தான்
அவர்கள்
காலேஜ்
டீமின்
கேப்டன்
.
அவர்கள்
கல்லூரிக்கும்
இன்னொரு
கல்லூரிக்கும்
இடையே
இறுதி
போட்டி
நடந்து
கொண்டு
இருந்தது
.
முதலில்
அந்தக்
கல்லூரி
பாட்டிங்
செய்து
240
ரன்கள்
எடுத்து
விட
,
இப்போது
அர்ஜுனின்
டீம்
ஆடி
கொண்டிருந்தனர்
.
அர்ஜுன்
தான்
முதலில்
பாட்டிங்
செய்ய
இறங்கினான்
.
அவனோடு
பாட்டிங்
செய்ய
இறங்கியவர்கள்
ஒவ்வொருவராக
அவுட்
ஆகி
சென்றுவிட
…
அர்ஜுன்
நிலைத்து
நின்று
ஆடி
,
அவன்
மட்டுமே
110
ரன்கள்
எடுத்திருந்தான்
.
ஜெயிக்க
இரண்டு
பந்துகளில்
நான்கு
ரன்கள்
தேவைபட்டது
.
அர்ஜுன்
மிகவும்
டென்ஷன்னாக
இருந்தான்
.
சொதப்பிட
கூடாதே
என்று
வேண்டியபடி
பந்தை
எதிர்
நோக்கி
காத்திருந்தான்
.
அப்போது
எல்லோரும்
அர்ஜுன்
four
என்று
கத்த
.
அதில்
ஒரு
குரல்
மட்டும்
“
அர்ஜுன்
…
அவுட்
.
”
என்று
சத்தமாகக்
கேட்டது
.
அர்ஜுனுக்குச்
சுள்
என்று
கோபம்
வர
…
சட்டென்று
திரும்பி
குரல்
வந்த
திசையைப்
பார்த்தான்
.
அவன்
பார்ப்பது
தெரிந்ததும்
,
அந்தக்
குரலுக்குச்
சொந்தகாரி
எழுந்து
நின்று
“
அர்ஜுன்
…
அவுட்
.
”
என்று
சத்தமாக
மீண்டும்
கத்த
….
அர்ஜுன்
பாட்டைத்
திருப்பி
அவள்புறம்
காமித்தான்
.
அந்தக்
காலேஜ்
பொண்ணு
போல
என்று
நினைத்தவன்
….
பந்தை
அடிக்கத்
தயார்
ஆனான்
….
அந்தப்
பந்தில்
அவனால்
ரன்
எதுவும்
அடிக்க
முடியவில்லை
.
கடைசிப்
பந்து
…
இந்த
முறையும்
அவள்
“
அர்ஜுன்
…
அவுட்
.
”
என்று
கத்த
.
ச்ச
..
இவ
ஒருத்தி
அவுட்
ஆக்காம
விட
மாட்டா
போலிருக்கு
….
என்று
அவள்
மேல்
இருந்த
எரிச்சலில்
அர்ஜுன்
பந்தை
விலாச
…
அது
சிக்ஸ்சர்
…..
எல்லோரும்
சந்தோஷ
கூச்சல்
போட
….
அர்ஜுனின்
டீம்
அவனைத்
தூக்கி
கொண்டாடினார்கள்
.
அர்ஜுன்
கெத்தான
பார்வையுடன்
அவனைப்
பார்த்து
அவுட்
என்று
கத்திய
பெண்ணைத்
திரும்பி
பார்க்க
…
அவள்
சோகமாக
இல்லாமல்
சந்தோஷமாக
ஆட்டம்
போட்டு
கொண்டிருந்தாள்
.
இவ
என்ன
லூசா
?
கொஞ்ச
நேரத்துக்கு
முன்னாடி
தான்
அவுட்
ஆகனும்னு
கத்தினா
…
இப்ப
சந்தோஷமா
இருக்கா
என்று
நினைத்தவன்
…
இந்தப்
பொண்ணுங்களைப்
பத்தி
புரிஞ்சிக்க
முடியாதுன்னு
இதனால
தான்
சொல்றாங்களோ
என்று
நினைத்தவன்
,
அவளை
மறந்து
அவன்
நண்பர்களுடன்
வெற்றியை
கொண்டாடினான்
.
