Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
உனக்குள் என் உயிரே 1 2
Post Views:
2,205
மீரா
வீட்டுக்குச்
செல்லும்
போது
மணி
எழு
.
இப்போதும்
அவளுக்கு
வீட்டுக்கு
செல்ல
இஷ்டம்
இல்லை
.
ஆனால்
இதற்கு
மேல்
அவளால்
வெளியே
இருக்க
முடியாது
.
அதனால்
வேறு
வழி
இல்லாமல்
தான்
சென்றாள்
ஏன்
?
அர்ஜுன்
வீட்டிற்குப்
பரிசு
கோப்பையுடன்
வந்ததும்
,
அவனது
அம்மா
வித்யா
அவனுக்குத்
திருஷ்டி
கழித்தே
உள்ளே
செல்ல
விட்டார்
.
“
அம்மா
,
உங்களுக்கே
இது
கொஞ்சம்
ஓவரா
தெரியலை
.
உங்க
பையன்
காலேஜ்ல
விளையாடி
கப்
வாங்கினதுக்கு
,
எதோ
IPL
ல
விளையாடி
ஜெயிச்ச
மாதிரி
பில்ட்அப்
குடுக்றீங்க
.
இது
ரொம்ப
த்ரீ
மச்
.
“
அர்ஜுனின்
தங்கை
ஆராதனா
பொய்யாகக்
கோபிக்க
….
“
நீ
சும்மா
இரு
.
உனக்கு
ஒன்னும்
தெரியாது
.
இன்னைக்கு
எல்லார்
கண்ணும்
,
அவன்
மேல
தான்
இருந்திருக்கும்
,
அதனால
தான்
த்ருஷ்டி
கழிச்சேன்
.”
என்றார்
வித்யா
.
“
அம்மா
,
இவளுக்குப்
பொறாமை
மா
….
அதுதான்
இப்படிச்
சொல்றா
.”
என்ற
அர்ஜுன்
தொடர்ந்து
,
“
நீ
இதுவரை
விளையாடி
ஜெயிச்சு
ஒரு
டீ
கப்பாவது
வாங்கி
இருக்கியா
ஆரு
,
நீ
எல்லாம்
இதைப்
பத்தி
பேச
கூடாது
.”
அவன்
தங்கையை
வம்பு
இழுக்க
.
“
நான்
எதுக்குப்
பிரதர்
வாங்கணும்
.
அதுதான்
எனக்கும்
நம்ம
அண்ணனுக்கும்
சேர்த்து
நீங்க
கப்பா
வாங்கி
வீடு
முழுக்கக்
குமிச்சி
வச்சுருக்கீங்களே
பத்தாதா
?
நாங்க
வேற
வாங்கனுமா
….
”
“
இன்னைக்கு
உங்க
காலேஜ்
பொண்ணுங்க
எல்லாம்
உங்களை
ரொம்ப
உற்சாகபடுத்தி
இருப்பாங்களே
,
ஒரே
மஜாவா
?”
ஆராதனா
கண்
சிமிட்டி
கேட்க
….
அர்ஜுனுக்கு
மீரா
சொன்ன
“
அர்ஜுன்
அவுட்
”
என்றது
நியாபகம்
வர
…
அவன்
முகத்தில்
புன்னகை
மலர்ந்தது
.
“
ஒரு
அண்ணன்காரன்கிட்ட
பேசுற
மாதிரியா
பேசுற
?
ரொம்ப
வாய்
உனக்கு
.
அவனுக்கு
இதெல்லாம்
பிடிக்காது
.”
என்று
வித்யா
தன்
மகளுடன்
சண்டைக்குச்
செல்ல
…
“
பாருங்க
ஒரு
நாள்
லவ்
பண்றேன்னு
வந்து
நிற்க
போறான்
.
அப்ப
தெரியும்
உங்களுக்கு
.”
என்றாள்
ஆராதனா
.
வித்யாவுக்கு
மேலும்
கோபம்
வர
“
பாருடா
அர்ஜுன்
எப்படிச்
சொல்றான்னு
.”
என்றார்
.
இதற்கு
முன்பு
ஆராதனா
இப்படிச்
சொல்லும்
போது
எல்லாம்
“
நான்
எங்க
அம்மா
சொல்ற
பொண்ண
தான்
கல்யாணம்
பண்ணுவேன்
.
”
என்று
சொல்லும்
அர்ஜுன்
,
இன்று
“
அவ
சும்மா
விளையாட்டுக்கு
சொல்றா
மா
விடுங்க
.”
என்றவன்
,
அவன்
அறைக்குள்
செல்ல
…
அவனை
வித்யாவும்
,
ஆராதனாவும்
ஆச்சர்யமாகப்
பார்த்தனர்
.
“
அம்மா
,
வாழ்த்துக்கள்
.
