என்று அவள் கவனத்தை திசை திருப்ப அது கொஞ்சம் வேலை செய்தது. அவனிடம் இருந்து விலகி கண்களை துடைத்து கொள்ள,
“போகலாம்.. வா..” என்று அவள் கை பற்றி மறுக்கையில் அவள் பேகையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தன் பைக் நிறுத்திருந்த இடத்திற்கு அழைத்து சென்றான்.
அவள் ஏறியதும் வண்டி சாலையில் வேகமெடுக்க,
“எங்க போறோம் இப்ப..”
என்றாள் தயக்கமாய்..
“மனோஜ் வீட்டுக்கு.. நான் இப்ப உடனே மறுபடியும் வீட்டுக்கு போகணும் சக்தி.. அதான் உன்னை அங்க ட்ரோப் பண்ணிட்டு போலாம்னு நினைச்சேன்.. நீ சந்தியாவோட இரு.. நான் ஃபங்ஷன் முடிஞ்சதும் வரேன்.. அப்புறம் என்ன செய்யலாம்னு யோசிப்போம்..”
என்று அவன் சொல்வதே சரியென்று
தோன்றியது.
“ம்ம்ம்..” என்றவள் நினைவு வந்தவளாய்,
“நான் காலேஜ் போகாதது எல்லாம் எப்படி தெரியும்..” என கேட்க
“உன்கிட்ட ஒரு வாரமா எந்த ரெஸ்பான்ஸும் இல்லாம ஊருக்கும் வர முடியாம ரொம்ப கஷ்டமாகிடுச்சு.. கெளதமோட நம்பர் காலைல தான் கிடைச்சுது.. அவர் தான் விசாரிச்சு சொன்னார்.. உங்க அம்மா வரையும் போயாச்சு.. அவங்க எங்களுக்கு மேல பதறி போலீஸ் வரையும் யோசிச்சிட்டாங்க..”
என்றான் ஆரியன்..
“போலீஸ் ஆஹ்.. ஐயோ… அவங்களுட்ட ஏன் கேட்க சொன்ன…”
என்று அவள் கேட்கவும் காண்டானவன்,
“அப்புறம்… உன் காணாம வேற எங்க போய் கேட்க சொல்ற.. வீட்ல தேடுவாங்கன்னு நினைப்பு வேணாம்.. பாவம் கௌதம் காலைல இருந்து உன்னை ஊரெல்லாம் தேடி அலைஞ்சார்.. நீ இதுக்கு எல்லாம் துணிய மாட்டியே..! அதுவும் நீ ஒரு லெக்ட்டரர்.. நீயே இப்படி பொறுப்பில்லாம செய்யலாமா சக்தி..”
என திட்டிவிட அதற்கு பதில் சொல்லாமல்,
“கெளதம்ட்ட நான் இங்க வந்ததை சொல்லிட்ட தானே..”
என்று கேட்கவும்,
‘கொழுப்புடி உனக்கு..’ என பல்லை கடித்தவன்
“சொல்லியாச்சு.. உங்க அம்மா கிட்ட நீ சந்தியாவை பார்க்க இங்க வந்திருக்கிறதா கௌதமை சொல்ல சொல்லி இருக்கேன்..”
என்று முறைப்போடு சொல்லி அமைதியாகிவிட சில நிமிடங்களுக்கு மேல் அவளால் அந்த அமைதியை தொடர முடியவில்லை.
என்று அவள் சொல்லவும் வண்டியை சட்டென்று நிறுத்தியவன் அதிர்ச்சியாய் திரும்பி அவள் முகம் நோக்க ஆரியனின் பார்வையை தவிர்த்து,
“நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. நான் சொல்றதை மட்டும் கேளேன்.. ப்ளீஸ் பைக்கை ஸ்டார்ட் பண்ணு..”
என்று சொல்லி அவன் முதுகில் முகம் புதைத்து சாய்ந்துவிட இன்னமும் அதிர்ச்சியில் மீளாதவனாய் மெல்ல வண்டியை இயக்கினான்.
விஷாகன் – யாமினியிடம் பேசியது கூட இல்லை தான்.. ஆனால் சக்தி வழியே அவர்களை பற்றி நிறையவே தெரியும் என்பதால் அவனாலே அதனை தாங்க முடியவில்லை. அதைவிட அவனின் கண்மணிக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கவே வலித்தது.
