Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
உனக்குள் என் உயிரே 2
Post Views:
1,692
உனக்குள்
என்
உயிரே
அத்தியாயம்
2
ஒரு
வாரம்
வரை
அர்ஜுன்
மீராவை
சந்திக்கவில்லை
.
ஆனால்
மீரா
தூரத்தில்
இருந்து
அவனைப்
பார்த்துக்
கொண்டு
தான்
இருந்தாள்
.
அவன்
கண்களில்
மாட்டக்
கூடாது
என்று
கவனமாக
இருந்தாள்
.
அர்ஜுன்
வெள்ளிக்கிழமை
அன்று
கல்லூரியில்
இருந்து
வந்ததும்
,
அவனது
அம்மா
“
இன்னைக்குப்
பிரதோஷம்
கோவிலுக்குப்
போகணும்
,
கூட
வரியா
?”
என்று
கேட்க
,
அர்ஜுனும்
சரி
என்று
அவன்
அம்மாவை
அழைத்துக்
கொண்டு
கோவிலுக்குச்
சென்றான்
.
கோவிலை
சுற்றிவிட்டு
குளத்தின்
படிக்கட்டில்
சென்று
அமர்ந்தனர்
.
அப்போது
அர்ஜுன்
எதிர்புறம்
பார்க்க
,
அங்கே
மீரா
…
குளத்தின்
படிக்கட்டில்
அமர்ந்து
மீனுக்கு
எப்போதும்
போல்
பொறியை
போட்டுக்
கொண்டு
இருந்தாள்
.
அர்ஜுன்
அவளைப்
பார்த்ததும்
,
அவளிடம்
ஓட
துடித்த
கால்களை
…
பக்கத்தில்
அவன்
அம்மா
இருந்ததால்
அடக்கி
கொண்டு
,
அவளையே
பார்த்துக்கொண்டிருந்தான்
.
மீரா
எழுந்து
கோவில்
உள்ளே
சென்று
ஒரு
நிமிடம்
மட்டும்
கண்ணை
மூடி
நின்றவள்
,
அடுத்த
நிமிடம்
வெளியே
சென்றுவிட
,
அர்ஜுன்
அச்சோ
…
இப்படிப்
பார்த்தும்
விட்டுட்டோமே
என்று
நொந்தான்
.
ஞாயிறு
கிழமை
மீராவும்
கீர்த்தனாவும்
புரசைவாக்கத்தில்
உள்ள
ஷாப்பிங்
மாலில்
சுற்றிக்
கொண்டு
இருந்தனர்
.
அப்போது
மீரா
மூன்றாம்
தளத்தில்
இருந்து
கீழே
பார்க்க
,
அங்கே
சூர்யாவோடு
நின்று
கொண்டிருந்த
அர்ஜுன்
அவளைப்
பார்த்து
விட்டான்
.
சூர்யாவிடம்
மீராவை
காட்டி
“
இவ
தான்
டா
அன்னைக்கு
என்னைப்
பார்த்து
அவுட்னு
கத்தினா
…”
என்று
சொல்லிகொண்டிருக்கும்
போதே
,
அர்ஜுனை
பார்த்துவிட்ட
மீரா
…
இவனிடம்
மாட்டினோம்
செத்தோம்
என்று
நினைத்தவள்
,
“
கீத்து
,
அர்ஜுன்
இங்க
இருக்கான்
.
நான்
போய்
மறைஞ்சுக்கிறேன்
.”
என்று
ஓட
…
அவள்
ஓடுவதைப்
பார்த்த
அர்ஜுன்
, ”
இருடா
வரேன்
.”
என்று
சூர்யாவிடம்
சொல்லிவிட்டு
,
அவளைப்
பின்
தொடர்ந்து
சென்றான்
.
