Toggle navigation
Home
Tamil Novels
What's new
Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள்,
[email protected]
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
Advertising
உனக்குள் என் உயிரே 28 1
Post Views:
1,416
உனக்குள்
என்
உயிரே
அத்தியாயம்
28
எட்டு
மாதங்களுக்குப்
பிறகு
…
சென்னை
விமான
நிலையம்
.
சிங்கப்பூரில்
இருந்து
வந்து
தரை
இறங்கிய
விமானத்திலிருந்து
அர்ஜுனும்
,
சூர்யாவும்
முகம்
கொள்ளா
புன்னகையுடன்
வெளியே
வந்தனர்
.
அவர்கள்
இருவர்
முகத்திலும்
நல்லபடியாகப்
படிப்பை
முடித்து
,
தாய்
நாட்டிற்குத்
திரும்பி
வந்துவிட்டோம்
என்ற
சந்தோஷம்
இருந்தது
.
அர்ஜுன்
ஓடி
வந்து
வித்யாவை
தூக்கி
சுற்றினான்
. “
டேய்
…
கீழ
விடுடா
பயமா
இருக்கு
.”
வித்யா
சொன்னதும்
தான்
கீழே
இறக்கி
விட்டான்
.
அடுத்து
தன்
தந்தையை
அனைத்துக்
கொண்டு
நலம்
விசாரித்தவனை
,
ஆதி
வந்து
இறுக
அனைத்துக்
கொண்டான்
.
அர்ஜுன்
ரஞ்சனாவை
பார்த்து
, “
எப்படி
இருக்கீங்க
அண்ணி
?”
என்று
கேட்டுக்
கொண்டே
….
அவளிடம்
இருந்த
ஐஷுவை
வாங்கித்
தூக்கி
போட்டு
பிடிக்க
…
அது
தன்
பொக்கை
வாய்
காட்டி
அழகாகச்
சிரித்தது
.
அதில்
மயங்கிய
அர்ஜுன்
“
செல்ல
குட்டி
,
எப்படிடா
இருக்கீங்க
?
பாப்பாவை
பார்க்க
எவ்வளவு
நாள்
ஆகிடுச்சு
,
பாப்பா
வளர்ந்திட்டாங்க
.”
என்று
கொஞ்சி
கொண்டிருந்தான்
.
அர்ஜுன்
ஐஸ்வர்யாவை
கொஞ்சுவதைப்
பார்த்து
அனைவரும்
ரசிக்க
…
ஆருவிற்கு
ஆத்திரமாக
வந்தது
.
அர்ஜுன்
வந்ததில்
இருந்து
தன்னைக்
கண்டுகொள்ளவில்லை
என்று
அவளுக்குக்
கோபம்
.
ஆரு
ஒரு
கண்ணை
அர்ஜுன்
மீதும்
,
ஒரு
கண்ணைச்
சூர்யா
மீதும்
வைத்திருந்தாள்
.
அதே
போல்
சூர்யாவும்
அவன்
வீட்டு
ஆட்களுடன்
பேசிக்கொண்டிருந்தாலும்
,
பார்வை
அடிக்கடி
ஆருவை
வருடிவிட்டே
சென்றது
.
சிறிது
நேரம்
பொறுத்து
பார்த்த
ஆரு
,
அவளே
அர்ஜுனின்
அருகில்
சென்று
…
அவன்
தோளைத்
தட்ட
…
அர்ஜுன்
திரும்பி
பார்த்தவன்
,
அங்கே
ஆரு
கண்
கலங்கி
நிற்பதை
பார்த்ததும்
,
அவளைத்
தோளோடு
சேர்த்து
அணைத்து
ஐஷுவிடம்
“
நம்ம
வீட்ல
உனக்கு
முன்னாடி
ஒரு
பேபி
இருக்கு
,
அது
யாருன்னு
தெரியுமா
?
உன்னோட
அத்தை
தான்
அது
.
இன்னும்
உங்க
அத்தை
பேபி
தான்
.”
என்று
கிண்டல்
செய்ய
…
ஆருவின்
முகத்தில்
புன்னகை
மலர்ந்தது
.
இந்த
இரண்டு
வருடத்தில்
அர்ஜுனின்
குடும்பத்திற்கும்
,
சூர்யாவின்
குடும்பத்திற்கும்
இடையே
நெருங்கிய
நட்பு
ஏற்பட்டிருந்தது
.