“அப்பா வேற கல்யாணம் பண்ணிக்க போறாராம்… அவர் வாழ்க்கைல அவருக்குனு ஒரு துணை வேணுமாம்.. உங்க அம்மா எப்பவும் மாறமாட்டாள்.. அதான் நான் மாறிட்டேன்னு அவரே என்கிட்ட வந்து சொல்றார்.. அம்மாவுக்கும் அதுல எந்த ஆட்சேபனையும் இல்லை.. போனா போங்கன்னு இருக்காங்க.. இதுல இவங்க ரெண்டு பேர் வாழ்க்கையிலும் நான் எந்த இடத்தில் இருக்கேன்னு தான் சத்தியமா புரியல ஆர்யா..”
விவாகரத்து என்ற வார்த்தையின் அதிர்ச்சியில் இருந்தே மீள முடியாமல்
கோபம், ஆற்றாமை, ஏமாற்றம், வெறுப்பு எல்லாம் அவளை தன்னிலை இழக்க செய்ய கையில் கிடைக்கும் பொருளின் மீதெல்லாம் அதனை காட்டினாள்.
விளைவு.. ஒரு இரவிலே அறை ஆலங்கோலமாக உடைந்த பொருட்களில் ஒன்றாய் அவளின் அலைபேசியும் பரிதாபமாய் கிடந்தது.
கதவை தட்டி தட்டி திறக்க முயன்றவர்களையும்,
‘லீவ் மீ அல்லோன்..’ என கத்திவிட்டாள். தனக்கு மட்டும் ஏன் இப்படி என்ற சுயபட்சாதாபம் ஆவேசமாய் மாறியது.
அப்படி முதல் நாள் மூர்க்காமாய் நடந்து கொண்டவள் மறுநாளில் இருந்து அமைதியாய் அறையிலே அடைந்து கிடக்க விஷாகானும் யாமினியும் அவளிடம் பேச எடுத்த முயற்சிகள் எதுவும் அவளின் மௌனத்தை கலைக்கவில்லை.
அவர்களின் வகையான சமாதானம் எல்லாம் அவளை மேலும் காயத்தை மட்டும் தான் கொடுக்கிறது என்று யார் சொல்லி புரிய வைப்பது..?
‘எங்க லைஃப்.. இது எங்க முடிவு சக்தி.. உனக்கு பிடிக்கலை என்றாலும் அதை நீ ஏத்துக்க தான் வேணும்.. ஒப்புக்காக இருக்கும் இந்த உறவு இல்லாமலே போறதில் எந்த தப்பும் இல்ல.. இதை எல்லாம் நினைச்சு நீ இப்படி இருக்கிறது சரியில்லை சக்தி.. இதுக்காக காலேஜ், மியூசீக் பேண்ட்
எல்லாத்தையும் விட்டுட்டு உட்கார்ந்து இருக்கிறது முட்டாள்தனம்.. ‘
என வழக்கமான கணினி குரலில் யாமினி பேசினார் என்றால்,
“என்னோட தனிப்பட்ட பிரச்சனையில் உன்னை அப்படியே விட்டு விடுவேன்னு நினைக்காத சக்தி.. உன் கூடவே இல்லை என்றாலும் உன்னை யோசிக்காம இருந்தது இல்லை.. இந்த முடிவுக்கு வரும் முன்னாடியே உன்னை ஒரு நல்லவனிடம் சேர்த்த பிறகு தான் ஆஃபிஸிலா நாங்க பிரிவோம்.. உனக்கு மாப்பிள்ளை கூட பார்த்துட்டேன்… என் ஃப்ரெண்டு பையன்.. பேமஸ் கார்டியலஜிஸ்ட்..”
என்று விஷாகன் அவளை திருமணம் செய்து கொடுக்கும் முடிவுடன் பேச இங்கே அவளின் விருப்பமும் கருத்தும் கேட்க படாமலே அவர்களுள் சண்டை தொடங்கியது.
“யாரை கேட்டு அவளுக்கான லைஃப் பார்ட்னரை நீங்க சூஸ் பண்ணீங்க.. உங்க சாய்ஸ் கண்டிப்பா உங்களை மாதிரி தான் இருப்பான்.. அப்படி ஒரு வாழ்க்கை அவளுக்கு தேவை இல்லை.. சக்திக்கு எப்போ கல்யாணம் பண்ணனும்.. எப்படி பண்ணனும்னு எனக்கு தெரியும்…. உங்க வழியை பார்த்து நீங்க கிளம்பலாம்..”
என்று சீற்றமாய் யாமினி சொல்ல,
“நான் சரியில்லை.. நீ ரொம்ப சரியா இருக்கிறதா நினைப்பா.. அவ எனக்கும் பொண்ணு தான் யாமினி.. உன்னை நம்பி எல்லாம் அவளை விட்டுட்டு போக முடியாது.. அவளுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சுட்டு தான் நான் போவேன்.. அதுவரை இங்க தான் இருப்பேன்..”