மீரா
அங்கிருந்த
புட்
கோர்ட்
உள்ளே
சென்றவள்
,
வேறு
வழியாக
வெளியே
வர
…
அவளைத்
தேடி
கொண்டு
வந்த
அர்ஜுன்
,
எதிர்புறம்
நின்று
கொண்டிருந்தான்
.
மீரா
அவனைப்
பார்த்ததும்
வேகமாகத்
திரும்பி
ஒட
…
அவளைப்
பார்த்த
அர்ஜுன்
“
ஹே
நில்லு
…”
என்று
கத்த
,
மீரா
நிற்காமல்
இரண்டாம்
தளத்திற்கு
எஸ்கலேட்டரில்
இறங்கினாள்
.
அர்ஜுனை
திரும்பி
பார்த்துக்
கொண்டே
கால்
வைத்தவள்
,
தடுமாறி
விழ
பார்க்க
….
ஒரு
நிமிடம்
அர்ஜுன்
அரண்டு
விட்டான்
. “
ஹே
…
விழுந்துடாத
பார்த்து
போ
.”
என்று
கத்தியவன்
அங்கயே
நின்று
விட்டான்
.
மேலும்
அவளைத்
துரத்தினால்
எங்கையாவது
விழுந்து
வைக்கப்
போகிறாள்
என்று
நினைத்து
அங்கயே
நின்றான்
.
கீழே
இறங்கிய
மீரா
வேகமாகக்
கார்
பார்கிங்
சென்று
,
அவளது
காரில்
ஏறி
அமர்ந்து
மூச்சு
வாங்கியவள்
,
கீத்துவை
அழைத்துக்
கார்
பார்கிங்
வர
சொல்லிவிட்டுப்
போன்னை
வைத்தாள்
.
அர்ஜுனின்
தோளை
தொட்ட
சூர்யா
“
என்ன
ஆச்சு
அர்ஜுன்
?”
என்று
கேட்க
,
“
ச்ச
…
இன்னைக்குப்
பார்த்தும்
அவளை
விட்டுட்டேன்
.
இனிமே
எப்ப
பார்ப்பானோ
?”
என்றான்
.
“
ஏன்
நாளைக்கு
நம்ம
காலேஜ்ல
பார்க்கலாம்
.”
சூர்யா
கூலாகச்
சொல்ல
….
“
டேய்
…
உளறாத
அவ
நம்ம
காலேஜ்
இல்லைடா
.”
என்றான்
அர்ஜுன்
எரிச்சலாக
.
“
யாரு
நான்
உளறேன்னா
?
அவ
பேர்
மீரா
.
நம்ம
காலேஜ்ல
தான்
B.E.,
செகண்ட்
இயர்
படிக்கிறா
.”
என்றான்
.
அர்ஜுன்
நம்ப
முடியாமல்
சூர்யாவை
பார்க்க
…
“
என்ன
இன்னும்
நம்பிக்கை
வரலையா
…
மேட்ச்
வின்
பண்ண
அன்னைக்கு
,
நீ
வெளிய
ஆடிட்டு
இருந்த
இல்ல
…
அப்ப
இவ
உள்ள
ஆடிட்டு
இருந்தா
.”
“
அப்புறம்
இன்னொன்னு
யோசி
,
வேற
காலேஜ்
பொண்ணா
இருந்தா
,
அவ
எதுக்கு
உன்னைப்
பார்த்து
பயப்படறா
.”
சூர்யா
கேட்க
…
யோசித்த
அர்ஜுன்
“
ஆமா
கரெக்ட்
.
ஆனா
உனக்கு
எப்படி
டா
அவளைத்
தெரியும்
?”
அவன்
ஆச்சர்யபட
…
“
அவ
ஒன்னும்
சாதாரண
ஆள்
இல்லை
.
தி
பேமஸ்
ஷைன்
பினான்ஸ்
கம்பெனி
ஓனர்
ராம்நாத்தோட
பொண்ணு
.