அர்ஜுன்
,
சூர்யாவின்
வரவேற்பு
படலம்
முடிந்ததும்
,
இரண்டு
குடும்பமும்
தங்கள்
வீட்டிற்குக்
கிளம்பினர்
.
நீங்கள்
எல்லோரும்
ஆவலாக
எதிர்
பார்க்கும்
மீரா
இப்போது
சென்னையில்
இல்லை
.
அர்ஜுன்
வீட்டிற்கு
வந்ததும்
குளித்தவன்
பின்
எல்லோரோடும்
சேர்ந்து
பேசி
அரட்டை
அடித்துக்
கொண்டு
சாப்பிட்டான்
.
சாப்பிட்டதும்
, “
கொஞ்சம்
வெளிய
போயிட்டு
வரேன்
மா
.”
என்று
கிளம்பி
வெளியே
சென்றான்
.
அர்ஜுன்
சென்றது
பெசன்ட்
நகர்
பீச்க்கு
.
இங்க
மீராவோட
எத்தனை
தடவை
வந்திருக்கோம்
என்று
நினைத்து
பார்த்தவனின்
மனம்
மீராவிற்காக
ஏங்கியது
.
மீராவுக்குக்
கல்லூரி
கேம்பஸில்
,
பெங்களூரில்
இருக்கும்
ஒரு
பன்னாட்டு
நிறுவனத்தில்
வேலை
கிடைக்க
….
மீரா
அங்கே
சென்று
விட்டாள்
.
அவள்
சித்தியிடம்
படித்து
முடிக்கும்
வரை
மட்டும்
தான்
இந்த
வீட்டில்
இருப்பேன்
,
பின்
வேலை
கிடைத்ததும்
சென்று
விடுவேன்
என்று
சொன்னதற்கு
ஏற்ப
…
வெளியூரில்
வேலை
வாங்கிக்
கொண்டு
சென்றுவிட்டாள்
.
மீனாக்ஷி
முன்பு
மாதிரி
அவளிடம்
வெறுப்பைக்
காட்டவில்லை
என்றாலும்
,
மீராவிற்குத்
தான்
அந்த
வீட்டில்
வேண்டாத
விருந்தாளி
என்ற
எண்ணம்
போகவில்லை
.
அவளது
தந்தை
தடுத்ததைக்
கூட
அவள்
பொருட்படுத்தவில்லை
.
“
உனக்கு
இந்த
வீட்ல
இருக்க
விருப்பம்
இல்லைன்னு
எனக்குத்
தெரியும்
மீரா
.
உனக்கு
மாப்பிள்ளை
பார்ப்போமா
,
ஒரு
நல்ல
டாக்டர்
வரன்
வந்திருக்கு
.”
ராம்நாத்
ஆர்வமாகக்
கேட்க
….
“
வேண்டாம்
,
இன்னும்
ரெண்டு
வருஷம்
போகட்டும்
,
பார்க்கலாம்
.”
என்றாள்
மீரா
எங்கோ
பார்த்துக்
கொண்டு
.
“
மீரா
உனக்கு
யாரையாவது
பிடிச்சிருந்தா
தைரியமா
சொல்லு
.”
ராம்நாத்
சொல்ல
….
மீராவும்
இதைவிட்டால்
வேறு
நல்ல
சந்தர்ப்பம்
கிடைக்காது
என்று
நினைத்தவள்
, “
எனக்கு
அர்ஜுனை
பிடிச்சிருக்கு
,
நான்
அர்ஜுனை
விரும்புறேன்
.”
என்றாள்
.
“
அர்ஜுனா
…..
நல்ல
பையன்
தான்
,
குடும்பமும்
நல்ல
குடும்பம்
.
ஆனா
…
நம்மவங்க
இல்லை
.”
ராம்நாத்
இழுக்க
….
மீரா
அவரைப்
பார்த்து
முறைத்தாள்
.
அவளின்
பார்வையின்
அர்த்தத்தை
உணர்ந்த
ராம்நாத்
, “
நான்
காதலுக்கு
எதிரி
இல்லை
மீரா
.