என்று அவரும் பதிலுக்கு பேச அதன்பின் வார்த்தைகள் முற்றி ஒருவரை ஒருவர் சாடுவதை அவளால் காது கொடுத்து கேட்க முடியவில்லை.
சிறு வயதில் கூட அவர்கள் இவ்வளவு சண்டை போட்டு பார்த்தது இல்லை. இப்பொழுதோ வார்த்தைக்கு வார்த்தை குத்தி கிழிக்க மென்மையான மனம் கொண்ட பென்னவளுக்கு இத்தகைய காட்சி எல்லாம் மூச்சை முட்டுவது போல் இருக்க அங்கிருந்து தப்பித்தால் போதும் என சக்தி உள்ளம் எண்ண தொடங்கியது. அதன் விளைவே அவளை சிறுதும் யோசிக்காமல் ஆரியனிடம் வர வைத்தது.
“கொஞ்ச நாளாவே என் மனசு எதிலுமே ஒரு பிடிப்பு இல்லாமல் விரக்தியாவே இருக்கு.. யாருக்குமே நான் முக்கியம் இல்லையோனு.. உனக்கு கூட நான் சலிச்சு போயிட்டதா.. என்ன என்னவோ சிந்தனை..!! இதில் இப்ப நடக்கிற இதெல்லாம் சேர்த்து எங்க எனக்கு வாழவே வெறுத்துடுமோ பயமா இருக்கு டா.. நான் நானாவே இல்ல..”
அவள் கண்ணீரின் ஈரம் அவன் சட்டையை தாண்டி அவனை தீண்ட மென் குரலில் முணுமுணுப்பாய் தன் போக்கில் அனைத்தையும் ஒப்புவித்தாள். தங்கள் சுற்றமோ, என்ன பேசுகிறோம் என்ற கவனமோ எதுவும் இல்லை அவளிடத்தில்..!!
தன் மனதில் உள்ளதை கொட்டினால் போதும் என்பதுபோல் பேசிக் கொண்டே வர அவற்றை கேட்க கேட்க அவனுக்கு தான் நெஞ்சில் பாரம் ஏற தடுமாற்றமின்றி வண்டியை ஓட்டி வந்ததே ஆச்சரியம் தான்.
சந்தியா வீடு வந்ததும் இறங்கிய சக்தி கண்களை துடைத்து கொண்டு,
“நீ போயிட்டு வா ஆர்யா.. உன்னை பார்த்து உன்கிட்ட பேசுனதே எனக்கு பெரிய ரிலீப்பா இருக்கு.. இதுக்கு மேல எனக்கு எதுவும் வேண்டாம்.. நீ எதை பத்தியும் யோசிக்காம போ.. நீ கெளதமிடம் சொன்னது போல நான் சந்தியாவை பார்க்க வந்ததாவே இருக்கட்டும்..”
என புன்னகையாய் கூறி இத்தனை நேரம் சிறு பிள்ளையாய் அவனிடம் அழுது புலம்பியவள் இவள் தானா என நம்மை யோசிக்க வைத்தாள். இருப்பினும் அழுகையின் சுவடாய் அந்த புன்னகையிலும் ஒரு சோர்வு இருந்தது.
அத்தனையும் உணர்ந்து அவளையே இமைக்காமல் சில நொடிகள் நோக்கியவன் எதுவும் சொல்லாமல் சிறு தலையசைப்போடு அங்கிருந்து புறப்பட்டான்.
எல்லாவற்றையும் சொல்லிய பின் அவள் சற்று தெளிவாகிவிட ஆரியனோ மிகுந்த யோசனைகளுள் ஆளானான். சக்தி கூறியது போல் இதனை அப்படியே விட்டுவிட எல்லாம் அவனால் முடியாது. அவளின் ஒவ்வொரு சொல்லும் முள்ளாய் அவனை தைக்க இந்த பிரச்சனையை எப்படி கையாளவது.. என்ன செய்து அவளை மீட்பது என்று பல சிந்தனைகளோடு வீட்டை அடைந்தான் அங்கே அவனுக்கு காத்திருக்கும் அடுத்த தாக்குதலை அறியாமல்..!!
இங்கோ சக்தியை கண்டதும் வரவேற்று உள்ளே அழைத்து சென்றாள் சந்தியா. கல்லூரியில் அவளின் கிளாஸ்மேட் மற்றும் ரூம்மேட்..!! ஆரியன் தவிர சக்தியை பற்றி முழுதும் அறிந்த மற்றோரு ஜீவன் என்றால் அது சந்தியா தான்..!!