எங்க
வீட்ல
இருந்து
கொஞ்சம்
தள்ளி
தான்
இவங்க
வீடு
இருக்கு
.”
“
வீடு
இல்ல
பெரிய
பங்களா
.
வெளிய
இருந்து
பார்க்கவே
சூப்பரா
இருக்கும்
.”
சூர்யா
சொன்னதைக்
கேட்ட
அர்ஜுன்
, “
அது
தான்
அவ்வளவு
திமிரா
…
இருக்கட்டும்
,
நாளைக்குக்
காலேஜ்
வருவா
இல்ல
…
அங்க
வச்சு
பார்த்துகிறேன்
.”
என்று
மனதில்
நினைத்தான்
.
இரவு
படுக்கையில்
படுத்திருந்த
மீரா
…
அன்று
மாலில்
நடந்ததை
நினைத்து
பார்த்தாள்
.
அவள்
தடுமாறி
விழ
பார்த்த
போது
,
அர்ஜுன்
அவளுக்காகப்
பதறியது
அவள்
மனதுக்கு
இதமாக
இருந்தது
.
போதும்
அவனுடன்
விளையாடிய
கண்ணாம்மூச்சி
.
நாளை
அவனிடம்
நேரில்
சென்று
மன்னிப்பு
கேட்க
வேண்டும்
என்று
நினைத்துக்
கொண்டே
தூங்கினாள்
.
மறுநாள்
கல்லூரியில்
அர்ஜுனை
பார்க்க
போவதால்
,
மீரா
அவளுக்கு
மிகவும்
பிடித்த
லாவெண்டர்
கலர்
சுடிதாரை
அணிந்து
,
கண்ணாடியில்
பத்து
முறைக்கு
மேல்
சரி
பார்த்துவிட்டே
சென்றாள்
.
மீரா
சாதாரணமாகவே
ஆள்
ரதியை
போல
அழகாக
இருப்பாள்
.
அதுவும்
இன்று
பார்த்துப்
…
பார்த்து
செய்த
அலங்காரம்
அவளை
இன்னும்
மெருகேற்ற
…
பார்க்க
பௌர்ணமி
நிலவை
போல்
இருந்தாள்
.
அர்ஜுனை
பார்க்க
மீரா
நேராக
அவனது
வகுப்பறைக்குச்
சென்றவள்
,
வெளியே
நின்றே
உள்ளே
எட்டி
பார்க்க
…
அர்ஜுன்
இன்னும்
வந்திருக்கவில்லை
.
அதனால்
அவனுக்காக
வெளியே
காத்திருந்தாள்
.
அப்போது
அங்கே
வந்த
சூர்யா
,
இந்தப்
பொண்ணு
ஏன்
இங்க
நிக்குது
?
ஒருவேளை
அர்ஜுனை
பார்க்க
வந்திருப்பாளோ
….
என்று
நினைத்துக்
கொண்டே
உள்ளே
சென்றான்
.
அர்ஜுன்
வகுப்பு
தொடங்க
போகும்
நேரம்
வரை
வரவில்லை
.
மீரா
வேறு
வழி
இல்லாமல்
…
அவள்
வகுப்பிற்குச்
சென்றாள்
.
அவள்
அந்தப்
பக்கம்
செல்ல
…
அர்ஜுன்
இந்தப்
பக்கம்
வந்தான்
.
அர்ஜுன்
சரியாக
வகுப்பு
தொடங்கும்
நேரத்திற்குத்
தான்
வந்தான்
.
வகுப்பு
தொடங்கிய
சிறிது
நேரத்தில்
,
கடைசிப்
பெஞ்சில்
அமர்ந்திருந்த
மாணவன்
“
டேய்
…
நம்ம
பிரபு
நம்மைக்
கீழ
வர
சொல்லி
மெசேஜ்
பண்ணி
இருக்கான்
.
எதோ
பிரச்சனை
போல
…
வாங்கடா
என்னன்னு
பார்க்கலாம்
.”