“
ஏய்
மீரா
….
உனக்குக்
கொஞ்சமாவது
அறிவு
இருக்கா
?
எதுக்குடி
நம்ம
காலேஜ்
பையனை
பார்த்து
அவுட்னு
கத்தின
?”
“
கூல்
…
கூல்
…
டென்ஷன்
ஆகாத
கீத்து
….
அவனை
எப்படி
என்னைப்
பார்க்க
வைக்கிறதுன்னு
தெரியலை
…
அதனாலதான்
அப்படிக்
கத்தினேன்
.
திரும்பி
பார்த்தான்
பார்த்த
இல்ல
….”
மீரா
பெருமையுடன்
தன்
சுடிதாரில்
இல்லாத
காலரை
தூக்கிவிட
….
“
அவனுக்கு
மட்டும்
நீயும்
இதே
காலேஜ்ன்னு
தெரிஞ்சிது
…
மகளே
உன்ன
கைமா
பண்ணிடுவான்
.
பேசமா
வா
…
அவன்
பார்கிறதுக்குள்ள
போய்டலாம்
…”
என்ற
கீர்த்தனா
மீராவின்
தோழி
….
அவள்
கையைப்
பிடித்து
இழுத்துக்
கொண்டு
செல்ல
…
மீரா
,
அர்ஜுனை
திரும்பித்
திரும்பி
பார்த்துக்
கொண்டே
சென்றாள்
.
“
ஆள்
சூப்பர்
இல்ல
…
போன
வருஷம்
நான்
காலேஜ்
சேர்ந்த
அன்னைக்கு
….
இவனதான்
முதல்ல
பார்த்தேன்
….
இவன்
தான்
எனக்கு
ரோஸ்
குடுத்து
வெல்கம்
சொன்னான்
.
”
மீரா
பெருமையடிக்க
….
“
அன்னைக்கு
ப்ரெஷெர்ஸ்
டே
…
அவன்
உனக்கு
மட்டும்
இல்ல
…
எனக்கும்தான்
ரோஸ்
குடுத்தான்
.
எதோ
உனக்கு
லவ்
ப்ரொபோஸ்
பண்ணி
பூ
குடுத்த
மாதிரி
பீல்
பண்ற
.”
கீர்த்தனா
அவள்
மூக்கை
உடைத்தாள்
.
“
ம்ம்
….
நீ
சொல்ற
மாதிரி
இருந்திருந்தா
கூட
நல்லாதான்
இருக்கும்
.”
மீரா
கண்சிமிட்டி
சிரிக்க
.
“
எல்லாமே
உனக்கு
விளையாட்டு
தான்
.
உனக்கு
அவனைப்
பத்தி
என்ன
தெரியும்
?”
“
எனக்கு
அவன்
வரலாறே
தெரியும்
.
அவன்
அர்ஜுன்
B.Tech
பைனல்
இயர்
.
அவனுக்குக்
கூடப்
பிறந்த
அண்ணனும்
,
ஒரு
தங்கச்சி
இருக்காங்க
.
அப்புறம்
அவங்க
அப்பா
ஒரு
பெரிய
கார்மென்ட்
பாக்டரி
அண்ட்
ஷோ
ரூம்
வச்சிருக்கார்
.
அவங்க
அம்மா
ஹவுஸ்
ஒய்ப்
.”
“
ஆமா
…
நீ
எதுக்கு
அவனைப்
பற்றி
இவ்ளோ
விஷயம்
தெரிஞ்சு
வச்சிருக்க
?”
“
சும்மாதான்
.
அவனை
நான்
காலேஜ்
திறந்த
முதல்
நாள்
அன்னைக்கே
பார்த்தேன்
.
அப்புறம்
அவனை
நம்ம
காலேஜ்ல
நிறைய
முறை
பார்த்திருக்கேன்
.
ரொம்ப
ஸ்மார்ட்
அப்புறம்
நல்ல
டைப்
.
எல்லோருக்கும்
உதவி
செய்வான்
.
ரொம்ப
ஆக்டிவ்
.”
மீரா
மடை
திறந்த
வெள்ளமாக
அர்ஜுனை
பற்றிச்
சொல்லிக்
கொண்டே
செல்ல
….