நான்
என்னோட
அம்மாவுக்குச்
சத்தியம்
பண்ணி
குடுத்திருக்கேன்
,
உனக்குப்
பிடிச்ச
வாழ்கையை
ஏற்படுத்தித்
தர்றதா
…
அதோட
எனக்கும்
அர்ஜுனை
பிடிச்சிருக்கு
.
நான்
அவங்க
வீட்ல
பேசட்டுமா
.”
என்றார்
.
“
இப்ப
வேண்டாம்
அர்ஜுனோட
தங்கைக்குக்
கல்யாணம்
பண்ணனும்
.
அர்ஜுனோட
அப்பாவுக்கு
ஓகே
தான்
,
ஆனா
…
அவங்க
அம்மாவுக்குத்
தெரிஞ்சா
என்ன
சொல்வாங்களோ
?”
மீரா
கவலையாகச்
சொல்ல
…
“
அவங்க
அப்பாக்கு
ஓகேனா
அப்புறம்
என்ன
,
உன்னை
மாதிரி
ஒரு
மருமகள்
கிடைக்க
அவங்க
குடுத்து
வச்சிருக்கணும்
மீரா
.”
என்றார்
ராம்நாத்
பெருமையாக
.
மீரா
முகத்தில்
சந்தோசம்
இல்லை
,
அவள்
மெளனமாக
இருந்தாள்
.
மீராவின்
முகத்தைப்
பார்த்த
ராம்நாத்
, “
கவலைபடதே
மீரா
…
அவங்க
உன்னைக்
கண்டிப்பா
வேண்டாம்னு
சொல்ல
மாட்டாங்க
.
அவங்க
அம்மா
வேண்டாம்னு
சொன்னாலும்
,
நான்
உங்களுக்குக்
கல்யாணம்
பண்ணி
வைக்கிறேன்
.”
என்றார்
.
“
அதுக்கு
அர்ஜுன்
ஒத்துக்கமாட்டாங்க
,
ஏன்
…
நானுமே
ஒத்துக்க
மாட்டேன்
.
வித்யா
ஆன்டி
முழு
மனசா
என்னை
ஏத்துக்காம
,
நான்
அவங்க
வீட்டுக்கு
மருமகளா
போறது
…
எப்பவும்
நடக்காது
.”
என்றாள்
மீரா
உறுதியாக
.
“
எதுக்கு
மீரா
இந்தப்
பிடிவாதம்
,
வீட்ல
இருக்கிற
எல்லோரும்
லவ்
மேரேஜ்க்கு
ஒதுக்கனும்னா
நடக்கிற
காரியமா
?”
“
வித்யா
ஆன்டிக்கு
விருப்பம்
இல்லாம
,
நாங்க
கல்யாணம்
செஞ்சிக்கிட்டா
…
கடைசி
வரை
நாங்க
ஒரே
குடும்பா
சேர்ந்திருக்க
முடியாமலே
போய்டும்
.
எனக்குப்
பிறந்த
வீட்ல
அமையாத
குடும்ப
வாழ்க்கை
,
புகுந்த
வீட்லையாவது
அமையனும்
.
அதனால்
அவங்க
முழு
மனசோட
சம்மதிக்க
,
நான்
எத்தனை
வருஷம்
வேணாலும்
காத்திருப்பேன்
.”
பிறந்த
வீட்ல
அமையாத
குடும்ப
வாழ்க்கை
என்ற
மீராவின்
வார்த்தை
,
ராம்நாத்தை
கூர்
வால்
போல்
ஆழமாகத்
தாக்கியது
.
சிறிது
நேரம்
அங்கே
கனத்த
அமைதி
நிலவியது
.
“
சரி
,
உன்னோட
இஷ்டபடியே
நடக்கட்டும்
.
நீ
சொல்லும்
போது
நான்
அவங்க
வீட்ல
பேசுறேன்
.”
என்று
சொல்லிவிட்டு
ராம்நாத்
மீராவின்
அறையில்
இருந்து
வெளியே
சென்றார்
.
வருண்
தடுத்தும்
மீரா
கேட்கவில்லை
.
மாதம்
இருமுறை
வந்து
சென்னையில்
தங்குகிறேன்
என்று
சொன்னதும்
தான்
வருண்
அவளைப்
போக
விட்டான்
.