என்று
அவன்
நண்பர்களை
அழைத்துக்கொண்டு
செல்ல
…
மற்றவர்களுக்கு
ஒன்றும்
புரியவில்லை
.
சிறிது
நேரத்தில்
வெளியே
இருந்து
வாக்குவாதம்
நடைபெரும்
சத்தம்
வர
…
மற்றவர்களும்
எழுந்து
வெளியே
சென்றனர்
.
அவர்களோடு
அர்ஜுனும்
சூர்யாவும்
சென்றார்கள்
.
கீழ்
தளத்தில்
வாக்குவாதம்
நடந்து
கொண்டு
இருந்தது
.
அங்கே
சுற்றி
சிறு
கூட்டம்
.
அர்ஜுனும்
,
சூர்யாவும்
என்ன
சண்டை
என்று
எட்டி
பார்க்க
…
அங்கே
அவர்கள்
வகுப்பு
மாணவர்களுடன்
சண்டை
போட்டுக்
கொண்டிருந்தது
மீரா
.
“
நான்
எத்தனை
தடவை
சொல்றது
.
அவன்
வேணும்னே
என்
மேல
மோதினான்
,
நான்
அடிச்சேன்
.
சும்மா
இருக்கிறவனை
அடிகிறதுக்கு
,
நான்
என்ன
லூசா
?”
மீரா
சத்தமாகக்
கேட்க
….
“
தெரியாம
மோதினதுக்கு
வேணும்னு
மோதின
மாதிரி
அடிச்சிட்டு
பேசுறத
பாரு
…
மரியாதையா
சாரி
கேளு
.
அப்ப
தான்
நீ
இங்க
இருந்து
போக
முடியும்
.”
என்று
அடிவாங்கியவனின்
நண்பர்கள்
மிரட்ட
…
மீரா
முடியாது
என்று
அழுத்தமாக
மறுத்தாள்
.
அதைப்
பார்த்த
அர்ஜுனுக்குக்
கோபம்
வந்தது
.
பாரு
எவ்வளவு
திமிரு
….
ஆம்பிளைய
கை
நீட்டி
அடிச்சிட்டு
,
சாரி
கேட்க
மாட்டாளாம்
என்று
மனதிற்குள்
கொதித்துக்
கொண்டு
இருந்தான்
.
அவனுக்குப்
பிரபு
தெரியாமல்
தான்
மோதி
இருப்பான்
,
மீரா
தான்
தேவை
இல்லாமல்
பெரிது
படுத்துகிறாள்
என்று
நினைத்தான்
.
அப்போது
அங்கே
வந்த
HOD,
என்ன
நடந்தது
என்று
விசாரிக்க
…
“
சார்
,
நான்
படிக்கட்டுல
இறங்கிட்டு
இருந்தேன்
,
அப்போ
இவன்
வேணுமுன்னே
…
என்
மேல
வந்து
மோதினான்
.
அதனால
நான்
அவனை
அடிச்சிட்டேன்
.
ஆனா
அதுக்குச்
சாரி
சொன்னா
தான்
போக
விடுவேன்னு
சொல்றான்
சார்
.
அவன்
தப்பு
செஞ்சான்
,
நான்
அடிச்சேன்
.
நான்
எதுக்கு
சார்
சாரி
சொல்லணும்
?”
மீரா
கேட்க
….
“
சார்
,
நான்
வேணும்னே
மோதலை
.
தெரியாம
கால்
தடுக்கி
தான்
விழுந்தேன்
.
இந்தப்
பொண்ணு
தான்
வேணுமுன்னே
அடிச்சிடுச்சு
,”
என்றான்
அடி
வாங்கிய
மாணவன்
பிரபு
.
“
பொய்
சொல்லாத
….
அவ்வளவு
பெரிய
படிக்கட்டுல
,
நீ
என்
மேல
தெரியாம
விழுந்தியா
?”