தயக்கமாய் வீட்டை பார்த்தப்படி வந்தவளை,
“முழிக்காதீங்க மேடம்.. வீட்ல நான் மட்டும் தான் இருக்கேன்…” என்றதும் கொஞ்சம் நிம்மதியாக தான் இருந்தது. அவர்கள் வீட்டினர் வேறு யாரும் இருந்தால் எதாவது விசாரிக்கும்போது சங்கடமாய் இருக்கும் என்பதே காரணம்..!!
“உட்காருங்க.. குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்..”
என விறைப்போடே சந்தியா சொல்லி நகர அப்பொழுது தான் அவளை நன்றாக கவனித்த சக்தி போக போனவளின் கையை பற்றி,
“ஏன்டி ஒரு மாதிரி பேசுற.. கோபமா என்ன..”
என்று கேட்க இன்னும் முறைத்து,
“நான் ஏன் ம்மா கோபப்படணும்.. உங்களுக்கு எல்லாம் எங்க நியாபகம் கூட இருக்காது.. அவ்வளவு வேறையா போயிட்டோம்..”
என நொடித்து கொள்ளவும் பாவமாய் முழித்தாள்.
அதில் தானே இறங்கி,
“மனோஜ் கால் பண்ணி சொன்னபோது எனக்கு ஒன்னுமே புரியல.. ஏதோ பிரச்சனைணு கோவிச்சுட்டு வீட்டை விட்டு நீ வந்துட்டதா ஆரியன் அண்ணா சொல்லி,
‘தங்கச்சி ஃபங்ஷன் போயிட்டு இருக்கு.. என்ன பண்றதுனு தெரியல.. உங்க வீட்ல விடவானு..’ அவ்வளவு தயங்கி கேட்டாராம்.. மனோஜ் சொல்லி வருத்தப்பட்டார்.. அதுவாச்சும் அவர் கேட்டார்.. ஆனால் உனக்கு இவ்வளவு தூரம் வந்தும் கூட எங்க நினைப்பு வரலை தானே.. பிரண்ட்ஷிப் எல்லாம் காலேஜ் வரையும் தான்ல..”
அவளின் கணவன் மனோஜூம் இவர்களின் சீனியர் தான். அதுவும் சக்தியை தன் உடன்பிறந்தவள் போல் பார்த்துக் கொள்வான்.. அதுவே சந்தியாவை ஆதங்கமாய் கேட்க வைத்தது.
“அப்படி எல்லாம் இல்ல சந்து.. நானே ரொம்ப குழப்பத்துல இருந்தேன்டி.. எனக்கு எதுவுமே யோசிக்கிற நிலைமைல இல்ல.. இன்னைக்கு மேக்னா எங்கேஜ்மெண்ட்ணு கூட யோசிக்காம இப்படி ஆரியனை இக்கட்டில் விடுவேனா சொல்லு..”
சக்தி சொல்வதின் உண்மை புரிய ‘என்ன பிரச்சனை’ என கேட்க நினைத்தவள் பின் ஏற்கெனவே நொந்து இருப்பவளை கேள்வி கேட்டு துளைக்க வேண்டாம் என்று,
“சரி.. நம்புறேன்..” என்றவள்,
“ரொம்ப டையர்டா தெரியுற.. எதாவது சாப்பிட்டு அப்புறம் பேசலாம்..”
என்று ஆதூரமாய் சொல்லி எழுந்துக்கொள்ள,
“ஹே.. நானும் வரேன்… இரு..”
என தானும் உடன் வந்தாள்.
“வீடு நீட்டா ரொம்ப அழகா இருக்குடி..”
சுற்றி பார்த்தப்படி சக்தி சொல்ல புன்னகைத்தவள்,
“இருக்காதா பின்ன.. மைண்டனன்ஸ் முழுக்க என்னோட டிபார்ட்மென்ட் ஆச்சே..”
என்றாள்.
“பார்றா.. அப்போ அஃமார்க் குடும்ப பெண் ஆகிட்ட போலையே.. சரி.. எங்க அண்ணனை நல்லா பார்த்துகிறியா..”
“நியாயமா.. இந்த கேள்வியை உங்க அண்ணன் கிட்ட தான் நீ கேட்கணும்.. என்னை நல்லா பார்த்துக்கிறாரான்னு..”
“அவ்வளவு அடம்பிடிச்சு உன்னை கல்யாணம் பண்ணிக்க உன்கிட்டயே போராடி கைபிடிச்சார்.. அதெல்லாம் மனோஜ் அண்ணா தங்கமா தாங்குவார்னு தெரியுமே..? ஸோ கேள்வி உனக்கு தான்..”