உங்களுக்குச்
சீக்கிரமா
சின்ன
மருமகள்
வந்திடுவா
போலிருக்கு
.”
ஆராதனா
வித்யாவை
சீண்ட
.
“
என்
பையன்
அப்படி
எல்லாம்
செய்ய
மாட்டன்
.”
என்றார்
வித்யா
அழுத்தமாக
.
“
எல்லா
அம்மாவும்
இப்படித்
தான்
அவங்க
பையனுங்களைப்
பற்றி
நினைப்பாங்க
.
ஆனா
பையனுங்க
கடைசியில
கல்தா
குடுக்கும்
போது
தான்
தெரியும்
.”
“
எனக்கு
அர்ஜுன்
பற்றித்
தெரியும்
.
அவன்
நான்
பார்க்கும்
பொண்ண
தான்
கல்யாணம்
பண்ணுவான்
.”
என்றார்
வித்யா
நம்பிக்கையாக
.
“
அவனுக்கு
வர
போற
மனைவியை
அவன்
தேர்ந்து
எடுக்கிறது
தப்பா
ஏன்மா
?
இன்னும்
பழைய
காலமாவே
இருக்கீங்க
.”
விடாமல்
ஆராதனா
வழக்கடிக்க
…
“
எனக்கு
அதெல்லாம்
தெரியாது
ஆரு
….
எனக்கு
என்
பையனுக்கு
வர்ற
பொண்டாட்டிய
நான்
தான்
தேர்ந்து
எடுக்கணும்
.
”
என்றவர்
,
“
எல்லாம்
உங்க
அப்பா
உங்களுக்குக்
கொடுக்கிற
இடம்
.
அது
தான்
நீ
இப்படிப்
பேசுற
.
அவர்தான
எப்பவும்
என்
பசங்க
விரும்பினா
,
நான்
கல்யாணம்
செஞ்சு
வைப்பேன்னு
சொல்றாரு
.
அதுதான்
உங்களுக்குத்
தைரியம்
.”
என்றார்
வித்யா
கடுமையான
குரலில்
.
“
அப்பாவ
…
எதுக்கு
மா
திட்றீங்க
?”
ஆராதனா
கேட்டுக்
கொண்டு
இருக்கும்
போதே
,
உள்ளே
வந்த
கணேசன்
“
உங்க
அம்மா
என்ன
இன்னைக்குத்
தான்
என்னைப்
புதுசா
திட்றாளா
?
அது
கல்யாணம்
ஆன
நாள்ல
இருந்து
தான்
திட்றா
.”
என்றவர்
,
ஆராதனா
அருகில்
சென்று
அமர்ந்தார்
.
“
இன்னைக்கு
என்
தலை
உருளும்
காரணத்தை
நான்
தெரிஞ்சிக்கலாமா
.”
என்று
அவர்
கேட்டுக்
கொண்டிருக்கும்
போதே
,
அர்ஜுனும்
அவர்
அருகில்
வந்து
அமர்ந்தான்
.
“
இல்லபா
….
என்
பசங்க
யாரையாவது
விரும்பினா
…
நான்
கல்யாணம்
பண்ணி
வைப்பேன்னு
நீங்க
சொன்னீங்கள்ள
,
அதுக்குத்
தான்
அம்மா
திட்றாங்க
.”
ஆராதனா
சொன்னதைக்
கேட்ட
கணேசன்
,
“
ஏன்
அதுல
என்ன
தப்பு
?
என்
பசங்களுக்கு
நான்
நல்லது
கெட்டது
சொல்லி
தந்து
வளர்த்திருக்கேன்
.
அவங்க
எதையும்
யோசிச்சு
தான்
செய்வாங்க
.
அவங்களுக்கு
அறியாத
பருவத்தில்
வரும்
பப்பி
லவ்வ
அவங்க
கடந்திட்டாங்க
.
அவங்களுக்கு
இப்ப
விவரம்
தெரியும்
.
கல்யாணம்கிறது
ஒரு
வழி
பாதைன்னு
அவங்களுக்குத்
தெரியும்
.
இனி
அவங்க
யாரையாவது
விரும்பினா
….
அவங்க
நல்லா
யோசிச்சு
தான்
முடிவு
எடுப்பாங்க
.
எனக்கு
என்
பிள்ளைங்க
மேல
நம்பிக்கை
இருக்கு
.”
என்றார்
.
“
இப்படிப்
பேசி
பேசியே
பசங்களைக்
கெடுங்க
.”
வித்யா
சலித்துக்
கொள்ள
…
“
ஏன்
நம்ம
முதல்
பையன்
ஆதிகிட்டையும்
நான்
இதே
தான்
சொன்னேன்
,
அதுக்காக
அவன்
லவ்
பண்ணிட்டானா
?