மீரா
ஆவேசமாகக்
கேட்க
…
பதிலுக்கு
அந்த
மாணவனும்
பேச
…
அங்கே
திரும்பத்
தகராறு
துவங்கியது
.
“
மீரா
,
நீ
ஒரு
சாரி
கேட்டுட்டா
பிரச்சனை
முடிஞ்சிடும்
கேட்டுடேன்மா
…”
பிரச்சனை
முடிந்தால்
சரி
என்ற
எண்ணத்தில்
HOD
சொல்ல
…
“
நான்
எதுக்கு
சார்
சாரி
சொல்லணும்
?
நான்
தப்பு
பண்ணலை
.”
என்றாள்
மீரா
கோபமாக
,
“
அது
எப்படிக்
கேட்பாங்க
?
அவங்க
தான்
பெரிய
பணக்காரங்க
ஆச்சே
…
மன்னிப்புக்
கேட்டா
கவுரவம்
குறைஞ்சிடுமே
.”
அர்ஜுன்
சொல்ல
…
அவன்
சொன்னதைக்
கேட்ட
மீரா
அதிர்ச்சி
அடைந்தாள்
.
HOD
அடி
வாங்கிய
மாணவனிடம்
“
தெரியாம
அடிச்சிடுச்சு
….
நீ
தான்
விடேன்
பா
.”
என்றார்
.
“
காலேஜ்
படிக்கிற
பையனை
போய்
எதோ
பொறுக்கி
மாதிரி
சொல்றாங்க
…
அவங்க
சொல்றதை
போய்
நம்புறீங்களே
சார்
.”
“
யாரவது
காலேஜ்ல
வச்சு
அப்படிப்
பண்ணுவாங்களா
?
பிரபு
தெரியாம
தான்
இடிச்சிருப்பான்
.
இவங்க
வீட்ல
இருக்கிற
மாதிரியே
வெளி
இடத்திலேயும்
சொகுசா
இருக்க
முடியாது
.
இது
மாதிரி
தவறு
நடக்கிறது
சகஜம்தான்
.
சரியா
தெரிஞ்சிக்காம
கைய
நீட்டினது
தப்பு
.
அவங்களை
ஒழுங்கா
சாரி
கேட்க
சொல்லுங்க
.”
அர்ஜுன்
HOD-
யிடம்
சொல்ல
…
“
நீ
என்னை
நம்ப
மாட்டியா
?”
என்று
அவனைப்
மீரா
பார்க்க
,
அர்ஜுன்
என்ன
லுக்கு
என்பது
போல்
அவளைப்
பார்த்தவன்
“
சீக்கிரம்
சாரி
சொன்னா
…
அவங்கவங்க
வேலைய
பார்க்க
போகலாம்
.”
என்றான்
.
மீரா
அமைதியாக
நின்றாள்
.
“
ஆமா
இவங்களுக்கு
நம்ம
டிபார்ட்மென்ட்ல
என்ன
வேலை
?”
என்றான்
அர்ஜுன்
அடுத்து
…
உன்னைத்
தான்
பார்க்க
வந்தேன்
என்று
சொல்ல
வந்தவள்
,
அதைச்
சொன்னால்
நம்ப
மாட்டான்
என்று
மீண்டும்
அமைதியாகி
விட
…
அர்ஜுன்
மீராவை
முறைத்துக்
கொண்டே
நின்றான்
.
“
மீரா
,
பிரின்சிக்குத்
தெரிஞ்சா
பெரிய
பிரச்சனை
ஆகும்
பரவாயில்லையா
?” HOD
கேட்க
….
பிரின்சிக்கு
தெரிந்தால்
…
விஷயம்
தன்
அப்பாவின்
காது
வரை
போகும்
என்பதை
உணர்ந்த
மீராவிற்கு
,
அதில்
விருப்பம்
இல்லை
என்பதால்
,
திரும்பி
அர்ஜுனை
பார்த்துக்
கொண்டே
சாரி
என்று
சொல்லிவிட்டு
அங்கிருந்து
விடுவிடுவென்று
சென்று
விட்டாள்
.