மீராவின்
அப்பா
அவளை
வெளியே
தங்க
அனுமதிக்கவில்லை
.
அவள்
அலுவலகத்திற்கு
அருகில்
இருந்த
ஒரு
அடுக்குமாடி
குடியிருப்பில்
அவளுக்கு
என்று
இரு
படுக்கை
அறைகளைக்
கொண்ட
ப்ளாட்
வாங்கிக்
கொடுத்துவிட்டார்
.
அதில்
மீராவுடன்
கீர்த்தனாவும்
தங்கி
கொண்டாள்
.
அவளுக்கும்
பெங்களூரில்
தான்
வேலை
.
அதனால்
இருவரும்
ஒருவருக்கொருவர்
துணையாக
இருந்தனர்
.
“
இத்தனை
நாள்
எதோ
எனக்கு
உரிமை
இல்லாத
இடத்தில
இருக்கிற
மாதிரி
இருந்தேன்
அர்ஜுன்
.
இனியும்
யாருக்கும்
பாரமா
இருக்க
விரும்பல
…
இனிமேலாவது
சுயமரியாதையோட
வாழ
ஆசைபடுறேன்
.
ப்ளீஸ்
…
என்னைப்
புரிஞ்சிக்கோங்க
.”
மீரா
சொல்ல
…
அர்ஜுனும்
அவளின்
மனதை
அறிந்ததால்
…
அவள்
பெங்களூர்
செல்ல
சரி
என்றான்
.
மீரா
இப்போது
தான்
புதிதாக
வேலைக்குச்
சேர்ந்திருப்பதால்
….
விடுமுறை
எடுக்க
முடியாது
.
அதனால்
சனி
,
ஞாயிறு
விடுமுறைக்குச்
சென்னைக்கு
வருவதாகச்
சொல்லி
இருந்தாள்
.
சென்னைக்கு
வந்த
பின்னும்
மீராவை
பார்க்க
முடியவில்லை
என்ற
ஏக்கம்
அர்ஜுனுக்கு
இருந்தது
.
இன்னும்
நாலு
நாள்
இருக்கு
அவளைப்
பார்க்க
…
என்று
நினைத்துக்
கொண்டே
எழுந்து
வீட்டிற்குச்
சென்றான்
.
சூர்யா
ஆருவை
தனியாகச்
சந்திக்க
ஆசைபட்டான்
.
ஆனால்
ஆரு
அவனுடன்
தனியாக
வெளியே
செல்ல
பயந்தாள்
. “
போன்னில்
மட்டும்
நல்லா
வாய்
பேசுற
,
நேர்ல
வர்றதுக்கு
இவ்வளவு
தயங்குற
.”
“
வரேன்
சூர்யா
…
அப்புறம்
வரேன்
.”
என்று
சொல்லி
ஆறு
அவனை
ஏமாற்றிக்
கொண்டிருந்தாள்
.
அன்று
வெள்ளிக்கிழமை
மீரா
காலையில்
வீட்டில்
இருந்து
அலுவலகம்
கிளம்பும்
போதே
…
இரவு
அங்கிருந்தே
ரயில்
நிலையம்
சென்றுவிடுவது
என்று
தயாராக
வந்திருந்தாள்
.
நேரம்
ஆக
ஆக
அவளுக்கு
ஒரே
பரபரப்பாக
இருந்தது
.
அர்ஜுன்
சென்னை
வந்து
மூன்று
நாட்கள்
ஆகிவிட்டது
.
தான்
இன்னும்
அவனைப்
பார்க்கவில்லை
என்று
நினைத்த
போது
,
அவளுக்கே
அவள்
மீது
கோபம்
வந்தது
.
அவளுக்கு
எப்போது
அவனைப்
பார்ப்போம்
என்று
இருந்தது
.
மதியம்
வரை
பொறுத்தவள்
அதற்கு
மேல்
முடியாமல்
…
மாலை
எதாவது
விமானம்
இருந்தால்
அதில்
சென்றுவிடுவோம்
என்று
நினைத்து
,
உடம்பு
முடியவில்லை
அதனால்
தான்
வீட்டிற்குக்
கிளம்புவதாக
மேனேஜருக்கு
ஒரு
மெயில்
அனுப்பியவள்
,
ட்ராவல்
ஏஜென்சிக்கு
போன்
செய்து
,
டிக்கெட்டுக்கு
சொல்லிவிட்டு
வெளியே
வந்தாள்
.