என்று கிண்டலாய் சக்தி சொல்ல,
“கொழுப்பு தான்டி உனக்கு..” என
சொன்னாலும் அவளுக்கும் சிரிப்பு தான் வந்தது. நீண்ட நாட்கள் சென்று
சந்தித்து கொள்ளும் தோழிகளுக்கு பேச்சிற்கா பஞ்சம்..? அதில் மற்ற சிந்தனைகள் கூட சற்று பின்னால் சென்றது.
வீட்டிற்கு திரும்பிய ஆரியனை ‘எங்கே காணாமல் போனாய்..?’ என எதிரப்பட்ட உறவுகள் எல்லாம் கேட்க சலிக்காமல் அனைவருக்கும் ஒட்ட வைத்த புன்னகையோடு பதில் சொல்லி வந்தவன் பந்தியை கவனிக்க சென்றுவிட அதன்பின் நிற்க நேரமில்லை அவனுக்கு..
இடையில் தந்தையிடம் ஏதோ கேட்டு போனபோது அவர் எதுவும் சொல்லாமல் ஒரு முறைப்போடு அவனை தாண்டி சென்றுவிட ‘என்னாச்சு அப்பாக்கு..’ என திகைத்து விழித்தான். அதன் பின்னரே அவரை ஊன்றி கவனிக்க காலையில் இருந்த மலர்ச்சி எங்கோ சென்றிருக்க மனிதர் இறுக்கமாவே திரிய காரணம் அறியாமல் குழம்பியவனுக்கு கொஞ்ச நேரத்தில் ரம்யா வழி பதில் கிடைத்தது.
“அம்மா… ம்மா.. நில்லும்மா.. ஏன் அப்பா ஒரு மாதிரி இருக்கார்.. நீயும் என்கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்ங்கிக்கிற.. என்ன நடந்துச்சு..”
தான் இல்லாத போது எதுவும் இங்கே நடந்து இருக்குமோ என்ற ரீதியில் அவன் கேட்க அவனை உறுத்து நோக்கி,
“எங்கடா போன நீ..”
என்றார் சீற்றமாய்..
“ஏன் ம்மா.. ஆபீஸ் சமந்தமா சின்ன வேலைனு சொல்லிட்டு தானே போனேன்..”
என்று அவன் சொல்லவும் சட்டென்று கண் கலங்கியவர்,
“இந்த மாதிரி எத்தனை பொய்டா சொல்லி இருப்ப..”
என்று சொல்ல அவனுக்கோ திக்கென்று ஆனது.
“ம்மா.. என்னம்மா கண் எல்லாம் கலங்கிட்டு..”
என்று அவன் பதற,
“நீ செஞ்சு வைச்சு இருக்கும் வேலைக்கு.. சந்தோஷமா பட முடியும்.. கொஞ்ச நேரம் முன்னாடி ராஜு மாமா போன் பண்ணி சொல்றார்.. ஸ்டேஷன் பக்கம் உன்னை ஏதோ ஒரு பொண்ணு கூட பைக்ல பார்த்ததா..! வீட்ல விஷேசம் இருக்கும் போது உன்னை அப்படி பார்க்கவும் என்ன ஏதுனு விசாரிக்க கூப்பிட்டாராம்.. தேவையாடா இந்த பேச்சு எல்லாம்.. உன்கிட்ட இதை எதிர்பார்க்கல ஆர்யா..”
என்றார் கோபமும் ஆற்றாமையுமாய்..
பைக்கில் பார்த்ததாய் கூறியது, அதுவும் அவள் அவன்மீது கவிழ்ந்து அழுது புலம்பி வந்தது பார்ப்பவருக்கு எப்படி தோன்றி இருக்கும், என்ன சொல்லி இருப்பார் என்பது எல்லாமே நொடியில் விளங்கிவிட எங்காவது போய் முட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது.
இருந்து.. இருந்து இத்தனை வருடம் கழித்து இப்படியா இவர்கள் காதல் விஷயம் வீட்டிற்கு தெரியவேண்டும்..!!
அம்மாவும் அப்பாவும் என்ன நினைத்து இருப்பார்கள் என்று நினைத்தாலே மிகுந்த வருத்தமாய் இருந்தது.
“அம்மா.. இல்லம்மா..”
அவன் எதுவும் சொல்லும்முன் தடுத்து,
“நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்.. போ இங்கிருந்து… முதல்ல விருந்தாளிங்க எல்லாம் போகட்டும்.. இருக்கு உனக்கு..”
என எச்சரிக்கை விடுத்து சென்றுவிட திகைப்பில் விழித்து நின்றான்.