“
அதுதான்
பிரச்சனை
முடிஞ்சிடுச்சுல
…
எல்லோரும்
கிளாஸ்க்கு
போங்க
.
இதைப்
பத்தி
யாரும்
இனி
பேச
கூடாது
.” HOD
சொல்ல
…
எல்லோரும்
வகுப்பிற்குள்
சென்றனர்
.
வகுப்பிற்குள்
வந்ததும்
சூர்யா
, “
அர்ஜுன்
…
அவ
உன்னைப்
பார்க்கதான்
இங்க
வந்தான்னு
நினைக்கிறேன்
.
நம்ம
கிளாஸ்
முன்னாடி
ரொம்ப
நேரம்
நின்னுட்டு
இருந்தா
.”
என்றான்
.
“
என்ன
சொல்ற
சூர்யா
…
அவ
நம்ம
கிளாஸ்
முன்னாடி
நின்னுட்டு
இருந்தாளா
.
என்னைப்
பார்த்து
நேத்து
ஓடினா
,
இன்னைக்கு
எதுக்கு
வந்தா
?”
அர்ஜுன்
சொல்லி
கொண்டிருக்கும்
போதே
ப்ரொபசர்
வந்துவிட
,
அதற்கு
மேல்
அப்போது
எதுவும்
பேச
முடியவில்லை
.
மதிய
உணவு
இடைவேளையில்
அர்ஜுனின்
கிளாஸில்
படிக்கும்
சுபத்ரா
“
அர்ஜுன்
,
உனக்கு
அந்தப்
பிரபுவ
பத்தி
தெரியாது
.
அவன்
சுத்த
பொறுக்கி
.
என்கிட்டையே
ஒரு
தடவை
அப்படி
நடந்திருக்கான்
.
ஆனா
பார்க்க
ஆள்
அப்பாவியா
இருப்பான்
.
நீ
அவனைப்
பத்தி
தெரியாம
அவனுக்குச்
சப்போர்ட்
பண்ணிட்ட
…
பாவம்
அந்தப்
பொண்ணு
.”
எனச்
சொல்ல
…
அதைக்
கேட்ட
அர்ஜுனுக்கு
ரத்தம்
கொதிக்க
,
சூர்யாவிடம்
“
அவன்
இப்ப
எங்க
இருப்பான்
?”
என்று
கேட்டுக்
கொண்டே
எழுந்தான்
.
“
கான்டீன்ல
தான்
இருப்பான்
”
என்றதும்
,
அர்ஜுன்
வேகமாக
வெளியே
செல்ல
…
சூர்யாவும்
அவனுடன்
சென்றான்
.
அர்ஜுன்
வேகமாகப்
படிக்கட்டில்
இறங்கி
கொண்டிருக்கும்
போது
,
மேலே
ஏறிக்கொண்டிருந்த
பிரபு
,
எதிரே
வந்த
பெண்
மீது
வேண்டுமென்றே
மோத
…
அந்தப்
பெண்
திட்டி
கொண்டே
செல்ல
…
பிரபு
சிரித்துக்
கொண்டே
மேலே
ஏறினான்
.
பிரபு
வருவதைப்
பார்த்து
நின்ற
அர்ஜுன்
,
நேரிலேயே
பிரபுவை
பற்றித்
தெரிந்து
கொண்டவன்
“
நீ
காலேஜ்க்குப்
பொறுக்கிதனம்
பண்ண
தான்
வரியா
.
இன்னைக்கு
ஒருத்திகிட்ட
அடி
வாங்கியும்
உனக்குப்
புத்தி
வரலை
பாரு
.
உன்னை
அவ
கையால
அடிச்சிருக்கக்
கூடாது
,
செருப்பால
அடிச்சிருக்கணும்
.