அவனுக்கு
உன்னைத்
தான
பெண்
பார்க்க
சொல்லி
இருக்கான்
.
”
“
நாம
நம்ம
விருப்பத்தை
அவங்க
மேல
திணிக்காமல்
,
அவங்களுக்குத்
தேவையான
சுதந்திரம்
கொடுத்தா
…
அவங்களும்
நிதானமா
யோசிச்சு
தான்
முடிவு
எடுப்பாங்க
.”
என்றார்
கணேசன்
விளக்கமாக
.
“
எனக்கு
இதெல்லாம்
சரி
வரும்னு
தோணலை
பசங்களுக்கு
என்ன
தெரியும்
?
அவங்க
தேர்ந்தேடுக்கிறவங்க
குடும்பத்துக்கு
ஒத்து
வருவாங்களா
?
நல்லவங்கலான்னு
அவங்களுக்குப்
பார்க்க
தெரியுமா
?”
வித்யா
தன்
குமுறலை
கொட்ட
…
“
அவங்களுக்குத்
தங்களோட
வாழ்க்கை
துணையை
சரியா
தேர்ந்து
எடுக்கத்
தெரியலைனா
,
அது
அவங்க
தப்பு
இல்லை
,
நம்ம
தப்பு
தான்
.
”
பெத்தவங்க
தான்
பிள்ளைங்களுக்கு
வழி
காட்டனும்
.
பாசம்
வச்சு
,
சாப்பாடு
போட்டு
அவங்க
கேட்கிறதை
வாங்கிக்
கொடுக்கிறது
மட்டும்
பெத்தவங்க
கடமை
இல்லை
.
பிள்ளைங்களுக்கு
நல்ல
விஷயங்களைச்
சொல்லி
கொடுத்து
வளர்கிறதும்
பெத்தவங்க
கடமை
தான்
.
”
“
அவங்களுக்கு
யாரு
நல்லவங்க
,
யாரு
கெட்டவங்கன்னு
கூடக்
கண்டு
பிடிக்கத்
தெரியலைனா
…
நாம
அந்த
லட்சணத்தில
அவங்களை
வளர்திருக்கோம்னு
அர்த்தம்
.”
என்று
கணேசன்
சூடாகப்
பதில்
கொடுக்க
.
பதிலுக்கு
வித்யாவும்
பேச
ஆரம்பிக்க
,
அர்ஜுன்
இருவருக்கும்
குறுக்கே
வந்து
, “
நம்ம
வீட்ல
நாங்க
யாரும்
இன்னும்
லவ்
பண்ணலை
.
அப்புறம்
ஏன்
நீங்க
ரெண்டு
பேரும்
சண்டை
போடறீங்க
?
அதை
அப்ப
பார்க்கலாம்
.”
என்றதும்
,
வித்யா
எழுந்து
உள்ளே
சென்றார்
.
கணேசனும்
எழுந்து
அவர்
அறைக்குச்
செல்ல
…
அர்ஜுனும்
,
ஆராதனாவும்
படிக்க
உட்கார்ந்தனர்
.
இரவு
உணவிற்குப்
பிறகு
வித்யா
டிவி
சீரியல்
பார்க்க
உட்கார்ந்து
விட
…
மற்ற
நான்கு
பேரும்
வெளியே
தோட்டத்துக்குச்
சென்று
பேச
ஆரம்பித்தனர்
.
அது
அவர்கள்
வீட்டில்
வழக்கமாக
நடப்பது
தான்
.
தங்கள்
அப்பாவிடம்
அன்று
நடந்ததைச்
சொல்லவில்லை
என்றால்
மூன்று
பேருக்குமே
தலை
வெடித்துவிடும்
.
கணேசனும்
பிள்ளைகளிடம்
நண்பனை
போல்
பழகுவார்
.
“
அப்பா
,
நான்
இந்தத்
தடவை
அல்ஜிப்ரா
பேப்பர்ல
அரியர்
தான்
.
அந்த
ப்ரொபஸர்
சொல்லி
தர்றது
ஒண்ணுமே
புரியலை
.
இதுல
பாதிக்
கணக்கை
மட்டும்
அவர்
போட்டு
,
மீதிய
எங்களைப்
போட
சொல்லிட்டு
என்
பின்னாடி
வேற
வந்து
நிற்கிறார்
.
”
“
நான்
தினமும்
புது
,
புதுப்
பக்கமா
திருப்பி
….
என்னோட
நோட்டல
நான்
ஒரு
பக்கம்
மட்டும்
தான்
எழுதி
இருக்கேன்
.
இன்னொரு
பக்கம்
காலியாவே
இருக்கு
.
என்னால
முடியலை
…”
ஆராதனா
அபிநயத்தோடு
சொல்ல
…
ஆதியும்
அர்ஜுனனும்
விழுந்து
விழுந்து
சிரித்தனர்
.