கீர்த்தனா
நடக்காமல்
அதே
இடத்தில்
நின்று
மீராவின்
முகத்தையே
பார்த்தாள்
.
ரொம்ப
உளறிட்டமோ
என்று
நினைத்த
மீரா
“
கான்டீன்
போலாமா
?”
என்றதும்
,
கீர்த்தனா
அவளோடு
நடந்தாள்
…
இருவரும்
கான்டீன்
சென்றபோது
அங்கே
மற்ற
தோழிகளும்
இருக்க
….
எல்லோரும்
சேர்ந்து
அரட்டை
அடித்துக்
கொண்டே
உண்டனர்
.
அப்போது
அர்ஜுன்
அவனின்
தோழர்களுடன்
அங்கே
வர
…
மீரா
மறைந்து
உட்கார்ந்து
கொண்டாள்
.
அர்ஜுனனும்
அவன்
நண்பர்களும்
கூல்
ட்ரிங்க்ஸ்
வாங்கி
அரட்டை
அடித்துக்
கொண்டே
குடித்தவர்கள்
.
வெளியே
இருந்த
காரிடாரில்
அவர்களுக்குக்
கிடைத்த
பரிசு
கோப்பையை
வைத்து
சுற்றி
நின்று
ஆட
….
அதை
எல்லோரும்
கைதட்டி
ரசித்தனர்
.
மற்ற
மாணவர்களும்
வந்து
சேர்ந்து
கொள்ள
…
கொஞ்ச
நேரம்
பாட்டாலும்
,
நடனத்தாலும்
அந்த
இடமே
அதிர்ந்தது
.
அவர்கள்
வெளியே
ஆட
…
இங்கே
மீரா
அவள்
தோழிகளுடன்
உள்ளே
ஆடிக்
கொண்டிருந்தாள்
.
ஆடி
களைத்தவர்கள்
மறுபடியும்
கான்டீன்
உள்ளே
வந்து
அமர்ந்தார்கள்
.
மீராவின்
தோழிகள்
கிளம்பலாமா
என்றதற்கு
,
இப்போது
சென்றால்
அர்ஜுனிடம்
மாட்டி
கொள்வோம்
என்று
நினைத்தவள்
,
இன்னும்
கொஞ்ச
நேரம்
கழித்துப்
போகலாம்
என்றாள்
.
“
அர்ஜுன்
…
ஈசியா
ஜெயிக்க
வேண்டிய
மேட்ச்
.
கடைசிப்
பந்து
வர
கொண்டு
வந்து
இப்படி
டென்ஷன்
பண்ணிட்டியே
…”
கூட்டதில்
ஒருவன்
கேட்க
.
“
ஏன்டா
சொல்ல
மாட்டீங்க
?
நீங்க
எல்லோரும்
அவுட்
ஆகி
போய்டுவீங்க
.
நான்
மட்டும்
நின்னு
ரன்
எடுக்கணும்
.
அதுவும்
இன்னைக்கு
ஒரு
பொண்ணு
நான்
அவுட்
ஆகணும்னு
சத்தமா
கத்தினாடா
.
அந்தக்
காலேஜ்
பொண்ணா
இருக்கும்
.
இருந்தாலும்
நம்ம
காலேஜ்
வந்திருக்கும்
போது
அப்படிக்
கத்த
தைரியம்
வேண்டும்
.
அவ
மட்டும்
நம்ம
காலேஜா
இருந்திருக்கணும்
,
நேரா
போய்
முகரைய
பேத்திருப்பேன்
.
தப்பிச்சிட்டா
…”
அர்ஜுன்
கையை
மடக்கி
காற்றில்
குத்த
…
அதைப்
பார்த்துக்கொண்டிருந்த
மீரா
….
போச்சு
இவன்
கைல
மாட்டினோம்
செத்தோம்
என்று
நினைத்தவள்
,
கீர்த்தனாவை
பார்க்க
…
அவ
உனக்கு
இது
தேவையா
என்பது
போல்
முறைத்துக்
கொண்டு
இருந்தாள்
.