அவ
சொன்னதை
நம்பாம
உன்னைப்
போய்
நம்பினேன்
பாரு
என்னைச்
சொல்லணும்
.”
அவன்
கோபமாகச்
சொல்ல
…
அப்போது
தான்
அர்ஜுனை
பார்த்த
பிரபு
…
அவன்
சொன்னதைக்
கேட்டதும்
அதிர்ந்தான்
.
அவனுக்கு
அர்ஜுன்
பற்றி
நன்றாகவே
தெரியும்
.
எல்லோரிடமும்
நன்றாகப்
பழகும்
அர்ஜுன்
,
தவறை
மட்டும்
பொறுக்கவே
மாட்டான்
என்று
.
இவனிடம்
மாட்டினோம்
செத்தோம்
என்று
நினைத்த
பிரபு
திரும்பி
ஓட
…
அர்ஜுன்
அவனைத்
துரத்தினான்
.
பிரபு
காலேஜ்
கிரௌண்டில்
ஓட
…
அவனை
அர்ஜுன்
துரத்தி
சென்று
அடித்தான்
.
மீரா
சாப்பிட
பிடிக்காமல்
அவள்
வகுப்பிலேயே
தங்கி
விட
…
கீர்த்தனா
சாப்பிட்டு
விட்டு
திரும்பி
வந்தவள்
, “
மீரா
…
அர்ஜுன்
கிரௌன்ட்ல
ஒரு
பையனை
போட்டு
அடிக்கிறான்
.”
என்றதும்
…
வேகமாக
எழுந்த
மீரா
வெளியே
ஓடினாள்
.
மீரா
கிரௌன்டிற்கு
வந்த
போது
பிரபுவை
அடித்துகொண்டிருந்த
அர்ஜுனை
,
சூர்யாவும்
மற்ற
நண்பர்களும்
சேர்ந்து
தடுத்து
கொண்டிருந்தனர்
.
அப்போது
அங்கே
வந்த
சில
ப்ரொபசர்கள்
என்ன
நடந்தது
என்று
கேட்க
…
அர்ஜுன்
,
மீரா
பெயரை
இழுக்காமல்
,
இவன்
என்னைப்
பத்தி
தப்பா
பேசினான்
,
அதனால
அடிச்சேன்
என்றான்
.
பிரபுவும்
அவன்
சொன்னதை
ஆமோதிக்க
…
அதோடு
இருவரையும்
விலக்கி
வகுப்புக்கு
செல்ல
சொல்லி
விட்டு
அவர்கள்
சென்றனர்
.
அர்ஜுன்
பிரபுவை
முறைத்துக்
கொண்டே
வகுப்பிற்குச்
சென்றான்
.
பிரபு
அப்போது
தான்
அங்கிருந்த
மீராவை
பார்த்தான்
.
அவளிடம்
சென்றவன்
“
சாரி
மீரா
…
நான்
பண்ணது
ரொம்பத்
தப்பு
.
உனக்காகத்
தான்
அர்ஜுன்
என்னை
அடிச்சான்
.
அவன்
நான்
தெரியாம
இடிசிருப்பேன்னு
நினைச்சி
தான்
காலையில
எனக்குச்
சப்போர்ட்
பண்ணான்
.
ச்ச
…
ஆனா
நான்
.
மீரா
,
நான்
இனிமே
அப்படிப்
பண்ண
மாட்டேன்
.”
என்று
உன்மையாகவே
தன்
தவறை
உணர்ந்து
சொன்னவன்
,
அவன்
வகுப்பிற்குச்
செல்ல
….
மீராவிற்கு
அர்ஜுன்
தனக்காகத்
தான்
பிரபுவை
அடித்தான்
என்றது
அவள்
மனதிற்கு
இதமாக
இருக்க
…
மகிழ்ச்சியுடன்
வகுப்பிற்குச்
சென்றாள்
.