கணேசனும்
சிரித்துக்
கொண்டே
‘”
உனக்கு
ரெண்டு
அண்ணன்களை
வச்சிக்கிட்டு
கவலைபடலாமா
ஆரு
.”
என்றவர்
,
தன்
மகன்களிடம்
அவளுக்குச்
சொல்லி
தர
சொல்ல
….
“
அப்பா
,
நான்
படிச்சதெல்லாம்
மறந்திட்டேன்
.
அர்ஜுனை
சொல்லி
தர
சொல்லுங்க
.”
என்றான்
ஆதி
.
அதற்கு
அர்ஜுன்
“
சரி
,
ஆனா
…
பீஸ்
ஒழுங்கா
குடுத்திடனும்
.
அப்ப
தான்
சொல்லி
தருவேன்
.”
என்றான்
கேலியாக
.
அடுத்து
ஆதி
தங்கள்
ஷோ
ரூமில்
இன்று
வாடிக்கையாளர்
ஒருவர்
செய்த
கலாட்டாவை
சொன்னான்
.
“
ஆதி
,
கஸ்டமர்
அப்படித்
தான்
பேசுவாங்க
,
பொறுமைய
மட்டும்
எப்பவும்
விட்டுடாத
.
அவங்களிடம்
அவங்களுக்கு
எத்த
மாதிரி
பேசி
,
துணியை
வாங்க
வைக்கிறதுல
தான்
நம்ப
வியாபார
திறமை
இருக்கு
.
அதை
மட்டும்
மறந்திடாத
.”
கணேசன்
மகனுக்குப்
பாடம்
சொல்ல
,
அதை
ஆதியும்
அக்கறையாகக்
கேட்டுக்
கொண்டான்
.
அர்ஜுன்
எதோ
யோசனையாக
இருக்க
,
அவனைப்
பார்த்து
ஆதி
“
என்னடா
யோசிக்கிற
?”
என்றதும்
,
இன்று
மீரா
…
அவனைப்
பார்த்து
அவுட்
என்று
கத்தியதை
சொன்னான்
.
உடனே
ஆதியும்
,
ஆருவும்
கதை
சூப்பரா
இருக்கே
மேல
சொல்லு
என்றனர்
.
“
அவ
எங்க
காலேஜ்
இல்லை
.
அவளை
நான்
இதுக்கு
முன்னாடி
பார்த்ததும்
இல்லை
.
இனி
பார்க்க
போறதும்
இல்லை
.
அதனால
தேவை
இல்லாம
நீங்க
ரெண்டு
பேரும்
ரொம்ப
யோசிக்காதீங்க
.”
என்றான்
அர்ஜுன்
பட்டென்று
.
“
அதை
நீ
இப்பவே
முடிவு
பண்ணாத
அர்ஜுன்
.
அவளை
நீ
பார்க்கனும்னு
விதி
இருந்தா
கண்டிப்பா
பார்ப்ப
.”
என்றார்
கணேசன்
.
“
ஆளு
பார்க்க
எப்படி
இருந்தா
?
அதைச்
சொல்லுங்க
பிரதர்
.”
ஆரு
ஆர்வமாக
.
“
தூரத்தில
இருந்து
தான்
பார்த்தேன்
.
சரியா
தெரியலை
.
ஆனா
நல்லா
தான்
இருந்தா
.”
என்றான்
.
அர்ஜுன்
சொன்ன
பதிலை
கேட்டு
எல்லோரும்
சிரிக்க
….
ஆதியும்
,
ஆருவும்
ஒருவரை
ஒருவர்
பார்த்துக்
கண்சிமிட்டி
கொண்டனர்
.
மறுநாள்
கல்லூரியில்
வந்து
வண்டியை
நிறுத்திய
அர்ஜுனுக்கு
,
மீராவின்
நினைவு
வந்தது
.
அவள்
ஒரு
வேலை
இந்தக்
கல்லூரியாக
இருப்பாளோ
என்று
சந்தேகம்
தோன்ற
….
அங்கே
நின்ற
கார்களில்
நேற்று
பார்த்த
பச்சை
கலர்
செவ்ரோலட்
எங்கையாவது
தென்படுகிறதா
என்று
பார்த்தான்
.
அங்கே
அந்தக்
கார்
இல்லை
.
சரி
பிறகு
பார்த்துக்கலாம்
என்று
அங்கிருந்து
சென்றான்
.
அர்ஜுனுக்குத்
தெரியாது
.
மீராவுக்கென்றே
அவள்
வீட்டில்
மூன்று
கார்கள்
இருப்பதும்
,
அதனால்
அவள்
இன்று
கருப்பு
நிற
ஸ்விப்டில்
வந்ததும்
.
Advertising
Advertising