மேலும்
சிறிது
நேரம்
அரட்டை
அடித்து
முடித்து
அர்ஜுனனும்
,
அவன்
நண்பர்களும்
கிளம்ப
…
மீராவும்
கிளம்பினாள்
.
தோழிகளிடம்
விடைபெற்றுக்
கார்
பார்கிங்
செல்ல
…
அங்கே
எதிரே
அர்ஜுன்
வந்து
கொண்டிருந்தான்
.
அவன்
பார்ப்பதற்கு
முன்
,
அருகில்
இருந்த
காரின்
பின்
சென்று
மறைந்தவள்
,
அவன்
முன்னே
வர
வர
காரை
மெதுவாகச்
சுற்றி
சென்றவள்
,
அவன்
பார்பதற்கு
முன்
சென்று
காரில்
ஏறினாள்
.
அர்ஜுன்
அவளைப்
பார்க்காமல்
பைக்கை
எடுத்துக்
கொண்டு
சென்றான்
.
அவன்
சென்றதும்
மீராவும்
அவள்
காரை
ஓட்டிக்கொண்டு
சென்றாள்
.
கல்லூரிக்கு
வெளியே
வந்த
அர்ஜுன்
,
அங்கே
நின்ற
தன்
நண்பனுடன்
வண்டியை
ஓரமாக
நிறுத்திவிட்டு
பேச
….
அப்போது
அவனைக்
கடந்து
ஒரு
கார்
சென்றது
.
யாரோ
என்று
அலட்சியமாகப்
பார்த்தவன்
,
அதிலிருந்த
மீராவை
பார்த்ததும்
,
இவதான
இன்னைக்கு
என்னைப்
பார்த்து
கத்தினா
?
இவ்வளவு
நேரம்
இங்க
என்ன
பண்ணா
?
என்று
யோசித்தவன்
…
திரும்பி
அவளைப்
பார்ப்பதற்குள்
,
அவள்
கார்
சென்றுவிட்டது
.
மீரா
நேராக
வீட்டிற்குச்
செல்லாமல்
…
வழியில்
இருந்த
கோவில்
முன்பு
காரை
நிறுத்திவிட்டு
,
வெளியில்
பொறி
விற்றுக்
கொண்டிருந்த
பையனிடம்
கொஞ்சம்
பொறியை
வாங்கினாள்
.
அவள்
அடிக்கடி
இந்தக்
கோவிலுக்கு
வருவதால்
,
அந்தப்
பையனுக்கு
அவளை
நன்றாகத்
தெரியும்
.
“
மீராக்கா
…
எப்பவும்
போலப்
பத்து
ரூபாக்கு
தானே
…”
என்றவன்
,
அவளிடம்
பொட்டணத்தைக்
கொடுக்க
.
அதை
எடுத்துக்
கொண்டு
கோவில்
குளத்தின்
கீழ்
படியில்
சென்று
அமர்ந்தாள்
.
அது
வழக்கமாக
அவள்
வரும்
நேரம்
என்பதால்
,
குளத்தில்
மீன்கள்
அவளுக்காகக்
காத்திருக்க
….
மீரா
பொறியை
நீரில்
தூவியதும்
,
அங்கிருந்த
மீன்கள்
ஆவலாகச்
சாப்பிட
…
மீரா
அதை
ரசித்துப்
பார்த்து
கொண்டிருந்தாள்
.
அங்கே
அரை
மணி
நேரம்
இருந்தவள்
,
பின்பு
அங்கிருந்து
கிளம்பி
தங்கள்
வீடு
இருக்கும்
பகுதியில்
உள்ள
சிறுவர்
பூங்காவுக்குச்
சென்றாள்
.
அங்கே
விளையாடும்
குழந்தைகளை
வேடிக்கை
பார்த்தவள்
,
சிறிது
நேரம்
அவளும்
குழந்தையாக
மாறி
,
அவர்களுடன்
விளையாடினாள்
.
குழந்தைகளின்
தாய்மார்கள்
மீரா
குழந்தைகளைப்
பார்த்து
கொள்வாள்
என்ற
நிம்மதியில்
அரட்டை
அடிக்க
….
ஒரு
மணி
நேரம்
கழித்து
மீரா
வீட்டுக்கு
கிளம்பினாள்
.
Advertising
Advertising