அவள்
அலுவலக
வாயிலில்
இருந்த
படிக்கட்டில்
இறங்கும்
போது
,
அர்ஜுன்
படியில்
மேலேறிக்
கொண்டிருந்தான்
.
மீராவால்
நம்பவே
முடியவில்லை
.
இது
அர்ஜுன்
தானா
…
நாம்
சரியாகத்தான்
பார்கிறோமா
என்று
தன்
கண்ணைக்
கசக்கி
பார்த்தவள்
,
நிஜம்
தான்
என்று
தெரிந்ததும்
சிலையாக
நின்றாள்
.
அர்ஜுன்
மேல்
படியின்
அருகே
வந்ததும்
தான்
மீராவை
பார்த்தான்
.
அவன்
முகம்
புன்னகையில்
விரிந்தது
.
அவளைத்
தேடி
வரும்
போது
,
அவளே
எதிரில்
வந்து
நின்றால்
சொல்லவும்
வேண்டுமா
…
சிறிது
நேரம்
இருவரும்
ஒருவரை
ஒருவர்
பார்த்துக்
கொண்டே
நின்றனர்
.
முதலில்
சுயநினைவுக்கு
வந்த
அர்ஜுன்
,
மீராவின்
கை
பிடித்து
அழைத்துக்
கொண்டு
படியில்
இறங்கினான்
.
அவள்
அலுவலகத்தை
விட்டு
தள்ளி
வந்ததும்
,
ஒரு
இடத்தில்
நிறுத்தி
அவளை
நன்றாகப்
பார்த்தவன்
, “
எப்படி
இருக்க
மீரா
?
பெங்களூர்
வந்ததும்
இளச்சிட்ட
.”
என்றான்
.
மீரா
இன்னும்
அதிர்ச்சியில்
இருந்து
மீளவில்லை
.
அவள்
அர்ஜுனையே
பார்த்துக்
கொண்டிருந்தாள்
.
“
போதும்
மீரா
பார்த்தது
.
நமக்கு
மூன்னு
மணிக்கு
ட்ரைன்
.
இப்ப
ஒரு
மணி
ஆகுது
கிளம்பலாமா
…
உன்னோட
வீட்டுக்குப்
போய்த்
திங்க்ஸ்
எதுவும்
எடுக்கணுமா
?
ஆபீஸ்ல
சொல்லனுமா
?”
அர்ஜுன்
வரிசையாகக்
கேள்விகளாகக்
கேட்க
… “
இல்லை
,
நாம
போகலாம்
.”
என்றாள்
மீரா
.
அர்ஜுன்
அந்த
வழியாக
வந்த
ஒரு
ஆட்டோவை
நிறுத்தி
,
ரயில்வே
ஸ்டேஷன்
வருமா
என்று
கேட்க
…
ஆட்டோ
டிரைவர்
வருவதாகச்
சொல்ல
…
இருவரும்
ஆட்டோவில்
ஏறினர்
.
ஆட்டோவில்
ஏறியதும்
தான்
மீரா
தெளிந்தாள்
.
“
அர்ஜுன்
நீங்க
எப்படி
இங்க
?
நீங்க
வரேன்னு
சொல்லவே
இல்லை
.
நானும்
உங்களைப்
பார்க்க
தான்
ஆபீஸ்
லீவ்
போட்டுட்டு
வந்தேன்
.”
“
எனக்கு
அங்க
இருக்கவே
முடியலை
மீரா
,
அது
தான்
விடியற்காலை
ட்ரைன்
ஏறி
வந்துட்டேன்
.”
மீரா
அவன்
தோளில்
சாய்ந்து
கொண்டாள்
.
அர்ஜுன்
அவள்
தோளை
சுற்றி
கை
போட்டு
அனைத்துக்
கொண்டான்
.
இருவரும்
ரொம்ப
மாதங்கள்
கழித்து
ஒருவரை
ஒருவர்
நேரில்
சந்தித்த
மகிழ்ச்சியில்
,
அப்படியே
கண்மூடி
அந்த
நிமிடத்தை
மனதிற்குள்
ரசித்தனர்
.
Advertising
Advertising