மாலையில்
கல்லூரி
முடிந்ததும்
,
அர்ஜுன்
அவன்
பைக்கை
ஸ்டாண்டில்
இருந்து
எடுத்துக்
கொண்டிருந்தான்
.
அப்போது
அர்ஜுன்
என்று
யாரோ
கூப்பிட
…
அவன்
யாரென்று
நிமிர்ந்து
பார்க்க
…
மீரா
சற்றுத்
தூரத்தில்
அவனை
நோக்கி
வந்து
கொண்டிருந்தாள்
.
லாவெண்டர்
கலர்
அனார்கலி
மாடல்
சிந்தடிக்
சுடிதாரில்
….
காற்றிற்குப்
பறக்கும்
தனது
கூந்தலை
ஒதுக்கி
விட்டபடி
,
முகத்தில்
புன்னகையுன்
வேகமாக
நடந்து
வந்தவளை
ரசித்தவன்
,
அவள்
அருகில்
வந்து
நின்றதும்
….
தன்
உணர்வை
கட்டுக்குள்
கொண்டு
வந்து
, “
என்ன
?”
என்றான்
இறுகிய
குரலில்
….
“
அர்ஜுன்
,
நான்
காலையிலையே
உங்களைப்
பார்க்க
உங்க
கிளாஸ்க்கு
வந்தேன்
.
ஆனா
நீங்க
அங்க
இல்லை
.
திரும்பி
போகும்
போது
தான்
.”
என்று
சொல்லி
கொண்டே
சென்றவளை
,
தனது
கையைக்
காட்டி
தடுத்தவன்
“
இப்ப
எனக்குக்
கதை
கேட்க
எல்லாம்
நேரம்
இல்லை
.
நேரா
விஷயத்துக்கு
வாங்க
.”
என்றான்
சிடிசிடுப்பாக
…
அவன்
சொன்னதைக்
கேட்டு
திகைத்த
மீரா
, “
சாரி
…
அன்னைக்கு
நான்
சும்மா
விளையாட்டுக்கு
தான்
அவுட்னு
கத்தினேன்
.”
என்றாள்
.
“
ரொம்பச்
சீக்கிரம்
சாரி
கேட்டுடீங்க
,
பரவாயில்லை
…
சரி
அப்ப
நான்
கிளம்புறேன்
.”
அர்ஜுன்
கிளம்புவதிலேயே
குறியாக
இருந்தான்
.
“
அப்புறம்
இன்னைக்கு
எனக்காக
நீங்க
பிரபுவா
அடிச்சதுக்குத்
தேங்க்ஸ்
.”
“
உங்களுக்காக
அடிச்சேன்னா
…”
என்று
ஆச்சர்யபட்டவன்
. “
நான்
உங்களுக்காக
அவனை
அடிக்களை
…
அவன்
வேற
ஒரு
பொண்ணு
மேல
வேணுமுன்னே
மோதினதை
பார்த்தேன்
.
அது
தான்
அடிச்சேன்
.
உங்களுக்காக
அடிச்சதா
கற்பனை
பண்ணிக்க
வேண்டாம்
.”
என்றான்
முகத்தில்
அடித்தது
போல்
….
மீராவின்
முகம்
வாட
…
கண்கள்
லேசாகக்
கலங்க
ஆரம்பித்தது
.
அவளுக்குப்
புரிந்தது
,
அவன்
தன்னுடன்
பேச
விரும்பவில்லை
.
தலையை
மட்டும்
சரி
என்பதாக
அசைத்தவள்
,
திரும்பி
நடந்தாள்
.
துள்ளி
குதித்து
வந்தவள்
,
சோர்ந்த
நடையுடன்
திரும்பி
செல்ல
…
அர்ஜுன்
தன்
வண்டியை
எடுத்துக்
கொண்டு
கிளம்பினான்
.
Advertising
Advertising